search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 94689"

    திருமங்கலம் பகுதிகளில் திடீரென பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    திருமங்கலம்

    கடந்த சில நாட்களாக  அக்னி வெயில் கொளுத்தி வந்த  அக்னி நட்சத்திரம் நேற்று முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு திடீரென மதுரை மாவட்டத்தில் பல இடங்க ளில் பலத்த மழை பெய்தது.

    திருமங்கலம், சாத்தங்குடி, கப்பலூர்,மேலக்கோட்டை, உச்சப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மழையில் நனைந்து அவதிபட்டனர்.

     மேலும் சாலைகளில் அதிக அளவில் தண்ணீர் சென்றதால் மிகவும் சிரமப்பட்டு வாகனங்களை ஓட்டி சென்றனர். இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளுகுளு காற்று வீசியது.கோடை காலத்திலும் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • ராஜபாளையம், சிவகாசியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
    • சில இடங்களில் நெல் அறுவடை முடிவடையாமல் இருப்பதால் மழையின் காரணமாக விளைந்த நெற்பயிர்கள் சேதமானதாக விவசாயிகள் சிலர் கவலை அடைந்துள்ளனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் கடும் வெயில் அடித்தது. இந்த நிலையில் மாலை 4.30 மணி அளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு மழை பெய்தது.

    இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்ேபாது பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் ராஜபாளையம்-தென்காசி தேசிய நெடுஞ்சாலை, காந்தி சிலை ரவுண்டானா, சங்கரன்கோவில் விலக்கு, பஞ்சு மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. ராஜபாளையம் பழைய நீதிமன்ற பகுதி உள்ளிட்ட சில இடங்களில் மரங்ள் சாலையில் முறிந்து விழுந்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் இருசக்கர வாகனங்களை இயக்கி செல்ல மிகவும் சிரமப்பட்டனர். கடந்த சில நாட்களாக விட்டு,விட்டு மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது.

    தற்போது அறுவடை முடிந்து பின்னர் அடுத்த சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பெய்த மழை ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் சில இடங்களில் நெல் அறுவடை முடிவடையாமல் இருப்பதால் மழையின் காரணமாக விளைந்த நெற்பயிர்கள் சேதமானதாக விவசாயிகள் சிலர் கவலை அடைந்துள்ளனர்.

    சிவகாசியிலும் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் மழைநீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் போது ரிசர்வ்லைன் பகுதியில் இடி விழுந்ததில் பல ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் அருகில் இருந்த மின் கம்பங்கள் சேதமடைந்து அந்தப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு மரங்களை அப்புறப்படுத்தினர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்.
    • சூறை காற்றுடன் பெய்த பலத்த மழையில் பழமையான மரங்கள் சாய்ந்து விழுந்தன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், காரியாபட்டி ஆகிய பகுதிகளில் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    இதில் பழமையான மரங்கள் சாய்ந்து விழுந்தன. சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    சிவகாசி 11, விருதுநகர் 20.8, ராஜபாளையம் 20, காரியாபட்டி 30.2, வெம்பக்கோட்டை 23.2, கோவிலாங்குளம் 19.8. மாவட்டத்தில் 175 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.

    • திருமங்கலம் அருகே மரம் விழுந்து அரசு பள்ளிகட்டிடம் சேதமடைந்துள்ளது.
    • இன்று காலை இந்த கட்டிடத்தின் பின்புறமுள்ள பகுதியில் பள்ளி வழக்கம்போல் செயல்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் மழை பெய்தது.

    ஒரு சில இடங்களில் மழைக்கு மரங்கள் கீழே விழுந்தன. திருமங்கலம் அருகே பெரிய ஆலங்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு இருந்த பழமையான மரம் நேற்று பெய்த மழைக்கு பெயர்ந்து பள்ளி கட்டிடத்தின் மீது விழுந்தது.

    இரவு நேரம் என்பதால் ஆசிரியர்கள், மாணவர்கள் இல்லை. இதனால் பெரிய அளவில் அசாம்பாவிதங்கள் எதும் ஏற்படவில்லை.

    இன்று காலை இந்த கட்டிடத்தின் பின்புறமுள்ள பகுதியில் பள்ளி வழக்கம்போல் செயல்பட்டது. கட்டிடத்தின் மீது விழுந்த மரத்தை ஊழியர்கள் அகற்றினர்.

    பரமத்திவேலூர் பகுதிகளில் திடீர் மழையால் சாலையோர கடைக்காரர்கள் பாதிப்படைந்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், அண்ணா நகர், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், சோழசிராமணி, பெருங்குறிஞ்சி, கபிலர்மலை, பரமத்தி, மணியனூர், கந்தம்பாளையம், பாலப்பட்டி ,மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சுமார் 6 மணிக்கு மேல் லேசான சாரல் மழை பெய்தது. அதனை தொடர்ந்து கனமழை பெய்தது.

    கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீர் மழையால் வெப்ப சீதோசண நிலை மாறி குளிர்ந்த காற்று வீச ஆரம்பித்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் கிராமப்புறங்களில் பயிர் செய்யப்பட்டு இருந்த பல்வேறு பணப்பயிர்கள் வெயிலின் காரணமாக வாடிய நிலையில் இருந்தது. மழையின் காரணமாக வாடிய பயிர்கள் துளிர்விட ஆரம்பித்துள்ளது.

    மழையின் காரணமாக சாலையோரத்தில் போடப்பட்டிருந்த டிபன் கடைகள், பலகாரக் கடைகள், பழக்கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். அதேபோல் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.

    ×