என் மலர்
நீங்கள் தேடியது "slug 94595"
- உள் காயம் ஏற்பட்டதாக கூறி நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
- விசாரணையின் முடிவில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உண்மை நிலவரம் தெரியவரும் என்று கடலோர காவல் குழும போலீசார் தெரிவித்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் இருந்து கடந்த 15ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மீனவ கிராமத்தை சேர்ந்த வீரவேல் (வயது 30 ). நாகை, காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த செல்வத்துரை, செல்வகுமார், சதீஷ் உள்பட 10 மீனவர்கள் படகில் சென்று மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலை நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு கப்பலில் ரோந்து வந்த இந்திய கடற்படையினர் சந்தேகம் அடைந்து படகை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்தனர். இந்த நேரத்தில் மழை பெய்ததாலும் இருள் சூழ்ந்து காணப்பட்டதாலும் இந்த எச்சரிக்கையை கவனிக்காமல் படகு சென்றது.
இதனால் மேலும் சந்தேகமடைந்த இந்தியா கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மீனவர் வீரவேல் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து படகு அருகில் வந்த இந்திய கடற்படையினர் தாங்கள் சுட்டது தமிழக மீனவர்தான் என்பதை உணர்ந்து உடனடியாக வீரவேலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து வீரவேல் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த நிலையில் மீனவர் மீதான துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில் போலீசார் , கொலை முயற்சி, மிக கடுமையான ஆயுதம் கொண்டு தாக்குதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் இந்திய கடற்படையினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து இந்திய கடற்படை வீரர்களிடம், எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினீர்கள்? முறைப்படி எச்சரிக்கை சமிக்ஞை செய்தீர்களா ? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உண்மை நிலவரம் தெரியவரும் என்று கடலோர காவல் குழும போலீசார் தெரிவித்தனர்.
தற்கிடையே துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த வீரவேலுடன் மீன் பிடித்த சக மீனவர்கள் 9 பேரும் கரைக்கு திரும்பினர். பின்னர் உள் காயம் ஏற்பட்டதாக கூறி நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
சிகிச்சை முடிந்து வெளியே வந்தவர்களில் சிலர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது அதிர்ச்சி அளிக்கிறது. மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கண்காணிப்பது வழக்கமாக இருந்து வந்தது.
ஆனால் தற்பொழுது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியது வேதனை அளிக்கிறது. துப்பாக்கி சூடு நடந்த சம்பவத்திற்கு பின்னர் இந்திய கடற்படையினர் சிலர் எங்களை கட்டி வைத்து இரும்பு கம்பியால் தாக்கினர். எதனை கடலில் தூக்கி போட்டீர்கள் என விசாரித்தனர். நாங்கள் ஒன்றுமே போடவில்லை என எவ்வளவு கூறியும் கேட்கவில்லை.
மேலும் படகு முழுவதும் சோதனை இட்டனர். அதன் பின்னரே படகில் இருந்து அவர்கள் வெளியேறினர். எங்களுக்கு உள் காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக சிகிச்சை பெற்றோம். இனி இது போன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மீனவர் மீது துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதால் இந்த வழக்கு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு சென்றுள்ளது. விசாரணை முடிவில் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- முன்னாள் மந்திரியான கே.டி.ஜலீல் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சிலர் கோர்ட்டில் மனு செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் எம்.எல்.ஏ. கே.டி.ஜலீல். முன்னாள் மந்திரியான கே.டி.ஜலீல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் மாநிலம் பற்றி பேஸ்புக்கில் ஒரு கருத்து பதிவிட்டார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சிலர் கோர்ட்டில் மனு செய்தனர். அதன்பேரில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் டெல்லியிலும் கே.டி.ஜலீல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய கோரி டெல்லி கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு. கே.டி.ஜலீல் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.
- இலவசங்களுக்கான நிதியை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பயன்படுத்தலாம் என தலைமை நீதிபதி கருத்து
- இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது.
புதுடெல்லி:
தேர்தல் காலங்களில் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக கொடுப்பதற்கு எதிராகவும், அதனை கட்டுப்படுத்தவும் வேண்டி அஸ்வினி உபாத்யாய் என்ற வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு கடந்த பிப்ரவரியில் தேர்தல் நடந்தபோது, இந்த வழக்கை அவர் தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், தேர்தலின்போது பொதுமக்களுக்கு பல்வேறு இலவசங்களை அரசியல் கட்சிகள் அறிவிக்கின்றன. இது ஓட்டு போடுவதற்காக மக்களுக்கு தரப்படும் லஞ்சமாகவே பார்க்க வேண்டும். இது நம் ஜனநாயக தேர்தல் நடைமுறையை சீர்குலைப்பதாக உள்ளது.
மேலும், இந்த இலவசங்கள் பொது நிதியில் இருந்தே தரப்படுகின்றன. இதனால், மக்களின் தலையில் அதிக சுமை ஏறுகிறது. இவ்வாறு இலவச அறிவிப்புகளை வெளியிடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய, கட்சி சின்னத்தை முடக்க நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இதற்கு தேவையான சட்டத்தை உருவாக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு,சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹீமா கோஹ்லி அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. முன்னர் நடந்த விசாரணைகளின்போது, இது மிகப்பெரும் பிரச்சினை என அமர்வு பலமுறை கூறியிருந்தது. கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதை தடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என தேர்தல் கமிஷன் கூறியது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என அமர்வு கேட்டிருந்தது.
கடந்த வாரம் இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இலவச அறிவிப்புகள், இலவச பொருட்கள் வினியோகம் ஆகியவை, நாட்டின் எதிர்கால பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
மேலும் தங்களுடைய தேர்வை சுயமாக முடிவு செய்யும் வாக்காளர்களின் உரிமையும் பறிக்கப்படுகிறது என குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறுகையில், பல மாநிலங்கள் கடும் கடனில் உள்ள நிலையிலும், ஆட்சியை பிடிக்க அல்லது தக்கவைக்க இலவசங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதற்காகும் செலவு மக்கள் மீதே சுமத்தப்படுகிறது என்று இங்கு தெரிவிக்கப்பட்டது.
கட்சிகள் இலவசப் பொருட்களை அறிவிப்பது, மிகப் பெரிய பொருளாதார பிரச்சினை என்பதில் சந்தேகமில்லை. இந்தப் பிரச்னை குறித்து, எந்த அரசியல் கட்சியும் பாராளுமன்றத்தில் பேசாது. அனைவருக்கும் இலவசங்கள் தேவை. இந்த விவகாரத்தில் ஒரு சரியான முடிவு எடுக்க வேண்டியது அவசியமாகும். இலவசங்களை எப்படி தவிர்ப்பது, தடுப்பது என்பது குறித்து, மத்திய அரசு, நிதி ஆயோக், நிதி கமிஷன் ஆகியவை ஆலோசனை கூட்டங்களை நடத்த வேண்டும். அவை பரிந்துரைகளை அளிக்க வேண்டும்.
இதில் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று தேர்தல் கமிஷனும், மத்திய அரசும் ஒதுங்கி கொள்ளக்கூடாது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, ஆலோசனைகளை வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில், மத்திய அரசு, நிதி ஆயோக், தேர்தல் கமிஷன், நிதி கமிஷன், ரிசர்வ் வங்கி, எதிர்க்கட்சிகள் என அனைவரும் தங்களுடைய கருத்தை, ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும். அவற்றின் அடிப்படையில், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை உருவாக்க, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பு ஒன்றை உருவாக்க உத்தரவிடப்படும் என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில் இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா இருதரப்பு வாதங்களை கேட்டார். பின்னர் அவர் கூறுகையில், இலவசங்களுக்கான நிதியை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பயன்படுத்தலாம். இலவசங்களும், சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறானவை. தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கையை அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டிய அவசியம் இல்லையா? இலவச திட்ட அறிவிப்புகள் தீவிரமான பிரச்சினை என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இலவச அறிவிப்புகளால் மின்சாரத்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
பட்டினியால் தவித்த மக்களுக்கு உணவளிக்க மத்திய அரசும் சில திட்டங்களை வைத்துள்ளது. இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது.இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயக விரோத செயல் என்பதால் அதனை பரிசீலிக்க மாட்டோம்.
ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்போது அந்த மாநிலத்தின் பொருளாதார நிலை என்ன என்பது பற்றி தெரியாது. மேலும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தவறுகளை செய்யக்கூடாது. இலவச தேர்தல் வாக்குறுதிகளால் மின்சாரத்துறை உள்ளிட்ட அரசு துறைகள் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்றார்.
- ஜீப் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தனர்.
- திடீரென ஏற்பட்ட தீயால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம்:
கும்பகோணம் பழைய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 42). இவர், தஞ்சை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளராக உள்ளார்.
இந்த நிலையில் ஓரு வழக்கில் ஆஜராவதற்காக அலெக்ஸ் தனது ஜீப்பில் நேற்று காலை கும்பகோ–ணம் கோர்ட்டுக்கு ஆதரவா–ளர்களுடன் வந்திருந்தார்.
ஜீப்பை கோர்ட்டு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான கதர் கிராம தொழில் வாரியம் மற்றும் அரசு ஆஸ்பத்திரி அவசர பிரிவு நோயாளிகள் பிரிவு கட்டிடத்துக்கு இடையே நிறுத்தி இருந்தார். மதியம் 1.30 மணியளவில் அவரது ஜீப் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தனர்.
ஆனால் முடியவில்லை. ஜீப்பில் எரிபொருள் அதிகமாக இருந்ததால் தீ மள, மளவென பெருகி ஜீப் கொழுந்து விட்டு எரிந்தது. ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்தனர்.
தகவல் அறிந்த கும்ப–கோணம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
அரசு ஆஸ்பத்திரி, அர–சுக்கு சொந்தமான அலுவலகங்கள், கோர்ட்டு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அலுவலகங்கள் உள்ள பகுதியில் திடீரென ஏற்பட்ட தீயால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த கும்பகோணம் துணை போலீஸ் சூப்பி–ரண்டு அசோகன் மற்றும் போலீ–சார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜீப்பில் எப்படி தீப்பிடித்தது? மர்ம நபர்கள் ஜீப்புக்கு தீ வைத்து சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.
ஜீப் தீப்பற்றி எரிந்த பகுதியை தடவியல் நிபு–ணர்கள் உடனடியாக வந்து ஆய்வு செய்தனர்.
இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் விசா–ரணை நடத்தி வருகி–றார்கள். அலெக்சின் மனைவி ரூபின்சா, கும்ப–கோணம் மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பி–டத்தக்கது.
பீகாரின் அராரியா மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவரை கடந்த ஜூலை 22-ந்தேதி மர்ம நபர் ஒருவர் கற்பழித்தார். இது தொடர்பாக மறுநாளே வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீதான வழக்கு அராரியாவில் உள்ள போக்சோ கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மாதம் 4-ந்தேதி சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு, இரு தரப்பிலும் வாதம் மற்றும் தண்டனை என அனைத்தும் ஒரே நாளில் நடந்தது.
இந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.
இதன் மூலம் நாட்டிலேயே மிகவும் வேகமாக (ஒரே நாளில்) தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்காக இந்த வழக்கு மாறியிருக்கிறது. ஒரே நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டாலும், தீர்ப்பின் விவரம் கடந்த 26-ந்தேதி தான் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மத்திய பிரதேசத்தில் கற்பழிப்பு வழக்கு ஒன்றில் கடந்த 2018-ம் ஆண்டு 3 நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டதே சாதனையாக இருந்தது.
தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள சருத்து பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் பெரியதுரை. (வயது 28). இவருக்கும் உத்தம பாளையம் சிங்காரத் தோப்பு தெருவைச் சேர்ந்த சிறுமிக்கும் கடந்த ஆண்டு கன்னியப்பபிள்ளைபட்டி அருகே உள்ள கோபால்சாமி கோவிலில் திருமணம் நடந்தது. இதில் சிறுமி கர்ப்பமடைந்தார். 6 மாத குறை பிரசவத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது. இதனால் குழந்தையும் சிறுமியும் உடல் நிலை பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து சைல்டு லைன் அமைப்பினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பெரியதுரை மற்றும் உறவினர்கள் கண்ணன், கீதா, வித்யா, திருக்குமரன், மரகதம், லதா ஆகியோர் மீது ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பெரிய துரையை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராஜபாளையம் அருகே உள்ள சங்கரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் முத்து கலசலிங்கம் (வயது45). இவர் அதே பகுதியில் பேண்டேஜ் ரக துணியை உற்பத்தி செய்யும் மில் நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு இவரிடம் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த புத்தேஷ்ஷர்சா என்ற வியாபாரி பல தவணைகளில் ரூ.7 லட்சத்து 8 ஆயிரத்து 350 மதிப்புள்ள பேண்டேஜ் துணிகளை வாங்கினார்.
ஆனால் அதற்கான பணத்தை திருப்பித்தரவில்லை. பலமுறை கேட்டும் முத்துகலசலிங்கத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பார்த்திபன் விசாரணை நடத்தி ரூ.7 லட்சம் மோசடி செய்த வடமாநில வியாபாரி மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
புதுடெல்லி:
சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் முலாயம் சிங், அவரது மகன் அகிலேஷ் யாதவ். உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரிகளான அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சதுர்வேதி என்பவர் 2005-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முலாயம்சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து உள்ளனர்.
இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஊழல்தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இந்த குற்றச்சாட்டு உண்மையா என்பது குறித்து விசாரிக்கும்படி 2007-ல் சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முலாயம் சிங் தரப்பில் 2012-ல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. மேலும் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.
இதற்கு முலாயம் சிங் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தங்கள் குடும்பத்தின் மீது வீண்பழி சுமத்தப்பட்டு உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சி.பி.ஐ. பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முலாயம்சிங், அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் எந்தவித ஆதாரமும் இல்லை. விசாரணையின் போது எந்தவித முதன்மையான ஆதாரமும் கிடைக்க வில்லை. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக முலாயம் சிங், அகிலேஷ் யாதவிடம் 2013 ஆண்டுக்கு பிறகு எந்தவித விசாரணையும் நடைபெறவில்லை.
இவ்வாறு சி.பி.ஐ தான் தாக்கல் செய்த புதிய பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டன. கடைசி கட்ட தேர்தல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 724 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 716 பேரில் 110 (15 சதவீதம்) பெண் வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. மற்ற 8 வேட்பாளர்களின் தகவல்கள் கிடைக்கவில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட 665 பெண் வேட்பாளர்களில் 87 பேர் (13 சதவீதம்) மீது மட்டுமே குற்ற வழக்குகள் இருந்தன.
இதில் 78 பேர் (11 சதவீதம்) மீது தீவிர குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த தேர்தலில் 51 பேர் (8 சதவீதம்) மீது குற்ற வழக்குகள் இருந்தன.
காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 54 பேரில் 14 பேர் (26 சதவீதம்), பா.ஜ.க. வேட்பாளர்கள் 53 பேரில் 18 பேர் (34 சதவீதம்), பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 24 பேரில் 2 பேர் (8 சதவீதம்), திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் 23 பேரில் 6 பேர் (26 சதவீதம்) மீது குற்ற வழக்குகள் உள்ளன.
இந்த தேர்தலில் 255 பெண் வேட்பாளர்கள் (36 சதவீதம்) கோடீஸ்வரர்கள் ஆவர். கடந்த தேர்தலில் 219 கோடீஸ்வர பெண் வேட்பாளர்கள் (33 சதவீதம்) போட்டியிட்டனர்.
இவர்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 44 பேர் (82 சதவீதம்), பா.ஜ.க. வேட்பாளர்கள் 44 பேர் (83 சதவீதம்), திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் 15 பேர் (65 சதவீதம்), பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 9 பேர் (38 சதவீதம்) கோடீஸ்வர பெண்கள். இந்த தேர்தலில் பெண் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.5.63 கோடி ஆகும். கடந்த தேர்தலில் இது 10.62 கோடியாக இருந்தது.
இந்த தகவலை ஜனநாயக சீர்திருத்தம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எம். ஆர். காந்தி.
எம். ஆர். காந்தி பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவராகவும் உள்ளார். இவரது வீடு நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் உள்ளது.
எம். ஆர். காந்தி தினமும் வீட்டில் இருந்து ஆசாரிபள்ளம் சாலையில் நடை பயிற்சிக்கு செல்வது வழக்கம். கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந் தேதியும் அவர் வீட்டில் இருந்து தனியாக நடை பயிற்சிக்கு சென்றார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து தாக்கினர். அரிவாளாலும் வெட்டினர்.
எம்.ஆர். காந்தி தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம், இடலாக்குடியை சேர்ந்த செய்யது அலி நவாஸ், பிரபு என்ற அப்துல் அஜிஸ், மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது காலின் மற்றும் ஷாஜி ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நாகர்கோவில் முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கடந்த 2-ந் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு கூறப்படும் என அறிவிக்கப்பட்டது. அன்று கோர்ட்டில் இந்த வழக்கின் 5 குற்றவாளிகளில் 4 பேர் மட்டுமே ஆஜர் ஆனார்கள். இதையடுத்து 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையடுத்து இன்று இந்த வழக்கின் குற்றவாளிகள் 5 பேரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள்.
இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இதற்கிடையே நாகர்கோவில் முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாண்டிய ராஜ், இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற 16-ந் தேதி வழங்கப்படும் என அறிவித்தார். எனவே இந்த வழக்கின் தீர்ப்பு வருகிற 16-ந் தேதி வெளியாகும் என தெரிகிறது.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டியில் பட்டாளத் தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். அப்போது அதே பகுதி பகவதிநகரை சேர்ந்த சின்னசாமி, பாரதி, பாலசந்திரன் உள்ளிட்ட சிலர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தனர். இதை ஊர்வலத்தில் வந்த அழகர் (38) என்பவர் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த கும்பல் அழகரை தாக்கி சரமாரியாக தாக்கினர். ஊர்வலத்தில் வந்த காளிதாஸ் மனைவி நாகலட்சுமி என்வரையும் கும்பல் தாக்கியது. இதில் அவர்கள் காயம் அடைந்தனர். இதுபற்றி தேவதானப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் சின்னசாமி, பாரதி உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் தங்கபாண்டி, பாண்டிகார்த்திக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவரது கணவர் சோனைமுத்து. இவர்களுக்கு சொந்தமான கார் 2016-ல் திருட்டு போனது.
இதுகுறித்து ஜெயலட்சுமி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் புகார் கொடுத்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்து வந்தனர். மேலும் போலீசார் வெளி ஆட்களான ஆறுமுகம் மற்றும் சிலரை வைத்தும் மிரட்டல் விடுத்தனர்.
மிரட்டல் விடுத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் அவரது தூண்டுதலின் பேரில் செயல்பட்ட ஆறுமுகம் உள்பட சிலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலட்சுமி மதுரை மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்தது உண்மையாக இருந்தால் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர், ஜெய்ஹிந்த்புரம் போலீஸ்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி மதுரை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையாளர் பாஸ்கரன் விசாரணை நடத்தி, சம்பவத்தன்று ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ரமணி, சப்-இன்ஸ்பெக்டர் புலிக்குட்டி அய்யனார் மற்றும் ஆறுமுகம் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்.