என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை அரசு"

    • இலங்கை அரசு இன்று நல்லெண்ண அடிப்படையில் விடுவித்தது.
    • விசைப் படகுகளும் விரைவில் விடுவிக்கப்படும்.

    ராமேசுவரம்:

    பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசு விடுவித்துள்ளது.

    3 நாள் பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சென்றார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிபர் அநுரா குமார திசநாயகேவை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து இலங்கை அதிபரிடம் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இலங்கை அதிபருடனான சந்திப்புக்குப்பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பிரதமர் மோடி மீனவர்கள் பிரச்சனை குறித்து விவாதம் நடத்தியதாக தெரிவித்தார்.

    மேலும், அவர் 'மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்' என்றார்.

    இந்தநிலையில் இலங்கை பயணத்தை வெற்றிக்கரமாக முடித்துவிட்டு பிரதமர் மோடி கிளம்பினார். இதற்கி டையே பிரதமர் மோடியின் வேண்டுகோள் மற்றும் வலியுறுத்தலை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசு இன்று நல்லெண்ண அடிப்படையில் விடுவித்தது. அவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள். இதற்கான ஏற்பாடுகள் அனைத்து விரைவாக நடந்து வருகிறது.

    அதேபோல் மீனவர்க ளுக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான விசைப் படகுகளும் விரைவில் விடுவிக்கப்பட்டு தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் உள்ளனர். மேலும் இலங்கை சிறையில் வாடும் மற்ற தமிழக மீனவர்களும் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை தமிழக மீனவர்கள் மனதில் துளிர்த்துள்ளது.

    • மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் சார்பில் ரூ.18 கோடி செலவில் 5 ஆயிரம் ஜி.பி.எஸ். கருவிகள் தமிழ்நாடு அரசுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.
    • தமிழ்நாட்டில் கடல்பாசி பூங்கா அமைப்பதற்கு ரூ.126 கோடி நிதி ஒதுக்கி கொடுத்து உள்ளோம்.

    சென்னை:

    இந்திய வெள்ளை இறால் ஏற்றுமதியை அதிகரிக்கவும், இனப்பெருக்கத்தை பெருக்கவும் அதன் மரபணு மேம்பாட்டு மையத்தை சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள மத்திய மீன்வள ஆராய்ச்சி கவுன்சில்- உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவன வளாகத்தில் அமைப்பதற்கு பிரதம மந்திரியின் மத்ஸ்ய சம்பதா யோஜானா திட்டத்தின் கீழ் ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இந்த மையத்தின் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா, இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். மீன் நோய்களுக்கான தேசிய கண்காணிப்பு திட்டம் (அலகு-2), இறால்களுக்கான காப்பீடு திட்டம் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தனர்.

    இதில் மத்திய மீன்வளத்துறை செயலாளர் ஜந்திரா நாத் ஸ்வைன், மீன்வள ஆராய்ச்சியின் துணை இயக்குனர் ஜே.கே.ஜெனா, கடல்சார் மீன்வள இணை இயக்குனர் ஜெ.பாலாஜி, தமிழ்நாடு அரசின் மீன்வளம், மீனவர் நலத்துறை முதன்மை செயலாளர் கார்த்திக், 'ஐ.சி.ஏ.ஆர்-சிபா' இயக்குனர் குல்தீப் கே.லால், தேசிய மீன்வள மரபணு அமைப்பு (லக்னோ) இயக்குனர் யு.கே.சர்கார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் இறால் வளர்ப்பு, மீன் வளம் ஆராய்ச்சி தொடர்பான கண்காட்சி நடைபெற்றது.

    பின்னர் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் சார்பில் ரூ.18 கோடி செலவில் 5 ஆயிரம் ஜி.பி.எஸ். கருவிகள் தமிழ்நாடு அரசுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 5 ஆயிரம் படகு உரிமையாளர்கள் பயன் அடைவார்கள். இந்த கருவி மூலம் மீனவர்கள் எந்த இடத்தில் மீன்பிடித்து கொண்டு இருக்கிறார்கள், சர்வதேச எல்லையை கடக்கிறார்களா? என்பதை கண்காணிக்க முடியும்.

    தமிழ்நாட்டில் கடல்பாசி பூங்கா அமைப்பதற்கு ரூ.126 கோடி நிதி ஒதுக்கி கொடுத்து உள்ளோம். ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 2 மாவட்டங்களில் 2 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.

    இதில் ஒரு இடத்தில் உற்பத்தி செய்யப்படும். மற்றொரு இடத்தில் விற்பனை நடைபெறும். தமிழக அரசு டெண்டர் விட்டு இதற்கான பணிகளை தொடங்கும்.

    தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும்போது மத்திய அரசு அவர்களை உடனடியாக மீட்டு அழைத்து வருகிறது. தமிழக மீனவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டுதான் 5 ஆயிரம் ஜி.பி.எஸ். கருவிகள் கொடுத்து உள்ளோம்.

    இலங்கை கடற்படை கைப்பற்றி உள்ள படகுகளை மீட்டு தர வேண்டும் என்பது தமிழக மீனவர்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது. இதுதொடர்பாக நானும், மத்திய மீன்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலாவும் சேர்ந்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரிடம் நேரில் எடுத்துக்கூறி இருக்கிறோம். இவ்விவகாரம் தொடர்பாக மத்திய மீன்வளத்துறை செயலாளர் தலைமையில் கூட்டு கமிட்டி ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ஏப்ரல் மாதம் இரு நாடுகள் இணைந்து கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது.
    • மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் பதவி வழங்க உள்ளதாக வெளியான தகவலை ஆளும் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    கொழும்பு:

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் வெடித்தது.

    இதையடுத்து பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஆகியோர் பதவி விலகினர்.

    அதே போல் ராஜபக்சே குடும்பத்தினரும் ஆட்சி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தனர். ஆளும் பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கே அதிபர் ஆனார். பிரதமராக தினேஷ் குணவர்தனே உள்ளார்.

    இந்த நிலையில் மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி தலைநகர் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் மகிந்த ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் பரவியது.

    இந்த நிலையில் மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் பதவி வழங்க உள்ளதாக வெளியான தகவலை ஆளும் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கூறும்போது, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக்கும் நடவடிக்கை எதுவும் இல்லை. அது போன்ற கோரிக்கையை அதிபரிடம் இலங்கை பொதுஜன பெரமுனா முன் வைக்கவில்லை என்றார்.

    • படகு ஓட்டுனருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பு அளித்திருக்கிறது.
    • மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தனது கடமையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடித்துக் கொள்ளக் கூடாது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வங்கக்கடலில் மீன்பிடித்த போது கடந்த 8-ந்தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரில் 18 பேரை விடுதலை செய்திருக்கும் இலங்கை நீதிமன்றம், ஜான்சன் என்ற படகு ஓட்டுனருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பு அளித்திருக்கிறது.

    மீனவர் ஜான்சன் ஏற்கனவே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதாகி விடுதலை ஆனவர் என்றும், இப்போது மீண்டும் ஒரு முறை அந்தக் குற்றத்தை செய்திருப்பதால் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.


    சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தனது கடமையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடித்துக் கொள்ளக் கூடாது.

    மீனவர்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்படுவதைக் கண்டித்து தொடர் வேலை நிறுத்தம், கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா புறக்கணிப்பு என ராமேஸ்வரம் மீனவர்கள் போர்க்கோலம் பூண்டுள்ள நிலையில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும்படி வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தாக்குதலில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
    • காசா மக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இதனால் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே, காசா மக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகிறது.

    இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதலால் காசா பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலனுக்காக சுமார் ரூ. 8.22 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது இலங்கை அரசு

    பாலஸ்தீன தூதரிடம் இதற்கான காசோலையை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வழங்கினார்.

    • இலங்கை அரசு மதிப்பதாகத் தெரியவில்லை.
    • இலங்கை அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டபோது, அதற்கான உடன்படிக்கையில் இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாகத் தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளைத் தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனால், இதையெல்லாம் இலங்கை அரசு மதிப்பதாகத் தெரியவில்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு வருவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    இதன்மூலம் தமிழக மீனவர்களிடையே ஓர் அச்ச உணர்வினை தோற்றுவிக்க இலங்கை கடற்படை முயல்கிறது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்க முயலும் இலங்கை அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இலங்கை அரசுடனான தவறான உடன்படிக்கையின் மூலம் தமிழக மீனவர்களின் வரலாற்று உரிமையை பறிப்பது என்பது நியாயமற்ற செயல். இதற்கு ஒரு நிரந்தர மற்றும் நியாயமான தீர்வினை காணவேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய அரசிற்கு உள்ளது.

    பிரதமர் மோடி இலங்கை அரசிடம் உடனடியாக பேசி, இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்கவும், இந்த நீண்டநாள் பிரச்சனைக்கு நியாயமான, நிரந்தரத் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இலவச விசா திட்டம் அக்டோபர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும்.
    • வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    கொழும்பு:

    நமது அண்டை நாடான இலங்கை கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அதில் இருந்து மீண்டு வர இலங்கை அரசு தீவிரமாக முயன்று வருகிறது.

    அந்த வகையில் நாட்டின் பெருமளவு வருவாய் சுற்றுலாத்துறை மூலமே கிடைப்பதால் அதை வளப்படுத்த இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

    இந்த நிலையில் இந்தியா உள்பட 35 நாடுகளில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்பட உள்ளதாக அந்த நாட்டின் அரசு அறிவித்துள்ளது.

    சுற்றுலா அமைச்சகத்தின் ஆலோசகர் ஹரின் பெர்னாண்டோ இதுப்பற்றி கூறுகையில், "இந்தியா, அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த இலவச விசா திட்டம் அக்டோபர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும்" என்றார்.

    மேலும் அவர், "பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் இலங்கைக்கு ஆண்டுதோறும் 50 லட்சம் சுற்றுலா பயணிகளின் இலக்கை அடைவதுமே இந்த முடிவின் நோக்கம்" எனவும் கூறினார்.

    • தலா ரூ.50,000 அபராதம் செலுத்தியதால் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மொட்டை.
    • தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விடுதலையான தமிழக மீனவர்களை மொட்டை அடித்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    தலா ரூ.50,000 அபராதம் செலுத்தியதால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 5 மீனவர்களை மொட்டை அடித்து இலங்கை அரசு அனுப்பியுள்ளது.

    5 மீனவர்கள் மொட்டை அடித்து தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் ராமேஸ்வரம் மீனவர்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து, இலங்கை அரசை கண்டிக்கும் விதத்தில் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், இலங்கை அரசின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.

    • 5 மீனவர்களை மொட்டை அடித்து இலங்கை அரசு அனுப்பியுள்ளது.
    • மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விடுதலையான தமிழக மீனவர்களை மொட்டை அடித்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தலா ரூ.50,000 அபராதம் செலுத்தியதால் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 5 மீனவர்களை மொட்டை அடித்து இலங்கை அரசு அனுப்பியுள்ளது.

    இதைக்கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் இதையடுத்து, இலங்கை அரசை கண்டிக்கும் விதத்தில் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், இலங்கை அரசின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மொட்டையடித்து திருப்பி அனுப்பி வைத்த இலங்கை அரசைக் கண்டித்து செப்.20ம் தேதி ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

    மேலும், இலங்கை அரசின் அராஜக போக்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

    இலங்கையை கண்டித்தும், மீனவர் பிரச்சனையில் பாராமுகமாக உள்ள மத்திய அரசையும் கண்டித்து ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே படகு சேவைகள் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு இருக்கிறது.
    • ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையேயும் படகு சேவையை தொடங்க முடிவு செய்துள்ளோம்.

    இலங்கை அதிபர் அனுராகுமார திசநாயகா தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை இலங்கை அதிபர் திசநாயகா சந்தித்துப் பேசினார்.

    பிரதமர் மோடி உடனான சந்திப்பின்போது மீனவர் பிரச்சனையில் சுமூக தீர்வு காண வேண்டும் என்று இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், இலங்கை அதிபர் அதிபர் அநுர குமார திசநாயக்கவுடன் பிரதமர் மோடி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

    நான் ஜனாதிபதி திசநாயக்கவை இந்தியாவிற்கு வரவேற்கிறேன். அதிபராக நீங்கள் முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

    இன்றைய யாத்திரை மூலம் நமது உறவுகளில் புதிய வேகமும் ஆற்றலும் உருவாகி இருக்கிறது. எங்கள் கூட்டாண்மைக்காக நாங்கள் ஒரு எதிர்கால நோக்கத்தை ஏற்றுக்கொண்டோம்.

    எங்களின் பொருளாதார ஒத்துழைப்பில், முதலீடு சார்ந்த வளர்ச்சி மற்றும் இணைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். உடல், டிஜிட்டல் மற்றும் ஆற்றல் இணைப்பு ஆகியவை எங்கள் கூட்டாண்மையின் முக்கிய தூண்களாக இருக்கும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

    மின் இணைப்பு மற்றும் பல பெட்ரோலிய குழாய் இணைப்புக்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இந்தியாவில் பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டபோது, இலங்கையிலும் அது கொண்டாடப்பட்டது.

    படகு சேவை மற்றும் சென்னை- யாழ்ப்பாணம் விமான இணைப்பு ஆகியவை சுற்றுலாவை மேம்படுத்தி நமது கலாச்சார உறவுகளை வலுப்படுத்தியுள்ளன.

    நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை படகு சேவைகள் வெற்றிகரமாக தொடங்கப்பட்டதை அடுத்து, இப்போது இந்தியாவின் ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே படகு சேவை தொடங்கப்படும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

    இலங்கையின் பௌத்த சுற்று மற்றும் ராமாயணப் பாதை மூலம் சுற்றுலாவின் மகத்தான ஆற்றலை உணர்ந்துகொள்ளும் பணியும் மேற்கொள்ளப்படும்.

    மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்னைகள் குறித்தும் பேசினோம். இந்த விஷயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

    இலங்கையில் கட்டுமானம் மற்றும் நல்லிணக்கம் குறித்தும் பேசினோம். அதிபர் திசநாயக்க தனது அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை பற்றி என்னிடம் கூறினார்.

    இலங்கை அரசு தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றி, இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக அமல்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் தனது உறுதிமொழியை நிறைவேற்றும் என நம்புகிறோம்.

    இலங்கையை பல வழிகளில் அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகளில் இந்தியா தொடர்ந்து நம்பகமான நட்புறவில் இருக்கும் என்று அதிப் திசநாயக்கவிடம் நான் உறுதியளித்துள்ளேன்.

    நம் பாதுகாப்பு நலன்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் முழுமையாக ஒப்புக்கொள்கிறோம். பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் முடிக்க முடிவு செய்துள்ளோம். ஹைட்ரோகிராஃபி தொடர்பான ஒத்துழைப்பும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

    கொழும்பு பாதுகாப்பு மாநாடு பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஒரு முக்கியமான தளம் என்று நாங்கள் நம்புகிறோம்.

    இதன் கீழ், கடல் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, இணைய பாதுகாப்பு, கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான போராட்டம், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் போன்ற தலைப்புகளில் ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.

    இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மக்கள்-மக்கள் உறவுகள் நமது நாகரிகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

    இலங்கைக்கு இந்தியா இதுவரை 5 பில்லியன் டாலர்களை கடன் மற்றும் மானிய உதவியாக வழங்கியுள்ளது.

    இலங்கையின் 25 மாவட்டங்களிலும் எமக்கு ஒத்துழைப்பு உள்ளது மற்றும் எமது திட்டங்களின் தெரிவு எப்போதும் சக நாடுகளின் அபிவிருத்தி முன்னுரிமைகளை அடிப்படையாகக் கொண்டது.

    எமது அபிவிருத்தி ஒத்துழைப்பை முன்னோக்கி எடுத்துச் சென்று, மாஹோ-அநுராதபுரம் புகையிரதப் பிரிவு மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தின் சமிக்ஞை முறைமையை புனரமைப்பதற்கு மானிய உதவி வழங்கப்படுமென தீர்மானித்துள்ளோம்.

    கல்வி ஒத்துழைப்பின் கீழ், அடுத்த வருடம் முதல் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாண பல்கலைக்கழகங்களில் 200 மாணவர்களுக்கு மாதாந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

    அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கையின் 1500 அரசு ஊழியர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படும். வீடமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றுடன், இலங்கையில் விவசாயம், பால்பண்ணை மற்றும் மீன்வளம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் இந்தியா ஒத்துழைக்கும்.

    இலங்கையின் தனித்துவமான டிஜிட்டல் அடையாள திட்டத்தில் இந்தியாவும் பங்கேற்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்ட சீனா இலங்கைக்கு 1.7 பில்லியன் டாலர் கடன் வழங்கியது.
    • வருடந்தோறும் 100 மில்லியன் டாலர் திரும்பிய வழங்க முடியாததால் 99 வருடத்திற்கு குத்தகை விட்டுள்ளது

    இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயக இன்று இந்தியா வந்திருந்தார். அவரை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இரு நாடுகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் இந்தியாவின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எங்களது நீர்நிலைககள் உள்பட எந்த பகுதியையும் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்காது என இலங்கை உறுதி அளித்துள்ளது.

    இந்தியா- சீனா இடையில் ஏற்கனவே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் இந்தியா அண்டை நாடுகளான வங்கதேசம், இலங்கையுடன் சீனா நெருக்கம் காட்ட தொடங்கியுள்ளது.

    இந்தியாவை குறிவைத்து சீனா "Mission Indian Ocean" என்பதை குறிவைத்துள்ளது. இந்திய பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் இந்திய பெருங்கடலில் இலங்கை பகுதியில் சீன உளவு கப்பல்கள் அவ்வப்போது காணப்பட்டது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

    இலங்கையுடன் நட்புணர்வை வளர்த்துக் கொள்ள சீனா அதிக அளவில் உடன் கொடுத்தது. குறிப்பிட்ட அளவிலான கடனை பெற்ற இலங்கையால் சீனாவுக்கு கடனை திருப்பி அடைக்க முயடிவில்லை. இதனால் சீனா இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டது. இதனால் சீனாவின் அதிநவீன கப்பல்கள் வரத் தொடங்கியது.

    இலங்கை இந்தியாவுக்கு மிக அருகில் உள்ளதால், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

    2022 ஆகஸ்ட் மாதம் இந்தியா இலங்கையிடம் இது தொடர்பாக தனது கவலையை தெரிவித்தது. இதனால் இலங்கை சீனாவிடம் இது போன்ற செயல்களை நிறுத்த வலியுறுத்தியது. என்றபோதிலும் பின்னர் சீன கப்பல்களை நிறுத்துவதற்கு அனுமதி அளித்தது. அதில் இருந்து சீனா இந்திய பெருங்கடலில் ஆய்வு மேற்கொள்வதும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் (Hambantota Port) கப்பல்களை நிறுத்தி வருகிறது.

    ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்ட இலங்கைக்கு சீனா 1.7 பில்லியன் டாலர் கடன் வழங்கியிருந்தது. அதற்கு வருடம் 100 மில்லியன் டாலர் திரும்ப வழங்க முடியாத நிலையில், 99 வருட ஒப்பந்தத்திற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா எடுத்துக் கொண்டது. 2010-ம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதற்கட்ட கட்டுமானப்பணிகள் முடிவடைந்தது.

    இந்தியாவுடனான இன்றைய ஒப்பந்தத்தில் இலங்கை அதன் நீர்நிலைகள் உட்பட இந்தியாவின் பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்கும் வகையில் பயன்படுத்தப்படாது என்பதை உறுதி செய்கிறது எனத் தெரிவித்துள்ளது.

    • தமிழகம், புதுச்சேரி மீனவர்களின் படகுகளை 2வது முறையாக ஏலம் விடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்களின் படகுகளை ஏலம்விட அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்களின் படகுகள் ஏலத்தில்விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2024ம் ஆண்டு பிடிக்கப்பட்ட தமிழகம், புதுச்சேரி மீனவர்களின் படகுகளை 2வது முறையாக ஏலம் விடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 31 ராமேஸ்வரம் படகுகள், 14 புதுக்கோட்டை படகுகள், 8 கன்னியாகுமரி மாவட்ட படகுகள் உள்ளிட்ட 67 படகுகளை ஏலம் விடப்போவதாக இலங்கை நீரியல் வளத்துறை பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக மத்திய- மாநில அரசுகள் ஏலத்தை தடுத்து மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×