என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடைத்தேர்தல்"

    • ஒடிசா உள்பட 5 மாநில இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 5 மாநில இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும்.

    புதுடெல்லி:

    ஐந்து மாநில இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தஉள்ளது.

    ஒடிசா, பீகார், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5-ம் தேதி நடைபெறும்.

    இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நவம்பர் 17-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை நவம்பர் 18-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான இறுதி நாள் நவம்பர் 21-ம் தேதி என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • 7 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
    • மின்னனு வாக்கு எந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

    உத்தரபிரதேசத்தில் கோலாகோரக்பூர், மகாராஷ்டிரா அந்தேரி கிழக்கு, தெலுங்கானாவில் முனு கோடு, அரியானாவில் ஆதம்பூர், ஒடிசாவில் தாம்நகர் மற்றும் பீகாரில் மோகாமா, கோபால்கஞ்ச் ஆகிய 7 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

    வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னனு வாக்கு எந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

    இந்நிலையில், இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்தபடி இன்று நடைபெறுகிறது. அதன்படி, வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னனி நிலவரம் காலை 9 மணிக்கு மேல் வெளிவரத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவு இன்று மாலைக்குள் அறிவிக்கப்படுகின்றன.

    • 4 சுற்றுகள் முடிவில் பாஜக வேட்பாளர் சூரஜ் 3261 ஓட்டுகள் முன்னிலையில் இருந்தார்.
    • 18 சுற்றுகள் முடிவில் பாஜக அந்த தொகுதியில் 1,700 ஓட்டுகள் கூடுதல் பெற்று பின்னர் இழுபறி காணப்பட்டது.

    6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 3ம் தேதி நடந்தது. பீகாரில் உள்ள கோபால் கஞ்ச், மொகாமா, மராட்டியத்தில் இருக்கும் அந்தேரி கிழக்கு, அரியானாவில் ஆதம்பூர், தெலுங்கானாவில் முனுகோடு, ஒடிசாவில் தாம்நகர், உத்தரபிரதேசத்தில் கோலா கோகர்நாத் ஆகிய 7 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.

    பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியளவில் எண்ணப்பட்டன. 7 தொகுதிகளில் பாஜக 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தேஜஸ்வி யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ். ஆகியவை தலா 1 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

    அரியானா மாநிலம் ஆதம்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல்-மந்திரி பஜன் லாலின் மகனுமான குல்தீப் பிஷ்னோய் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இணைந்ததால் அங்கு தேர்தல் நடந்தது.

    இங்கு பாஜக சார்பில் பாவ்யா பிஷ்னோய், காங்கிரஸ் சார்பில் ஜெய்பிரகாஷ் போட்டியிட்டனர். இதில் தொடக்கத்தில் இருந்தே பாவ்யா முன்னிலையில் இருந்தார். 13 சுற்றுகள் முடிவில் பாஜக 10,913 ஓட்டுகள் கூடுதல் பெற்று முன்னிலையில் இருந்தது. காங்கிரசிடம் இருந்து அந்த தொகுதியை பாஜக கைப்பற்றுகிறது.

    உத்தரபிரதேசம் மாநிலம் கோலா கோகர்நாகத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அமன் கிரி 28 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

    18 சுற்றுகள் முடிவில் கிரி 73,371 ஓட்டுகளும், சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் வினய் திவாரி 48,734 ஓட்டுகளும் பெற்று இருந்தார். இதன் மூலம் பாஜக அந்த தொகுதியை தக்க வைத்து கொள்கிறது.

    ஒடிசா மாநிலத்தில் பிஜி ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள தாம்நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தொகுதியில் தொடக்கத்தில் இருந்தே பாஜக முன்னிலையில் இருக்கிறது.

    4 சுற்றுகள் முடிவில் பாஜக வேட்பாளர் சூரஜ் 3261 ஓட்டுகள் முன்னிலையில் இருந்தார். அவர் 18,181 ஓட்டுகளும், பிஜூ ஜனதா தள வேட்பாளர் அபந்தி தாஸ் 14,920 ஓட்டுகளும் பெற்று இருந்தனர். இந்த தொகுதியை பாஜக தக்க வைத்துக் கொள்கிறது.

    பீகார் மாநில மொகாமா தொகுதி ராஷ்டீரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. அனந்த்சிங் ஆயுத தடை சட்டத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அந்த தொகுதியில் ராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் ஆனந்த்சிங் மனைவி நீலம் தேவியும், பாஜக சார்பில் சோனா தேவியும் போட்டியிட்டனர்.

    இந்த தொகுதியில் நீலம் தேவி வெற்றி பெற்றார். இதன் மூலம் அந்த தொகுதியை ராஷ்டீரிய ஜனதா தளம் தக்க வைத்து கொண்டது. 20 சுற்றுகள் முடிவில் நீலம் தேவி 16 ஆயிரம் ஓட்டுகள் கூடுதல் பெற்று இருந்தார். அதன் பிறகு அவர் மேலும் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    பீகார் மாநிலத்தில் உள்ள மற்றொரு தொகுதியான கோபால் கஞ்சில் கடும் போட்டி நிலவுகிறது. தொடக்கத்தில் ராஷ்டீரிய ஜனதா தளம் வேட்பாளர் மோகன் குப்தா முன்னிலையில் இருந்தார்.

    பின்னர் பாஜக வேட்பாளர் சூசும் தேவி முன்னிலை பெற்றார். மாறி மாறி இழுபறி நிலை காணப்பட்டது. 18 சுற்றுகள் முடிவில் பாஜக அந்த தொகுதியில் 1,700 ஓட்டுகள் கூடுதல் பெற்று பின்னர் இழுபறி காணப்பட்டது.

    பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி நிதிஷ்குமார் மெகா கூட்டணியில் இணைந்த பிறகு சந்தித்த முதல் இடைத்தேர்தல் இதுவாகும்.

    மராட்டிய மாநிலம் அந்தோரி கிழக்கு தொகுதியில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி முன்னிலையில் உள்ளது. இங்கு பாஜக போட்டியிடவில்லை. சிவசேனா வேட்பாளரும், மறைந்த எம்.எல்.ஏ.வின் மனைவியுமான ருதுஜா 29 ஆயிரம் ஓட்டுகள் கூடுதல் பெற்று முன்னிலையில் உள்ளார். இந்த தொகுதியை உத்தவ் தாக்கரே தக்க வைத்து கொள்கிறார்.

    தெலுங்கானா மாநிலம் முனுகோட் தொகுதியில் ஆளும் டி.ஆர்.எஸ். தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கு இடையேவும் கடும் இழுபறி ஏற்பட்டது. இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை பெற்றன. 5-வது சுற்று முடிவில் டி.ஆர்.எஸ். முன்னிலையில் உள்ளது.

    • பீகார்,தெலுங்கானா இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றி.
    • மகாராஷ்டிரா இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி வேட்பாளர் வெற்றி பெற்றார்.

    மகாராஷ்டிரா, பீகார், அரியானா, ஒடிசா, உத்தரப்பிரதேசம், தெலுங்கானா உள்பட 6 மாநிலங்களில் காலியாக இருந்த 7 தொகுதிகளுக்கு கடந்த 3-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி மகாராஷ்டிராக மாநிலம் அந்தேரி கிழக்கு தொகுதியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி வேட்பாளர் ருதுஜா லத்கே வெற்றி பெற்றுள்ளார்.

    பீகார் மாநிலம் மோகாமா தொகுதியில் ராஷ்டீரிய ஜனதா தள வேட்பாளர் நீலம் தேவி வெற்றி பெற்றுள்ளார். அந்த மாநிலத்தின் மற்றொரு தொகுதியான கோபால்கஞ்சில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் குசும்தேவி வெற்றி பெற்றுள்ளார். அரியானா மாநிலம் ஆதம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பாவ்யா பிஷ்னோய்யும், உத்தரபிரதேசத்தில் கோலாகோகர்நார் தொகுதியில் பாஜக வேட்பாளர் அமன்கிரியும் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

    இதேபோல் தெலுங்கானா மாநிலம் முனுகோட் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் டிஆர்எஸ் கட்சி வேட்பாளர் குஷ்குந்த்லா பிரபாகர் ரெட்டி 12 சுற்றுகளின் முடிவில் 82,025 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.  ஒடிசா மாநிலம் தாம்நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக மீண்டும் பெற்றி பெற்றுள்ளது.

    • பீகார், உ.பி.,யில் தலா ஒரு தொகுதிகளை பா.ஜ.க வெற்றி பெற்றது.
    • ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி தலா ஒரு தொகுதியை தக்கவைத்தது.

    புதுடெல்லி:

    பீகார், உத்திர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

    உ.பி.,யின் ராம்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் ஆகாஷ் சக்சேனா, சமாஜ்வாதி வேட்பாளர் ஆசிம் ராஜாவை 33,702 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். சமாஜ்வாதி கோட்டையாக திகழ்ந்த இந்த தொகுதியை பா.ஜ.க முதல் முறையாக கைப்பற்றியுள்ளது.

    இதேபோல், உ.பி.,யின் கதவுலி சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட ராஷ்ட்ரீய லோக்தள கட்சியின் மதன் பையா, பா.ஜ.க. வேட்பாளர் ராஜ்குமார் சைனியை 22,165 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    பீகாரில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட கேதார் பிரசாத் குப்தா, ஐக்கிய ஜனதா தளம் சார்பில் மனோஜ் சிங்கை 76,653 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

    ஒடிசாவின் பதம்பூர் தொகுதிக்கு போட்டியிட்ட ஆளும் பிஜூ ஜனதாதள கட்சியின் பர்சா சிங் பரிகா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரை 38.252 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார். ...

    சத்தீஸ்கரின் கன்கெர் மாவட்டத்தில் உள்ள பனுபிரதப்பூர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சாவித்ரி மாண்டவி வெற்றி பெற்றார்.

    ராஜஸ்தானின் சர்தர்ஷகார் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அனில் சர்மா 26,852 ஓட்டுகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் அசோக்குமாரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

    • ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
    • இடைத்தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 7ம் தேதி கடைசி நாள். வேட்புமனு பரிசீலனை 8ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்பபெற கடைசி நாள் பிப். 10. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் நடக்கும இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    அவிநாசி:

    கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டத்தை உள்ளடக்கி அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. 98 சதவீதம் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் திட்டத்தை வெள்ளோட்டம் பார்த்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுகிறது.இருப்பினும் வருகிற ஏப்ரல் மாதம் திட்டம் வெள்ளோட்டம் பார்க்கப்படும் என நீர்வளத்துறையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    60 ஆண்டு கனவு திட்டமான அத்திக்கடவு- அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் அதுவும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போதுதான் நிதி ஒதுக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.எனவே, அக்கட்சியினருக்கு இத்திட்டம் தேர்தல் பிரசாரத்தின் போது துருப்புச் சீட்டாக இருக்கப்போகிறது.

    அ.தி.மு.க., ஆட்சியின் போது திட்டம் கொண்டு வரப்பட்டாலும் திட்டம் எவ்வித தொய்வுமின்றி நடந்து முடிய தி.மு.க., அரசு தான் காரணம் என தி.மு.க.,வினர் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர். பல்வேறு கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ள விடுபட்ட குளம், குட்டைகளை இணைப்பது தொடர்பான வாக்குறுதி களையும் அவர்கள் அளிக்கக்கூடும்.

    அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழுவினர் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, ஈரோடு கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் பயன் குறைவு. மாறாக பெருந்துறை, சென்னிமலை, நம்பியூர், கோபி, பவானிசாகர் வட்டாரங்கள் தான் அதிகம் பயன் பெறும்.இருப்பினும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அத்திக்கடவு திட்டம் சார்ந்து அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்வர் என்பதால் திட்டத்தை விரைந்து முடிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றனர்.

    • மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தினை இயக்குவதற்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் அனைவரும் தெரிந்துள்ளனரா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
    • வாக்குச்சாவடிக்குச் செல்லக்கூடிய வழியில் உள்ள சாலைகளின் ஆறு, வாய்க்கால் மற்றும் பாலங்கள் உள்ளதா? என்பது குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    ஈரோடு

    ஈரோடு மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 20 மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்கள் ஆகியோர்களுக்கான பயிற்சி வகுப்பு தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.

    தங்கள் மண்டலத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் பல்வேறு வழிகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் விரைந்து வாக்குச்சாவடிகளுக்குச் செல்லக்கூடிய வழிகளையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

    வாக்குச்சாவடிக்குச் செல்லக்கூடிய வழியில் உள்ள சாலைகளின் ஆறு, வாய்க்கால் மற்றும் பாலங்கள் உள்ளதா? என்பது குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் தணிக்கை செய்து வாக்குச்சாவடி அமைந்துள்ள இடத்தின் நிலை, வாக்குச்சாவடிக்கட்டிடம், தளவாடங்கள், அடிப்படை வசதிகள் (குடிநீர் வசதி, சாய்வுதளவசதி, மின் வசதி, கழிப்பறை வசதி, தொலைபேசி வசதி) மற்றும் பாதுகா ப்பு தொடர்பான வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

    பிரச்சினைக்குரிய மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எழக்கூடிய வாக்குச்சாவடிகள் இருப்பின் அது குறித்து ஆய்வு செய்து முந்தைய காலத்தில் ஏதாவது சம்பவங்கள் நடந்துள்ளதா என்பது குறித்தும், ஜாதி, இன கலவரங்கள் நடந்துள்ளதா என்பது குறித்தும்,

    தொடர்ச்சியாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் நடைபெற்று ள்ளதா என்பது குறித்தும் விபரங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    மண்டல அலுவலர் மற்றும் உதவி மண்டல அலுவலர் ஆகியோர் மின்ன ணு வாக்குப்பதிவு எந்திரத்தை எவ்வாறு இயக்குவது என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வை

    தங்களது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் இணைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் இது குறித்து விரிவான விளம்பரத்தை அந்தப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மூலம் ஏற்படுத்த வேண்டும். வாக்குச்சாவடிகளில் பணிபுரிகின்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கத்தக்க வகையில் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முழுமையாக விபரங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    வாக்குப்பதியும் நாளுக்கு முந்தைய நாளில் செய்ய வேண்டியவை தங்களது மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் உரியஅனைத்து படிவங்கள், கவர்கள், இதரபொருட்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பச்சைநிற முத்திரைத் தாள்கள உலோக முத்திரை அழியாமைக்குப்பிகள் வாக்காளர் பட்டியல்கள், தேவையான அளவு உபரி படிவங்கள், கவர்கள், பொருட்கள் ஆகியவற்றை கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.

    அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் சென்று உரிய பொருட்களை கொடுத்த பின்னர் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் வருகை புரிந்து உள்ளார்களா என்பதை சரிபார்த்து கொள்ளவேண்டும்.

    அலுவலர்கள் பணிக்கு வராத நேர்வுகளில் மாற்று ஏற்பாடு உடனே செய்யப்பட வேண்டும். இதற்கு வசதியாக தேவை யான அளவு ரிசர்வ் வாக்குப்பதிவு அலுவலர்களை நீங்கள் கைவசம் வைத்திருப்பது அவசியம்.

    தாலூகா வட்டார தலைமையிடத்தில் இருந்து தொலைவில் உள்ள வாக்குச்சாவடிகள் அடங்கிய மண்டல அலுவலர்கள் கட்டாயம் ரிசர்வ் பணியாளர்களை தேவையான அளவு தங்களது வாகனத்தில் அழைத்து செல்ல வேண்டும்.

    தங்கள் மண்டலத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி களுக்கும் 100 மீட்டர்சுற்று எல்லைக்குள் எவ்வித சின்னங்கள், கட்சி தொடர்பான விளம்பரங்கள் இருக்கக்கூடாது என்பதும், வேட்பாளர்களின் தேர்தல் சாவடிகள் 100 மீட்டர் தொலைவுக்கு அப்பால் அமைக்கப்பட வேண்டும்.

    மேலும் வாக்குச்சாவடி அமையப்பெற்றுள்ள இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் சின்னங்கள், கட்சி தொடர்பான விளம்பரங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல் துறையினருக்கு உடனே தகவல் தெரிவித்து மேற்படி இனங்களை உடனடியாக அகற்றுவதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தினை இயக்குவதற்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் அனைவரும் தெரிந்துள்ளனரா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். எவ்வாறு இயக்குவதுஎன்பதை அவர்களை செய்து காட்டச் சொல்ல வேண்டும்.

    வாக்குப்பதிவு நாளன்று செய்ய வேண்டியவை காலை 7 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி அதனை உடனே தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தொலைபேசி மூலமாக தெரிவிக்க வேண்டும்.

    மாதிரி வாக்குப்பதிவு தேர்தல் மின்னணுவாக்குப்பதிவு எந்திரத்தில் ஏஜெண்ட்டுகளுக்கு செய்து காட்டப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    ஏதாவதொரு வாக்குச்சாவடியில் தாமதம் காணப்பட்டால் வாக்குச்சாவடி அலுவலருக்கு உரிய உதவிகள் செய்து, வாக்குப்பதிவினை தாமதம் இன்றி ஆரம்பித்து வைக்கஆவண செய்ய வேண்டும்.

    வாக்குச்சாவடிகளில் இருப்பதற்கு தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்க ப்பட்ட நபர்களை தவிரவேறு எவரும் வாக்குச்சாவடிகளில் இருப்பார்களே யானால் அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

    வாக்குப்பதிவு நாளன்று குறைந்தபட்சம் 3 தடவையாவது ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் பார்வையிட வேண்டும். 2 மணிக்கொரு ஒருமுறை பதிவான வாக்குகளின் சதவீதத்தை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.

    வாக்குப்பதிவு முடியற்ற பின்பு பட்டியலில் கண்டமுறைப்படி தேர்தல் பொருட்களை வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடமிருந்து பெற்று, அவருக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் நாட்குறிப்பு, வாக்குச்சீட்டுகணக்கு, பேப்பர்சீல் கணக்கு மற்றும் டிக்ளரேசன் ஆகியவற்றை தனியாகப் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்ட ல அலுவலர்களுக்கு மின்ன ணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளுவது தொ டர்பான செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது.

    இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரங்கநாதன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கிருஷ்ணன், ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணி, மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. ேதால்வியை சந்திக்கும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசினார்.
    • சிவகாசியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாணிக்கம் தாகூர் எம்.பி. தொடங்கி வைத்தார்.

    விருதுநகர்

    சிவகாசி அம்மன்கோவில்பட்டி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருடன் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்துரையாடினார்.

    அப்போது மாணவ மாணவியர் தரையில் அமர வைக்கப்பட்டதை கண்ட மாணிக்கம் தாகூர் உடனடியாக தலைமை ஆசிரியரிடம் அதற்கான காரணத்தை கேட்டபோது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கைகள் இல்லை என தெரிவித்ததை தொடர்ந்து தனது நிதியின் மூலம் மாணவர்களுக்கு இருக்கைகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    பின்னர் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிவகாசி மாநகராட்சியை இணைக்க வேண்டும்.இதன் மூலம் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தப்படும்.

    ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தோல்வி கண்ணிற்கு முன் நிற்பதால் அழ தொடங்கிவிட்டார். அ.தி.மு.க. மிகப்பெரிய தோல்வியை சந்திக்க உள்ளதை எடப்பாடி பழனிச்சாமி அறிந்து கொண்டுள்ளார் .

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கமல்ஹாசனின் ஆதரவு மிக முக்கியமான ஆதரவாக காங்கிரஸ் பார்க்கிறது. காங்கிரஸ் கட்சி கமல்ஹாசனுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்து அதன் பிரதிபலிப்பாக நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக சிவகாசியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாணிக்கம் தாகூர் எம்.பி. தொடங்கி வைத்தார்.

    • வார்டு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
    • நிர்வாகிகள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து திருப்பூர் 22-வது வட்ட தி.மு.க. மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் வார்டு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் ராஜ்குமார், முன்னாள் பகுதி செயலாளர் செல்வராஜ், மாநகர பொறுப்பாளர்கள் சரவணகுமார், திராவிட பாலு, பகுதி பொறுப்பாளர் குப்புசாமி, காங்கிரஸ் வார்டு தலைவர் நடராஜ், கொங்குநாடு தேசிய முற்போக்குகழகத்தின் பொறுப்பாளர்கள் மாடிகோவில் செல்வகுமார், சி.பி.ஐ.செயலாளர் சின்னச்சாமி, சி.பி.எம். பொறுப்பாளர் சுப்பிரமணி, ம.தி.மு.க. செயலாளர் ராஜமாணிக்கம், தொ.மு.ச. தங்கராஜ் உள்பட கூட்டணி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • அதிக முறை போட்டியிட்டு அனைத்து தேர்தலிலும் தோல்வி அடைந்து, சாதனை படைத்துள்ளேன்.
    • பத்மராஜன் இதுவரை 228 முறை தேர்தலில் மனுதாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூரு:

    கர்நாடக மேல்-சபையில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புனு தாக்கல் நேற்று தொடங்கியது. தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை மனு தாக்கல் நடைபெறும். மனு தாக்கல் செய்பவர்கள் டெபாசிட் தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும்.

    மனுக்களை தாக்கல் செய்ய 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். 21-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 23-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். போட்டி இருந்தால் 30-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    இந்த தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட உள்ளனர். மனுதாக்கலின் முதல் நாளான நேற்று தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் பெங்களூரு விதான சவுதாவில் தேர்தல் அதிகாரி விசாலாட்சியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதன் மூலம் அவர் 235-வது முறையாக தேர்தலில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    நாட்டின் எந்த மூலையில் தேர்தல் நடைபெற்றாலும், அங்கு சென்று மனு தாக்கல் செய்வதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். இதுகுறித்து பத்மராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 1988-ல் தொடங்கிய எனது தேர்தல் பயணம் இன்று வரை வெற்றிகரமாக தொடர்கிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என இந்தியா முழுவதும் தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாம், முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன், பிரதமர் நரேந்திமோடி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், வாஜ்பாய் மட்டும் இன்றி முன்னாள் முதல்வர்கள் பலருக்கு எதிராக போட்டியிட்டுள்ளேன்.

    தேர்தலில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். பணம், செல்வாக்கு இருப்பவர் மட்டும் தேர்தலில் நிற்க முடியும் என்பது தவறானது. இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.

    அதிக முறை போட்டியிட்டு அனைத்து தேர்தலிலும் தோல்வி அடைந்து, சாதனை படைத்துள்ளேன். இதுவரை ரூ.1 கோடி வரை டெபாசிட் பணத்தை இழந்துள்ளேன். நான் கட்டிய பணம் ஒன்றிய அரசு கருவூலத்திற்கு சென்றுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பத்மராஜன் இதுவரை 228 முறை தேர்தலில் மனுதாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணை நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது.
    • நாளை மறுநாள் தொடங்கி 17ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

    புதுடெல்லி:

    ஜார்க்கண்ட், கேரளா, திரிபுரா, மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் செப்டம்பர் 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணை நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது. அன்றே வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. 17ம் தேதி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம். ஆகஸ்ட் 18ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. மனுக்களை திரும்ப பெற விரும்புவோர் ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் திரும்ப பெறவேண்டும். செப்டம்பர் 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. செப்டம்பர் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 

    ×