என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரேல் ஹமாஸ் போர்"

    • பாலஸ்தீன ஊடுருவல்காரர்கள் இங்கு வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர்.
    • தெற்கு இஸ்ரேல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான கேரள மக்கள் பணிபுரிகின்றனர்.

    இஸ்ரேல் மீது, பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் நடத்திய தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இஸ்ரேலில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களின் நிலையை அவர்கள் உன்னிப்பாக கவனிக்க தொடங்கிவிட்டன. இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை காப்பாற்ற நமது நாடும் நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்த சூழலில் இஸ்ரேலில் இருக்கும் கேரள மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக பதுங்கு குழிகளை நோக்கிச் செல்வதாக கூறப்படுகிறது. இது குறித்து அங்கு 8 ஆண்டுகளாக செவிலியராக பணிபுரியும் கேரளாவை சேர்ந்த ஷைனிபாபு என்பவர் கூறுகையில், பாலஸ்தீன ஊடுருவல்காரர்கள் இங்கு வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர்.

    தற்போது தெற்கு இஸ்ரேல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான கேரள மக்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் மருத்து வமனையில் செவிலியர்க ளாகவும், தனியாக வசிக்கு முதியோர்களுக்கு பராமரிப்பாளர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் போரினால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கையாக அவர்கள் இஸ்ரேலில் உள்ள பதுங்கு குழிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். நானும் தற்போது பதுங்கு குழியில் தான் உள்ளேன். கடந்த காலங்களில் இதுபோன்ற சூழ்நிலைகள் இருந்துள்ளன. ஆனால் தற்போது மிகவும் வலுவானதாக தெரிகிறது என்றார்.

    • இஸ்ரேலில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 30 பேர் அயலக தமிழர் நல வாரியத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர்.
    • 30 பேரும் இஸ்ரேலின் ஜெருசலேம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.

    சென்னை:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி உள்ள நிலையில் இஸ்ரேலில உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசின் ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.

    இஸ்ரேல் வாழ் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டு உள்ள நிலையில், உதவிகள் தேவைப்பட்டால், 97235226748 என்ற எண்ணிற்கு அழைக்குமாறு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இந்த நிலையில் இஸ்ரேலில் வசிக்கும் தமிழர் மணிகண்டன் வீடியோவில் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    எல்லோருக்கும் வணக்கம், நானும் என்னுடன் படிக்கும் தினேஷ் பாபுவும் ஆராய்ச்சி படிப்புக்காக இஸ்ரேல் வந்திருந்தோம். நாங்கள் இருவரும் பென்கொரியன் பல்கலைக்கழகத்தில் இருக்கிறோம்.

    இங்கு நேற்று காலையில் இருந்து போர் நடந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். நாங்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு அருகே ஹர்பன்ட்ஸ் நகரத்தில் இருந்து எங்களுக்கு தேவையான உதவிகள் செய்து தருவதாக தூதரக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    நாங்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம். அரசு முழு உதவிகளையும் செய்கிறது.

    எங்களுக்கு இ-மெயில் மூலம் அவ்வப்போது தகுந்த ஆலோசனைகளை தருகிறார்கள். தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என்று அறிவித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இஸ்ரேலில் உள்ள தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தை தொடர்பு கொண்டால், தூதரகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அயலக தமிழர் நலத்துறை அறிவித்துள்ளது.

    இஸ்ரேலில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 30 பேர் அயலக தமிழர் நல வாரியத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். இந்த 30 பேரும் இஸ்ரேலின் ஜெருசலேம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.

    அங்கு போர் தீவிரம் அடைவதால் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இஸ்ரேலில் உள்ள தமிழர்கள் அயலகத் தமிழர் நல வாரியத்தை தொடர்பு கொண்டால் தூதரகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அயலக தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது.

    எனவே உதவி தேவைப்படுபவர்கள் சென்னை சேப்பாக்கத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 044-28515288 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

    இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலால் அங்குள்ள தமிழர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு கீழ்கண்ட அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.

    அவை வருமாறு:

    +91-87602 48625

    +91-99402 56444

    +91-96000 23645.

    • இஸ்ரேலில் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என தமிழக மாணவர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
    • அரசு முழு உதவிகளையும் செய்கிறது. தேவையில்லாமல் வெளியில் செல்லவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் நேற்று தாக்குதல் நடத்தின. இந்த திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது. ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 230 பேர் உயிரிழந்தனர்.

    இதற்கிடையே, ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகள் அழிக்கப்படும். எனவே காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேறும்படி இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், இஸ்ரேல்-காசா முனை எல்லையில் உள்ள ஸ்டெரோட் நகருக்குள் ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர் அங்குள்ள போலீஸ் நிலையத்தைக் கைப்பற்றினர். இதையடுத்து இஸ்ரேல் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு, போலீஸ் நிலையத்தை மீட்டனர். இதில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இஸ்ரேலின் தெற்கு நகரமான ஒபாகிமில் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மக்கள் சிலரை பிணைக் கைதிகளாக பிடித்தனர். அங்கு இஸ்ரேல் ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தி பிணைக்கைதிகளை மீட்டனர். அங்கு நடந்த சண்டையில் ஹமாஸ் அமைப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

    • காசா-இஸ்ரேல் இடையே போர் தீவிரம் அடைந்து வருவதால் பல இடங்களில் ஏவுகணை வீசப்பட்டு வருகிறது.
    • ஜெருசலேம் நகருக்கு கிறிஸ்தவர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருபவர்களை அந்நாட்டு அரசு கவனத்துடன் பாதுகாத்து வருகிறது.

    சென்னை:

    ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்ப்பது நல்லது என்று வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    காசா-இஸ்ரேல் இடையே போர் தீவிரம் அடைந்து வருவதால் பல இடங்களில் ஏவுகணை வீசப்பட்டு வருகிறது. இதில் பலர் கொல்லப்படுகின்றனர்.

    இந்த சூழலில் இஸ்ரேல் பகுதியில் உள்ள ஜெருசலேம் நகருக்கு கிறிஸ்தவர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருபவர்களை அந்நாட்டு அரசு கவனத்துடன் பாதுகாத்து வருகிறது.

    இந்த சமயத்தில் தமிழகத்தில் இருந்தும் 10-க்கும் மேற்பட்டோர் ஜெருசலேம் சென்று உள்ளனர். அவர்கள் அங்கு பாதுகாப்பாக இருக்கும் நிலையில் போர் பதற்றம் உள்ளதால் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள கூடியவர்கள் அந்த பயணத்தை தவிர்ப்பது நல்லது என்று தமிழக அரசு அதிகாரிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

    • காசாவுக்கு வழங்கப்படும் குடிநீர், எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள் இணைப்பை இஸ்ரேல் துண்டித்துள்ளது.
    • மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் நேற்று இரவு முழுவதும் காசா நகரம் இருளில் மூழ்கியது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 300 ஆகவும், காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி 230 பேர் பலியாகினர் என தகவல் வெளியானது.

    காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்பதால் அங்குள்ள பொதுமக்களை வெளியேறும்படி இஸ்ரேல் அதிபர் கேட்டுக் கொண்டார்.

    காசாவுக்கு வழங்கப்படும் குடிநீர், எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள் இணைப்பை இஸ்ரேல் துண்டித்துள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் நேற்று இரவு முழுவதும் காசா நகரம் இருளில் மூழ்கியது.

    இந்நிலையில், காசா முனையில் உள்ள ஹமாஸ் அமைப்பின் உளவுப்பிரிவு தலைவர் வீட்டை இஸ்ரேல் விமானப்படை தாக்கி அழித்துள்ளது. இந்த வீடு ஹமாஸ் அமைப்பின் ஆயுத கட்டமைப்பாக செயல்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

    • காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.
    • இந்த திடீர் தாக்குதலால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    பெய்ரூட்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், லெபனான் நாடும் தாக்குதலில் குதித்துள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கம் இஸ்ரேலுக்கு எதிராக சண்டையிட்டு வரு கிறது.

    இந்நிலையில், வடக்கு இஸ்ரேலில் லெபனான் தாக்குதல் நடத்தி உள்ளது. சிரியாவின் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பான கோலன் குன்றுகள் மீதுள்ள 3 இஸ்ரேல் நிலைகள் மீது ஹிஸ்புல்லா இயக்கம் ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    இதுதொடர்பாக லெபனான் ஆயுத குழுவான ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கூறுகையில், வடக்கு இஸ்ரேலில் குண்டு-ஏவுகணை தாக்குதலை நடத்தினோம். ஆக்கிரமிக்கப்பட்ட லெபனான் ஷெபாபார்ம்ஸ் பகுதியில் உள்ள 3 இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தளங்களை குறிவைத்து தாக்கினோம். பாலஸ்தீனத்துடன் ஒற்றுமையாக இருக்கிறோம் என தெரிவித்தனர்.

    மேலும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். லெபனானின் தாக்குதலையடுத்து இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறுகையில், இஸ்ரேல் எல்லைக்குள் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து லெபனானில் பீரங்கி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் லெபனான் பகுதிகளில் துப்பாக்கியால் சுட்டு வருகிறது.

    • இஸ்ரேலியர்களுக்கு இந்தியர்கள் உறுதுணையாக இருப்பர்.
    • எல்லா வகையிலும் பயங்கரவாதத்தை இந்தியா எதிர்க்கும் என்றார்.

    புதுடெல்லி:

    ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதால், கோபம் அடைந்த இஸ்ரேல் உச்சக்கட்ட தாக்குதலை நடத்தி வருகிறது. காசா முனை மீது ஏவுகணைகளை தொடர்ந்து வீசி வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனால் இஸ்ரேல் மற்றும் காசா முனையில் பல்வேறு நாட்டினர் தவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகுவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது, இக்கட்டான சூழ்நிலையில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இஸ்ரேலியர்களுக்கு இந்தியர்கள் உறுதுணையாக இருப்பர். இக்கட்டான சூழலில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும். பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள், வெளிப்பாடுகளை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது. எல்லா வகையிலும் பயங்கரவாதத்தை இந்தியா எதிர்க்கும் என பதிவிட்டுள்ளார்.

    • தற்போது வரை இப்போரில் இரு தரப்பிலும் 1500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்
    • இந்தியா இரு நாடுகளுக்கும் நட்பு நாடாக இருந்து வருகிறது

    கடந்த சனிக்கிழமையன்று காலை இஸ்ரேல் மீது பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், திடீர் தாக்குதலை நடத்தியது. இதில் ஏராளமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேல் போர் தொடுப்பதாக அறிவித்து பாலஸ்தீன எல்லை பகுதியான காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளை வேட்டையாடி வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி இரு தரப்பிலும் 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வரை தாக்குதலை நிறுத்த போவதில்லை என இஸ்ரேல் உறுதிபட தெரிவித்துள்ளது. இப்போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்க, மத்திய கிழக்கு நாடுகள் இப்போருக்கு இஸ்ரேலை குற்றம் சாட்டியுள்ளன.

    இந்நிலையில், இந்தியாவிற்கான பாலஸ்தீன தூதர் அபு அல்ஹைஜா (Abu Alhaija) இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமித்ததன் பதில் நடவடிக்கையே ஹமாஸ் தாக்குதல். பாலஸ்தீன பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்பை இஸ்ரேல் நிறுத்தி கொண்டால் இஸ்ரேல் மீதான தாக்குதல்களும் நிற்கும். இந்த போருக்கு சர்வதேச நாடுகளும் ஒரு காரணம். ஐக்கிய நாடுகள் சபை பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக 800க்கும் மேற்பட்ட தீர்மானங்களை இயற்றியது. ஆனால், இஸ்ரேல் அத்தீர்மானங்களின்படி நடந்து கொள்ளவில்லை. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கும் இந்தியா ஒரு நட்பு நாடு. எனவே இந்தியா இப்பிரச்சனையில் தலையிட்டு இரு நாடுகளுக்கிடையே தூதுவராக செயல்பட்டு ஒரு சுமூக முடிவு எட்ட முயற்சி செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.

    இவ்வாறு அல்ஹைஜா கூறினார்.

    • இஸ்ரேல்-ஹமாஸ் போர் 5-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது
    • இந்தியா இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்துள்ளது

    கடந்த சனிக்கிழமை, பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தியதில் 1000க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானார்கள். இதை தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர் தொடர்ந்திருக்கிறது.

    தற்போது 5-வது நாளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன. ஹமாஸ் அமைப்பை கத்தார், ஈரான் உட்பட பல மத்திய கிழக்கு நாடுகள் ஆதரிக்கின்றன.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என தெரிவித்தார். ஆனால், இந்தியாவின் தேசிய காங்கிரஸ் கட்சி, பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்திருக்கிறது.

    இந்நிலையில், சீனா இப்போரில் யாரை ஆதரிக்கிறது என இதுவரை தெளிவாக கூறவில்லை.

    "இரு தரப்பும் அமைதி காக்க வேண்டும். பகைமையை கைவிட்டு பொது மக்களை காக்கவும், தற்போதைய சூழ்நிலை மேலும் மோசமடையாமல் கண்காணிக்கவும் இரு தரப்பையும் கேட்டு கொள்கிறோம். அனைத்து விதமான வன்முறையையும் பொதுமக்களின் மீதான தாக்குதலையும் கண்டிக்கிறோம்" என சீனா அறிக்கை வெளியிட்டு நிறுத்தி கொண்டது.

    ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு தரப்பினரின் பெயரையும் குறிப்பிடாமல் ஒரு தெளிவற்ற அறிக்கையை வெளியிட்டதன் மூலம் சீனா நடுநிலை வகிக்க முயல்வதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • போர் காரணமாக மூன்று விதங்களில் பெரும் மாற்றம் ஏற்படும்.
    • எண்ணெய் விலை திடீரென உயர்வை சந்திக்கும்.

    இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தற்போதுள்ள நிலைமையை முற்றிலுமாக தலைகீழாக மாற்றிவிடும் என்று ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கருத்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், தற்போதைய போர் காரணமாக மூன்று விதங்களில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    பொருளாதார அடிப்படையில் பார்க்கும் போது, எண்ணெய் விலை திடீரென உயர்வை சந்திக்கும், இது இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும். இரண்டாவதாக மத்திய கிழக்கில் எது நடந்தாலும், அது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும், மூன்றாவது அன்னிய செலாவனியும் பாதிக்கப்படும்.

    "மின்திறனை பொருத்தவரையில், நமக்கு புதுப்பிக்கத் தக்க மின்திறன் மட்டுமே தேவை. இதற்கான உள்கட்டமைப்புகளை நாம் மேம்படுத்த வேண்டும். நம்மிடம் அதிகளவில் திறமைமிக்கவர்கள் உள்ளனர். நமக்கு தேவையான ஒன்று திறமைமிக்கவர்களை சவால்களை எதிர்கொள்ள தயார்ப்படுத்துவது மட்டும் தான். நமது தனியார் துறைகளில் இது மிகவும் அத்தியாவசியமான ஒன்று," என்று அவர் தெரிவித்து உள்ளார்.

    "நமது மொத்த வருவாயில் பத்து சதவீதத்தை இந்தியா வழங்குகிறது, மேலும் அடுத்த பத்து ஆண்டுகளில் இது இருமடங்கு அதிகரித்து, முன்னணி சந்தையாக மாறும். நமக்கு மெக்சிக்கோ மிகச்சிறப்பான சந்தையாக உள்ளது. மத்திய கிழக்கில் நாம் மிக வேகமாக வளர்ந்து வருகிறோம். தற்போது இந்த போர் காரணமாக மத்திய கிழக்கில் என்ன நடக்கும் என்றே தெரியவில்லை. இதை கணிக்கவே முடியாது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    • இஸ்ரேலுக்கு துணை நிற்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
    • ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 22 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர்

    வாஷிங்டன்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    நேற்றைய 5-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    இதற்கிடையே, இஸ்ரேலுக்கு துணை நிற்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 22 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 22 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 17 பேர் மாயமாகினர். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதை நாம் அறிவோம். அமெரிக்கர்களில் பலரை ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர் என தெரிவித்தார்.

    மேலும், அமெரிக்கர்கள் இஸ்ரேல் செல்வதற்கான பயணத்தை மறு மதிப்பீடு செய்யும்படியும், காசா நகருக்குச் செல்வதை தவிர்க்கும் படியும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.

    • இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
    • ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 22 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர்.

    துபாய்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    நேற்றைய 5-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    இஸ்ரேலுக்கு துணை நிற்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 22 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்தார்.

    அமெரிக்கர்கள் இஸ்ரேல் செல்வதற்கான பயணத்தை மறு ஆய்வு செய்யும்படியும், காசா நகருக்குச் செல்வதை தவிர்க்கும் படியும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையே தொடர்ந்து 6வது நாளாக போர் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இஸ்ரேல் போர் குறித்து சவுதி இளவரசர் முகமது பின் சல்மானும், ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரெய்சி ஆகியோர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். பாலஸ்தீனத்திற்கு எதிரான போர்க்குற்றங்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

    ×