search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95993"

    • மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்ட விஷயத்தில் மத்திய பெண்கள் நல மேம்பாட்டுத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியை காணவில்லை என போஸ்டர் வெளியிட்டுயிள்ளனர்.

    டெல்லியில் மத்திய பெண் கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிருதி இரானியை காண வில்லை என்று காங்கிரஸ் போஸ்டர் வெளியிட்டு உள்ளது.

    பா.ஜனதா எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பிரிக்பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்ட்ம தீவிரம் அடைந்து வருகிறது.

    இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் மீனாக்ஷி லேகியிடம், மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து கேள்வி கேட்க, அவர் தப்பி ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் தற்போது மத்திய பெண்கள், குழந்தைகள் நலன் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை காணவில்லை என போஸ்டர் அடித்து ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்ட விஷயத்தில் மத்திய பெண்கள் நல மேம்பாட்டுத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டிக்கும் விதமாகவே காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியை காணவில்லை என போஸ்டர் வெளியிட்டுயிள்ளனர்.

    இதற்கு பதலடி கொடுக்கும் விதமாக ஸ்மிருதி இரானி, தாம் அமேதி தொகுதியில்தான் இருக்கிறேன் என்ற பதில் மட்டும் தராமல், முன்னாள் எம்பியை அமெரிக்காவில் தொடர்பு கொள்ளுங்கள் எனவும் பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளதை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் ஸ்மிருதி இரானி.

    • அரசியல் வல்லுனர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே இடத்தில் திரளும் நிகழ்ச்சி வருகிற 12-ந்தேதி நடத்தப்பட உள்ளது.
    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தல் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு வாழ்வா? சாவா? என்ற மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தி இருக்கிறது.

    மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே பாரதிய ஜனதாவை தேசிய அளவில் வீழ்த்த முடியும் என்று மம்தா பானர்ஜி, பரூக் அப்துல்லா, நிதிஷ்குமார், லாலு பிரசாத், சரத்பவார் போன்ற தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    ஆனால் மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஒன்றிணைந்து செயல்படுவதில் பல மாநிலங்களில் பல்வேறு பிரச்சனைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கு தீர்வு கண்டு காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார்.

    இதுவரை அவர் மம்தா பானர்ஜி, சரத்பவார், சந்திரசேகர், அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால் உள்பட பல்வேறு மாநில கட்சி தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார். காங்கிரஸ் தலைவர் கார்கேவையும் அவர் சந்தித்து பேசினார். இதையடுத்து எதிர்க்கட்சிகளை ஓரணிக்கு கொண்டு வரும் முயற்சிகள் இறுதி வடிவம் பெற்று வருகின்றன.

    இந்த நிலையில் அரசியல் வல்லுனர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே இடத்தில் திரளும் நிகழ்ச்சி வருகிற 12-ந்தேதி நடத்தப்பட உள்ளது. பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் பிரமாண்டமான கூட்டம் நடைபெற உள்ளது.

    எதிர்க்கட்சி தலைவர்களை இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நிதிஷ்குமார் அழைத்து உள்ளார். மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால், சரத்பவார் உள்பட எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 16 கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்பதை உறுதிபடுத்தி உள்ளன. மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் பங்கேற்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    என்றாலும் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் விஷயத்தில் சில சிக்கல்களை நிதிஷ்குமார் சந்தித்து வருகிறார். பாரத் ராஷ்டீரிய சமிதி தலைவர் சந்திரசேகரராவ், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோரை இன்னமும் நிதிஷ்குமாரால் சமரசம் செய்ய இயலவில்லை.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல் இருவரும் வருகிற 12-ந்தேதி பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் 12-ந்தேதி வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்கனவே ஒப்புதல் அளித்து விட்டதால் பாட்னாவில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று கார்கேவும் ராகுலும் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

    அவர்கள் இருவரையும் எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு வருமாறு நிதிஷ்குமார் பல தடவை தொடர்ந்து வலியுறுத்தி அழைத்து விட்டார். என்றாலும் கார்கே, ராகுல் இருவரும் சரியான பதில் சொல்லவில்லை என்று தெரிகிறது.

    கார்கே, ராகுல் இருவரும் 12-ந்தேதி கூட்டத்துக்கு வரமாட்டார்கள் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை ஜூன் 23-ந்தேதி நடத்தலாம் என்று கேட்டுக்கொண்டனர்.

    ஆனால் அதை எதிர்க்கட்சி தலைவர்கள் ஏற்கவில்லை. ஜூன் 12-ந்தேதி கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டதால் கூட்டத்தை ஒத்தி வைக்க இயலாது என்று தெரிவித்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் ஒன்றுசேரும் முதல் ஆலோசனை கூட்டம் இது தான். முதல் கூட்டத்திலேயே காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல் இருவரும் பங்கேற்காதது நிதிஷ்குமார், சரத்பவார் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

    குறிப்பாக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வரும் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ் குமார் விரக்தி நிலைக்கு சென்றுள்ளார். இதையடுத்து அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேசி வருகிறார்கள்.

    கார்கே, ராகுலுக்கு பதில் காங்கிரசில் உள்ள மிக முக்கிய மூத்த தலைவரை 12-ந்தேதி கூட்டத்துக்கு அனுப்புமாறு எதிர்க்கட்சிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் முதல்-மந்திரிகளில் ஒருவரை ஆலோசனை கூட்டத்துக்கு அனுப்புமாறு சரத்பவார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

    எனவே காங்கிரஸ் சார்பில் ராகுலுக்கு பதில் யார் கலந்துகொள்வார்கள் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டமே ராகுலால் முழுமை பெறாமல் போய்விடுமோ என்று பேசப்படுகிறது.

    குறிப்பாக மாநில கட்சிகள் வலுவாக உள்ள இடங்களில் பொது வேட்பாளரை நிறுத்தும் திட்டம் நடைமுறைக்கு வருமா என்பதில் சிக்கல் உருவாகி இருக்கிறது.

    • மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக காங்கிரஸ் அரசு முயற்சிப்பது நியாயமில்லை.
    • கர்நாடக அரசின் மேகதாது அணை தொடர்பான அறிவிப்பு அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் நட்பு உறவுக்கு உகந்ததாக அமையாது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடக துணை முதல்-அமைச்சர் மேகதாதுவில் அணைக்கட்டுவோம் என்று கூறியது கண்டிக்கத்தக்கது.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டினால் காவிரி நீரினால் தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு காவிரி நீர் கிடைக்காமல் விவசாயத் தொழில் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் தொழிலை இழக்க நேரிடும்.

    மேலும் தமிழ்நாட்டு மக்களுக்கு குடிநீராக கிடைக்கும் மேகதாது அணையின் காவிரி நீரும் கிடைக்காமல் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும். இப்பேற்பட்ட சூழலில் மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக காங்கிரஸ் அரசு முயற்சிப்பது நியாயமில்லை.

    கர்நாடக அரசின் மேகதாது அணை தொடர்பான அறிவிப்பு அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் நட்பு உறவுக்கு உகந்ததாக அமையாது.

    குறிப்பாக மேகதாது அணைக்கட்டுவது தொடர்பாக கர்நாடக மாநில அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்து வரும் வேளையில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக கர்நாடக காங்கிரஸ் மேகதாது சம்பந்தமாக வாக்குறுதி அளித்த போதே தமிழக தி.மு.க அரசும், தமிழக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும்.

    அதை விடுத்து கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் போதும், காவிரி நீர் பற்றி கவலைப்படாமல் தமிழக அரசும், காங்கிரசும் அப்போது ஆதரவு தெரிவித்துவிட்டு இப்போது என்ன காரணம் சொன்னாலும் இப்பிரச்சனையில் தமிழக அரசும், காங்கிரசும் இரட்டை வேடம் போடுவதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

    எனவே கர்நாடக அரசு, மேகதாதுவில் அணைக் கட்டும் முயற்சிக்கு தமிழக அரசு கடும் கண்டிப்பையும், எதிர்ப்பையும் தெரிவிப்பதோடு, அணைக்கட்டும் பேச்சுக்கே இடம் கொடுக்காமல், அணைக்கட்ட அனுமதிக்க முடியாத நிலையில் செயல்பட்டு தமிழக விவசாயிகள் நலன் காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நாட்டின் நாயர்களான முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கூட காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துவிட்டது.
    • காங்கிரஸிடம் புதிய உத்தரவாதத்தில் சூத்திரம் உள்ளது. அவர்களின் உத்தரவாதங்கள் நாட்டை திவாலாக்கும் என்றார்.

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்து 9 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், 9 ஆண்டுகள் நிறைவையொட்டி அஜ்மீர் நகரில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி கலந்துக் கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    நாட்டு மக்களுக்கு சேவை, நல்லாட்சி, ஏழைகளின் நலனுக்காக பாஜக அரசு 9 ஆண்டுகாலத்தை அர்ப்பணித்துள்ளது.

    2014க்கு முன், ஊழலுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கினர். முக்கிய நகரங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தன. காங்கிரஸ் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்சியை நடத்தியது.

    காங்கிரஸிடம் புதிய உத்தரவாதத்தில் சூத்திரம் உள்ளது. ஆனால் அவர்கள் தங்கள் உத்தரவாதங்களை நிறைவேற்றுகிறார்களா? இல்லை. அவர்களின் உத்தரவாதங்கள் நாட்டை திவாலாக்கும்.

    ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரம், இலவச மின்சாரம் முதல் மலிவான சமையல் எரிவாயு வரையிலான சமூக நலத் திட்டங்களில் கவனம் செலுத்துகிறது.

    ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, வறுமையை அகற்றுவோம் என்று காங்கிரஸ் உத்தரவாதம் அளித்தது. ஆனால் அது ஏழைகளுக்கு அவர்கள் செய்யும் மிகப்பெரிய துரோகமாக மாறியது. ஏழைகளை தவறாக வழிநடத்துவதும், அவர்களைப் பின்வாங்குவதும் காங்கிரஸின் கொள்கையாக உள்ளது.

    இதனால் ராஜஸ்தான் மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எம்எல்ஏக்கள், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்கின்றனர்.

    கடந்த திங்களன்று பல முயற்சிகளுக்கு பிறகு ஒற்றுமையை வெளிப்படுத்திய போதிலும் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது.

    நாட்டின் ரத்தத்தை உறிஞ்சி, வளர்ச்சியைத் தடுக்கும் ஊழல் அமைப்பை காங்கிரஸ் உருவாக்கியது.

    இப்போது, உலகம் இந்தியாவைப் பற்றி பேசுகிறது. மேலும் இந்தியா தீவிர வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மிக அருகில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    நாட்டின் நாயர்களான முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கூட காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துவிட்டது.

    ஆனால், பாஜக அரசு ஒரே தரம், ஒரே ஓய்வூதியம் திட்டத்தினை நாட்டில் அமல்படுத்தியதுடன், அவர்களுக்கு அரியர்ஸ் தொகையையும் வழங்கியது.

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக இருந்தது. பிரதமருக்கு மேல் உச்சபட்ச அதிகாரம் ஒருவரிடம் இருந்தது. இளைஞர்களின் கண்முன்னே இருள் சூழ்ந்திருந்தது. இன்று இந்தியா உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவக்குமார் பதவி ஏற்றவுடன் வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம்.
    • அண்டை மாநிலங்களுடன் நட்புறவை பேணுவதாக தெரியவில்லை.

    சென்னை:

    கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அங்கு சித்தராமையா முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் உள்ளார்.

    கர்நாடக அமைச்சரவை பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சென்றிருந்தார். புதிதாக பதவி ஏற்ற கர்நாடக காங்கிரஸ் அரசு காவிரி பிரச்சனையில் சுமூகமாக நடந்து கொள்ளும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

    ஆனால் பதவி ஏற்ற ஓரிரு நாளில் துணை முதல்-மந்திரி சிவக்குமார் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் என்று வெளிப்படையாக பேசினார். அவரது பேச்சு தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சென்னையில் நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் மற்றும் துணை முதல்-மந்திரியான சிவக்குமார் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் என்று தெரிவித்து இருக்கிறார்.

    இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிப்போம். சிவக்குமார் பதவி ஏற்றவுடன் வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம். ஆனால் அண்டை மாநிலங்களுடன் நட்புறவை பேணுவதாக தெரியவில்லை. நாங்கள் மேகதாது அணை கட்ட சம்மதிக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று முற்றிலும் நம்பிக்கை கொண்ட ஒரு குழுவினரால் இந்தியா இயங்குகிறது.
    • கடவுளை விட தனக்கு எல்லாம் தெரியும் என்று மோடி நினைக்கிறார்.

    அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் ராகுல் காந்தி பேசியதாவது:-

    தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று முற்றிலும் நம்பிக்கை கொண்ட ஒரு குழுவினரால் இந்தியா இயங்குகிறது. கடவுளை விட தனக்கு எல்லாம் தெரியும் என்று மோடி நினைக்கிறார். கடவுளுக்கு அருகே அவரை உட்கார வைத்தால் இந்த பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்று கடவுளுக்கே மோடி விளக்கம் கொடுப்பார் என்று நினைக்கிறேன்.

    கடவுள் தான் எதை உருவாக்கினேன் என்பதில் குழப்பம் அடைந்து விடுவார்.

    இவ்வாறு ராகுல்காந்தி கிண்டலாக பேசினார்.

    • மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியின் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வான பேரோன் பிஸ்வாஸ் கட்சி தாவினார்.
    • யாருடன் மோத வேண்டும் என்பதை காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும் என சுகெந்து சேகர் ராய் தெரிவித்துள்ளார்.

    மத்தியில் வலுவாக உள்ள பாஜகவை வரும் பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணையவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இதனை முன்மொழிந்துள்ளனர். எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடந்த கர்நாடக தேர்தல் முடிவுகள் இதற்கு அச்சாரமாக அமைந்துள்ளதாகவும், இந்த வெற்றி தொடரும் என்றும் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியின் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வான பேரோன் பிஸ்வாஸ், திடீரென ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். இது காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, பெய்ரோன் பிஸ்வாசை திரிணாமுல் காங்கிரஸ் தங்கள் பக்கம் இழுத்திருருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினார். மேலும், இது அவரை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களின் ஆணைக்கு முற்றிலும் துரோகம் செய்வதாகும் என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    இந்த குற்றச்சாட்டுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் மீதான நம்பிக்கையை காங்கிரஸ் மீறுவதாக கூறியது.

    திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி கூறுகையில், "தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். மாநில கட்சிகளுக்கென சில கடமைகள் உள்ளன என்பதை அனைத்துக் கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் மேகாலயா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் மட்டுமே போட்டியிட்டோம். ஆனால் காங்கிரஸ் கட்சியோ ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் போட்டியிட்டது. அப்போது, நாங்கள் அவர்களுக்கு இடையூறு செய்யவில்லை. அவர்களுக்கு ஆதரவளித்தோம்" என்றார்.

    தேர்தலில் யாருடன் மோத வேண்டும் என்பதை காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும் என திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவர் சுகெந்து சேகர் ராய் கருத்து தெரிவித்துள்ளார். இதேபோல் திரிணாமுல் காங்கிரசின் மேலும் சில தலைவர்களும் காங்கிரசுக்கு எதிராக தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.

    மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வரும் நேரத்தில், முக்கியமான இரண்டு கட்சிகளுக்கு இடையேயான வார்த்தை மோதல் சலசலப்பை உருவாக்கி உள்ளது.

    • லாரி டிரைவர்களுக்கு மத்தியில் ராகுல் காந்தி அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருந்தது.
    • லாரியில் பயணம் செய்தல், டிரைவர்களுடன் உரையாடுவது தொடர்பான வீடியோவை ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் திங்கட்கிழமை லாரியில் பயணம் மேற்கொண்டார். டிரைவர்களின் மனதில் உள்ள குறைகளை நேரில் தெரிந்துக் கொள்வதற்காக டெல்லியில் இருந்து சண்டிகர் வரை 6 மணி நேரம் பயணம் செய்தார். லாரி டிரைவர்களுக்கு மத்தியில் அவர் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருந்தது.

    இந்த நிலையில் லாரியில் பயணம் செய்தல், டிரைவர்களுடன் உரையாடுவது தொடர்பான வீடியோவை ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.





    • சென்னை மாநகராட்சியில் தி.மு.க.வை சேர்ந்த பிரியா மேயராக இருக்கிறார்.
    • கவுன்சிலர்கள் அமிர்த வர்ஷினி, சுகன்யா உள்பட சிலர் தங்கள் வார்டுகளில் பணிகள் நடைபெற தி.மு.க.வினர் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க. எங்கள் கூட்டணி கட்சிதான். ஆனால் எங்கள் வார்டுகளிலும் அவர்கள் தலையிட்டு வருகிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    சென்னை மாநகராட்சியில் தி.மு.க.வை சேர்ந்த பிரியா மேயராக இருக்கிறார். மொத்தம் உள்ள 200 கவுன்சிலர்களில் 13 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள்.

    இவர்களில் 10 கவுன்சிலர்கள் மாநகராட்சி காங்கிரஸ் கட்சி தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் கமிஷனர் டாக்டர் ராதா கிருஷ்ணனை சந்தித்து தங்கள் வார்டு பிரச்சினைகள் பற்றி முறையிட்டார்கள்.

    கவுன்சிலர்கள் அமிர்த வர்ஷினி, சுகன்யா உள்பட சிலர் தங்கள் வார்டுகளில் பணிகள் நடைபெற தி.மு.க.வினர் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை அழைத்து சென்று கமிஷனரிடம் முறையிட்டார்கள்.

    காங்கிரஸ் வார்டுகளில் தி.மு.க.வினருக்கு தெரியாமல் பணிகள் நடைபெறக்கூடாது என்றும், அவர்கள் சொல்லும் பணிகளைத்தான் செய்ய வேண்டும் என்று நிர்பந்திப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் பணிகளை தேர்வு செய்வது, நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சில வார்டுகளில் வாக்குவாதமே ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    நாங்கள் தான் உங்களை ஜெயிக்க வைத்தோம் என்று தி.மு.க.வினர் சொல்ல, அது கூட்டணி கட்சிகளின் கடமை என்று காங்கிரசார் சொல்ல வாக்குவாதம் முற்றியிருக்கிறது.

    பணிகள் தொடர்பாக வார்டு என்ஜினீயர்களை காங்கிரஸ் கவுன்சிலர்கள் சந்தித்தால் செய்து கொடுப்பதில்லையாம். தி.மு.க. நிர்வாகி வேறு பணியை சொல்லியிருக்கிறார் என்று சொல்கிறார்களாம். இதனால் காங்கிரஸ் கவுன்சிலர்களால் தங்கள் வார்டுகளில் பணிகளை செய்ய முடியாமல் தவிக்கிறார்கள்.

    இந்த விவகாரத்தை உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கும் எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதலால் ஒன்றிணைந்து பணியாற்றுவார்களா? என்று மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

    • கர்நாடகாவில் தொடங்கிய காங்கிரசின் வெற்றி பயணம், மத்தியபிரதேசத்திலும் தொடரும்.
    • கர்நாடகாவில் அறிவித்தது போன்ற சலுகைகள், மத்தியபிரதேசத்திலும் அறிவிக்கப்படும்.

    புதுடெல்லி :

    பா.ஜனதா ஆட்சி நடக்கும் மத்திய பிரதேசத்தில் இன்னும் 4 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

    கர்நாடகாவை தொடர்ந்து, மத்தியபிரதேசத்திலும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் விரும்புகிறது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று கூட்டம் நடந்தது.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் அகர்வால், முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில், நிர்வாகிகள் அனைவரும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். ஒற்றுமையாக போட்டியிட்டு, வெற்றியை தேடித்தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    கூட்டம் முடிவடைந்த பிறகு, ராகுல்காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கர்நாடகாவில் 136 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கணித்தோம். அது அப்படியே நடந்தது. அதுபோரல், மத்தியபிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில், 150 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கணித்துள்ளோம்.

    கர்நாடகாவில் தொடங்கிய காங்கிரசின் வெற்றி பயணம், மத்தியபிரதேசத்திலும் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ''மத்தியபிரதேச சட்டசபை தேர்தலுக்கு காங்கிரசின் முதல்-மந்திரி வேட்பாளராக கமல்நாத் இருப்பாரா?'' என்ற கேள்விக்கு ராகுல்காந்தி பதிலளிக்கவில்லை.

    முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத் கூறியதாவது:-

    தேர்தலுக்கான வியூகம் குறித்தும், என்னென்ன பிரச்சினைகளை பற்றி பேசுவது என்றும் விவாதித்தோம். ஒற்றுமையாக செயல்படுவது என்று முடிவு செய்துள்ளோம்.

    கர்நாடகாவில் அறிவித்தது போன்ற சலுகைகள், மத்தியபிரதேசத்திலும் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தென்னிந்திய மாநிலங்களில் பா.ஜ.க. வினவருக்கு இறுக்கமான சூழல் நிலவுகிறது.
    • காங்கிரஸ் கட்சியா பாஜகவா என்றில்லாமல் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை அடிப்படையில் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைய வேண்டும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமையில் நடந்தது. விழாவுக்கு பொதுச்செயலாளர்கள் சிந்தனை செல்வன், துரை ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.

    ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வரும் தலைவர்களை ஊக்குவிக்கும் விதமாக சமூகநீதி, சமத்துவம், பன்மைத்துவம், மத சார்பின்மை போன்றவற்றிற்காக பாடுபடும் சான்றோரை கவுரவிக்கும் வகையில் அம்பேத்கர் சுடர் விருது சி.பி.எம்.எம்.எல். பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யாவுக்கும், பெரியார் ஒளி விருது, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் ராஜாவுக்கும், காமராஜர் கதிர் விருது தமிழக சபாநாயகர் அப்பாவுக்கும் திருமாவளவன் வழங்கி பாராட்டினார்.

    காயிதே மில்லத் பிறை விருது பெங்களூரு சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மோகன் கோபாலுக்கும், செம்மொழி ஞாயிறு விருது தமிழறிஞர் தாயம்மாள் அறவாணனுக்கும் திருமாவளவன் வழங்கி கவுரவித்தார். விருதுகளுடன் ஒவ்வொருவருக்கும் ரூ.50 ஆயிரம் பொற்கிழியும் அவர் வழங்கினார்.

    கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:-புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோலை வைப்பதற்கான தேவை என்ன இருக்கிறது? அந்த திறப்பு விழாவிற்கு தமிழ்நாட்டில் இருந்து ஆதீனங்களை வரவழைத்து தேவாரம் பாடலைப் பாட வைப்பதற்கான அவசியம் என்ன?

    தென்னிந்திய மாநிலங்களில் பா.ஜ.க. வினவருக்கு இறுக்கமான சூழல் நிலவுகிறது. கர்நாடகாவில் கூட மெல்ல மெல்ல முன்னேறி உள்ளனர், ஆனால் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் ஒன்று, இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே அவர்கள் திக்கு முக்காடுகின்றனர். எனவே திட்டமிட்டு அவர்கள் தென்னிந்தியாவில் ஊடுருவ முயற்சிக்கிறார்கள்.பா.ஜ.க.வினர் தமிழ்நாட்டை குறிவைத்து விட்டனர்.

    இந்திய தேசத்தை காப்பாற்ற நாம் ஒன்றிணைய வேண்டும். காங்கிரஸ் கட்சியா பாஜகவா என்றில்லாமல் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை அடிப்படையில் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைய வேண்டும்.

    பா.ஜ.க. சங்பரிவார் அமைப்புகள் அமைக்க நினைப்பது இந்த கஷ்டம் என்னும் தேசியமே. இந்து ராஷ்ட்ரம் என்பது பிராமண தேசம் என்பது தான் உண்மையான பொருள். இந்த அடிப்படை புரியாமல் மோடியும் அண்ணாமலையும் பிராமணர்களுக்கு எடுபிடி வேலை செய்து வருகின்றனர். இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடும் என்று அறிவித்திருக்கிறார்கள். மக்கள் தொகை அடிப் படையில் நாடாளுமன்ற உறுப்பினரின் எண்ணிக்கை கூடினால் அதனை வரவேற்கலாம்.

    ஆனால் பாஜகவினர் திட்டமிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வட மாநிலங்களில் மட்டும் உயர்த்தி அதன்பின் தேர்தல் வந்தாலும் மத அரசியலைத் தூண்டி தனக்கென தனி மெஜாரிட்டியை பெற்று தொடர்ந்து ஆட்சியில் இருக்கலாம் என்ற தொலை நோக்கு பார்வையுடன் திட்டமிட்டு இந்த அறிவிப்பை செய்து இருக்கிறார்கள். பா.ஜ.க.வினரை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும், கட்சிகள் இணையாவிட்டாலும் மக்கள் விரட்டி அடிப்பார்கள். 2024-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழும். ஆட்சி மாற்றம் நிகழும் போது திரவுபதி முர்மு நிச்சயமாக மரியாதை செய்யப்படுவார்.

    தமிழ்நாட்டில் 2 எம்.பி.க்கள் 4 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட சின்ன கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்க லாம், ஆனால் இந்திய அளவில் சனாதனத்தை எதிர்க்கும் வலிமையான கட்சி விடுதலை சிறுத்தைகள்.

    பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றுதான் நம் முன்னால் இருக்கின்ற ஒற்றை சவால் என்கின்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

    இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

    விழாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுசெயலாளர் டி.ராஜா பேசியதாவது:-

    தலைவர்களின் பெயர்களில் விருதுகள் வழங்குவது, இந்தியாவை இடது பக்கம் திருப்புவது காலத்தின் தேவையாக இருக்கிறது என்பதை இந்த விழா உணர்த்துகிறது.

    இந்திய நாடு எந்த காலத்திலும் ஒரு மதம் சார்ந்த நாடாக போய் விடக்கூடாது என்று அம்பேத்கர் பேசினார், ஆனால் இன்று மோடி ஆட்சி காலத்தில் நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

    மோடி அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். மைய அரசு அதிகாரங்களை குவித்துக் கொள்ளக் கூடாது. இந்திய பொருளாதாரம் சிக்கலில் உள்ளது.

    ஜனநாயகத்தின் தாய் வீடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. நாட்டின் முதல் குடிமகள் திரௌபதி முர்மு எங்கே? இந்த நாடு மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கிறது மாற்றத்திற்கான போர் குரலை மக்கள் எழுப்ப தொடங்கிவிட்டனர்.

    நாடு பாதுகாக்கப்பட வேண்டுமானால் பாசிச பா.ஜ.க. அரசு தூக்கி எறியப்பட வேண்டும். பா.ஜ.க. அரசு ஜனநாயகத்தையே தவிர்த்து வருகிறது. இதனை முறியடித்து நாடு, அரசியல் சட்டம், ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் எம்.எல்.ஏ.க் கள் எஸ்.எஸ்.பாலாஜி, வூளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு, மாநில் நிர்வாகிகள் வன்னி அரசு, உஞ்சை அரசன், பாவரசு, பால சிங்கம், தயாளன், தகடூர் தமிழ் செல்வன், பாவலன், வீர ராஜேந்திரன், வக்கீல் பார்வேந்தன், பள்ளிக் கரணை ஆர்.பன்னீர்தாஸ், மாவட்ட செயலாளர்கள் வி.கோ.ஆதவன், இரா. செல்வம், செல்லத்துரை, அம்பேத்வளவன், ரவி சங்கர் மற்றும் நீல சந்திர குமார், முருகையன், சிறுத்தை வீ.கிட்டு, செம்பை வீரமுத்து, கே.சந்திரன், ஸ்டீபன், எழிலரசு, மயிலை குமரப்பா, ஆ.வேலாயுதம், ஜெயபாபு சோழன், கடலூர் துணை மேயர் தாமரை செல்வன், பாவேந்தன், நந்தன், ஆதிமொழி, சேலம் காயத்ரி, அருண்பிரேம், லைவ் கார்த்திக், பரம செல்வம், விடுதலை, தாமரை உள்ளிட்ட ஆயிரக்கணக் கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு திருப்தியாக இல்லை என்று தி.மு.க. கூட்டணி கட்சியில் உள்ள திருமாவளவன் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.
    • தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது தான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தவறியது மற்றும் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதை கண்டித்தும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு திருப்தியாக இல்லை என்று தி.மு.க. கூட்டணி கட்சியில் உள்ள திருமாவளவன் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது. ஏற்கனவே தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் மௌனமாக இருப்பதாக குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது திருமாவளவன் வாய் திறந்து பேசி இருப்பது பாராட்டுதலுக்கு உரியது.

    தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது தான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பை தி.மு.க.வினர் கொண்டாடுவதற்கு தார்மீக அடிப்படையில் உரிமை உள்ளதா, இல்லையா என்பது அவர்களின் மனசாட்சிக்கே தெரியும். ஜல்லிக்கட்டு தீர்ப்பு என்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தீர்ப்பு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×