search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிரட்டல்"

    • மீட்கப்பட்ட சிறுமியை மணியின் தந்தை மற்றும் சித்தப்பா மகன் ஆகியோர் மீண்டும் மிரட்டியதாக புகார்
    • ஆபாசமாக எடுத்த படத்தை வெளியிடுவதாக மிரட்டவே சிறுமி கடந்த மாதம் 25-ந் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    சேலம்:

    பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த சிறுமியுடன் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் மணி (வயது 23) என்பவர் பழகி வந்தார். தொடர்ந்து ஆசைவார்த்தைகள் கூறி பழக்கத்தை அதிகப்படுத்தினார்.

    இதனால் மாணவி அவர் நல்லவர் என நம்பினார். திடீரென மணி, மாணவியிடம் காதலிப்பதாக கூறினார். இதற்கு மாணவி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மணி, தனது ஆதரவாளர்களுடன் கடத்திச் சென்று மாணவியை திருமணம் செய்து கொண்டு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து அதனை வீடியோ எடுத்து மிரட்டினார். இதனால் மாணவி மனம் உடைந்தார்.

    அதிர்ச்சியில் உறைந்த மாணவி இது தொடர்பாக கைகாத்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    இந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமியை மணியின் தந்தை மற்றும் சித்தப்பா மகன் ஆகியோர் மீண்டும் மிரட்டியதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து வாலிபரின் தந்தை அவரது சித்தப்பா மகன் இருவரையும் கைகாத்தான் போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து ஆபாசமாக எடுத்த படத்தை வெளியிடுவதாக மிரட்டவே சிறுமி கடந்த மாதம் 25-ந் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை மீட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வீரகனூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.

    சிறுமி தற்கொலை செய்வதற்கு முன்பு சாவுக்கு காரணமானவர்கள் பற்றி உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார். 

    • கொளத்தூர் ஐய்யப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நேரு.
    • போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    கொளத்தூர் ஐய்யப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நேரு. இவர் விவசாய பொருட்களை மொத்தமாக விவசாயிகளிடம் இருந்து பெற்று விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    இவரது செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து பேசி உள்ளார். விவசாய துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த நபர் நீங்கள் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளீர்கள் என்று கூறி மிரட்டி உள்ளார்.

    சைதாப்பேட்டையில் உள்ள வணிகவரி அலுவலகத்துக்கு வருமாறும் அழைத்துள்ளார். இதையடுத்து நேரு தனது நண்பர் சுரேசுடன் சென்றுள்ளார். அப்போது அவர் அருகில் உள்ள கோவிலுக்கு வருமாறு கூறி சந்தித்து பேசி உள்ளார்.

    வணிக வரி துறை என்று எழுதப்பட்டிருந்த ஜீப்பில் இருந்தபடியே பேசிய அந்த நபர் வரி ஏய்ப்பு புகாரில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால் ரூ.25 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

    இதற்கு நேரு மறுப்பு தெரிவிக்கவே ரூ.10 லட்சம் பணம் வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக சைதாப்பேட்டை போலீசில் அளிக்கப்பட்ட புகார் நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் வியாபாரி நேருவுக்கு மீண்டும் போன் செய்து பேசிய அந்த நபர் தி.நகரில் உள்ள வடக்கு உஸ்மான் சாலை பகுதிக்கு வருமாறு கூறியுள்ளார்.

    அப்போது நேரு நீங்கள் அதிகாரி என்பதற்கான அடையாளத்தை காட்டுங்கள் என்று கூறி உள்ளார். சிறிது நேரத்தில் வருகிறேன் என்று கூறி சென்றவர் அருகில் உள்ள வியாசர் தெருவுக்கு வருமாறு அழைத்து நோட்டீஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசி இருக்கிறார். இதையடுத்து நேருவும், அவரது நண்பரும் அதிகாரி என்று மிரட்டிய நபரை பிடித்து பாண்டி பஜார் போலீசில் ஒப்படைத்தனர். அவரது பெயர் வேலு என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருவள்ளுவர் சாலைைய சேர்ந்தவர் செல்லதுரை இவர் கோட்டூர்புரம் பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார்.
    • கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை, தேனாம்பேட்டை, திருவள்ளுவர் சாலைைய சேர்ந்தவர் செல்லதுரை இவர் கோட்டூர்புரம் பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் பாரில் இருந்த போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் கத்தியைக்காட்டி மிரட்டி ரூ.1,10 பணத்தை பறித்துக்கொண்டு தப்பினார்.

    இதுபற்றி கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினர். பணம் பறித்ததாக தரமணியை சேர்ந்த ஏழுமலை என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

    குளித்தலை அருகே மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குளித்தலை:

    குளித்தலை சேர்ந்தவர் பானுமதி (வயது 60). இவரது பேத்தி மற்றும் அவரது உறவினரது மகளும் ஆகிய 2 சிறுமிகளும் நேற்று முன்தினம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்துள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (40) அரிவாளை காட்டி சிறுமிகளை மிரட்டியுள்ளார். இதுகுறித்து கேட்ட பானுமதியை அவர் தகாதவார்த்தைகளால் திட்டி, தாக்கி கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து குளித்தலை போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்துள்ளனர்.
    விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் பூட்டை சாலையை சேர்ந்தவர் செங்குட்டுவன் (வயது 46), விவசாயி. இவருக்கும் சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சின்னகண்ணு மகன் செல்வமணி (46) என்பவருக்கும் இடையே நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று செல்வமணி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து செல்போனில் செங்குட்டுவனை தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார், 11 பேர் மீது வழக்குப்பதிந்து, செல்வமணியை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
    ஒற்றை காட்டு யானை மீண்டும் அதே பகுதிகளில் உலாவியுள்ளது. தெருக்களில் யானை வீதி உலா வருவதால் பொது மக்கள் வீட்டை விட்ட வெளியே வர அச்சம் கொண்டு உள்ளனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான ஆனைக்கட்டி, பொன்னூத்து அம்மன் கோவில், மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவை தேடி மலையடி வாரப்பகுதிகளிலுள்ள கிராமங்களில் புகுந்து விடுகின்றன.

    காட்டு யானைகள் ஊருக்குள்புகுவதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர்நாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள கணபதி நகர், கிரீன் பீல்டு, லட்சுமி நகர், ரேனுகாபுரம் பகுதிகளில் கடந்த 29-ந் தேதி அதிகாலையில் வந்த ஓற்றை காட்டு யானை அந்த பகுதிகளில் சுற்றி சுற்றி வந்துள்ளது. மேலும் அங்கு புதியதாக கட்டப்பட்டு கிரகபிரவேசம் செய்யப்பட்ட வீட்டின் முன்பு வாழை மரங்கள் கட்டப்பட்டு இருந்தன. இதனையும் அந்த யானை பிடிங்கி தின்றுள்ளது. அங்குள்ள குப்பை மேட்டை ஆய்வு செய்துள்ளது. பிறகு ஒரு மணி நேரத்திற்கு பிறகு சென்றுள்ளது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் வந்த ஒற்றை காட்டு யானை மீண்டும் அதே பகுதிகளில் உலாவியுள்ளது. தெருக்களில் யானை வீதி உலா வருவதால் பொது மக்கள் வீட்டை விட்ட வெளியே வர அச்சம் கொண்டு உள்ளனர். தெருக்களில் உலா வந்த யானை அங்குள்ள ஒரு சி.சி.டி.வி காட்சியில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து 2 முறை யானை வந்ததால் அந்த பகுதி மக்களிடையே அச்சம் நிலவுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    செம்பட்டி அருகே ஆட்டோ டிரைவரிடம் பணம் கேட்டு மிரட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

    ஆத்தூர்:

    செம்பட்டி அருகே உள்ள சித்தையன்கோட்டையை அடுத்த சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது25). ஆட்டோ டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (40). கூலித்தொழிலாளி. இவரும் சிலம்பரசனும் உறவினர்கள்.

    சம்பவத்தன்று சிலம்பரசன் அப்பகுதியில் ஆட்டோவில் சவாரி சென்று விட்டு பஜாரில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரமேஷ் சிலம்பரசனிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினார்.

    இதுபற்றி சிலம்பரசன் செம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.

    செம்பட்டி பகுதியில் போலி மது விற்பனை அதிகமாக நடைபெறுகிறது. இதனால் அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    எனவே போலீசார் துரித நடவடிக்கை எடுத்து ரோந்து பணியை தீவிரப்படுத்தி போலி மது விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    கடனை திருப்பி தருவதாக பெண்ணை அழைத்து உல்லாசமாக இருந்து அதை புகைப்படம் எடுத்து மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கொடைக்கானல்:

    கொடைக்கானல் ஆனந்தகிரி மாரியம்மன் கோவில் எதிரே எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருபவர் சசிகுமார் (வயது 30). அதே காம்ப்ளக்சில் உள்ள கவரிங் கடையில் அப்சர்வேட்டரியைச் சேர்ந்த மல்லிகா (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

    மல்லிகாவிடம் சசிகுமார் கடன் வாங்கி இருந்தார். அந்த கடன் தொகையை பல முறை கேட்டு பார்த்தும் அவர் தரவில்லை. சம்பவத்தன்று சசிகுமாரின் கடை அடைக்கப்பட்டு இருந்ததால் மல்லிகா அவருக்கு போன் செய்தார். அப்போது தான் பணம் தயார் செய்து விட்டதாகவும் வத்தலக்குண்டுவில் இருப்பதாகவும சசிகுமார் கூறியுள்ளார்.

    மல்லிகாவிடம் வத்தலக்குண்டுவுக்கு வந்தால் பணத்தை வாங்கிச் செல்லலாம் என கூறியுள்ளார். அதனை நம்பி அவர் வத்தலக்குண்டு வந்துள்ளார். பின்னர் தனியார் லாட்ஜில் அவரை வரவழைத்து அங்கு மிரட்டி கற்பழித்தார்.
    அவருடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை செல்போனில் படம் பிடித்துக் கொண்டார். இனிமேல் தன்னிடம் பணம் கேட்டால் இந்த படத்தை உனது கணவரிடமும், ஊரில் உள்ளவர்களிடமும் காட்டி விடுவதாக மிரட்டினார்.

    இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மல்லிகா கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ஆபாச புகைப்படங்களையும் பறிமுதல் செய்து அழித்தனர்.
    பெரியகுளம் அருகே மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    பெரியகுளம் அருகே உள்ள அன்னஞ்சி மேலத்தெருவை சேர்ந்தவர் குமார் (வயது43). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் பெரியகுளம் தென்கரை சாலையில் நடந்து சென்றார்.

    அப்போது அங்கு வந்த வடுகப்பட்டி வள்ளுவர் தெருவை சேர்ந்த வேல்முருகன் (24) என்பவர் உள்ளிட்ட 2 பேர் குமாரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர்.

    இதனால் குமார் சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு வேல்முருகன் உள்ளிட்ட 2 பேரையும் மடக்கி பிடித்து தென்கரை போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் வழக்குப்பதிந்து வேல்முருகன் உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்தனர்.

    ஈரோட்டில் மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபரின் செல்போனை போலீசார் கைப்பற்றி ஆராய்து வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் சேர்ந்த 21 வயது பெண் கடந்த 2015-ம் ஆண்டில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். கல்லூரி அருகே உள்ள கடைக்கு அடிக்கடி அவர் சென்று வந்தார்.

    அப்போது ஈரோடு வில்லரசம்பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் (37) என்பவர் அந்த மாணவிக்கு அறிமுகமானார்.

    பின்னர் ஒரு நாள் ராதாகிருஷ்ணன் அந்த மாணவியிடம் எனக்கு பிறந்தநாள் அதற்காக உனக்கு நான் விருந்து கொடுக்கிறேன் என்று கூறி மாணவியை சேலம் மாவட்டம் ஏற்காடுக்கு காரில் அழைத்துச் சென்றார். காரில் போகும்போது அந்த மாணவியிடம ஆபாச வீடியோவை காட்டி சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். அதை அவர் விரிவாக எடுத்துக் கொண்டார். பின்னர் அந்த மாணவியிடம் உனது வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டி அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

    இவ்வாறாக 4 வருடமாக அந்த மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார். இதனால் அந்த மாணவி இரண்டு முறை கர்ப்பம் அடைந்தார். ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து அந்த மாணவியை அவர் பலாத்காரம் செய்தார்.

    மேலும் தனது நண்பர்களுடன் நீ அனுசரித்து செல்ல வேண்டும் என்று அந்த மாணவியை ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். இதனால் பயந்து போன மாணவி இதுகுறித்து தனது தந்தையிடம் தெரிவித்தார். பின்னர் மாணவியின் தந்தை இதுகுறித்து ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அவர் இதே போன்று பல பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து இருக்கக்கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதில் வேறு பெண்களின் ஆபாச வீடியோக்கள் உள்ளதா? ஆபாச படங்கள் உள்ளதா? என்று தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். ராதாகிருஷ்ணன் அந்த மாணவியிடம் உன்னைப் போன்று பல பெண்களை நான் சீரழித்து உள்ளேன் என்று கூறியுள்ளார் அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆட்டோவில் குடி போதையில் தகராறு செய்தவரை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் தேவாரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இவரது மனைவி மணிமுத்து (36). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் தேவாரத்தில் இருந்து மாணிக்கபுரத்துக்கு ஆட்டோவில் சென்றனர். இதற்காக தேவாரத்தைச் சேர்ந்த கூத்தபெருமாள் என்பவரது ஆட்டோவில் ஏறினர். மணிகண்டன் குடிபோதையில் இருந்தார்.

    ஊருக்கு செல்வதற்கு ரூ.500 வாடகை பேசினார். ஆனால் சிறிது தூரம் சென்ற பிறகு 500 ரூபாய் தர முடியாது என்று ஆட்டோ டிரைவரிடம் தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர் ஆட்டோவில் இருந்து கீழே இறங்குமாறு கூறினார். தான் ஏறிய இடத்திலேயே தன்னை இறக்கி விடுமாறு மணிகண்டன் தகராறு செய்தார்.

    இதனால் கூத்தபெருமாள் ஆட்டோவில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மணிகண்டனை சரமாரியாக தாக்கினார். படுகாயமடைந்த அவர் போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து போடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர் வழக்கு பதிவு செய்து கூத்தபெருமாளை கைது செய்தனர்.
    விருதுநகரில் சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ வெளியிடுவதாக கூறி தொழில் அதிபர்களை மிரட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம் காட்டக் கூடாது என பலரும் வலியுறுத்தி உள்ளனர்.
    விருதுநகர்:

    இன்றைய நவீன உலகத்தில் தகவல்களை வேகமாக பரிமாறிக்கொள்ள சமூக வலைதளங்கள் உதவுகின்றன. உலகின் எந்த மூலையில் நடக்கும் நிகழ்ச்சியாக இருந்தாலும் அடுத்த சில நிமிடங்களில் அதனை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதில் சமூக வலைதளங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால் இதில் சிலர் அவதூறு கருத்துக்கள், வீடியோ பரப்புவதால் பல்வேறு பிரச்சினைகளும் எழுகின்றன.

    குறிப்பாக சட்டம்- ஒழுங்கு பெரிய அளவில் சீர்கெட்டுப்போய் வருகிறது. சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் உண்மை தானா? என்பதை அறிவதற்குள் அடி-தடியில் இறங்கி விடுகின்றனர்.

    எனவே சமூக வலை தளங்களில் அவதூறு செய்திகளை கட்டுப்படுத்திட தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தி அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது.

    இந்த நிலையில் விருதுநகரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜனை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில், தன்னை பற்றிய அவதூறு வீடியோ விரைவில் வெளியாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வருகின்றன. இதனை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி பதிவுகள் வெளியிடப்படுவதை தடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

    இது குறித்து விசாரணை நடத்துமாறு மேற்கு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த சூழலில் மேற்கு போலீசில் மேலும் 2 தொழில் அதிபர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், நண்பர்கள் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் சினிமா பாடலுக்கு நாங்கள் நடனமாடினோம்.

    அதனை 3 பேர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த புகார்கள் மீது போலீசார் விசாரணை நடத்திய நிலையில் நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டப்பட்டு வருகிறது. இரு தரப்பிலும் பேசி முடிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

    சமூக வலைதளங்களில் வெளியாகும் அவதூறு செய்திகளால் சட்டம்- ஒழுங்கு கெட்டுப்போகும் அளவுக்கு விளைவுகள் ஏற்படுகிறது.

    எனவே இது வி‌ஷயத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது. பாரபட்சமற்ற நடவடிக்கையால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதோடு, குற்றங்களும் தடுக்கப்படும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    ×