search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடைத்தேர்தல்"

    • பாஜக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றியை பதிவு செய்தது.
    • பாஜகவின் இடைத்தேர்தல் சறுக்கல் குறித்து சுப்ரமணிய சுவாமி மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் கட்சி வழிநடத்படுவதை தொடர்ந்து விமர்சித்து வருபவர் ஆவார். தற்போது தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் மொத்தம் 13 இடங்களில் காங்கிரஸ் தலையாமையிலான இந்தியா கூட்டணி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்தைப் பிடித்த நிலையில் பாஜக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றியை பதிவு செய்தது. சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலிலும் ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மையை இழந்த பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. அதைத்தொடர்ந்து நடந்த இடைத் தேர்தலிலும் பாஜக சறுக்களை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாஜகவின் இடைத்தேர்தல் சறுக்கல் குறித்து சுப்ரமணிய சுவாமி மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

     

    அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாஜகவில் இருக்கும் நாம் நமது கட்சி டைட்டானிக் கப்பல் போல் மூழ்குவதை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு மோடியின் தலைமையே சிறந்ததாகும். இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக நிரந்தரமாக மூழ்குவதற்கான விரிசல்கள் விழுந்து வருவதையே குறிக்கிறது என்று தெரிவித்துள்ளார். உள்ளடியாக சுப்ரமணிய சுவாமியின் இந்த கருத்து பாஜக மேலிடத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

    • 'இடைத்தேர்தல் முடிவுகள் மக்களிடம் பாஜகவால் உருவாக்கப்பட்ட அச்சம் மற்றும் குழப்பத்தின் வலையை உடைத்தெறித்துள்ளது'
    • 'பாஜகவின் ஆணவம், முறையற்ற நிர்வாகம் மற்றும் எதிர்மறை அரசியலை மக்கள் முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர்'

    தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதி உட்பட மேற்கு வங்காளம் (4), இமாச்சல பிரதேசம் (3), தமிழ்நாடு (1), பஞ்சாப் (1), உத்தரகாண்ட் (2), பீகார் (1), மத்திய பிரதேசம் (1) ஆகிய மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு கடந்த 10-ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில் 13 தொகுதிகளில் 10 தொகுதிகளை இந்தியா கூட்டணி கட்சிகள் கைப்பற்றுகிறது. இரண்டு இடங்களில் மட்டுமே பாஜக கூட்டணி வென்றுள்ள நிலையில் ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார்.

    மக்களவைத் தேர்தலில் கணிசமான இடங்களில் வென்று பாராளுமன்றத்தில் குறிப்பிடத்தக்க சக்தியாக உருவெடுத்துள்ள இந்தியா கூட்டணி இடைத்தேர்தலில் பாஜகவை பின்னுக்கு தள்ளி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வெற்றி குறித்து காங்கிரஸ் மற்றும் எதிரிகட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில்,'7 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் மக்களிடம் பாஜகவால் உருவாக்கப்பட்ட அச்சம் மற்றும் குழப்பத்தின் வலையை உடைத்தெறித்துள்ளது. நாட்டின் விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் சர்வாதிகாரத்தை அளித்து நியாயத்தின் ஆட்சியை நிலைநாட்ட விரும்புகின்றனர். அந்த வகையில் மக்கள் அவர்களின் வாழ்க்கை மற்றும் அரசியலமைப்பின் பாதுகாப்புக்காக இந்தியா கூட்டணியின் பக்கம் நிற்கின்றனர்' என்று தெரிவித்துள்ளார்.

    இடைத்தேர்தல் வெற்றி குறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், 'இடைத்தேர்தல் முடிவுகள் மோடி மற்றும் அமித் ஷாவின் அரசியல் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதை நிரூபிக்கும் தக்க சான்றாகும். இந்த வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி, கடுமையாக சூழல்களையும் முறியடித்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு தலை வணங்குகிறேன். பாஜகவின் ஆணவம், முறையற்ற நிர்வாகம் மற்றும் எதிர்மறை அரசியலை மக்கள் முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர் என்பதையே இந்த வெற்றி காட்டுகிறது' என்று தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் தனது எக்ஸ் பதிவில், 'இந்த தேர்தல் வெற்றி பாஜகவுக்கு மறக்க முடியாத படத்தை கற்றுக்கொடுத்துள்ளது. பாஜக ஏற்படுத்திய வேலையின்மை, விலைவாசி உயர்வு, வெறுப்பு அரசியல் உள்ளிட்டவற்றால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்' என்று தெரிவித்துள்ளார்.

    வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, 'நிகழ்காலத்தையும் மூலம் வருங்காலத்துக்கான தீர்க்கமான பார்வையையும் கொண்டுள்ள நேர்மறை அரசியலை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இளைய இந்தியாவின் கனவுகளுக்கும் தேவைகளுக்கும் உழைப்பவர்களாக நாங்கள் இருப்போம்' என்று தெரிவித்துள்ளார். 

    • மூன்று சுயேட்சை எம்எல்ஏ-க்கள் மாநிலங்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
    • பின்னர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்து போட்டியிட்டனர்.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது சுயேட்சையாக போட்டியிட்ட 3 பேர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்கள் ஆகினர்.

    சமீபத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அப்போது மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ.-க்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அத்துடன் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்த நிலையில் மூன்று பேரும் பாஜக கட்சியில் இணைந்தனர்.

    இதனால் மூன்று தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 10-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் இரண்டு இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஒரு இடத்தில் பாஜக வெற்றி பெற்றது.

    இந்த மூன்று இடங்களிலும் பாஜக அதே நபர்களை களம் இறக்கியது. அவர்களில் ஒருவர் மட்டும்தான் வெற்றி பெற்றார். இதன்மூலம் இமாச்சல பிரதேச தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக சுயேட்சை எம்.எல்.ஏ. இல்லாத சட்டமன்றம் ஆகியுள்ளது.

    தெக்ரா தொகுதியில் முதல்வர் சுகுவின் மனைவி போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மேற்கு வங்காளத்தில் பாஜக கைவசம் இருந்த 3 தொகுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
    • பாஜக ஆளும் உத்தரகாண்டில் இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி வாகை சூடுகிறது.

    மேற்கு வங்காளம் (4), இமாச்சல பிரதேசம் (3), தமிழ்நாடு (1), பஞ்சாப் (1), உத்தரகாண்ட் (2), பீகார் (1), மத்திய பிரதேசம் (1) ஆகிய மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு கடந்த 10-ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 13 தொகுதிகளில் சுமார் 11 தொகுதிகளை இந்தியா கூட்டணி கட்சிகள் கைப்பற்றுகிறது.

    ஏழு மாநிலங்களில் மத்திய பிரதேசம், உத்தரகாண்டில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகாரில் பாஜக ஆதரவுடன் நிதிஷ் குமார் ஆட்சி செய்து வருகிறார். இந்த மூன்று மாநிலங்களில் நான்கு இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 3 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற இருக்கிறது.

    மேற்கு வங்காளத்தில் நான்கு தொகுதிகளிலும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. பாஜக-விடம் இருந்த மூன்று தொகுதிகளை தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. இவர் இந்தியா கூட்டணியில் இடம் பெறவில்லை என்றாலும் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்.

    தமிழகத்தில் திமுக தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக-வை வீழ்த்தியுள்ளது.

    மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அமர்வார் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தீரன் ஷா முன்னிலை பெற்று வந்தார். இறுதியில் பாஜக வெற்றி பெற்றது.

    உத்தரகாண்டில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கே உள்ள இரண்டு தொகுதிகளான பத்ரிநாத் மற்றும் மங்க்லாயுர் தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஒரு தொகுதியில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவி கம்லேஷ் தாகூர் வெற்றி பெற்றுள்ளார். மற்றொரு தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வரும் நிலையில், பாஜக ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.

    பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார். இங்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.

    பீகாரில் நிதிஷ் குமார் கட்சி வேட்பாளர் கலாதர் பிரசாத் மண்டல் முன்னிலை வகிக்கிறார்.

    சமீபத்தில் முடிவடைந்த மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி பாஜகவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இதனால் பாஜகவால் தனியாக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளார்.

    • விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி பெற்றுள்ளார்.
    • 7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 11 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.

    நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 13 தொகுதிகளில் கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

    அதன்படி, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், பீகார், உத்தரகாண்ட், பஞ்சாப், இமாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இதேபோல், தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்ததையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளிலும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

    இதில், தமிழகத்தில் இடைத்தேரத்லில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,25,712 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.

    மற்ற மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 11 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் 2019ம் ஆண்டு முதல் இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மகத்தான மாபெரும் வெற்றியை வழங்கிய விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் நாற்பது தொகுதியிலும் நாற்பதுக்கு நாற்பது என்ற நூறு விழுக்காடு வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான 'இந்தியா' கூட்டணி பெற்றது.

    சாதாரண வெற்றியல்ல, பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியைப் பெற்றோம். அதிமுக கூட்டணி படுதோல்வியை அடைந்தது. பாஜக கூட்டணி, பாதாளத்தில் விழுந்தது. இதைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எதிர்கொண்டோம்.

    விக்கிரவாண்டித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய புகழேந்தி அவர்கள் உடல்நிலை காரணமாக மறைவெய்தியதைத் தொடர்ந்து இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளராக ஆற்றமிகு உடன்பிறப்பு அன்னியூர் சிவாவை வேட்பாளராக அறிவித்தோம்.

    நாடாளுமன்றத் தேர்தல் படுதோல்வியில் எழ முடியாமல் இருந்த அதிமுக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அதே படுதோல்வியைச் சந்திக்கத்தான் போகிறோம் என்பதை உணர்ந்து போட்டியில் இருந்து பின்வாங்கியது. பாஜக, தனது அணியில் இருக்கும் பா.ம.க.வை நிறுத்தியது.

    'இடைத்தேர்தலிலேயே நிற்பது இல்லை' என்று வைராக்கியமாக இருந்த பா.ம.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட முன் வந்த மர்மம் இன்னமும் விலகவில்லை.

    தோற்கப் போகிறோம் என்று தெரிந்தே போட்டியிட்டது பாஜக அணி. அவதூறுகளையும், பொய்களையும் திமுக மீதும் குறிப்பாக என் மீதும் விதைத்து, தங்களது 100 விழுக்காடு தோல்வியை மறைப்பதற்காக மிகக் கீழ்த்தரமான பரப்புரையை பாஜக அணி செய்தது. பொய்வேஷக்காரர்களின் பகல் வேஷப் பரப்புரையை மக்கள் மதிக்கவே இல்லை. இந்த வீணர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டியடித்து விட்டார்கள்.

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகமே என்றும் எப்போதும் தேவை என்பதை இந்த இடைத்தேர்தலின் மூலமாக எடைபோட்டுச் சொன்ன விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நேரகாலம் பார்க்காமல் உழைத்த உழைப்புக்கும், தினந்தோறும் உருவாக்கிக் கொடுத்த திட்டங்களுக்கும் மக்கள் தெரிவித்த நன்றியின் அடையாளமாகவே இந்த வெற்றியை நான் பார்க்கிறேன்.

    திராவிட முன்னேற்றக் கழக ஆற்றல்மிகு வேட்பாளர் அன்னியூர் சிவாவை வெற்றி பெற வைக்க பொறுப்பேற்றுக் கொண்ட கழக துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் க.பொன்முடி கழக கொள்கைப் பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் தலைமையில் அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் களம் கண்டார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் என பலரும் களப்பணி ஆற்றினார்கள்.

    பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன், இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி உள்ளிட்ட முன்னணியினர் பலரும் தேர்தல் பரப்புரை செய்தார்கள். நமது இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டார்கள். இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் உடன்பிறப்புகளும் - தோழமைக் கட்சித் தோழர்களும், உதயசூரியனின் வெற்றிக்கு இரவு பகல் பாராது கண்துஞ்சாது உழைத்த அனைவருக்கும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.

    விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி பொன் கௌதமசிகாமணி உள்ளிட்ட ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டக் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதேநேரத்தில் இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் 11 இடங்களில் முன்னணியில் இருக்கிறது. பாஜக தோல்வியைத் தழுவி இருக்கிறது.

    நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைப் பெறாத கட்சி தான் பாஜக. இறங்கி வந்து சில கட்சிகளின் தயவால் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்துள்ளது பாஜக. அத்தகைய தோல்வி முகமே பாஜகவுக்கு இந்த இடைத்தேர்தலிலும் தொடர்கிறது. தோல்விகளில் இருந்து பாஜக பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். மாநில உணர்வுகளை மதிக்காமல் ஆட்சியையும் கட்சியையும் நடத்த முடியாது என்பதை பாஜக இனியாவது உணர வேண்டும்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டு முதல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது.

    திமுக கழக வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வெற்றியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியும் அமைந்துள்ளது. இந்த வெற்றியானது எங்களுக்கு மாபெரும் உற்சாகத்தையும், எழுச்சியையும், அதேசமயத்தில் கூடுதல் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது. நாள்தோறும் நல்ல பல திட்டங்கள் என சாதனைகள் செய்து வரும் நமது கழக அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக, சாதனை வெற்றியாக இது அமைந்துள்ளது.

    நாங்கள் எங்களது சாதனைப் பயணத்தையும் பயணத்தையும் தொடர்கிறோம். வெற்றிப் மக்களோடு இருக்கிறோம். மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • 13 தொகுதிகளிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • 13 தொகுதிகளிலும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

    நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

    அதன்படி, மேற்கு வங்காளத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் அமர்வாரா, பீகாரில் ரூபாலி, உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் மங்களூர், பஞ்சாப்பில் ஜலந்தர் மேற்கு, இமாசல பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இதேபோல், தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்ததையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இந்த நிலையில் இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளிலும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் 13 தொகுதிகளிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, 11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.

    பஞ்சாப்பில் உள்ள ஜலந்தர் மேற்கு தொகுதியில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே பிரதான போட்டி நிலவுகிறது. இதில், ஒரு தொகுதியில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது.

    மற்ற 12 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி - இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே போட்டி நிலவி வருகிறது. இமாச்சலின் தேஹ்ரா, ஹிமிர்பூர், நாலாகர் ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

    இதேபோல், உத்தரகாண்டின் பத்ரிநாத் மற்றும் மங்களூர் ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இமாச்சலின் தேஹ்ரா தொகுதி, மத்திய பிரதேசத்தில் அமர்வாரா தொகுதியில் பாஜக முன்னிலையில் உள்ளது.

    மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

    • 2651 போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    • 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

    வாக்குப்பதிவுக்கு முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாட்டை உறுதி செய்திட வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 6.30 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

    பின்னர், 276 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி, இன்று மாலை 6 மணி வரை நடைபெற்றது.

    இதையடுத்து, வரும் 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 50.95 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    தொடர்ந்து, பிற்பகல் 3 மணி நிலவரப்படி 64.44 சதவீத வாக்குகள் பதிவானது.

    இந்நிலையில், 5 மணி நிலவரப்படி 77.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    இதைத்தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 6 மணிக்கு முடிவடைந்தது. மாலை 6 மணிக்கு முன்னதாக வந்தவர்களுக்கு டோக்கன்கள் வழங்கி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    • 2651 போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    • 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவுக்கு முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாட்டை உறுதி செய்திட வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 6.30 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

    பின்னர், 276 வாக்குச்சாவடிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு தொடங்கியது. இது இன்று மாலை 6 மணி வரை நடைபெறும்.

    மத்திய துணை ராணுவ படையினர் 220 பேர் உள்பட 2651 போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து, வரும் 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 50.95 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 64.44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    • 2651 போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    • 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவுக்கு முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாட்டை உறுதி செய்திட வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 6.30 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

    276 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு தொடங்கியது. இது இன்று மாலை 6 மணி வரை நடைபெறும்.

    மத்திய துணை ராணுவ படையினர் 220 பேர் உள்பட 2651 போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்பின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    அங்குள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 50.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    • கஞ்சனூர் போலீசார் வழக்குபதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர்.
    • வாக்குசாவடியில் வாக்களிக்க வந்த பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி அருகே அன்னியூரை அடுத்த கொசப்பாளையத்தை சேர்ந்தவர் கனிமொழி (வயது42) இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் ஏழுமலை என்பவருடன் கனிமொழிக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் திருமணம் செய்யாமலேயே இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

    இதற்கிடையே கனிமொழிக்கு மற்றொருவருடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஏழுமலை கனிமொழியை கண்டித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் கனிமொழி தொடர்பை கைவிடவில்லை என கூறப்படுகிறது. இதனால் கனிமொழி மீது ஏழுமலை ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி கனிமொழி கொசபாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று 11.30மணியளவில் வாக்களிக்க வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஏழுமலை மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கனிமொழியை கழுத்தில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் கனிமொழிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போலீசார் கனிமொழியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கனிமொழிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக கஞ்சனூர் போலீசார் வழக்குபதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஏழுமலை இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருந்து வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாக்குசாவடியில் வாக்களிக்க வந்த பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • உறுப்பினர்களின் மரணம் மற்றும் ராஜினாமாவால் ஏற்பட்ட காலியிடங்கள் காரணமாக இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
    • வாக்குப்பதிவானது மாலை 6 மணிவரை நடைபெறுகிறது.

    ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக நடைபெறும் இந்த தேர்தலில் உறுப்பினர்களின் மரணம் மற்றும் ராஜினாமாவால் ஏற்பட்ட காலியிடங்கள் காரணமாக இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    பீகாரில் ரூபாலி தொகுதிக்கும், மேற்கு வங்கத்தில் ராய்காஞ்ச், ராணிகஞ்ச், பாக்தாத் மாணிக்தலா தொகுதிகளுக்கும், தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதிக்கும், மத்தியபிரதேசத்தில் அமர்வாரா, உத்தரகாண்டில் பத்ரிநாத், மங்களூர், பஞ்சாப்பில் ஜலந்தர் மேற்கு, இமாச்சலபிரதேசத்தில் டெஹ்ரா, ஹமிர்பூர், நலகர் ஆகிய தொகுதிகளுக்கு இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவானது மாலை 6 மணிவரை நடைபெறுகிறது.

    இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவி கமலேஷ் தாக்கூர் உட்பட பல புதுமுகங்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் அமைந்துள்ளது.

    • 60 ஆண்டு குப்பையை, 5 ஆண்டுகளில் அகற்றுவது சிரமம்.
    • இளையராஜா பெரும்பான்மை இந்து, அவரது மகன் இஸ்லாம் என்பதால் சிறுபான்மை.

    விழுப்புரம் மாவட்டம் ஒரத்தூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    நான் கருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பது இல்லை.

    நான் வெள்ளையாக இருந்து, ஆங்கிலத்தில் பேசி இருந்தால் மக்கள் கேட்டு இருப்பார்கள். 60 ஆண்டு குப்பையை, 5 ஆண்டுகளில் அகற்றுவது சிரமம்.

    நான் தமிழன் என்பது தான், எனது அடையாளம். பலர் சாதியை இனம் என்று பேசி வருகின்றனர். அது தவறு.

    ஒரு மொழியை பேசும், குழுக்கள் தான் இனம். நான் போதிக்கும்போது உங்களுக்கு புரியாது. பாதிக்கும்போது உங்களுக்கு புரியும்.

    இளையராஜா பெரும்பான்மை இந்து, அவரது மகன் இஸ்லாம் என்பதால் சிறுபான்மை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×