search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்லப்பிராணிகள்"

    • இதுவரையில் 1500 நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
    • தினமும் 300-க்கும் மேற்பட்டவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுவதால் சர்வர் செயல்பாடு வேகம் குறைந்தது.

    சென்னை:

    சென்னையில் செல்லப் பிராணிகளை வீடுகளில் வளர்க்க மாநகராட்சியில் உரிமம் பெற வேண்டும். ஆனால் யாரும் அதனை பொருட்படுத்துவது இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயிரம் விளக்கு பூங்கா ஒன்றில் சிறுமியை நாய் கடித்து குதறியதில் அந்த சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவளுக்கு தலையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

    சிறுமியை கடித்த அந்த நாய் வீட்டில் வளர்க்கப்பட்ட ஒருவரின் நாய் ஆகும். அதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் நாய், பூனைகள் வளர்ப்பவர்கள் கட்டாயம் உரிமம் பெற வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆன்லைன் வழியாக உரிமம் பெற்று வருகின்றனர்.

    இதுவரையில் 1500 நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. தினமும் 300-க்கும் மேற்பட்டவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுவதால் சர்வர் செயல்பாடு வேகம் குறைந்தது. இதனால் அதனை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி கால்நடை மருத்துவர் கமால்பாஷா கூறியதாவது:-

    ஒரே நேரத்தில் விண்ணப்பிப்பதால் இணைய தளத்தின் வேகம் குறைகிறது. இதனால் விண்ணப்பிக்க முடியாமல் சிரமம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதனை சரி செய்யும் பணி நடக்கிறது. இன்று மாலைக்குள் சரியாகி விடும்.

    1200 நாய்களுக்கு உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது. 2500 நாய்களுக்கு உரிமம் வழங்குவது நடைமுறையில் உள்ளது. மேலும் முறையான ஆவணங்கள் இல்லாததால் 3,500 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

    • சென்னையில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 10 மாதத்தில் வெறும் 272 பேர் மட்டுமே உரிமம் பெற விண்ணப்பித்திருந்தனர்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவில் கடந்த 5-ந்தேதி இரவு விளையாடிக்கொண்டிருந்த சிறுமி சுரக்ஷாவை 2 ராட்விலர் இன வளர்ப்பு நாய்கள் கடித்து குதறியது. இதில், சிறுமி பலத்த காயமடைந்து ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தலையில் படுகாயம் அடைந்த அந்த சிறுமிக்கு சமீபத்தில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, சூளைமேட்டில் நடைபயிற்சி சென்ற தம்பதியை நாய் கடித்து குதறியது.

    சென்னையில் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த சம்பவங்கள் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது. எனவே, சென்னையில், நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்தது. உரிமம் பெறாத உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்தது.

    மாநகராட்சியின் அறிவிப்பை தொடர்ந்து, செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாத பலரும் ஆன்லைன் மூலம் உரிமம் பெற ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஒரே வாரத்தில் சென்னையில் 6 ஆயிரத்து 713 பேர் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற விண்ணப்பித்துள்ளனர்.

    இதுகுறித்து, சென்னை மாநகராட்சி கால்நடைத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:-

    சென்னையில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஒரே வாரத்தில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற 6 ஆயிரத்து 713 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், உரிய ஆவணங்களை சமர்பிக்காத 3 ஆயிரத்து 337 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 376 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. கடந்த 5-ந்தேதியில் இருந்து இதுவரை ஆயிரம் பேருக்கு புதிதாக உரிமம் வழங்கியுள்ளோம். குறிப்பாக, கடந்த 3 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்து 300 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    கடந்த 10 மாதத்தில் வெறும் 272 பேர் மட்டுமே உரிமம் பெற விண்ணப்பித்திருந்தனர். ஆனால், உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்ட பின்னர் ஏராளமானோர் உரிமம் பெற விண்ணப்பித்து வருகின்றனர். இந்த மாத இறுதிக்குள் 10 ஆயிரம் பேர் வரையில் புதிய உரிமம் பெற விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதத்திற்குள் 20 ஆயிரம் பேருக்கு புதிதாக உரிமம் வழங்குவதை இலக்காக நிர்ணயம் செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று இணையதள சேவைகள் என்பதை 'க்ளிக்' செய்ய வேண்டும்
    • உரிமையாளர்கள் தங்களது சென்னை மாநகராட்சி இணையதள பக்கத்தில் உள்ள முகப்பு பக்கத்துக்கு சென்று இணைய வழியில் ரூ.50 பணம் செலுத்த வேண்டும்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கத்தில் 5 வயது சிறுமியை நாய் கடித்து குதறிய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வீட்டில் நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் கட்டாயம் உரிமம் பெற வேண்டுமென சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், இணைய வழியில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது குறித்த வழிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று இணையதள சேவைகள் என்பதை 'க்ளிக்' செய்ய வேண்டும். அதில் உள்ள பல சேவைகளில் செல்லப் பிராணிகளின் உரிமம் என்பதனை தேர்வு செய்ய வேண்டும். 'நியூ யூசர்' என்பதனை தேர்வு செய்து அதில் தங்களது விவரங்களை உள்ளீடு செய்து 4 இலக்க எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.

    பின்னர், தங்களது செல்போன் எண்ணையும், 4 இலக்க எண்ணையும் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். புதிய செல்லப்பிராணிகளின் உரிமம் என்பதை தேர்வு செய்யவும்.

    செல்லப் பிராணிகளின் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து உரிமையாளர் புகைப்படம், முகவரி சான்றின் புகைப்படம், செல்லப் பிராணிகளின் புகைப்படம், ஒரு வருடத்துக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றின் புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து உறுதிமொழி அளித்து பின்னர் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த விவரங்களை சம்பந்தப்பட்ட மண்டல கால்நடை உதவி டாக்டர் சரிபார்த்து அங்கீகரித்த பின்னர் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு பணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் பின்னர், உரிமையாளர்கள் தங்களது சென்னை மாநகராட்சி இணையதள பக்கத்தில் உள்ள முகப்பு பக்கத்துக்கு சென்று இணைய வழியில் ரூ.50 பணம் செலுத்த வேண்டும்.

    இதையடுத்து, செல்லப் பிராணிகளின் உரிமம் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு ('லிங்க்') உருவாகும். அதைக்கொண்டு செல்லப்பிராணிகளின் உரிமத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். எனவே, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்போர் ஆண்டு தோறும் தங்களது செல்லப்பிராணிகளின் உரிமத்தை இணையவழியில் பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 7 மடங்கு அதிகமான சத்தத்தை விலங்குகள் உணர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
    • குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

    ஒளிரும் பட்டாககளும், அவை எழுப்பும் சத்தங்களும் பண்டிகையை உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் கொண்டாட வழிவகுக்கும். அதேநேரம் நாய், பூனை போன்ற விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் பட்டாசுகளின் திடீர் வெளிச்சமும், அதிர வைக்கும் சத்தமும் அச்சுறுத்தலாகவே அமையும்.

    பட்டாசுகள் வெடிக்கும்போது நாம் கேட்பதை விட, 7 மடங்கு அதிகமான சத்தத்தை செல்லப் பிராணிகள் உணர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய திடீர் சத்தங்கள் அவற்றின் உயிருக்கே ஆபத்தாகவும் மாற வாய்ப்பு உள்ளது. தீபாவளியின் போது பட்டாசு சத்தத்தில் இருந்து உங்கள் செல்லப்பிராணிகளை பாதுகாப்பாக வைத்திருக்க சில குறிப்புகள்.

    தீபாவளி பண்டிகை அன்று அனைவரும் பட்டாசு வெடிக்கத் தொடங்கும் நேரத்துக்கு முன்பாகவே, உங்கள் செல்லப்பிராணிகளை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லுங்கள். இதனால் வெடிகளின் பயத்தில் இருந்து அவை தப்பிக்க முடியும். அதேபோல பட்டாசு சத்தத்துக்கு உங்கள் செல்லப்பிராணி அதிகமாக பயப்படும் என்று நீங்கள் எண்ணினால், முன்னதாகவே கால்நடை மருத்துவரை அணுகி அதன் பதற்றத்தை குறைப்பதற்கான மருத்துகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

    தீபாவளி அன்று ஏற்றிவைக்கும் தீபங்கள் மற்றும் அலங்கார மெழுகுவர்த்திகளை, செல்லப்பிராணிகள் இருக்கும் இடங்களுக்கு அருகில் வைப்பதை தவிர்க்கவும். பட்டாசு சத்தத்துக்கு பயந்து உங்கள் செல்லப்பிராணி சோபா, கட்டில் போன்றவற்றுக்கு அடியில் ஒளிந்துகொள்ள நேரிடலாம். அத்தகைய சமயங்களில் அவற்றை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியே இழுத்து வருவதைத் தவிர்க்கவும். அவை அந்த சூழ்நிலையை இயல்பாக கையாள்வதற்கு உதவி செய்யவும்.

    பலரும் மொட்டை மாடிகளில் கூண்டு அமைத்து முயல்களை வளர்க்கிறார்கள். தீபாவளி பண்டிகை சமயத்தில் மட்டும் வீட்டுக்குள்ளேயே அவற்றுக்கு பாதுகாப்பான முறையில் கூண்டுகள் அமைத்து பராமரிக்கலாம்.

    பட்டாசு சத்தத்தால் விலங்குகளும், பறவைகளும் பாதிக்கப்படுவதை உங்களது குழந்தைகளுக்கு தெரிவித்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். இது வருங்காலத்தில் விலங்குகளின் பாதுகாப்புக்கு வழிவகுக்கும்.

    • செல்லப்பிராணி ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500 பணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும்.
    • செல்லப்பிராணிகள் சாலையில் திரிவது கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகள் வளர்க்கும் பொதுமக்கள் அருகிலுள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் இருக்க உரிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உரிமம் பெற்று செல்லப்பிராணிகள் வளர்ப்பில் ஈடுபட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    தமிழ்நாடு அர்பன் லோக்கல் பாடி ரூல்ஸ் 2023-ன் படி செல்லப்பிராணி ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வீதம் பணம் செலுத்தி உரிய உரிமம் பெற்று, அதில் கூறப்பட்டுள்ள சட்டதிட்டங்க ளுக்கு உட்பட்டு செல்லப்பி ராணிகள் வளர்ப்பில் ஈடுபட அறிவுறுத்த ப்படுகிறார்கள்.

    உரிமம் பெறாமல் செல்லப்பிராணிகள் வளர்ப்பதும், அவைகள் சாலையில் திரிவதும் கண்டறிய ப்பட்டால் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் வளர்ப்பு பிராணிகள் பறிமுதல் செய்யப்ப டுவதுடன், சட்டவிதி களின்படி வளர்ப்பு பிராணிகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      ஏற்காடு:

      சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 46-வது கோடைவிழா, மர் கண்காட்சி கடந்த 21-ந் தேதி தொடங்கி நடை பெற்று வருகிறது. நாளையுடன் கோடை விழா நிறைவடையும் நிலையில், பல்வேறு விதமான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்து மலர் கண்காட்சியை ரசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்து வருதால், அலங்கார வளைவுகள் மற்றும் பல்வேறு உருவங்களில் இருந்த மலர்கள் வாடின. இதைய டுத்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நேற்று வாடிய பூக்கள் அனைத்தையும் அகற்றினர்.

      அதற்கு பதிலாக புதிய மலர்கள் கொண்டுவரப்பட்டு, மீண்டும் அலங்கரிக் கப்பட்டது. இதனிடையே, நேற்று மாலை ஏற்காட்டில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சீதோஷண நிலையில் மாற்றம் ஏற்பட்டு குளிர் நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

      செல்லப்பிராணிகள்

      கண்காட்சி

      கோடைவிழாவின் 7-ம் நாளான இன்று, மலர்கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டுள்ளதால் ஏற்காடு களை கட்டியுள்ளது. ஏற்காடு அண்ணா பூங்காவில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள மலர்களை அவர்கள் கண்டு ரசித்தனர். மலர்களால் வடிவ மைக்கப்பட்ட பல்வேறு உருவங்கள் முன்பும், வண்ணமயமான மலர்களுக்கு முன்பும் நின்று குடும்பத்துடன் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர். ஏற்காடு படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏற்காட்டில் இன்று சைக்கிள் போட்டி, இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாய் மற்றும் வீட்டு வளர்ப்பு விலங்குகள் கண்காட்சி நடைபெற்றது. இதில் காவல்துறையை சேர்ந்த நாய்களுக்கான கீழ்படிதல், சாகச காட்சிகள் ஆகியவைகளும் இடம் பெற்றன. தொடர்ந்து சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க, நாட்டிய நிகழ்ச்சி, நகைச்சுவை பட்டிமன்றம் மற்றும் இன்னிசை கச்சேரியும் நடத்தப்பட்டது.

      • டிக்கெட்டை ரத்து செய்தால், விலங்கு டிக்கெட்டுக்கு பணம் திரும்ப வழங்கப்படாது.
      • விலங்குகளின் உரிமையாளர்கள் ரெயில் நிறுத்தங்களில் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு தண்ணீர், உணவு போன்றவற்றை வழங்கலாம்.

      ஐஆர்சிடிசி இணையதளத்தில் விலங்குகளை ரெயிலில் கொண்டு செல்லஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியைத் தொடங்கும் வகையில், மென்பொருளில் மாற்றங்களைச் செய்யுமாறு ரயில்வே வாரியம் ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையத்திடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

      காவலர்களுக்காக ஒதுக்கப்பட்ட உட்கார்ந்தபடி பயணம் செய்யக்கூடிய சாமான்கள் ஏற்றிச்செல்லும் (எஸ்எல்ஆர்) கோச்சில் விலங்குகள் வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

      விலங்குகளின் உரிமையாளர்கள் ரெயில் நிறுத்தங்களில் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு தண்ணீர், உணவு போன்றவற்றை வழங்கலாம் என்றும் இதற்கு பயணியின் டிக்கெட் உறுதியாகி இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

      டிக்கெட்டை ரத்து செய்தால், விலங்கு டிக்கெட்டுக்கு பணம் திரும்ப வழங்கப்படாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் ரெயில்வே வாரியம் சார்பில் விதிக்கப்பட்டுள்ளன.

      • செல்லப்பிராணிகள் உடன் ஒரு ஐந்து நிமிடம் நேரம் செலவழிக்கும்போது மனஅழுத்தம் நீங்கிவிடும்.
      • அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் குடற்புழு நீக்கம், வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது.

      தரங்கம்பாடி:

      மயிலாடுதுறையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் "ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி"தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது.

      விழாவின் 5-ம் நாளில் மாவட்டத்தில் முதன்முறையாக கால்நடை பராமரிப்பு துறை சார்பில் செல்லப்பிராணிகள் கண்காட்சி நடைபெற்றது.

      இதில் டாபர்மென், லேப்ரடார், கோல்டன் ரெட்ரைவர், ஸ்பிட்ஸ், போமரேனியன் உள்பட பல வெளிநாட்டு நாய்களும், சிற்பி பாறை, கன்னி, கோம்பை, ராஜபாளையம் உள்ளிட்ட உள்நாட்டு நாய்களும் கலந்து கொண்டன.

      நிகழ்ச்சிக்கு சிறப்பு பார்வையாளராக கலெக்டர் ஏ.பி.மகாபாரதி, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

      பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

      வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் ஆகும். நமக்கு அதிகமான மனஅழுத்தம் இருக்கும்போது செல்லப்பிராணிகள் உடன் ஒரு ஐந்து நிமிடம் நேரம் செலவழிக்கும்போது மனஅழுத்தம் நீங்கிவிடும்.

      இக்கண்காட்சி மயிலாடுதுறையில் முதன்முதலாக மிக குறுகிய காலத்தில் நாய்கள் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது என்றார்.

      கண்காட்சியில் கலந்து கொண்ட அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் குடற்புழு நீக்கம், வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது.

      மேலும், சிறந்த 10 செல்லப்பிராணிகள் தேர்வு செய்யப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு கலெக்டர் ஏ.பி.மகாபாரதி, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் சிறப்பு செய்தனர்

      இதில், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, மயிலாடுதுறை ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் ஈஸ்வரன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

      • செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக சிகிச்சை, வெறிநாய் தடுப்பூசி போன்றவை போடப்படுகிறது.
      • செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்ப்பதற்கு மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும்.

      சென்னை:

      வீட்டில் வளர்க்கக்கூடிய நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் குறித்து முழு விவரங்கள் இன்னும் மாநகராட்சிக்கு கிடைக்கவில்லை. 1,500 செல்லப்பிராணிகள் மட்டுமே வீடுகளில் வளர்க்கப்படுவதாக புள்ளி விவரம் உள்ளது.

      சென்னையில் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகள் வீடுகளில் எத்தனை உள்ளன என்ற முறையான புள்ளி விவரம் இல்லாததால் அவற்றை ஒழுங்குபடுத்த புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

      மாநகராட்சி வெப் சைட்டில் செல்லப்பிராணிகள் குறித்த விவரங்களை பதிவு செய்யும் புதிய திட்டம் ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் செயல்படுத்தப்படும் என்று மாநகராட்சி கால்நடை டாக்டர் கமால் உசேன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

      செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக சிகிச்சை, வெறிநாய் தடுப்பூசி போன்றவை போடப்படுகிறது. திரு.வி.க. நகர், நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம் ஆகிய 4 இடங்களில் இதற்கான மருத்துவமனை உள்ளது. இங்கு வெறிநாய் தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

      செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்ப்பதற்கு மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை ரூ.50 கட்டணம் செலுத்தி இதனை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். வீட்டில் வளர்க்கக்கூடிய விலங்குகள் குறித்த சரியான புள்ளி விவரம் இன்னும் கிடைக்கவில்லை. அதனை முறைப்படுத்துவதற்காகத்தான் ஆன்லைன் பதிவு முறை கொண்டுவரப்படுகிறது.

      நாய் வளர்ப்போரின் பெயர், அடையாள அட்டை, நாய் போட்டோ, தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் போன்றவற்றை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

      இதுதவிர செல்லப் பிராணிகளுக்கான தனியார் கிளினிக், கடை கள் நாய் இனவிருத்தி செய்யக்கூடியவர்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனர். அவர்களும் தங்கள் பெயர், கடை, வீடு போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

      ஆன்லைன் வழியாக முழு விவரங்களை சேகரிக்க முடிவு செய்துள்ளோம். ஆன்லைன் வழியாக பதிவு செய்யும் முறை நடைமுறைத்தப்படுத்தப்பட்டால் செல்லப்பிராணிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து உரிமம் வழங்கப்படும்.

      மேலும் நாய், பூனை வளர்ப்போரின் முழுமையான விவரமும் மாநகராட்சிக்கு தெரிய வரும்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      ×