என் மலர்
நீங்கள் தேடியது "சுரங்கம்"
- மற்ற போகங்களில் எள், மணிலா பயிரையும் விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்,
- வசாயிகள் சுரங்க நீரை பயன்படுத்தி 2 போகம் நெல் பயிர் செய்தனர்.
கடலூர்:
வடலூர் அருகே உள்ள கருங்குழி, மேலகொளக்குடி, கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கி உள்ள 260 ஏக்கர் பரப்பில் இசா பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு நீராதாரமாக ஊத்தங்கால், வெள்ளூர், ஊமங்கலம், உள்ளிட்ட கிராமங்களின் மழை நீர் வடிகால் மூலமாக வரும். இதனால் நிரம்பும் ஏரியின் உபரி நீர் நாட்டேரி என்கிற வாலாஜா ஏரியின் மூலமாக, பெருமாள் ஏரி வழி சென்று கடலூர் கடலில் கலக்கும்,மழை காலங்களில் நிரம்பும் நீரைக் கொண்டு, மேலக்கொளக்குடி, கருங்குழி உள்ளிட்ட பகுதியில் ஆயிரத்து 500 ஏக்கரில் ஒருபோகம் சம்பா நெல் பயிரும், மற்ற போகங்களில் எள், மணிலா பயிரையும் விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்,என்.எல்.சி.யில் 2-வது சுரங்கம் அமைக்கப்பட்ட பின்பு, நீர் வரத்துக்கான வழிகள் தடைபட்டது. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர், நீர்வரத்துக்கான ஆதாரங்களாக மாறி, கோடைக்காலங்களில் விவசாயத்திற்கு ஆதாரமாகவும், மழைகாலங்களில் வெள்ளமாக பெருக்கெடுத்து, கருங்குழி, கொளக்குடி, நைனார்குப்பம், மருவாய், ஓணான்குப்பம், திருவெண்ணை நல்லூர், பாதிரிமேடு, கல்குணம் விவசாய நிலங்கள் மூழ்கும் அபாய நிலை தொடர்ந்தது. இருந்தபோதும் விவசாயிகள் சுரங்க நீரை பயன்படுத்தி 2 போகம் நெல் பயிர் செய்தனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக என்எல்சி நிறுவனம் நிறுவனத்தின் மூலம் வெளியேற்றப்படும், தண்ணீர் இந்த ஏரியில் விடாததால், சம்பா பயிர்களையும், குருவை பயிர்களையும் முறையாக செய்ய முடியாமல் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். இயற்கையாக கிடைக்கும் மழைநீரால், ஏரி நிரம்ப வழியும் இல்லை, என்.எல்.சி. கழிவுகளால் ஏரியும் தூர்ந்து மேடாகிபோனது. மழையும் இல்லை, தண்ணீரும் இல்லை, இதனால் சம்பா நெல் பயிரிட்ட விவசாய நிலம் காய்ந்து கரம்பாக கிடக்கிறது, இதனால் நடவு செய்ய முடியாமல் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்த விஷயத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும். தூர்ந்து போன ஏரியினை தூர்வாரி ஆழப்படுத்தவேண்டும். ஏரிக்கு நீர் கிடைக்க வழி செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், விவசாயத்திற்கு 'தண்ணீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் வழி செய்யுமா? விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
- கண்ணிவெடிகள் மற்றும் போரின் போது பொதுமக்கள் மீது வெடிமருந்து தாக்குதல் பற்றிய விழிப்புணர்வு இதன் நோக்கம்.
- கண்ணிவெடி தாக்குதலால் பொதுமக்களின் வாழ்க்கை, சமூக , பொருளாதார வளர்ச்சியில் தடை ஏற்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் சுரங்க நடவடிக்கை சேவை (UNMAS) சார்பில் சர்வதேச சுரங்க விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 4-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது
கண்ணிவெடிகள் மற்றும் போரின் போது பொதுமக்கள் மீது வெடி மருந்து தாக்குதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அமைதியை உருவாக்குதல், தாக்குதலுக்கு உள்ளான ஊனமுற்றோர்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல் இதன் நோக்கம்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண உலகளாவிய சமூகத்தின் முயற்சிகள் இருந்தபோதிலும், கண்ணிவெடி தாக்குதல் பிரச்சினை ஒரு முக்கியமான சவாலாக உள்ளது. கண்ணி வெடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் மற்றும் அமைதியை நிலைநாட்டவும் UNMAS உறுதி கொண்டுள்ளது.
சர்வதேச சுரங்க விழிப்புணர்வு தினம் ஏன் கடைபிடிக்கப்படுகிறது. அதன் கருப்பொருள் என்ன? மற்றும் அதன் வரலாறு நாம் அறிந்து கொள்வது அவசியம்.
கடந்த 2005 டிசம்பர் -8 ந் தேதி ஐ.நா பொது சபை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 4- ந் தேதியை சுரங்க விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கக்கப்படும் என அறிவித்தது. சுரங்கங்கள் மற்றும் போரினால் பொதுமக்கள் கடும் அச்சுறுத்தல் அடைகிறார்கள்.

இதில் கண்ணிவெடி தாக்குதலில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்த ஐக்கிய நாடுகள் சபை பலவித அறிவுரைகள் வழங்கி வருகிறது. மேலும், கண்ணிவெடி தாக்குதலால் பொதுமக்களின் வாழ்க்கை, சமூக , பொருளாதார வளர்ச்சியில் தடை ஏற்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஐக்கிய நாடுகளின் சுரங்க நடவடிக்கை சேவையின் ( UNMAS )செய்து வருகிறது. உலகம் முழுவதும் பொதுமக்கள் அமைதியாக, பாதுகாப்பாக வாழ உரிய மனிதாபிமான உதவிகளை ஐ.நா. அமைப்பு செயல்படுத்தி வருகிறது.

சுரங்க விபத்தில் காயமடைந்து உயிர் பிழைத்தவர்கள், கண்ணி வெடியால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேவையான உதவிகள் செய்து இதன் மூலம் உலகில் அமைதியை நிலை நாட்ட பாடுபட்டு வருகிறது.
இந்த சேவைக்கு 164 நாடுகள் ஒப்புதல் அளித்து உலக அமைதிக்காக ஐ.நா. உடன் பாடுபட்டு வருகின்றன. எனவே இந்நாளில் நாம் அனைவரும் பாதுகாப்பாக வாழ உறுதியேற்போம்.
- லெபனானை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் படை தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
- லெபனானின் தெற்கே அமைந்த பயங்கரவாத சுரங்கத்தை தகர்த்து விட்டோம் என இஸ்ரேல் தெரிவித்தது.
டெல் அவிவ்:
சர்வதேச நாடுகளின் அழுத்தத்தையும் மீறி பாலஸ்தீனம் மற்றும் லெபனான்மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பாலஸ்தீனத்தில் இதுவரை 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலின் நடத்திய பதிலடி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர், ஹிஸ்புல்லா அமைப்பின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி நபில் குவாவக் உள்பட பலர் கொல்லப்பட்டனர்.
லெபனானை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் படை தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், லெபனானின் தெற்கே அமைந்த பயங்கரவாத சுரங்கத்தின் 250 மீட்டர் பகுதியை தகர்த்து விட்டோம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், அவர்கள் சுரங்கத்திற்குள் இருக்கும் காட்சிகள் காணப்படுகின்றன. இதில் சமையலறை ஒன்றும், வசிக்கும் இடம், போருக்கு பயன்படுத்தும் பைகள், குளிர்சாதன பெட்டி ஒன்று மற்றும் பிற பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. ஹிஸ்புல்லாவின் ரத்வான் படைகள் இஸ்ரேலுக்குள் படையெடுக்க பயன்படுத்துவதற்காக இந்த சுரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
- அழகர்மலை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி ?
- எந்த அளவுகோலின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக விளக்கம்.
மதுரை அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திறகு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.
அரிட்டாபட்டி கிராமம், கடந்த 2022ம் ஆண்டு தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டது. 7 மலைகளை கொண்ட இந்த கிராமப்பகுதியில் புராதன சின்னங்கள், அரியவகை பறவைகள் உள்ளன.
அரிட்டாபட்டி பல்லுயிர் பாராம்பரிய தலம் அழகர்மலை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக, மதுரை அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனம் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது
மேலும், மத்திய அரசு அனுமதி அளித்துள்ள குறிப்பிட்ட பகுதி எது என்பது குறித்தும் அது எந்த அளவுகோலின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
- தங்கத்தை தோண்டி எடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
- தங்க இருப்பு சீனாவின் பொருளாதாரம் உயர்வதற்கு உதவியாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் மிகப்பெரிய தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு பிங்ஜியாங் கவுண்டியில் வாங்கு தங்கச் சுரங்கம் உள்ளது.
தரையில் இருந்து 2 ஆயிரம் மீட்டருக்கும் குறைவான ஆழத்தில் அமைந்து உள்ள இந்த சுரங்கத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் தங்கம் குவிந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுரங்கத்தின் முக்கிய பகுதியில் உள்ள மொத்த தங்க இருப்பு தற்போது 300.2 டன்களை எட்டியுள்ள நிலையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இருப்புகளில் 1,000 டன் தங்கம் உள்ளது. இதன் மதிப்பு சுமார் 600 பில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7 லட்சம் கோடி) ஆகும். இந்த தங்கத்தை தோண்டி எடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
இது குறித்து ஹுனான் மாகாண புவியியல் நிறுவனத்தின் துணைத் தலைவர் லியு யோங்ஜுன் கூறும் போது, இந்த கண்டுபிடிப்பு சீனாவின் கனிம ஆய்வு உத்திக்கு கிடைத்த பெரும் வெற்றி என்றார்.
வாங்கு சுரங்கம் சீனாவின் மிக முக்கியமான தங்கச் சுரங்கங்களில் ஒன்றாகும். இங்கு கனிம ஆய்வுக்காக 2020-ம் ஆண்டு முதல், மாகாண அரசாங்கம் 100 மில்லியன் யுவான் (சுமார் ரூ. 115 கோடி) முதலீடு செய்து உள்ளது.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்க இருப்பு சீனாவின் பொருளாதாரம் உயர்வதற்கு உதவியாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
சீன அரசு 2021-2025-ம் ஆண்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வளங்களின் உள்நாட்டு இருப்புக்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. கனிம ஆய்வுக்கான முதலீட்டை ஆண்டுக்கு ஆண்டு 8 சதவீதம் உயர்த்தி 110.5 பில்லியன் யுவானாக (சுமார் ரூ. 1.27 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த என்கவுண்டரில் நான்கு சிறார்கள் காயமடைந்தது உறுதி செய்யப்பட்டது.
- சிறுவனின் தொண்டையில் இருந்து தோட்டா அகற்றப்பட்டது
சத்தீஸ்கரில் 2024 ஆம் ஆண்டில் 287 நக்சலைட்டுகளைக் பாதுகாப்பு படையினர் கொன்றதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் அறிவித்தார்.
இதில் உயர்மட்டத் தலைவர்கள்14 பேரும் அடங்குவர். மேலும் 1,000 பேரைக் கைது செய்யப்பட்டனர் என்றும் ஒரு வருடத்தில் 837 பேர் சரணடைந்தனர் என்றும் அவர் கூறினார். சத்தீஸ்கரில் பாஜக ஆட்சிக்கு வந்து ஒரு வருட நிறைவை ஒட்டி பேசிய அமித் ஷா, மார்ச் 31, 2026 க்குள் நாகசலிசம் ஒழியும் என கவுண்டவுனையும் தந்துள்ளார்.
ஆனால் இந்த வெற்றி உள்ளூர் பழங்குடியினருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொகை குறைதல், மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசின் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் நியாயத்தன்மை பற்றிய விவாதங்கள் சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகின்றன.
நக்சலிசத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அரசின் முயற்சிகள், அப்பாவிப் பொதுமக்களின் பாதுகாப்பு, பழங்குடிப் பகுதிகளின் இராணுவமயமாக்கல் மற்றும் பெருநிறுவன நலன்களுக்காக நடக்கும் அத்துமீறல் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன.
தி ஃப்ரண்ட்லைன் இதழின் அறிக்கைப் படி, என்கவுன்டர்களில் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் எண்ணிக்கை - 2023 இல் 20 இலிருந்து 2024 இல் 287 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நபர்களில் பலர் அப்பாவி பொதுமக்கள், அரங்கேற்றப்பட்ட என்கவுண்டர்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழப்பைக் குறைப்பதில் அரசு வெற்றி பெற்றதாகக் கூறினாலும், உள்ளூர் கிராம மக்கள் மற்றும் ஆர்வலர்கள் இந்த புள்ளிவிவரங்களை மறுக்கின்றனர்.
சத்தீஸ்கரின் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் கொடுத்துள்ள விலை அதிகம். ஜனவரி 2024 இல், தெற்கு சத்தீஸ்கரின் பிஜப்பூரில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு மாத பெண் குழந்தை கொல்லப்பட்டது.
இந்த சம்பவம் ஆண்டு முழுவதும் நிகழ்ந்த இதேபோன்ற துயரங்களின் ஒரு பகுதியாகும். டிசம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் சத்தீஸ்கரின் நாராயண்பூர் மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் உள்ள அபுஜ்மத்தின் கும்மாம்-லேகாவாடா கிராமங்களில் மாவோஸ்யிடுகளை என்கவுன்டர் செய்ததாக பாதுகாப்புப் படையினர் கூறினர். இதில் 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் கொல்லப்பட்ட ஏழு பேரில் ஐந்து பேர் மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பில்லாத பொதுமக்கள் விவசாயிகள் என்று குற்றம் சாட்டியுள்ளனர். இந்த என்கவுண்டரில் நான்கு சிறார்கள் காயமடைந்தது உறுதி செய்யப்பட்டது.
உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, ஒரு சிறுவனின் தொண்டையில் தோட்டா பாய்ந்துள்ளது, இதை மருத்துவர்களின் எக்ஸ் ரே உறுதி செய்தது. டிசம்பர் 20 அன்று, ராய்பூரில் உள்ள DKS சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சிறுவனின் தொண்டையில் இருந்து தோட்டா அகற்றப்பட்டது. இதற்கிடையில், தண்டேவாடாவில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு குழந்தைகள், போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

என்கவுன்ட்டர்களில் கொல்லப்பட்டவர்களில் பலர் மாவோயிஸ்டுகள் அல்ல, அப்பாவி பொதுமக்கள் என்று உள்ளூர் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 2024 இல் என்கவுன்டரில் கொல்லப்பட்ட இளம் பெண் கம்லி குஞ்சம் அதற்கு உதாரணம். அவரது தந்தை சோம்லி குஞ்சம், அவரது மகள் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் வன்முறை அராஜக என்கவுண்டருக்கு அவர் இறையனார் என்றும் கூறுகிறார்
இதுபோல சத்தீஸ்கரின் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளில் வரம்பு மீறிய அதிகாரம் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இப்பகுதியில் வளர்ந்து வரும் இராணுவமயமாக்கல் பழங்குடி சமூகங்களின் உரிமைகளை மீறுகிறது என்றும் , நீதிக்கு புறம்பான கொலைகள் மற்றும் மக்கள் தங்கள் மூதாதையர் நிலங்களில் இருந்து கட்டாயமாக இடம்பெயர்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் நக்சல் கிளர்ச்சியை ஒடுக்குவதை விட சுரங்கத் துறை கார்ப்பரேட் நலன்களை பாதுகாப்பதற்காகவே அதிகம் முனைப்புடன் நடக்கிறது என்று பழங்குடி ஆர்வலர்கள் வாதிடுகின்றனர்.
குறிப்பாக நக்சல்கள் மிகவும் தீவிரமாக செயல்படும் பஸ்தரில், அரசு செய்யும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள், அதிக பாதுகாப்பு முகாம்களை நிறுவுதல் என்பதுடன் அங்கு அதிகரித்துள்ள சுரங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவாக உள்கட்டமைப்பு விரிவாக்கம் ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது
இந்தப் பழங்குடிப் பகுதிகளில் சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் அமைப்பது பல ஆதிவாசிகளால் உள்ளூர் இயற்கை வளங்களை கார்ப்பரேட் நலன்களால் சுரண்டுவதை எளிதாக்கும் ஒரு கருவியாகக் கருதப்படுகிறது. இது உள்ளூர் மக்களிடையே பரவலான எதிர்ப்பைத் தூண்டியுள்ளது.
தி ஃப்ரண்ட்லைன் அறிக்கையின்படி, சட்டவிரோதமாக நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சுரங்கம் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பழங்குடி சமூகங்களின் ஒப்புதல் இல்லாதது குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன.
சத்தீஸ்கர் மாநில பழங்குடியினர் ஆணையத்தின் (CGSTC) அறிக்கையில், 'சர்குஜா மற்றும் சூரஜ்பூர் மாவட்டங்களில் சுரங்கம் தோண்டுவதற்கு போலி ஆவணங்கள் மூலம் ஒப்புதல் பெறப்பட்டது, பஞ்சாயத்துகள் சட்டத்தின் கீழ் பழங்குடியினரின் உரிமைகளை மீறியது.
ஆதிவாசிகள் அவர்களது நிலங்களில் இருந்து கட்டாயமாக இடம்பெயர்வதும், அவர்களின் எதிர்ப்பைக் குற்றமாக கருதுவதும், பழங்குடியினரின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் சட்டப் பாதுகாப்புகளை அரசு புறக்கணிப்பதை எடுத்துக்காட்டுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினரின் வரம்பு மீறிய அதிகாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களின், குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
நக்சலிசத்தை ஒழிப்பதற்காக பாஜக அரசாங்கம் நிர்ணயித்துள்ள காலக்கெடு அப்பாவிகளின் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தும் நடவடிக்கை என பூபேஷ் பாகேல் எச்சரித்துள்ளார்.
அக்டோபர் 2024 இல், பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்பான மூலவாசி பச்சாவ் மஞ்ச் (MBM) ஐ சத்தீஸ்கர் அரசாங்கம் தடை செய்தது.
அரசாங்கம் ஆதரவளிக்கும் வளர்ச்சித் திட்டங்களை எதிர்ப்பது மற்றும் பாதுகாப்பு முகாம்களுக்கு எதிராக எதிர்ப்பைத் திரட்டுவது உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. 2021 இல் சில்கர் கிராமத்தில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 4 பேரை கொன்றது உட்பட தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களை எதிர்த்து இதுபோன்ற அமைப்புகள் போராடி வந்தன.
நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் கார்ப்பரேட் நலன்கள் மற்றும் இராணுவமயமாக்கலுக்கு முன்னுரிமை அளிக்கும் தற்போதைய உத்தி, சத்தீஸ்கரில் பழங்குடியின மக்களின் துன்பத்தை அதிகப்படுத்துகிறது என்று அரசியல் விமர்சகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாதிடுகின்றனர்.
இதற்கு பதிலாக கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை , உள்ளூர் சமூகங்களின் குறைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண மனித உரிமை ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

- ராம் லல்லு யாதவ், ராம் சாகர் பிரஜாபதி என்ற இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
- 7 பேருந்துகள், 4 லாரிகள் ஆகியவற்றுக்கு தீவைத்து எரித்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
மத்திய பிரதேசத்தில் அதானி குழுமத்தின் சுரங்கத் தொழிற்சாலைக்கு சொந்தமான நிலக்கரி எடுத்துச் செல்லும் கனரக லாரி ஏற்படுத்திய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் சிங்ரௌலி மாவட்டத்தில் நேற்று [வெள்ளிக்கிழமை] பிற்பகல் 3 மணியளவில் மாடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அமிலியா காட்டி என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது.
ராம்லல்லு யாதவ், ராம் சாகர் பிரஜாபதி என்ற இருவர் வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது அந்த கனரக லாரி மோதி கவிழ்ந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இருவர் உயிரிழந்த செய்தியறிந்த உள்ளூர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 7 பேருந்துகள், 4 லாரிகள் ஆகியவற்றுக்கு தீவைத்து எரித்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
மேலும் போராட்டக்காரர்கள் தொழிற்சாலை பகுதிக்குள் நுழைய முயன்றனர். ஆனால் போலீசார் அதற்குள் அங்கு வந்து அவர்களை கலைத்தனர். இந்த கலவரத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார் என்றும் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.