என் மலர்
நீங்கள் தேடியது "slug 99437"
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளிலும், தேயிலைத் தோட்டங்களிலும், சாலைகளிலும் உலவுகின்றன.
கடந்த வாரம் கூட யானைக்கூட்டம் ஒன்று சாலையில் வந்த வாகன ஓட்டிகளை ஓட ஓட விரட்டியது. அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், சுற்றுலாப்பயணிகளும் அந்த அச்சத்தில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வழக்கம் போல் வாகனங்கள் சென்ற வண்ணம் இருந்தன. அதிகாலை நேரத்தில் முள்ளூர் பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை சாலையின் நடுவே வந்து நின்று கொண்டது. நீண்ட நேரமாக எங்கும் செல்லாமல் அங்கே உலவியது.
இதனால் சாலையின் இருபுறமும் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. சிலர் யானையை புகைப்படம் எடுக்க முற்பட்டனர்.
அப்போது திடீரென கோபம் அடைந்த யானை அங்கு நின்றிருந்த 5-க்கும் மேற்பட்ட வாகனங்களை தாக்கி கண்ணாடியை உடைத்தது. மேலும் யானையை முந்தி செல்ல முயன்ற வேனின் கண்ணாடியையும் உடைத்தது.
தொடர்ந்து சாலையில் நின்றிருந்த காரை நோக்கி யானை வந்தது. யானை வருவதை பார்த்ததும் காரில் இருந்தவர்கள் பயத்தில் சத்தம் போட்டனர். வந்த வேகத்தில் யானை காரை ஆக்ரோஷமாக தூக்கியது.
இதனால் காரில் இருந்தவர்கள் அலறினர். பின்னர் அங்கேயே காரை போட்டு விட்டு சென்று விட்டது. சிறிது நேரம் கழித்து யானை அங்கிருந்து அருகே உள்ள தேயிலை தோட்டத்துக்குள் சென்று விட்டது.
அதிர்ஷ்டவசமாக யானை காரை தூக்கி வீசாததால் காரில் இருந்த யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.யானை சென்றதும் வாகன ஒட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் இரவில் செல்லும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது. எனவே வனத்துறை அதிகாரிகள் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- புனித நீர் வெள்ளிக்குடத்தில் எடுக்கப்பட்டு நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து மேளதாளம் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.
- இரவு 9 மணிக்கு நடக்கும் பகவதி அம்மனின் வாகன பவனிக்கும் இந்த யானை பயன்படுத்தப்படுகிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 26-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அன்று முதல் தினமும் காலை 9 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகத்துக்குரிய புனித நீர் விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து எடுத்து வரப்படுகிறது.
புனித நீர் வெள்ளிக்குடத்தில் எடுக்கப்பட்டு நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து மேளதாளம் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. அதேபோல இரவு 9 மணிக்கு நடக்கும் பகவதி அம்மனின் வாகன பவனிக்கும் இந்த யானை பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் நவராத்திரி திருவிழாவுக்காக கொண்டுவரப்பட்ட யானை, இரவு நேரத்தில் கன்னியாகுமரி பார்க்வியூ பஜாரில் உள்ள கடைவீதி வழியாக கோவிலுக்கு அழைத்து வரப்படும் போது 50 அடி உயரத்தில் இருந்து குறுகிய படிக்கட்டு வழியாக பாகனால் இறக்கப்படும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கொண்டிருக்கிறது.
இந்த திகில் காட்சி பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் விழாவுக்கு வந்தபோது நடந்தது
- செல்போனில் வைரலாக பரவும் காட்சியால் பரபரப்பு
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 26-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அன்று முதல் தினமும் காலை 9 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகத்துக் குரிய புனித நீர் விவேகா னந்த புரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கிணற்றில்இருந்து எடுத்து வரப்படுகிறது.
புனித நீர் வெள்ளிக்கு டத்தில் எடுக்கப்பட்டு நெற்றிப் பட்டம்அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து மேளதாளம் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. அதேபோல இரவு 9 மணிக்கு நடக்கும் பகவதி அம்மனின் வாகன பவனிக்கும் இந்த யானை பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் நவ ராத்திரி திருவிழாவுக்காக கொண்டுவரப்பட்ட யானை, இரவு நேரத்தில் கன்னியாகுமரி பார்க்வியூ பஜாரில் உள்ள கடைவீதி வழியாக கோவிலுக்கு அழைத்து வரப்படும் போது 50 அடி உயரத்தில் இருந்து குறுகிய படிக்கட்டு வழியாக பாகனால் இறக் கப்படும் காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வைர லாக பரவி கொண்டி ருக்கிறது.
இந்த திகில் காட்சி பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்
- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவ ராத்திரி விழா இன்று தொடங்கி உள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவ ராத்திரி விழா இன்று தொடங்கி உள்ளது. வருகிற 5-ந் தேதி வரை 10 நாட்கள் விழா நடக்கிறது.
விழாவின்போது பாரம் பரிய முறைப்படி 10 நாட்களும் அம்ம னுக்கு அபிஷே கத்து க்குரிய புனிதநீரை எடுத்து வருவதற்கு யானையை பயன்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து யானை பயன்படுத்துவதற்கு வனத்துறை அனுமதி பெறப்பட்டது.
அதன்பயனாக திற்ப ரப்பில்இருந்து கன்னியா குமரி பகவதிஅம்மன் கோவிலுக்கு யானை வரவழைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பகவதி அம்மன் அபிஷேத்துக்குரிய புனிதநீர் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கரதீர்த்த காசி விசுவநாதர் கோவில் முன்பு வைத்து பூஜை நடத்தப்பட்டது.
அதன்பிறகு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த யானைக்கு கஜ பூஜை நடத்தி தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு வெள்ளிக் குடத்தில் எடுத்து நெற்றிப் பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
யானை ஊர்வலத்தை கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, கொட்டாரம் பேரூர்செயலாளர் வைகுண்டபெருமாள், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன், சக்கரதீர்த்த காசி விஸ்வநாதர் கோவில் பக்தர்கள் சங்க தலைவர் சந்திர சேகர், செயலாளர் நாகராஜன், ஒன்றிய இளைஞர்அணி அமைப்பாளர் பொன் ஜான்சன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி துணைத் தலைவர் ஜெனஸ் மைக்கேல் மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் உள்படதிரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலம் ரெயில் நிலைய சந்திப்பு, வடக்கு ரத வீதி, நடுத் தெரு, தெற்கு ரத வீதி, சன்னதி தெரு, வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலை சென்றடைந்தது. அங்கு காலை 10மணிக்கு பகவதி அம்மனுக்கு புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
- சமயபுரம் அருகே எம்.ஆர். பாளையத்தில் வனத்துறை சார்பில் யானைகள் மறுவாழ்வு முகாமில் ஜமீலா என்ற 62 வயது மதிக்கத்தக்க பெண் யானை பராமரிக்கப்பட்டு வந்தது
- ஒருமாத காலமாக வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவினால் பாதிக்ப்பட்ட ஜமீலாவுக்கு திவீர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்கவில்லை.
திருச்சி,
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே எம்.ஆர். பாளையத்தில் வனத்துறை சார்பில் யானைகள் மறுவாழ்வு முகாம் செயல்பட்டு வருகிறது. கோவில்களில் வளர்க்கப்பட்டு நோய்வாய்ப்படும் யானைகள், குணாதிசய மாற்றம் ஏற்படும் யானைகள் இங்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளித்து பராமரிக்கப்படுகிறது.
அந்த வகையில் ஜமீலா என்ற 62 வயது மதிக்கத்தக்க பெண் யானை 2 ஆண்களாக இந்த முகாமில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானையை தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் உரிமை சான்று மற்றும் வழித்தட சான்று இல்லாமல் பணம் சம்பாதிக்கு நோக்கில் மட்டும் அதன் உரியைாளர் பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்த யானை பல நாள் நோய் வாய்ப்பட்டு இருந்த நிலையிலும், அதற்குரிய சிகிச்சை அளிக்காமல் பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு இருந்தது மாவட்ட வளர்ப்பு யானைகள் பராமரிப்பு குழுவினால் கண்டறியப்பட்டது.
இதையடுத்து யானை ஜமீலா மீட்கப்பட்டு திருச்சி யானைகள் மறுவாழ்வு முகாமில் வைத்து பராமரித்து வன கால்நடை மருத்துர்களால் 2 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஒருமாத காலமாக வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்ட ஜமீலாவுக்கு திவீர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்கவில்லை.
நேற்று பகல் 12.30 மணிக்கு யானை பாகனின் கட்டளைக்கு இணங்க மறுத்த யானை மிகவும் சோர்வடைந்த நிலையில் நிற்ககூட முடியாமல் நிலைகுலைந்து அமர்ந்தது. உடனடியாக திருச்சி கால்நடை மருத்துவமனை உதவி இயக்குநர் தலைமையிலான மருத்துவக்குழு விரைந்து, வந்து யானையை பரிசோதித்தனர். அதில் யானை உயிரிழந்தது பகல் 2.30 மணிக்கு உறுதிப்படுத்தபட்டது.
தொடர்ந்து வளர்ப்பு யானைகள் பராமரிப்பு குழு முன்னிலையில் வன கால்நடை மருத்துவக் குழுவினர்களால் இன்று (18-ந்தேதி) காலை ஜமீலா யானை உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் எம்.ஆர்.பாளையம் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த யானைகளின் எண்ணிக்கை 8 லிருந்து 7 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மூலைக்கடையில் சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் முகாமிட்டது.
- குடியிருப்புகளை முற்றுகையிட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குட்டியுடன் காட்டு யானைகள் முகாமிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். சாலையில் உலா கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்கிறது. இந்த சாலையில் குஞ்சப்பனை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பலா மரங்களில் பலாப்பழங்கள் காய்த்து குலுங்கி வருகின்றன. பலாப்பழங்களை உண்பதற்காக சமவெளிப் பகுதியில் இருந்து காட்டு யானைகள் இப்பகுதிக்கு வந்து முகாமிட்டு உள்ளன. அத்துடன் அடிக்கடி சாலையில் உலா வருகின்றன. இந்தநிலையில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவில் குட்டியுடன் 2 காட்டு யானைகள் நின்றன. குறுகிய வளைவில் யானைகள் நிற்பதை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். சிலர் ஆபத்தை உணராமல் யானைகளை புகைப்படம் எடுத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும். சாலையில் யானைகளை கண்டால் தொல்லை அளிக்கவோ அல்லது அருகில் சென்று செல்பி புகைப்படம் எடுக்கவோ முயற்சிக்கக் கூடாது. ஒலிப்பான்களை ஒலிப்பதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். வாழை மரங்கள் சேதம் பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே பாதிரிமூலா பகுதிக்குள் இரவு காட்டு யானை புகுந்தது. அங்கு குடியிருப்புகளை முற்றுகையிட்டது. கனகராஜ் என்பவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டு இரு்நத வாழை மரங்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. பின்னர் மூலைக்கடை பகுதியில் வர்க்கீஸ் என்பவரது வீட்டின் நுழைவுவாயிலை காட்டு யானை உடைத்து, வளாகத்துக்குள் புகுந்தது. அங்கு வாழை மரங்களை சேதப்படுத்தியது. மேலும் அந்த வழியாக சென்ற வாகனங்களை தாக்க முயன்றது. அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட பிதிர்காடு வனகாப்பாளர் ராஜேஸ்குமார் மற்றும் வேட்ைட தடுப்பு காவலர்கள் காட்டு யானையை விரட்டினர். இதையடுத்து மூலைக்கடையில் சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் முகாமிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- காட்டுப்பன்றி, காட்டுமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உயிர் வாழ்ந்து வருகின்றன.
மேட்டுப்பாளையம்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி ஒட்டியுள்ள கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய வனச்சரகங்களில் யானை, கரடி, காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டுமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உயிர் வாழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் மேட்டுப்பா ளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் நோய்வாய்ப்பட்ட காட்டுயானை ஒன்று நடமாடி வருவது கண்டறியப்பட்டுள்ளது. யானையின் வாய் பகுதியில் காயம் ஏற்பட்டு உணவு, தண்ணீர் உட்கொள் முடியாமல் அவதி அடைந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் -குன்னூர் சாலையில் கல்லார் தூரி பாலம் அருகே உடல் மெலிந்த நிலையில் கல்லார் ஆற்றில் தண்ணீர் குடிக்க அந்த யானை வந்துள்ளது. அப்போது அந்து வழியைச் சென்ற பொதுமக்கள் யானையைப் பார்த்தவுடன் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர். அதில் யானை தண்ணீர் குடிக்க சிரமப்பட்டு கொண்டிருந்தது தெரியவந்தது. மேலும் அந்தக் காட்டு யானை கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் சுற்றி வருவதாக மக்கள் தெரிவித்தனர். தற்போது செல்போன் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
யானையின் உடல் நிலை மிகவும் மெலிந்து காணப்படுகிறது. ஆனால் இதுவரை வனத்துறையினர் அந்த யானைக்கு சிகிச்சை அளிக்காமல் இருந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து தகுந்த சிகிச்சை அளித்து யானையின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று சமூக வன உயிரின ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- கோரஞ்சால் பகுதிக்கு 2 வாரங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை ஒன்று வந்தது.
- உடல் நலம் பாதிக்கப்பட்ட யானை 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரியவந்தது.
ஊட்டி
கேரள வன பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டம், கூடலூா் வன கோட்டத்தில் உள்ள சேரம்பாடி வனசரகம் வென்ட்வொா்த் எஸ்டேட், கோரஞ்சால் பகுதிக்கு 2 வாரங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை ஒன்று வந்தது.
இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்ட யானை 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரியவந்தது.
உடனடியாக வனத்துறையினர் முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து யானைக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினர். கால்நடை டாக்டர் தொடர்ந்து யானையின் உடல்நலத்தை கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். இதில் குணமாகவே அந்த யானை மீண்டும் கேரள வனப் பகுதிக்குள் சென்றது.
பின்னா் மீண்டும் உடல்நிலை மோசமடைந்த யானை சேரம்பாடி வனச் சரக பகுதிக்கு வந்தது. தகவல் அறிந்து வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் நேற்று யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இதையடுத்து, கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் தலைமையில் மருத்துவக் குழுவினா் யானை உடலை பிரேத பரிசோதனை செய்தனா். இதன் முடிவுகள் வந்த பிறகே யானை உடல்நலக்குறைவால் உயிரிழந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது தெரியவரும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.
- உலகில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான யானைகள் உள்ள நாடு இந்தியா.
- யானைகள் பல்லுயிர் பெருக்கம் மற்றும் உணவுச்சங்கிலியில் முக்கியப் பங்காற்றுகின்றன.
திருப்பூர் :
சூழலியல் கல்வியின் மற்றொரு அங்கமான வனம், அதுசார்ந்த விலங்கினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.சிறப்பு அழைப்பாளராக திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் கலந்து கொண்டுபேசினார். அவர் பேசுகையில், உலகில், இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான யானைகள் உள்ள நாடு இந்தியா. நிலத்தில் வாழும் பாலூட்டிகளில் மிகப்பெரிய உயிரினமான யானைகள், பல்லுயிர் பெருக்கம் மற்றும் உணவுச்சங்கிலியில் முக்கியப் பங்காற்றுகின்றன.
தினமும், பல கி.மீ., தூரம் பயணிக்கும் யானைகள், பல்வேறு மரங்களின் இழை, தழைகளை உண்பதன் மூலம் வெளியேற்றும் சாணம் மூலம், மரம், செடி, கொடிகளை வளரச் செய்து வன வளத்தை பெருக்குகிறது. இந்த உயிரினத்தை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை. அரசியலமைப்பு சட்டப்படி பொறுப்பும் கூட என்றார். பொருளியல் இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட, 'களிறாற்றுப்படை' என்ற ஆவணப்படம் வெளியிடப்பட்டது.யானைகள் 50 முதல் 70 ஆண்டு வரை வாழும். பெண் யானைகளின் கர்ப்ப காலம் 24 மாதம். மனிதர்களின் குரலை அடையாளம் காணும் ஆற்றல், நினைவாற்றல் யானைகளுக்கு உண்டு. கேட்பதிலும், மனிதர்களை போன்றே உணர்ச்சி வசப்படக்கூடியது.
தந்தத்திற்காக யானைகள் கொல்லப்படுகின்றன. மின் வேலியில் சிக்கியும் பலியாகின்றன. வனப்பரப்பு குறைந்ததால் பட்டினி சாவுகளை எதிர்கொள்கின்றன. 3 நிமிடத்திற்கு ஒரு வன விலங்கு வேட்டையாடப்படுகிறது என்ற பட்டியலில் யானைகளும் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.கடந்த 2017ன் கணக்கெடுப்புபடி இந்தியாவில் 29 ஆயிரத்து 864 யானைகள் உள்ளன. ஒரு யானை தினமும் 300 முதல் 500 விதைகளை தன் சாணத்தின் மூலம் விதைக்கிறது. ஓராண்டுக்கு 36 ஆயிரத்து 500 மரங்கள் வளர மறைமுகமாக உதவுகின்றன. அழியும் பேருயிர்களை காப்பது நம் வளங்களையும், வருங்காலத்தையும் காப்பதற்கு சமம்.இவ்வாறு அந்த ஆவணப்படத்தில் அழுத்தமாக சில புள்ளி விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
- பா்லியாறு போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்கள் உள்ளது.
- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் அவ்வப்போது யானைகள் கூட்டம் வந்து செல்கின்றன.
ஊட்டி
நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஹில்குரோவ், குரும்பாடி, பா்லியாறு போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்கள் உள்ளது.
இங்கு தோட்டங்களில் உள்ள பலா மரங்களில் பலாப் பழங்கள் விளைந்துள்ளன. இவற்றை உண்பதற்காக குன்னூா்- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் அவ்வப்போது யானைகள் கூட்டம் வந்து செல்கின்றன.
எனவே, சுற்றுலா வாகன ஓட்டிகள், இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள் மிகவும் கவனமுடன் இந்த சாலையில் பயணிக்க வேண்டும் என்று குன்னூா் வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
- நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமங்கள் ஆகும்.
- ஒற்றை யானை என இரவு நேரங்களில் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது
வடவள்ளி
கோவை தொண்டா முத்தூர் சுற்றுவட்டர பகுதியான அட்டுக்கல், குப்பேபாளையம், தேவரா யபுரம், சிலம்பனூர், நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமங்கள் ஆகும்.
இந்த பகுதி மக்கள் அதிக அளவில் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில வாரங்களாக யானைகள் கூட்டமாகவும், ஒற்றை யானை என இரவு நேரங்களில் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒற்றை டஸ்கர் இன யானை குப்போபாளையம், அட்டுக்கல் உள்ளிட்ட பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக விளை நிலங்களில் புகுந்து சோளம், கடலை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
குப்பேபாளையம் பகுதியில் வெங்காய பட்டறை ஒன்றை இடித்து தள்ளி சூறையாடியது. ஜெயப்பரகாஷ் என்பவரது தோட்டத்தில் புகுந்து மோட்டார் பம்புகளை இடித்து தள்ளியது. யானையை பார்த்து அங்கு கட்டி வைக்கப்பட்டு இருந்த கால்நடைகள் மிரண்டு ஓடியது.
இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் அட்டுக்கல் வழியாக கெம்பனூர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை காட்டுயானை வடக்கு வீதியில் ரங்கராஜ் என்பவர் வீட்டின் முன்பு நீண்ட நேரம் நின்றது.
நாய்கள் சத்தம் கண்டதை கண்டு வெளியில் வந்த சிலர் யானை நிற்பதை கண்டு திடுக்கிட்டனர். உடனடியாக செல்போன் மற்றும் வாட்ஸ் அப் மூலமாக அருகில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்து உஷார் படுத்தினர். யானை ஊருக்குள் பல இடங்களில் சுற்றி இன்று அதிகாலை 5 மணியளவில் வனப்பகுதியை நோக்கி சென்றது.
யானை ஊருக்குள் வீதியில் வந்ததை மாடியில் நின்றவாறு சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தொண்டாமுத்தூர் அருகே விளைநிலம் மற்றும் குடியிருப்பையொட்டி பகுதிகளில் யானைகள் முகாமிட்டு இருப்பது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஒருமாதத்தில் மட்டும் போளுவாம்பட்டி வனச்சரகத்தில் இரண்டு நபர்கள் யானை தாக்கி இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பரப்பற்று ஜங்சன், கூட்டுமங்கலம், புதூர் வழியாக மண்டைக்காடு கோவிலை அடைந்தது.
- பரப்பற்று ஜனார்த்தன கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 16-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
கன்னியாகுமரி:
பரப்பற்று ஜனார்த்தன கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 16-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
விழாவில் கணபதி ஹோமம், அகண்டநாம ஜெபம், அன்னதானம், தீபாரா தனை, லட்சார்ச்சனை, சுழலும் சொல்லரங்கம், பகவத்கீதை பாராயணம், சமய வகுப்பு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நான்காம் நாளான நேற்று காலை சுமங்கலி பூஜை, மாலை மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு சீர்வரிசை யுடன் யானைமீது சந்தனகுடம் பவனி நடந்தது.
பவனியானது பரப்பற்று ஜங்சன், கூட்டுமங்கலம், புதூர் வழியாக மண்டைக்காடு கோவிலை அடைந்தது. இரவு சமய மாநாடு, பரிசு வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. ஐந்தாம் நாளான இன்று காலை 9 மணிக்கு பண்பாட்டு போட்டிகள் நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு உறியடி, 5 மணிக்கு சுதர்சன ஹோமம், 6.45க்கு திருவிளக்கு பூஜை, இரவு 10.30 மணிக்கு நெய்யப்பம் சுடுதல், இரவு 12 மணிக்கு அபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.