என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈஸ்டர் பண்டிகை"

    • கிறித்தவப் பெருமக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நாள் வாழ்த்துகள்.
    • உலகெங்கும் வெறுப்பும், வன்முறையும் நீங்கி நல்லிணக்கம் செழித்திட இயேசு பெருமகனாரின் போதனைகள் வழிகாட்டட்டும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    அமைதி, பொறுமை, இரக்கம், இன்னா செய்தாருக்கும் நன்மையே செய்யும் நற்குணம் ஆகியவற்றின் பேருருவமான இயேசு பிரானின் வழியைப் பின்பற்றி நடக்கும் கிறித்தவப் பெருமக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நாள் வாழ்த்துகள்.

    உலகெங்கும் வெறுப்பும், வன்முறையும் நீங்கி நல்லிணக்கம் செழித்திட இயேசு பெருமகனாரின் போதனைகள் வழிகாட்டட்டும்.

    அன்பே வெல்லட்டும், உலகை ஆளட்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
    • அன்பு, கருணை, மனிதநேயம், சகோதரத்துவம், தியாகம் ஆகியவற்றை மனித குலத்துக்குப் போதித்தவர் இயேசு கிறிஸ்து.

    இயேசு உயிர்த்தெழுந்த இந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டராக கொண்டாடி வருகின்றனர். அதன்படி இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலிகள் நடந்தன.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள ஈஸ்டர் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

    அன்பு, கருணை, மனிதநேயம், சகோதரத்துவம், தியாகம் ஆகியவற்றை மனித குலத்துக்குப் போதித்தவர் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாக ஈஸ்டர் திருநாளை உவகையுடன் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது.
    • ஈஸ்டர் நாளில் மட்டும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்படாது என அதிபர் புதின் தெரிவித்தார்.

    மாஸ்கோ:

    உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனால் இதில் உறுதியான உடன்பாடு எட்ட முடியவில்லை.

    இந்நிலையில், ஈஸ்டர் நாளில் மட்டும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்படாது என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அதிபர் புதின் கூறுகையில், இன்று (ஏப். 19) மாலை 6 மணி முதல் (ரஷிய நேரப்படி) நாளை (ஏப். 20) நள்ளிரவு 12 மணிவரை தற்காலிக போர் நிறுத்தம் நிலவும் என குறிப்பிட்டுள்ளார்.

    ரஷியாவை போலவே உக்ரைன் தரப்பும் இந்தக் காலகட்டத்தில் சண்டையில் ஈடுபடக் கூடாது என்பதை தாங்கள் எதிர்பார்க்கிறோம் என ரஷிய மாளிகை தெரிவித்துள்ளது

    • அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியோடு ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட முடிகிறது.
    • இனி வருகிற காலங்களில் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செயல்படும்.

    ஈஸ்டர் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் விவரம் வருமாறு:-

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை:

    உலகெங்கிலும் வாழும் கிறிஸ்துவ பெருமக்கள் இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்த நிகழ்வினை நோன்பிருந்து கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் திருநாள். கிறிஸ்துவ சமுதாயத்து மக்கள் இந்நாளில் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை ஏழை எளியோருக்கு அன்பளிப்பாக அளிக்கின்றனர். இதனால், அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியோடு ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட முடிகிறது.

    கிறிஸ்துவ சமுதாயமே மக்கள் மீது அன்பும், பரிவும் காட்டுவதில் அளப்பரிய பங்காற்றி வருகிறது. முதியோர் இல்லங்கள், ஏழை, எளியவர்களுக்கு இலவச கல்வி, மருத்துவ உதவிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு புகலிடம் வழங்குவது ஆகியவை இச்சமுதாயத்தின் மிகச் சிறந்த நற்பணிகளாக விளங்கி வருகின்றன. இயேசு பிரான் போதித்த அன்பை மாறாமல் பின்பற்றுகிற கிறிஸ்துவ சகோதரர்களை மனம் திறந்து பாராட்ட விரும்புகிறேன்.

    கிறிஸ்துவ சிறுபான்மை சமுதாயத்தினர் ஒன்றிய பா.ஜ.க. அரசால் பாரபட்சத்தோடு நடத்தப்பட்டு பல்வேறு கொடுமைகளுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகி வருகிறார்கள். அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் இவர்களுக்கு மறுக்கப்படுகிறது.

    மதநல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள காங்கிரஸ் கட்சி கிறிஸ்துவ சமுதாயம் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு ஆதரவாக எப்போதும் செயல்பட்டு வருகிறது. இனி வருகிற காலங்களில் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செயல்படும்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:

    அன்பு, மன்னிப்பு ஆகியவற்றை மட்டுமே போதித்தவரான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் உலகெங்கும் உள்ள கிறித்துவ சொந்தங்கள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேரமுண்டு என்று எல்லாவற்றிற்கும் ஒரு காலம் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற விவிலிய வாக்குதத்தின்படி குறித்து வைக்கப்பட்ட நேரத்தில், முக்கியமாக குறித்த காரியம் நடைபெற்றே தீர வேண்டும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் அருளப்பட்டிருக்கிறது. அதன்படி, அனைத்து மக்களுக்கும், அனைத்து நன்மைகளும் நடக்க வேண்டிய நேரத்தில் நிச்சயமாக நடந்தே தீரும் என்பது உறுதி.

    இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டதும், பின்னர் உயிர்த்தெழுந்து வந்ததும் தனிமனிதரின் வாழ்க்கை அனுபவமல்ல. அது உலகிற்கே சொல்லப்பட்ட பாடம் ஆகும். வாழ்க்கையில் எப்போதும் நன்மையையே செய்யுங்கள்; அதனால் இடையில் சோதனைகள் வந்தாலும் நிறைவில் நன்மையே நடக்கும் என்று உலக மக்களுக்கு நற்செய்தி சொல்வதற்கான நிகழ்வு தான் புனித வெள்ளியும், உயிர்த்தெழுதல் திருநாளும் ஆகும். அதுமட்டுமின்றி, இருள் விரைவாகவே நீங்கும் என்பதும் ஈஸ்டர் திருநாள் சொல்லும் செய்தியாகும்.

    ஈஸ்டர் திருநாளின் நோக்கத்தைப் போலவே தமிழ்நாட்டு மக்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர வேண்டும்; வளர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவை பெருக வேண்டும் என்று கூறி, கிறித்தவ சொந்தங்களுக்கு மீண்டும் ஒருமுறை ஈஸ்டர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்:

    ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்று போதித்தவரான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளை கொண்டாடும் கிறித்துவ மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உலகின் இன்றையத் தேவை கருணை, சகிப்புத் தன்மை, மன்னிக்கும் குணம், அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுதல் ஆகியவை தான். அதை வலியுறுத்தும் திருநாள் தான் ஈஸ்டர் திருநாள் ஆகும்.

    ஈஸ்டர் நாளில் பரிசளிக்கப்படும் முட்டைகளில் இனிப்புகளும், மிட்டாய்களும் நிறைந்திருக்கும். அவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவை. மாறாக, சமூகத்திற்கு வழங்கப்படும் ஈஸ்டர் முட்டைகளில் அன்பு, கருணை, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை ஆகியவை நிறைந்திருக்க வேண்டும். அது தான் ஒட்டுமொத்த உலகத்தையும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும்.

    ஈஸ்டர் திருநாள் தெரிவிக்கும் செய்தியை பின்பற்றும் வகையில் நாம் அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும்; தவறு செய்தவர்களை மன்னிக்க வேண்டும். அத்துடன், உலகம் ஒரு குடும்பமாக வாழ்வதற்கு தேவையான அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகவும், அமைதி, வளம், மகிழ்ச்சி ஆகியவை தழைக்க பாடுபடுவதற்கு அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வோம்.

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ:

    மூப்பர்களாலும், வேத பாலகர்களாலும் பழி தூற்றப்பட்டு, இயேசுவின் தலையில் முள்முடி சூட்டி, கன்னத்தில் அறைந்து, வாரினால் அடித்துச் சித்திரவதை செய்து, கபாலஸ்தலம் எனும் கொல்கொதாவில், ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று, சிலுவையில் அறையப்பட்டு, மனிதகுலத்தின் அவலத்தைப் போக்க, இரத்தம் சிந்திய கிறிஸ்து இயேசுநாதர், மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்த உன்னதத்தை, ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவப் பெருமக்கள் கொண்டாடுகின்றனர்.

    கொடுந்துயரில் தவிப்பவர்களுக்கும், மரண இருளில் கலங்குகின்றவர்களுக்கும், அநீதியின் பாரத்தால் நசுக்குண்டவர்களுக்கும், விடியலும் நீதியும் ஒருநாள் உதிக்கவே செய்யும் என்ற நம்பிக்கையை அவர்களது மனங்களில் ஈஸ்டர் வழங்குகிறது.

    இயேசு உயிர்த்தெழுந்தார், துக்கத்தில் இருந்து உலகம் மீண்டது. அதுபோலவே, ஈழத்திலும் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், சுதந்திர தமிழ் ஈழ தேசத்தை மலர்விக்கவும், இந்த ஈஸ்டர் திருநாளில், தமிழ்க்குலம் உறுதி எடுக்கட்டும்.

    அன்பையும் கருணையையும் போற்றும் கிறிஸ்தவப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:

    தியாகச்சுடர் இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடி

    மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ஈஸ்டர் திருநாள் நல்வாடிநத்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்பின் அடையாளமாக விளங்கும் இயேசுபிரான், கொடூரமான முறையில் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினம் ஈஸ்டர் திருநாளாக உலகெங்கிலும் உள்ள

    கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது.

    இந்நாளில் கிறிஸ்துவர்கள் தேவாலயங்களுக்குச் சென்று அன்பின் திருவுருவான இயேசுபிரானின் கருணைகளை நினைவுகூர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் செடீநுவார்கள்.

    இயேசுபிரானின் போதனைகளான அன்பு, சகோதரத்துவம், சமாதானம், தொண்டு போன்ற உயரிய பண்புகளை அனைவரும் பின்பற்றி, வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன்

    வாடிநந்திட வேண்டுமென்ற என்ற என்னுடைய அவாவினைத் தெரிவித்துக் கொண்டு, அனைத்து கிறிஸ்துவப் பெருமக்களுக்கும் எனது ஈஸ்டர் திருநாள் நல்வாடிநத்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    சமத்துவ மக்கள் கழகம் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன்:

    கடும் சோதனைகளையும், காரிருளையும் வெற்றி கண்ட இயேசு பெருமான் உயிர்த்தெழுந்த நாளான "ஈஸ்டர் திருநாளை" மகிழ்ச்சியுடன் கொண்டாடும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

    கருணையின் அடையாளமாகவும், மனித சமுதாயம் போற்றும் மாசற்ற புனிதராகவும் திகழும் இயேசு பெருமானின் "ஈஸ்டர் திருநாள்" மனித நேயமிக்க கிறிஸ்தவப் பெருமக்கள் மகிழ்வுறும் இனிய நாள்.எத்தகைய துயரங்களையும் தாங்கும் இதயம் கொண்ட இயேசு பெருமானின் மன தைரியத்துடன் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் "சுய சுகாதார பாதுகாப்புடனும்" மகிழ்ச்சியுடனும் "ஈஸ்டர் திருநாளை" கொண்டாடிட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    • தன் படைப்புகள் எல்லாவற்றையும் அனுபவிக்க, மனிதனைப் படைத்தார்.
    • கடவுள், மனிதர்களை நல்வழிப்படுத்த இறைவாக்கினர்களை அனுப்பினார்.

    உலகம் எங்கும் உள்ள கிறிஸ்தவ மக்கள், சிலுவையில் அறையப்பட்டு இயேசு மரித்த நாளை புனித வெள்ளி (இன்று) யாக அனுசரிக்கிறார்கள். இந்த நேரத்தில் இயேசு யார்? அவர் எதற்காக தன் உயிரைக் கொடுத்தார்? அதற்கு பின்னால் இருக்கக்கூடிய அடிப்படையான காரணத்தைப் பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.


    இறைவன் இந்த உலகைப் படைத்தார். தன் படைப்புகள் எல்லாவற்றையும் அனுபவிக்க, மனிதனைப் படைத்தார். அந்த மனிதனை, தன் சாயலில் இருக்கும்படியாகவே உருவாக்கினார். ஆனால் மனிதனோ, இறைவன் செய்த நன்மைகளை மறந்து வழிதவறிச் சென்றான்.

    இதை அறிந்த கடவுள், அவனை நல்வழிப்படுத்த இறைவாக்கினர்களை அனுப்பினார். அவர்கள் சொன்னதையும், மனிதர்கள் கேட்கவில்லை. எனவே கடவுள் தம் ஒரே மகனான இயேசுவை பூமிக்கு அனுப்பினார். இதனையே ``கடவுள் தம் ஒரே மகனையே அனுப்பும் அளவுக்கு உலகின் மீது அன்பு கூர்ந்தார்" என்று விவிலியத்தில் வாசிக்கிறோம்.

    மனிதர்களை நல்வழிக்கு திருப்பும் இந்த திட்டப்படி, இயேசுவானவர் கன்னி மரியாளின் வயிற்றில் தூய ஆவியால் கருவுற்றார். பெத்லகேமில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். நாசரேத்தில் வளர்ந்து பொதுப்பணி செய்தார். அதுவும் தேவையில் இருக்கும் மக்களைத் தேடிச் சென்று உதவினார். 'சிறைபட்டோர் விடுதலை அடையவும், பார்வையற்றோர் பார்வை பெறவும்' தன்னை அர்ப்பணித்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்றார். சட்டத்தை தூக்கிப் பிடித்த யூத சமூகத்தினரிடம், மனிதத்தை மையப்படுத்தும்படி வலியுறுத்தினார். அதனால் யூதர்களின் பெரும் எதிரியாக சித்தரிக்கப்பட்டார்.

    தன்னோடு இருந்த சீடர் ஒருவரால், காட்டிக் கொடுக்கப்பட்டார். அதற்கு முன்பாக இயேசு, தன்னுடைய சீடர்களின் பாதங்களை கழுவினார். இதன் மூலம் 'பணிவிடை பெறுபவன் அல்ல.. பணிவிடை புரிபவனே தலைவன்' என்ற தத்துவத்தை முன்னிறுத்தினார்.

    இயேசுவை கைது செய்தவர்கள், அவர் தலையில் முள் கிரீடம் சூட்டி, சிலுவையை சுமக்க வைத்தனர். அப்போது பல அருவருக்கத்தக்க செயல்களைச் செய்து, இயேசுவை துன்புறுத்தினர்.

    ஆனால் இயேசு, அவை அனைத்தையும் கோபம் கொள்ளாது ஏற்றுக்கொண்டதுடன், "தந்தையே.. இவர்களை மன்னியும்" என்று தன்னை துன்புறுத்தியவர்களுக்காக இறைவனிடம் மன்றாடினார். இயேசு, தன்னுடைய உச்சக்கட்ட அன்பை வெளிப்படுத்திய தருணம் இது.

    பிலாத்து என்பவன் இயேசுவிடம் , "அப்படியானால் நீ அரசன்தானோ?" என்று கேட்டான். அதற்கு இயேசு, "அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன். இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்"என்று பதில் கூறினார் (யோவான்: 18:37). இவ்வாறு மக்களிடையே இருந்த ஒவ்வொரு தருணத்திலும், உண்மையை மக்களுக்கு அறிவித்தபடியே இருந்தவர் இயேசுபிரான்.

    அன்பால் மக்களை தன்வசப்படுத்தி, உண்மையின் பக்கம் நின்று, அநீதிக்கு எதிராக குரல் கொடுத்த இயேசு ஒரு புரட்சியாளர். அவரை பின்பற்றும் நாமும் உண்மையின் பக்கம் நிற்போம்!

    பகைவரையும் அன்பு செய்வோம்! அதுதான் இயேசுவின் ரத்தம் சிந்தப்பட்ட, 'புனித வெள்ளி' தினத்திற்கு பெருமை சேர்ப்பதாக அமையும்.

    • இயேசுவும் அவரது பன்னிரெண்டு சீடர்களும் பாஸ்காவைக் கொண்டாடினர்.
    • இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், ஜீவிக்கிறார்.

    ஈஸ்டர் பண்டிகை என்பது இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் கொண்டாட்டமாகும். 'ஈஸ்டர்' என்ற வார்த்தை 'ஆல்பா' என்ற லத்தீன் சொல்லில் இருந்து உருவானது. இதற்கு 'விடியல்' என்று பொருளாகும். இது ஜெர்மன் மொழியில் 'ஈஸ்டாரம்' என்றும், ஆங்கிலத்தில் 'ஈஸ்டர்' என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு 'உயிர்த்தெழுதல்' என்பது பொருளாகும்.

    இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூர்வதற்கு ஐரோப்பாவில் வர்ணம் பூசப்பட்ட மற்றும் அலங்கரிக்கப்பட்ட முட்டைகளின் பயன்பாடு 13-ம் நூற்றாண்டு முதல் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இதையடுத்து, உயிர்த்தெழுதலின் அடையாளமாக முட்டை மாறியது. இயேசு கல்லறையில் இருந்து எழுந்தது போல், முட்டை ஓட்டில் இருந்து வெளிப்படும் குஞ்சு புதிய வாழ்க்கையை குறிக்கிறது.

    ஆர்த்தடாக்ஸ் பாரம்பரியத்தில், சிலுவையில் இயேசு சிந்திய ரத்தத்தின் அடையாளமாக முட்டைகளுக்கு சிவப்பு வண்ணம் பூசப்படுகிறது. இந்த முட்டையினுள் வண்ண வண்ண சாக்லெட்கள் குழந்தைகளை மகிழ்விக்கும் படி இருக்கும்.

    ஈஸ்டர் என்பது, 'பாஸ் ஓவர்' நிகழ்வை நினைவுகூரும் பாஸ்கா பண்டிகைக்கு ஒப்பானதாகும். இது இஸ்ரவேலர்கள், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று, எகிப்தை விட்டு புறப்படும் போது, கடவுள் எகிப்தில் இஸ்ரவேலர்களின் வீட்டு நிலைகளில் ரத்தம் பூசப்பட்ட வீடுகளை 'கடந்து சென்றதன்' நினைவாகக் கொண்டாடப்படுகிறது. இதை யூதர்கள் இன்றளவும் முக்கியமான நிகழ்வாக கொண்டாடி வருகின்றனர்.

    இயேசுவும் அவரது பன்னிரெண்டு சீடர்களும் பாஸ்காவைக் கொண்டாடினர். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, அப்பம், திராட்சை ரசத்தை சீடர்களுக்கு கொடுத்து நற்கருணை திருவிருந்து என்னும் உடன்படிக்கையை உருவாக்கிய கடைசி இரவு உணவு - பாஸ்காவின் முதல் நாளுக்கான பாரம்பரிய உணவாகும்.

    இயேசு சிலுவையில் அறையப்பட்டு, ரத்தம் சிந்தி மரித்ததை நினைவுகூரும் நிகழ்வு தான் இப்போது ஆலயத்தில் கடைப்பிடிக்கப்படும் நற்கருணை, திருவிருந்து ஆகும். இயேசுவின் உயிர்த்தெழுதல் தரும் நம்பிக்கை என்பது நம் ஒவ்வொருவருக்கும் நித்திய வாழ்வு உண்டு என்பது தான்.

    இன்றைக்கு நம் ஒவ்வொருவரையும் வாட்டிக்கொண்டிருக்கும் பயங்கள் பலவிதம். அது மரணத்தைக் குறித்த பயமாக இருக்கலாம். அல்லது வியாதியால் மரணம் வந்துவிடுமோ என்ற அச்சமாக இருக்கலாம். அல்லது எதிர்காலத்தைக் குறித்த பயமாக இருக்கலாம். இவ்வாறு ஒவ்வொருவரையும் பலவிதமான பயங்கள் ஆட்டிப் படைக்கிறது.

    ஒரு காரியத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன். நமது பயத்தை நீக்குகிறவர் இயேசு கிறிஸ்து, அதனால் தான் வேதாகமத்தில் 365 முறை 'பயப்படாதே' என்று கூறப்பட்டுள்ளது. நமது பயத்தை அவர் சந்தோஷமாக மாற்றுகிறார் எப்படி?

    "இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகலநாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்" என்றார் (மத்.28:20). அல்லேலூயா! ஆமேன்.

    இன்றைக்கு உலக வாழ்வில் ஒவ்வொரு நொடியும் மனிதன் வாழ்விலிருந்து மரணத்தை நோக்கி ஒடிக்கொண்டிருக்கிறான். ஆனால் இயேசு சொல்லுகிறார், மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல, அது ஒரு வாசல்.

    நிலையற்ற வாழ்க்கையிலிருந்து நித்திய வாழ்க்கைக்குள்ளாக கடந்து செல்லுகிற ஒரு வாசல் என்று சொல்லுகிறார். அது எப்படி உண்மை என்பதை தன்னுடைய உயிர்த்தெழுதலினாலே அவர் நிரூபித்தார்.

    மனிதனாய் பிறந்தார், மாம்சமும் ரத்தமும் உடையவராய் வாழ்ந்தார், அவர் மகிமையின் சரீரத்தோடு எழுந்திருக்கும்போது எனக்கும் அதே நம்பிக்கை உண்டு. மறுமை ஒன்று உண்டு, அது நிச்சயம் என்கிற அந்த உண்மையை இயேசுவின் உயிர்த்தெழுதல் இந்த உலகிற்கு காட்டியது.

    இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு உன்னதமான நம்பிக்கையை தருகிறது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தது போல நாமும் இம்மையில் மரித்தாலும், மகிமையில் நிச்சயமாக உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கை தான் அது, ஆம் இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், ஜீவிக்கிறார்.

    இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் பிறருக்கு அவர் செய்த அன்பான சேவையின் முன் மாதிரியை பின்பற்றுவதன் மூலம் நாம் அவருக்கு நன்றி செலுத்தி, உயிர்த்தெழுதல் நினைவை கொண்டாடி, தேவைப்படுவோருக்கு உதவி செய்து மகிழ்ச்சியடைவோம். 

    • ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3-வது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது
    • தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஈஸ்டர் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

    சென்னை:

    உலகில் அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும் என்று போதித்த ஏசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3-வது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஈஸ்டர் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தொழில் அதிபர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    • கிறித்துவப் பெருமக்களுக்கு ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நன்னாளில் எனது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
    • அன்பும் சகோதரத்துவமும் ஒற்றுமையும் மேலோங்கும் சமுதாயம் தழைக்க இந்நன்னாளில் உறுதியேற்போம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    உலக மக்களின் நலனுக்கான நற்கருத்துகளைப் போதித்த கருணாமூர்த்தியான இயேசு பெருமானின் அடியொற்றி நடக்கும் கிறித்துவப் பெருமக்களுக்கு ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நன்னாளில் எனது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

    அன்பும் சகோதரத்துவமும் ஒற்றுமையும் மேலோங்கும் சமுதாயம் தழைக்க இந்நன்னாளில் உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புதிய நெருப்பு உண்டாக்கப்பட்டு திருப்பலியில் கலந்து கொண்ட அனைவரும் அந்த நெருப்பினை கொண்டு மெழுகுவர்த்தியை ஏற்றி பாஸ்கா திருவிழிப்பு ஜெயவழிபாடு நடத்தினர்.
    • தேவாலயத்தில் ஆலயமணி ஒலிக்க கூடியிருந்த மக்கள் கரவொலி எழுப்பியும், வானவேடிக்கைகள் வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர்.

    திண்டுக்கல்:

    கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலத்தை தொடர்ந்து ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாகவும், அவர் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாகவும், கொண்டாடி வருகின்றனர். அதன்படி இன்று திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் 350 ஆண்டுகள் பழமைவாய்ந்த புனித வியாகுல அன்னை பேராலயத்தில் நள்ளிரவில் ஈஸ்டர் தின வழிபாடு நடைபெற்றது.

    இரவு 11 மணிக்கு தொடங்கிய திருப்பலியில் புதிய நெருப்பு உண்டாக்கப்பட்டு திருப்பலியில் கலந்து கொண்ட அனைவரும் அந்த நெருப்பினை கொண்டு மெழுகுவர்த்தியை ஏற்றி பாஸ்கா திருவிழிப்பு ஜெயவழிபாடு நடத்தினர். அதனைதொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் ஆலயத்தின் நடுவே அமைக்கப்பட்டிருந்த பூமியின் நடுவே மரித்த ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அப்போது தேவாலயத்தில் ஆலயமணி ஒலிக்க கூடியிருந்த மக்கள் கரவொலி எழுப்பியும், வானவேடிக்கைகள் வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர்.

    மேலும் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். ஈஸ்டர் தின சிறப்பு திருப்பலியை மேட்டுப்பட்டி பங்குத்தந்தை செல்வராஜ் தலைமையில் உதவிபங்குத்தந்தை ஆரோக்கியம், அருட்தந்தையர்கள் அருமைசாமி, லாரன்ஸ், பீட்டர்ராஜ், ஆரோக்கியம், கப்புசின்சபை ஆகியோர் நிறைவேற்றினர். மேலும் அருட்சகோதரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவில் ஈஸ்டர் தின சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.


    • இரவு 11.40 மணிக்கு ஆலயத்தின் வெளியே பிரமாண்ட பாஸ்கா மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது.
    • உணவு பொருட்களை வழங்கி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடினர்.

    கடலூர்:

    ஈஸ்டர் தினத்தை யொட்டி கடலூரில் உள்ள தேவால யங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இயேசு கிறிஸ்து சிலுவை யில் அறையப்பட்டு 3-ம் நாள்உயிர்த்தெழுந்தார். அந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் தினமாக கொண்டாடுகின்றனர். இதைமுன்னிட்டு, கடலூர் கார்மேல் அன்னை ஆலயத்தில் நள்ளிரவு அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. இரவு 11.40 மணிக்கு ஆலயத்தின் வெளியே பிரமாண்ட பாஸ்கா மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்திகளில் புதிய தீபத்தை ஏந்திக்கொண்டு தேவலாயத்துக்குள் சென்றனர். 12 மணிக்கு இயேசு உயிர்த்தெழுந்ததை நினைவு கூர்ந்ததை விளக்கும் விதமாக தேவலாயத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஜொலித்தன.

    பின்னர் பங்கு தந்தை தலைமையில் கிறிஸ்தவர்கள் கைகளில் புதிய தீபத்தை ஏந்தி சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தினர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து காலையில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. புதிய மெழுகு தீபத்தை அணையாமல் வீட்டுக்கு கொண்டு சென்றனர். 40 நாட்கள் தவக்காலம் முடிந்து புத்தாடைகள் அணிந்து இனிப்பு, உணவு பொருட்களை வழங்கி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடினர். இதேபோன்று கடலூர் சப்- ஜெயில் சாலையில் உள்ள தூய எபிபெனி ஆலயம், பாரதி சாலையில் உள்ள ஆற்காடு லூத்தரன் திருச்சபை, செம்மண்டலம் பாவநாசர் ஆலயம் உள்ளிட்ட பல தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    • கடந்த பிப்ரவரி 22-ந்தேதி சாம்பல் புதன் வழிபாட்டுடன் தவக்காலம் தொடங்கியது.
    • பனிமய மாதா பேராலயத்தில் இயேசுபிரான் உயிர்த்தெழும் நிகழ்வு தத்துரூபமாக நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாள் தவக்காலம் அனுசரிக்கின்றனர்.

    இந்த ஆண்டு தவக்காலம் கடந்த பிப்ரவரி 22-ந்தேதி சாம்பல் புதன் வழிபாட்டுடன் தொடங்கியது. இயேசு உயிர் துறந்த புனித வெள்ளி நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்ததை கொண்டா டும் ஈஸ்டர் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாப்பட்டது.

    தூத்துக்குடி

    ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் இயேசுபிரான் உயிர்த்தெழும் நிகழ்வு தத்துரூபமாக நடைபெற்றது. பின்னர் பங்குத்தந்தை குமார்ராஜா தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இதையொட்டி ஏராளமான கிறிஸ்தவ மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்ளில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு கத்தோலிக்க ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல் சி.எஸ்.ஐ. ஆலயங்களில் இன்று அதிகாலை ஈஸ்டர் பண்டிகை சிறப்பு ஆராதனையும், திருவிருந்து ஆராதனையும் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஈஸ்டர் பண்டிகையை யொட்டி நேற்று இரவு 11.30 மணிக்கு தூய சவேரியார் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    தென்காசி மாவட்டத்தில் இன்று அதிகாலையில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பெருவிழா சிறப்பு நிகழ்ச்சிகள் கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்றது. பாவூர்சத்திரம் சி.எஸ்.ஐ . ஆலயத்தில் சேகர குருவானவர் டேனியல் தனசன் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு ஆராதனை நடத்தினார்.

    அனைவருக்கும் கேக் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதேபோல் பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் தேவாலயத்தில் பங்கு தந்தை ஜேம்ஸ் அடிகளார் சிறப்பு திருப்பலி நடத்தினார். இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    புனித லூர்து அன்னை

    தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை இன்று காலை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டனி தலைமையில் பங்குத் தந்தை ஆன்றனி புருனோ பெருவிழா திருப்பலி நிறைவேற்றினார். இதில் இயேசு உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நடைபெற்றது. அப்போது, கிறிஸ்துவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, இயேசு பிறப்பை வரவேற்றனர். இதில் ஆயிரக்கணக்காக கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.

    புனித லூர்து அன்னை ஆலயத்தில்  சிறப்பு திருப்பலி நடைபெற்றபோது எடுத்த படம்.

    புனித லூர்து அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றபோது எடுத்த படம்.


     


    • ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.
    • ஏசு மீண்டும் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.

    திருவாரூர்:

    ஏசு சிலுவையில் அறைந்த தினமான புனிதவெள்ளி சிறப்பு பிரார்த்தனை கடந்த 7-ந் தேதி உலகம் முழுவதும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நடந்தது.

    இதில் ஏசு இறந்ததை போன்று அவரது சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

    அதையடுத்து ஏசு மீண்டும் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.

    இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மற்றும் நேற்று காலையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    அதன்படி திருவாரூர் புனித பாத்திமா அன்னை ஆலயம் உள்பட பல்வேறு தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடந்தது.

    இதில் திருவாரூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் பகுத்தறி மாணிக்கம் அந்தோணியார் ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

    ×