என் மலர்
நீங்கள் தேடியது "மகளிர் பிரீமியர் லீக்"
- 2023-ம் ஆண்டு சாம்பியனான மும்பை அணி 2-வது முறையாக கோப்பையை கைப்பற்ற குறி வைத்துள்ளது.
- மெக் லானிங் தலைமையிலான டெல்லி அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது.
லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் தலா 10 புள்ளி பெற்றாலும் ரன்-ரேட் முன்னிலை அடிப்படையில் முதலிடத்தை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 4-வது இடமும், உ.பி.வாரியர்ஸ் கடைசி இடமும் பெற்று நடையை கட்டின. நேற்று முன்தினம் இரவு நடந்த வெளியேற்றுதல் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் 47 ரன் வித்தியாசத்தில் குஜராத் ஜெயன்ட்சை வீழ்த்தி 2-வது அணியாக இறுதிப்போட்டியை எட்டியது.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) அரங்கேறுகிறது. இதில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.
2023-ம் ஆண்டு சாம்பியனான மும்பை அணி 2-வது முறையாக கோப்பையை கைப்பற்ற குறி வைத்துள்ளது. அந்த அணியில் நட்சத்திர பட்டாளத்துக்கு குறைவில்லை. ரன் குவிப்பில் முதலிடம் வகிக்கும் நாட் சிவெர் (493 ரன்கள், 9 விக்கெட்), அதிக விக்கெட் வீழ்த்தியதில் முதலிடத்தில் இருக்கும் ஹெய்லி மேத்யூஸ் (17 விக்கெட், 304 ரன்) ஆகியோர் ஆல்-ரவுண்டராக அசத்தி மும்பை அணிக்கு வலுசேர்க்கிறார்கள். பேட்டிங்கில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், பந்து வீச்சில் அமெலியா கெர் (16 விக்கெட்), ஷப்னிம் இஸ்மாயிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
மும்பை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், 'ஒரே மைதானத்தில் ஒரே ஆடுகளத்தில் தான் இறுதிப்போட்டியையும் விளையாடப் போகிறோம். கடந்த 4 நாட்களில் இங்கு 3 ஆட்டங்களில் விளையாடி உள்ளோம். இதனால் நிறைய விஷயங்களை புரிந்து கொண்டுள்ளோம். குறிப்பாக இங்குள்ள சூழல், ஆடுகளத்தன்மையை நன்கு அறிந்துள்ளோம். இதை எங்களுக்கு சாதகமான அம்சமாக பார்க்கிறேன்' என்றார்.
மெக் லானிங் தலைமையிலான டெல்லி அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. கடந்த 2 தடவையும் தோல்வியை சந்தித்த டெல்லி அணி 3-வது முயற்சியிலாவது கோப்பை ஏக்கத்தை தணிக்குமா? என்ற ஆவல் எழுந்துள்ளது.
டெல்லி அணி பந்து வீச்சையே அதிகம் நம்பி இருக்கிறது. பேட்டிங்கில் ஷபாலி வர்மா (300 ரன்), மெக் லானிங்கும் (263 ரன்), பந்து வீச்சில் ஷிகா பாண்டே, அனபெல் சுதர்லாண்ட், மின்னு மணியும் நல்ல நிலையில் உள்ளனர். ஜோனஸ்சென் (137 ரன், 11 விக்கெட்) ஆல்-ரவுண்டராக ஜொலிக்கிறார். ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிஜானே காப் குறிப்பிடத்தக்க வகையில் பங்களிக்காதது அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது. அவர்களும் பார்முக்கு திரும்பினால், டெல்லி இன்னும் வலிமை அடையும்.
இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. அதில் மும்பை 3 ஆட்டங்களிலும், டெல்லி 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. நடப்பு தொடரில் 2 ஆட்டங்களிலும் டெல்லி அணி வெற்றியை ருசித்து இருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் உள்ளூர் சூழல் மும்பை அணிக்கு அனுகூலமாக இருக்கும். அத்துடன் மும்பை இந்தியன்ஸ் வீரர்களும் நேரில் வந்து உற்சாகப்படுத்துவதால் வீராங்கனைகள் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. மொத்தத்தில் பலம் வாய்ந்த இரு அணிகள் மல்லுகட்டுவதால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது.
இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
மும்பை இந்தியன்ஸ்: யாஸ்திகா பாட்டியா, ஹெய்லி மேத்யூஸ், நாட் சிவெர், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), சஜனா, அமெலியா கெர், அமன்ஜோத் கவுர், கமலினி, சன்ஸ்கீர்த்தி குப்தா, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்: மெக் லானிங் (கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெஸ் ஜோனஸ்சென், ஜெமிமா ரோட்ரிக்ஸ், அனபெல் சுதர்லாண்ட், சாரா பிரைசி, நிக்கி பிரசாத், ஷிகா பாண்டே, மின்னு மணி, திதாஸ் சாது.
இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- டெல்லி அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
- 2023-ம் ஆண்டு மும்பையிடமும், கடந்த ஆண்டு பெங்களூரு அணியிடமும் தோற்று கோப்பையை இழந்தது.
மும்பை:
3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் 20 ஓவர் போட்டித் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 5 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் கடந்த 11-ந்தேதியுடன் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்தன.
இதில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 2-வது இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ், 3-வது இடத்தை பிடித்த குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் வெளியேற்றுதல் சுற்று போட்டிக்குள் நுழைந்தன. கடைசி 2 இடங்களை பிடித்த பெங்களூரு, உ.பி. வாரியர்ஸ் அணிகள் வெளியேற்றப்பட்டன.
நேற்று நடந்த வெளியேற்றுதல் சுற்று போட்டியில் குஜராத்தை 47 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. இப்போட்டி மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 2023-ம் ஆண்டில் கோப்பையை வென்றது. 2-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது. மும்பை அணியில் ஆல்-ரவுண்டர் மேத்யூஸ் சிறப்பாக விளையாடி வருகிறார்.
மேலும் நாட்சிவெர், கேப்டன் ஹர்மன் பிரீத் கவூர், அமெலியா கெர், இஸ்மாயில், யாஸ்திகா பாட்டியா போன்ற வீராங்கனைகள் உள்ளனர். அந்த அணி பேட்டிங், பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ளது.
டெல்லி அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 2023-ம் ஆண்டு மும்பையிடமும், கடந்த ஆண்டு பெங்களூரு அணியிடமும் தோற்று கோப்பையை இழந்தது. கடந்த 2 முறையும் கோப்பையை வெல்ல முடியாத சோகத்தை சந்தித்த டெல்லி இந்த முறை பட்டத்தை வெல்லும் வேட்கையில் இருக்கிறது.
மெக் லானிங் தலைமையிலான டெல்லி அணியில் ஷபாலி வர்மா, ஜோனா சென், சதர்லெண்ட், ரோட்ரிக்ஸ், மாரிசேன் காப், ஷிகா பாண்டே ஆகிய வீராங்கனைகள் உள்ளனர்.
இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தது.
- மும்பை-குஜராத் ஆகிய இரு அணிகளும் 2 முறை மோதிய ஆட்டங்களில் மும்பையே வெற்றி பெற்றது.
மும்பை:
5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் (தலா 10 புள்ளிகள்), குஜராத் ஜெயன்ட்ஸ் (8) ஆகிய 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (6), உ.பி. வாரியர்ஸ் (6) ஆகியவை வெளியேற்றப்பட்டன.
டெல்லி, மும்பை அணிகளில் ரன்ரேட் அடிப்படையில் டெல்லி முதல் இடத்தை பிடித்தது. அந்த அணி 15-ந்தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.
இறுதிப்போட்டிக்கு நுழையும் 2-வது அணி எது? என்பது நாளை தெரியும். மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் டெல்லியை சந்திக்கும். தோற்கும் அணி வெளியேறும்.
இந்த தொடரில் இரு அணிகளும் 2 முறை மோதிய ஆட்டங்களில் மும்பையே வெற்றி பெற்றது. வதோதராவில் நடந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் மும்பையில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் 9 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் நம்பிக்கையுடன் விளையாடும்.
அதே நேரத்தில் குஜராத் அணி பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளும் இறுதிப் போட் டிக்கு முன்னேற கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
- மும்பை அணி 20 ஓவரில் 188 ரன்கள் எடுத்தது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பார்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 20-வது லீக் போட்டி மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 53, ரிச்சா கோஷ் 36, பெர்ரி 49 ரன்கள் அடித்துள்ளனர்.

இதையடுத்து 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை களமிறங்கியது.
இறுதியில் மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டு இழந்து 188 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆர்சிபி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த போட்டி ஆர்சிபி அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.
- ஐ.பி.எல். போன்று மகளிர் பிரீமியர் லீக் போட்டி நடத்தப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.
- ஆடவர் ஐபிஎல் போட்டியின் 2008 ஏலத் தொகையின் சாதனையை மகளிர் பிரீமியர் லீக் அணிகள் முறியடித்தது.
டெல்லி:
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்காக 5 அணிகள் ரூ.4,669 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. மகளிருக்காக WPL கிரிக்கெட் போட்டி நடத்தப்பட இருப்பது வரலாற்றின் புதிய தருணம் என ஜெய்ஷா ட்வீட் செய்துள்ளார்.
ஐபிஎல் போன்று மகளிருக்கான பிரீமியர் தொடரை நடத்துவதற்கு பிசிசிஐ கடந்த வருடம் முதலே திட்டுமிட்டு வந்தது. ஏனெனில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் எல்லாம் மகளிருக்கான பிரீமியர் லீக்குகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.
இதனால் இந்தியாவிலும் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று அதிகாரபூர்வ அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளியிட்டுள்ளார்.

மேலும் ஆடவருக்கான ஐபிஎல் அறிமுகத்தின்போது 8 அணிகளுக்கான மொத்த ஏலம் சுமார் ரூ.3000 கோடியாக இருந்த நிலையில் தற்போது மகளிருக்கான பிரீமியர் லீக்கில் அறிமுகத்தில் 5 அணிகள் ரூ.4669 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆடவர் ஐபிஎல் ஏலத்தின் சாதனையை மகளிர் பிரீமியர் லீக் முறியடித்துள்ளது.
5 அணிகள் பங்குபெற்றுள்ள இந்த மகளிர் பிரீமியர் லீக்கில் அதானி குழுமம் களமிறங்கியுள்ளது. அதானி குழுமம் 1,289 கோடிக்கு அகமதாபாத் அணியின் உரிமையைப் பெற்றுள்ளது.
5 அணிகளையும் ஏலம் எடுத்த நிறுவங்கள் விவரம்:-
1. அதானி ஸ்போர்ட்ஸ்லைன் பிரைவேட் லிமிடெட் - ரூ. 1,289 கோடி - அகமதாபாத்
2. இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் - ரூ. 912.99 கோடி - மும்பை
3. ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் - ரூ. 901 கோடி - பெங்களூரு
4. ஜே.எஸ்.டபிள்யூ ஜிஎம்ஆர் கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் - ரூ. 810 கோடி - டெல்லி
5. கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் - ரூ. 757 கோடி - லக்னோ
மகளிருக்கான பிரீமியர் லீக் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா அணிகளின் உரிமையாளர்கள் பங்கு பெறவில்லை.
- ஹர்மன்ப்ரீத் கவுரை ரூ.1.8 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் ஏலம் எடுத்துள்ளது.
- ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லீ கார்ட்னரை ரூ.3.2 கோடிக்கு குஜராத் அணி வாங்கி உள்ளது.
மும்பை:
ஐபிஎல் போன்று பெண்களுக்கான பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் தொடர் அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மும்பையில் நடக்கிறது. இதற்காக அகமதாபாத், பெங்களூரு, டெல்லி, லக்னோ, மும்பை ஆகிய 5 நகரங்களை அடிப்படையாக கொண்டு மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அணிகளுக்கான வீராங்கனைகள் ஏலம் மூலம் எடுக்கப்படுகின்றனர். மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ சர்வதேச கூட்டரங்கில் இன்று பிற்பகல் ஏலம் தொடங்கியது. ஒவ்வொரு அணியும் ஏலத்தில் ரூ.12 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
5 அணிகளுக்கும் சேர்த்து 30 வெளிநாட்டவர் உள்பட 90 வீராங்கனைகள் தேவைப்படுகிறார்கள். ஏலப்பட்டியலில் 15 நாடுகளை சேர்ந்த மொத்தம் 448 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 269 பேர் இந்தியர். 179 வீராங்கனைகள் வெளிநாட்டவர்.
இதில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. முதல் சுற்றில் ஏலம் எடுக்கப்பட்ட முன்னணி வீராங்கனைகள் விவரம்:
1. ஸ்மிருதி மந்தனா - ரூ.3.4 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
2. ஹர்மன்பிரீத் கவுர் - ரூ.1.8 கோடி (மும்பை இந்தியன்ஸ்)
3. சோபி டிவைன் ரூ.50 லட்சம் - (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
4. ஹெய்லி மேத்யூஸ் - விற்கப்படாதது - 40 லட்சம் அடிப்படை விலை
5. ஆஷ்லீ கார்ட்னர் - ரூ.3.2 கோடி (குஜராத் ஜெயண்ட்ஸ்)
6. சோபி எக்லெஸ்டோன் - ரூ.1.2 கோடி (உ.பி. வாரியர்ஸ்)
7. எல்லிஸ் பெர்ரி - ரூ.1.7 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
- மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் வீராங்கனைகள் ஏலம் நடைபெற்று வருகிறது.
- பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு புதிய புரட்சியைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை:
ஐபிஎல் போன்று பெண்களுக்கான பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசன் அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மும்பையில் நடக்கிறது. மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகளுக்காக விளையாடும் வீராங்கனைகள் ஏலம் மூலம் எடுக்கப்படுகின்றனர். மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ சர்வதேச கூட்டரங்கில் இன்று ஏலம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான அதிகாரப்பூர்வ லோகோ இன்று வெளியிடப்பட்டது. ஏல நிகழ்ச்சியின்போது, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா, ஐபிஎல் தலைவர் அருண் துமால் ஆகியோர் லோகோவை வெளியிட்டனர். இதுதொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக்கின் தொடக்க சீசன் உலகம் முழுவதும் பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு புதிய புரட்சியைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மகளிர் பிரீமியர் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் வீராங்கனைகளுக்கு வாய்ப்புகள் கிடைக்காதது துரதிஷ்டவசமானது.
- மகளிர் பிரீமியர் லீக் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
மகளிர் பிரீமியர் லீக்கின் முதலாவது சீசன் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 5 அணிகள் விளையாட உள்ளன. இந்த 5 அணிகளுக்கும் வீராங்கனைகளை உறுதி செய்ய மும்பையில் நேற்று ஏலம் நடைபெற்றது. இதில் 5 அணி நிர்வாகங்களும் தங்களுக்கு தேவையான வீராங்கனைகளை ஏலத்தில் எடுத்தனர்.
இந்நிலையில் மகளிர் பிரீமியர் போட்டியில் விளையாட ஆசையாக உள்ளது என்று பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டன் பிஸ்மா மரூப் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
மகளிர் பிரீமியர் லீக் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இதில் பல நாடுகளில் உள்ள வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் ஆண்கள் ஐபிஎல் போலவே மகளிர் ஐபிஎல் போட்டியிலும் பாகிஸ்தான் வீராங்கனைகள் தேர்வு செய்யப்படவில்லை.
இது குறித்து பாகிஸ்தான் மகளிர் அணி கேப்டன் பிஸ்மா கூறியுள்ளதாவது:-
பெண்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் வீராங்கனைகளுக்கு வாய்ப்புகள் கிடைக்காதது துரதிஷ்டவசமானது. மகளிர் ஐபிஎல் போட்டியில் விளையாட எங்களுக்கும் ஆசை உண்டு. ஆனால் அது எங்கள் கையில் இல்லை என்றும் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
- ஆஸ்திரேலியாவை சேர்ந்த பென் சாயரை தலைமை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்வதாகவும் ஆர்சிபி அணி அறிவித்தது.
- ஏடிபி துபாய் ஓபன் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் அணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் டி 20 கிரிக்கெட் போட்டி மும்பையில் அடுத்த மாதம் 4-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இடம் பெற்றுள்ள ஆர்சிபி அணி ஆஸ்திரேலியாவை சேர்ந்த பென் சாயரை தலைமை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்வதாகவும் அறிவித்தது.
சாயர் நியூசிலாந்து பெண்களின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். மேலும் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுடன் மகளிர் உலகக் கோப்பை வென்ற அணியில் உதவி பயிற்சியாளராக இருந்தார்.
இந்நிலையில் தொடக்கப் போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆலோசராக சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏடிபி துபாய் ஓபன் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் அணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அவரது கடைசி தொழில்முறை போட்டியாக இருக்கலாம். 36 வயதான மிர்சா, ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன்னதாக தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரும் அவரது கூட்டாளியான ரோஹன் போபண்ணாவும் கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மிருதி மந்தனா, எலிஸ் பெர்ரி, மேகன் ஷட், சோஃபி டிவைன், டேன் வான் நீகெர்க் மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோர் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ், தொடக்க ஏலத்தில் நட்சத்திர வீராங்கனைகளுடன் களமிறங்குகிறது.
- ஸ்மிருதி மந்தனா இந்திய அணிக்கு 11 டி20 ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.
- மகளிர் பிரீமியர் ஏலத்தில் இந்திய வீராங்கனை மந்தனா அதிகபட்ச ஏலத்தொகைக்கு தேர்வானார்.
மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான வீராங்கனைகளைத் தேர்வு செய்யும் ஏலம் மும்பையில் நடைபெற்றது. 30 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட 87 பேர் ஏலம் எடுக்கப்பட்டனர். இந்த தொடர் மார்ச் 4-ந் தேதி தொடங்கி 26 வரை நடைபெறுகிறது.
மகளிர் பிரீமியர் ஏலத்தில் இந்திய வீராங்கனை மந்தனா அதிகபட்ச ஏலத்தொகைக்கு தேர்வானார். அவரை ரூ.3.4 கோடிக்கு ஆர்சிபி அணி விலைக்கு வாங்கியது.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் கேப்டனாக மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஆர்சிபி ஆடவர் அணியின் கேப்டன் பாப் டு பிளசிஸ் மற்றும் விராட் கோலி இந்த தகவலை வீடியோ மூலமாக தெரிவித்துள்ளார்கள்.
From one No. 18 to another, from one skipper to another, Virat Kohli and Faf du Plessis announce RCB's captain for the Women's Premier League - Smriti Mandhana. #PlayBold #WPL2023 #CaptainSmriti @mandhana_smriti pic.twitter.com/sqmKnJePPu
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 18, 2023
இந்திய அணிக்கு 11 டி20 ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்ட மந்தனாவுக்கு 6 போட்டிகளில் வெற்றி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு தொடங்குகிறது.
- இந்த லீக் தொடர் மார்ச் 4-ம் தேதி தொடங்க உள்ளது.
புதுடெல்லி:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு தொடங்க உள்ளது. இந்த லீக் தொடர் மார்ச் 4-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. 5 அணிகளும் 4 ஆயிரத்து 700 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. இந்த கிரிக்கெட் தொடருக்கான ஒளிபரப்பு உரிமம் 951 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது.
இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை டாடா நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உரிமத்திற்கான தொகை குறித்த தகவல் வெளியாகாத நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை டாடா குழுமம் பெற்றுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
+3
- மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை 5 அணிகளின் கேப்டன்கள் அறிமுகம் செய்தனர்.
- பாலிவுட் நட்சத்திரங்களான கியாரா அத்வானி, கிருத்தி சனோன் உள்ளிட்டோரின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன
மும்பை:
முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியம் மற்றும் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம் ஆகிய இரு மைதானங்களில் இந்த போட்டி அரங்கேறுகிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் இதில் கலந்துகொள்கின்றன.
போட்டி தொடங்குவதற்கு முன்பாக, இன்று மாலை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் பிரமாண்டமான துவக்க விழா நடைபெற்றது. வரலாற்று சிறப்பு மிக்க மகளிர் பிரீமியர் லீக் குறித்து மந்த்ரா பேடி அறிமுக உரையாற்றி விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பாலிவுட் நட்சத்திரங்களான கியாரா அத்வானி, கிருத்தி சனோன் மற்றும் பஞ்சாபி பாடகர் ஏ.பி. தில்லான் ஆகியோரின் ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் மூத்த நிர்வாகிகள் மேடையில் ஏறி, அனைவரையும் வரவேற்றனர். போட்டியில் பங்குபெறும் ஐந்து அணிகளின் கேப்டன்களையும் மேடைக்கு அழைத்தனர். அவர்கள் மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை அறிமுகம் செய்தனர்.

துவக்க விழா முடிந்ததும் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பெர்த் மூனே பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.