என் மலர்
நீங்கள் தேடியது "கண்டக்டர் சஸ்பெண்டு"
- பஸ்சில் பொருட்கள் வைக்கும் பகுதியில் பெரிய பார்சல் ஒன்று இருந்தது.
- பஸ் புதுச்சேரி பஸ் நிலையம் வந்தபோது அதை சக ஊழியர்கள் முன்னிலையில் பிரித்து பார்த்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி- பெங்களூரு இடையே அரசு (பி.ஆர்.டி.சி.) பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதுபோல் சம்பவத்தன்று புதுச்சேரி அரசு பஸ் பெங்களூருலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரிக்கு புறப்பட்டு வந்தது.
அந்த பஸ்சை டிரைவர் அரிதாஸ் ஓட்டி வந்தார். கண்டக்டராக வெங்கடாசலபதி (வயது 53) பணியில் இருந்தார். இந்த பஸ் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் வந்தபோது பி.ஆர்.டி.சி. பறக்கும் படையினர் பஸ்சில் ஏறி திடீர் சோதனை நடத்தினார்கள்.
அப்போது பஸ்சில் பொருட்கள் வைக்கும் பகுதியில் பெரிய பார்சல் ஒன்று இருந்தது. அந்த பார்சல் யாருடையது? என்ற விவரமும் இல்லை. இந்த பார்சல் சம்பந்தமாக பறக்கும் படையினர் கண்டக்டர் வெங்கடாசலபதியிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் முறையாக பதில் அளிக்கவில்லை.
இதனிடையே பஸ் புதுச்சேரி பஸ் நிலையம் வந்தபோது அதை சக ஊழியர்கள் முன்னிலையில் பிரித்து பார்த்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பார்சலில் ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் இருந்தது.
இதுகுறித்து மேலாண் இயக்குனர் சிவகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பஸ் கண்டக்டர் வெங்கடாசலபதியை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டார்.
இந்த போதைப்பொருட்களை புதுச்சேரிக்கு அனுப்பியவர்கள் யார்? போதைப்பொருள் கும்பலுக்கும் பஸ் ஊழியர்களுக்கும் தொடர்பு உள்ளதா? இதுபோன்று பெங்களூருரில் இருந்து புதுச்சேரிக்கு போதைப்பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வந்ததா? என்பது குறித்து துறை ரீதியாக விசாரணை நடந்து வருகிறது.
- பஸ்சில் பள்ளி முடிந்து திரும்பிய மாணவ-மாணவிகள் சிலர் ஏறினர்.
- வீடியோ விவகாரம் கண்டக்டர் பணியாற்றும் ஊட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரிகளுக்கும் சென்றது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கேரள மாநிலம் கள்ளிக்கோட்டைக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்த பஸ்சில் ஊட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையைச் சேர்ந்த பாபு என்பவர் கண்டக்டராக இருந்தார்.
அந்த பஸ்சில் பள்ளி முடிந்து திரும்பிய மாணவ-மாணவிகள் சிலர் ஏறினர். அவர்கள் பந்தலூர், சேரம்பாடி அருகே உள்ள காப்பிக்காடு என்ற இடத்தில் இறங்கினர். அப்போது மாணவ-மாணவிகளிடம் இந்த பஸ் எக்ஸ்பிரஸ் இனிமேல் இதில் ஏறக்கூடாது, டவுன் பஸ்களில் ஏறிச் செல்லுங்கள் என கண்டக்டர் பாபு கண்டித்தார்.
இதற்கு பஸ்சில் இருந்த பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளி மாணவ-மாணவிகள் தானே அவர்களை அனுசரித்து அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கிச் செல்லுங்கள் என கூறினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கண்டக்டர் பாபு, கள்ளிக்கோட்டைக்கு போய் சேர வேண்டுமா, வேண்டாமா? என கேட்டதுடன் பயணிகளை பார்த்து மிரட்டவும் செய்துள்ளார். இதனை யாரோ ஒரு பயணி வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டார்.
இந்த வீடியோ விவகாரம் அவர் பணியாற்றும் ஊட்டி அரசு போக்குவரத்து கழக பணி மனை அதிகாரிகளுக்கும் சென்றது. அதன்பேரில் பாபு மீது விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர் பயணிகளுடன் தகராறு செய்து அவர்களை மிரட்டியது உறுதியானது. இதைத்தொடர்ந்து கண்டக்டர் பாபு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் விளக்கமும் கேட்கப்பட்டுள்ளது.
- பயணிகளை மழையில் இறக்கி விட்டதால் நடவடிக்கை
- வேலூர் மண்டல பொது மேலாளர் உத்தரவு
பேரணாம்பட்டு:
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடந்த 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டு பேரணாம்பட்டுக்கு சென்றது.
அந்த பஸ்சின் டிரைவர் வெங்கடேசனும், கண்டக்டர் சத்திய நாராயணனும் பயணிகளை பேரணாம்பட்டு பஸ் நிலையத்தில் இறக்கி விடாமல் கொட்டும் மழையில் 1.5 கிலோமீட்டர் முன்பாக புத்துக்கோவில் சந்திப்பு சாலையில் இறக்கி விட்டு சென்றனர்.
மேலும் பஸ்சில் தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பாமல் அவரையும் டிப்போவில் விட்டு சென்றனர். இந்த சம்பவம் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தகவலறிந்த வேலூர் மண்டல பொது மேலாளர் கணபதி, பேரணாம்பட்டு கிளை மேலாளர் ரமேஷை விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார்.
விசாரணையில் பயணிகளை நடுரோட்டில் இறக்கி விடப்பட்ட சம்பவம் உறுதியானது. இதனையடுத்து நேற்றிரவு அரசு பஸ் டிரைவர் வெங்கடேசன், கண்டக்டர் சத்திய நாராயணன், டெப்போ செக்யூரிட்டி கவுதமன் ஆகிய 3 பேரை சஸ்பெண்டு செய்து வேலூர் மண்டல பொது மேலாளர் கணபதி உத்தரவிட்டுள்ளார்.
- கண்டக்டர் பிரகாஷ் போதை வாலிபர் மீது தண்ணீரை ஊற்றி அவரை பஸ் படிக்கட்டில் இருந்து கீழே தள்ளி விட்டார்.
- கண்டக்டர் பிரகாசை சஸ்பெண்டு செய்து விழுப்புரம் கோட்ட மேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
வந்தவாசி:
பெங்களூருவில் இருந்து அரசு பஸ் கடந்த 17-ந் தேதி நள்ளிரவு வந்தவாசிக்கு வந்தது.
வந்தவாசி பழைய பஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்ட பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கினர்.
அப்போது மதுபோதையில் இருந்த ஒரு வாலிபர் மட்டும் இறங்காமல் இருந்தார். கண்டக்டர் பிரகாஷ் அவரை இறங்கும்படி கூறினார். போதையில் வாலிபர் பஸ் படிக்கட்டில் தள்ளாடியபடி கீழே இறங்கி வந்தார்.
அப்போது கண்டக்டர் பிரகாஷ் போதை வாலிபர் மீது தண்ணீரை ஊற்றி அவரை பஸ் படிக்கட்டில் இருந்து கீழே தள்ளி விட்டார். இதில் அவர் சாலையில் விழுந்தார்.
இதைத்தொடர்ந்து அந்த பஸ் டெப்போவை நோக்கி புறப்பட்டுச் சென்றது. மதுபோதை பயணியை பஸ் படிக்கட்டில் இருந்து கண்டக்டர் கீழே தள்ளிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதுகுறித்து டெப்போ உதவி பொறியாளர் துரை கூறுகையில்:-
அவலூர்பேட்டையில் ஏறிய அந்த பயணி பஸ்சிலேயே மது அருந்தியும், பஸ்சிலேயே சிறுநீர் கழித்தும் பிற பயணிகளுக்கு தொந்தரவு அளித்துள்ளார்.
மேலும் அந்த பயணி கீழே தள்ளப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிலையில் கண்டக்டர் பிரகாசை சஸ்பெண்டு செய்து விழுப்புரம் கோட்ட மேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.