என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொர்க்க வாசல் திறப்பு"

    • பல நூறு ஆண்டுகள் பழமையான சென்றாய பெருமாள் கோவில். இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான இக்கோவிலில் வருடா வருடம் வைகுண்ட ஏகாதசி கொண்டாடுவது வழக்கம்.
    • அதன்படி இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள

    பாகல்பட்டியில் அமைந்துள்ளது பல நூறு ஆண்டுகள் பழமையான சென்றாய பெருமாள் கோவில். இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான இக்கோவிலில் வருடா வருடம் வைகுண்ட ஏகாதசி கொண்டாடுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. நேற்று சுவாமி திருக்கல்யாண உற்சவ வைபவம் நடை பெற்றது . இதில் சென்றாய பெருமாள் சமேத லட்சுமி அம்மாள் மற்றும் துளசி அம்மாள் கல்யாண வைப வம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ சென்றாய பெரு மாள் சுவாமி மாப்பிள்ளை கோலத்திலும் மற்றும் ஸ்ரீ லட்சுமியம்மாள் ஸ்ரீ துளசி அம்மாள் மண மகள் கோலத்திலும் அலங்க ரிக்கப்பட்டு திருமாங்கல்யம் கட்டப்பட்டு மாலை மாற்றப்பட்டு சிறப்பு பூஜை கள் செய்யப்பட்டது.

    இதில் ஓமலூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்டுக்களித்தனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து இன்று காலை 4.30 மணிக்கு

    பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பாகல்பட்டி ஸ்ரீ சென்றாய பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதே போன்று தொளசம்பட்டி சென்றாய பெருமாள் கோவிலிலும், ஓமலூர் கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஓமலூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பல்வேறு பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஆயி ரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • ஸ்ரீவைகுண்டத்தை சுற்றி தாமிரபரணி ஆற்றின் கரையில் நவதிருப்பதி கோவில்கள் அமைந்துள்ளன.
    • ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் 4.55 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    108 வைணவ திவ்ய தேசங்களில் ஸ்ரீவை குண்டத்தை சுற்றி தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆன்மீக சிறப்புவாய்ந்த நவதிருப்பதி கோவில்கள் அமைந்துள்ளன.

    ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற வைணவதிருப்பதிகளில் ஒன்றான நவதிருப்பதி கோவில்களில் ஸ்ரீவைகுண்டம் (கள்ளபிரான்), நத்தம் (எம்மிடர்கடிவான்), திருப்புளியங்குடி (காய்சினவேந்தபெருமாள்), தொலவில்லிமங்கலம் (செந்தாமரைக்கண்ணன்), இரட்டைத்திருப்பதி (தேவர்பிரான்), பெருங்குளம் (மாயக்கூத்தர்), தென்திருப்பேரை (நிகரில் முகில்வண்ணன்), திருக்கோளுர் (வைத்தமாநிதி), ஆழ்வார்திருநகரி (பொலிந்துநின்றபிரான்) ஆகிய கோவில்களில் வைகுண்ட ஏகாதசி மார்கழி திருஅத்யயன திருவிழா பகல்பத்து, இராபத்து திருவிழா என 21 நாட்கள் நடைபெறுகிறது.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நவதிருப்பதி கோவில்களில் காலை 4மணி முதல் ஆதிசேஷ வாகனத்தில் சயன திருக்கோலத்திலும் தொலவில்லிமங்கலம் (செந்தாமரைக்கண்ணன்), இரட்டைத்திருப்பதி (தேவர்பிரான்), திருக்கோளுர் (வைத்தமாநிதி), நின்ற திருக்கோலத்திலும் பக்தர்களுக்கு சுவாமிகள் தாயார்களுடன் காட்சியளித்தனர்.

    நேற்று ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு சயனகுரடு மண்டபத்தில் சுவாமி கள்ளபிரான் தாயார்களுடன் சயன திருக்கோலத்தில் எழுந்தருளினார். காலை 5 மணி முதல் பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் குடும்பத்துடன் வந்து நெய் விளக்கு ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் 12 மணிக்கு விஸ்வரூபம், மதியம் 12.30 மணிக்கு திருமஞ்சனம் கோஷ்டி, மதியம் 2 மணிக்கு நித்தியல் கோஷ்டி, மாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசலுக்கு சுவாமி கள்ளபிரான் புறப்பாடு, 4.55 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதே போன்று ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் இரவு 10.30 மணிக்கும், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி மண்டகபடியின் சொர்க்க வாசல் இரவு 10.30 மணிக்கும் திறப்பு விழா நடைபெற்றது. ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன் ஸ்ரீதேவி பூதேவியுடன் பரமபத வாசலுக்கு இரவு 10.30 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா கோபாலா என்ற கோஷத்துடன் எழுந்தருளினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரமசக்தி உமரிசங்கர், தி.மு.க. இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் பாலமுருகன், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் செயல் அலுவலர் கோவல மணிகண்டன், கோவில் ஆய்வாளர் நம்பி, ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் செயல் அலுவலர் அஜீத், ஆழ்வார் திருநகரி முன்னாள் பேரூராட்சித் தலைவர்கள் கந்தசிவசுப்பு, ஆதிநாதன், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மேலாளர் விஜயகுமார், முருகன், கள்ளபிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி, தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில் செயல் அலுவலர் கிருஷ்ண மூர்த்தி, மூத்தவேலியார் குடும்ப டிரஸ்டு தலைவர் சுந்தர ராஜன், தோழப்பர் கண்ணன் சுவாமி, தேவராஜன், வெங்கடகிருஷ்ணன், மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    பக்தர்களின் வசதிக்காக நெல்லை, திருச்செந்தூர், தூத்துக்குடி நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.பொதுமக்கள் சிறப்பு தரிசன கட்டணத்திலும், இலவச தரிசனத்திலும் பெருமாளை வழிபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. மாயவன் தலைமையில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் செய்து இருந்தனர்.

    • திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேற்று நேரடியாக சர்வ தரிசனம் செல்லும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    • வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருமலைக்கு தற்போது அதிக அளவில் வி.ஐ.பி. பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

    திருப்பதி:

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை 1.40 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

    முதலில் வி.ஐ.பி. பக்தர்கள் சுவாமியை தரிசித்த பின்னர் சொர்க்க வாசலை தரிசித்து விட்டு வெளியே வந்தனர். அதன் பின்னர், சாமானிய பக்தர்கள் சொர்க்க வாசல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    வரும் ஜனவரி 1-ம் தேதி வரை பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.

    அத்துடன் திருப்பதியில் ஏற்பாடு செய்துள்ள 9 இடங்களிலும் வியாழக்கிழமை நள்ளிரவு 11.30 மணி முதலே சொர்க்க வாசல் தரிசனத்துக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன.

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேற்று நேரடியாக சர்வ தரிசனம் செல்லும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    இது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஏராளமான பக்தர்கள் நேற்று திருமலையில் குவிந்ததால், எவ்வித டோக்கன்களும் இன்றி சர்வ தரிசன வரிசையில் செல்ல முயன்ற பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    ஆதலால், போலீசாருக்கும், பக்தர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 22-ம் தேதிக்கான சர்வ தரிசன டோக்கன்களை ஏன் ரத்து செய்தீர்கள்? என பக்தர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதன் பின்னர், சிறிது நேரத்தில் பக்தர்கள் சர்வ தரிசன வரிசையில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் சிறிது நேரம் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருமலைக்கு தற்போது அதிக அளவில் வி.ஐ.பி. பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

    இதனால் சாமானிய பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். தேவஸ்தானம் விஐபி சிபாரிசு கடிதங்களை ரத்து செய்திருந்தாலும், நேரடியாக வரும் வி.வி.ஐ.பி.க்களுக்கு தரிசன ஏற்பாடுகளை செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஷ்ணுவை வணங்கினால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
    • சொர்க்க வாசலின் வழியாக நுழைந்து வந்தால் சிக்கல்கள் தீரும்.

    பாற்கடலில் துயிலும் பரந்தாமனுக்கு பல விழாக்கள் இருந்தாலும், வைகுண்ட ஏகாதசி பக்தர்களின் மனதில் இடம்பெற்ற முக்கியமான பக்தித் திருவிழாவாகும். இந்த ஏகாதசியன்று 'சொர்க்க வாசல் நுழைதல்' என்ற நிகழ்வு விஷ்ணு ஆலயங்கள் தோறும் நடைபெறும்.

    வைகுண்ட ஏகாதசி என்று வரும்பொழுது சொர்க்க வாசலை திறந்து வைப்பார்கள். ஆண்டு முழுதும் அடைத்து வைத்திருக்கும் கதவு அன்று மட்டும் திறந்து வைக்கப்படும். அந்த சொர்க்க வாசலின் வழியாக நாம் நுழைந்து வந்தால் சிக்கல்கள் தீரும். செல்வ வளம் சேரும்.


    மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கண்ணன் சொல்லியதாகச் சொல்வார்கள். இவ்வாறு புனிதமான மாதமாகவும், தேவர்கள் துயில் எழும் மாதமாகவும் கருதப்படும் மார்கழி மாதத்தில், நாம் விஷ்ணுவை வணங்கினால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

    ரொக்கத்திற்கு' முக்கியக்கவம் கொடுக்கும் நாம், 'சொர்க்கத்திற்கு' முக்கியத்துவம் கொடுக்கும் விழாவைக் கொண்டாட வேண்டுமல்லவா? அந்த விழா இந்த மார்கழி மாதம் தான் வருகின்றது.

    வைணவத் தலங்களில் எல்லாம் இந்த நிகழ்வு வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த விழா மார்கழி 26-ந்தேதி (10.1.2025) அன்று வருகிறது.

    பதினாறு பேறுகளுக்கும் சொந்தக்காரரான விஷ்ணுவை, நாம் 'பெருமாள்' என்று செல்லமாக அழைக்கிறோம். அவருக்காக கட்டிய கோவிலை 'பெருமாள் கோவில்' என்கிறோம். அவரை வழிபட்டால் நமக்கு பதினாறு விதமான பேறுகளும் வந்துசேரும் என்பதை நாம் அனுபவத்தில் உணரலாம்.

    காக்கும் கடவுள் என்று வர்ணிக்கப்படும் விஷ்ணுவிற்கு, ஆயிரம் திருநாமங்கள் இருந்தாலும், அவற்றில் 16 திருநாமங்கள் முக்கியமானவையாக உள்ளன. அவை:-

    1. ஸ்ரீவிஷ்ணு

    2. நாராயணன்

    3. கோவிந்தன்

    4. மதுசூதனன்

    5. ஜனார்த்தனன்

    6. பத்மநாபன்

    7. ப்ரஜாதிபதி

    8. வராகன்

    9. சக்ரதாரி

    10. வாமணன்

    11. மாதவன்

    12. நரசிம்மன்

    13. திரிவிக்ரமன்

    14. ரகுநந்தனன்

    15. ஜலசாயினன்

    16. ஸ்ரீதரன்


    பதினாறு பேறுகளையும் வழங்கும், பெருமாளின் இந்த 16 பெயர்களையும் சொல்லி, வைகுண்ட ஏகாதசி அன்று விஷ்ணுவை வணங்கினால், வேண்டிய வரம் கிடைக்கும்.

    மார்கழி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு 'உற்பத்தி ஏகாதசி' என்று பெயர். அதே மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு 'வைகுண்ட ஏகாதசி' என்று பெயர்.

    ஏகாதசி அன்று அவல், வெல்லம் கலந்த நைவேத்தியம் வைத்து சாப்பிடலாம். முழு விரதம் இருக்க முடியாதவர்கள், மதியம், இரவு பலகாரம் மட்டும் சாப்பிடுவர். அன்று இரவு முழுவதும் கண்விழித்திருக்கும் பொழுது, இறை நாமத்தையே உச்சரிக்க வேண்டும்.

    பக்திப் பாடல்கள் பாடி வழிபடலாம். மறுநாள் அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்னால் நீராடி தினம் பச்சரிசி சோறு, அகத்திக்கீரை, நெல்லிக்காய், கருணைக்கிழங்கு புளிக்குழம்பு சாப்பிடுவது நல்லது.

    இந்த வழிபாட்டில் மனநலமும், உடல்நலமும் சீராகின்றது. சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் ஏகாதசி விரதத்தை இனிதே கடைப்பிடித்து, பாற்கடலில் துயிலும் பரந்தாமனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும், வளர்ச்சி பெருகும். வருங்காலம் நலமாகும்.

    நெஞ்சிற் கவலையெல்லாம் நிழல்போல் தொடர்ந்ததனால்

    தஞ்சமென உனையடைந்தேன் தாமரைமேல் நிற்பவளே! அஞ்சாது வரம்கொடுக்கும்

    அழகுமகா லட்சுமியே வஞ்சமில்லா தெமக்கருள வருவாய் இதுசமயம்!

    -என்று பாடுங்கள். எட்டுவகை லட்சுமியும் வேண்டும் அளவிற்குச் செல்வமும், வெற்றி வாய்ப்பும் உங்களுக்கு வழங்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

    • நம்பெருமாளின் மோகினி அலங்காரம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.
    • இராப்பத்து திருவாய்மொழி திருநாள் நாளை முதல் தொடங்குகிறது.

    திருச்சி:

    108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதெசி பெருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது.

    இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த டிசம்பர் 30-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 31-ந்தேதி பகல்பத்து திருவாய்மொழி திருநாள் தொடங்கியது.

    விழாவையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் தினந்தோறும் காலையில் பல்வேறு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

    பகல் பத்து 10-ம் திருநாளான இன்று நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரம் நடைபெற்றது. பாற்கடலை கடைந்து கிடைத்த அமுதத்தை அசுரர்கள் பறித்துக் கொள்ள, தேவர்கள் திருமாலைச் சரணடைந்தனர். அவரும் மோகினியாகத் தோன்றி, தேவர்களுக்கு அமுதம் கிடைக்கச் செய்தார்.

    இதை நினைவூட்டும் வகையில் இந்த மோகினி அலங்கார காட்சி நடைபெற்றது. இதற்காக இன்று காலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், 7 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தார். அங்கு மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

    நம்பெருமாளின் மோகினி அலங்காரம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. அவர் வெண்ணிற பட்டு புடவை அணிந்து, வலது திருக்கையில் தங்கக் கோலக்கிளி தாங்கி, இடது திருக்கை தொங்க விட்டுக் கொண்டு, கம்பீரமாக அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அளித்தார்.

    மேலும் சவுரிக் கொண்டை அணிந்து, அதில் கலிங்கத்துராய் , நெற்றி பட்டை , முத்து பட்டை சாற்றி, காதில் வைர மாட்டல், வைரத் தோடு அணிந்து, மூக்குத்தி அணிந்து காட்சி தந்தார். மார்பில் பங்குனி உத்திர பதக்கம், அதன்மேல் தாயாரின் திருமாங்கல்யம், அழகிய மணவாளன் பதக்கம், அடுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டிருந்தன.

    மேலும் நெல்லிக்காய் மாலை, தங்க பூண் பவழ மாலை, காசு மாலை அணிந்து, இடது திருக்கை முழுவதும் தங்க வளையல்கள், அரசிலை பதக்கம், பவழ வலையல், தாயத்து சரங்களுடன் கம்பீரமாக் காட்சி அளித்தார்.

    வடியில் தங்க சதங்கை, தண்டைகளும், பின்புறம் ஏலக்காய் ஜடை தாண்டா சாற்றி,அதன் மேல் கல் இழைத்த ஜடை நாகத்துடன் சேர்ந்த சிகப்பு கெம்புக்கல் ஜடை, ராக்கொடி அணிந்து, திருக்கைகளில் புஜ கீர்த்தி சாற்றி, அரைச்சலங்கை இடுப்பில் வலைவாக சாற்றி சூர்ய பதக்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்திருந்தார்.

    வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் திருக்கோலத்தை காண திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் மோகின் அலங்காரத்தில் பெருமாளை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து மாலை 5 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள், இரவு 7 மணிக்கு கருட மண்டபம் சென்றடைவார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

    இதன் தொடர்ச்சியாக இராப்பத்து திருவாய்மொழி திருநாள் நாளை முதல் தொடங்குகிறது. நாளை (வெள்ளிக் கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து சிம்ம கதியில் புறப்பட்டு வெளியில் வருவார்.

    2-ம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே 3-ம் பிரகாரத்திற்கு வரும் நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருவார்.

    அதனைத் தொடர்ந்து அதிகாலை 5.15 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்படும். அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசல் வழியாக எழுந்தருள்வார். பக்தர்கள் ரங்காரங்கா கோஷம் முழங்க அரங்கனை பிந்தொடர்ந்து சொர்க்கவாசல் வழியாக வருவார்கள்.

    பின்னர் நம்பெருமாள் மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு வருவார். அங்கு பெருமாள் சுமார் 1 மணி நேரம் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    அதன்பின் சாதரா மரியாதையாகி(பட்டு வஸ்திரம் சாற்றுதல்) ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் இரவு 12 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, வீணை வாத்தியத்துடன், இரவு 1.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

    ராப்பத்து பெருவிழாவின் 7ம் திருநாளான 16-ந்தேதி அன்று திருக்கைத்தல சேவை நடைபெறும். 8-ம் திருநாளான 17-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் நடைபெறும். 10ம் திருநாளான 19-ந்தேதி தீர்த்தவாரியும், 20-ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதெசி பெருவிழா நிறைவு பெறும்.

    ×