search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை அரசு"

    • 5 மீனவர்களை மொட்டை அடித்து இலங்கை அரசு அனுப்பியுள்ளது.
    • மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விடுதலையான தமிழக மீனவர்களை மொட்டை அடித்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தலா ரூ.50,000 அபராதம் செலுத்தியதால் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 5 மீனவர்களை மொட்டை அடித்து இலங்கை அரசு அனுப்பியுள்ளது.

    இதைக்கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் இதையடுத்து, இலங்கை அரசை கண்டிக்கும் விதத்தில் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், இலங்கை அரசின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மொட்டையடித்து திருப்பி அனுப்பி வைத்த இலங்கை அரசைக் கண்டித்து செப்.20ம் தேதி ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

    மேலும், இலங்கை அரசின் அராஜக போக்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

    இலங்கையை கண்டித்தும், மீனவர் பிரச்சனையில் பாராமுகமாக உள்ள மத்திய அரசையும் கண்டித்து ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

    • தலா ரூ.50,000 அபராதம் செலுத்தியதால் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மொட்டை.
    • தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விடுதலையான தமிழக மீனவர்களை மொட்டை அடித்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    தலா ரூ.50,000 அபராதம் செலுத்தியதால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 5 மீனவர்களை மொட்டை அடித்து இலங்கை அரசு அனுப்பியுள்ளது.

    5 மீனவர்கள் மொட்டை அடித்து தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் ராமேஸ்வரம் மீனவர்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து, இலங்கை அரசை கண்டிக்கும் விதத்தில் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், இலங்கை அரசின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.

    • இலவச விசா திட்டம் அக்டோபர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும்.
    • வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    கொழும்பு:

    நமது அண்டை நாடான இலங்கை கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அதில் இருந்து மீண்டு வர இலங்கை அரசு தீவிரமாக முயன்று வருகிறது.

    அந்த வகையில் நாட்டின் பெருமளவு வருவாய் சுற்றுலாத்துறை மூலமே கிடைப்பதால் அதை வளப்படுத்த இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

    இந்த நிலையில் இந்தியா உள்பட 35 நாடுகளில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்பட உள்ளதாக அந்த நாட்டின் அரசு அறிவித்துள்ளது.

    சுற்றுலா அமைச்சகத்தின் ஆலோசகர் ஹரின் பெர்னாண்டோ இதுப்பற்றி கூறுகையில், "இந்தியா, அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த இலவச விசா திட்டம் அக்டோபர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும்" என்றார்.

    மேலும் அவர், "பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் இலங்கைக்கு ஆண்டுதோறும் 50 லட்சம் சுற்றுலா பயணிகளின் இலக்கை அடைவதுமே இந்த முடிவின் நோக்கம்" எனவும் கூறினார்.

    • இலங்கை அரசு மதிப்பதாகத் தெரியவில்லை.
    • இலங்கை அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டபோது, அதற்கான உடன்படிக்கையில் இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாகத் தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளைத் தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனால், இதையெல்லாம் இலங்கை அரசு மதிப்பதாகத் தெரியவில்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு வருவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    இதன்மூலம் தமிழக மீனவர்களிடையே ஓர் அச்ச உணர்வினை தோற்றுவிக்க இலங்கை கடற்படை முயல்கிறது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்க முயலும் இலங்கை அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இலங்கை அரசுடனான தவறான உடன்படிக்கையின் மூலம் தமிழக மீனவர்களின் வரலாற்று உரிமையை பறிப்பது என்பது நியாயமற்ற செயல். இதற்கு ஒரு நிரந்தர மற்றும் நியாயமான தீர்வினை காணவேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய அரசிற்கு உள்ளது.

    பிரதமர் மோடி இலங்கை அரசிடம் உடனடியாக பேசி, இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்கவும், இந்த நீண்டநாள் பிரச்சனைக்கு நியாயமான, நிரந்தரத் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தாக்குதலில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
    • காசா மக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இதனால் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே, காசா மக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகிறது.

    இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதலால் காசா பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலனுக்காக சுமார் ரூ. 8.22 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது இலங்கை அரசு

    பாலஸ்தீன தூதரிடம் இதற்கான காசோலையை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வழங்கினார்.

    • படகு ஓட்டுனருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பு அளித்திருக்கிறது.
    • மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தனது கடமையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடித்துக் கொள்ளக் கூடாது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வங்கக்கடலில் மீன்பிடித்த போது கடந்த 8-ந்தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரில் 18 பேரை விடுதலை செய்திருக்கும் இலங்கை நீதிமன்றம், ஜான்சன் என்ற படகு ஓட்டுனருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பு அளித்திருக்கிறது.

    மீனவர் ஜான்சன் ஏற்கனவே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதாகி விடுதலை ஆனவர் என்றும், இப்போது மீண்டும் ஒரு முறை அந்தக் குற்றத்தை செய்திருப்பதால் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.


    சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தனது கடமையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடித்துக் கொள்ளக் கூடாது.

    மீனவர்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்படுவதைக் கண்டித்து தொடர் வேலை நிறுத்தம், கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா புறக்கணிப்பு என ராமேஸ்வரம் மீனவர்கள் போர்க்கோலம் பூண்டுள்ள நிலையில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும்படி வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது.
    • மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் பதவி வழங்க உள்ளதாக வெளியான தகவலை ஆளும் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    கொழும்பு:

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் வெடித்தது.

    இதையடுத்து பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஆகியோர் பதவி விலகினர்.

    அதே போல் ராஜபக்சே குடும்பத்தினரும் ஆட்சி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தனர். ஆளும் பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கே அதிபர் ஆனார். பிரதமராக தினேஷ் குணவர்தனே உள்ளார்.

    இந்த நிலையில் மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி தலைநகர் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் மகிந்த ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் பரவியது.

    இந்த நிலையில் மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் பதவி வழங்க உள்ளதாக வெளியான தகவலை ஆளும் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கூறும்போது, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக்கும் நடவடிக்கை எதுவும் இல்லை. அது போன்ற கோரிக்கையை அதிபரிடம் இலங்கை பொதுஜன பெரமுனா முன் வைக்கவில்லை என்றார்.

    • மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் சார்பில் ரூ.18 கோடி செலவில் 5 ஆயிரம் ஜி.பி.எஸ். கருவிகள் தமிழ்நாடு அரசுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.
    • தமிழ்நாட்டில் கடல்பாசி பூங்கா அமைப்பதற்கு ரூ.126 கோடி நிதி ஒதுக்கி கொடுத்து உள்ளோம்.

    சென்னை:

    இந்திய வெள்ளை இறால் ஏற்றுமதியை அதிகரிக்கவும், இனப்பெருக்கத்தை பெருக்கவும் அதன் மரபணு மேம்பாட்டு மையத்தை சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள மத்திய மீன்வள ஆராய்ச்சி கவுன்சில்- உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவன வளாகத்தில் அமைப்பதற்கு பிரதம மந்திரியின் மத்ஸ்ய சம்பதா யோஜானா திட்டத்தின் கீழ் ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இந்த மையத்தின் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா, இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். மீன் நோய்களுக்கான தேசிய கண்காணிப்பு திட்டம் (அலகு-2), இறால்களுக்கான காப்பீடு திட்டம் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தனர்.

    இதில் மத்திய மீன்வளத்துறை செயலாளர் ஜந்திரா நாத் ஸ்வைன், மீன்வள ஆராய்ச்சியின் துணை இயக்குனர் ஜே.கே.ஜெனா, கடல்சார் மீன்வள இணை இயக்குனர் ஜெ.பாலாஜி, தமிழ்நாடு அரசின் மீன்வளம், மீனவர் நலத்துறை முதன்மை செயலாளர் கார்த்திக், 'ஐ.சி.ஏ.ஆர்-சிபா' இயக்குனர் குல்தீப் கே.லால், தேசிய மீன்வள மரபணு அமைப்பு (லக்னோ) இயக்குனர் யு.கே.சர்கார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் இறால் வளர்ப்பு, மீன் வளம் ஆராய்ச்சி தொடர்பான கண்காட்சி நடைபெற்றது.

    பின்னர் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் சார்பில் ரூ.18 கோடி செலவில் 5 ஆயிரம் ஜி.பி.எஸ். கருவிகள் தமிழ்நாடு அரசுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 5 ஆயிரம் படகு உரிமையாளர்கள் பயன் அடைவார்கள். இந்த கருவி மூலம் மீனவர்கள் எந்த இடத்தில் மீன்பிடித்து கொண்டு இருக்கிறார்கள், சர்வதேச எல்லையை கடக்கிறார்களா? என்பதை கண்காணிக்க முடியும்.

    தமிழ்நாட்டில் கடல்பாசி பூங்கா அமைப்பதற்கு ரூ.126 கோடி நிதி ஒதுக்கி கொடுத்து உள்ளோம். ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 2 மாவட்டங்களில் 2 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.

    இதில் ஒரு இடத்தில் உற்பத்தி செய்யப்படும். மற்றொரு இடத்தில் விற்பனை நடைபெறும். தமிழக அரசு டெண்டர் விட்டு இதற்கான பணிகளை தொடங்கும்.

    தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும்போது மத்திய அரசு அவர்களை உடனடியாக மீட்டு அழைத்து வருகிறது. தமிழக மீனவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டுதான் 5 ஆயிரம் ஜி.பி.எஸ். கருவிகள் கொடுத்து உள்ளோம்.

    இலங்கை கடற்படை கைப்பற்றி உள்ள படகுகளை மீட்டு தர வேண்டும் என்பது தமிழக மீனவர்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது. இதுதொடர்பாக நானும், மத்திய மீன்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலாவும் சேர்ந்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரிடம் நேரில் எடுத்துக்கூறி இருக்கிறோம். இவ்விவகாரம் தொடர்பாக மத்திய மீன்வளத்துறை செயலாளர் தலைமையில் கூட்டு கமிட்டி ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ஏப்ரல் மாதம் இரு நாடுகள் இணைந்து கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×