என் மலர்
நீங்கள் தேடியது "மும்மொழி கல்வி"
- துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடத்த அனைவருக்கும் வேந்தர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
- பல்கலைக்கழகங்களில் சிண்டிகேட் கூட்டம் கடைசியாக கடந்த 20.4.2023-ல் நடைபெற்றது.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வரலாறு தெரியாமல் அரைகுறையாக படித்ததை வைத்து, நடப்பு நிகழ்வுகள் தெரியாமல் பேட்டி அளித்து வருகிறார். அண்ணாமலை விரும்பினால் அவர் சென்னையில் எந்த இடத்தில், எப்போது சந்தித்து விவாதிக்க வேண்டும் என்று சொல்கிறாரோ, அங்கு நான் அவரோடு கலந்து கொண்டு விவாதிக்க தயாராக உள்ளேன். வருகிற 5-ந் தேதி துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடத்த அனைவருக்கும் வேந்தர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் மும்மொழி கல்வி திட்டம் குறித்து விவாதிப்பதற்காக அனைவரும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இணை வேந்தரான எனக்கோ, தமிழக அரசுக்கோ இதுவரை இது தொடர்பாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அண்ணாமலை பேசும்போது இது எல்லாம் அரசுக்கு தெரியும் என்று தவறான தகவலை தெரிவித்து வருகிறார். பல்கலைக்கழகங்களில் சிண்டிகேட் கூட்டம் கடைசியாக கடந்த 20.4.2023-ல் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் சிண்டிகேட் உறுப்பினர் பரந்தாமன் கலந்து கொள்ளவில்லை.
ஆனால் அண்ணாமலை தவறான தகவலை தெரிவித்து வருகிறார்.இந்த கூட்டத்திற்கு பின்பு தான் அந்த பொறுப்பில் சிண்டிகேட் உறுப்பினராக அவரை இணைத்துக் கொண்டார். தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் எங்களுடைய பிரதான நோக்கமாக உள்ளது. எப்போதும் தமிழகத்தில் இரு மொழி கொள்கையை நாங்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் பல மொழிகளை படிக்கும் போது மாணவர்கள் தேர்வு எழுதுவதில் பல சங்கடங்கள் ஏற்படுகிறது. அவற்றை தவிர்ப்பதற்காகத்தான் இரு மொழி கொள்கையை நாங்கள் கட்டாயப்படுத்தி வருகிறோம். சமஸ்கிருதம், இந்தி படித்தால் அதிக ஊக்கத்தொகை கொடுக்கப்படும் என்று புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. வேறு எந்த மாநில மொழிகளுக்கும் இந்த சலுகை அறிவிக்கப்படவில்லை. தமிழுக்கு எந்த சலுகையும் புதிய கல்விக் கொள்கையில் இடம் பெறவில்லை. ஆனால் அண்ணாமலை தமிழுக்கு நாங்கள் என்ன செய்து விட்டோம் என்று எங்களை பார்த்து கேட்கிறார்.
தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை தி.மு.க. அரசு தொடர்ந்து அளித்து வருகிறது. கோவிலில் சமஸ்கிருதம் வேண்டாம் தமிழ் போதும் என்று அண்ணாமலை சொல்வாரா? இவர்கள் நோக்கம் எல்லாம் இந்தியாவில் சமஸ்கிருதமும், இந்தியும் திணிக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். சி.பி. எஸ்.இ. பாடத்திட்டத்தில் கூட ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழ்ெமாழிக்கு எந்த முன்னுரிமையும் அளிக்கப்படவில்லை. 3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இவ்வாறு பொது தேர்வு வைப்பதால், அதிக அளவு மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தல் ஏற்படும். இதனை தவிர்க்கவே நாங்கள் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். கல்வி வளர்ச்சியில் திராவிட மாடல் ஆட்சியில் சாதனைகள் அதிகம். கடந்த 2 ஆண்டுகளில் பல சாதனைகளை தி.மு.க. அரசு செய்து வருகிறது. ஆனால் அண்ணாமலை அவற்றையெல்லாம் மறந்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார். அண்ணாமலை விரும்பினால் நான் அவருடன் சென்னையில் ஒரே இடத்தில் பட்டிமன்றம் நடத்தவும் தயாராக இருக்கிறேன். எல்லாவற்றையும் தி.மு.க. சந்திக்க தயாராக உள்ளது. இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.
- மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?
- அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?
புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதான் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சரின் கருத்து தமிழ் நாடு அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய அமைச்சர் கருத்துக்கு தமிழ் நாட்டில் கடும் கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?
ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?
மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே.
ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளும் பங்கேற்க உள்ளன.
- மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்?
சென்னையில், தி.மு.க. கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கண்டன ஆர்ப்பாட்டம் நாளை மாலை 4 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறுகிறது.
தமிழ் நாட்டின் மீது மும்மொழி கொள்கையை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளும் பங்கேற்க உள்ளன.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள துரைமுருகன், "மும்மொழி பின்பற்ற தமிழ் நாடு அரசை மத்திய அரசு மிரட்டடுகிறது. வீழ்த்த முயன்றால் தமிழ்நாடு ஒன்றிணையும், எதிரி எந்த வடிவத்தில் வந்தாலும் வீழ்த்தும். மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்? என உரக்க குரல் எழுப்புவோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- நிதியை வழங்க கோரி தமிழக அரசு இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
- இப்போது உள்ள இளைஞர்கள் தி.மு.க.வை பார்த்து அவர்கள் பின்னால் போகக்கூடியவர்கள் அல்ல.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (சமக்ர சிக்ஷா அபியான்) கீழ் தமிழக அரசுக்கு நடப்பாண்டில் ஒதுக்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடி நிதியை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை. மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் தமிழக அரசு இணைய கையெழுத்திட்டால் மட்டுமே நிதி ஒதுக்க முடியும் என தெரிவித்துவிட்டது.
பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் இணைந்தால், அது தேசியக் கல்விக் கொள்கையையும், மும்மொழி கொள்கையையும் ஏற்றுக் கொண்டதாகிவிடும் என்பதால், அதில் தமிழக அரசு இணையவில்லை. இருப்பினும் நிதியை வழங்க கோரி தமிழக அரசு இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
மத்திய மந்திரி தர்மேந்திரபிரதான், மும்மொழி கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியை தர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
புதிய கல்விக்கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கின்ற கல்வி. தாய்மொழியை ஊக்குவிக்கின்ற கல்வியை எதற்காக எதிர்க்க வேண்டும்.
தி.மு.வி.னர் நடத்தும் பள்ளிகளில் தமிழ் சொல்லிக்கொடுக்கிறார்களா? அரசியலுக்காக போலி வேஷம் போட்டுவிட்டு, புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறது. தி.மு.க.வின் அரசியலுக்காக மாணவர்களை பலியாக்கக்கூடாது.
இது 1965 அல்ல. அவர்கள் மொழியை வைத்து ஆட்சிக்கு வந்த காலம் அல்ல.
இப்போது உள்ள இளைஞர்கள் உலகத்தை பார்த்த இளைஞர்கள். தி.மு.க.வை பார்த்து அவர்கள் பின்னால் போகக்கூடிய இளைஞர்கள் அல்ல.
நாட்டின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்ற இளைஞர்கள் என்று கூறினார்.
- இந்தியை திணிக்கிறோம் என்ற திணிப்பை நீங்கள் தான் கொடுக்கிறீர்கள்.
- குழந்தைகள் படிக்க விரும்புகிறார்கள், பெற்றோர் படிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பல பள்ளிகளில் மும்மொழிக்கொள்கை இருக்கும்போது அரசாங்க பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மட்டும் ஏன் மும்மொழிக்கொள்கை மறுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் எத்தனை பள்ளிகளில் மும்மொழிக்கொள்கை பின்பற்றப்படுகிறது என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு சொல்லுங்கள்.
உங்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், பிரபலங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் எல்லாவற்றிலும் மும்மொழிக்கொள்கை இருக்கிறது. இந்தி இருக்கிறது. நான் இந்தி என்று சொல்லவில்லை. 3-வது ஒரு இந்திய மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறோம். அதை 8 வயதிற்குள் கற்றுக்கொள்ள ஆரம்பித்தால் மொழியை அதிகம் கற்றுக்கொள்ளலாம்.
மாறி வரும் உலகத்தில், சாவல் நிறைந்த உலகத்தில் இன்னொரு மொழி தெரிந்தால் என்ன? குழந்தைகள் படிக்கிறேன் என்று சொல்கிறார்கள் உங்களுக்கு என்ன பிரச்சனை?
படிப்பு என்றாலே உங்களுக்கு பிரச்சனை தான். தி.மு.க.விற்கும், திராவிட மாடலுக்கும் படிப்பு என்றாலே பிரச்சனை தான்.
படிப்பில் நீங்கள் ஏன் பிரச்சனை செய்கிறீர்கள். குழந்தைகள் படிக்க விரும்புகிறார்கள், பெற்றோர் படிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
கேந்திரிய வித்யாலயாவில் இந்தி சொல்லிக்கொடுப்பத்தால் அங்கு சேர்க்கிறோம் என்று சொல்கின்ற பெற்றோர் இருக்கிறார்கள்.
நாங்கள் இந்தியை திணிக்கவில்லை. இந்தியை திணிக்கிறோம் என்ற திணிப்பை நீங்கள் தான் கொடுக்கிறீர்கள்.
இன்னொரு மொழியை அரசு பள்ளி மாணவர்கள் படிப்பதை இறுமாப்புடன் இவர்கள் மறுக்கிறார்கள்.
சாமானிய மக்களை படிங்கள் என்று சொல்வது ஆணவமா? சாமானிய மக்களை நாங்கள் படிக்க விடமாட்டோம் என்று சொல்வது ஆணவமா?
இந்த அரசாங்கம் தான் ஆணவத்தோடு செயல்படுகிறது. இதை பா.ஜ.க. கட்சி தெளிவாக எடுத்துச்சொல்வோம்.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆக்டிங்கில் இருக்கிறாரா, ஷூட்டிங்கில் இருக்கிறாரா என்று தெரியவில்லை.
ஆக்டிங், ஷூட்டிங் செய்தால் தான் மக்களை அணுக முடியும் என்ற நிலைப்பாட்டை அவர்கள் எடுத்து இருக்கிறார்கள்.
பா.ஜ.க. 2026-ஐ நோக்கி பலமாக வெற்றி நடைபோடுகிறோம்.
வாய்ப்புகளை அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுங்கள். வேலைவாய்ப்பை மற்ற குழந்தைகளுக்கு, சாமானிய மக்களுக்கு ஏற்படுத்த ஒரு மொழியை கற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு ஆற்றல் இருக்கிறது. கற்றுக்கொடுக்க கல்வித்துறை இருக்கிறது. உங்களுக்கு என்ன பிரச்சனை.
மாணவர்களின் கல்வியை பாதிப்பது மத்திய அரசு கிடையாது, தர்மேந்திர பிரதான் கிடையாது.
மாணவர்களின் கல்வியை பாதிப்பது அன்பில் மகேஷ், மு.க.ஸ்டாலின் என்று கூறினார்.
- கல்வித்துறைக்கான நிதியைத் தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்று மத்திய அரசின் கல்வி அமைச்சர் சொன்னது ஆணவத்தின் உச்சம்.
- மாநில அரசின் மொழிக்கொள்கையை வகுப்பது மாநில மக்களின் உரிமை, மாநில் அரசின் உண்மை.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மும்மொழிக் கொள்கையை ஏற்று இந்தி மொழியைக் கற்பிக்காவிட்டால் கல்வித்துறைக்கான நிதியைத் தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்று மத்திய அரசின் கல்வி அமைச்சர் சொன்னது ஆணவத்தின் உச்சம்
அவருக்குத் தமிழ்நாட்டின் வரலாறும் தெரியாது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளும் தெரியாது, அரசியல் சாசனம் உருவாகிய வரலாறும் தெரியாது என்பவற்றை அவருடயை ஆணவப் பேச்சு காட்டுகிறது
மாநில அரசின் மொழிக்கொள்கையை வகுப்பது மாநில மக்களின் உரிமை, மாநில அரசின் உண்மை
இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படுகிறது என்பது அவருக்குத் தெரியுமா?
இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஜவஹர்லால் நேரு அவர்களும் இந்திரா காந்தி அவர்களும் தந்த உறுதிமொழிகளையாவது அவருக்குத் தெரியுமா?
பாராளுமன்றம் அனுமதித்த நிதியை இந்தி மொழியைக் கற்பிக்காத மாநிலத்திற்கு தரமாட்டோம் என்று கல்வி அமைச்சர் சொல்வது பாராளுமன்றத்தை அவமதிப்பதாகும் என்று அவருக்குத் தெரியுமா?
தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்து இந்த ஆணவப் பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- தெலுங்கானாவில் நான் இருக்கும்போது விஜய் படம் தெலுங்கில் ரிலீசானது.
- மும்மொழிக்கொள்கை குழந்தைகளின் அறிவாற்றலுக்கு இருக்கக்கூடாதா?
பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தெலுங்கானாவில் நான் இருக்கும்போது விஜய் படம் தெலுங்கில் ரிலீசானது. இந்தியில் ரிலீசானது. அப்போ மும்மொழிக்கொள்கை, பல மொழிக்கொள்கை உங்கள் வியாபாரத்திற்கு இருக்கலாம். மும்மொழிக்கொள்கை குழந்தைகளின் அறிவாற்றலுக்கு இருக்கக்கூடாதா?
நீங்கள் சொன்னீர்களா? தமிழில் மட்டும் தான் என் படம் ரிலீசாகும் என்று.. நான் தமிழன்.. தமிழை போற்றுபவன்.. தெலுங்கில் ரிலீஸ் செய்யக்கூடாது. ரிலீஸ் செய்தால் நான் எதிர்ப்பேன் என்று சொல்லவில்லையே.
பலமொழிக்கொள்கை உங்களுக்கு தேவைப்படுவதைப்போல குழந்தைகளின் வருங்காலத்திற்கு பல மொழிக்கொள்கை தேவைப்படும்.
இதில் எல்லாம் நீங்கள் கருத்து சொல்லாதீங்க. நீங்கள் சொன்னால் அது சரியாக இருக்காது என்று கூறினார்.
- எந்த நிதியும் தமிழ்நாட்டிற்கு தர முடியாது என்று சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது.
- தமிழ்நாடு மக்களுடைய போர்குணம் எந்த அளவிலும் குறைந்துவிடவில்லை என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்று கூறினால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.
* எல்லா வரியையும் ஜிஎஸ்டி வழியாக வசூல் செய்து கொண்டு தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்பதா?
* எந்த நிதியும் தமிழ்நாட்டிற்கு தர முடியாது என்று சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது.
* தமிழ்நாடு மக்களுடைய போர்குணம் எந்த அளவிலும் குறைந்துவிடவில்லை என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
- மத்திய அரசு மறுபரிசிலனை செய்ய வலியுறுத்தி உள்ளார்.
- இந்தி மொழி பாடத்திட்டத்திலிருந்து அகற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஆளும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் வரை மும்மொழி கொள்கையை எதிர்ப்பதில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
அந்த வரிசையில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற முடிவை மத்திய அரசு மறுபரிசிலனை செய்ய வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, 23-01-1968 அன்று "மும்மொழிக் கொள்கை நீக்கப்பட வேண்டும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட வேண்டும், தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள பாடத்திட்டத்திலிருந்து இந்தி மொழி முழுமையாக அகற்றப்பட வேண்டும்" என்ற தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்தி மொழி பாடத்திட்டத்திலிருந்து அகற்றப்பட்டது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் இருமொழிக் கொள்கையை மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களும் கடைபிடித்தார்கள்.
தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டுமென்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டுமென்றும் குரல் கொடுத்தவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்ற சூழ்நிலையில், புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையை கடைபிடித்தால் தான் 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' (SSA) திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அவர்கள் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இது மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்குச் சமம்.
எனவே, மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற முடிவை மத்திய அரசு மறுபரிசிலனை செய்து தமிழ்நாட்டிற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- யுசிஜி புதிய விதிகளின் வரைவு அறிக்கையை திரும்ப வேண்டும் என தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன.
- கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) சமீபத்தில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசின் உரிமையை மறுக்கிறது.
அதனால் யுசிஜி புதிய விதிகளின் வரைவு அறிக்கையை திரும்ப வேண்டும் என தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இதுதவிர மத்திய அரசு தமிழ்நாடு கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2,158 கோடியை மத்திய அரசு விடுவிக்காமல் தாமதம் செய்கிறது. இது குறித்த சமீபத்திய கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தமிழ்நாட்டில் தேசிய கல்வி கொள்கையை இதுவரை ஏற்காமல் உள்ளனர். மும்மொழி கொள்கையை ஏற்காத வரை தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க இயலாது" என்று கூறினார்.
இவரது கருத்து கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும், தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு இடமே இல்லை என ஒருமித்த குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புதிய யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெறவும், மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினரை போலீசார் தடுக்க முயன்றதால் போலீசார் மற்றும் மாணவர் அமைப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
- தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் ஒரு மாணவன் கற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?
- பிரதமர் மோடியின் தேசிய கல்விக் கொள்கை, தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மாணவர்களிடையே போட்டியை உருவாக்க, சமதளத்தை உருவாக்க, நாம் ஒரு பொதுவான தளத்திற்கு வர வேண்டும். தேசிய கல்விக் கொள்கை தான் பொது தளம்.
* நான் அனைத்து மொழிகளையும் மதிக்கிறேன்.
* தேசிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால், தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் ஒரு மாணவன் கற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?
* பிரதமர் மோடியின் தேசிய கல்விக் கொள்கை, தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
* நமது நாகரிகத்தின் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ். ஆனால், தமிழ்நாட்டில் ஒரு மாணவர் கல்வியில் பன்மொழி அம்சத்தைக் கற்றுக்கொண்டால் என்ன தவறு?
* அது தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளாக இருக்கலாம். அவர்கள் மீது இந்தி அல்லது வேறு எந்த மொழியும் திணிக்கப்படவில்லை.
* மும்மொழிக்கொள்கையை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் சில நண்பர்கள் அரசியல் செய்கிறார்கள்.
* யார் அரசியல் செய்தாலும் மும்மொழிக்கொள்கையை அமல்படுத்துவதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது என்று கூறினார்.
- ஆரம்பக் கல்வியில் தாய் மொழியை ஊக்குவிப்பது தான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம்.
- மக்கள் வளர்ச்சியை முன்னேற்றத்தை விரும்புகிறார்கள்.
மதுரை:
மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மத்திய அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தொலைநோக்கு பார்வையுடன் 2047-ம் ஆண்டுக்கான அடித்தளமாக பட்ஜெட் உருவாக்கப்பட்டு உள்ளது. ஏழை எளிய மக்களுக்கான இந்தியா வல்லரசு நாடாக அடித்தளமாக உள்ள பட்ஜெட் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதிகள் முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த பத்தாண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் மீதும், தமிழ்நாட்டின் கலாசாரம், பண்பாட்டின் மேல் பிரதமர் மிகுந்த பற்று வைத்துள்ளார். ஸ்டாலின் அரசியலுக்காக மக்களை தவறான திசையில் திருப்பி கொண்டுள்ளார். தவறான தகவல்களை பேசிக் கொண்டு வருகிறார்.
மத்திய கல்வித்துறை மந்திரி மிகத் தெளிவாக சொல்லி உள்ளார். பிரதமரின் திட்டத்திற்கு முதலில் கையெழுத்து போட்டார்கள். திரும்ப பின்வாங்கி விட்டார்கள். நிதி விவகாரத்தில் தமிழகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை தருவதாக தர்மேந்திர பிரதான் என்னிடம் சொன்னார். புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்னை?
ஆரம்பக் கல்வியில் தாய் மொழியை ஊக்குவிப்பது தான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். கல்வியாளர்கள், வல்லுநர்கள் ஆகியோர்களின் ஆலோசனைபடி உருவாக்கப்பட்டது தான் புதிய கல்விக் கொள்கை.
இன்றைய காலகட்டத்தில் புதிய கல்விக் கொள்கை மிகவும் அவசியம். முன்பு இருந்ததை போல இப்போது நாடு இல்லை. மக்கள் வளர்ச்சியை முன்னேற்றத்தை விரும்புகிறார்கள்.
மொழியை வைத்து அரசியல் செய்யும் நிலை இப்போது இல்லை. வெற்றிவேல் யாத்திரை நான் நடத்தினேன். நான் திருப்பரங்குன்றம் செல்வதில் எந்த அரசியலும் இல்லை. சர்ச்சையும் இல்லை. நான் என் வழிபாட்டு உரிமை அடிப்படையில் செல்கிறேன். கூட்டணி தொடர் பான அனைத்து முடிவுகளையும் தேசிய தலைமை முடிவெடுத்து அறிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.