என் மலர்
நீங்கள் தேடியது "முத்தமிழ் முருகன் மாநாடு"
- அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது.
- இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
சென்னை:
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் வருகிற ஆகஸ்டு மாதம் 24 மற்றும் 25 -ந் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது.
இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்கள்/ஆய்வு மாணவர்கள் பதிவு செய்திடும் வகையில் தனியாக வடிவமைக்கப்பட்டு உள்ள இணையதளம் https://muthamizhmuruganmaanadu2024.com இன்று இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
- மாநாட்டில் பங்கேற்க விரும்பும் உள்நாட்டினருக்கு ரூ.500, வெளிநாட்டினருக்கு ரூ.1000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
- முருக பக்தர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாக கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆகஸ்ட் 24 மற்றும் 25ந் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் உள்ள சமய பெரியோர்கள், ஆன்மீக அன்பர்கள், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டிற்காக வரும் சிறப்பு அழைப்பாளர்கள் வெளிநாட்டு பக்தர்களை தங்க வைப்பதற்காக பழனி மற்றும் திண்டுக்கல்லில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள், கோவிலுக்கு சொந்தமான தங்கும் விடுதிகளில் உள்ள அனைத்து அறைகளும் ஆகஸ்ட் 23ந் தேதி முதல் 26ந் தேதி வரை முன்பதிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க பிரத்தியேக இணையதளம் கடந்த மே 28ந் தேதி தொடங்கப்பட்டு தற்போது வரை பதிவுகள் நடைபெற்று வருகின்றன.
மாநாட்டில் பங்கேற்க விரும்பும் உள்நாட்டினருக்கு ரூ.500, வெளிநாட்டினருக்கு ரூ.1000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து முருக பக்தர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாக கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பதிவு செய்த பங்கேற்பாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை தவிர மாநாட்டை காண வரும் முருக பக்தர்களுக்கு தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முத்தமிழ் முருகன் மாநாட்டை முன்னிட்டு பழனி கோவிலின் புகைப்படங்களை முப்பரிமாண காட்சி மூலம் பக்தர்கள் பார்க்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பழனி மலை, படிப்பாதை, யானைப்பாதை, மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள கோவில்கள், மலைக்கோவிலின் உள் மற்றும் வெளி பிரகாரம், தங்க கோபுரம், ராஜகோபுரம் உள்ளிட்ட சன்னதிகளை முப்பரிமாண காட்சிகளில் பார்க்கும்போது நேரில் கோவிலுக்கு சென்று சுற்றி பார்க்கும் உணர்வை பக்தர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- கால அவகாசம் ஆகஸ்ட் 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24 , 25 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
சென்னை:
அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் பங்கேற்கவும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் https://muthamizhmuruganmaanadu2024.com/ என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டு, மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் 15.7.2024-ம் தேதிக்குள்ளும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்புபவர்கள் 10.7.2024-ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 1,003 ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டு, அவற்றை பரிசீலிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்பதற்கு பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்கிட வேண்டுமென பல்வேறு தரப்பினரிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழு முடிவுகளின்படி பங்கேற்பாளர்கள் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் இறையன்பர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- 24, 25-ந் தேதிகளில் முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.
- வெளிநாட்டு பிரதிநிதிகளை வரவழைக்க ஏற்பாடு
பழனி:
பழனியில் உலக முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இன்று பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.
முருக பக்தர்கள் மாநாடு அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆகஸ்ட்டு 24 மற்றும் 25-ந் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் முருகன் கோவில்களை நிர்மானித்துள்ள அறங்காவலர்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு உணவு, தங்கும் இடம் இலவசமாக வழஙகப்படுவதுடன் உள்ளூர் போக்குவரத்தும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் முருகனை பற்றிய ஆய்வுகள், முருகனின் புகழ் பரப்பும் கருத்தரங்குகள், சொற்பொழிவுகள் நடைபெறும். மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பழனி முருகன் கோவிலில் ரூ.98 கோடி செலவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில் தற்போது முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படுவது பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்குவதற்காக பழனி, திண்டுக்கல்லில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், கோவிலுக்கு சொந்தமான தங்கும் விடுதிகளில் உள்ள அனைத்து அறைகளும் ஆகஸ்ட்டு 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை முன் பதிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஆன்மீக அன்பர்கள் பங்கேற்கும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து ஆதீனங்கள், மடாதிபதிகள், ஆன்மிக பெரியோர்கள் உள்ளிட்ட பலர் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று பழனி வந்தார்.
அதிகாலையில் ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் சார்பில் பரிவட்டம் கட்டி பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானக் கூடம், பிரசாத ஸ்டால் ஆகியவற்றை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
அதன் பின்பு பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் தலைமை தாங்கினார். மாநாட்டுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் வெளிநாட்டு பிரதிநிதிகள் வருவதால் அவர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் பூங்கொடி, போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி மற்றும் கோவில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- 11 செயற்பாட்டு குழுக்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- முத்தமிழ் முருகன் மாநாடு 24, 25 தேதிகளில் பழனியில் நடைபெறுகிறது.
சென்னை:
இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று ஆணையர் அலுவலகக் கூட்ட அரங்கில் பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு மற்றும் 11 செயற்பாட்டு குழுக்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24 மற்றும் 25 தேதிகளில் பழனியில் நடைபெறுகிறது. இம்மாநாட்டிற்கு வெளிநாடுகளிலிருந்து 131 முக்கிய பிரமுகர்கள் மற்றும் தமிழ்நாட்டை தவிர இதர மாநிலங்களிலிருந்து 526 முக்கிய பிரமுகர்கள் மற்றும் முருகப் பக்தர்கள் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இம்மாநாட்டில் தமிழ்க் கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர் போன்றவர்களுக்கு 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகளும், பணமுடிப்பும் வழங்குவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு இதுவரை 65 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதற்கென அமைக்கப்பட்ட குழு விண்ணப்பங்களை பரிசீலித்து விருதாளர்களை தேர்வு செய்யும். இம்மாநாட்டில் வெளிநாட்டை சேர்ந்த 39 முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்த இருக்கின்றார்கள்.
மேலும், மலேசியாவிலிருந்து 35 நபர்களும், ஜப்பானில் இருந்து 70 நபர்களும், சுவிட்சர்லாந்திலிருந்து 15 நபர்களும் குழுக்காக தங்களது சொந்த செலவில் மாநாட்டில் பங்கேற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பழனியில் நடைபெறும் மாநாட்டிற்காக 10,000 நபர்கள் அமரும் வகையில் மாநாட்டு பந்தலும், மிக முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் முருகப் பக்தர்களுக்காக 15 இடங்களில் உணவருந்தும் கூடங்களும், அறுபடை வீடுகளின் அரங்குகள், சிறப்பு புகைப்பட கண்காட்சி, வேல் அரங்கம், 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம் போன்றவையும் அமைக்கப்பட்டு வருகிறது.
வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருகை தரும் முருக பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு 500 தங்கும் அறைகளும், கோவில் தங்கும் விடுதியில் 135 அறைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 1,200 காவல் துறையினர் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்படுகின்றன.
வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருகைதரும் முக்கிய பிரமுகர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரும் வகையில் துறையிலிருந்து செயல் அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் நிலையிலான அலுவலர்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
விழா மலர் மற்றும் ஆய்வு மலர்கள் வெளியிடப்படுவதோடு, மாநாட்டில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது.
இம்மாநாட்டிற்காக ரூ.1.10 கோடி நன்கொடையாக வழங்கிட உபயதாரர்கள் விருப்பம் தெரிவித்து கடிதம் அளித்துள்ளனர். மேலும், அரசு சார்பில் ரூ.3 கோடியும், சுற்றுலாத்துறை சார்பில் ரூ.3 கோடியும் நிதி வழங்கப்படுகிறது.
ஒன்றிய அரசுக்கு தோன்றுவதற்கு முன்பா கவே ராமேசுவரம் காசி ஆன்மிகப் பயணத்தை அறிவித்து இதுவரை 500 மூத்த குடிமக்களை அழைத்து சென்று செயல்படுத்திய ஆன்மிக அரசு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு என்பதனை அண்ணாமலைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்ஸ்ரீதர், ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் சுகி சிவம், சத்தியவேல் முருகனார், தேசமங்கையர்க்கரசி, மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், ரத்தினகிரி பாலமுருனடிமை சுவாமிகள், கூடுதல் ஆணையர்கள் டாக்டர் இரா. சுகுமார், திருமகள், ஹரிப்ரியா இணை ஆணையர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பழனியில் வருகிற 24, 25-ந் தேதிகளில் முத்தமிழ் முருகன் மாநாடு.
- பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி மும்முரம்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் வருகிற 24 மற்றும் 25-ந் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற உள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள முருக பக்தர்களை ஒன்றிணைக்கும் வகையில் நடத்தப்படும் இந்த மாநாட்டுக்காக பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி முகூர்த்தக்கால் நடும் பணியுடன் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மாநாட்டு பந்தலில் பழனி மலைக்கோவிலின் ஓவியம், முருகாற்றுப்படையில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள் மற்றும் முருகன் தொடர்பான படங்கள் வரையப்பட்டு வருகின்றன.
மேலும் உலகம் முழுவதிலும் இருந்து தமிழ் அறிஞர்கள் தங்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கும் வகையில் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு கட்டுரைகளில் சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு அவை மாநாட்டு நிறைவில் உரிய பரிசுக்குரியவையாக தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட உள்ளது.
மேலும் விழா மாநாட்டு மலர் தயாரிப்பு, பக்தர்கள் தங்கும் இடம், வெளிநாட்டு ஆன்மீக அன்பர்கள் தங்கும் விடுதிகளில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர் சுகாதாரமாக வழங்கவும், கழிப்பிட வசதிகள் உரிய முறையில் ஏற்படுத்தி தரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநாடு நடைபெறும் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 3 முறை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிவுறுத்தி உள்ளார்.
இன்று மீண்டும் பழனிக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு மாநாடு மேடை அமைக்கும் பணியை பார்வையிட்டார். குறுகிய காலமே இருப்பதால் அதற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி, கலெக்டர் பூங்கொடி, எஸ்.பி. பிரதீப், மடாதிபதிகள், ஆதீனங்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முத்தமிழ் முருகன் மாநாடு 2 தினங்கள் நடைபெறவுள்ளது.
- அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை செயல்திட்டக் கூட்டத்தில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட தீர்மானிக்கப்பட்டது. வருகிற 24 மற்றும் 25-ந் தேதிகளில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட அனுமதி அளித்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
அதன்படி, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, பழனி தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் 2 தினங்கள் நடைபெற உள்ளது.
ஆன்மீக ஈடுபாடு உள்ளவர்களும், முருக பக்தர்களும், உலகளவில் உள்ள முத்தமிழ் அறிஞர்களும் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். ஆகையால் தமிழக அரசின் சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு மாநாடு சிறப்பாக நடத்தப்பட உள்ளது.
மாநாட்டிற்கு வருகை தரும் அனைத்து பொதுமக்களும் எளிதாக வந்து செல்லும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநாட்டில் கலந்துகொள்வதற்கு அனுமதி இலவசம். எனவே பக்தர்கள் கலந்து கொண்டு முருகன் மாநாட்டை சிறப்பிக்க வேண்டும்.
மேலும் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ள பங்கேற்பவர்கள் மற்றும் மாநாட்டினை காண வரும் பொதுமக்கள், மாநாடு தொடர்பான விவரங்கள், ஏதேனும் சந்தேகங்கள் உள்ளிட்ட விபரங்களை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் 04545-241471, 04545-241472, 04545-241473, 04545-241474, 04545-241475 மற்றும் இலவச தொடர்பு எண்-1800 425 9925 ஆகிய எண்கள் வாயிலாக தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம், என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
- பழனி நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது.
- தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
பழனி:
பழனி மலை மீது அமர்ந்து பக்தர்களுக்கு முருகப்பெருமான் காட்சி தருகிறார். மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை மற்றும் ரோப்கார், மின்இழுவை ரெயில் வசதிகளும் உள்ளன. பழனியில் தமிழக இந்து சமயஅறநியைத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பழனியில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மாநாட்டையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளன. பழனி மலைக்கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. பழனி நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது.
அதன்படி தமிழக இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' பழனியில் இன்று தொடங்குகிறது.
பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று காலை 9 மணியளவில் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்ற உள்ளார். அதைத்தொடர்ந்து மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கி நடைபெற உள்ளன.
'உலக பைந்தமிழர்களை இணைத்து முருகன் மாநாட்டை நடத்துவது மகிழ்ச்சி' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.'
பழனியாண்டவர் கலை-பண்பாட்டு கல்லூரியில் அமைக்கப்பட்ட மாநாட்டு அரங்கத்தில் காலை 8.30 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், நாதஸ்வரம்-தவில் மங்கள இசையுடன் மாநாடு தொடங்குகிறது.
காலை 8.55 மணிக்கு ரத்தினகிரி பாலமுருகனடி சுவாமிகள் மாநாட்டு கொடியை ஏற்றி வைக்கிறார்.
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி முன்னிலை வகிக்கிறார். திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் வேல் கோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். பின்னர் 9.30 மணிக்கு சீர்காழி கோ.சிவசிதம்பரத்தின் இறைவணக்கத்துடன் மாநாடு தொடங்குகிறது.
- மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கி நடைபெற உள்ளன.
- உலக பைந்தமிழர்களை இணைத்து முருகன் மாநாட்டை நடத்துவது மகிழ்ச்சி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை:
பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கி நடைபெற உள்ளன.
'உலக பைந்தமிழர்களை இணைத்து முருகன் மாநாட்டை நடத்துவது மகிழ்ச்சி' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.'
- அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு வந்த பின்னர் சிறப்பாக செயல்படுகிறது.
- அறுபடை வீடு சுற்றுலாவிற்கு 813 பேர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
சென்னை:
பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* இன்றும் நாளையும் முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் நடைபெறுகிறது.
* அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு வந்த பின்னர் சிறப்பாக செயல்படுகிறது. அறநிலையத்துறை சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* 7 முருகன் கோவில்களில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
* அறுபடை வீடு முருகன் கோவில்களில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
* பழனி கோவிலில் தை பூசம், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடைபயணம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
* அறுபடை வீடு சுற்றுலாவிற்கு 813 பேர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
* பல்வேறு திருக்கோவில்களில் பணிகளை மேற்கொண்ட பின்னரே முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படுகிறது.
* முத்தமிழ் முருகன் மாநாட்டு ஏற்பாடுகளை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செய்துள்ளார்.
* கோவிலை சிறப்பாக கவனிக்குமாறு சேகர்பாபுவை நியமித்தேன். ஆனால் கோவிலிலேயே குடியிருக்கும் அமைச்சராக உள்ளார்.
* 69 முருகன் திருக்கோவில்களில் பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
* அறுபடை வீடுகளில் ரூ.789 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.
* அறுபடை வீடுகளுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூடுதல் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
* அறுபடை வீடுகள் அல்லாத முருகன் கோவில்களில் ரூ.277 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
- கடந்த 3 ஆண்டில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
- 4181 ஏக்கர் நிலம் மீண்டும் கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* நீதிக்கட்சி ஆட்சியில்தான் இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
* பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. திமுக ஆட்சியை பக்தர்கள், ஆன்மீகப் பெரியவர்கள் பாராட்டி வருகின்றனர்.
* கடந்த 3 ஆண்டில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
* பழனி, இடும்பன் மலை உள்ளிட்ட பகுதிகளில் ரோப் கார் சேவை அமைக்கப்பட்டுள்ளது.
* அறுபடை வீடுகளுக்கு இதுவரை 813 பக்தர்கள் அரசு சார்பில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
* 1,355 திருக்கோவில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 8,436 கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
* 756 திருக்கோவில்களில் நாள்தோறும் அன்னதானம் திட்டத்தில் நாளொன்றுக்கு 82,000 பேர் உணவருந்துகின்றனர்.
* 4181 ஏக்கர் நிலம் மீண்டும் கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* அறநிலையத்துறை சார்பாக செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களும் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளது.
* ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும்.
* கோவில் கருவறையில் சமத்துவம் காட்டப்பட வேண்டும்.
* அன்பால் உலகம் ஒன்றாகும், அறத்தால் உலகம் நன்றாகும் என்று கூறினார்.
- இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
- 69 முருகன் கோவில்களின் திருப்பணிகளை முடித்து குட முழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது.
பழனி:
தமிழ் கடவுளான முருகபெருமானின் 3-ம் படை வீடான பழனியில் இன்று இந்து சமய அற நிலையத்துறை சார்பில் முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கியது.
பழனியில் உள்ள பழனி யாண்டவர் கலைக்கல்லூரியில் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை முன்னிட்டு மாநாட்டு கொடியை ரத்தின கிரி தவத்திரு பாலமுருகன் அடிமை சுவாமிகள் ஏற்றி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கை அமைச்சர்கள் இ.பெரியசாமி, சேகர்பாபு, அர.சக்கரபாணி ஆகியோர் திறந்து வைத்தனர்.
மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத் துலக முத்தமிழ் முருகன் மாநாடு மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
செயல்பாபு என்று என்னால் அழைக்கப்படும் சேகர்பாபு அறநிலையத் துறை அமைச்சராக வந்த பிறகு இந்த துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக எல்லோருடைய பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. கோவிலை கவனித்துக் கொள்ளுங்கள் என்று நான் அறநிலையத்துறையை அவரிடம் கொடுத்தேன். ஆனால் கோவிலிலேயே குடியிருக்கும் ஒருவர் உங்களுக்கு அமைச்சராக கிடைத்து உள்ளார்.
நாள் தோறும் ஆன்மிக பெரியவர்கள், அறநிலையத்துறையையும், அமைச்சர் பி.கே.சேகர்பாபுவையும் பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. திட்டங்கள் செயல்படுத் தப்படுகிறது.
நானும் பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளேன். அந்த வரிசையில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் ஆட்சி காலத்தில் நடந்த மக்கள் பணிகளை பார்த்து, குன்றக்குடி அடிகளாரும், திருமுருக கிருபானந்தவாரி யாரும் பாராட்டினார்கள்.
இன்றைய ஆட்சியை நீங்கள் எல்லோரும் பாராட்டிக் கொண்டு இருக்கிறீர்கள். அதோட அடையாளம்தான் பழனியில் நீங்கள் எல்லோரும் கூடி இருப்பது.

அந்த வகையில் பக்தர்கள் உள்பட அனைவரும் விரும்பும் ஆட்சியாக கழக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்ட உடனே அறநிலையத்துறை சார்பாக செய்யப்பட்டு வரும் பணிகளின் பட்டியலை தரச்சொல்லி அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்டேன். அதில் அவர் குறிப்பிட்டிருந்த பணிகளில் சிலவற்றை இங்கே குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
பழனி, திருத்தணி, திருச்செந்தூர், மருதமலை, குமாரவயலூர், சிறுவாபுரி, காந்தல் ஆகிய 7 முருகன் திருக்கோவில்களில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு வருகிற பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் பக்தர்கள் நலனை மனதில் வைத்து கோவிலில் வளர்ச்சி பணிகளை தொடங்கி இருக்கிறோம்.
வளர்ச்சி திட்ட பணிகளுக்காக 58.77 ஏக்கர் நிலங்களை ரூ.58 கோடியே 54 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கி கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அறுபடை வீடு முருகன் திருக்கோவில்களில் ரூ.789 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் 251 பணிகள் நடைபெற்று வருகிறது. அறுபடை வீடு அல்லாத முருகன் திருக்கோவில்களில் ரூ.277 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் 588 பணிகள் நடைபெற்று வருகிறது.
69 முருகன் கோவில்களின் திருப்பணிகளை முடித்து குட முழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி கோவில் சார்பில் நடத்தும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் 4 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு கட்டணமில்லா காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மதிய உணவும் வழங்கப்பட உள்ளது.
பழனி திருக்கோவிலுக்கு தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் திருவிழாக்களுக்கு பாத யாத்திரை வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பழனி தண்டாயுதபாணி கோவில் திருக்கோவிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்று துறை நிலையிலான ஓய்வூதியம் வாங்குகிற 258 ஓய்வூதியர்களுக்கு நபர் ஒருவருக்கு ஓய்வூதியம் ரூ.3000 வழங்கப்பட்டு வந்ததை ரூ.4000 ஆக உயர்த்தியும், 54 குடும்ப ஓய்வூதியர்களுக்கு ரூ.1500 வழங்கப்பட்டதை 2000 ரூபாயாக உயர்த்தியும் வழங்கி வருகிறோம்.

2024-ம் ஆண்டு அறுபடை வீடு ஆன்மீக சுற்றுப் பயணத்துக்காக 1000 பக்தர்கள் அழைத்து செல்லப்படுவாார்கள் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இதுநாள் வரை 813 நபர்கள் பயன் அடைந்துள்ளனர்.
எல்லா திருக்கோவில்களிலும் பக்தர்களுக்கு கட்டண மில்லா முடி காணிக்கை செலுத்தும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முடி காணிக்கை பணியாளர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
தவில், நாதசுவர கல்லூரி, அர்ச்சகர் மற்றும் வேதஆகம பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ஊக்கத் தொகையாக ரூ.3000 வழங்கப்பட்டு வந்ததை 24.11.2023 முதல் ரூ.4000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியம் அடிப்படையில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணிபுரிந்த 13 பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த திருக்கோவில்களில் பணிபுரிந்து பணி காலத்தில் மறைவு எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 8 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை திருக்கோவில்களில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் பணி புரிந்து வந்த 1298 பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். 111 பணியாளர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
திருக்கோவில் பணியாளர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்குதல, ஊக்கத் தொகை உயர்வு செய்தல், தினக்கூலி மற்றும் தொகுப்பூ தியத்தில் பணிபுரிந்த 1298 பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது. ஓய்வூதியாரர்களுக்கு தொகை உயர்வும் வழங்கப்பட்டு இருக்கிறது. இப்படி வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.
ஏதோ திடீரென்று பழனியில் மாநாடு நடத்தவில்லை. இப்படிப்பட்ட பணிகளை செய்து கொண்டுதான் பழனியில் இந்த மாநாட்டை இந்து சமய அறநிலையத்துறை நடத்துகிறது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கைகள் இருக்கும். அதில் உயர்வு தாழ்வு இல்லை. அந்த நம்பிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு எப்போதும் தடையாக இருந்தது இல்லை. அது மட்டுமல்ல அனைவரது நம்பிக்கைக்கும் நன்மை செய்து தரக்கூடிய அரசாகவும் செயல்பட்டு வருகிறது.
திராவிட மாடல் என்பது எல்லாருக்கும் எல்லாம் என்ற கருத்தியலை அடிப்படையாக கொண்டது. அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்று விளக்கிக் கொண்டு வருகிறோம். அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறையையும் மிக சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறோம்.
தி.மு.க.வின் தாய் அமைப்பான நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான் பழுத்த ஆத்திகரான அன்றைய முதலமைச்சர் பனகல் அரசால் இந்து சமய அறநிலைய பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. பண்பாட்டு சின்னங்களான கோவில்கள் முறையாக பாதுகாக்கப்பட வேண்டும். முறையாக செயல்படும் என்ற நோக்கத்துடன் அந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
இன்று சீரோடும் சிறப்போடும் கோவில்கள் இயக்க அடித்தளம் அமைத்தது அந்த சட்டம்தான். கடந்த 3 ஆண்டு காலத்தில் 1355 திருகோவில்களில் குடமுழுக்கு விழாக்கள், ரூ.3776 கோடியில் 8436 திருக்கோவில்களில் திருப்பணிகள், ரூ.50 கோடியில் கிராமப்புற ஆதிராவிடர் கோவில்களில் திருப்பணிகள் நடத்தி இருக்கிறோம். ரூ.62 கோடியே 76 லட்சம் ரூபாயில் 27 திருக்கோவில்களில் ராஜ கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.80 கோடியே 50 லட்சத்தில் பழனி, இடும்பன்மலை, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் கோவில்களில் கம்பிவட ஊர்திகள் அமைக்கப்பட்டுள்ளன.
ரூ.5577 கோடி மதிப்புடைய 6140 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 756 திருக்கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. தினந்தோறும் 82 ஆயிரம் பேர் உணவு உண்டு வருகிறார்கள்.
கோவில் சொத்துக்களை அளவிடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 507 ஏக்கர் நிலங்கள் நவீன ரோபர் கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு 64522 கற்கள் நடப்பட்டு உள்ளன.
4189 ஏக்கர் நிலம் மீண்டும் கோவில் பெயரில் பட்டா செய்யப்பட்டுள்ளது. இப்போது நான் சொன்னதெல்லாம் மிகவும் குறைவு.
நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளை இந்து சமய அறநிலையத் துறை மூலமாக ஒரு புத்தகமாகவே போடப்பட்டு இருக்கிறது. அதில் இருக்கும் சிலவற்றை தான் நான் இப்போது சொல்லி இருக்கிறேன். அந்த புத்தகத்தை நீங்கள் எல்லோரும் வாங்கி படிக்க வேண்டும். ஊடக துறையை சேர்ந்த நண்பர்களும் இந்த சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
அந்த சானைகளுக்கு மகுடம் வைத்தது போல பழனியில் நடக்கும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் மட்டுமல்ல தமிழ்நாடு ஆன்மிக வரலாற்றிலேயே மிக சிறப்பான இடத்தை பெறும்.
நீதியரசர்கள், மகாசன்னி தானங்கள், ஆன்மிக பெரியவர்கள், சமய சொற்பொழிவாளர்கள், தமிழ் இலக்கிய அறிஞர்கள், புலவர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள், இசைக் கலைஞர்கள், நாட்டிய கலைஞர்கள், பாடகர்கள் என பல்துறை அறிஞர்கள் பழனியில் சங்கமிக்கிற இந்த மாநாட்டுக்கு எனது வாழ்த்துக்கள்.
ஆலய வழிபாடுகளில் தமிழ்மொழி முதன்மை பெற வேண்டும். திருக்கோவில் கருவறைக்குள் மனிதருக்கு இடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவ வேண்டும். அன்பால் உயிர்கள் ஒன்றாகும், அறத்தால் உலகம் நன்றாகும்.
மாநாட்டில் தர்மபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலா மணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞானபாலய சுவாமிகள், சிரவை ஆதீனம் குமரகுரு பரசு வாமிகள, ரத்தினபுரி பாலமுருகனடிமை சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.
இலங்கை கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டைமான், லண்டன் துணை மேயர் பரம்நந்தா, மலேசிய முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்றை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் மொ.நா.பூங்கொடி, கூடுதல் ஆணையர் இரா.சுகுமார், உயர்நீதி மன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், சுரேஷ்குமார், வேல்முருகன், புகழேந்தி, சிவஞானம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாநாட்டில் முருகனின் சிறப்புகளை விளக்கும் வகையில் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் வேல், சிவலிங்கம், அறுபடை வீடுகளில் உள்ள முருகனின் திருக்காட்சிகள், மெய்நிகர் காட்சிகள், முப்பரிமண பாடலங்கம், சிறப்பு புகைப்பட கண்காட்சி, ஆய்வரங்கங்கள் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
கல்தூண் வடிவம் போன்று இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் அனைத்தையும் சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியை சேர்ந்த சிற்பகலைஞர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உருவாக்கி அழகு படுத்தினர்.
கண்காட்சியில் முருகனின் பல்வேறு திருப்பெயர்கள், முருகன் பெயரில் உள்ள பெண்களுக்கான தமிழ் பெயர்கள், தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள முருகனின் கோவில்கள் குறித்த விவரங்கள், முருகனின் படைக்கலங்கள் உள்ளிட்ட அரிய தகவல்கள் வண்ண ஓவியங்களுடன் இடம்பெற்றுள்ளன.
மாநாட்டின் நிறைவு விழாவில் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் நக்கீரர், போகர், அருணகிரிநாதர், குமரகுருபரர், பாம்பன் சுவாமிகள். அண்ணாமலை ரெட்டியார், முருகம்மையார், பாலதேவராயர், திருமுருக கிருபானந்த வாரியார், தேனூர் வரகவி சொக்கலிங்கனார், கந்தபுராணக் கச்சியப்பர், பகழிக்கூத்தர், சிதம்பர சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், மாம்பழக் கவிச்சிங்க நாவலர் என 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது.
மாநாட்டின் இரண்டு நாட்களும் ஆன்மிக சொற்பொழிவுகள், கருத்தரங்கம், இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் இம்மாநாடு முத்தாய்ப்பாக அமைவதோடு, தமிழ் கடவுளாம் முருக பெருமானின் பெருமைகளை மென் மேலும் பறைசாற்றி, உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் பெருமையும், பேருவகையும் கொள்ளச் செய்யும் வகையில் இன்றும், நாளையும் சிறப்பாக நடைபெறும்.