என் மலர்
நீங்கள் தேடியது "அரசியலமைப்பு"
- எஸ்டி, எஸ்சி, பிற்படுத்தப்பட்டோர் பிரிவு இளைஞர்களுக்கு கல்வி நிறுவனங்களில் ஒதுக்கீடு வழங்க முடியும் என சட்டத்திருத்தம் கொண்டு வந்தோம்.
- எங்களுடைய கோரிக்கை மத்திய அரசு சட்டப்பிரிவு (15)5ஐ அமல்படுத்த வேண்டும் என்பதுதான்.
காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2006ஆம் ஆண்டு மத்திய அரசு, அரசியலமைப்பில் கொண்டு வந்த திருத்தத்தை நாடு தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது அர்ஜூன் சிங் கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.
நமது அரசியிலமைப்பின் சட்டப்பிரிவு 15(5)ல், அரசு அல்லது தனியார் கல்வி நிறுவனங்கள் என எந்த நிறுவனங்களாக இருந்தாலும் சரி எஸ்டி, எஸ்சி, பிற்படுத்தப்பட்டோர் பிரிவு இளைஞர்களுக்கு ஒதுக்கீடு வழங்க முடியும் எனத் திருத்தப்பட்டது.
இந்த புரட்சிக்கரமாக திருத்தத்தை, அரசு கல்வி நிறுவனங்கள், டெல்லி பல்கலைக்கழகம், ஐஐடி-க்கள், ஐஐஎம்-க்கள் ஆகியவற்றில் நாங்கள் முதற்கட்டமாக செய்தோம்.
2014ஆம் ஆண்டு ஜனவரியில் உச்சநீதிமன்றம் ஒருமனதாக அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தம், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது அல்ல எனத் தெரிவித்திருந்தது.
அதன்பின் தேர்தல் நடைபெற்றது. மோடி அரசு வந்தது. 11 வருடங்கள் கடந்தாகிவிட்டன. இது முற்றிலும் புறந்தள்ளப்பட்டுள்ளது. எங்களுடைய கோரிக்கை மத்திய அரசு சட்டப்பிரிவு (15)5ஐ அமல்படுத்த வேண்டும் என்பதுதான்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
- பெரம்பலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம், இணைந்து இந்திய அரசியலமைப்பு நாள் நிகழ்ச்சியை நடத்தியது.
- இந்திய அரசியலமைப்பு குறித்த வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம், இணைந்து இந்திய அரசியலமைப்பு நாள் நிகழ்ச்சியை நடத்தியது.
பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் கீர்த்தனா முன்னிலை வகித்தார். இதில் மாணவ,மாணவிகளுக்கு இந்திய அரசியலமைப்பு குறித்த வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயிற்சி மைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் தமிழ் பாக்யா வரவேற்றார். நேருயுகேந்திரா கணக்காளர் தமிழரசன் நன்றி கூறினார்.
- டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி அறிவிப்பு.
- தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் எந்த ஆதாரமும் இல்லாமல் அமலாக்க இயக்குநரகத்தால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது.
அந்த வகையில், "நாட்டில் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி இன்று ஊடக பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்து ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எக்ஸ், பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடக கணக்குகளில் தங்கள் சுயவிவரப் படத்தை மாற்றுவார்கள்.
சுயவிவரப் படத்தில், "மோடியின் மிகப்பெரிய பயம் கெஜ்ரிவால்" என்ற தலைப்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இருப்பது போன்று உள்ளது.
நாட்டிலேயே பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விடக்கூடிய ஒரே தலைவர் கெஜ்ரிவால் மட்டுமே. எனவே, லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் எந்த ஆதாரமும் இல்லாமல் அமலாக்க இயக்குநரகத்தால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
கலால் மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்திய போதிலும் "ஒரு பைசா" ஆதாரத்தை கூட சமர்ப்பிக்க முடியவில்லை.
பாஜகவும் மோடியும் கெஜ்ரிவாலை நசுக்க விரும்புகின்றனர். ஆம் ஆத்மி, நாட்டில் "சர்வாதிகாரத்திற்கு" எதிரான போரை நடத்தி வருகிறது.
ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்றுவது கெஜ்ரிவாலின் போராட்டம் மட்டுமல்ல, கட்சியின் சமூக ஊடக டிபி பிரச்சாரத்தில் சேரவும் மக்களை அவர் வலியுறுத்துகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.ஜனதா இந்த புத்தகத்தை (கையில் வைத்திருந்த அரசியலமைப்பு புத்தகத்தை பார்த்து) கிழிக்க விரும்புகிறது.
- பா.ஜனதா வெற்றி பெற்றால் அவர்கள் இடஒதுக்கீட்டை நீக்கி விடுவார்கள்.
காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று ஒடிசா மாநிலம் போலங்கீரில் நடைபெற்று தேர்தல் பிரசார பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதா இந்த புத்தகத்தை (கையில் வைத்திருந்த அரசியலமைப்பு புத்தகத்தை பார்த்து) கிழிக்க விரும்புகிறது. ஆனால் காங்கிரஸ் மற்றும் இந்திய மக்களாகிய நாம் அதை அனுமதிக்கமாட்டோம். பா.ஜனதா வெற்றி பெற்றால் அவர்கள் இடஒதுக்கீட்டை நீக்கி விடுவார்கள். பொது நிறுவனங்கள் தனியார் மயமாகும். நாட்டை 22 பணக்காரர்கள் இயக்குவார்கள். இதனால் மக்களுடைய அரசாங்கம் ஆட்சி அமைக்க வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
- பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பைக் கிழித்து எறிந்துவிடும் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.
- மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சியும் என்டிஏ கூட்டணியின் பாஜக கட்சியும் ஒன்றை ஒன்று கடுமையாக விமர்சித்து வருகிறது. காங்கிரஸ் வாக்கு ஜிகாத்தில் ஈடுபடுகிறது என்று பாஜக குற்றம்சாட்டிவரும் நிலையல்ல பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பைக் கிழித்து எறிந்துவிடும் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில் என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பேட்டியில் அவர் பேசுகையில், 1976 ஆம் ஆண்டில், முதல் முறையாக இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் மாற்றம் செய்யப்பட்டது. அதை இந்திரா காந்திதான் செய்தார்.

ஆனால் இப்போது தேவையில்லாமல், பாஜக அரசியலமைப்பை மாற்றும் என்று இதை தேர்தல் பிரச்சனையாக்க காங்கிரஸ் முயல்கிறது என்று கூறினார். முன்னதாக கடந்த 1976 ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சி காலத்தில், இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் 'சோசியலிச' 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டு 'தேசத்தின் ஒற்றுமை' என்ற வாக்கியம், 'தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு' என்று மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை பாஜக ஒழிந்துவிடும் என்ற காங்கிரஸின் விமர்சனம் குறித்துப் பேசிய ராஜ்நாத் சிங், இட ஒதுக்கீட்டை ஏன் ஒழிக்கப்போகிறோம்? ஓபிசி,எஸ்.சி, எஸ்டிக்கு இடஒதுக்கீடு தேவை, ஆனால் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் பேசுகிறார்கள். எந்தச் சூழ்நிலையிலும் மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்க மாட்டோம் என்று தெரிவித்தார்.
- காங்கிரஸ் மோடியை மனத்தவளாவில் நம்பிக்கை இழக்கச் செய்துள்ளதாகவும், அரசியலமைப்பை மதித்துச் செயல்பட நிர்ப்பந்தித்துள்ளதாகவும் பேசியிருந்தார்
- ஒரே நாட்டுக்கு 2 வகையான சட்டம் மற்றும் கோடி இருப்பதைக் காங்கிரஸ் ஆதரிக்கிறதா என்று விளக்கம் கொடுக்க வேண்டும்
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசங்களாக பாஜக அரசால் பிரிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. 90 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீருக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் பரூக் மற்றும் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியோடு காங்கிரஸ் கூட்டணி அமைத்து களம் காண்கிறது.
ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டு இந்த கூட்டணியை உறுதி செய்துள்ளனர். காஷ்மீரில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் மோடியை மனத்தவளாவில் நம்பிக்கை இழக்கச் செய்துள்ளதாகவும், அரசியலமைப்பை மதித்துச் செயல்பட நிர்ப்பந்தித்துள்ளதாகவும் பேசியிருந்தார். மேலும் நேற்று உத்தரப் பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு மூலம் இட ஒதுக்கீட்டை மேம்படுத்த முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாடு கட்சிகளின் கூட்டணி குறித்தும், ராகுல் காந்தியின் அரசியலமைப்பு பேச்சு குறித்தும் கடுமையாக விமர்சித்து பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சேசாத் பூனாவாலா [Shehzad Poonawalla] வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ராகுல் காந்தி அரசியலமைப்பு குறித்துப் பேசுவது, சாத்தான் பகவத்கீதையையும், குரானையும் ஓதுவது போன்றது என்று சாடியுள்ளார்.
மேலும் அவரது எக்ஸ் பதிவில், ராகுல் உண்மையிலேயே அரசியலமைப்பு மற்றும் இட ஒதுக்கீடு குறித்து அக்கறை கொண்டிருந்தால் காங்கிரஸ் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி பற்றி விளக்கம் கொடுத்தாக வேண்டும். அதாவது, தேசிய மாநாட்டுக் கட்சியின் கொள்கைகளான, சட்டப்பிரிவு 370 வதை திரும்பக் கொண்டு வருவதையும், ஒரே நாட்டுக்கு 2 வகையான சட்டம் மற்றும் கோடி இருப்பதைக் காங்கிரஸ் ஆதரிக்கிறதா என்று விளக்கம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் ஆகியோர் இந்த மனுவை அளித்திருந்தனர்.
- அடுத்து வரும் அரசுகளும், தங்களுக்கு ஏற்ப முகவுரையை தொடர்ந்து திருத்தம் செய்யும் வாய்ப்பு உள்ளது.
இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் உள்ள 'மதச்சார்பற்ற' மற்றும் 'சோஷியலிச' என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் ஆகியோர் இந்த மனுவை அளித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த மனுவானது உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. 1976 ஆம் ஆண்டு எமர்ஜென்சி காலத்தில் 42 வது சட்டத்திருத்தத்தின் மூலம் இந்திரா காந்தி அரசால் பாராளுமன்றத்தில் உரிய விவாதம் நடத்தப்படாமல் தன்னிச்சையாக இந்த வார்த்தைகள் முகவுரையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இது செல்லாது. அவ்வாறு செல்லும் என்றால், அடுத்து வரும் அரசுகளும், தங்களுக்கு ஏற்ப முகவுரையை தொடர்ந்து திருத்தம் செய்யும் வாய்ப்பு உள்ளது. முகவுரையை எழுதியபோது, சோஷலிசம் என்ற வார்த்தையை சேர்த்தால், மக்களின் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படும் என்பதாலேயே அதை அம்பேத்கர் சேர்க்கவில்லை. எனவே 42வது சட்டத் திருத்தம் செல்லாது என்று அறிவித்து, சோஷலிசம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய வார்த்தைகளை நீக்கி 1949 இல் கொண்டுவரப்பட்ட முகவுரையைத் தொடர உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதன்பிறகு பேசிய நீதிபதிகள், உங்களுக்கு இந்தியா மதச்சார்பற்று இருப்பது பிடிக்கவில்லையா அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியே மதச்சார்பின்மை. அரசியலமைப்பு முகவுரையில் உள்ள சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய வார்த்தைகளும் மதச்சார்பின்மை என்பதையே குறிக்கின்றன.
எனவே அதை நீக்க உத்தரவிட விடமுடியாது. அதே நேரம் மனுதாரர் சுட்டிக்காட்டியபடி முகவுரையை சட்டத் திருத்தம் வாயிலாக திருத்தம் செய்ய முடியுமா என்பது குறித்து ஆராயப்படும் என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்துத்துவா என்ற வார்த்தையை இந்திய அரசியலமைப்பு என்று பொருள்படும் பாரதிய சம்விதானத்வா என்பதாக மாற்றக்கோரிய மற்றொரு மனுவும் உச்சநீதிமன்றத்தால் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது.
- பொது நலனுக்காக தனிநபரின் சொத்தை அரசு கையகப்படுத்த முடியாது என்று கூறுவது ஆபத்தானது என்று சந்திரசூட் முன்பு கூறியிருந்தார்.
அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசாங்கம் கையகப்படுத்திட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தனியாருக்குச் சொந்தமான சொத்துக்களைக் கையகப்படுத்தி பொது நலனுக்காக பொதுப்பயன்பாட்டுக்கு உபயோகப் படுத்த மாநில அரசுகளுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 39(b) (c) அதிகாரமளிக்கிறது. இந்த உரிமையை சட்டப்பிரிவு 31C பாதுகாக்கிறது. தனியார் சொத்துக்களும் இதில் சட்டப்பிரிவில் அடங்கும் என்பதை 1978 இல் வழங்கப்பட உச்சநீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தியது.
இதை எதிர்த்து சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கு ஒன்று போடப்பட்டது. அதாவது, 1986-ம் ஆண்டு மகாராஷ்டிரா அரசு, வீட்டு வசதி திட்டத்தில் திருத்தம் ஒன்றை மேற்கொண்டது. பொது சீரமைப்புக்காக சில குறிப்பிட்ட தனியார் சொத்துகளை அரசு கையகப்படுத்தும் என்பதே அந்த திருத்தும். இதை எதிர்த்து மும்பையில் உள்ள சொத்து உரிமையாளர்கள் சங்கம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
1991 இல் இந்த வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்றம் , ஏழைகளுக்கு வீடு வழங்குவது என்பது அரசின் கடமை என்று கூறி அம்மனுவைத் தள்ளுபடி செய்தது. இதையடுத்து 1992-ம் ஆண்டு சொத்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் இதர பணக்காரர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகள் ஒன்றாக இணைக்கப்பட்டு இதுவரை உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலிருந்து வந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இந்த வழக்கானது கடந்த ஏப்ரல் முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று நடந்த விசாரணையில், நலனுக்காகவே இருந்தாலும் எல்லா தனியார் சொத்துக்களையும் அந்த சட்டப்பிரிவு வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநிலங்கள் கைப்பற்ற முடியாது என்று தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது. சந்திரசூட் உள்ளிட்ட 7 நீதிபதிகள் இந்த தீர்ப்பை ஆதரித்த நிலையில் அமர்வில் இடம்பெற்ற நீதிபதி சுதான்சு துளியா இந்த தீர்ப்பில் இருந்து மாறுபட்டார்.
முன்னதாக கடந்த ஏப்ரலில் நடந்த விசாரணையின்போது , பொது நலனுக்காக தனிநபரின் சொத்தை அரசு கையகப்படுத்த முடியாது என்று கூறுவது ஆபத்தானது என்று தலைமை நீதிபது சந்திரசூட் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.
மக்களவை தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, தனியார் சொத்துகளான வீடுகள், தங்கம், வாகனங்கள் என அனைத்தையும் அபகரித்து சொத்து மறுபகிர்வு திட்டத்தன்மூலம் மற்றவர்களுக்கு வழங்கிவிடும். பெண்களின் தாலியையும் அவ்வாறு பறிக்கும் என்று காங்கிரஸ் மீது பரபரப்பான விமர்சனத்தை முன்வைத்தார். இதனையொட்டி இந்த 30 ஆண்டுகால பழமையான வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
- நாங்கள் அம்பேத்கரின் அரசியலமைப்பை மாற்றமாட்டோம். வேறு யாரையும் மாற்ற விடமாட்டோம்.
- அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியாது.
சுயநலனுக்காக இந்திய அரசியலமைப்பை சிதைத்த காங்கிரஸ், தற்போது பா.ஜ.க. மீது குற்றம்சாட்டுவதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கடோல் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் சரன்சிங் தாகூரை ஆதரித்து மத்திய அமைச்சரான நிதின் கட்கரி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
தேர்தல் கூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது:-
பா.ஜ.க. கட்சி அரசியலமைப்பு மாற்றும் என காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. நாங்கள் அம்பேத்கரின் அரசியலமைப்பை மாற்றமாட்டோம். வேறு யாரையும் மாற்ற விடமாட்டோம். அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியாது.
அரசியலமைப்பின் முக்கிய அம்சங்களான பேச்சு சுதந்திரம், ஜனநாயகம், சமூகநீதி, மதசார்பின்மை போன்ற அடிப்படை உரிமைகளை யாராலும் மாற்ற முடியாது. எமர்ஜென்சியின்போது இந்திரா காந்தி அரசியலைமைப்பை சிதைத்தார். நாட்டின் வரலாற்றில் அரசியலமைப்பை சிதைத்த பாவத்தை செய்த காங்கிரஸ்தான் இப்போது நம் (பா.ஜ.க.) மீது குற்றம் சுமத்துகிறது.
நீங்கள் ராம ராஜ்ஜியத்தை நிறுவ விரும்பினால் அது தலைவர்கள் கையில் இல்லை. மக்கள் கையில் உள்ளது. சாதி, இனம், மதம், மொழி அடிப்படையில் வாக்களிக்கக் கூடாது. மனிதன் ஜாதியால் பெரியவன் அல்ல அவனுடைய குணங்களால் மட்டுமே பெரியவன். தீண்டாமை, சாதி வெறி ஒழிக்கப்பட வேண்டும்.
நீங்கள் உணவு மற்றும் ஆரோக்கியத்திற்காக சிறந்த நபரிடம் அவர்களின் சாதியைப் பார்க்காமல் செல்கிறீர்கள். நேர்மையான, ஊழலற்ற தலைவர்களையும், கட்சியையும் தேர்ந்தெடுக்கும் வரை உங்கள் எதிர்காலம் மாறாது
இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.
- அரசியலமைப்பை படித்திருந்தால் இப்படி நடந்துகொள்ள மாட்டார்.
- பெண்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.
மும்பை:
மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நந்தூர்பார் பகுதியில் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்க்கையில் இந்திய அரசியலமைப்பச் சட்டத்தை படித்திருக்க மாட்டார். அதனால் அவருக்கு அரசியலமைப்புப் புத்தகம் வெற்று புத்தகமாகத் தெரிகிறது.
அரசியலமைப்புப் புத்தகம் வெறுமையானது அல்ல. ஆயிரம் ஆண்டுகால சிந்தனைகளை உள்ளடக்கியுள்ளது. இதில் இந்தியாவின் ஆன்மாவும், பிர்சா முண்டா, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், மகாத்மா காந்தி போன்ற தேசிய தலைவர்கள் முன்வைத்த கொள்கைகளும் அடங்கியுள்ளன.
இதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது அவருக்கு தெரியாது. அதனால்தான் இதனை வெற்றுப் புத்தகம் என்கிறார்.
ராகுல் சிவப்பு புத்தகத்தைக் காண்பிப்பதாக மோடி பேசுகிறார். இது எந்த வண்ணத்தில் உள்ளது என்பது முக்கியமல்ல. அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதே முக்கியம். அதைப் பாதுகாக்க நாங்கள் எங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம்.
மணிப்பூர் மாநிலம் ஒரு ஆண்டுக்கும் மேலாக எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி அங்கு செல்லவில்லை. அரசியலமைப்பை படித்திருந்தால் இப்படி நடந்துகொள்ள மாட்டார்.
பழங்குடியினரை ஆதிவாசிகளுக்குப் பதிலாக வனவாசிகள் என்று குறிப்பிட்டு அவமதிக்கிறார்கள்.
காங்கிரஸ் கூட்டணி தேர்தல் அறிக்கையின்படி பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு ரூ.3,000 மாதாந்திர நிதி உதவி, பெண்களுக்கு பஸ்சில் இலவச பயணம், ரூ.3 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி, வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000 போன்ற நலத்திட்டங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
- குடிமக்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை வழங்குவது அரசாங்கத்தின் பணி.
- அரசியலமைப்பில் எழுதப்பட்டதை நாங்கள் செய்கிறோம் என்றார் ராகுல் காந்தி.
மும்பை:
மகாராஷ்டிர மாநில சட்டசபைத் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. அங்கு பா.ஜ.க. [மகாயுதி] கூட்டணிக்கும், காங்கிரசின் மகா விகாஸ் அகாடி இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்திராபூர் பகுதியில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நாட்டின் குடிமக்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை வழங்குவது அரசாங்கத்தின் பணி என்று அரசியலமைப்பில் எழுதப்பட்டுள்ளது.
அதில் எழுதப்பட்டதை நாங்கள் செய்கிறோம். செல்வம் பகிர்ந்தளிக்கப்பட்டால் அனைவருக்கும் சமமாக வழங்கப்படும் என்று அதில் எழுதப்பட்டுள்ளது.
அரசியலமைப்பில் எழுதப்பட்ட முதல் வரி இந்த நாடு ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமானது. அதன் முதல் வரி இந்த நாடு அதானி, அம்பானிக்கு சொந்தம் என்பது அல்ல என தெரிவித்தார்.
- ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்தபோது மைக் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்தது. 10 நிமிடங்கள் வரை அவரது பேச்சு தடைபட்டது
- மக்கள் கொலை செய்ய வேண்டும், பொய்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்று எங்காவது எழுதப்பட்டிருக்கிறதா?
இந்திய அரசியல் அமைப்பு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் அரசியல் கட்சிகள் மும்முரமாக நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் சார்பிலும் அரசியலமைப்பு சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.
அரசியல் சாசனத்தின் நகலை காட்டி தனது உரையைத் தொடங்கிய ராகுல் காந்தி, மோடி மற்றும் பாஜக அரசு அரசியலமைப்பு தினத்தையொட்டி பாராளுமன்றத்தில் நான் உறுதியாகக் கூறுகிறேன், மோடி அரசியலமைப்பைப் படிக்கவே இல்லை. இந்தப் புத்தகத்தைப் படித்திருந்தால், அவர் தற்போது ஒவ்வொரு நாளும் செய்துவருவதைச் செய்ய மாட்டார்.
அம்பேத்கர், ஜோதிராவ் புலே, புத்தர் மற்றும் காந்திஜி ஆகியோரால் முன்வைக்கப்பட்ட சமூக அதிகாரமளிக்கும் சிந்தனைகள் அரசியல் அமைப்பில் உள்ளது. உண்மை மற்றும் அகிம்சை அரசியலமைப்பில் உள்ளது. இதில் சாவர்க்கரின் குரல் எங்கு உள்ளது? வன்முறையைப் பயன்படுத்த வேண்டும், மக்கள் கொலை செய்ய வேண்டும், பொய்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்று எங்காவது எழுதப்பட்டிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்தபோது மைக் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்தது. 10 நிமிடங்கள் வரை அவரது பேச்சு தடைபட்டது, மைக் சரியப்பட்ட பின்னர் பேசாத தொடங்கிய அவர், இந்த நாட்டில் தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் , ஏழைகள் என்று யாருக்காக பேசினாலும் மைக் அணைக்கப்படுகிறது, அப்படி அணைக்கப்படும் போது என்னை இருக்கையில் அமரும்படி ஏராளமானோர் கூறுகின்றனர்.
அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது இதுதான், நான் அமர மாட்டேன். நான் தொடர்ந்து நிற்பேன். உங்கள் விருப்பப்படி மைக்கை அணைத்துக் கொள்ளுங்கள். நான் பேச வேண்டியதை பேசியே தீர்வேன் என்று தெரிவித்தார்.
முன்னதாக மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ராகுல் காந்தி மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஆன பிறகு, ராகுல் காந்தி பேசும்போது மைக் ஆப் செய்யப்பட்டது, அவரின் பேச்சால் கொதித்த பாஜவினர் அவரை அமரும்படி கூச்சலிட்டனர். ராகுல் காந்தி பேசும்போது மைக்கை ஸ்விட்ச் ஆஃப் செய்வதாக சபாநாயகர் மற்றும் மோடி அரசு மீது காங்கிரஸ் சாட்டியது.