என் மலர்
நீங்கள் தேடியது "குடியரசு தினவிழா"
- கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள்
- குடியரசு தினவிழா நிகழ்ச்சி அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வருகிற 26-ந்தேதி அன்று நடைபெறவுள்ளது
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், கலெக்டர் அரவிந்த் தலைமையில், 74-வது குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் பேசியதாவது:-
கன்னியாகுமரி மாவட் டத்தில் குடியரசு தினவிழா நிகழ்ச்சி கடந்த ஆண்டை போல் இவ்வாண்டும் நாகர்கோவில், அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வருகிற 26-ந்தேதி அன்று நடைபெற வுள்ளது. இவ்விழாவிற்கு வருகை தரும் முக்கிய விருந்தினர்களுக்கு போதிய அளவு இருக்கைகள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
நாகர்கோவில் மாநக ராட்சி மூலம் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட வேண்டும். விழாவில் விபத்துக்கள் ஏற்படாத வகையில், தீய ணைப்புத்துறை மூலம் தீயணைப்புக்கருவிகளை தயார்நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். சுகாதாரத் துறையினர் சிகிச்சை உபகரணங்கள் மற்றும் ஆபத்துக்கால வாகனங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
வருவாய்த்துறை, சுகா தாரத்துறை, காவல்துறை, உள்ளிட்ட பல்வேறு துறை களில் சிறப்பாக பணி யாற்றிய அலுவலர்கள், பணி யாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
குடியரசு தினவிழா விற்கான அனைத்து முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் அனைத்து அலுவ லர்களையும் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு அலுவலர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். மேலும், இவ்விழா சிறப்பாக நடைபெற அனைத்துத்துறைகளை சார்ந்த அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாகர்கோவில் மாநக ராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் உள்பட அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
- குடியரசு தினவிழா முன்னேற்பாடு ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
- தேவையான பாதுகாப்பு வசதி உள்ளிட்டவைகளை செய்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
தேனி:
74-வது இந்திய குடியரசு தினவிழா கொண்டாடுவது தொடர்பாக மேற்கொள்ள ப்பட வேண்டிய முன்னே ற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், 74-வது குடியரசு தினவிழாவிற்கான அழைப்பிதழ் அச்சிடுதல், விழா மேடை மற்றும் பந்தல் அமைத்தல், விழா நடைபெறும் மைதானத்தை தயார்படுத்துதல், விழா விற்கு வருகை தருகின்ற சுதந்திர போராட்ட தியாகி கள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு மரியாதை செலுத்துதல், காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை சார்பில் அணி வகுப்பு மரியாதை செலுத்துதல், சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்குதல்,
அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை சம்பந்தபப்பட்ட துறை அலுவலர்கள் முறை யாக மேற்கொண்டு, குடி யரசு தின விழாவை மிகச்சிற ப்பாக கொண்டா டிட, ஒருங்கிணைந்து செயல்பட கலெக்டர் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கி னார்.
மேலும், குடியரசு தினவிழாவினை கண்டு களித்திட வருகை தருகின்ற பொதுமக்களுக்கு தேயைான குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி, சுகாதார வசதி, பாதுகாப்பு வசதி உள்ளிட்டவைகளை செய்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
- குடியரசு தினத்தை முன்னிட்டு 25-ந்தேதி மற்றும் மற்றும் 26-ந்தேதி ஆகிய 2 நாட்கள் சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகின்றது.
சென்னை:
சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற 26-ந்தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் சென்னை, காமராஜர் சாலை-வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள மெரினா உழைப்பாளர் சிலை அருகே தேசியக் கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார். இதனையொட்டி சென்னை, காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அன்பு, பிரேம் ஆனந்த சின்கா, கபில்குமார் சரத்கர் ஆகியோரின் அறிவுரையின்பேரில், காவல் இணை ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 6,800 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சென்னை காவல் சரக எல்லைக்குட்பட்ட சென்னை விமானநிலையம், ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது தவிர சென்னையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை முழுவதும் அந்தந்த போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுக்காவல் ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, நகரின் முக்கிய நுழைவு பகுதிகளான மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், மீனம்பாக்கம், துரைப்பாக்கம், நீலாங்கரை ஆகிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையினர் மூலம் வாகனத் தணிக்கைகளும், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களான மீனம்பாக்கம் விமான நிலையம், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்கள் உள்பட அனைத்து முக்கிய இடங்களிலும், சென்னை பாதுகாப்பு பிரிவின் காவல் அதிகாரிகள் தலைமையில், காவல் ஆளிநர்கள், வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழத்தல் பிரிவு, மோப்பநாய் பிரிவு மற்றும் மெரினா கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு படை பிரிவினருடன் இணைந்து நாசவேலை தடுப்பு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குடியரசு தினத்தை முன்னிட்டு 25-ந்தேதி மற்றும் மற்றும் 26-ந்தேதி ஆகிய 2 நாட்கள் சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகின்றது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குடியரசு தின விழாவையொட்டி எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் பயணிகளின் உடைமைகள் ஸ்கேன் செய்யப்பட்டு உள்ளே எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இதேபோல பாதுகாப்பு கருதி ரெயில்வே தண்டவாளங்களில் ரெயில்வே போலீசார் ரோந்து செல்கின்றனர். இதில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரியும் நபர்களின் அடையாள அட்டை, முகவரி ஆகியவற்றை பெற்று ஆய்வுக்கு பின்னரே அவர்களை போலீசார் விடுவிக்கின்றனர்.
டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவுபடி கடலோர பகுதியில் 24 மணிநேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
தமிழக அரசு சார்பில் குடியரசு தினவிழா நடைபெறும் மெரினா கடற்கரையின் காமராஜர் சாலையை இருவாரங்களுக்கு முன்பே போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
கோயம்பேடு சந்தை, புறநகர் பேருந்து நிலையம் ஆகியவற்றில் பயணிகளை போலீசார் சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். சென்னையில் முக்கியமான சாலை சந்திப்புகள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றில் போலீசார் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு கடந்த வாரம் முதல் விமான நிலையத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. விமானங்களுக்கு எரி பொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அப்பகுதியில் ஏற்கனவே உள்ள கண்காணிப்பு கேமராக்கள் தவிர்த்து கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
திரவப் பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்துச்செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால் உள்நாட்டு பயணிகள், விமானம் புறப்படும் நேரத்திற்கு 1½ மணிநேரத்திற்கு முன்னதாக வரும்படி சென்னை விமான நிலைய அதிகாரிகள் பயணிகளை அறிவுறுத்தி உள்ளனர்.
வருகிற 30-ந்தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அமலில் இருக்கும் என்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நெல்லை மாவட்டத்தில் குடியரசு தின விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
- குடியரசு தின விழாவின் போது வ.உ.சி. மைதானம் திருவிழா போல் காட்சியளிக்கும்.
நெல்லை:
நாடு முழுவதும் குடியரசு தினவிழா நாளை மறுநாள்(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் குடியரசு தின விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
நெல்லை
நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது. அங்கு கலெக்டர் விஷ்ணு தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்த உள்ளார். அன்றைய தினம் பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி, பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழக்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
மேலும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட விடுதலை போராட்ட தியாகிகளை கவுரவித்து நலத்திட்ட உதவிகள், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு சான்றி தழ்கள் உள்ளிட்டவைகளை கலெக்டர் விஷ்ணு வழங்கி, அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார்.
பரப்பளவு சுருங்கிவிட்டது
இதற்காக பாளை வ.உ.சி. மைதானம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. முந்தைய காலங்களில் சுதந்திர தினம், குடியரசு தின விழாக்கள் நடைபெறும் போது வ.உ.சி. மைதானம் திருவிழா போல் காட்சியளிக்கும். அங்கு நெல்லை மாவட்டம் முழுவதிலும் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் திரண்டு வருவார்கள். வ.உ.சி. மைதானம் முழுவதும் நிரம்பி பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.
ஆனால் சமீபத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீன கேலரிகளுடன் மைதானம் அமைக்கப்பட்டு அதன் பரப்பளவு சுருங்கிவிட்டது. இதனால் தற்போது குறைந்த அளவு மக்களே அங்கு அமர முடியும். அதேபோல் மைதானத்தில் அணிவகுப்பு ஒத்திகை நடத்துவதற்கும் மிகவும் சிரமமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மைதானத்திற்குள் மழைநீர்
இந்நிலையில் இந்த ஆண்டு வழக்கம்போல் அங்கு குடியரசு தினவிழா நடைபெறுகிறது. அங்கு கடந்த 2 நாட்களாக அணிவகுப்பு ஒத்திகை நடந்து வந்த நிலையில், நேற்று பெய்த திடீர் மழையால் மைதானத்திற்குள் தண்ணீர் தேங்கி சகதியாக காட்சியளித்தது.
இதனால் இன்று அங்கு நடைபெற இருந்த அணிவகுப்பு ஒத்திகை பாளை ஆயுதப்படை மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு நடைபெற்றது. இதற்கிடையே மைதானத்தில் மழை நீர் தேங்காவண்ணம் மணல் கொண்டு சமன்படுத்தும் பணியானது இன்று ஆர்.டி.ஓ. சந்திரசேகர் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.
அங்கு மாநகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையில் போலீசார் குடியரசு தினவிழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்கிடையே நாளை மறுநாள் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதற்கு பள்ளி மாணவ-மாணவிகளின் ஒத்திகை அந்தந்த பள்ளிகளில் நடைபெற்று வருகிறது.

பாளை வ.உ.சி. மைதானத்தில் சமன்படுத்தும் பணியை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் பார்வையிட்ட காட்சி.
- எகிப்து அதிபருக்கு நாளை ஜனாதிபதி மாளிகையில் சம்பிரதாயப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது.
- இந்திய குடியரசு தினவிழாவில் எகிப்து அதிபர் ஒருவர் அழைக்கப்பட்டு வருவது இதுவே முதல் முறை
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா 26-ம் தேதி கோலாகலமாக நடைபெறுகிறது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி (68) கலந்துகொள்கிறார். இதற்காக மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வந்து சேர்ந்தார். எகிப்து அதிபருடன் 5 மந்திரிகள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக்குழுவினர் வந்துள்ளனர். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த எகிப்து அதிபருக்கு பாரம்பரிய நாட்டுப்புற நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவருக்கு நாளை ஜனாதிபதி மாளிகையில் சம்பிரதாயப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது. எகிப்து அதிபர் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடக்கும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் எகிப்து அதிபர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். பிரதமர் மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து பேச உள்ளார். நாளை மாலை அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளித்து கவுரவிக்கிறார்.
இந்திய குடியரசு தினவிழாவில் எகிப்து அதிபர் ஒருவர் அழைக்கப்பட்டு வருவது இதுவே முதல் முறை ஆகும். குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து படைப்பிரிவும் கலந்து கொள்கிறது.
- குடியரசு தினவிழா நாளை காலை 8 மணிக்கு தொடங்குவதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி வருவதற்கு முன்பே காலை 7.50 மணிக்கு அந்த இடத்துக்கு வந்துவிடுவார்.
- கவர்னர் 7.55 மணிக்கு வரும்போது அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்று உயர் அதிகாரிகளை அறிமுகப்படுத்துவார்.
சென்னை:
குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சென்னை கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே கவர்னர் தேசியக்கொடி ஏற்றுவது வழக்கம்.
தற்போது அந்த இடத்தில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருவதால் கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே கொடியேற்று விழா நடைபெறுகிறது.
இந்த ஆண்டு குடியரசு தினவிழாவை வெகு விமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதால் அதற்கு ஏற்றபடி உழைப்பாளர் சிலை பகுதியில் பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டு கொடி கம்பமும் உருவாக்கப்பட்டுள்ளது.
முக்கியஸ்தர்கள் அமருவதற்காக சாலை ஓரத்தில் பந்தல்களும் போடப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி நாளை தேடிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.
ராணுவப்படை, கடற்படை, ராணுவ கூட்டு குழல் முரசிசை பிரிவு, வான் படை பிரிவு அணிவகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் செலுத்துவார்கள்.
அதைத்தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல்படை, கமாண்டோ படை பிரிவு, கடலோர பாதுகாப்பு படை ஊர்க்காவல் படை உள்பட 30-க்கும் மேற்பட்ட படை பிரிவினர் அணிவகுத்து செல்வார்கள்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிவகுப்பு மேடைக்கு வந்து பதக்கங்களை வழங்க இருக்கிறார்.
வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது, உத்தமர் காந்தியடிகள் காவலர் பதக்கம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
இதைத்தொடர்ந்து விழா மேடையில் கவர்னர் ஆர்.என்.ரவியும், முதலமைச் சர் மு.க.ஸ்டாலினும் அருகருகே அமர்ந்து அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை கண்டு களிப்பார்கள். பல்வேறு அரசுத்துறைகளின் ஊர்திகள், அரசு நலத்திட்டங்களை விளக்கும் வகையிலான அலங்கார ஊர்திகள் இதில் அணிவகுத்து வரும்.
இறுதியாக பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். சுமார் 30 நிமிட நேரம் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகளை கவர்னரும், முதலமைச்சரும் அருகருகே இருந்து பார்க்க உள்ளனர்.
குடியரசு தினவிழா நாளை காலை 8 மணிக்கு தொடங்குவதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி வருவதற்கு முன்பே காலை 7.50 மணிக்கு அந்த இடத்துக்கு வந்துவிடுவார்.
கவர்னர் 7.55 மணிக்கு வரும்போது அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்று உயர் அதிகாரிகளை அறிமுகப்படுத்துவார். அதன்பிறகு கவர்னர் ஆர்.என்.ரவி 8 மணிக்கு தேசியக்கொடி ஏற்றுவார். அப்போது கவர்னர் அருகில் முதலமைச்சர் நின்றுகொண்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்துவார்.
அதன்பிறகு நடைபெறும் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் பார்வையிடுவார். பின்னர் கவர்னர் முக்கிய பிரமுகர்கள் அமரும் இடத்திற்கு சென்று அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்டுகளிப்பார்.
அவருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அமர்ந்திருப்பார்கள்.
கலைநிகழ்ச்சிகள் முடியும் வரை அங்கு இருந்துவிட்டு அதன்பிறகு 9 மணி அளவில் கவர்னர் புறப்பட்டு செல்வார். அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழி அனுப்பி வைப்பார்.
கடந்த 9-ந்தேதி சட்டசபை கூடியபோது கவர்னர் ஆர்.என்.ரவி அரசு கொடுத்த உரையை முழுமையாக படிக்காமல் சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்தார். சில வாசகங்களை சேர்த்து வாசித்தார்.
இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னருக்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டுவந்து கவர்னர் வாசித்த உரையை பதிய வைக்காமல் அரசு தயாரித்த உரையை சட்டசபையில் பதிய வைத்தார்.
இதனால் கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபை முடிவதற்கு முன்பே அவையில் இருந்து வெளியேறினார். இந்த சம்பவத்திற்கு பின்பு கவர்னரும், முதலமைச்சரும் இன்னும் நேருக்கு நேர் சந்தித்து கொள்ளவில்லை. நாளை நடைபெறும் குடியரசு தினவிழாவில் தான் இருவரும் சந்திக்க உள்ளனர்.
நாளைய நிகழ்ச்சியின் போது இருவரும் சகஜமாக பேசிக்கொள்வார்களா? இல்லையா என்பது தெரிந்து விடும்.
- விழுப்புரத்தில் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல் அணிவகுப்பு மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
- காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டு, திறந்தஜீப்பில் சென்று பார்வையிட்டார்.
விழுப்புரம்:
நாடுமுழுவதும் இன்று 74-வது குடியரசு தினவிழா கோலகலமாக கொண்டா டப்பட்டது. அதன்படி விழுப்புரத்தில் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல் அணிவகுப்பு மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மோகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து வானில் வண்ண பலூன்களையும், வெண்புறக்களையும் பறக்கவிட்டார். தொடர்ந்து காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டு, திறந்தஜீப்பில் சென்று பார்வையிட்டார். அதனையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுதந்திர போராட்ட தியாகிகள் 24 பேருக்கு சால்வை அணைத்து நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர் அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
விழாவில் விழாவில் மொத்தம் 181 பேருக்கு ரூ.1, 18,94 ,483 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.மேலும் நிவாரண நிதியிலிருந்து நான்கு நபர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை கலெக்டர் சித்ரா விஜயன், டி.ஐ.ஜி. பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வன அதிகாரி சுமேஷ் சோமன், எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், சிவகுமார் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி மற்றும் போலீசார், அதிகாரிகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் மாவட்ட மீன் வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பாக குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
- மாவட்ட அவைத்தலைவர் முகமதுஅலி இனிப்புகளை வழங்கினார்
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட மீன் வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பாக குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்டத்தலைவர் பார்த்தசாரதி தலைமையில் மாவட்டசெயலாளர் கோடை சே. அப்துல் காதர் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மாவட்ட அவைத்தலைவர் முகமதுஅலி இனிப்புகளை வழங்கினார் . இந்நிகழ்ச்சிக்கு மாவட்டசெயற்குழு அப்துல்ரகிம், மாவட்ட இணைசெயலாளர் செல்வா சேக்முகமது ,மாநகர தலைவர் ஜபருல்லா, மாநகரச்செயலாளர் ரகுமத்துல்லா ,மாநகரபொருளாளர் ராஜாமுகமது மற்றும் உறுப்பினர்கள் கணேசமூர்த்தி ,சம்சுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் முத்து நன்றி கூறினார்.
- திருமங்கலத்தில் குடியரசு தினவிழா நடந்தது.
- துணைத்தலைவர் வளர்மதி அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர்கைலாசம், இளங்கோ முன்னிலை வகித்தனர்.
திருமங்கலம்
திருமங்கலத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் குடியரசுதினவிழா நடந்தது. திருமங்கலம் நகராட்சியில் தலைவர் ரம்யா முத்துக்குமார் தேசியக்கொடியை ஏற்றினார். ஆணையாளர் டெரன்ஸ்லியோன், துணைத்தலைவர் ஆதவன் அதியமான் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திருமங்கலம் தி.மு.க. நகரச்செயலாளர் ஸ்ரீதர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தூய்மையை வலியுறுத்தும் விதமாக உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து தெற்குதெருவில் உள்ள காந்தி சிலைக்கு நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் முத்து, கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், பெல்ட்முருகன், காசிபாண்டி, சின்னசாமி, ரம்ஜான்பேகம் ஜாகீர், சரண்யா ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் லதா ஜெகன் தேசியக் கொடியேற்றினார். துணைத்தலைவர் வளர்மதி அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர்கைலாசம், இளங்கோ முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையத்தில் குடியரசு தினவிழா நடந்தது.
- பள்ளி செயலர் பாலசுப்பிரமணியம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம், அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் 74-வது குடியரசு தினவிழா நடந்தது. மேனேஜிங் டிரஸ்டி என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் ரமேஷ் தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
ராஜபாளையம் கிங்ஸ் சிட்டி ரோட்டரி சங்கம் ராமசுப்பிரமணியராஜா முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி விவே கானந்த கேந்திரத்தில் மாநில அளவில் நடந்த நாடகப்போட்டியில் முதல்பரிசு பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.
தேசிய மாணவர் படை மற்றும் சாரணர் இயக்க மாணவ தொண்டர்கள் நிகழ்த்திய அணிவகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினர்கள் ஏற்றுக்கொண்டனர். அறக்கட்டளை உறுப்பினர்கள் என்.கே.ராம்விஷ்ணு ராஜா,
என்.கே.ராம்வெங்கட் ராஜா, ராஜவேல்.சிவ குமார், செல்வ அழகு, சங்கிலி விக்ரம், கருத்தாளர் சிவகுமார், பழனியப்பன், ராமசாமி ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
ராஜபாளையம் முடங்கியார்ரோட்டில் பொன்விழா மைதானம் அருகில் உள்ள பண்ணையார் ஆர்ச் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் வந்து சென்ற புனித தலமான சுதந்திர தின நினைவு வளைவு கொடிக்கம்பத்தில் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றபட்டது.
ராஜுக்கள் கல்லூரி தேசிய மாணவர்படை மாணவர்கள், தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் முன்னிலையில் ராஜபாளையம் தீயணைப்புநிலைய அதிகாரி சீனிவாசன் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதற்கான ஏற்பாடுகளை தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோயில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் செய்திருந்தார்.
வைமா கல்விக் குழுமப் பள்ளிகளில் ஒன்றான வைமா வித்யால யாவில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியை ராஜலட்சுமி வரவேற்றார். முதல்வர் கற்பகலட்சுமி தேசியக் கொடி ஏற்றினார். 3-ம் வகுப்பு மாணவர் ருசித் வசீகரன், 2-ம் வகுப்பு மாணவர் அகிலேஷ் குடியரசு தினம் பற்றி பேசினர். 2-ம் வகுப்பு மாணவர் எழிலின்பன் தேச பக்தி பாடல் பாடினார்.
5-ம் வகுப்பு மாணவி அமிர்தா குடியரசு தின கவிதை வாசித்தார். பிரி.கே.ஜி, எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. மாணவர்கள் தேசத் தலைவர்கள் போல் வேடம் அணிந்து வந்தனர். மாணவிகள் நடனம் ஆடினர். விழாவில் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
வைமா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வைமா திருப்பதி செல்வன்.மேனேஜிங் டிரஸ்டி அருணா திருப்பதி செல்வன் வழிகாட்டுதலின்படி விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் செய்திருந்தனர்.
ராஜபாளையம் பச்சமடம் திருவனந்தபுரம் தெருவில் உள்ள ராமலிங்கவிலாஸ் ஜெயராம் தொடக்க பள்ளியில் 74-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. ஆசிரியை வாசுகி வரவேற்றார்.
பள்ளி செயலர் பால சுப்பிரமணியம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 31-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ராதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். அவருக்கு பள்ளி செயலர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
- கிருஷ்ணா கல்வியியல் கல்லூரிகளின் சார்பாக 74-வது இந்திய குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
- துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் செயல்பட்டு வரும் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரிகளின் சார்பாக 74-வது இந்திய குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
கல்லூரியின் தாளாளர் முன்னாள் எம்.பி.பெருமாள் தலைமை ஏற்று தேசிய கொடியினை ஏற்றினார். கல்லூரியின் தலைவர், கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வள்ளிபெருமாள், கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார். தாளாளர் பெருமாள் மாணவர் களிடையே பேசும்போது தாய்மொழி யையும் தாய்நாட்டையும் அனைவரும் இரு கண்களாக போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
கல்வியின் பயன் தன்னை உருவாக்கிய தாய்நாட்டிற்கு பயன் பெறுமாறு மாணவர்கள் இந்தியாவில் பணிபுரிந்து நம் நாட்டை வல்லரசாக மாற்ற பாடுபட வேண்டும். ஜெய் ஜவான், ஜெய்கிசான் என முன்னாள் பிரதமர்லால்பகதுர் சாஸ்திரி கூறியது போல அனைவரும் ராணுவத்தினரையும், விவசாயிகளையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
மாணவர்கள் எங்கு பயில்கிறார்கள் என்பதை விட கல்வியை எவ்வாறு கற்கிறார்கள் என்பது முக்கியமாகும் என்று வாழ்த்தினார். இவ்விழாவில் நிர்வாக அலுவலர் சுரேஷ், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
- விழாவில் கலந்து கொண்ட மாணவர்களும், பேராசிரியர்களும் குடியரசு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் 74-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார்.
முதல்வர் செந்தில்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உரை நிகழ்த்தினார். மாரிச்சாமி, கல்லூரியின் ஐ.கியூ.ஏ.சி. ஒருங்கிணைப்பாளர் பிச்சிப்பூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கல்லூரி தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) சிறப்பு அணிவகுப்பு நடந்தது. விழாவில் கலந்து கொண்ட மாணவர்களும், பேராசிரியர்களும் குடியரசு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தேசிய மாணவர் படையின் வருடாந்திர பயிற்சி முகாமில் சிறந்த செயல்திறன் அடிப்படையில் 4-ம் ஆண்டு மாணவர் அபினாசுக்கு ''கேடட் அண்டர் ஆபீசர்'' என்ற ''ரேங்'' வழங்கப்பட்டது.
4-ம் ஆண்டு எந்திரவியல் துறை மாணவர் அருணுக்கு கம்பெனி குவாட்டர் மாஸ்டர் சார்ஜென்ட் என்ற ரேங்கும், 3-ம் ஆண்டு மாணவர் ராஜ்குமார், 2-ம் ஆண்டு மாணவர் கார்த்திக் ஆகியோருக்கு சார்ஜென்ட் ரேங்கும், 3-ம் ஆண்டு மாணவர்களான பாலமுரளி, மனோஜ், சங்கவி ஆகியோருக்கு ''கார்பொரல்'' ரேங்கும் வழங்கப்பட்டது.
கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் 4-ம் ஆண்டு மாணவர் சிவ சுப்பிரமணியன் டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவிற்கான ஏற்பாடு களை கல்லூரி நிர்வாகம், கல்லூரி தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் மாதவன், உடற்கல்வி துறை இயக்குநர் சுந்தமூர்்த்தி மற்றும் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.