என் மலர்
நீங்கள் தேடியது "சுனிதா வில்லியம்ஸ்"
- கடந்த 10 நாட்களாகச் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் இருந்தனர்.
- ஆக்ஸியம் திட்டத்தில் இந்தியரான சுபன்ஷு சுக்லா விண்வெளிக்குச் செல்ல இருப்பது மிகவும் அருமையான விஷயம்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.
8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்க வேண்டியதாயிற்று. அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர்.
கடந்த மார்ச் 18 ஆம் தேதி ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். கடந்த 10 நாட்களாகச் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் இருந்தனர்.
இந்நிலையில் விண்வெளி நிலையத்தில் இருந்த அனுபவம் பற்றி சுனிதா வில்லயம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளனர்.
அதில் விண்வெளியில் இருந்து இந்தியா பார்ப்பதற்கு எப்படி இருந்தது என்ற கேள்விக்கு பதில் அளித்த சுனிதா, "விண்வெளியில் இருந்து பார்ப்பதற்கு இந்தியா அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் இமயமலைக்கு மேல் நாங்கள் வரும்போது, புட்ச் வில்மோர் அருமையான புகைப்படங்களை எடுத்தார்.

கிழக்கிலிருந்து மும்பை, குஜராத்தின் மேற்பரப்பில் செல்லும்போது அழகிய கடற்கரையைக் கண்டோம். இரவு நேரங்களில் பெரிய நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை இந்தியா ஒளிந்தபடி இருக்கும்" என்று தெரிவித்தார்.
மேலும் இந்தியாவுக்கு அடுத்து பயணம் செய்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், எனது தந்தையின் சொந்த நாட்டுக்குத் சென்று மக்களை சந்தித்து உற்சாகமடைவேன் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் ஆக்ஸியம் திட்டத்தில் இந்தியரான சுபன்ஷு சுக்லா விண்வெளிக்குச் செல்ல இருப்பது மிகவும் அருமையான விஷயம். அவர் ஹீரோவாக திகழ்வார்.
அவருக்கும் உங்களுக்கு அங்கிருந்து இந்தியா எப்படி உள்ளது என்பதை கூறுவார். இந்தியர்களுடன் எனது அனுபவங்களை பகிர ஆர்வமுடன் இருக்கிறேன். நிச்சயம் ஒரு நாள் அது நடக்கும். விண்வெளியில் கால்பதிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு நான் உதவுவேன் என்று தெரிவித்துள்ளார்.
- சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர்.
- சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டார்.
விண்வெளியில் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.
8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்க வேண்டியதாயிற்று. அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர்.
எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டார்.
விண்வெளியில் 9 மாதங்கள் எப்படி சுனிதா வில்லியம்ஸ் உயிர் பிழைத்தார். எவ்வாறு அவர் உணவு உட்கொண்டார் என்று மக்களுக்கு பல்வேறு கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில், விண்வெளியில் பெண்கள் தங்கியிருக்கும் சமயத்தில் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்படுமா? அப்படி மாதவிடாய் ஏற்பட்டால் வெளியேறும் ரத்தம் விண்வெளியில் மிதக்குமா? என்று பெண்களுக்கு கேள்விகள் எழலாம்.
விண்வெளியில் தங்கியிருக்கும் பெண்கள் தங்களுக்கு மாதவிடாய் ஏற்பட வேண்டுமா? இல்லையா? என்பதை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும். மாதவிடாய் வேண்டாம் என்று முடிவு செய்தால் ஹார்மோன் மாத்திரைகளை பெண்கள் எடுத்து கொள்ளலாம். இது பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது.
அதே சமயம் விண்வெளியில் இருக்கும் பெண்கள் மாதவிடாய் ஏற்பட வேண்டும் என்று நினைப்பதும் அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும். பூமியில் நிகழ்வது போலவே விண்வெளியில் இயல்பாகவே மாதவிடாய் ஏற்படும். அந்த சமயத்தில் பெண்கள் சானிட்டரி பேடுகளை பயனபடுத்திக்கொள்ளலாம்.
- வெறும் 8 நாள் பயணமாக சென்றவர்கள் விண்கலம் செயலிழந்ததால் 286 நாட்கள் அங்கேயே இருந்தனர்.
- சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பத்திரமாக பூமிக்கு அழைத்து வந்ததற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்குக்கு நன்றி தெரிவித்தார்.
வாஷிங்டன்:
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களுக்கும் மேலாக சிக்கி தவித்து வந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய 2 பேரும் நீண்ட போராட்டத்துக்கு பிறகு கடந்த 19-ந்தேதி வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.
வெறும் 8 நாள் பயணமாக சென்றவர்கள் விண்கலம் செயலிழந்ததால் 286 நாட்கள் அங்கேயே இருந்தனர். அதாவது, திட்டமிட்டதை விட கூடுதலாக 278 நாட்கள் அவர்கள் விண்வெளியில் இருந்தனர்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த ஜனாதிபதி டிரம்பிடம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் விண்வெளியில் கூடுதல் காலம் தங்கியிருந்ததற்காக அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
"இதை யாரும் என்னிடம் குறிப்பிடவில்லை. தேவைப்பட்டால், நான் அதை எனது சொந்த பணத்தில் இருந்து கொடுப்பேன்" என கூறினார்.
மேலும் அவர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பத்திரமாக பூமிக்கு அழைத்து வந்ததற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்குக்கு நன்றி தெரிவித்தார்.
இதனிடையே விண்வெளியில் கூடுதல் காலம் இருந்ததற்காக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு நாள் ஒன்று 5 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.430) சிறப்பு சம்பளமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.
அதாவது அவர்களின் ஆண்டு வருமானமான 1,52,258 டாலர்களுடன் (ரூ.1 கோடியே 30 லட்சம்) கூடுதலாக 1,430 டாலர்கள் (ரூ.1.22 லட்சம்) வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
- சர்வதேச விண்வெளி நிலையத்தில் 287 நாட்களாக சுனிதா வில்லியம்ஸ் தங்கியிருந்தார்.
- சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 வீரர்கள் புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரையிறங்கினர்.
சென்னை:
விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ். எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 287 நாட்களாக தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பூமிக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து பால்க்கன்-9 எனும் ராக்கெட்டுடன், டிராகன் எனும் விண்கலம் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது. இதன்மூலமாக சுனிதா வில்லியம்ஸ் அவர்களும், புட்ச் அவர்களும், அங்கிருந்த மேலும் 2 வீரர்களோடு இணைந்து பயணித்து, பத்திரமாக புளோரிடா அருகே கடலில் தரையிறங்கினர். பூமி திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பத்திரமாக பூமி திரும்பி சுனிதா வில்லியம்ஸ்-க்கு கவி பேரரசு வைரமுத்து தனது ஸ்டைலில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில்,
சுனிதா வில்லியம்ஸின்
பூமி திரும்பல்
ஒரு பெண்ணின் வெற்றியோ
நாட்டின் வெற்றியோ அல்ல;
மகத்தான மானுடத்தின் வெற்றி
அவர்
மண்ணில் இறங்கும்வரை
இரண்டு மடங்கு துடித்தது
பூமியின் இருதயம்
பெண்ணினத்துக்குக்
கூடுதல் பெருமை சேர்த்துவிட்டார்
அந்த வேங்கை மகள்
அவரது உயரம்
நம்பிக்கையின் உயரம்
அவரது எடை
துணிச்சலின் நிறை
மரணத்தின்
உள்கூடுவரை சென்றுவிட்டு
வாழ்வுக்குத் திரும்பியிருக்கிற
சுனிதா வில்லியம்ஸை
பூமியின் ஒவ்வொரு பொருளும்
வரவேற்கின்றது
இந்த விண்வெளிப் பிழை
எதிர்கால அறிவியலைத்
திருத்திக்கொள்ளும்
ஆதாரமாக விளங்கும்
பிழை என்பது அறியாமை;
திருத்திக்கொள்வது அறிவு
என்ற பாடத்தை
அறைந்து சொல்லும்
சுனிதா வில்லியம்ஸ் அனுபவம்
வந்தவரை வாழ்த்துவோம்
மானுடத்தை வணங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பால்க்கன்-9 எனும் ராக்கெட்டுடன், டிராகன் எனும் விண்கலம் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது
- அவர் பத்திரமாக மீண்டும் பூமிக்கு வந்தடைந்த செய்தி, நம் அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
சென்னை:
சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார். அவர் ஆற்றிய உரை வருமாறு:-
விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ். எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 287 நாட்களாக தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பூமிக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. இவர்களது உடல்நிலை பாதிக்கப்படும் எனவும், உயிருக்கு ஆபத்து எனவும் பல தகவல்கள் வெளிவந்தன. இருந்தும், அந்த விண்வெளி மையத்தில் அவர்கள் அயராது தங்களது பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், பால்க்கன்-9 எனும் ராக்கெட்டுடன், டிராகன் எனும் விண்கலம் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது. இதன்மூலமாக சுனிதா வில்லியம்ஸ் அவர்களும், புட்ச் அவர்களும், அங்கிருந்த மேலும் 2 வீரர்களோடு இணைந்து பயணித்து, பத்திரமாக புளோரிடா அருகே கடலில் தரையிறங்கினர்.
அவர் பத்திரமாக மீண்டும் பூமிக்கு வந்தடைந்த செய்தி, நம் அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இத்தருணத்தில் சுனிதா வில்லியம்சுக்கும், அவரை பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டவர்களுக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்களையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விண்வெளியில் அதிக மாரத்தான் ஓடியவரும் சுனிதா வில்லியம்ஸ் தான்.
- விண்வெளித்துறையில் மற்றவர்களுக்கு பாடமாக இருந்துள்ளார்.
கோவை:
9 மாத விண்வெளி பயணம் மேற்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினார். இந்த சாதனை பயணம் குறித்து இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடித்த போது, விமான பயணம் என்பது சவாலானதாக இருந்தது. தற்போது அந்த பயணம் எளிதாகி விட்டது. அதேபோன்று தான் இப்போது விண்வெளி பயணமும் மாறியுள்ளது.
விண்வெளி பயணங்கள் என்பது ஓராண்டுக்கு முன்பே திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது. விண்வெளி நிலையத்திற்கு ஒரு மாதத்திற்கு ஒரு விண்கலம் செல்ல வேண்டும்.
சுனிதா வில்லியம்ஸ் சென்ற போயிங் விண்கலத்தில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அந்த விண்கலம் ஆளில்லாமல் திரும்பி வந்தது.
இதன் காரணமாக சுனிதா வில்லியம்ஸ் அதிக நாட்கள் விண்வெளி மையத்தில் தங்கினார். நீண்ட நாட்களாக அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த அவர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி இருக்கிறார். விண்வெளியில் அதிக மாரத்தான் ஓடியவரும் சுனிதா வில்லியம்ஸ் தான்.
அவரது உடல், உள்ளம், மனவலிமையே அவர் இவ்வளவு மாதம் தங்க காரணம் ஆகும். அவர் விண்வெளித்துறையில் மற்றவர்களுக்கு பாடமாக இருந்துள்ளார்.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பும் விஞ்ஞானிகளுக்கு மீண்டும் நடைமுறை வாழ்க்கை பழக்கம் ஆவதற்கு சில நாட்கள் ஆகும். அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு, அவர்களுக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்பட்டதும், நடைமுறை வாழ்க்கைக்கு திரும்புவார்கள்.
விண்வெளியில் இருந்து திரும்பி வந்துள்ள சுனிதா வில்லியம்ஸ் நடைமுறை வாழ்க்கைக்கு பழகவும், இயல்பு நிலைக்கு திரும்பவும் சில நாட்கள் ஆகும்.
தற்போது சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதற்கான காலதாமதத்தின் மூலம் செவ்வாய்க்கிரகத்திற்கு மனிதன் செல்வது சாத்தியமாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இந்திய விஞ்ஞானிகள் 3 அல்லது 4 ஆண்டுகளில் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. 2 ஆண்டுகளில் ஆளில்லா விண்கலம் செல்லும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.
- அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.
விண்வெளியில் ஆராய்ச்சி பணி மேற்கொள்வதற்காக சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.
வெறும் 8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்க வேண்டிய சூழல் உருவானது. அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனால் அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர். இந்த நிலையில், விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களை அழைத்துக் கொண்டு டிராகன் விண்கலம் இன்று அதிகாலை பூமிக்கு திரும்பியது. இதையடுத்து பூமி திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாசாவின் #Crew9 பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியதில் மகிழ்ச்சி! இந்தியாவின் மகள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பிற விண்வெளி வீரர்கள் அடங்கிய குழுவினர் விண்வெளியில் மனித சகிப்புத்தன்மை மற்றும் விடாமுயற்சியின் வரலாற்றை மீண்டும் எழுதியுள்ளனர்.
சுனிதா வில்லியம்ஸின் நம்பமுடியாத பயணம், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, மன உறுதி மற்றும் போராடும் மனப்பான்மை உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கும். அவரது பாதுகாப்பான வருகை விண்வெளி ஆர்வலர்களுக்கும் முழு உலகிற்கும் கொண்டாட்டத்தின் தருணம். அவரது தைரியமும் சாதனைகளும் நம் அனைவரையும் பெருமைப்படுத்துகின்றன.
அவர்களை பூமிக்கு பாதுகாப்பாக மீண்டும் கொண்டு வந்த அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் ஒரு பெரிய நன்றி," என்று தெரிவித்துள்ளார்.
- விண்வெளி நிலையத்தின் மொத்த நீளம் 356 அடி ஆகும்.
- ஒரு தொலைபேசி பூத் அளவுள்ள சிறிய தூக்க பெட்டிகள் உள்ளன.
பூமியில் இருந்து 400 கிலோமீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது சர்வதேச விண்வெளி நிலையம். அமெரிக்கா, ரஷ்யா, ஐப்பான், ஐரோப்பா, கனடா விண்வெளி நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் சர்வதேச விண்வெளி நிலையம் உருவானது.
விண்வெளி நிலையத்துக்கான பயணத்தை சர்வசே விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஆண்டு (2024) ஜூன் 5-ந்தேதி தொடங்கினார். 8 நாட்களில் திரும்பி வருவது போல் திட்டமிடப்பட்டிருந்த அவரது பயணம் 9 மாதங்களாக நீடித்தது.
அவர் கடந்த 9 மாதங்களாக விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்தார். சுனிதா வில்லியம்ஸ் தங்கியிருந்த விண்வெளி நிலையத்தின் மொத்த நீளம் 356 அடி ஆகும். அதன் எடை 4.19 லட்சம் கிலோ கிராம்.

ஒரு பெரிய இரண்டு மாடி வீட்டின் பரப்பளவை கொண்ட அங்கு 7 அறைகள், 2 குளியலறைகள், ஒரு உடற்பயிற்சி கூடம், 360 டிகிரி பார்க்கக்கூடிய பெரிய ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவைகள் இருக்கும்.
விண்வெளி நிலையத்தில் 7 பேர் தங்கலாம். தேவைப் பட்டால் மேலும் பலரும் தங்கும் வகையில் வடிவ மைக்கப்பட்டுள்ளது. ஒரு தொலைபேசி பூத் அளவுள்ள சிறிய தூக்க பெட்டிகள் உள்ளன. இவற்றில் தான் விண்வெளி வீரர்கள் தூங்குவார்கள். ஈர்ப்பு விசை இல்லாததால் இந்த முறை எந்த அழுத்தத்தையும் உருவாக்காது.

இந்த பெட்டியில் தூக்கப்பை, தலையணை, விளக்கு, காற்று திறப்பு, மடி கணிணி மற்றும் தனிப்பட்ட பொருட்கள் வைப்பதற்கான இடம் உள்ளது. காற்று துவாரத்தின் அருகே தலை வைத்து தூங்க வேண்டும். அப்படி தூங்காவிட்டால் தங்கு பவர்கள் வெளி யேற்றும் காற்றில் கார்பன்டைஆக்சைடு அதிகரித்து அது உயிருக்கு ஆபத்தானதாக மாறும்.

தூக்கத்தின் போது சத்தம் மற்றும் ஒளியை தடுக்க காது அடைப்பான்கள் மற்றும் தூக்க முகமூடிகள் பயன் படுத்தப்படும். தினமும் 8.5 மணி நேரம் தூங்க வேண்டும் என்பது தான் பரிந்துரை.

உணவு தயாரிக்க தனி இடம் இருக்கிறது. அங்கு சூடான நீர் குழாய் மற்றும் உணவை சூடாக்கும் அமைப்பு உள்ளது. 3 மாதங்களுக்கு ஒரு முறை உணவு ஆலைக்கு வந்து சேரும். ஒவ்வொரு பயணி யின் சுவை, விருப்பம் மற்றும் ஊட்டச்சத்து தேவை களுக்கு ஏற்ப உணவ வழங்கப்படுகிறது.
பயணிகள் புறப்படு வதற்கு 5 மாதங்களுக்கு முன்பு ஒரு மெனுவை சமர்ப்பிக்க வேண்டும். இறைச்சி மற்றும் முட்டைகள் தரையில் சமைக்கப்பட்டு ஆலைக்கு வழங்கப்படுகிறது. அது பின்னர் சூடாக்கி பயன்படுத்தப்படும். கறி, சூப், குழம்பு போன்ற உணவு கள் உலர்த்தப்பட்டு பொடி யாக்கப்படுகின்றன. அவற்றை தண்ணீர் சேர்த்து உண்ணக்கூடியதாக மாற்று வார்கள்.

மது மற்றும் பிற போதை பொருட்கள், புகை பிடித்தல் கூடாது. பூமியில் உள்ள மனிதர்களை விட விண்வெளி பயணிகளுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. ஆகவேஒவ்வெரு நபரும் தினமும் 1.2 கிலோ உணவு சாப்பிடுவார்கள். இந்த விண்வெளி நிலை யத்தில் தான் சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களாக வசித்துள்ளார்.
- ஒவ்வொரு சவாலையும் அசைக்க முடியாத உறுதியுடனும் மீள்தன்மையுடனும் வென்றீர்கள்.
- உறுதியும் துணிச்சலும் சேர்ந்தால் அவை எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அவற்றை சாதனையாக மாற்றும் என்பதை நிரூபிக்கிறது.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அன்னை பூமிக்கு மீண்டும் வருக, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்! மிக கடுமையான விண்வெளி பரப்பில் மாதக்கணக்கில் நீங்கள் இருந்தது உங்களின் சகிப்புத்தன்மை, தகவமைப்பு மற்றும் மன உறுதியின் வரம்புகளை சோதித்துள்ளன.
ஆனாலும் ஒவ்வொரு சவாலையும் அசைக்க முடியாத உறுதியுடனும் மீள்தன்மையுடனும் வென்றீர்கள். நீங்கள் அன்னை பூமிக்கு திரும்புவதென்பது தாயகத்துக்கு திரும்புவது என அழைப்பதை விட மேலதிகமானது; இது விடாமுயற்சியின் வரலாற்றுபூர்வ வெற்றியாகும், இது உறுதியும் துணிச்சலும் சேர்ந்தால் அவை எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அவற்றை சாதனையாக மாற்றும் என்பதை நிரூபிக்கிறது.
நீங்கள் முன்னோக்கும் பயணம் புதிய எல்லைகளைத் திறந்து, எதிர்கால விண்வெளி ஆய்வாளர்களை பிரபஞ்சத்தின் எல்லையைக் கடந்து ஆய்வு மேற்கொள்ள ஊக்குவிக்கட்டும் என கூறியுள்ளார்.
- 3:27 மணிக்கு புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது.
- விண்வெளி வீரர்கள் 4 பேரும் உற்சாகத்துடன் கையசைத்தனர்.
வாஷிங்டன்:
விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ் (59), மற்றும் புட்ச் வில்மோர் (62), இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினர். அவர்களை சுமந்துள்ள 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3:27 மணிக்கு புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது.
பாராசூட் அவர்களின் கேப்சூலை கடலில் இறக்க, ஏற்கனவே அங்கு வந்திருந்த நாசா அதிகாரிகள், விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 பேரையும் படகில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள் 4 பேரும் உற்சாகத்துடன் கையசைத்தனர். தற்போது அவர்களால் நடக்க முடியவில்லை என்றாலும், ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் எனச் சொல்லப்படுகிறது.
முன்னதாக, நால்வரும் பயணித்த டிராகன் கேப்சூல் படிப்படியாக வேகம் குறைந்து கடலில் விழுந்ததும், விண்வெளி வீரர்களை வரவேற்பது போல் கேப்சூலை சுற்றி டால்பின்கள் சூழ்ந்தன.
விண்கலம் கடலில் விழுந்தபோது, அதைச் சுற்றி பல டால்பின்கள் மேற்புறத்தில் நீந்திக் கொண்டிருந்தது கேமராக்களில் தெளிவாக தெரிந்தது. இதனை லைவ் செய்துகொண்டிருந்த நாசா விஞ்ஞானிகள் அது மீட்புக் குழுவுக்குக் கிடைத்த பெருமை என்று கூறினர்.
உலகளவில் பேசப்படும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர். சுனிதாவின் தந்தையான அமெரிக்க விஞ்ஞானி தீபக் பாண்டியா, குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர்.
ஸ்லோவேனியா வம்சாவளியை சேர்ந்த போனிக்கு 3-வது மகளாக 1965-ல் பிறந்தார் சுனிதா வில்லியம்ஸ். சிறு வயதிலேயே விண்ணில் பறக்க வேண்டுமென்ற ஆசை சுனிதாவின் கனவு பின்னாளில் அது நனவானது.
அமெரிக்காவின் நீதம் என்ற இடத்தில் பள்ளிக்கல்வியை புளோரிடாவில் பொறியியல் படிப்பை முடித்தார். அமெரிக்க கடற்படையில் விமானியாக சேர்ந்த சுனிதாவை 1998-ல் நாசா அழைத்துக்கொண்டது.
விண்ணை தொட்ட விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக மண்ணைத்தொட்டார். விண்வெளியில் பல சோதனைகளை பதற்றமின்றி சிரித்தப்படி கையாண்டார் விண் தேவதை சுனிதா.
விண்வெளிக்கு சென்ற சுனிதா விண்ணில் அதிக நேரம் விண்நடை மேற்கொண்டு சாதனை புரிந்தார். சுமார் 30 ஆண்டுகள் நாசா நடத்திய பல சோதனைகளில் சுனிதா வில்லியம்ஸ் சாதனைகள் படைத்தார். பூமி மேல் பறக்கணும் என்ற ஆசையை அவர் நிறைவு செய்துள்ளார்.
- அந்த தருணம் மிகவும் அற்புதமாக இருந்தது.
- இந்தியர்களிடமிருந்து அன்பை உணர்கிறார்.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கடந்த ஒன்பது மாதங்கள் சிக்கத் தவித்த சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பியதில் மகிழ்ச்சி அடைவதாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பியது குறித்து அவரது குடும்பத்தார் (அண்ணி) தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தனர். அப்போது, "அந்த தருணம் மிகவும் அற்புதமாக இருந்தது. எங்களிடம் அவர் எப்போது இந்தியா வருவார் என்ற தகவல் இல்லை. ஆனால் அவர் நிச்சயமாக விரைவில் இந்தியாவுக்கு வருவார் என நம்புகிறேன்," என்று சுனிதா வில்லியம்ஸ் அண்ணி ஃபல்குனி பாண்ட்யா தெரிவித்தார்.
"அவர் இந்தியா மற்றும் இந்தியர்களிடமிருந்து அன்பை உணர்கிறார். அவர் திரும்பி வருவார் என்பது எனக்குத் தெரியும். இது நேரம், அட்டவணை மற்றும் தளவாடங்களின் விஷயம்" என்று திருமதி பாண்ட்யா கூறினார்.
சுனிதா வில்லியம்ஸ் வீடு திரும்பிய பிறகு, கோவிலில் இருந்து பேட்டியளித்த பாண்ட்யா, "எல்லாம் நன்றாக நடந்ததற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்ததாக," கூறினார்.
- நிச்சயமற்ற தன்மை மற்றும் சவால்களை எதிர்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் மற்று புட்ச் வில்மோர் ஆகியோருக்கு எனது சல்யூட்.
- சுனிதா வில்லியம்ஸ் தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் உருவகமாக அங்கு வலுவாக நின்றார்.
சென்னை:
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களாக சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் SpaceX-ன் 'ட்ராகன்' விண்கலம் மூலம் 17 மணிநேர பயணத்திற்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பினர். இதையடுத்து பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில், திட்டமிடப்படாத 9 மாதங்கள் விண்வெளியில் இருந்து, நிச்சயமற்ற தன்மை மற்றும் சவால்களை எதிர்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் மற்று புட்ச் வில்மோர் ஆகியோருக்கு எனது சல்யூட்.
குறிப்பாக விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் உருவகமாக அங்கு வலுவாக நின்றார். அவரது பயணம் விண்வெளி ஆய்வு மட்டுமல்ல, பெண்களின் வலிமை மற்றும் அதிகாரமளித்தல் பற்றியது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரராக, அவரது முன்மாதிரியான பயணம் விடாமுயற்சிக்கு ஒரு சான்றாகும்.
நான்கு பேர் கொண்ட குழு - க்ருவ்9 உங்களை வரவேற்கிறோம். உங்கள் கதை வருங்கால தலைமுறைகளை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று தெரிவித்தார்.