search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school building"

    • ரூ.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அய்யப்பன் எம்.எல்.ஏ. புகார் கூறினார்.
    • தரம் இல்லாத கம்பி, மண், சிமெண்ட் மற்றும் கட்டுமான பொருட்களை கொண்டு தண்ணீர் ஊற்றி கட்டப்படவில்லை.

    திருமங்கலம்

    மதுரை அருகே உள்ள செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பன்னியான் ஊராட்சி அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளி யில் 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் படித்து வருகிறார்கள்.

    இங்கு போதிய இடவசதி இல்லாததால் நபார்டு வங்கி மூலம் ரூ.55 லட்சம் மதிப்பில் 3 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு 2 மாதங்களுக்கு முன்பு பயன் பாட்டுக்கு கொண்டுவரப்பட் டது. இந்த கட்டிடத்தில் உள்ள வகுப்பறை கட்டிடத்தின் ஒரு அறையில் கடந்த வாரம் முதல் மாண வர்கள் பயின்று வருகின்ற னர்.

    மற்றொரு அறையில் ஸ்மார்ட் கிளாஸ் அமைப்ப தற்காக உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவா ளருமான அய்யப் பனிடம் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தி ருந்தனர்.

    இதனை தொடர்ந்து ஸ்மார்ட் கிளாஸ் அமைத்துக் கொடுப்ப தற்காக அய்யப் பன் எம்.எல்.ஏ. புதிதாக கட்டப் பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை ஆய்வு செய்தபோது கட்டிடம் முழுவதும் விரிசல் ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் ஆசிரி யர்களிடம் மாணவர்க ளின் பாது காப்பற்ற சூழல் உள்ளதால் மாணவர்களை வகுப்பறைக் குள் அனுமதிக்க வேண்டாம் என வலியுறுத்தினார். தொடர்ந்து அய்யப்பன் எம்.எல்.ஏ கூறியதாவது:-

    உசிலம்பட்டி சட்ட மன்றத்திற்கு உட்பட்ட 10-க் கும் மேற்பட்ட கள்ளர் பள்ளிகளில் கூடுதல் வகுப் பறை கட்டிடங்கள் கட்டுவ தற்கான பணிகளை ஆய்வு மேற்கொண்ட போது தரம் இல்லாத கம்பி, மண், சிமெண்ட் மற்றும் கட்டு மான பொருட்களைக் கொண்டு தண்ணீர் ஊற்றி கட்டப்படவில்லை.

    கடந்த டிசம்பர் மாதம் முதல மைச்சருக்கு தரமான கட்டிடங்கள் கட்ட வேண்டு மென கடிதம் எழுதியிருந்தேன். அதன் அடிப்படையில் செயற்பொறியாளர் கட்டி டங்கள் தரமான முறை யில் கட்டப் பட்டதாக பதில் கடிதம் அனுப்பி யிருந்தார்.

    இந்நிலையில் ஸ்மார்ட் கிளாஸ் வேண்டுமென பள்ளி சார்பில் எனக்கு கோரிக்கை வைத்தனர். இதற்காக ஆய்வு செய்ய வந்தபோது அனைத்து சுவர்களும் விரிசல் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது பன்னியான் ஊராட்சி மன்ற தலைவர் காசிநாதன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    ×