என் மலர்
நீங்கள் தேடியது "ஒப்பந்ததாரர்"
- பணிகளை முடித்தபின்னர் ‘பில் பாஸ்’ செய்ய மறுத்ததாக புகார்
- தனக்கு 75000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் பில்களை பாஸ் பண்ணுவேன் என கூறியுள்ளார்.
கன்னியாகுமரி:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் குளத்தூர் பஞ்சாயத்து அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் வேலை களை கோட்டயம் பகுதியை சார்ந்த பீட்டர் என்பவர் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார்.
இவர் பணிகளை முடித்ததும் அதற்கான செலவின் பட்டியலை பஞ்சாயத்து அலுவலகத்தில் செலவு பணத்தை பஞ்சாயத்து அலுவலக செயலாளர் சந்தோஷ்குமார் லஞ்சம் பெற்று விட்டு தான் பாஸ் பண்ணுவாராம். ஊழியர்கள் முதல் செக்கட்டறி வரை லஞ்சம் கொடுத்த பின்னர் ஒப்பந்த காரருக்கு ஒன்றுமே கிடைப்பதில்லையாம்.இந்த நிலையில் ஒப்பந்தகாரர் 2.5 லட்சம் ரூபாய்க்கு 3 வேலைகளை ஒப்பந்தம் எடுத்து பின்னர் அந்த வேலைகளை செய்து முடத்துள்ளார்.
ஆனால் செக்கட்டறி சந்தோஷ்குமார் பில்களை தர மறுத்துள்ளார். தனக்கு 75000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் பில்களை பாஸ் பண்ணுவேன் என கூறியுள்ளார். 75000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தனக்கு நஷ்டம் தான் வரும் என்று ஒப்பந்தகாரர் புலம்பியுள்ளார். மன வேதனை அடைந்த ஒப்பந்தகாரர் செக்கட்டறி சந்தோஷ்குமாரின் லஞ்ச வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்து லஞ்ச ஒழிப்பு துறையை நாடியுள்ளார். அவர்களின் அறிவுரை படி செக்கட்டறி சந்தோஷ் குமாருக்கு ஒப்பந்தகாரர் பீட்டர் தொலை பேசியில் அழைத்து லஞ்சம் பணம் 75000 ரூபாய் பீல் வந்த உடன் தரலாம் என்று கூறியுள்ளார். அதற்கு செக்கட்டறி சந்தோஷ்குமார் முன் பணமாக 5000 தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கொடுத்த பவுடர் தடவிய 5000 ரூபாய் பணத்தை பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து செக்கட்டறி சந்தோஷ்குமாரிடம் ஒப்பந்த காரர் கொடுத்துள்ளார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாக செக்கட்டறி சந்தோஷ்குமாரை கைது செய்தனர். இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் பஞ்சாயத்து அலுவலகத்தில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் பஞ்சாயத்து ஊழியர்களிம் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.சோதனையில் செக்கட்டறி மட்டுமில்லாமல் பல ஊழியர்கள் சிக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. குளத்தூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து செக்கட்டறி யை கைது செய்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
- கோவிலுக்கு செல்லக்கூடிய சாலையை அதிகாரிகள் அகற்றி மீட்டனர்.
- தவறான முறையில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அப்போது ஒரத்தநாடு தாலுகா வடக்கூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
வடக்கூர் வடக்கு தெற்கு தெருவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்த வைத்திருந்த 70-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சொந்தமான கோவிலுக்கு செல்லக்கூடிய சாலையை அதிகாரிகள் அகற்றி மீட்டனர்.
ஆனால் தற்போது அந்த சாலை வழியாக செல்ல ஆக்கிரமித்தவர் தடுக்கிறார்.
எனவே மீட்டு தரப்பட்ட சாலையை எங்களது பயன்பாட்டுக்கு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பூதலூர் ஒன்றியம் புதுக்கரி யாபட்டி கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது;-
சானூரப்பட்டி ஊரா ட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலமாக தவறான முறையில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது.
எனவே அரசுக்கு இழப்பீடு செய்த பணியாளர்கள், ஒப்பந்தகாரர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சம்பந்தபட்ட தனியார்களிடம் இருந்து மேற்படி தொகையை திரும்ப பெற்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- நுகர்வோர் குறை தீர் ஆணையம் உத்தரவு
- ஒரு மாத காலத்திற்குள் வழங்கவேண்டும்
நாகர்கோவில்:
குலசேகரம் அருகே குளச்ச விளாகம் பகுதியை சேர்ந்த வர் வின்சென்ட். இவர் கச்சக்கோட்டுவிளையில் உள்ள ஒரு ஒப்பந்தகாரரிடம் 1,600 சதுர அடியில் ஒரு வீடு கட்டி தர கேட்டுக் கொண்டார். இதற்காக சுமார் ரூ.16,69,000-ஐ ஒப்பந்ததாரரிடம் வின்சென்ட் கொடுத்தார். ஒப்பந்தத்தில் கூறியபடி வீட்டின் கட்டுமானம் இல்லை.
இதற்கிடையே அந்த ஒப்பந்ததாரா் உரிமம் இல்லாத ஒப்பந்தகாரர் என்றும் தரமில்லாத பொருட்களை கொண்டு வீடு கட்டியதும் தெரிய வந்துள்ளது. மேலும் ஒரு கட்டிட கலை நிபுணரைக் கொண்டு ஆய்வு செய்து அறிக்கை பெற்றதில் மேற்படி ஒப்பந்தகாரர் கூடுதலாக ரூ.3,99,000 பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதனால் மனவேதனை அடைந்த வின்சென்ட் இதுபற்றி சம்பந் தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் கேட்டுள்ளார். ஆனால் சரியான பதில் இல்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என தெரிகிறது. பின்னர் வின்சென்ட், வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பி யும் உரிய பதில் கிடைக்க வில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வின்சென்ட் மாவட்ட நுகர் வோர் குறைதீர் ஆணை யத்தில் வழக்கு தொடர்ந் தார்.
வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் ஒப்பந்தகாரரின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட வின்சென்டிடம் அதிகமாக பெற்ற ரூ.3,99,000, அபராதமாக ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் வழக்கு செலவு ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்கவேண்டும் என உத்தரவிட்டனர்.
+2
- மாணவர்களின் உணவு தேவைக்கான அரிசி, பருப்பு, சத்து மாவு, மாணவர்களின் விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சேதமாயின.
- பாதிப்படைந்த உணவு பொருட்களை வாங்கி கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் 15 குழந்தைகள் படித்து வருகின்றனர். இம்மைய கட்டிடத்தின் மேற்கூரை பழுதடைந்திருப்பதால் மழை காலங்களில் மழை நீர் கட்டிடத்தினுள் வருவதாக புகார் வந்ததையடுத்து, மேற்கூரை மாற்ற ஒப்புதல் பெறப்பட்டது.
இதையடுத்து நேற்று அங்கன்வாடி மையத்திற்கு வந்த ஒப்பந்ததாரர், அங்கன்வாடி பணியாளர் இல்லாத நிலையில், மேற்கூரையை உடைத்தெடுத்து சென்றுள்ளார். நேற்று இரவு மழை பெய்த காரணத்தால் கட்டிடத்தினுள் இருந்த அனைத்து பொருட்களும் நீரில் நனைந்து சேதமானது. மாணவர்களின் உணவு தேவைக்கான அரிசி, பருப்பு, சத்து மாவு, மாணவர்களின் விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சேதமாயின. இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த அங்கன்வாடி பணியாளர் பழனியம்மாள் மேற்கூரை இடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அனுமதியின்றி மேற்கூரை எடுக்கப்பட்டது குறித்து ஒப்பந்ததாரரை கேட்டபோது, பணி ஆணை வழங்கப்பட்டதால், பணிகளை தொடங்கி விட்டோம் என மெத்தனமாக பதில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அங்கன்வாடி மேற்பார்வையாளர் மீனா அவர்களிடம் கேட்டபோது, புளியம்பட்டியில் செயல்பட்டும் வரும் இந்த அங்கன்வாடி பணியாளர் பழனியம்மாள் இரு குழந்தைகள் மையத்தில் பணிபுரிந்து வருகிறார். ஒப்பந்ததாரர் குழந்தைகள் மைய பணியாளரிடம் தெரிவித்துவிட்டு மேற்கூரையை எடுத்துள்ளார். பாதிப்படைந்த உணவு பொருட்களை வாங்கி கொடுப்பதாக உறுதியளித்துள்ளார். தற்போது 15 குழந்தைகளை மாற்று கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
- ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- படுகாயமடைந்த என்ற பெண் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.
மதுரை
மதுரை மாநகராட்சி 20-வது வார்டுக்குட்பட்ட விளாங்குடி சொக்கநாதபுரம் 1-வது தெரு பகுதியில் தமிழ் முரசு என்பவர் வீடு கட்டி வருகிறார். இந்த பணிகளை அழகுபெருமாள் என்ற ஒப்பந்ததாரர் மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள எம்.ரெட்டியபட்டியை சேர்ந்த மூக்காயி(52), தொண்டிச் சாமி, கட்டையன்(46), ஜோதி(52) ஆகிய 4 தொழிலாளர்கள் நேற்று கட்டிட வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது மாடிக்கு செல்வதற்காக அமைக்கப் பட்ட படிக்கட்டு கட்டுமானம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வேலை பார்த்து கொண்டிருந்த 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். படுகாயமடைந்த என்ற பெண் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.
மேலும் 3 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அவர்களை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர் பாக கூடல்புதூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் ஒப்பந்ததாரர் அழகு பெருமாள், பொறியாளர் இளமதி மற்றும் வீட்டின் உரிமையாளர் தமிழ் முரசு ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவிலில் புனரமைப்பு பணியில் ஒப்பந்ததாரர் ரூ.12 லட்சம் மோசடி செய்துள்ளார்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் பெருமாள் வழக்கு தொடுத்தார்.
விருதுநகர்
வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது52). அங்குள்ள ஒரு சமுகாத்தினருக்கு சொந்தமான கோவிலில் நிர்வாகியாக உள்ளார். அதே ஊரை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் சுப்பையா. கோவிலில் புனரமைப்பு பணிகளை ரூ.79 லட்சத்து 40 ஆயிரத்து 375 மதிப் பீட்டில் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்து அந்த தொகை கோவில் நிர்வா கத்தின் சார்பில் சுப்பையா விடம் கொடுக்கப்பட்டது.
முழுவதுமாக பணிகள் முடிவடையாத நிலையில் நிர்வாகத்திடம் கூடுதலாக சுப்பையா பணம் கேட்டார். அப்போது ஏற்கனவே கொடுத்த பணத்திற்கு வரவு-செலவு கணக்கு களை ஒப்படைக்குமாறு நிர்வாகத்தின் தரப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் கணக்கு கொடுக்கவில்லை. இதை தொடர்ந்து தாசில்தார் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
அப்போதும் செலவு கணக்கு கொடுக்க சுப்பையா மறுத்துவிட்டார். இதையடுத்து கோவில் பணிகளில் சுப்பையா ரூ.12 லட்சம் அளவுக்கு மோசடி செய்துள்ளதாகவும்,அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் பெருமாள் வழக்கு தொடுத்தார்.
கோர்ட்டு உத்தர வின்பேரில் ஒப்பந்ததாரர் சுப்பையா, மற்றொரு சுப்பையா, ராமராஜ், ஜெயக்குமார், சரவணன், சிற்பி சீனிவாசன் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வருமான வரித்துறையினர் எதற்காக சோதனை நடத்தினார்கள் என்று தெரியவில்லை.
- பாராளுமன்ற தேர்தல் காரணமாக வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் வேலுமணி. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரரான இவரது வீட்டிற்கு இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் வந்தனர்.
அவர்கள் வேலுமணியின் வீடு மற்றும் அலுவலகத்தில் திடீரென சோதனை மேற்கொண்டனர். 2 இடங்களிலும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் வீடு, அலுவலகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த சோதனை மதியத்திற்கு மேலும் நீடித்தது.வருமான வரித்துறையினர் எதற்காக சோதனை நடத்தினார்கள் என்று தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் 2பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத பல லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே பாராளுமன்ற தேர்தல் காரணமாக வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
- 2 வருட காலத்தில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு, தினசரி பணியாளர்களை நிர்வகித்து இப்பணியை முடித்துள்ளார்.
- ஒப்பந்ததாரரின் தரம், வேகம் அர்ப்பணிப்பு பாராட்டிற்குரியது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் குர்தீப் தேவ் பாத், தனது 9 ஏக்கர் நிலத்தில் கட்டிட பணிக்காக தனது ஒப்பந்ததாரர் ரவீந்தர் சிங் ரூப்ராவிற்கு ரூ.1 கோடி மதிப்பிலான ரோலக்ஸ் வாட்ச்சை பரிசளித்துள்ளார். ரோலக்ஸ் வாட்ச், 18 காரட் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபின் ஜிராக்பூர் அருகே கட்டப்பட்டுள்ள ஆரம்பர பங்களா கோட்டையை போல் உள்ளது. இதுதொடர்பாக தொழிலதிபர் குர்தீப் தேவ் பாத் கூறுகையில்,
பஞ்சாப் மாநிலம் ஷாகோட்டை சேர்ந்த ஒப்பந்ததாரரான ரூப்ரா, 2 வருட காலத்தில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு, தினசரி பணியாளர்களை நிர்வகித்து இப்பணியை முடித்துள்ளார். அவரது தரம், வேகம் அர்ப்பணிப்பு பாராட்டிற்குரியது.
இது ஒரு வீடு மட்டுமல்ல. இது பிரமாண்டமான அறிக்கை. காலமற்ற நேர்த்தியை பிரதிபலிக்கும் வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது. அவரது அர்ப்பணிப்பு, நான் கேட்டதை விட அதிகமாக வழங்கியுள்ளது. தான் விரும்பிய ஆடம்பர பங்களாவை சிறப்பாக கட்டி கொடுத்ததற்காக பரிசு அளித்ததாக அவர் தெரிவித்தார்.
கட்டிடக்கலைஞர் ரஞ்சோத் சிங்கால் செயல்படுத்தப்பட்ட வடிவமைப்பு, எஸ்டேட்டைச் சூழ்ந்துள்ள ஒரு பரந்த எல்லை சுவரைக் கொண்டுள்ளது, இது ஒரு தனியார் கோட்டையாக அமைந்துள்ளது.
- சாலை ஒப்பந்ததாரருக்கு சொந்தமான வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
- பிஜப்பூரில் நடந்த சாலை கட்டுமான ஊழல் குறித்து செய்தி வெளியிட்டார்.
சத்தீஸ்கரை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர், முகேஷ் சந்திரகர் [33 வயது]. அம்மாநிலத்தில் மாவோயிட் மற்றும் அரசுக்கு இடையில் பழங்குடியினரின் பிரச்சனைகளை வெளிப்படுத்தி வந்த இவர் கடந்த புத்தாண்டு தினத்தன்று காணாமல் போனார்.
இந்நிலையில் நேற்று [வெள்ளிக்கிழமை] பிஜப்பூர் மாவட்டத்தில் அரசு சாலை ஒப்பந்ததாரருக்கு சொந்தமான வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதனையடுத்து காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்த கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பீஜப்பூரில் பத்திரிகையாளர்கள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
என்டிடிவி உட்பட பல முன்னணி தொலைக்காட்சிகளுக்காக பணியாற்றிய முகேஷ், மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பஸ்தரில் களத்தில் தீவிரமான செய்தி சேகரிப்பவராக அறியப்பட்டவர்.
ஏப்ரல் 2021 மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப்பட்ட கோப்ரா கமாண்டோவை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விடுவிப்பதில் முகேஷ் முக்கிய பங்கு வகித்தார்.
முகேஷ் சமீபத்தில் பிஜப்பூரில் நடந்த அரசு சாலை கட்டுமான ஊழல் குறித்து செய்தி வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் மீது விசாரணை நடந்தது. இந்த ரூ. 120 கோடி மதிப்பிலான பஸ்தர் சாலை கட்டுமானத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, ஒப்பந்ததாரர் சுரேஷ் என்பரிடம் சில நாட்களுக்கு முன் முகேஷ் எடுத்த பேட்டியில் பல கேள்விகளை கேட்டிருந்தார்.

இந்நிலையில் புத்தாண்டில் காணாமல் போன முகேஷ் கடைசியாக சென்ற இடம் சுரேஷின் குடியிருப்புப் பகுதி என சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தெரிய வந்தது.
தொடர்ந்து, அந்த இடத்தில் சோதனை மேற்கொண்டதில் ஒரு செப்டிக் டேங்கில் முகேஷ் சடலமாக கிடந்தார். இதனையடுத்து, அவரது உடலை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த வழக்கில் சுரேஷின் சகோதரர் மட்டும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவரது குடும்பத்தினர் தலைமறைவாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பத்திரிகைத்துறையில் 10 ஆண்டுகளாக இயங்கி வரும் முகேஷ், பஸ்தர் ஜங்ஷன் என்ற 159,000 பின்தொடர்பவர்கள் கொன்ற யூடிபூப் சேனலையும் நடத்தி வந்தார்.

- ரூ. 120 கோடி மதிப்பிலான பஸ்தர் சாலை கட்டுமானத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் செய்தி வெளியிட்டார்
- இருவரும் உடலை செப்டிக் டேங்கில் மறைத்து, சிமெண்டால் மூடினார்.
சத்தீஸ்கரை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர், முகேஷ் சந்திரகர் [33 வயது]. இவர் கடந்த புத்தாண்டு தினத்தன்று காணாமல் போனார். கடந்த வெள்ளிக்கிழமை பிஜப்பூர் மாவட்டத்தில் அரசு சாலை ஒப்பந்ததாரருக்கு சொந்தமான வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். முகேஷ் சமீபத்தில் பிஜப்பூரில் நடந்த அரசு சாலை கட்டுமான ஊழல் குறித்து செய்தி வெளியிட்டார்.

இந்த ரூ. 120 கோடி மதிப்பிலான பஸ்தர் சாலை கட்டுமானத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர் என்பரிடம் சில நாட்களுக்கு முன் முகேஷ் எடுத்த பேட்டியில் பல கேள்விகளை கேட்டிருந்தார். இதனைதொடர்ந்தே சுரேஷுக்கு சொந்தமான வளாகத்தில் உள்ள கழிவு நீர் தொட்டியில் முகேஷின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் முகேஷ் கொலை வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாக கருதப்படும் முக்கிய குற்றவாளி சுரேஷ் சந்திரகர் நேற்று [ஞாயிற்றுக்கிழமை] இரவு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு சாலை ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர் கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் என நம்பப்படுகிறது. கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததில் இருந்து அவர் தலைமறைவானார். சுரேஷ் சந்திரகர் ஐதராபாத்தில் உள்ள தனது ஓட்டுநர் வீட்டில் பதுங்கி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். 200 சிசிடிவிகளில் இருந்து காட்சிகளை ஆய்வு செய்து கிட்டத்தட்ட 300 மொபைல் எண்களைக் டிரெஸ் அவுட் செய்து சுரேஷை போலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். முன்னதாக, சுரேஷ் சந்திரகாருடன் தொடர்புடைய நான்கு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதுடன், அவருக்குச் சொந்தமான சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிட முகப்பு பகுதி இடித்துத் தள்ளப்பட்டது. சத்தீஸ்கரின் கன்கேர் மாவட்டத்தில் சுரேஷ் சந்திரகரின் மனைவியும் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, முகேஷ் சந்திரகர் கனமான பொருளால் தாக்கப்பட்டுள்ளார்.அவரது தலை, மார்பு, முதுகு மற்றும் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. கையில் குத்தியிருந்த பச்சை மூலமே அவரது உடல் அடையாளம் காணப்பட்டது.

கொலை செய்யப்பட்ட முகேஷ் சந்திரகர் மற்றும் சுரேஷ் சந்திரகர் தூரத்து உறவினர்கள் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் ரித்தேஷ், மகேந்திர ராம்தேகே மற்றும் தினேஷ் சந்திரகர் என்ற மூவரும் பிஜப்பூரில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ரித்தேஷ் மற்றும் மகேந்திரா ஆகியோர் முகேஷை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் இருவரும் உடலை செப்டிக் டேங்கில் மறைத்து, சிமெண்டால் மூடினார். முகேஷின் போன் மற்றும் அவரை கொன்ற இரும்பு கம்பியையும் அப்புறப்படுத்தினர். இவை அனைத்தும் சுரேஷின் திட்டப்படி நடந்துள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

என்டிடிவி உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவங்களின் பங்களிப்பு நிருபராகவும் சுயாதீன பத்திரிகையாளராகவும் செயல்பட்டு வந்த முகேஷ் கொலைக்கு பத்திரிகையாளர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
