search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95115"

    • வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது
    • பீரோ உடைக்கப்பட்டு, 23 பவுன் நகை 1,50,000 பணம் ஆகியவை திருட்டு போனது தெரிய வந்தது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நரியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70 ).

    இவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

    இவருடைய மனைவி ஆசிரியையாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

    இந்நிலையில் சம்பவதன்று 2 பேரும் வீட்டை பூட்டி விட்டு பக்கத்து ஊரில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக சென்றனர்.

    பின்னர் நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்தனர்.

    அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 23 பவுன் நகை மற்றும் 1,50,000 பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து ராமசாமி பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் அந்தந்த பகுதிகளில் சி.சி.டி.வி.பதிவுகளை ஆய்வு செய்தனர்.
    • தலைமறைவான ராம்கியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஒதியஞ்சாலை போலீஸ் நிலைய பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் நடந்து வந்தது.

    இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் அந்தந்த பகுதிகளில் சி.சி.டி.வி.பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் கிடைத்த தகவலின் பேரில் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த ராம்கி (வயது21) என்ற வாலிபரை ஒதியஞ்சாலை போலீசார் பிடித்து நேற்று விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    போலீஸ் நிலையத்தில் அமர்ந்திருந்த ராம்கி திடீரென போலீஸ் நிலையத்தில் இருந்து நைசாக வெளியேறி சாலையில் ஓடினார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்றனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் தப்பிச்சென்று விட்டார்.

    தலைமறைவான ராம்கியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    போலீஸ் நிலையத்திலிருந்து வாலிபர் தப்பி ஓடியதும் அவரை போலீசார் விரட்டிச் சென்றும் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் போலீசார் திரும்பியதை கண்ட பொது மக்கள் புதுவை போலீசாரின் நிலையை கிண்டலாக பேசினர்.

    • வீட்டில் திருடியதாக 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • வீட்டை காலி செய்யுமாறு முத்துராஜன், மனைவியுடன் கூறியுள்ளார்.

    சிவகங்கை

    மானாமதுரை அருகே உள்ள சோமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜன். கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி சங்கீதா குழந்தைகளுடன் பிரிந்து சென்றுவிட்டார். பின்னர் அவர் கணவருக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டை காலி செய்யுமாறு முத்துராஜன், மனைவியுடன் கூறியுள்ளார். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

    இதையடுத்து முத்துராஜன் மற்றும் 3 பேர் சம்பவத்தன்று சங்கீதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் வீட்டை சேதப்படுத்தி பொருட்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மானாமதுரை போலீசில் புகார் செய்யப்ப ட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பால சதீஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒவ்வொரு நாளும் உற்பத்தி செய்யப்பட்ட பாலின் அளவும், விற்பனை செய்யப்பட்ட பாலின் அளவும் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட வேண்டும்.
    • யாருக்கெல்லாம் தொடர்பு என்பது கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பண்ணையிலிருந்து, ஒரே பதிவு எண் கொண்ட இரு ஊர்திகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் 2500 லிட்டர் பால் திருடப்பட்டிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்த பால் திருட்டு நடைபெற்று வந்திருக்கிறது.

    இந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 லட்சம் லிட்டர் பால் திருடப்பட்டிருக்கிறது. அதன் மொத்த மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. நீண்ட காலமாக நடைபெற்று வரும் ஆவின் பால் திருட்டை சம்பந்தப்பட்ட நிறுவனம் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    ஒரே பதிவு எண் கொண்ட இரு ஊர்திகளை பயன்படுத்தி ஆவின் பால் திருடப்பட்டதால், ஐயம் எழவில்லை என்றும், அதனால் தான் இந்தத் திருட்டை நீண்டகாலமாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் ஆவின் உயரதிகாரிகள் சார்பில் கூறப்படுவதை ஏற்கமுடியாது. ஒவ்வொரு நாளும் உற்பத்தி செய்யப்பட்ட பாலின் அளவும், விற்பனை செய்யப்பட்ட பாலின் அளவும் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை கணக்குகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். இந்த நடைமுறைகள் எதிலுமே பால் திருட்டு கண்டு பிடிக்கப்படவில்லை என்பதை நம்ப முடியவில்லை.

    வேலூர் சத்துவாச்சாரி பால் பண்ணையில் பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் முறைகேடுகள் நடப்பதாக சில மாதங்களுக்கு முன் குற்றஞ்சாட்டிய மேலாளர் ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஆவின் நிறுவனத்தில் கண்காணிப்பு அதிகாரிகளாக காவல்துறை கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரிகள் முதல் காவல்துறை தலைவர் நிலையிலான அதிகாரிகள் வரை இருந்திருக்கின்றனர். அவர்களை மீறி எந்த முறைகேடும் நடந்திருக்க முடியாது.

    ஆனால், பல ஆண்டுகளாக வேலூர் ஆவினில் பால் திருட்டு நடைபெற்றிருப்பதால் அதற்கு உயர்பதவிகளில் உள்ளவர்களின் ஆதரவு இருந்திருக்கலாம் என்று ஐயங்கள் எழுப்பப்படுவதை ஒதுக்கித்தள்ள முடியவில்லை.

    ஆவின் நிறுவனம் மக்களுடன் ஒருங்கிணைந்த நிறுவனம் ஆகும். ஆவின் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் வலுப்படுத்தப்பட்டு அசைக்க முடியாத பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட வேண்டும். ஆனால், சுயநலமும், பேராசையும் கொண்டவர்களால் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஆவின் நிறுவனம் சுரண்டப்பட்டே வந்திருக்கிறது. இதற்கு முன் ஆவின் நிறுவனத்திற்காக கொள்முதல் செய்யப்பட்ட பாலில் பெருமளவு கலப்படம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது; இப்போது பெருமளவில் பால் திருடப்பட்டிருக்கிறது. இதில் யாருக்கெல்லாம் தொடர்பு என்பது கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக ஆவின் பால் திருட்டு குறித்து உயர்நிலை விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கண்ணம்மாள் வாழைத்தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வருகிறார்.
    • வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது 10 குழாய்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    நெல்லை:

    பாப்பாக்குடி அருகே கபாலிபாறை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ப வரது மனைவி கண்ணம்மாள் (வயது 43). இவர் அதே பகுதியில் வாழைத்தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வருகிறார். வாழை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு ரூ.24 ஆயிரம் மதிப்பிலான 10 குழாய்களை தோட்டத்தில் வைத்து இருந்தார்.

    இந்நிலையில் வழக்கம்போல் நேற்று மாலை அவர் வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது 10 குழாய்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • வீடு புகுந்து 5 பவுன் நகை திருடப்பட்டது.
    • கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடி அருகே உள்ள கள்ளிக்குடி சத்திரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 67), ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டார். இதை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை, 6 வெள்ளி குத்துவிளக்கு, ஒரு வெள்ளி விநாயகர் சிலை ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    • கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து அமாவாசை நெருங்கும் நாளில் கொள்ளை அடிப்பது இவர்களுக்கு வாடிக்கையானது.
    • போலீசார் ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை, பணம் மற்றும் சொகுசு கார், பாத்திரங்களை பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த சந்தை புதுகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அழகுராணி (வயது 65). இவர் தனது மகன் நாகராஜ், மருமகள் காவேரி ஆகியோருடன் வசித்து வருகிறார்.

    அழகு ராணி கரிக்கலாம் பாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கடந்த 17-ந்தேதி சென்றிருந்த நிலையில் அவரது மகன் நாகராஜ் மற்றும் மருமகள் காவேரி வெயிலின் தாக்கம் காரணமாக வீட்டின் வாசலில் படுத்திருந்தனர்.

    மறுநாள் காலை தூங்கி எழுந்த காவேரி வீட்டின் தோட்டத்திற்கு சென்றபோது பின்பக்க கதவு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது தனது மாமியார் அழகு ராணி தங்கி இருந்த அறை கதவு உடைக்கப்பட்டு அதிலிருந்து நகை, பத்திரங்கள், பணம் மற்றும் மளிகை பொருட்களை மர்ம நபர்களால் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. தகவல் அறிந்த காட்டேரிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதேபோல் மறுநாள் செட்டிப்பட்டு என்னும் கிராமத்தில் இன்ஸ்பெக்டர் சண்முகத்தின் வீட்டு பின் கதவை உடைத்து சிலிண்டர் மற்றும் சமையல் பாத்திரங்களை கும்பல் திருடியது.

    புதுவை-விழுப்புரம் எல்லையில் உள்ள கிராமங்களில் இதுபேல் தொடர் அடிக்கடி திருட்டுஅடிக்கடி நடந்தது. அதுவும் அமாவாசை நாளில் இருட்டை பயன்படுத்தி திருட்டு நடைபெற்றது. பூட்டி இருக்கும் வீட்டின் பின் கதவை மட்டும் உடைத்து ஒரே திருட்டு கும்பல் தொடர்ந்து கைவரிசையை காட்டியது.

    கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து அமாவாசை நெருங்கும் நாளில் கொள்ளை அடிப்பது இவர்களுக்கு வாடிக்கையானது.

    இதனால் தனிப்படை அமைத்து போலீசார் தேடிவந்தனர். அதோடு ரோந்து பணியை கிராமங்களில் அதிகரித்தனர்.

    அப்போது மடுகரையில் 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்களை போலீசார் மடக்கி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின்முரணாக பேசினார்கள். மேலும் வாகனத்தின் எண்ணை சோதனை செய்த போது நகரப் பகுதியில் திருடு போன மோட்டார் சைக்கிள் என தெரிய வந்தது.

    இதனையடுத்து அந்த 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக அமாவாசை இருட்டை பயன்படுத்தி அவர்கள் திருடி வந்தது தெரியவந்தது.

    மேலும், அவர்கள் சொகுசு காரில் அரசியல் கட்சியின் கொடியை வைத்து கொண்டு கிராமப் புறத்தில் வீடுகளை பகலில் நோட்டமிடுவர். வீட்டை தேர்வு செய்து இரவில் திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    திருடும் பொருட்கள் அனைத்தையும் காருக்குள்ளேயே வைத்திருப்பதும் நகைகளை அடகு வைத்தும் பணத்தை செலவிட்டும் வந்துள்ளனர். இந்த கும்பலில் தலைவராக செயல்பட்டவர் தமிழ்ராஜ் (36). இவர் விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு கிராமத்தில் துணிக்கடை நடத்தி வருகிறார். துணிக் கடை என்பது பகுதிநேர தொழிலாகவும் திருட்டை முழுநேர தொழிலாளகவும் செய்துள்ளார்.

    இவரது கூட்டாளிகள் விழுப்புரம் விநாயகபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகள் அய்யனார், சீனிவாசன் ஆகியோரை கைது செய்த போலீசார் ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை, பணம் மற்றும் சொகுசு கார், 3 பைக், கியாஸ் அடுப்பு, சிலிண்டர், தோசை கல் மற்றும் சமையல் பாத்திரங்களை பறிமுதல் செய்தனர்.

    இவர்கள் தமிழக கிராமங்களில் 10 இடங்களிலும், புதுவையில் 5 இடங்களிலும் கொள்ளை அடித்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இதுகுறித்து மேத்யூ மேல்குன்னூர் போலீசில் புகார் அளித்தார்.
    • மேத்யூவின் வீட்டின் அருகே வசித்து வரும் ஆரோக்கிய மேரி என்பவர் தான் நகை, பணத்தை திருடியது தெரிய வந்தது.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அட்டடி பகுதியை சேர்ந்தவர் மேத்யூ. இவரது உறவினர் ஒருவர் வீட்டில் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதற்காக மேத்யூ தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு அங்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டில் உள்ள பீரோவை பார்த்தார்.

    அப்போது அதில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் மாயமாகி இருந்தது. இவர்கள் வெளியில் சென்றதை நோட்டமிட்டு மர்மநபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து மேத்யூ மேல்குன்னூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மேத்யூவின் வீட்டின் அருகே வசித்து வரும் ஆரோக்கிய மேரி என்பவர் தான் நகை, பணத்தை திருடியது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, ஆரோக்கிய மேரியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நகை, பணத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் நந்தனத்தை சேர்ந்த பிரபீர் ஷேக் என்பவர் திருடியதாக புகார் கூறப்பட்டுள்ளது.
    • இருவரை மாம்பலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சென்னை:

    சென்னை தி.நகர் சவுத் உஸ்மான் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் 2 கிலோ 46 கிராம் மதிப்பிலான தங்க நகைகளை கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் நந்தனத்தை சேர்ந்த பிரபீர் ஷேக் என்பவர் திருடியதாக புகார் கூறப்பட்டுள்ளது.

    கடந்த மார்ச் மாதம் 50 சவரன் நகைகளை கடையில் வேலை செய்த பிரபீர் ஷேக் மற்றும் அவரது நண்பர் பாலமுருகன் ஆகிய இருவர் திருடியதாக கொடுத்த புகாரில் அப்போதே பிரபீர் ஷேக், பாலமுருகன் ஆகிய இருவரை மாம்பலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த பிரபீர் ஷேக் மீது மீண்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மார்ச் மாதத்தில் நாங்கள் தவறாக புகார் அளித்துவிட்டதாகவும் ஆனால் தற்போது 2 கிலோ 46 கிராம் தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் நகை கடை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • வீடு புகுந்து நகை-பணம் திருடப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி சிலோன் காலனியை சேர்ந்தவர் காளீஸ்வரி(வயது33). இவர் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரத்து 500 மற்றும் 3 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது. யாரோ மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பணம், நகையை திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் காளீஸ்வரி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர் ரெயில் நிலையத்தில் ரெயில் என்ஜின்களை நிறுத்தும் லூப்லைன் பகுதியில் பணியாளர்கள் பராமரிப்பு பணிக்காக வந்தனர். அப்போது அந்த தண்டவாளத்தில் பொருத்தப்பட்டிருந்த 400 ஸ்லிப்பர் கிளிப்புகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் புகார் கொடுத்தனர். அவர்கள் ஸ்லிப்பர் கிளிப்புகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருடப்பட்டிருந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஆனையூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தமிழ் நகரை சேர்ந்தவர் பிச்சை. இவரது மனைவி சோலையம்மாள் (வயது45). இவர்கள் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டனர். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 2 பவுன் தங்க நகை,வெள்ளி கொலுசு, ரூ.50 ஆயிரம் மற்றும் டி.வி. உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சோலையம்மாள் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • பள்ளபாளையத்தில் கோழிகளை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
    • கோழிகளை திருடும் போது செல்போனை விட்டு சென்றதால் மாட்டிக்கொண்டார்

    கரூர்,

    கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள பள்ளபாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன்(வயது 60). இவர் தனது தோட்டத்தில் நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 3 கோழிகளை காணவில்லை என பக்கத்தில் தேடி உள்ளார். அப்போது கோழிக்கூண்டு அருகில் ஒரு செல்போன் இருந்துள்ளது. இதுபற்றி சின்னதாராபுரம் போலீஸ் நிலையத்தில் கலைச்செல்வன் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் சின்னதாராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி சம்பவ இடத்திற்கு சென்று செல்போன் உரிமையாளர் பள்ளபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த பிரசாத்(31) என்பவரிடம் விசாரணை செய்தார். இதில் கோழிகளை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பிரசாத் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் அவரை குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.

    ×