search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானநிலையம்"

    • குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.
    • மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார் படுத்தி உள்ளது.

    சென்னை:

    குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பொது சுகாதார அவசர நிலையாக கடந்த 14-ந் தேதி உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார் படுத்தி வழிகாட்டி நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.

    விமான நிலையத்தில் அதன்பேரில் தமிழகத்திலும் பொது சுகாதாரத்துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை தொற்று விமான பயணிகள் மூலம் மற்ற நாடுகளிலும் பரவ வாய்ப்பு இருக்கிறது.

    எனவே ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பயணிகளை கண்காணிக்க சென்னை விமான நிலையத்தில் நாளை முதல் முகாம் தொடங்கப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நேரடி விமான சேவை இல்லாவிட்டாலும் தொடர் பயணங்கள் மூலம் வரும் பயணிகள் கண்காணிக்கப்படுவார்கள்.

    ஸ்கேனிங், ஸ்கிரீனிங் சோதனை நடத்தப்படும். குரங்கம்மையின் அறிகுறியான கொப்புளங்கள் கண்டறியப்பட்டால் அவர்களை உடனடியாக ஆஸ்பத்திரக்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றார்.

    பயமுறுத்தும் இந்த தொற்று பரவிய விதம் விசித்திரமானது. 1958-ல் டென்மார்க் தலைநகராமான கோபன் ஹேகனில் உள்ள ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட குரங்குகளிடையே இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இதனால் எம்பாக்ஸ் என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.

    1970-ல் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் முதல் முதலாக மனிதர்களிடம் இந்த வகை வைரஸ் பரவியது கண்டறியப்பட்டது.

    சின்னம்மை, பெரியம்மை நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டாலும் இந்த வைரஸ் பெரியம்மை குடும்பத்தை சேர்ந்தது என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினார்கள்.

    இந்த வைரஸ் மனிதர்களுக்கு எப்படி பரவியது என்பது பற்றி ஆய்வு செய்ததில் எலி, அணில்களிடம் காணப்பட்ட இந்த வைரஸ் அவை மனிதர்களை பிராண்டு வது மற்றும் அவற்றை சமைத்து சாப்பிடுவது மூலம் பரவியது தெரியவந்தது.

    தொற்று ஏற்பட்டு 5-ல் இருந்து 21 நாட்களில் இதன் அறிகுறிகள் உடலில் வெளிப்படும். அம்மை நோய் வந்தால் எப்படி உடல் முழுவதும் கொப்புளங்கள் தோன்றுமோ அதே போல் தான் வரும்.

    கூடவே காய்ச்சல், இருமல், உடல் வலியும் இருக்கும். அந்த கொப்புளங்கள் அம்மை நோயை போலவே 4 வாரங்களுக்குள் காய்ந்து விழுந்து விடும்.

    கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள், இணை நோய் உடையவர்கள், உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு தாக்குதல் தீவிரமாக இருக்கும்.

    நுரையீரல் பாதிப்பு, மூளைக்காய்ச்சல், பார்வை குறைபாட்டையும் ஏற்படுத்தும் என்கிறார்கள்.

    மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவும். என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

    இந்த நோய் தொற்று ஏற்பட்டவரின் எச்சில் மற்றும் விந்து வழியாக பரவும், உடல் முழுவதும் தோன்றிய கொப்புளங்கள் காய்ந்து முற்றிலுமாக குணமாகும் வரை அடுத்தவருக்கு பரவலாம் என்கிறார்கள்.

    கடந்த காலங்களில் இந்த நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மிக குறைந்த சதவீதத்தில் இருந்துள்ளது. ஆனால் கடந்த ஓராண்டில் காங்கோ நாட்டில் 18 ஆயிரத்து 245 பேருக்கு குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டது. அதில் 919 பேர் உயிரிழந்துள்ளார்கள். இறப்பு 5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    இந்த நாட்டுக்கு அருகில் இருக்கும் கென்யா, புருண்டி, ருவாண்டா, உகாண்டா ஆகிய நாடுகளில் இந்த தொற்று பரவி வருகிறது.

    குரங்கம்மை கண்டவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள இடைவெளி, முகக்கவசம், அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். எனவே விழிப்புணர்வு அவசியம் என்கிறார்கள்.

    • யூடியூப்பர் சபீர் அலி உடந்தையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்து உள்ளது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்பிலான 267 கிலோ தங்கம் கடத்தல் நடந்திருப்பது சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    துபாயில் உள்ள இலங்கையை சேர்ந்த ஒருவர் மூலம், சென்னையை மையமாக வைத்து இந்த தங்கம் கடத்தல் நடந்து உள்ளது. இதற்கு சென்னை விமான நிலையத்தில பரிசு பொருட்கள் விற்பனை கடை நடத்தி வந்து யூடியூப்பர் சபீர் அலி உடந்தையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து சபீர் அலி, அவரது கடையில் வேலைபார்த்த 7 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

    கடைகள் நடத்தும் உரிமம் பெற யூடியூப்பர் சபீர் அலி கொடுத்த ரூ.77 லட்சம் ஹவாலா பணம் என்பதும், அவருக்கு சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்து உள்ளது.

    மேலும் சென்னை விமான நிலையத்தில் உயர் பொறுப்பு வகிக்கும் அதிகாரி ஒருவர் இந்த தங்கம் கடத்தலில் தொடர்பில் இருந்து உள்ளார். அவரது வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தினர்.

    அந்த அதிகாரி விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளார். இந்த தங்கம் கடத்தலில் விமான நிலைய அதிகாரிகள் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களும் அடுத்தடுத்து சுங்கத்துறை அதிகாரிகளின் விசாரணையில் சிக்கி வருகிறார்கள்.

    இதேபோல் விமான நிலையத்தில் செயல்பட்ட மேலும் 3 கடைகளுக்கும் தங்கம் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாகவும் அதிரடி விசாரணை நடந்து வருகிறது.

    எனவே வரும் நாட்களில் தங்கம் கடத்தல் விவகாரத்தில் முக்கிய நபர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரி களிடம் தகவல்களை பெற்று தமிழக போலீசாரும் தனியாக விசாரித்து வருகி றார்கள். சர்வதேச கும்பல் தொடர்பு இருப்பதால் சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

    இது குறித்து அதிகாரி கூறும்போது, `சென்னை விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் விற்பனை கடையை மையமாக வைத்து தங்கம் கடத்தல் நடந்து உள்ளது. அதில் உள்ளவர்கள் சிக்கிய நாள் அன்றே சர்வதேச விமான நிலையத்தில் உள்ள மேலும் 2 கடைகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் அந்த 2 கடைகளிலும் சோதனை நடந்தது. தங்க கடத்தலில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • பயணிகள் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பிடிபட்டது.
    • தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கே.கே.நகர்:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பிடிபட்டது. இதுபோன்ற செய்திகள் நாளும் பத்திரிகைகளில் தவறாமல் இடம்பெறுகிறது. கட்டிங் பிளேயர் கம்பிகளுக்குள் மறைத்து, தலை முடிக்குள் மறைத்து வைத்து, பேஸ்ட் வடிவில், பேரிச்ச ம்பழக் கொட்டைகளை நீக்கிவிட்டு அதற்குப்பதில் தங்கத்தை வைத்து, ஊட்டச்சத்து பவுடருக்குள் தூளாக்கி, பிரவுன் டேப்புக்குள் பவுடர்களாக தூவி என நூதன முறையில் கடத்தல்காரர்கள் தங்கம் கடத்தி வருவது சுவாரசியம் தரக்கூடிய செய்தியாக மாறி உள்ளது.

    இவர்கள் "ரூம் போட்டு யோசிப்பாங்களோ?"னு வடிவேலு பாணியில்தான் கேட்கத் தோன்றுகிறது.

    இப்படி யோசித்து தங்கம் கடத்தி வருபவர்களை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பது தொடர்கதையாகவே உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து நேற்று இண்டிகோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் கம்பி அறுக்கும் எந்திரத்தில் மறைத்து ஒரு கோடியே 19 லட்சம் மதிப்பிலான 1666 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது.

    இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்தில் ரூ 1.20 மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியது.

    • ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர்.
    • கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    மதுரை:

    அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.வி.கதிரவன் இல்ல திருமண விழா மதுரை வேலம்மாள் ஐடாஸ்கட்டர் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.

    இந்த திருமண விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற் காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 7 மணிக்கு மதுரை வந்தடைந்தார்.

    எடப்பாடி பழனிசாமியை வரவேற்க மதுரை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர்.

    விமான நிலையத்தில் இருந்து பயணிகள் வெளியே வரும் பாதை வழியாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வருகை தந்தார். அவர் அங்கிருந்து விமான நிலையத்திற்குள் சென்ற பின்னரும் அவரது வாகனம் அங்கேயே நினறு கொண்டிருந்தது.

    இதைப்பார்த்த விமான நிலைய பாதுகாப்பு போலீசார் மற்றும் அதிகாரிகள் உடனடியாக அந்த காரை அங்கிருந்து அப்புறப்படுத் துமாறு கூறினர். ஆனால் கார் எடுக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். சற்று நேரத்தில் காரை அகற்றாவிட்டால் லாக் செய்து விடுவதாக கூறினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அங்கு திரண்டிருந்த அ.தி.மு.க.வினர் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். கைகளை நீட்டியவாறு அவர்கள் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் காரும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

    கவலைப்படாதீர்கள் 2026-ல் நம்மதான்

    மேலும் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமிக்கு திரண்டிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். அதனை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமியிடம், தொண்டர் ஒருவர் உரத்த குரலில் 'கவலைப்படாதீர்கள் 2026 நம்ம தான்' என்று கூறினார். அதைக்கேட்ட எடப்பாடி பழனிசாமி சிரித்தபடியே அங்கிருந்து புறப்பட்டார்.

    • திடீர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 35 விமான சேவைகள் பாதிப்பு.
    • பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    சென்னை புறநகர் பகுதிகளில் திடீர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 35 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக திடீரென மேகங்கள் திரண்டு வந்து, மேகமூட்டத்துடன் இருளான சூழ்நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கடும் சூறைக்காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் தொடர் மழை காரணமாக 35 விமான சேவையில் தாமதம் ஏற்பட்டது. இதில் சென்னை வரும் 17 விமானங்களும், சென்னையில் இருந்து புறப்படும் 18 விமானங்களும் அடங்கும்.

    • பத்து நாட்களுக்கு சுமார் 120 விமானங்கள் ரத்து.
    • பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் டெல்லி ஐதராபாத், சீரடி, கோவா, அந்தமான் உட்பட பல்வேறு நகரங்களுக்கு விமானம் இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முதல் வருகிற 10-ந் தேதி வரை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அனைத்து நகரங்களுக்கும் செல்லும் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது. இன்று காலை சீரடி, அந்தமான் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல ஏற்கனவே முன்புதிவு செய்து இருந்தவர்கள் பயணம் செய்ய வந்தனர். அவர்களை பாதுகாப்பு வீரர்கள் அனுமதிக்கவில்லை. 10-ந் தேதி வரை ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து ஒரு நாளைக்கு அந்த நிறுவனத்தின் 12 விமானங்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகிறது.

    பத்து நாட்களுக்கு சுமார் 120 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட விமான நிர்வாகம், நிர்வாக சீர்திருத்தம் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

    • மர்மநபர் ஒருவர் போன் செய்து தகவல் தெரிவித்தார்.
    • அதிரடியாக வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

    மும்பை:

    சென்னையில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்தில் குண்டு வெடிக்கும் என்று மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் போன் செய்து தகவல் தெரிவித்தார்.

    இதைதொடர்ந்து போலீசார் உஷார் படுத்தப் பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இண்டிகோ விமானத்தில் 174 பெரியவர்கள் மற்றும் 2 குழந்தைகள் இருந்தனர். அவர்கள் அனைவரையும் பதட்டமின்றி பத்திரமாக மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதன்படி மும்பை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விமானத்தில் இண்டிகோ விமானம் அதிரடியாக வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது விமானத்தின் கழிவறையில் 30 நிமிடத்தில் குண்டு வெடிக்கும் என்று ஆங்கிலத்தில் டஸ்யூ பேப்பர் ஒன்றில் எழுதப்பட்ட எச்சரிக்கை குறிப்பு ஒன்று கிடந்தது. அதையும் பறி முதல் செய்துள்ள போலீசார் இதனை எழுதிப் போட்டது யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இண்டிகோ விமானத்துக்கு ஒரே வாரத் துக்குள் கிடைத்த 2-வது வெடிகுண்டு மிரட்டல் இதுவாகும். கடந்த 28-ந் தேதி டெல்லியில் இருந்து வாரணாசி சென்ற இண்டிகோ விமானத்துக்கும் இதுபோன்ற மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • விமானம் அவசரமாக பெங்களூரு விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
    • விமானத்தில் இருந்த 179 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 179 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் உள்பட 185 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் நேற்று இரவு கொச்சி நோக்கி புறப்பட்டனர்.

    அப்போது விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் வலது பக்க எந்திரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து விமானம் அவசரமாக பெங்களூரு விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

    பின்னர் விமானத்தில் இருந்த 179 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    • மறுசீரமைக்கப்பட்ட புதிய ரெயில் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
    • ரோடுஷோ நிகழ்ச்சியையொட்டி பிரதமர் மோடியை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் வர உள்ளனர்.

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி அதற்கு முன்பு வருகிற 30-ந் தேதி, அயோத்தி விமான நிலையம் திறக்கப்படுகிறது. இதனை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். விமான நிலையத்தில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. மறுசீரமைக்கப்பட்ட புதிய ரெயில் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

    இதற்காக பிரதமர் மோடி 15 கி.மீ. தூரம் ரோடுஷோ நடத்தி ரெயில் நிலையத்துக்கு செல்கிறார். என்.எச்.27, தரம் பாதை, லதா மங்கேஷ்கர் சவுக், ராம் பாதை, டெதி பஜார், மொகாப்ரா சந்திப்பு வழியாக அவர் ரோடுஷோ நடத்துகிறார். ரோடுஷோ நிகழ்ச்சியையொட்டி பிரதமர் மோடியை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் வர உள்ளனர்.

    • திருச்சியில் இருந்து பெங்களூருக்கு புதிய விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது
    • ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இந்த விமான சேவையை தொடங்கி உள்ளது

    கே.கே. நகர்,

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக ஹைதராபாத், சென்னை, பெங்களூர், உள்ளிட்ட நகரங்களுக்கு இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது இதை தவிர வெளிநாட்டு விமான சேவைகளாக துபாய் மலேசியா சிங்கப்பூர் மஸ்கட் ஓமன் இலங்கை போன்ற நாடுகளுக்கும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் உள்நாட்டு விமான சேவைகள் நிறுவனத்தின் சார்பில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது திருச்சியில் இருந்து பெங்களூருக்கு புதிய விமான சேவை  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் துவங்கி இருக்கிறது. இந்த விமானம் ஆனது பெங்களூரில் நள்ளிரவு 12:15 மணிக்கு புறப்பட்டு இரவு 1.28 மணிக்கு திருச்சி விமான விமான நிலையத்திற்கு வந்தடைந்தது இந்த விமானத்தில் பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு 30 பயணிகள் பயணம் செய்தனர் மீண்டும் இந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 3:30 மணிக்கு புறப்பட்டு காலை 4.40 மணிக்கு பெங்களூர் விமான நிலையத்தை சென்றடைந்தது இந்த விமானத்தில் 78 பயணிகள் திருச்சியில் இருந்து பெங்களூர் நோக்கி பயணம் செய்தனர்.

    • திருச்சியில் இருந்து மும்பைக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது
    • அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் இயக்கப்படும் என அறிவிப்பு

    கே.கே.நகர்,

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி, பகரின் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களை மலிந்தோ ஏர் ஏசியா ஸ்கூல், இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இயக்கி வருகின்றன.இதே போன்று திருச்சியில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக ஹைதராபாத், சென்னை, புதுடெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றை இண்டிகோ நிறுவனம் இயக்கி வருகிறது.திருச்சியில் இருந்து நாள்தோறும் 7 உள்நாட்டு சேவைகள், 11 வெளி நாட்டு விமான சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அடுத்த மாதம் 2-ந் தேதி முதல் வியட்நாமிற்கு புதிய விமான சேவையை வியட் ஜெட் நிறுவனம் தொடங்க உள்ளது.அதேபோன்று 4-ந் தேதி முதல் திருச்சியில் இருந்து மும்பைக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட உள்ளது. இந்த விமானம் மும்பையில் இருந்து மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.55 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடையும்.மறு மார்க்கத்தில் இந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து மதியம் 3.50 மணிக்கு புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு மும்பை சென்றடையும் என இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • திருச்சியில் இருந்து பயணிகள் விமானங்கள் மூலம் ஆண்டுக்கு 6,409 மெட்ரிக் டன் சரக்குகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
    • 98 சதவீதம் ஏற்றுமதி உள்ள நிலையில் இறக்குமதி 2 சதவீதம் மட்டுமே உள்ளது

    திருச்சி,

    உள்நாட்டில் உற்பத்தியா கும் பொருட்கள் வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்தால் அந்நிய செலவாணி அதிகரி த்து நாட்டின் பொருளாதா ரம் உயரும். இந்த ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்திற்கு கப்பல் மற்றும் விமானம் முக்கிய பங்காற்றி வருகிறது. அதிலும் விமான சரக்கு போக்குவரத்து விரைவான சேவையை வழங்குகிறது.கொரோனா காலகட்ட த்தில் இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஏற்றுமதி மிகவும் பாதிப்புக்குள்ளா னது. அதன் பின்னர் தற்போது சரக்கு ஏற்றுமதி பல நாடுகளில் சீராகியு ள்ளது.ஆனால் திருச்சிக்கு சரக்குகளை கையாள தனி விமானங்கள் இயக்கப்ப டவில்லை. தற்போது வரை பயணிகள் விமானத்தில் மட்டுமே சரக்குகள் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.இதில் முதலில் பயணிக ளுக்கு முன்னுரிமை அளிக்கி ன்றனர். அவர்களின் உட மைகள் வைக்கும் இடத்தை தவிர்த்து மீதமுள்ள இடத்தி ற்கு தகுந்தார் போல் சரக்கு ஏற்ற அனுமதி அளிக்க ப்படுகிறது.திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட், தோகா, கொழும்பு உள்ளி ட்ட நாடுகளுக்கு அதிகளவு சரக்கு ஏற்றுமதி செய்யப்ப டுகிறது.

    தினமும் இங்கிருந்து 18 மெட்ரிக் டன் சரக்கு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சராசரி யாக மாதத்திற்கு 550 மெட்ரிக் டன்னும் ஆண்டு க்கு 6,409 மெட்ரிக் டன் சரக்குகளும் கையாள ப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.இதில் 98 சதவீதம் காய்கறிகள்,பழங்கள், பூக்கள், கீரை வகைகள், பால் பொருட்கள், மீன்கள் ஆகியவையாகும்.மீதி இரண்டு சதவீதம் மட்டுமே துணி வகைகள் வீட்டு உபயோக பொருட்கள் பரிசு பொருட்கள் மற்றும் புத்தகங்கள் செல்கிறது.திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி கூறும் போது,திருச்சி விமான நிலைய த்தை பொருத்தவரை ஏற்று மதியை ஒப்பிடும்போது இறக்குமதி 2 சதவீதம் மட்டுமே உள்ளது. இதற்குப் பல்வேறு நடைமுறை சிக்க ல்கள் இருப்பதால் அவற்றை சரி செய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.ஆகவே இறக்கும தியாளர்கள் விமான சரக்கு இறக்குமதிக்கு முக்கிய த்துவம் தர வேண்டும்.அவர்களுக்கு தேவையான எல்லா ஆவணம் சார்ந்த பணிகளையும் சரக்கு முனையம் பார்த்துக் கொள்ளும் என்றார்.

    ×