என் மலர்
நீங்கள் தேடியது "ஆதீனம்"
- பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் பங்கேற்று இத்திட்டம் குறித்து விரிவாக விளக்கினார்.
- அரச மரத்தின் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்களை உலகிற்கு எடுத்து கூறி வருகின்றன.
பேரூர் அடிகளார் எனப் போற்றப்படும் தெய்வத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு "ஒரு கிராமம் ஒரு அரச மரம்" எனும் மாபெரும் திட்டம் வரும் 20-ஆம் தேதி (நாளை) பேரூர் ஆதீன வளாகத்தில் துவங்கப்பட உள்ளது.
இத்திட்டம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் பங்கேற்று இத்திட்டம் குறித்து விரிவாக விளக்கினார்.
அவருடன் காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், நொய்யல் அறக்கட்டளையின் அறங்காவலர் ஆறுச்சாமி மற்றும் கோவை கட்டிட கட்டுமானம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராமநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
நம் பாரத கலாச்சாரத்தில் உள்ளார்ந்த ஆன்மீக அனுபவத்தின் மூலம் ஆன்மீக பெருமக்கள் உருவாக்கிய ஒவ்வொரு அம்சங்களும் மக்களின் நல்வாழ்வை அடைப்படையாக கொண்டவை.
அந்த வகையில் நம் நாட்டில் ஆல், அரசு, வேம்பு உள்ளிட்ட மரங்களினால் கிடைக்கும் ஆன்மீக மற்றும் மருத்துவ பலன்களை உணர்ந்து அம்மரங்களுக்கு தனித்த மற்றும் உயர்ந்த இடம் வழங்கப்பட்டு வந்துள்ளது.
நமது கலாச்சாரத்தில் அரச மரத்திற்கு கீழ் வழிபாடுகளும், ஆல மரத்திற்கு கீழ் உலக விஷயங்களும் நடைபெற்று வந்தன. அரச மரங்கள் நம் மண்ணின் மரமாக, நம் கிராமங்களின் அடையாளமாக பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகிறது.
இன்று பல்வேறு அறிவியல் ஆய்வு முடிவுகள் அரச மரத்தின் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்களை உலகிற்கு எடுத்து கூறி வருகின்றன.
குறிப்பாக இலை, பால், வேர், பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெண்களின் கர்ப்பப்பை கோளாறுகள் முதல் கல்லீரல் பிரச்சனைகள் வரை பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு அரச மரத்தின் மூலம் தீர்வுகள் கிடைக்கும் என்பதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் பேரூர் ஆதீனத்தின் "24-வது குரு மகாசன்னிதானம் தெய்வத்திரு பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார்" அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு அரச மரத்தினை நடவு செய்வதை இலக்காக கொண்டு "ஒரு கிராமம் ஒரு அரச மரம்" எனும் மாபெரும் திட்டம் துவங்கப்பட உள்ளது.
இம்மாபெரும் திட்டம் வரும் 20-ம் தேதி பேரூர் ஆதீன வளாகத்தில் முதல் மரக்கன்று நடவு செய்து துவங்கப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி நொய்யல் ஆறு அறக்கட்டளை, கோயம்புத்தூர் கட்டிட கட்டுமானம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு மற்றும் ஓசூர் புவியின் நண்பர்கள் ஆகிய அமைப்புகள் இணைந்து முதல் கட்டமாக கோயம்புத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 2,000 கிராமங்களில் அரச மரங்களை நடவு செய்ய உள்ளனர்.
இதன் துவக்க விழாவில் பேரூர் ஆதீனத்தின் 25-வது குரு மகாசன்னிதானம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், தவத்திரு சிரவை ஆதீனம், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் சொல் ஏறு உழவர் கு.செல்லமுத்து, கோவை கட்டிட கட்டுமானம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராமநாதன், நொய்யல் ஆறு அறக்கட்டளை அறங்காவலர் ஆறுச்சாமி, சிறுதுளி அறக்கட்டளை அறங்காவலர் வனிதா மோகன் மற்றும் திரைப்பட நடிகர் படவா கோபி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
- புனிதநீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து விமானத்தில் உள்ள கலசத்திற்கு வந்தடைந்தனர்.
- கோபுர விமானத்தில் உள்ள கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாயூரநாதர் பெரிய கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குமரக்கட்டளை உள்ளது.
இங்குள்ள சுப்பிரமணியர் சுவாமி சன்னதியில் திருப்பணிகள் நிறைவுற்று கடந்த 19-ஆம் தேதி எஜமான அனுக்ஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
ஆறுகால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் நடைபெற்ற 6-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவில், மகா பூர்ணாகுதி செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் பாலச்சந்தர் சிவாச்சாரியர், திருக்கடையூர் மகேஷ் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து விமானத்தில் உள்ள கலசத்திற்கு வந்தடைந்தனர்.
அப்போது கருடன் வட்டமிட, வேத விற்பன்னர்கள் சிவ ஆகமங்கள் முறைப்படி மந்திரங்கள் ஓத, பக்தர்கள் முருகா முருகா என கோஷங்கள் எழுப்ப, மேளதாளங்கள் முழங்க தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள்,
வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், சூரியனார்கோயில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் ஆதீன இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனக்கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் மற்றும் தருமபுரம் ஆதீனக் கட்டளைத் தம்பிரான்கள் முன்னிலையில் விமானத்தில் உள்ள கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
இதனை தொடர்ந்து கருவறையில் உள்ள வள்ளி தெய்வானை உடனாகிய சுப்பிரமணியருக்கு புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் மேலாளர் சண்முகம், ஆதீனம் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, மாயூரநாதர் பெரிய கோயில் காசாளர் வெங்கடேசன், நகரமன்ற தலைவர் செல்வராஜ், தருமபுரம் கல்லூரிச் செயலர் செல்வநாயகம், கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் என ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
- ரிஷப வாகனத்தில் அமர்ந்து குரு பகவானுக்கு லட்சார்ச்சனை.
- தருமபுர ஆதீனம் அருளாசியுடன் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
குரு பெயர்ச்சி விழா ஏப்ரல் 22 ம்தேதி சனிக்கிழமையில் இரவு 11. 24 மணிக்கு குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
அதனை முன்னிட்டு நேற்று மயிலாடுதுறை சேந்தங்குடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வதான்யேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் (வள்ளலார் கோயிலில்) ரிஷப வாகனத்தில் அமர்ந்து ஸ்ரீமேதா தக்ஷிணாமூர்த்தி குரு பகவானுக்கு லட்சார்ச்சனை ஒவ்வொரு தினம் மாலையில் நடைபெற்றுவருகிறது.
இதில் பரிகார ராசிகள், பயன்பெறும் ராசிகள், பரிகாரத்தில் மற்றும் யாகத்திலும் பங்கு பெற்று பயனடைய தருமபுர ஆயுதம் 27ஆவது குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாசியுடன் நடைபெறுகிறது.
- பாத பூஜை செலுத்தி மரியாதை செலுத்தினர்.
- இதில் திருக்கடையூர் மகேஷ் குருக்கள் உள்ளிட்ட ஏராள மான ஆதீனம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் பழமை வாய்ந்த சைவ ஆதீன திருமடமான தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது.
ஆதீனத்துக்கு சொந்தமான சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் ஆலய திருக்கோயில் கும்பாபிஷேகம் வரும் 24ம் தேதி புதன்கிழமை நடைபெறுகின்றது.
இதில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீன 27 வது மடாதிபதி, தருமபுர ஆதீன மடத்திலிருந்து ஆதீன பூஜா மூர்த்தி செந்தமிழ் சொக்கநாதருடன் குருலிங்க சங்கம பாதயாத்திரையை துவங்கினார்.
ஒட்டகம் குதிரை ஆகிய முன்னே செல்ல பரிவாரங்களுடன் மேளதாளங்கள் முழங்க பாதயாத்திரையாக சென்ற மடாதிபதிக்கு சேந்தங்குடி வள்ளலார் கோயில் நிர்வாகிகள் பூர்ண கும்பம் வைத்து, பாத பூஜை செலுத்தி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக ஆலய மடத்தில் செந்தமிழ் சொக்கநாதருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்ய ப்பட்டது.
இதில் திருக்கடையூர் மகேஷ் குருக்கள் உள்ளிட்ட ஏராள மான ஆதீனம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- திருநன்றியூரில் இருந்து புறப்பட்டு வைத்தீஸ்வரன்கோயிலில் சொக்கநாதர் பெருமானுடன் எழுந்தருளினார்.
- தருமபுர ஆதீனம் சொக்கநாதர் பெருமானுடன் முக்கிய வீதிகளின் வழியாக பாதயாத்திரை மேற்கொண்டார்.
சீர்காழி:
தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சீர்காழி சட்டநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 24-ம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக பூஜாமூர்த்தியான சொக்கநாதபெருமானுடன் தருமை ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 11-ம் தேதி ஆதீனத்தில் இருந்து புறப்பட்டு தரங்கம்பாடி சாலை, மயூரநாதர் சுவாமி கோயில், பட்டமங்கலத்தெரு, வள்ளலார்கோயில் வழியாக பாதயாத்திரையாக திருநன்றியூர் உலகநாயகி சமேத லட்சுமிபுரீஸ்வரர் கோவிலில் சொக்கநாத பெருமானை எழுந்தருளச் செய்தார்.
12-ம் தேதி மாலை திருநன்றியூரில் இருந்து புறப்பட்டு வைத்தீஸ்வர ன்கோயில் வைத்தியநா தசுவாமி கோயிலில் சொக்கநாத பெருமானுன் எழுந்தருளினார்.
அங்கு இரண்டு நாட்கள் தங்கி வழிபாடு நடத்திய பின்னர் நேற்று அங்கிருந்து சீர்காழி புறப்பட்டது.
சீர்காழி நகர எல்லையான உப்பனாற்றாங்கரை வந்தடைந்த குரு லிங்க சங்கம பாதயாத்திரை மேற்கொண்டு வரும் தருமபுரம் ஆதீனத்திற்கு தமிழ் சங்கத் தலைவர் மார்கோனி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு சொக்கநாதர் பெருமானுடன் தருமபுரம் ஆதீனம் மேடையில் எழுந்தருளினார்.
100 நாதஸ்வர,மேளம் இசைத்தும், கேரள பாரம்பரிய தெய்வ வேடமணிந்து பக்தர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வருகைபுரிந்து வரவேற்றனர். பின்னர் யானை, ஒட்டகம், குதிரை ஆகிய மங்கள சின்னங்கள் முன்னே செல்ல தருமபுரம் ஆதீனம் சொக்கநாதர் பெருமானுடன் முக்கிய வீதிகளின் வழியாக பாதயா த்திரை மேற்கொண்டார்.
பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் ஆதீனம் வழங்கியவாறு சென்றார். நான்கு தேர் வீதிகளின் வழியாக சட்டநாதர் சுவாமி கோயிலை தருமபுரம் ஆதினம் வந்தடைந்து அங்கு மாசிலாமணி நிலையத்தில் சொக்கநாதர் பெருமானை எழுந்தருள செய்தார். இதில் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், மாணிக்காவசகதம்பிரான் சுவாமிகள், சிவகுருநாத தம்பிரான்சுவாமிகள், ஆதீன கல்லூரி நிர்வாகத்தினர், சீர்காழி, வைத்தீஸ்வர ன்கோயில் பகுதி பக்தர்கள் உட்பட பலர் சென்றனர்.
- ஆபதுதாரணர் மாலை என்ற ஆன்மீக நூலை தருமபுர ஆதீனம் வெளியிட்டார்.
- தொடர்ந்து, தருமபுரம் ஆதீனம் நூலின் விபரங்கள் குறித்து கூறினார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.
பிரசித்தி பெற்ற இக்கோயில் கும்பாபிஷேகம் வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனிடையே உயர்நீதிமன்ற நீதியரசர் மகாதேவன் சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயி லுக்கு வருகை புரிந்தார்.
தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சா ரியார் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.
தொடர்ந்து மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை சார்பில் அச்சிடப்பட்ட ஆபதுதாரணர் மாலை என்ற ஆன்மீக நூலை தருமபுரம் ஆதீனம் வெளியிட அதனை நீதிபதி மகாதேவன் பெற்றுக் கொண்டார்.ஆன்மீகப் பேரவை நிறுவனர் இராம.சேயோன் உடன் இருந்தார்.
தொடர்ந்து கோயிலுக்கு சென்ற நிதியரசர் மகாதேவன் சுவாமி, அம்பாள், பைரவர் ஆகிய சுவாமி சன்னதிகளில் தரிசனம் செய்தார்.
அப்போது கோயில் நந்தவனத்தில் கடந்த மாதம் யாகசாலை பூஜைக்காக பள்ளம் வெட்டிய போது கிடைத்த சாமி சிலைகள், தேவாரப் பதிகம் தாங்கி செப்பேடுகள் கோயில் பாது காப்பு அறையில் வைத்து பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
அதனை நிதிபதி மகா தேவன் பார்வையிட்டார்.
அவருக்கு தருமபுரம் ஆதீனம் அதன் விவரங்கள் குறித்து கூறினார்.
- திருவாவடுதுறை ஆதீனத்திற்கு ஊர் எல்லையில் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பாராளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டதன் மூலம் உலக அளவில் தமிழகத்திற்கு பெருமை கிடைத்துள்ளது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறையில் 14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சைவ ஆதின திருமடமான திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ளது.
நாடு சுதந்திரம் பெற்ற போது சுதந்திரம் பெற்றதன் அடையாளமாக திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் மவுன்பேட்டன் பிரபுவிடம் செங்கோலை கொடுத்து அதனை ஆதீன தம்பிரான் சடைச்சாமி என்கிற திருவதிகை குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் அப்போதைய பிரதமர் நேருவிடம் கொடுத்ததாக வரலாறு. அந்த செங்கோல் தற்போது டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடியிடம் வழங்குவதற்காக திருவாவடுதுறை ஆதீன 24- வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மத்திய அரசின் மூலம் தனி விமானத்தில் டெல்லி சென்றார்.
புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் செங்கோல் வழங்கிவிட்டு மீண்டும் ஆதினத்திற்கு திரும்பிய திருவாவடுதுறை அதிகம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு ஊர் எல்லையில் ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
யானை, அலங்கார குதிரை சகிதமாக மங்கள வாத்தியங்கள், சிவ கைலாய வாக்கியங்கள் முழங்க நான்கு குதிரைகள் பூட்டிய மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் ஆதீன கர்த்தரை ஊர்வலமாக ஆதீன மடத்திற்கு அழைத்து சென்றனர். வழியெங்கும் கண்கவர் வானவேடிக்கை பட்டாசுகளால் ஜொலித்த நிலையில் கோலகலமாக ஆதீனகர்த்தர் ஆதீன திருமடம் வந்தார். தொடர்ந்து ஆதின குரு மகா சன்னிதானம் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அப்போது நாதஸ்வர கலைஞர்கள் தவில் வித்வான்களோடு சேர்ந்து இசை ஆராதனை நடத்தினர்.
குறிப்பாக இந்தியா சுதந்திரம் பெற்றதன் அடையாளமாக உள்ள வந்தே மாதரம் என்ற தாரக மந்திர சொல்லின பாடலை இன்னிசை கலைஞர்கள் ராகத்தோடு வாசித்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் தெய்வபக்தி பாடல்களை இசைக்க ஆதீன திருமடம் இசையால் அதிர்ந்தது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருவாவடுதுறை ஆதீனம் கூறுகையில் இந்தியா சுதந்திரம் பெற்றதின் அடையாளமாக திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வழங்கப்பட்ட செங்கோல் 75 ஆண்டுகளுக்குப்பிறகு இன்று பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டதன் மூலம் உலக அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. பொதுமக்கள் வரவேற்பு அளித்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.
- 5 ஆயிரம் மாணவ- மாணவிகள் ஒரே நேரத்தில் கலந்து கொண்டு நாட்டிய திருவிழா நடந்தது.
- நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், ஆதீன நிர்வாகிகள் பலர் கலந்து கொன்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் குருபூஜை விழா மற்றும் ஞானபுரீஸ்வரர் ஆலய வைகாசி பெருவிழா கடந்த 31-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. நிறைவு நாள் 11-ம்நாள் திருவிழாவாக ஆதீனகர்த்தர் சிவிகை பல்லக்கில் பட்டின பிரவேசம் செய்யும் நிகழ்ச்சிநேற்று நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை பக்தர்கள் மற்றும் மடத்து சிப்பந்திகள் சிவிகை பல்லக்கில் நான்கு வீதிகளில் சுமந்து வந்தனர். இறுதியாக ஆதீன மடாதிபதியின் ஞான கொலுக்காட்சி நள்ளிரவு நடைபெற்றது.
பீடத்தில் அமர்ந்த ஆதீன மடாதிபதிக்கு திருப்பனந்தாள் காசி மடத்து இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிராயன் சுவாமிகள் பாவனை அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பித்தார். இறுதியாக விழாவில் பங்கேற்ற சூரியனார்கோயில் ஆதீனம், திருப்பனந்தாள் இளவரசு உள்ளிட்டவர்களுக்கு தருமபுரம் ஆதீன குருமா சன்னிதானம் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விடியவிடிய நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று காணிக்கை செலுத்தி தரிசனம் செய்து அருளாசி பெற்றனர். இதில் கடந்த மாதம் சீர்காழி சட்டநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவில் 5000 மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில் பங்கேற்று நடைபெற்ற நாட்டிய திருவிழாவை உலக சாதனை நிகழ்ச்சியாக டிவைன் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்டு பதிவு செய்தது.அதன் தலைவர் கிருத்திகா தேவி உலக சாதனை படைத்த சான்றிதழ்களை தருமபுரம் ஆதீனத்திடம் நேரில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், ஆதீன நிர்வாகிகள் என திரளாக கலந்து கொன்டனர்.
- வைத்தீஸ்வரன் கோவிலில் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் சாமி தரிசனம் செய்தார்.
- அவருக்கு தருமபுரம் ஆதீனம் கோவில் பிரசாதங்கள் வழங்கினார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் அமைந்துள்ள வைத்தியநா தசுவாமி கோவிலில் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றார்.
அவருக்கு தருமை ஆதீனம் கோவில் பிரசாதங்களை வழங்கினார்.
- இரு மடாதிபதிகளுக்கும் பூரணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது.
- அகஸ்தியர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு தருமபுர ஆதீனம் மற்றும் மதுரை ஆதீனம் ஆகியோர் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவில் சார்பில் இரு மடாதிபதிகளுக்கும் பூரணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் கருண வாய்வரனி ஆதீனம் இளையவர் சபேசன், கோவில் நிர்வாக அலு வலர் அறிவழகன், தலத்தார் கயிலைமணி வேதரத்தினம் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பின், அகஸ்தியர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். வேதாரண்யம் தெற்கு வீதியில் புதிதாக தருமபுர ஆதீன கட்டளை மடம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- 2 ஆதீனங்களும் ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- மேளதாளம் முழங்க பூரண கும்பம் மரியாதையுடன் வரவேற்றனர்.
கன்னியாகுமரி:
தருமபுர ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் காசி திருப்பனந்தாள் திருமடத்தின் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சபாபதி சுவாமிகள் ஆகியோர் நேற்று மாலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தனர்.
அவர்களை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் ஆகியோர் மேளதாளம் முழங்க பூரண கும்பம் மரியாதையுடன் வரவேற்றனர்.
பின்னர் 2 ஆதீனங்களும் ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் உள்ள ஸ்ரீ கால பைரவர், ஆஞ்சநேயர், தியாக சவுந்தரி அம்மன், பால சவுந்தரி அம்மன், ஸ்ரீதர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதி மற்றும் ஸ்ரீநாகராஜர் சூரிய பகவான் ஆகிய சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மதுரை ஐகோர்ட் நீதிபதி நாகா அர்ஜுன் மற்றும் ஆந்திரா ஐகோர்ட்டு நீதிபதி சாம்பசிவராவ் நாயுடு ஆகியோர் தங்களது குடும்பத்துடன் நேற்று மாலை கன்னியாகுமரி வந்தனர். இவர்களும் பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் அவர்கள் இன்று காலை சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலுக்கும் சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். 2 ஐகோர்ட் நீதிபதிகள் வருகையையொட்டி கன்னியாகுமரி மற்றும் சுசீந்திரம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- தமிழகத்தில் 6 லட்சத்து 36 ஆயிரம் கோவில்கள் உள்ளன. அந்த கோவில்கள் அந்தந்த அமைப்பு மூலம் நடந்து கொண்டிருக்கிறது.
- பூஜை முடிந்த பிறகு வழிபாடு செய்யும் போது அனைவருக்கும் வழிபடுவதற்கான உரிய வழிமுறை பின்பற்றப்பட வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாவட்ட ஆன்மீக மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் சூரியனார் கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தவத்திரு சிவநந்தி அடிகாளார் கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது ;-
தமிழகத்தில் 6 லட்சத்து 36 ஆயிரம் கோவில்கள் உள்ளன. அந்த கோவில்கள் அந்தந்த அமைப்பு மூலம் நடந்து கொண்டிருக்கிறது. கோவில் என்பது தாயின் கருவறை போன்றது. அந்த கோவில் கருவறையில் பூஜை செய்வதற்கு தீட்சிதர்கள் தகுதி உடையவர்கள். பூஜை காலங்களில் அவர்களை பூஜை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். பூஜை முடிந்த பிறகு வழிபாடு செய்யும் போது அனைவருக்கும் வழிபடுவதற்கான உரிய வழிமுறை பின்பற்றப்பட வேண்டும்.
தமிழகத்தில் 6-ல் 4 பாகம் நிலங்கள் ஆதீனத்திற்கும், திருக்கோவில்களுக்கும் உள்ள நிலங்கள் ஆகும். அவற்றிற்கு ஆர்.டி.ஆர். என்கிற உரிமை உண்டு. அந்த உரிமையின் பேரில் நஞ்சை, புஞ்சை நிலங்கள், அடிமனை வாடகை, தென்னை மர குத்தகை போன்ற பல வகையான நிலங்கள் உண்டு. அவற்றில் 90 சதவீதம் வருவாய் வரக்கூடிய ரீதியில் தான் உள்ளது.
பெரும்பாலான கோவில்கள் அதற்குரிய இடத்தில் தான் கட்டப்பட்டுள்ளது. சில கோவில்கள் புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டுள்ளன. மேலும் பயன்படாத இடத்தில் கட்டப்படும் போது அதற்கு கோர்ட் அனுமதியுடன் தான் அரசு அவற்றிற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது.
இன்று நடைபெற்ற மாநாட்டில் கோவில்களை சிறந்த முறையில் வழிநடத்தி கொண்டு செல்ல வேண்டும். இந்து கோவில்களான சிவம், வைணவம், சைவம், சமணம், பவுத்தம் போன்ற கோவில்களுக்கு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.10 வரையிலும் கட்டணம் வாங்கப்பட்டு வருகிறது. அவற்றை குறைத்து கட்டணம் வசூலிக்க அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1947-ம் ஆண்டு சுதந்திரம் பெறப்படும் போது யாரிடம் இருந்து சுதந்திரம் பெறுவது என்ற கருத்தானது வெளிப்பட்டு கொண்டிருந்தது. அப்போது சோழவள நாட்டிலே திருவாவடுதுறை ஆதீனம் மூலமாக பெறலாம் என்கிற யோசனையை ராஜகோபாலாச்சாரியார் முன்வைக்கிறார். 70 ஆண்டுகளாக நேருவின் அலகாபாத் இல்லத்தில் இருந்த செங்கோலை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி வைத்து தமிழ் ஆதீனங்களுக்கும், தமிழ் சைவத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மத்தியில் கூட்டாட்சி தத்துவம், மாநிலத்தில் சுயாட்சி தத்துவம் தான் நமது கொள்கை.
இவ்வாறு அவர் கூறினார்.