search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்"

    • விமானம் அவசரமாக பெங்களூரு விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
    • விமானத்தில் இருந்த 179 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 179 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் உள்பட 185 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் நேற்று இரவு கொச்சி நோக்கி புறப்பட்டனர்.

    அப்போது விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் வலது பக்க எந்திரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து விமானம் அவசரமாக பெங்களூரு விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

    பின்னர் விமானத்தில் இருந்த 179 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    • சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதி.
    • விமானத்தின் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது.

    ஆலந்தூர்:

    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்களுக்கும் அதன் நிர்வாகத்தினருக்கும் இடையே பிரச்சினை நிலவிவருகிறது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் திடீரென உடல்நிலையை காரணம் காட்டி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விமானங்களை இயக்க விமானிகள், என்ஜினீயர்கள், ஊழியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன விமானங்களை இயக்குவதில் சிக்கல் உருவாகி நேற்று ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    இந்த நிலையில் இன்று அந்த விமான நிறுவன ஊழியர்களின் போராட்ம் நீடித்து வருகிறது. ஊழியர்கள் இன்னும் பணிக்கு திரும்பவில்லை. இதனால் இன்றும் 2-வது நாளாக பல்வேறு நகரங்களில் அந்த நிறுவனத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    சென்னை விமான நிலையத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் கேபின் குழு ஊழியர்கள் பலர் திடீர் விடுப்பு எடுத்து உள்ளதால் மொத்தம் 8 விமானங்கள், ரத்து செய்யப்பட்டு உள்ளனர்.

    நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும்விமானம், அதைப்போல் நள்ளிரவு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரும் விமானம், இன்று மதியம் 12.30 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வர வேண்டிய விமானம்,இதேபோல் இன்று இரவு 7:30 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வரும் விமானம் ஆகிய 4 வருகை விமானங்கள் ரத்து ஆகி உள்ளன.

    இதேபோல் சென்னையில் இருந்து இன்று அதிகாலை திருவனந்தபுரம் புறப்பட்டு செல்லும் விமானம், சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு அதிகாலையில் புறப்பட்டு செல்லும்விமானம், இன்று காலை சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டு செல்லும் விமானம், இன்று இரவு சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டு செல்ல வேண்டிய விமானம் ஆகிய 4 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு 10.30 மணிக்கு சென்னைவிமான நிலையத்தில் தயாராக இருந்தது. அதில் 362 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர். அனைவரும் சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏறி அமர்ந்து இருந்தனர்.

    விமானம் புறப்பட தயாராக இருந்த போது விமானத்தின் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. நள்ளிரவு வரை இதனை சரிசெய்ய முடியவில்லை. இதைத்தொடர்ந்த அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் அனைவரும் பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக விமான நிறுவனங்களும் புதிய விமான சேவைகளை அதிரடியாக அறிவித்து வருகிறது.
    • ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தற்போது முதலே ரெயில், பஸ் உள்ளிட்டவைகளில் வெளியூர் செல்ல விரும்பும் பயணிகள் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    அதேபோல் வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழகத்தை சேர்ந்த பயணிகள் வசதிக்காக விமான நிறுவனங்களும் புதிய விமான சேவைகளை அதிரடியாக அறிவித்து வருகிறது. அந்த வகையில் பயணிகளின் வசதிக்காக மதுரை, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் நேரடி மற்றும் தினசரி விமான சேவை வழங்கப்ப டும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

    அதன்படி, வருகிற 22-ந் தேதி முதல் மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கும் தினசரி விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கவுள்ளது. இதையடுத்து, இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சிங்கப்பூர்-மதுரை, மதுரை-சிங்கப்பூர் வழித்தடத்திற்கான அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்திற்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு அடைந்துள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி விமான சேவை வழங்கப்படும் என்ற அறிவிப்பு, சிங்கப்பூர் வாழ் தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யும் பணியில் விமான பொறியாளர்கள் ஈடுபட்டனர்.
    • மாற்று விமானம் மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, சார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது.

    இந்த விமானங்களை இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்கூட், மலிந்தோ, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இயக்கி வருகிறது. இதற்கிடையே திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு இன்று காலை 9.05 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது.

    இந்த நிலையில் 184 பயணிகளுடன் அந்த விமானம் புறப்படுவதற்கு தயாரான போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து உடனடியாக இறக்கி விடப்பட்டனர். தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யும் பணியில் விமான பொறியாளர்கள் ஈடுபட்டனர்.

    ஆனால் அதனை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்ட காரணத்தினால் மாற்று விமானம் மூலம் அவர்கள் சார்ஜா அனுப்பி வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 11.30 மணிக்கு துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை சார்ஜாவிற்கு அனுப்பும் வகையில் மாற்று விமானம் மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விமானம் இன்று மதியம் சுமார் 2 மணி அளவில் புறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×