search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது ஒழிப்பு மாநாடு"

    • தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • மதுஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க. சார்பில் கலந்துகொள்வதாக வதந்தி.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி. நேற்று மாலை, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் விழுப்புரம் சைபர்கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தினகரனிடம் புகார் மனு கொடுத்தார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள மதுஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க. சார்பில் நான் கலந்து கொண்டு பேசப்போவதாக சில கருத்துக்களை பேஸ்புக், எக்ஸ், வாட்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். இது முழுக்க முழுக்க தவறான, பொய்யான தகவல் ஆகும்.

    திட்டமிட்டே என்மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்றே இதுபோன்ற குற்ற செயல்களை செய்துள்ளனர். இந்த பொய்யான செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறும்போது, தி.மு.க. அரசு பொறுப்பேற்ற இந்த 3 ஆண்டுகளில் என் மீது எத்தனையோ பொய் வழக்கு, எனக்கு கொலை மிரட்டல் விடுப்பது, அச்சுறுத்தும் செயல்கள் நடந்துள்ளது.

    இதுவரை விழுப்புரம், திண்டிவனம், சென்னை உள்ளிட்ட இடங்களில் 23 புகார்களை கொடுத்துள்ளேன். ஆனால் தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என்மீது தொடா்ந்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்றார். 

    • இந்துக்களால் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆனால் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
    • விஜய்யும் திராவிட கொள்கைக்கு மாறுகிறாரா?

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு முறையாக அழைப்பு வந்தால் எங்கள் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து கலந்து கொள்வது சம்பந்தமாக தெரிவிக்கப்படும். நடிகர் விஜயும் திராவிட கொள்கையை பின்பற்றுகிறாரா? அவர் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்துக்களால் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆனால் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். எனவே விஜய்யும் திராவிட கொள்கைக்கு மாறுகிறாரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சர் பா. மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கூட்டணி ஆட்சி என்பது விளிம்பு நிலை மக்களின் அதிகார வேட்கைக்கான ஒரு குரல்.
    • தனி மெஜாரிட்டியாக பாஜக வெற்றி பெற்றாலும், கூட்டணி கட்சிக்கு அங்கீகாரம் தருகிறார்கள்.

    திருச்சி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மது ஒழிப்பில் மத்திய, மாநில அரசுகளுக்கு தான் பொறுப்பு உள்ளது என்பது போல ஒரு பார்வை இருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்பு எண் 47 அதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கி தருகிறது.

    இது தொடர்பாக 2-வது 5 ஆண்டு காலத்திலும் 3-வது ஐந்தாண்டு காலத்திலும் விரிவாக காங்கிரஸ் ஆட்சி காலத்திலே பேசப்பட்டிருக்கிறது. ஸ்ரீமன் நாராயணன் தலைமையில் ஒரு குழுவை அமைக்கப்பட்டது. அந்த குழு ஏராளமான பரிந்துரைகளையும் தந்திருக்கிறது.

    அந்த குழு பரிந்துரையில் மிக முக்கியமானது மதுவிலக்கு தொடர்பான சட்டம் இயற்ற வேண்டும், 1958-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்குள்ளாக ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கூறி இருக்கிறது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு என்பதை தேர்தல் அரசியலோடு இணைத்து பார்க்க கூடாது. இதனை மக்கள் பிரச்சனையாக பார்க்க வேண்டும். மது என்பது சமூக பிரச்சனையாகவும், தேசிய பிரச்சனையாகவும் பார்க்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு பலியான 69 பேரும் தலித்துகள் கிடையாது. பல சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். எனவே மதுவினால் எல்லா சமூகத்தினரும் பாதிக்கப்படுகிறார்கள். மதுவினால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கும், ஊருக்கும், நாட்டிற்கும் பாரமாக இருக்கிறார்கள். எனவே 100 சதவீத தூய நோக்கத்தோடு இந்த மது ஒழிப்பு மாநாட்டை நாங்கள் முன்னிறுத்துகிறோம். இதில் எந்த அரசியல் கணக்கும் இல்லை என்பதை மறுபடியும், மறுபடியும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

    1977ல் இருந்து டெல்லியில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தனி மெஜாரிட்டியாக பாஜக வெற்றி பெற்றாலும், கூட்டணி கட்சிக்கு அங்கீகாரம் தருகிறார்கள். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி நடப்பது ஒன்றும் தவறல்ல. அப்படி ஒரு கோரிக்கை எழுப்புவதும் தவறில்லை.

    2016ல் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் ஒரு கருத்தரங்கை நடத்தி உள்ளோம். இது தொடர்பாக ஒரு புத்தகமும் வெளியிட்டு உள்ளோம். இந்த கருத்து யாருக்கும் எதிராகவும், யாரையும் மிரட்டுவதற்காகவும் சொல்லப்படுகிற கருத்தல்ல. ஜனநாயக ரீதியாக எழுப்ப வேண்டிய கோரிக்கைகள். அதிகாரமில்லாதவர்களின் குரல் இது. விளிம்பு நிலையில் கிடக்கும் மக்களின் குரல் இது.

    அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதுதான் உண்மையான ஜனநாயகமும் கூட. கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பது இயல்பாக மக்களிடம் இருந்து எழும் குரலே தவிர, இது விடுதலை சிறுத்தைகள் ஏதோ திட்டமிட்டு காய்களை நகர்த்துகின்றன என்பது அல்ல. நாங்கள் எந்த காயையும் நகர்த்தவில்லை. ஓர் இடத்தில் அதிகாரத்தை குவிப்பது இல்லை ஜனநாயகம். அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பதுதான் ஜனநாயகம். நான் அரசியலில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்த போதே எழுப்பிய முழக்கம், கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என்பதுதான்.

    அதிகாரம் என்பது ஒரு குறிப்பிட்ட கட்சியிடம் மட்டும் இருக்க கூடாது. கூட்டணி ஆட்சி என்பது விளிம்பு நிலை மக்களின் அதிகார வேட்கைக்கான ஒரு குரல். கூட்டணி ஆட்சி கோரிக்கை குறித்து 2026 தேர்தல் வரும் போது பார்த்துக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாதி, மத வேறுபாடு இன்றி அனைவரையும் தமிழர்களாக இணைத்து மது ஒழிப்பு மாநாட்டை நடத்தலாம்.
    • இப்போதைய நிலையில் நடிகர் விஜய் கூட தனித்து தேர்தலில் நிற்க முடியாது.

    மதுரை:

    முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத்தலைவரும், நடிகருமான கருணாஸ் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு தேசத்திற்காக போராடியவர்களின் போராட்டங்கள், தியாகங்கள் குறித்து எடுத்துரைத்து பேச தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக பயணம் செய்து சொற்பொழிவு நடத்த இருக்கிறேன். சமூக வலைத்தளங்களின் மூலம் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் தவறான தகவல்கள் சென்றடைந்து விடுகின்றன. இதனை மாற்றி உண்மையான வரலாற்றை மக்களை சந்தித்து பேச இருக்கிறேன். அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் உண்மையை பேசினார். அவரை கட்டாயப்படுத்தி மன்னிப்பு கேட்கவைத்துள்ளனர். இது சர்வாதிகாரபோக்கு. இதை ஒட்டு மொத்த தமிழக மக்கள் மற்றும் தமிழக வியாபாரிகளின் அவமானமாக கருதுகிறேன். பிரதமர் டுவிட்டர், பேஸ்புக்கில் கருத்து சொல்கிறார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் நாங்களும் சமூகவலைத்தளங்கள் மூலம் பதில் அளித்து வருகிறோம். அரசியலுக்கு வருவது எளிதல்ல. நடிகர் விஜய்யின் கொள்கை, சித்தாந்தம் குறித்து பேசினால், அதன்பின்னர் அவருடன் கூட்டணி வைப்பது பற்றி யோசிக்கலாம்.

    விடுதலை சிறுத்தைகள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு எனக்கு அழைப்பு இல்லை. சாதி, மத அமைப்புகளுக்கு அழைப்பு இல்லை என்கிறார் திருமாவளவன். இவ்வளவு நாள் அவர் என்ன செய்தார்?. பா.ம.க. சாதிக்கட்சி என்றால், விடுதலை சிறுத்தைகள் என்ன கட்சி?. அர்ஜூன் ரெட்டி விடுதலை சிறுத்தைகளில் சேர்ந்ததால் அது தேசிய கட்சியாக மாறிவிட்டதா?.

    அக்கட்சி செய்வது பொது அரசியலா? சுய அரசியலா? என்பது தெரியவில்லை. சாதி, மத வேறுபாடு இன்றி அனைவரையும் தமிழர்களாக இணைத்து மது ஒழிப்பு மாநாட்டை நடத்தலாம். மது ஒழிப்பு மாநாடு என்பது ஓர் அரசியல் நாடகமாக இருக்கிறது. இப்போதைய நிலையில் நடிகர் விஜய் கூட தனித்து தேர்தலில் நிற்க முடியாது. நான் தனித்து நின்றால், நானும் எனது மனைவியை தவிர யாரும் ஓட்டு போடமாட்டார்கள். இது கள யதார்த்தம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என திருமாவளவன் பேசி உள்ளார்.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொது செயலாளர் வன்னியரசு விளக்கம் அளித்துள்ளார்.

    மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்த சர்ச்சை ஓய்வதற்குள் தற்போது புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    அமைச்சரவையில் பங்கு வேண்டும் என ஏற்கனவே பேசிய பழைய வீடியோவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    அதில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என அவர் பேசி உள்ளார். திடீரென பழைய வீடியோவை திருமாவளவன் பகிர்ந்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொது செயலாளர் வன்னியரசு விளக்கம் அளித்துள்ளார்.

    திருமாவளவனின் வீடியோ பகிரப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. திருமாவளவனின் பேச்சு அரசியல் நிலைப்பாடு மட்டுமே என்று தெரிவித்தார்.

    • திருமாவளவன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என திருமாவளவன் பேசி உள்ளார்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வரலாம் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். மேலும், இந்த மாநாட்டில் பங்குபெற அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    திருமாவளவன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது தமிழக அரசியலில் பரபரப்பையும், தி.மு.க. கூட்டணியில் சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்த சர்ச்சை ஓய்வதற்குள் தற்போது புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    அமைச்சரவையில் பங்கு வேண்டும் என ஏற்கனவே பேசிய பழைய வீடியோவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    அதில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என அவர் பேசி உள்ளார்.

    திடீரென பழைய வீடியோவை திருமாவளவன் பகிர்ந்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    1999-ல் விசிக இந்த கோரிக்கையை முன் வைத்துதான் அரசியலில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.

    யாருக்கு என்ன செய்தியை சொல்ல பழைய வீடியோவை தலைவர் திருமாவளவன் தற்போது பகிர்ந்துள்ளார் என்றும் திமுகவிற்கு மறைமுகமாக தனது கோரிக்கையை வைக்கிறாரா திருமாவளவன்? என வலைதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    திருமாவளவன் வீடியோவை வைத்து சமூக வலைதளங்களில் தொண்டர்கள் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • 35 ஆண்டுகளில் 200-க்கும் அதிகமான போராட்டங்களை பா.ம.க.நடத்தியுள்ளது.
    • அரசியலிலும், மது ஒழிப்பிலும் எங்கள் பயணம் எப்போதும் போல தொடரும்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாசிடம் மதவாத கட்சியான பா.ஜ.க., மற்றும் சாதியவாத கட்சியான பா.ம.க. ஆகிய கட்சிகளுக்கு மது ஒழிப்பு மாநாட்டிற்கு அனுமதி இல்லை என்று திருமாவளவன் கூறியிருப்பது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:-

    தமிழக கட்சிகள் மது ஒழிப்பை வலியுறுத்தி வருவது மகிழ்ச்சிதான். இதைப்பற்றி பேச தகுதியான கட்சி பா.ம.க.தான். கடந்த 44 ஆண்டுகளாக மதுவிலக்கு வேண்டி பா.ம.க. போராடிவருகிறது. ராஜாஜி, ஓமந்தூராரும் மதுவிலக்கை சென்னை மாகாணத்தில் கொண்டு வந்தனர். இதை தி.மு.க.ரத்து செய்தபோது கொட்டும் மழையில் 94 வயதில் ராஜாஜி , கருணாநிதி வீட்டுக்கே சென்று மது விலக்கை தொடரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

    ஆனாலும் மது விலக்கை ரத்து செய்துவிட்டு இன்று தி.மு.கவினர் மது ஆலைகளை நடத்தி வருகிறார்கள் . 35 ஆண்டுகளில் 200-க்கும் அதிகமான போராட்டங்களை பா.ம.க.நடத்தியுள்ளது. பா.ம.க மகளிர் மது ஒழிப்பு மாநாடு நடத்தியது. டாஸ்மாக் திறந்தபோது 7200கடைகளை 4800ஆக குறைத்தது பா.ம.க.தான். இதற்கான சட்டப்போராட்டங்களை பா.ம.க.தான் செய்தது. காலை 8 மணி முதல் தொடர்ந்து 16 மணி நேரம் கடைகள் திறக்கப்பட்டத்கை 10 மணி நேரமாக குறைத்தது பா.ம.க. தான். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மது விலக்கு என பா.ம.க. அறிவித்த பின்பே மற்ற கட்சிகள் வலியுறுத்த தொடங்கியது. அரசியலிலும், மது ஒழிப்பிலும் எங்கள் பயணம் எப்போதும் போல தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன.
    • மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசும் மதுவிலக்கு கொள்கை குறித்து பரிசீலிக்க வேண்டும்.

    மதுரை மேலவளவு படுகொலை 27-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடத்தில் இன்று விசிக தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.

    அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன. அரசு மதுபானங்கள் கள்ளச்சாராய மரணங்களுக்கு தீர்வல்ல. ஆகவே மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசும் மதுவிலக்கு கொள்கை குறித்து பரிசீலிக்க வேண்டும். ஆகவே தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும். அப்போது கள்ளச்சாராயம் காய்ச்சுவதையும் தடுக்க முடியும்.

    கள்ளக்குறிச்சி சாராய விவகாரத்தில் முழு மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக இருக்கின்றோம். பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது. இது பெண்கள் மூலம் நடத்தப்படும். விரைவில் இடம் அறிவிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

    ×