search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்தமிழ் முருகன் மாநாடு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கிற்கு முதன்மையான ஆட்சியாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது.
    • முத்தமிழ் முருகன் மாநாடு இவ்வளவு சிறப்பாக நடைபெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை

    தரங்கம்பாடி:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் 2000-வது குடமுழுக்கு விழா மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பரசலூர் கிராமத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வீரட்டேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு இன்றுடன் 2005 கோவில்களுக்கு குடமுழுக்குகள் நிறைவு பெற்றுள்ளது. திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கிற்கு முதன்மையான ஆட்சியாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது.

    ஆதீனங்கள் ஒருசேர இந்த ஆட்சியோடு இணக்கமாக இருந்து பக்தி பரவசத்தோடு ஆட்சியை ஆதரிப்பது கடந்த காலங்களில் இல்லை.

    முருகன் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்களை அனைவரும் எப்படி ஆதரிப்பார்கள் என கேள்வி எழுப்பினார்? எதிர்தரப்பினரின் கருத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதற்கு எதிர்மறையாக வினையாற்ற இந்து சமய அறநிலையத்துறை தயாராக இல்லை.

    முத்தமிழ் முருகன் மாநாடு இவ்வளவு சிறப்பாக நடைபெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. உலகமே பாராட்டும் அளவிற்கு முத்தமிழ் மாநாடு சிறப்பாக நடைபெற்று இருக்கிறது.

    இதுவரை ரூ.6,750 கோடி கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு இருக்கிறது.

    கோவில் நகைகளை உருக்கி டெபாசிட் செய்வதற்கு பல்வேறு வகையில் எதிர்ப்புகள் வந்தாலும், அந்தத் திட்டம் பயன் தரக்கூடிய திட்டமாகவே உள்ளது. பயன்பாட்டில் இருக்கக்கூடிய பாரம்பரிய நகைகளை தவிர்த்து புதிதாக பக்தர்கள் வழங்கிய நகைகள் மத்திய அரசின் நகை உருக்கு ஆலைக்கு கொண்டு சென்று உருக்கி எந்த கோவிலில் இருந்து எடுத்துச் சென்றோமோ அதே கோவிலில் டெபாசிட் செய்வதாகவும், இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5 கோடி ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும் கூறினார். மேலும் ரூ.15 கோடிக்கு வருவாய் வரும் அளவில் கோவில் நகைகள் மதிப்பீடும் செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

    • 6 அடி உயர வேல் பரிசாக வழங்கப்பட்டது.
    • மயில், சேவல், வேல் பொறிக்கப்பட்ட நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

    பழனி:

    பழனியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முத்தமிழ் முருகன் மாநாடு கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. முதல் நாள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்த நிலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன.

    2-ம் நாள் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் சிறப்புரையாற்றினார். அப்போது நாத்திக தோட்டத்தில் பூத்த ஆன்மீக மலர் சேகர்பாபு என அவருக்கு புகழாரம் சூட்டினார். தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டு வரும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

    முத்தமிழ் முருகன் மாநாடு கடந்த 24-ந் தேதி தொடங்கிய நிலையில் அதற்கு முதல் நாள் 23-ந் தேதியே பழனிக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு மாநாட்டுக்கான ஏற்பாடுகள், வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மாநாடு நிறைவுபெறும் வரை அங்கேயே இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் கண்காணித்து வந்தார். அமைச்சருடன் கலெக்டர் பூங்கொடி, பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார், இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலர் சந்திரமோகன், ஆணையர் ஸ்ரீதர் ஆகியோரும் விழா நடந்த 2 நாட்களும் அங்கேயே இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.


    விழா நிறைவில் பல்வேறு ஆதீனங்கள் சார்பில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு ஆன்மீகச் செம்மல் விருது வழங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறையை சிறப்பாக நடத்தி வருவதற்காக அமைச்சர் சேகர்பாபுவுக்கு ஆதீனங்கள், மடாதிபதிகள் பாராட்டு தெரிவித்ததுடன் விழாக்குழு சார்பில் மயில், சேவல், வேல் பொறிக்கப்பட்ட நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் 6 அடி உயர வேல் பரிசாக வழங்கப்பட்டது. இதனை பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் வழங்கினார்.

    • இறைவன் முருகனை பற்றி புகழ்வதற்கோ அல்லது பேசுவதற்கோ நாள் கிழமை என்பது கிடையாது.
    • எல்லாமே ஓட்டுக்கான யுக்தி என்று சொல்ல முடியாது.

    முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றதை பற்றி விஜய் வசந்த் எம்.பி.யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    இறைவன் முருகனை பற்றி புகழ்வதற்கோ அல்லது பேசுவதற்கோ நாள் கிழமை என்பது கிடையாது. ஒவ்வொரு வழிபாட்டு தளங்களிலும் ஒவ்வொருடைய இறைவன் வழிபாடுகள் இருக்கும்.

    அதில் முருக பெருமனை வைத்து ஒரு கூட்டம் நடக்கிறது. எல்லாவற்றையுமே விமர்சனம் செய்வது என்பது தவறான விஷயம் என்பதை பதிவு செய்கிறேன். பழனி கோவிலில் முருகனை பற்றி கருத்தரங்கம் நடை பெற்றது. இதை அரசியல் ஆக்கவேண்டாம் என்று தான் சொல்வேன். இதற்கும் தேர்தலுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. இது அரசங்கம் நடத்தும் ஒரு நிகழ்ச்சியகவே நான் கருதுகிறேன்.

    கேள்வி- முத்தமிழ் முருகன் மாநாடு பற்றி இது ஓட்டுக்கான யுக்தி என்று தமிழசை சொல்கிறார். இதை பற்றி உங்கள் கருத்து என்ன.

    பதில்- எல்லாமே ஓட்டுக்கான யுக்தி என்று சொல்ல முடியாது. தமிழக அரசை குறை சொல்வது தவறானது. அது அவர்களுடைய கருத்து சொல்லி இருக்கிறார். ஆனால் தேர்தலுக்கான ஒரு பணியாக கருதவில்லை. இதை இறைவனுக்கு செய்கிற பணியாகவே கருதுகிறேன்.

    கேள்வி- தமிழக வெற்றி கழகம் சார்பில் கொடி அறிமுகம் செய்து இருக்கிறார்கள். பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதை பற்றி உங்கள் கருத்து?

    பதில்- விமர்சனங்கள் இல்லாமல் எதுவும் இல்லை. மக்களும் அரசியல் வட்டராங்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள தருணத்தில் விமர்சனங்கள் இயற்கையானது. இந்த விமர்சனங்களை தாண்டி வருவது தான் வெற்றிக்கான இலக்கு. வருங்காலங்களில் இந்த விமர்சனங்களை எப்படி கையாளுகிறார் என்பதை பார்ப்போம்.

    கேள்வி- பிரதமரின் உக்ரைன் பயணம் எந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாக அமையும்.

    பதில்- உக்ரைனுக்கு பிரதமர் மோடி முதல் முறையாக சென்றார். அங்குள்ள பிரதமரை சந்தித்து பேசியுள்ளார். அதன் நிலைப்பாடு இனிமேல் தான் தெரியும்.


    இதனிடையே விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள மற்றொரு பதிவு-

    கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நன்றி கூறும் பயணம் நடைபெற்று வருகிறது. வழிநெடுகிலும் அன்பும் ஆதரவும் தந்து கொண்டிருக்கும் பொது மக்களுக்கும், காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி நிர்வாகிகளுக்கும் நன்றி.

    • முத்தமிழ் முருகன் மாநாடு திருமூலரை எனக்கு நினைவுப்படுத்துகிறது.
    • இறைவனை எத்தனையோ வகையில் பார்த்திருக்கிறார்கள்.

    பழனி:

    பழனியில் நடந்த முத்தமிழ் முருகன் மாநாட்டில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    முத்தமிழ் முருகன் மாநாடு திருமூலரை எனக்கு நினைவுப்படுத்துகிறது. அவனை ஒழிய அமரரும் இல்லை, அவன் இன்றி செய்யும் அருந்தவம் இல்லை, அவன் இன்றி ஆவதுமில்லை, அவனின்றி ஊர் போகுமாறு அடியேனே... என்ற திருமூலர் சொன்னதை ஆசியாவில் இருந்து வந்தவர்களும் வெளிநாட்டினரும் உணர்ந்து கொண்டுள்ளனர். அவன் இன்றி நாம் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்த்துவதன் பயன்தான் இந்த மாநாடு.

    இறைவனை எப்படி எல்லாம் பாடுவோம் என்று நம்முடைய முன்னோர்களும், அறிஞர்களும் பாடிக்காட்டி இருக்கின்றார்கள். சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இறைவனை எத்தனையோ வகையில் பார்த்திருக்கிறார்கள்.

    பொன்னுலகு வேண்டுமா பொருள் வேண்டுமா இவைகள் எல்லாம் அழிந்து போகும். அழியாத முத்தியும் வேண்டுமா வந்து பாருங்கள் என்று அனைவரும் வாருங்கள் முருகனிடம் வேண்டியதை பெற்றுக் கொள்ளுங்கள். பொன் பெற்றுக் கொள்ளுங்கள் பொருள் பெற்றுக் கொள்ளுங்கள் என வேண்டாம் என்றால் முத்தியும் பெற்றுக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் நீதிபதி சுப்பிரமணியன் பேசியதாவது:-

    கடம்பத்து தன் பரங்குன்றத்து என்ற குறிப்பிடுதல் மூலம் திருப்பரங்குன்றத்தில் முருக பெருமான் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார் என்ற குறிப்பு உள்ளது. இவ்வாறு அனைத்து பண்டைய தமிழ் நூல்களிலும் முருகனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. முத்தமிழும் முருகனும் என்றும் பிரிக்க முடியாதவை. அருணகிரிநாதர் புகழிலே கிட்டத்தட்ட 90 பாடல்களில் இந்த பழனி முருகனைப் பற்றி பாடி இருக்கிறார். அதில், 110-வது பாடல் திருப்புகலில் அருணகிரிநாதர் பாடுகிறார், அவனிதனிலே பிறந்து, மதலை எனவே தவழ்ந்து, அழகு பெறவே நடந்து, இளைஞனாய் அழகு மலையே விகழ்ந்து, முதலை மொழியை புகழ்ந்து, அது விதம் அதாய் வளர்ந்து, பதினாறாய் சிவகலைகள் ஆகமங்கள் மிகவும் அரியோர் அன்பு திருவடிகளை நினைத்து துதியாமல் இதுவரைக்கும், என அவரை பற்றி சொல்லியிருக்கிறார்.

    இவ்வாறு முருகனை பற்றிய குறிப்புகள் பல தமிழ் நூல்களில் இருக்கின்றன. இவற்றை ஒரு மிகப்பெரிய ஆராய்ச்சி நடத்தி, ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்து பல தமிழ் அறிஞர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அனைவரையும் ஒன்றிணைத்து இந்த மாநாட்டை நடத்துவது தமிழக அரசுக்கு பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக அரசு அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
    • பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    பழனி:

    தமிழ்க் கடவுள் முருக பெருமானின் 3-ம் படை வீடான பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று தொடங்கியது.

    பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, மடாதிபதிகள், ஆதீனங்கள், நீதியரசர்கள், ஆன்மீக சொற்பொழிவாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த மாநாட்டில் முப்பரிமாண பாடலரங்கம், சிறப்பு புகைப்பட கண்காட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தது. குடவரைக்கோவில் போன்ற அரங்கில் அமைக்கப்பட்டு இருந்த இதனை ஏராளமான பக்தர்கள் ரசித்தனர்.

    முதல் அரங்கில் மாநாட்டு நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    2-ம் நாள் நிகழ்ச்சி முதல் நாள் மாநாட்டில் 300 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இன்று 800 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மொத்தம் 1300 ஆய்வறிக்கைகள் இறுதி செய்யப்படுகிறது.


    2-ம் நாளான இன்று காலை திருவேல் இறைவன் தீந்தமிழர் இசையுடன் விழா தொடங்கியது. முருகனும் பரதமும் என்ற தலைப்பில் வித்யா வாணி சுரேஷ் மற்றும் மகிதா சுரேசின் கலை நிகழ்ச்சி நடந்தது. இசைத் தென்றல் சம்மந்தம் குருக்களின் திருப்புகழ் தேனிசை, டி.எம். சவுந்தர்ராஜனின் மகன் பால்ராஜின் இறை வணக்கம் ஆகியவை நடைபெற்றன. திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி வரவேற்றார்.

    அமைச்சர் அர.சக்கரபாணி தொடக்க உரையாற்றினார். கோவை கவுமாரமடம் குமரகுரு சுவாமிகள் ஆசியுரை நிகழ்த்தினார். சத்தியவேல் முருகனார் சிறப்புரையாற்றினார். மொரிசியஸ் தமிழக கோவில்கள் கூட்டமைப்பு தலைவர் செங்கண்குமரா வாழ்த்துரை வழங்கினார். நீதியரசர் சுரேஷ்குமார் சிறப்புரையாற்றினார்.

    அதனைத் தொடர்ந்து கலைமாமணி தேச மங்கையர்கரசி, சுசித்ரா பாலசுப்பிரமணியம் குழுவினர் யாமிருக்க பயமேன் என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

    பின்னர் கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் குழுவினரின் முருகனை காண 1000 கண் வேண்டும் என்ற இசை நிகழ்ச்சியும், ஐதராபாத் சிவா குழுவினரின் கந்தன் காவடி சிந்து இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    திருவாரூர் சுருட்டை சுர்ஜித் நாட்டுப்புற கலைக்குழுவினரின் நாட்டுப்புற கலையில் நற்றமிழ் முருகன் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.


    2-ம் நாள் நிகழ்ச்சியை காண இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வரத் தொடங்கினர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாநாட்டு அரங்கு, கலை நிகழ்ச்சி உள்ளிட்டவற்றை கண்டு ரசித்தனர். பக்தர்கள் பலர் அரங்கம் முன்பு நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

    இன்று இரவு இரவு 7 மணிக்கு மாநாட்டு நிறைவு விழா மற்றும் சிறந்த ஆய்வறிக்கைகளுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் நீதியரசர் வேல்முருகன் பங்கேற்று விருதுகளை வழங்குகிறார். அதன் பின்பு மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

    திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசி வழங்குகிறார். பின்னர் இந்து சமய அற

    நிலையத்துறை கூடுதல் ஆணையர் சுகுமார் நன்றியுரையுடன் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நிறைவு பெறுகிறது.

    மாநாட்டில் இடம்பெற்று உள்ள கண்காட்சி மற்றும் அரங்குகளை வருகிற 30-ந் தேதி வரை பக்தர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாநாட்டுக்கு இலவச அனுமதி என்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாநாட்டின் 2-ம் நாள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து 39 மாதங்களில் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வரை கோவில்களை புனரமைக்கவும், ஆன்மீக அன்பர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் முதலமைச்சர் மு.க.

    ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை குழு கூட்டத்தை கூட்டி அதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசு அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

    கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கிய தீர்மானமாக அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டு அதனை பழனியில் நடத்தவும் தீர்மானித்தோம்.

    அதன்படி பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக 11 குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்நிகழ்ச்சியில் 4 நீதியரசர்கள், அனைத்து ஆதீனங்களும் கலந்து கொண்டனர். பல்வேறு ஆன்றோர்கள், சான்றோர்கள், தமிழ் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    காணொலி காட்சி மூலமாக தமிழக முதல்வர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். நாங்கள் திட்டமிட்டது 25 ஆயிரம் பேர் மட்டும்தான். ஆனால் நேற்றைய மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முருகனுக்கு எடுக்கின்ற இந்த மாநாட்டை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். 160 முருகன் தொடர்பான புகைப்பட கண்காட்சி, 3டி திரையரங்கம், வி.ஆர். கலையரங்கம், புத்தக கண்காட்சியை லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர். மாநாட்டிற்கு வருகை தந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. 1.25 லட்சம் பக்தர்கள் உணவு அருந்தி உள்ளனர்.

    இன்று 2-ம் நாள் நிகழ்ச்சியில் சான்றோர்கள், ஆதீனங்கள், நீதியரசர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. 2-ம் நாள் மாநாடும் வெற்றி பெறும்.

    கண்காட்சியைப் பொறுத்தவரை பொது மக்கள் பார்வையிட மேலும் 5 நாட்கள் நீடிக்கப்படுகிறது.

    எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது இந்த அரசின் தாரக மந்திரம். இந்த முருகன் மாநாட்டை பொருத்தவரை தமிழக அரசு, இந்து சமய அறநிலைத்துறை இணைந்து நடத்துகின்ற நிகழ்ச்சி. இது அரசியல் சார்பற்ற அரசு விழா. முருக பக்தர்களால் கொண்டாடப்பட கூடிய நிகழ்ச்சி. இந்த மாநாட்டில் 16 முருக பக்தர்களுக்கு 1 பவுன் தங்க நாணயம் மற்றும் விருதுகள் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
    • ஏராளமான பக்தர்கள் கண்டும் கேட்டும் ரசித்தனர்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று தொடங்கியது.

    பழனி பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, மடாதிபதிகள், ஆதீனங்கள், நீதியரசர்கள், ஆன்மீக சொற்பொழிவாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முப்பரிமான பாடலரங்கம், சிறப்பு புகைப்பட கண்காட்சி ஆகியவையும் இடம்பெற்றிருந்தது. குடவரைக்கோயில் போன்ற அரங்கில் அமைக்கப்பட்டு இருந்த இதனை ஏராளமான பக்தர்கள் கண்டும் கேட்டும் ரசித்தனர்.

    முதல் அரங்கில் மாநாட்டு நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    முதல் நாள் மாநாட்டில் 300 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இன்று 800 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மொத்தம் 1300 ஆய்வறிக்கைகள் இறுதி செய்யப்பட்டு நீதியரசர் சுரேஷ்குமார் அவர்களுக்கான சான்றிதழை வழங்க உள்ளார்.

    2ம் நாளான இன்று காலை திருவேல் இறைவன் தீந்தமிழர் இசையுடன் விழா தொடங்கியது. அதன் பின்பு முருகனும் பரதமும் என்ற தலைப்பில் வித்யா வாணி சுரேஷ் மற்றும் மகிதா சுரேசின் கலை நிகழ்ச்சி நடந்தது.

    இசைத் தென்றல் சம்மந்தம் குருக்களின் திருப்புகழ் தேனிசை, டி.எம். சவுந்தர்ராஜனின் மகன் பால்ராஜின் இறை வணக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி வரவேற்புரையாற்றினார்.

    அமைச்சர் அர.சக்கரபாணி தொடக்க உரையாற்ற கோவை கவுமாரமடம் குமரகுரு சுவாமிகள் ஆசியுரையும், சத்திய வேல் முருகனார் சிறப்புரையும் ஆற்றினர்.

    அதன் பின்பு மொரிசீயஸ் தமிழக கோவில்கள் கூட்டமைப்பு தலைவர் செங்கண்குமரா வாழ்த்துரை வழங்கினார். பின்னர் நீதியரசர் சுரேஷ்குமார் சிறப்புரையாற்றினார்.



    அதனைத் தொடர்ந்து கலைமாமணி தேச மங்கையர்கரசி, சுசித்ரா பாலசுப்பிரமணியம் குழுவினரின் யாமிருக்க பயமேன் என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.

    பின்னர் கர்நாடக பின்னணி பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் குழுவினரின் முருகனை காண 1000 கண் வேண்டும் என்ற இசை நிகழ்ச்சியும், ஐதராபாத் முனைவர் சிவா குழுவினரின் கந்தன் காவடி சிந்து இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பின்னர் திருவாரூர் சுருட்டை சுர்ஜித் நாட்டுப்புற கலைக்குழுவினரின் நாட்டுப்புற கலையில் நற்றமிழ் முருகன் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

    2-ம் நாள் நிகழ்ச்சியை காண அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரத் தொடங்கினர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாநாட்டு அரங்கு, கலை நிகழ்ச்சி உள்ளிட்டவற்றை கண்டு ரசித்ததுடன் அரங்கம் முன்பு நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

    பக்தர்கள் அனைவருக்கும் அதிகாலை முதல் உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. மதியம் மற்றும் இரவு உணவுக்கும் ஊழியர்கள் தயார் நிலையில் அதற்கான பணிகளை செய்து வந்தனர். முன் பதிவு செய்து வந்த வெளிநாட்டு பக்தர்களுக்கு சிறப்பு அரங்கில் உணவு வழங்கப்பட்டது.


    2-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று இரவு 8.30 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு 7 மணிக்கு மாநாட்டு நிறைவு விழா மற்றும் சிறந்த ஆய்வறிக்கைகளுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

    விருதுகளை நீதியரசர் வேல்முருகன் வழங்க உள்ளார். அதன் பின்பு மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. திருவாடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசி வழங்குகிறார்.

    இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சுகுமார் நன்றியுரையுடன் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நிறைவு பெறுகிறது. மாநாட்டில் இடம்பெற்றுள்ள கண்காட்சி மற்றும் அரங்குகளை வருகிற 30-ந் தேதி வரை பக்தர்கள் பார்வையிடலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும் மாநாட்டுக்கு இலவச அனுமதி என்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பார்வையிட்டனர்.

    இன்று விடுமுறை தினம் என்பதால் மலைக்கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் பழனி நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது.

    • இந்து சமய அறநிலையத்துறையை அழிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் - பாஜக துடிக்கிறது.
    • கோயில் சொத்துக்களை கொள்ளையடிப்பதே ஆர்எஸ்எஸ் - பாஜகவின் நோக்கம்.

    தமிழ் கடவுளான முருகபெருமானின் 3-ம் படை வீடான பழனியில் இன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கியது. மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    தமிழ்நாடு அரசு நடத்திய முத்தமிழ் முருகன் மாநாடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "மதத்திலிருந்து அரசு விலகி நிற்க வேண்டும் என்பதே மதச்சார்பின்மை கோட்பாட்டின் அடிப்படை. எந்த ஒரு மதத்தையும் பரப்புவது, பின்பற்றுவது அரசின் பணியாக இருக்கக் கூடாது; மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பேணி பாதுகாக்கப்பட வேண்டும்.

    இந்து சமய அறநிலையத்துறையை அழிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் - பாஜக துடிக்கிறது. கோயில் சொத்துக்களை கொள்ளையடிப்பதும், சாதிய படிநிலையை பாதுகாப்பதுமே ஆர்எஸ்எஸ் - பாஜகவின் நோக்கம். இதை முறியடிக்கும் நோக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை பணிகளை மேற்கொள்வது நல்லது. மத அடிப்படையிலான விழாக்களை அரசின் சார்பில் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    • இந்து சமய அற நிலையத்துறை சார்பில் முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடங்கியது.
    • மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

    தமிழ் கடவுளான முருகபெருமானின் 3-ம் படை வீடான பழனியில் இன்று இந்து சமய அற நிலையத்துறை சார்பில் முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கியது.

    மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    இந்நிலையில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றியடைய வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், " எல்லோருக்கும் எல்லாம் என்ற நமது திராவிட மாடல் அரசில், நாள்தோறும் அறப்பணிகளால் ஆன்மீகப் பெரியோர்களின் பாராட்டுகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றியடைய வாழ்த்துகள் " என்று அமைச்சர் சேகர்பாபுவை டேக் செய்து குறிப்பிட்டுள்ளார்.

    • பிரதமர் உக்ரைன் சென்று இருப்பது உலக தலைவர்களுக்கு முன்னுதாரணம்.
    • பள்ளிக்கல்வித்துறை ஏதாவது ஒரு பிரச்சனை நடந்த உடன்தான் நடவடிக்கைகள் எடுக்கிறது.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஆன்மிக பூமி அப்போது அவர் கூறியதாவது:-

    பழனியில் இன்று நடக்கும் முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஆன்மிக பூமிதான். சனாதன தர்மத்தை எதிர்த்துப் பேசினாலும், ஆன்மிகத்தைப் பேசாமல் அரசியல் செய்ய முடியாது என்பதை இந்த முத்தமிழ் முருகன் மாநாடு உணர்த்துகிறது.

    தமிழகத்தில் அரசாங்கமே ஆன்மிக மாநாடு நடத்துவது தமிழகம் ஆன்மிகத்தின் பக்கம்தான் என்பதை காட்டுகின்றது. ஆன்மிகத்தை விடுத்து அரசியல் கிடையாது. அரசியலை விடுத்து ஆன்மிகம் கிடையாது என காந்தி கூறியது போல பெரியாரின் கொள்கையை பின்பற்றும் இவர்கள் அண்ணாவின் தமிழை பின்பற்றும் இவர்கள் ஆண்டாளின் தமிழையும் பின்பற்றும் நிலை வரும் என்பதை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

    நடிகர் விஜயின் கட்சி கொடியில் இருப்பது வாகை மலரா தூங்குமூஞ்சி மரமா என தெரியவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியினர் யானை அவர்களுக்குச் சொந்தமானது என்று சொல்லி இருக்கிறார்கள். சட்ட ரீதியாக ஒரு சில கருத்துகளை சொல்கிறார்கள். தம்பி விஜய் சட்டரீதியாக அதில் தவறு இருந்தால் மாற்றிக் கொள்ள வேண்டும்.

    பிரதமர் உக்ரைன் சென்று இருப்பது உலக தலைவர்களுக்கு முன்னுதாரணம். பாதிக்கப்பட்டவர்களுடன் நான் இருக்கிறேன் என தெரிவித்து இருக்கின்றார். உலக அமைதிக்காக பல நாடுகளில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் நமது பாரத பிரதமருக்கு தான் கொடுக்க வேண்டும்.

    பா.ஜ.க., திமுக இடையே எப்போதும் பிணக்கமான சூழ்நிலைதான். கொள்கை ரீதியாக எங்களுக்கும், அவர்களுக்கும் பிணக்கமான கொள்கைதான். திமுகவுடன் கூட்டணி என்பதெல்லாம் நாணய விழாவோடு போய்விட்டது.

    அ.தி.மு.க.வால் பா.ஜனதா வெற்றி பெற்றதா? அல்லது பா.ஜனதாவால் அ.தி.மு.க வெற்றி பெற்றதா? என்றால் அது பெரிய விவாதம்.

    கூட்டணி என வரும் போது எங்களது உதவி இல்லை என்று சொல்ல முடியாது. எங்களால் மட்டும் தான் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தார்கள் என அவர்கள் சொல்ல முடியாது.

    இந்த தேர்தலில் நாங்கள் எங்களுடைய வாக்கு வங்கியை செயலால் நிரூபித்து இருக்கிறோம். அந்த எண்ணிக்கையே பதில் சொல்லும்.

    பள்ளிக்கல்வித்துறை ஏதாவது ஒரு பிரச்சனை நடந்த உடன்தான் நடவடிக்கைகள் எடுக்கிறது. போலியாக ஒருவர் என்சிசி கேம்ப் நடத்துகிறார். பாலியல் தொல்லை கொடுத்து குழந்தைகளை துன்புறுத்தி இருக்கின்றார். பள்ளிகல்வித்துறை இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    தமிழக அரசு எந்த குற்றம் சாட்டப்பட்டாலும் அதில் சில பேர் பலியாகி விடுகிறார்கள். எலி மருந்து சாப்பிடுகிறார்கள், விபத்தில் சிக்குகின்றனர். இது தொடர்பான உண்மை விசாரிக்கப்பட வேண்டும். எல்லாவற்றிலும் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
    • 69 முருகன் கோவில்களின் திருப்பணிகளை முடித்து குட முழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது.

    பழனி:

    தமிழ் கடவுளான முருகபெருமானின் 3-ம் படை வீடான பழனியில் இன்று இந்து சமய அற நிலையத்துறை சார்பில் முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கியது.

    பழனியில் உள்ள பழனி யாண்டவர் கலைக்கல்லூரியில் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை முன்னிட்டு மாநாட்டு கொடியை ரத்தின கிரி தவத்திரு பாலமுருகன் அடிமை சுவாமிகள் ஏற்றி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கை அமைச்சர்கள் இ.பெரியசாமி, சேகர்பாபு, அர.சக்கரபாணி ஆகியோர் திறந்து வைத்தனர்.

    மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத் துலக முத்தமிழ் முருகன் மாநாடு மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    செயல்பாபு என்று என்னால் அழைக்கப்படும் சேகர்பாபு அறநிலையத் துறை அமைச்சராக வந்த பிறகு இந்த துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக எல்லோருடைய பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. கோவிலை கவனித்துக் கொள்ளுங்கள் என்று நான் அறநிலையத்துறையை அவரிடம் கொடுத்தேன். ஆனால் கோவிலிலேயே குடியிருக்கும் ஒருவர் உங்களுக்கு அமைச்சராக கிடைத்து உள்ளார்.

    நாள் தோறும் ஆன்மிக பெரியவர்கள், அறநிலையத்துறையையும், அமைச்சர் பி.கே.சேகர்பாபுவையும் பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

    இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. திட்டங்கள் செயல்படுத் தப்படுகிறது.

    நானும் பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளேன். அந்த வரிசையில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் ஆட்சி காலத்தில் நடந்த மக்கள் பணிகளை பார்த்து, குன்றக்குடி அடிகளாரும், திருமுருக கிருபானந்தவாரி யாரும் பாராட்டினார்கள்.

    இன்றைய ஆட்சியை நீங்கள் எல்லோரும் பாராட்டிக் கொண்டு இருக்கிறீர்கள். அதோட அடையாளம்தான் பழனியில் நீங்கள் எல்லோரும் கூடி இருப்பது.


    அந்த வகையில் பக்தர்கள் உள்பட அனைவரும் விரும்பும் ஆட்சியாக கழக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்ட உடனே அறநிலையத்துறை சார்பாக செய்யப்பட்டு வரும் பணிகளின் பட்டியலை தரச்சொல்லி அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்டேன். அதில் அவர் குறிப்பிட்டிருந்த பணிகளில் சிலவற்றை இங்கே குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    பழனி, திருத்தணி, திருச்செந்தூர், மருதமலை, குமாரவயலூர், சிறுவாபுரி, காந்தல் ஆகிய 7 முருகன் திருக்கோவில்களில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு வருகிற பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் பக்தர்கள் நலனை மனதில் வைத்து கோவிலில் வளர்ச்சி பணிகளை தொடங்கி இருக்கிறோம்.

    வளர்ச்சி திட்ட பணிகளுக்காக 58.77 ஏக்கர் நிலங்களை ரூ.58 கோடியே 54 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கி கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    அறுபடை வீடு முருகன் திருக்கோவில்களில் ரூ.789 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் 251 பணிகள் நடைபெற்று வருகிறது. அறுபடை வீடு அல்லாத முருகன் திருக்கோவில்களில் ரூ.277 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் 588 பணிகள் நடைபெற்று வருகிறது.

    69 முருகன் கோவில்களின் திருப்பணிகளை முடித்து குட முழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி கோவில் சார்பில் நடத்தும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் 4 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு கட்டணமில்லா காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மதிய உணவும் வழங்கப்பட உள்ளது.

    பழனி திருக்கோவிலுக்கு தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் திருவிழாக்களுக்கு பாத யாத்திரை வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பழனி தண்டாயுதபாணி கோவில் திருக்கோவிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்று துறை நிலையிலான ஓய்வூதியம் வாங்குகிற 258 ஓய்வூதியர்களுக்கு நபர் ஒருவருக்கு ஓய்வூதியம் ரூ.3000 வழங்கப்பட்டு வந்ததை ரூ.4000 ஆக உயர்த்தியும், 54 குடும்ப ஓய்வூதியர்களுக்கு ரூ.1500 வழங்கப்பட்டதை 2000 ரூபாயாக உயர்த்தியும் வழங்கி வருகிறோம்.


    2024-ம் ஆண்டு அறுபடை வீடு ஆன்மீக சுற்றுப் பயணத்துக்காக 1000 பக்தர்கள் அழைத்து செல்லப்படுவாார்கள் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இதுநாள் வரை 813 நபர்கள் பயன் அடைந்துள்ளனர்.

    எல்லா திருக்கோவில்களிலும் பக்தர்களுக்கு கட்டண மில்லா முடி காணிக்கை செலுத்தும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முடி காணிக்கை பணியாளர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

    தவில், நாதசுவர கல்லூரி, அர்ச்சகர் மற்றும் வேதஆகம பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ஊக்கத் தொகையாக ரூ.3000 வழங்கப்பட்டு வந்ததை 24.11.2023 முதல் ரூ.4000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

    பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியம் அடிப்படையில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணிபுரிந்த 13 பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    இந்த திருக்கோவில்களில் பணிபுரிந்து பணி காலத்தில் மறைவு எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 8 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    இதுவரை திருக்கோவில்களில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் பணி புரிந்து வந்த 1298 பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். 111 பணியாளர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    திருக்கோவில் பணியாளர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்குதல, ஊக்கத் தொகை உயர்வு செய்தல், தினக்கூலி மற்றும் தொகுப்பூ தியத்தில் பணிபுரிந்த 1298 பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது. ஓய்வூதியாரர்களுக்கு தொகை உயர்வும் வழங்கப்பட்டு இருக்கிறது. இப்படி வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.

    ஏதோ திடீரென்று பழனியில் மாநாடு நடத்தவில்லை. இப்படிப்பட்ட பணிகளை செய்து கொண்டுதான் பழனியில் இந்த மாநாட்டை இந்து சமய அறநிலையத்துறை நடத்துகிறது.

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கைகள் இருக்கும். அதில் உயர்வு தாழ்வு இல்லை. அந்த நம்பிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு எப்போதும் தடையாக இருந்தது இல்லை. அது மட்டுமல்ல அனைவரது நம்பிக்கைக்கும் நன்மை செய்து தரக்கூடிய அரசாகவும் செயல்பட்டு வருகிறது.

    திராவிட மாடல் என்பது எல்லாருக்கும் எல்லாம் என்ற கருத்தியலை அடிப்படையாக கொண்டது. அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்று விளக்கிக் கொண்டு வருகிறோம். அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறையையும் மிக சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறோம்.

    தி.மு.க.வின் தாய் அமைப்பான நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான் பழுத்த ஆத்திகரான அன்றைய முதலமைச்சர் பனகல் அரசால் இந்து சமய அறநிலைய பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. பண்பாட்டு சின்னங்களான கோவில்கள் முறையாக பாதுகாக்கப்பட வேண்டும். முறையாக செயல்படும் என்ற நோக்கத்துடன் அந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.

    இன்று சீரோடும் சிறப்போடும் கோவில்கள் இயக்க அடித்தளம் அமைத்தது அந்த சட்டம்தான். கடந்த 3 ஆண்டு காலத்தில் 1355 திருகோவில்களில் குடமுழுக்கு விழாக்கள், ரூ.3776 கோடியில் 8436 திருக்கோவில்களில் திருப்பணிகள், ரூ.50 கோடியில் கிராமப்புற ஆதிராவிடர் கோவில்களில் திருப்பணிகள் நடத்தி இருக்கிறோம். ரூ.62 கோடியே 76 லட்சம் ரூபாயில் 27 திருக்கோவில்களில் ராஜ கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.80 கோடியே 50 லட்சத்தில் பழனி, இடும்பன்மலை, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் கோவில்களில் கம்பிவட ஊர்திகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ரூ.5577 கோடி மதிப்புடைய 6140 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 756 திருக்கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. தினந்தோறும் 82 ஆயிரம் பேர் உணவு உண்டு வருகிறார்கள்.

    கோவில் சொத்துக்களை அளவிடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 507 ஏக்கர் நிலங்கள் நவீன ரோபர் கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு 64522 கற்கள் நடப்பட்டு உள்ளன.

    4189 ஏக்கர் நிலம் மீண்டும் கோவில் பெயரில் பட்டா செய்யப்பட்டுள்ளது. இப்போது நான் சொன்னதெல்லாம் மிகவும் குறைவு.

    நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளை இந்து சமய அறநிலையத் துறை மூலமாக ஒரு புத்தகமாகவே போடப்பட்டு இருக்கிறது. அதில் இருக்கும் சிலவற்றை தான் நான் இப்போது சொல்லி இருக்கிறேன். அந்த புத்தகத்தை நீங்கள் எல்லோரும் வாங்கி படிக்க வேண்டும். ஊடக துறையை சேர்ந்த நண்பர்களும் இந்த சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

    அந்த சானைகளுக்கு மகுடம் வைத்தது போல பழனியில் நடக்கும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் மட்டுமல்ல தமிழ்நாடு ஆன்மிக வரலாற்றிலேயே மிக சிறப்பான இடத்தை பெறும்.

    நீதியரசர்கள், மகாசன்னி தானங்கள், ஆன்மிக பெரியவர்கள், சமய சொற்பொழிவாளர்கள், தமிழ் இலக்கிய அறிஞர்கள், புலவர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள், இசைக் கலைஞர்கள், நாட்டிய கலைஞர்கள், பாடகர்கள் என பல்துறை அறிஞர்கள் பழனியில் சங்கமிக்கிற இந்த மாநாட்டுக்கு எனது வாழ்த்துக்கள்.

    ஆலய வழிபாடுகளில் தமிழ்மொழி முதன்மை பெற வேண்டும். திருக்கோவில் கருவறைக்குள் மனிதருக்கு இடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவ வேண்டும். அன்பால் உயிர்கள் ஒன்றாகும், அறத்தால் உலகம் நன்றாகும்.

    மாநாட்டில் தர்மபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலா மணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞானபாலய சுவாமிகள், சிரவை ஆதீனம் குமரகுரு பரசு வாமிகள, ரத்தினபுரி பாலமுருகனடிமை சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.

    இலங்கை கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டைமான், லண்டன் துணை மேயர் பரம்நந்தா, மலேசிய முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்றை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் மொ.நா.பூங்கொடி, கூடுதல் ஆணையர் இரா.சுகுமார், உயர்நீதி மன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், சுரேஷ்குமார், வேல்முருகன், புகழேந்தி, சிவஞானம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    மாநாட்டில் முருகனின் சிறப்புகளை விளக்கும் வகையில் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் வேல், சிவலிங்கம், அறுபடை வீடுகளில் உள்ள முருகனின் திருக்காட்சிகள், மெய்நிகர் காட்சிகள், முப்பரிமண பாடலங்கம், சிறப்பு புகைப்பட கண்காட்சி, ஆய்வரங்கங்கள் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

    கல்தூண் வடிவம் போன்று இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் அனைத்தையும் சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியை சேர்ந்த சிற்பகலைஞர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உருவாக்கி அழகு படுத்தினர்.

    கண்காட்சியில் முருகனின் பல்வேறு திருப்பெயர்கள், முருகன் பெயரில் உள்ள பெண்களுக்கான தமிழ் பெயர்கள், தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள முருகனின் கோவில்கள் குறித்த விவரங்கள், முருகனின் படைக்கலங்கள் உள்ளிட்ட அரிய தகவல்கள் வண்ண ஓவியங்களுடன் இடம்பெற்றுள்ளன.

    மாநாட்டின் நிறைவு விழாவில் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் நக்கீரர், போகர், அருணகிரிநாதர், குமரகுருபரர், பாம்பன் சுவாமிகள். அண்ணாமலை ரெட்டியார், முருகம்மையார், பாலதேவராயர், திருமுருக கிருபானந்த வாரியார், தேனூர் வரகவி சொக்கலிங்கனார், கந்தபுராணக் கச்சியப்பர், பகழிக்கூத்தர், சிதம்பர சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், மாம்பழக் கவிச்சிங்க நாவலர் என 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது.

    மாநாட்டின் இரண்டு நாட்களும் ஆன்மிக சொற்பொழிவுகள், கருத்தரங்கம், இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் இம்மாநாடு முத்தாய்ப்பாக அமைவதோடு, தமிழ் கடவுளாம் முருக பெருமானின் பெருமைகளை மென் மேலும் பறைசாற்றி, உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் பெருமையும், பேருவகையும் கொள்ளச் செய்யும் வகையில் இன்றும், நாளையும் சிறப்பாக நடைபெறும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 3 ஆண்டில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
    • 4181 ஏக்கர் நிலம் மீண்டும் கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * நீதிக்கட்சி ஆட்சியில்தான் இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    * பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. திமுக ஆட்சியை பக்தர்கள், ஆன்மீகப் பெரியவர்கள் பாராட்டி வருகின்றனர்.

    * கடந்த 3 ஆண்டில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

    * பழனி, இடும்பன் மலை உள்ளிட்ட பகுதிகளில் ரோப் கார் சேவை அமைக்கப்பட்டுள்ளது.

    * அறுபடை வீடுகளுக்கு இதுவரை 813 பக்தர்கள் அரசு சார்பில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

    * 1,355 திருக்கோவில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 8,436 கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    * 756 திருக்கோவில்களில் நாள்தோறும் அன்னதானம் திட்டத்தில் நாளொன்றுக்கு 82,000 பேர் உணவருந்துகின்றனர்.

    * 4181 ஏக்கர் நிலம் மீண்டும் கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    * அறநிலையத்துறை சார்பாக செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களும் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளது.

    * ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும்.

    * கோவில் கருவறையில் சமத்துவம் காட்டப்பட வேண்டும்.

    * அன்பால் உலகம் ஒன்றாகும், அறத்தால் உலகம் நன்றாகும் என்று கூறினார்.

    • அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு வந்த பின்னர் சிறப்பாக செயல்படுகிறது.
    • அறுபடை வீடு சுற்றுலாவிற்கு 813 பேர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * இன்றும் நாளையும் முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் நடைபெறுகிறது.

    * அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு வந்த பின்னர் சிறப்பாக செயல்படுகிறது. அறநிலையத்துறை சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    * 7 முருகன் கோவில்களில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    * அறுபடை வீடு முருகன் கோவில்களில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

    * பழனி கோவிலில் தை பூசம், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடைபயணம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    * அறுபடை வீடு சுற்றுலாவிற்கு 813 பேர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

    * பல்வேறு திருக்கோவில்களில் பணிகளை மேற்கொண்ட பின்னரே முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படுகிறது.

    * முத்தமிழ் முருகன் மாநாட்டு ஏற்பாடுகளை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செய்துள்ளார்.

    * கோவிலை சிறப்பாக கவனிக்குமாறு சேகர்பாபுவை நியமித்தேன். ஆனால் கோவிலிலேயே குடியிருக்கும் அமைச்சராக உள்ளார்.

    * 69 முருகன் திருக்கோவில்களில் பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

    * அறுபடை வீடுகளில் ரூ.789 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    * அறுபடை வீடுகளுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூடுதல் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

    * அறுபடை வீடுகள் அல்லாத முருகன் கோவில்களில் ரூ.277 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

    ×