என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்"

    • எதிர்க்கட்சிகளான மகா விகாஸ் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
    • இந்த தேர்தல் என்பது மகாராஷ்டிராவின் சுயமரியாதையை காப்பதற்கான போராட்டம் என்றார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டசபைத் தேர்தல் நடக்கலாம்.

    எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதி கூட்டணியில், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளான மகா விகாஸ் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தச் சட்டசபைத் தேர்தல் என்பது மகாராஷ்டிராவின் சுயமரியாதையை காப்பதற்கான போராட்டம்.

    கடந்த பல தேர்தலில் பா.ஜ.க. உடனான கூட்டணி அனுபவம், அதிக எம்.எல்.ஏ.க்களைப் பெற கூட்டணியில் உள்ள பிற கட்சி வேட்பாளர்களை வீழ்ச்சியடைய செய்கின்றனர் என்பதை உணர்ந்திருக்கிறோம்.

    அதனால் அதிக எம்.எல்.ஏ.க்கள் கொண்ட கட்சிக்கு முதல் மந்திரி பதவி என்ற கொள்கைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை.

    மகா விகாஸ் அகாதியின் முதல் மந்திரி வேட்பாளர் யார் என்பதை நாங்கள் முடிவு செய்வோம். நான் அதனை ஆதரிப்பேன்.

    காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் (சரத் பவார்) அவர்களின் முதல் மந்திரி வேட்பாளரை அறிவிப்பர். நான் அவர்களுக்கு ஆதரவு அளிப்பேன்.

    ஏனென்றால் நாங்கள் மகாராஷ்டிராவின் முன்னேற்றத்துக்காக உழைக்கிறோம். மக்கள் விரும்புவது எங்களைத் தான், உங்களை அல்ல என தெரிவித்தார்.

    • மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
    • மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்), காங்கிரஸ் கட்சிகள் உள்ளன.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.

    எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    முதல் மந்திரி வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக கூட்டணி கட்சிகள் இடையே ஒருமித்த முடிவு எட்டப்படாமல் இருந்தது.

    இந்நிலையில், உத்தவ் தாக்கரே இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    முதல் மந்திரி வேட்பாளர் யார் என்பதை மகா விகாஸ் அகாடி கூட்டணி முடிவு செய்யும்.

    காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்பவார்) முதல் மந்திரி வேட்பாளராக யாரை அறிவித்தாலும் அவர்களுக்கு எனது ஆதரவு உண்டு.

    ஏனென்றால் மகாராஷ்டிரா மக்களைக் காப்பாற்ருவதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

    • தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கொண்டாட்டத்துக்கு பிறகு தேர்தல் நடத்தப்படலாம்.
    • நவம்பர் 2-வது அல்லது 3-வது வாரத்தில் வாக்குப்பதிவு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை பதவிக்காலம் நவம்பர் மாதம் 26-ந்தேதி முடிவடைகிறது.

    81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையின் பதவிகாலம் ஜனவரி 5-ந்தேதி முடிவடைகிறது. இதனால் இந்த இரு மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடந்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

    இந்த நிலையில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அடுத்த வாரம் அறிவிக்கும் என்று தெரிந்தது.

    தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கொண்டாட்டத்துக்கு பிறகு தேர்தல் நடத்தப்படலாம். நவம்பர் 2-வது அல்லது 3-வது வாரத்தில் வாக்குப்பதிவு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2019-ம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே கட்டமாக அக்டோபர் 24-ந் தேதி நடைபெற்றது. ஜார்க்கண்டில் கடந்த முறை (2019) 5 கட்டங்களாக நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை நடைபெற்றது. சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதனால் ஜார்க்கண்டில் இந்த தடவை வாக்குப்பதிவை வேகமாக நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளது.

    மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பாரதிய ஜனதா, அஜித்பவார் கூட்டணி ஆட்சியும் ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி ஆட்சியும் நடைபெற்று வருகின்றன.

    இந்த 2 மாநில தேர்தலோடு 2 எம்.பி. தொகுதி மற்றும் சட்டசபை இடைத்தேர்தலும் நடத்தப்படுகிறது.

    ராகுல் காந்தி 2 தொகுதியில் வெற்றி பெற்றதால் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. நூருல் இஸ்லாம் மரணம் அடைந்ததால் பாசிர்ஹாப் தொகுதி காலியாக உள்ளது. இதனால் இந்த 2 தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது.

    மேலும் பல்வேறு மாநிலங்களில் 45-க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. அங்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அரியானாவில் பாரதிய ஜனதாவும், காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியும் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தன.

    • மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் 20-ம் தேதி நடைபெறுகிறது.
    • ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் இரு கட்டமாக நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

    மொத்தம் 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை பதவிக்காலம் நவம்பர் மாதம் 26-ந்தேதி முடிவடைகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது.

    அதேபோல், 81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையின் பதவிகாலம் ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவடைகிறது.

    ஜார்க்கண்டில் இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்றும், நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

    இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட உள்ளன.

    மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாரதிய ஜனதா, அஜித்பவார் கூட்டணி ஆட்சியும் ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி ஆட்சியும் நடைபெற்று வருகின்றன.

    • அஜித் பவார் கட்சி தலைவர்கள் சரத் பவார் கட்சியில் இணைந்தனர்.
    • வயதை சுட்டிக்காட்டியபோது, வயது பற்றி கவலைப்பட வேண்டாம் என சரத் பவார் விளக்கம்.

    தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திரா பவார்) கட்சி தலைவர் சரத் பவார், தன்னுடைய வயது என்னவாக இருந்தாலும் சரி, மகாராஷ்டிரா மாநிலத்தை சரியான வழியில் கொண்டும் வரும் வரை ஓயமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

    அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ராம்ராஜே நாய்க் நிம்பால்கரின் சகோதரர் சஞ்சீவ் ராஜே நாய்க் நிம்பால்கர், பால்டன் தொகுதி எம்.எல்.ஏ. தீபக் சவான் ஆகியோர் சரத் பவார் கட்சியில் இணையும் நிகழ்ச்சியில் பேசும்போது சரத் பவார் கூறியதாவது:-

    சில இளைஞர்கள் தங்களுடைய கையில் பேனர்கள் ஏந்தியதை பார்த்தேன். அதில் என்னுடைய படம் இருந்தது. அதில் 84 வயதான நபர் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், நீங்கள் வயதை பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், 84 வயதாக இருந்தாலும் சரி அல்லது 90 வயதாக இருந்தாலும் சரி. இந்த வயதான மனிதன் நிறுத்தமாட்டார். மாநிலத்தை மீண்டும் சரியான வழியில் கொண்டு வரும்வரை நான் ஓயமாட்டேன். உறுதியாக உங்களுடைய உதவியை பெறுவேன்.

    சத்ரபதி சிவாஜி சிலை சரிந்து விழுந்து சேதமடைந்தது. ஆட்சியில் இருப்பவர்கள் எல்லாத் துறைகளிலும் ஊழலில் ஈடுபடுவது அவர்களின் கொள்கை. அதனால் அவர்கள் கையிலிருந்து அதிகாரத்தைப் பறிப்பது உங்களுடைய மற்றும் என்னுடைய பொறுப்பாகும்.

    288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந்தேதி நடைபெற இருக்கிறது. 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

    காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திரா பவார்), உத்தவ் தாக்கரேயின் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து களம் காண இருக்கின்றன.

    • மகாராஷ்டிராவில் தேர்தல் நடைபெற இன்னும் 35 நாட்களே உள்ளன.
    • மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அரசு தோல்வியடையும்.

    மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

    மொத்தம் 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை பதவிக்காலம் நவம்பர் மாதம் 26-ந்தேதி முடிவடைகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது.

    மகாராஷ்டிரா தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட உள்ளன.

    மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாரதிய ஜனதா, அஜித்பவார் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    உத்தவ் தாக்கரே தலையிலான சிவசேனா, காங்கிரஸ் மற்றும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளன.

    இந்நிலையில், சட்டசபை தேர்தல் தேதியை தாமதமாக வெளியிட்டு ஆளும் பாஜக கூட்டணி அரசிற்கு தேர்தல் ஆணையம் உதவி செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

    இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் விஜய் வடேட்டிவார், "அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை இறுதி செய்வதற்கும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கும், தேர்தல் பிரச்சாரத்துக்கும் குறைந்தபட்சம் 40 நாட்களுக்கு முன்பாகவே தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கும். ஆனால் மகாராஷ்டிராவில் தேர்தல் நடைபெற இன்னும் 35 நாட்களே உள்ளன. இது வழக்கத்திற்கு மாறானது மற்றும் தேர்தல் பிரசாரம் செய்ய எங்களுக்கு குறைவான நாட்களே உள்ளது.

    தேர்தல் தேதி தாமதமாக அறிவிக்கப்பட்டதால் அந்த இடைப்பட்ட காலத்தில் பாஜக கூட்டணி அரசாங்கம் பலவேறு திட்டங்களை அறிவித்து அரசு கஜானாவை காலி செய்து விட்டது" என்று தெரிவித்தார்.

    மகாராஷ்டிரா தேர்தல் தொடர்பாக பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத்சந்திர பவார்) மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல், "மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தலை 5 கட்டங்களாக தேர்தல் ஆணையம் நடத்தியது. ஆனால் தற்போது ஒரே கட்டமாக சட்டசபைக்கு தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அரசு தோல்வியடையும்.

    சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பு முன்னதாகவே வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பல நலத்திட்டங்களை அறிவிக்க மாநில அரசுக்கு போதுமான கால அவகாசத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது" என்று தெரிவித்தார்.

    மகாராஷ்டிரா தேர்தல் தொடர்பாக சிவசேனா (உத்தவ் தாக்கரே) தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், "மக்களவை தேர்தலுடன் ஒப்பிடும்போது, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனாவின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து பல எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் சரியாக பதிலளிக்கவில்லை" என்று தெரிவித்தார்.

    • மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது முக்கிய பங்கு வகிக்கும் எனத் தெரிகிறது.
    • மகாயுதி கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் 20-ந்தேதி 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

    மகாராஷ்டிராவில் மகாயுதி, மஹா விகாஸ் அகாதி என இரண்டு பெயர்களில் மெகா கூட்டணி உள்ளன. மகாயுதி கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய மூன்று கட்சிகள் உள்ளன. மகாயுதி கூட்டணிதான் ஆட்சி அமைத்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்து வருகிறார். அஜித் பவார் மற்றும் பா.ஜ.க.வின் பட்நாவிஸ் ஆகியோர் துணை முதல்வராக உள்ளனர்.

    மகா விகாஸ் அகாதி என்ற எதிர்க்கட்சி கூட்டணியில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திரா பவார்), உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் உள்ளன.

    தற்போது முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமல் தேர்தலை சந்தித்தால், தேர்தலுக்குப்பின் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இரண்டு கூட்டணியும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவித்துதான் தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பட்நாவிஸ், அஜித் பவார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மகாயுதி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? என கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பட்நாவிஸ் "முதல் மந்திரி இங்கே அமர்ந்து இருக்கிறார். உங்களுடைய முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்று எதிர்க்கட்சிகளிடம் கேளுங்கள். முதலில் உங்களுடைய முதல்வர் வேட்பாளரை தெரிவிக்கவும். உங்களுடைய முதல்வர் வேட்பாளரை தெரிவியுங்கள் என சரத் பவாரிடம் வலியுறுத்துகிறேன்" என்றார்.

    ஏக்நாத் ஷிண்டே "உயர்ந்த பதவியை பெறுவதற்கு யாரும் ஆசைப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் அரசாங்கம் செய்த பணிகள் எங்கள் முகம்" என்றார்.

    • மகாராஷ்டிரா மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சிக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
    • கடந்த முறை 7 இடங்களில் போட்டியிட்ட நிலையில், தற்போது அதிக இடங்களில் போட்டியிட விரும்புகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் 20-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. 288 இடங்களுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவ சேனா கட்சிகள் மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.

    கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் நாளை மகாராஷ்டிரா செல்கிறார்.

    அவர் இந்தியா கூட்டணியில் மகாராஷ்டிரா மாநில தேர்தலில் அதிகமான இடங்களில் போட்டியிடும் வகையில் இடங்களை கேட்டு வாங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    கடந்தமுறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி ஏழு இடங்களில் போட்டியிட்டது. இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது.

    "நாளை நான் மகாராஷ்டிரா செல்கிறேன். இந்தியா கூட்டணி வெற்றியை உறுதி செய்வதுதான் எங்களுடைய முயற்சி. மகாராஷ்டிராவில் சரத் பவார், உத்தவ் தாக்கரே கட்சி தலையைிலான இந்தியா கூட்டணியில், சமாஜ்வாடி உள்ளிட்ட மற்ற கட்சிகளும் அடங்கும்.

    எங்கள் கட்சிக்கு இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தற்போது நாங்கள் இந்தியா கூட்டணியுடன் இணைந்து போட்டியிடும் வகையில் அதிகமான இடங்களை கேட்போம். எங்களின் முழு பலத்துடன் இந்தியா கூட்டணிக்கு நாங்கள் தொடர்ந்து துணை நிற்போம்" என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    • மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பத்து தொகுதிகளில் போட்டியிடுகிறது.
    • மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி பத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் 20-ந்தேதி 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

    மகாராஷ்டிராவில் மகாயுதி, மஹா விகாஸ் அகாதி என இரண்டு பெயர்களில் மெகா கூட்டணி உள்ளன.

    மகாயுதி கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய மூன்று கட்சிகள் உள்ளன. மகாயுதி கூட்டணிதான் ஆட்சி அமைத்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்து வருகிறார். அஜித் பவார் மற்றும் பா.ஜ.க.வின் பட்நாவிஸ் ஆகியோர் துணை முதல்வராக உள்ளனர்.

    மகா விகாஸ் அகாதி என்ற எதிர்க்கட்சி கூட்டணியில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திரா பவார்), உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் உள்ளன.

    இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து விசிக போட்டியிடுகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

    இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பத்து தொகுதிகளிலும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி பத்து தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பிற தொகுதிகளில் இந்தியா கூட்டணியை ஆதரிக்கிறோம்" என்று தெரிவித்தார்.

    கங்காபூர், பத்நாபூர், நன்டெட் (தெற்கு), ஹிங்கோலி, கல்மனுரி, வாஸ்மாட், தெக்லூர், அவுரங்காபாத் (மையம்), முள்ளன்ட் ( மும்பை), கன்னட் ஆகிய 10 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.

    பிவாண்டி, மலேகோன், வாசிம், அவுரங்காபாத் (மேற்கு), அவுரங்காபாத் (கிழக்கு), புலம்பிரி, மும்பை மலாட், தாராவி, போக்கர்டன் ஜல்னா, துலே ஆகிய 10 தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் போட்டியிடுகிறது

    • மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
    • 99 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அங்கு ஆளும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே தரப்பு), பா.ஜ.க, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) ஒரு கூட்டணியாக களம் காண்கிறது.

    சிவசேனா (உத்தவ்), காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) ஒரு அணியாகவும் போட்டியிடுகிறது. இரு அணிகளும் மும்முரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில், தேவேந்திர பட்னாவிஸ், சந்திரசேகர் கிருஷ்ணராவ் பவன்குலே உள்ளிட்ட 99 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.

    தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் தென்மேற்கு தொகுதியிலும், காம்தி தொகுதியில் சந்திரசேகர் கிருஷ்ணராவ் பவன்குலேவும், ஷஹாடே தொகுதியில் ராஜேஷ் உடேன்சிங் பட்வி, துலே நகரில் அனுப் அகர்வால் களம் காண்கின்றனர். கட்கோபார் மேற்கு தொகுதியில் ராம்கடம், சிக்லி தொகுதியில் ஸ்வேதா மகாலே பாட்டீல், ஸ்ரீஜெயா அசோக் சவான் போகார் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

    • மராட்டிய மாநில விவசாயிகளின் மிகப்பெரிய எதிரி பா.ஜனதாதான்.
    • அங்கு 20 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    பா.ஜனதா ஆட்சி நடக்கும் மராட்டிய மாநிலத்தில், அடுத்த மாதம் 20-ந்தேதி 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மராட்டிய மாநில விவசாயிகளின் மிகப்பெரிய எதிரி பா.ஜனதாதான். அங்கு 20 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயத்துக்கான நிதிஒதுக்கீடு குறைக்கப்பட்டு விட்டது. மராட்டிய மாநிலத்தை வறட்சியற்ற மாநிலம் ஆக்குவோம் என்ற வாக்குறுதி வெற்று முழக்கமாகி விட்டது.

    காப்பீட்டு நிறுவனங்களுக்கு பா.ஜனதா அரசு ரூ.8 ஆயிரம் கோடி வழங்கி வருகிறது. ஆனால், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மறுத்து விட்டது.

    வெங்காயம், சோயாபீன் ஆகியவற்றுக்கான ஏற்றுமதி வரி உயர்த்தப்பட்டதால் அவற்றை விளைவிக்கும் விவசாயிகள் ஏற்றுமதி வரி சுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பருத்தி, கரும்பு உற்பத்தி வீழ்ச்சி அடைந்ததால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

    மராட்டிய மாநிலத்தில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்கள் சிக்கலில் உள்ளன. அதை அரசும் ஒப்புக்கொண்டுள்ளது.

    இந்தநிலையில் பா.ஜனதாவின் இரட்டை என்ஜின் அரசை அகற்றினால்தான் விவசாயிகளுக்கு நன்மை விளையும் என்று மராட்டிய மாநிலம் முடிவு செய்து விட்டது. மகாபரிவர்த்தன் என்ற காங்கிரஸ் கூட்டணியை விரும்புகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள பெரும்பாலானோருக்கு மீண்டும் வாய்ப்பு.
    • உத்தவ் தாக்கரேயிடம் இருந்து கட்சியை கைப்பற்றியபோது ஆதரவு அளித்த அனைத்து எம்.எல்.ஏ.-க்களுக்கும் வாய்ப்பு.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 20-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

    பா.ஜ.க. மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்து வருகிறது. இந்த மூன்று கட்சிகளும் மகாயுதி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.

    தொகுதி பங்கீடு தொடர்பாக மூன்று கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் 45 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா வெளியிட்டுள்ளது. அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள பெரும்பாலானோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது.

    மேலும் உத்தவ் தாக்கரேயிடம் இருந்து கட்சியை கைப்பற்றியபோது இருந்த, தனக்கு ஆதரவு அளித்த சிவசேனா எம்.எல்.ஏ.-க்கள் அனைவருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளார் ஏக்நாத் ஷிண்டே.

    முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தானே நகரில் கோப்ரி-பஞ்ச்பகாடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    ஏற்கனவே பா.ஜ.க. 99 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது சிவசேனா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மட்டும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.

    ×