என் மலர்
நீங்கள் தேடியது "Smoke"
- பழைய பொருட்களை எரிக்காதீர்கள்
- புகையில்லா போகியை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொ) ராதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது. தமிழக அரசின் உத்தர வின்படி இந்த ஆண்டு புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் நகராட்சியில் மூன்று மண்டலமாக பிரிக்கப்பட்டு ஒன்று முதல் எட்டு வரை ஒரு மண்டலம் 9 முதல் 16வரை ஒரு மண்டலம், 17 முதல் 21 வரை மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு துப்புரவு பணி மேற்பார்வையாளர் நியமனம் செய்யப்பட்டு வீடுகளில் சேமிக்கப்படும் தேவையில்லாத பழைய துணிகள், டயர், பயன்படுத்த இயலாத புத்தகம் மற்றும் இதர பயன்படுத்த முடியாத பழைய பொருட்களை எரிககாமல் வீடு தோறும் நகராட்சி மூலம் 7 - ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நகராட்சி வாகனங்களில் சேகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு புகையில்லா போகி உருவாக்குவதற்கு மேற்படி பழைய பொருட்களை நகராட்சி வாகனங்களில் வழங்கி நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். பொதுமக்கள் மேற்படி பழைய பொருட்களை சாலைகளில் வீசி எறிந்தாலும், டயர்களை சாலைகளில் தீ வைத்து கொளுத்தினாலோ, பொது இடங்களில் குப்பைகளை கொட்டினாலோ அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- சேலம் மாநகராட்சி 36-வது டிவிசனுக்கு உட்பட்ட பகுதியில் தாதம்பட்டி அல்லிக்குட்டை ஏரி உள்ளது.
- ஏரியில் மாநகராட்சி சார்பில் புனரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. இந்த பணிக்காக ஏரி பகுதியில் உள்ள புதர்களை அகற்றாமல் அப்படியே தீ வைத்து எரித்து வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாநகராட்சி 36-வது டிவிசனுக்கு உட்பட்ட பகுதியில் தாதம்பட்டி அல்லிக்குட்டை ஏரி உள்ளது. இந்த ஏரியில் மாநகராட்சி சார்பில் புனரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. இந்த பணிக்காக ஏரி பகுதியில் உள்ள புதர்களை அகற்றாமல் அப்படியே தீ வைத்து எரித்து வருகின்றனர்.
இதனால் இந்த பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. புகையால், அருகில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, தாதம்பட்டி அல்லிக்குட்டை ஏரியை சுற்றி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். தற்போது மாநகராட்சி சார்பில் புனரமைப்பு பணி நடக்கிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம்.
ஆனால் முறையாக புதர்களை அகற்றாமல், அப்பேடியே தீ வைத்து வருகின்றனர். இதனால் இப்பகுதி புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. மேலும் இப்பகுதி பொதுமக்கள் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டு தூக்கமுடியாமல் தவித்து வருகின்றோம்.
எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்துவோம் என்றனர்.
- தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்தனர்.
- மர்ம ஆசாமி யாரோ ரெயில் பெட்டியில் இருந்த தீயணைப்பான் கருவியை திறந்துவிட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் இருந்து வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், புதன்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு மும்பைக்கு தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரிக்கு நேற்று முன்தினம் இரவு 7.15 மணிக்கு தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. பயணிகள் இறங்கியவுடன் ரெயில் பெட்டிகளை ரெயில்வே ஊழியர்கள் பூட்டினர். அந்த ரெயில் 3-வது நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் இருந்து திடீரென புகை வந்தது.
இதனை பார்த்த ரெயில்வே ஊழியர்கள் மற்றும் ரெயில்வே போலீசார் ரெயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாக கருதி அங்கு விரைந்து சென்றனர்.
இதனை பார்த்த பயணிகளும் பதட்டம் அடைந்து அலறி அடித்து ஓடினர். உடனே தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்தனர்.
ரெயில் பெட்டி அருகில் சென்று பார்த்த போது, தீ விபத்து ஏற்பட்டால் அதனை அணைப்பதற்கு ரெயில் பெட்டிகளில் பொருத்தப்பட்டு இருக்கும் தீயணைப்பான் கருவியில் இருந்து புகை வெளியேறியது தெரியவந்தது. இதனால் ரெயில்வே ஊழியர்கள் நிம்மதியடைந்தனர்.
மர்ம ஆசாமி யாரோ ரெயில் பெட்டியில் இருந்த தீயணைப்பான் கருவியை திறந்துவிட்டுள்ளனர். இதனால் தான் அதிலிருந்து புகை வந்துள்ளது என்பது தெரியவந்தது. தீயணைப்பான் கருவியை திறந்து விட்ட ஆசாமி யார்? என ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் பெட்டியில் இருந்து திடீரென்று புகை வந்த சம்பவத்தால் புதுவை ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- ரெயில் என்ஜின் டிரைவருக்கு பயணிகள் தகவல் தெரிவித்தனர்.
- 15 நிமிடம் கால தாமதமாக டபுள் டக்கர் ரெயில் பெங்களூரை நோக்கி புறப்பட்டு சென்றது.
ஜோலார்பேட்டை:
சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் டபுள் டக்கர் ரெயில் இன்று காலை புறப்பட்டு வந்தது. வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம்-குடியாத்தம் இடையே வேகமாக சென்று கொண்டிருந்தது.
அப்போது ரெயிலில் சி 6 ஏ.சி. பெட்டியின் சக்கரத்தில் இருந்து திடீரென புகை வந்தது. இது சி7 பெட்டிக்கு பரவியது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர்.
ரெயில் என்ஜின் டிரைவருக்கு பயணிகள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார்.
இதுகுறித்து குடியாத்தம் ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது பிரேக் பழுதானதால் சக்கரத்தில் இருந்து புகை வந்தது தெரிந்தது.
பின்னர் ஊழியர்கள் அதனை சரி செய்தனர். இதனால் 15 நிமிடம் கால தாமதமாக டபுள் டக்கர் ரெயில் பெங்களூரை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
- விமானம் கண்ணூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
- புகை வந்ததற்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று அந்த விமானம் வழக்கம்போல் துயாய்க்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் பயணிகள், பணியாளர்கள் என்று 176 பேர் பயணித்தனர்.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, சரக்கு பெட்டி இருந்த பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனை கவனித்த பணியாளர்கள் உடனடியாக விமானிக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விமானத்தை தரையிறக்க கோழிக்கோடு விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை விமானி தொடர்பு கொண்டார்.
ஆனால் கோழிக்கோடு விமான நிலையத்தில் சில ஓடுபாதைகளில் பணிகள் நடைபெற்று வருவதால், துபாய் விமானத்தை அங்கு உடனடியாக தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் கண்ணூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
பின்பு அதிலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்பு விமானத்தில் வந்த புகை கட்டுப்படுத்தப்பட்டது. புகை வந்தது உடனடியாக கவனிக்கப்பட்டு, விமானம் தரையிறக்கப்பட்டதால் பெரிய அளவில் விபத்து நடக்காமல் தவிர்க்கப்பட்டது.
மேலும் விமானத்தில் இருந்த பயணிகளும் அதிர்ஷ்டவசமாக தப்பினர். விமானத்தில் புகை வந்ததற்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று காலை திடீரென குடோனில் இருந்து புகை கிளம்பி கொண்டிருந்தது.
- 100-க்கும் மேற்பட்ட சாக்குகள், படுதாக்கள் எரிந்து நாசமாகின.
தஞ்சாவூர்:
தஞ்சை நாஞ்சிக்கோட்டை புறவழி சாலையில் அரசு நெல் குடோன் செயல்பட்டு வருகிறது.
இங்கு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் வாங்கி அடுக்கி வைக்கப்படுவது வழக்கம்.
தற்போது ஏராள மான நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை திடீரென குடோனில் இருந்து புகை கிளம்பி கொண்டிருந்தது.
இதைப் பார்த்த பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்து சென்று பார்த்தபோது தீ மளமளவன பற்றி எரிந்து கொண்டிருந்தது. சாக்குகள், படுதாக்கள் பற்றி எரிந்து கொண்டிருந்தன.
இது குறித்து தஞ்சை தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் மனோ பிரசன்னா உத்திரவு படி நிலைய சிறப்பு அலுவலர் பொய்யாமொழி மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் 100-க்கும் மேற்பட்ட சாக்குகள் ,படுதாக்கள் எரிந்து சேதம் ஆகின. நெல்களில் பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்காக கெமிக்கல்வைக்க ப்பட்டிருக்கும்.
அதில் தண்ணீர் பட்டு தீவிபத்து நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும் தீ விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.