search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொர்க்க வாசல் திறப்பு"

    • திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேற்று நேரடியாக சர்வ தரிசனம் செல்லும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    • வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருமலைக்கு தற்போது அதிக அளவில் வி.ஐ.பி. பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

    திருப்பதி:

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை 1.40 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

    முதலில் வி.ஐ.பி. பக்தர்கள் சுவாமியை தரிசித்த பின்னர் சொர்க்க வாசலை தரிசித்து விட்டு வெளியே வந்தனர். அதன் பின்னர், சாமானிய பக்தர்கள் சொர்க்க வாசல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    வரும் ஜனவரி 1-ம் தேதி வரை பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.

    அத்துடன் திருப்பதியில் ஏற்பாடு செய்துள்ள 9 இடங்களிலும் வியாழக்கிழமை நள்ளிரவு 11.30 மணி முதலே சொர்க்க வாசல் தரிசனத்துக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன.

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேற்று நேரடியாக சர்வ தரிசனம் செல்லும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    இது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஏராளமான பக்தர்கள் நேற்று திருமலையில் குவிந்ததால், எவ்வித டோக்கன்களும் இன்றி சர்வ தரிசன வரிசையில் செல்ல முயன்ற பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    ஆதலால், போலீசாருக்கும், பக்தர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 22-ம் தேதிக்கான சர்வ தரிசன டோக்கன்களை ஏன் ரத்து செய்தீர்கள்? என பக்தர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதன் பின்னர், சிறிது நேரத்தில் பக்தர்கள் சர்வ தரிசன வரிசையில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் சிறிது நேரம் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருமலைக்கு தற்போது அதிக அளவில் வி.ஐ.பி. பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

    இதனால் சாமானிய பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். தேவஸ்தானம் விஐபி சிபாரிசு கடிதங்களை ரத்து செய்திருந்தாலும், நேரடியாக வரும் வி.வி.ஐ.பி.க்களுக்கு தரிசன ஏற்பாடுகளை செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    • ஸ்ரீவைகுண்டத்தை சுற்றி தாமிரபரணி ஆற்றின் கரையில் நவதிருப்பதி கோவில்கள் அமைந்துள்ளன.
    • ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் 4.55 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    108 வைணவ திவ்ய தேசங்களில் ஸ்ரீவை குண்டத்தை சுற்றி தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆன்மீக சிறப்புவாய்ந்த நவதிருப்பதி கோவில்கள் அமைந்துள்ளன.

    ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற வைணவதிருப்பதிகளில் ஒன்றான நவதிருப்பதி கோவில்களில் ஸ்ரீவைகுண்டம் (கள்ளபிரான்), நத்தம் (எம்மிடர்கடிவான்), திருப்புளியங்குடி (காய்சினவேந்தபெருமாள்), தொலவில்லிமங்கலம் (செந்தாமரைக்கண்ணன்), இரட்டைத்திருப்பதி (தேவர்பிரான்), பெருங்குளம் (மாயக்கூத்தர்), தென்திருப்பேரை (நிகரில் முகில்வண்ணன்), திருக்கோளுர் (வைத்தமாநிதி), ஆழ்வார்திருநகரி (பொலிந்துநின்றபிரான்) ஆகிய கோவில்களில் வைகுண்ட ஏகாதசி மார்கழி திருஅத்யயன திருவிழா பகல்பத்து, இராபத்து திருவிழா என 21 நாட்கள் நடைபெறுகிறது.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நவதிருப்பதி கோவில்களில் காலை 4மணி முதல் ஆதிசேஷ வாகனத்தில் சயன திருக்கோலத்திலும் தொலவில்லிமங்கலம் (செந்தாமரைக்கண்ணன்), இரட்டைத்திருப்பதி (தேவர்பிரான்), திருக்கோளுர் (வைத்தமாநிதி), நின்ற திருக்கோலத்திலும் பக்தர்களுக்கு சுவாமிகள் தாயார்களுடன் காட்சியளித்தனர்.

    நேற்று ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு சயனகுரடு மண்டபத்தில் சுவாமி கள்ளபிரான் தாயார்களுடன் சயன திருக்கோலத்தில் எழுந்தருளினார். காலை 5 மணி முதல் பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் குடும்பத்துடன் வந்து நெய் விளக்கு ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் 12 மணிக்கு விஸ்வரூபம், மதியம் 12.30 மணிக்கு திருமஞ்சனம் கோஷ்டி, மதியம் 2 மணிக்கு நித்தியல் கோஷ்டி, மாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசலுக்கு சுவாமி கள்ளபிரான் புறப்பாடு, 4.55 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதே போன்று ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் இரவு 10.30 மணிக்கும், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி மண்டகபடியின் சொர்க்க வாசல் இரவு 10.30 மணிக்கும் திறப்பு விழா நடைபெற்றது. ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன் ஸ்ரீதேவி பூதேவியுடன் பரமபத வாசலுக்கு இரவு 10.30 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா கோபாலா என்ற கோஷத்துடன் எழுந்தருளினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரமசக்தி உமரிசங்கர், தி.மு.க. இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் பாலமுருகன், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் செயல் அலுவலர் கோவல மணிகண்டன், கோவில் ஆய்வாளர் நம்பி, ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் செயல் அலுவலர் அஜீத், ஆழ்வார் திருநகரி முன்னாள் பேரூராட்சித் தலைவர்கள் கந்தசிவசுப்பு, ஆதிநாதன், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மேலாளர் விஜயகுமார், முருகன், கள்ளபிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி, தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில் செயல் அலுவலர் கிருஷ்ண மூர்த்தி, மூத்தவேலியார் குடும்ப டிரஸ்டு தலைவர் சுந்தர ராஜன், தோழப்பர் கண்ணன் சுவாமி, தேவராஜன், வெங்கடகிருஷ்ணன், மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    பக்தர்களின் வசதிக்காக நெல்லை, திருச்செந்தூர், தூத்துக்குடி நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.பொதுமக்கள் சிறப்பு தரிசன கட்டணத்திலும், இலவச தரிசனத்திலும் பெருமாளை வழிபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. மாயவன் தலைமையில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் செய்து இருந்தனர்.

    • பல நூறு ஆண்டுகள் பழமையான சென்றாய பெருமாள் கோவில். இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான இக்கோவிலில் வருடா வருடம் வைகுண்ட ஏகாதசி கொண்டாடுவது வழக்கம்.
    • அதன்படி இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள

    பாகல்பட்டியில் அமைந்துள்ளது பல நூறு ஆண்டுகள் பழமையான சென்றாய பெருமாள் கோவில். இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான இக்கோவிலில் வருடா வருடம் வைகுண்ட ஏகாதசி கொண்டாடுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. நேற்று சுவாமி திருக்கல்யாண உற்சவ வைபவம் நடை பெற்றது . இதில் சென்றாய பெருமாள் சமேத லட்சுமி அம்மாள் மற்றும் துளசி அம்மாள் கல்யாண வைப வம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ சென்றாய பெரு மாள் சுவாமி மாப்பிள்ளை கோலத்திலும் மற்றும் ஸ்ரீ லட்சுமியம்மாள் ஸ்ரீ துளசி அம்மாள் மண மகள் கோலத்திலும் அலங்க ரிக்கப்பட்டு திருமாங்கல்யம் கட்டப்பட்டு மாலை மாற்றப்பட்டு சிறப்பு பூஜை கள் செய்யப்பட்டது.

    இதில் ஓமலூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்டுக்களித்தனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து இன்று காலை 4.30 மணிக்கு

    பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பாகல்பட்டி ஸ்ரீ சென்றாய பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதே போன்று தொளசம்பட்டி சென்றாய பெருமாள் கோவிலிலும், ஓமலூர் கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஓமலூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பல்வேறு பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஆயி ரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ×