என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "social networking"

    • காரைக்காலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ராஜேந்திரனை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
    • உறவினர்கள் கேள்வி எழுப்பி தனியார் ஆஸ்பத்திரி முன்பு கோஷம் போட்டனர்.

    புதுச்சேரி:

    மயிலாடுதுறை மாவட்டம் வளத்தா ன்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்.(வயது65) இவருக்கு புற்றுநோய் கட்டி இருந்ததால் மயிலாடுதுறை பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறியதை தொடர்ந்து அவருக்கு மயிலாடுதுறை தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இந்த நிலையில், திடீரென அவருக்கு நாடி துடிப்பு இருக்கிறது என்று கூறி, உறவினர்களின் ஒப்புதல் இல்லாமல் அவசரகதியில் மேல் சிகிச்சைக்காக காரை க்காலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ராஜேந்திரனை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    இதனை அடுத்து காரைக்கால் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்ட ராஜேந்திரன் குறித்து, 2 நாட்களாக காரைக்கால் தனியார் ஆஸ்பத்திரி எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. ரமணா சினிமா பாணியில் இறந்து விட்ட தாக கூறியவருக்கு மீண்டும் சிகிச்சை அளிப்பது எந்த வகையில் நியாயம் என்றும் உறவினர்கள் கேள்வி எழுப்பி தனியார் ஆஸ்பத்திரி முன்பு கோஷம் போட்டனர். இதனால் இப்பிரச்சினை சமூக வலைதளங்களில் வைரலாகியது.இதனை அடுத்து, தனியார் ஆஸ்பத்திரி ராஜேந்திரனை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறி முற்றுப்புள்ளி வைத்தனர். தனியார் ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்ட ராஜேந்திரன் இதுவரை உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது தெரியாமல் உறவினர்கள் திக்கு முக்காடி வருகின்றனர். இச்சம்பவம் காரைக்கா லில் உள்ள சமூக வலைதள ங்களில்வைரலாகி வருவதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • இன்ஸ்டாகிராம் காதலன் சிறுமியை மீண்டும் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டதாக தெரிகிறது.
    • எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    ராமாபுரம், பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் உறவுக்காரரான பாண்டியன் என்பவருக்கும் (சிறுமியின் தாயின் தம்பி) கடந்த மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில் சிறுமிக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து குழந்தைகள் உதவி மையத்தை தொடர்பு கொண்ட சிறுமி தன்னை கட்டாயபடுத்தி உறவுக்காரருடன் திருமணம் செய்து வைத்து விட்டதாக புகார் தெரிவித்தார்.

    இதுகுறித்து குழந்தைகள் நல உதவி மைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக சிறுமியின் தாய் மற்றும் அவரது தம்பியான பாண்டியன் மீது வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மீது 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக போலீசார் விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. இதில் சிறுமி ஏற்கனவே சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலனை தேடி சத்தியமங்கலத்துக்கு சென்ற சிறுமியை அவரது தாய் மீட்டு வந்துள்ளார் இதற்கிடையில் சிறுமி தனது தாயின் சகோதரரான பாண்டி யனை காதலிப்பதாகவும், அவருடன் திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் வேறு வழியின்றி மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

    இந்நிலையில் இன்ஸ்டாகிராம் காதலன் சிறுமியை மீண்டும் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டதாக தெரிகிறது. இதனை அறிந்த சிறுமியின் கணவர் அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர்களுக்கு இடையே தகாராறு ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அந்த சிறுமி குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை தொடர்பு கொண்டு தனது திருமணம் குறித்து புகார் அளித்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக அவரது தாய் மற்றும் திருமணம் செய்த பாண்டியன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த விவகாரத்தில் எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து போலீசார் மேலும் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • இன்ஸ்டாகிராம் காதலன் சிறுமியை மீண்டும் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டதாக தெரிகிறது.
    • எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பதி:

    திருப்பதி மலை பாதையில் செல்லும் பக்தர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் இரும்பு வேலி அமைக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ஷெட்டி ஆந்திர ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோருடன் நடந்து சென்ற 3 வயது சிறுவனை சிறுத்தை ஒன்று கவ்வி சென்றது.

    இதேபோல் லக்ஷிதா என்ற 6 வயது சிறுமியை இழுத்துச் சென்று கடித்து கொன்றது. தற்போது மலை பாதை அருகே சிறுத்தை, கரடி நடமாட்டம் உள்ளது.

    இதனால் பக்தர்கள் அச்சத்துடன் நடை பாதையில் நடந்து செல்கின்றனர். எனவே நடைபாதை முழுவதும் இரும்பு வேலி அமைக்க திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை நடைபெறும் என தெரிவித்தனர்.

    • பெண்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.
    • வாட்ஸ்-அப், டி.பி.க்கள், முக நூலிலும் புகைப்படங்களை தவிர்க்கலாம்.

    சென்னை:

    சென்னை போலீசில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக 'அவள்' என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பெண்களுக்கான சட்ட உரிமைகள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அவள் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பெண்களுக்கான சைபர்கிரைம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கு சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சைபர் கிரைம் துணை கமிஷனர் கீதாஞ்சலி கலந்து கொண்டு பேசினார். 1,500 மாணவிகள் மத்தியில் சைபர் கிரைம் தொடர்பாக அவர் விளக்கி கூறியதாவது:-

    இன்றைய கால கட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூக ஊடகங்கள் மூலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஏஐ தொழில்நுட்பம் மூலமாக போலியான ஆபாச வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு பரப்பப்படுகிறது. எனவே பெண்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும். தேவையில்லாத பட்சத்தில் தங்களது புகைப் படங்களையோ, வீடியோக்களையோ பகிராமல் இருப்பதே நல்லது. வாட்ஸ்-அப், டி.பி.க்கள், முக நூலிலும் புகைப்படங்களை தவிர்க்கலாம்.

    ஒருவேளை சமூக ஊடகம் மூலமாக யாராவது தேவையில்லாத செய்தி களை அனுப்பினால் உடனே மனம் உடைந்து போகாமல் போலீசாரை அணுக வேண்டும். மனதில் தவறான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் தைரியமாக போலீசை அணுக வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அவள் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு இதுவரை 1,500 பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    • டாக்டர் ரவளி சிறுவனின் மார்பில் கையை வைத்து அழுத்தினார்.
    • முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சிறுவன் உடலில் அசைவு ஏற்பட்டது.

    திருப்பதி, மே.18-

    ஆந்திர மாநிலம் விஜயவாடா அய்யப்ப நகரை சேர்ந்தவர் சாய் (வயது 6) கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கி சிறுவன் மயங்கி விழுந்தான்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனை தோளில் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடிக்கொண்டிருந்தனர்.

    அந்த நேரத்தில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மகப்பேறு பெண் டாக்டர் நன்னப்பனேனி ரவளி என்பவர் வந்தார்.

    அவர் பெற்றோர் குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டு பதறியடித்து ஓடுவதை கண்டு திடுக்கிட்டு என்ன நடந்தது என்று கேட்டார். பெற்றோர் நடந்த விஷயத்தை கூறினர்.

    உடனடியாக டாக்டர் சிறுவனை பரிசோதித்தார். அப்போது இதயத் துடிப்பு நின்றிருந்தது.

     சாலையிலேயே படுக்க வைத்து அதன் பிறகு சி.பி.ஆர். என அழைக்கப்படும் முதலுதவி செய்ய ஆரம்பித்தார். ஒருபுறம் டாக்டர் ரவளி சிறுவனின் மார்பில் கையை வைத்து அழுத்தினார். அங்கிருந்து மற்றொரு நபரிடம் வாயில் காற்று வீசுமாறு கூறினார்.

    அவ்வாறு 7 நிமிடங்களுக்கு மேல் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சிறுவன் உடலில் அசைவு ஏற்பட்டது. உடனடியாக சிறுவனை பைக்கில் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு சென்றதும் சிகிச்சைக்கு பின் சிறுவன் பூரண குணமடைந்தான்.

    சாலையில் வைத்து சிறுவனுக்கு டாக்டர் சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

    இது குறித்து டாக்டர் ரவளி கூறுகையில்:-

    நான் மூத்த டாக்டர் ஒருவரை வீட்டில் இறக்கிவிட்டு மருத்துவமனைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தேன்.

    அப்போது சிறுவனை அவருடைய தந்தை கண்ணீர் விட்டு அழுதபடி தூக்கி சென்ற காட்சியை பார்த்தேன். உடனே வாகனத்தை நிறுத்திவிட்டு அவரிடம் நடந்ததை கேட்டறிந்தேன்.

    சிறுவனை பரிசோதித்ததில் அவருக்கு சிபிஆர் முதலுதவி அவசியம் என்பதை உணர்ந்து முயற்சி செய்தேன். நல்ல பலன் கிடைத்தது.

    சிறுவனின் உயிரை காப்பாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சிபிஆர் முதலுதவி செய்வதை அனைவரும் கற்றுக் கொண்டால் பல விலை மதிப்பு மிக்க உயிர்களை காப்பாற்றி விடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • காணொளிகளை ரிலீஸ் செய்வது இன்று பேஷனாகிவிட்டது.
    • லைக்ஸ் வாங்குவதற்காக எல்லை மீறும் ஒழுங்கீனங்களும் வெளியாகி வருகின்றன.

    திருச்சி:

    சமூக வலை தளங்களில் 'ரீல்ஸ்' மூலம் காணொளி களை ரிலீஸ் செய்வது இன்று பேஷனாகிவிட்டது. இன்ஸ்டாகிராமைத் தொடர்ந்து பேஸ்புக்கிலும் ரீல்சுக்கான பார்வைகளும் பதிவிடும் காணொளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

    இந்தச் சூழலில் ரீல்சுக்காகவும் லைக்ஸ் வாங்குவதற்காகவும் எல்லை மீறும் ஒழுங்கீனங்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

    திருச்சியில் 3 இளம் பெண்கள் கவர்ச்சி ஆடையில் நடமாடி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். சிக்கென ஜீன்ஸ், கவர்ச்சி பொங்கும் கருப்பு பனியன் அணிந்து அவர்கள் நடனம் ஆடும் ரீல்ஸ் வீடியோ பலரையும் ரசிக்க வைத்துள்ளது.

    மே மாதம் 98-ல் மேஜர் ஆனேனே என்ற பாடல் பின்னணியில் இளம்பெண்களின் அமர்க்களமான நடனம் தற்போது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

    தாளம் தப்பாமல் 3 இளம் பெண்கள் ஆடும் வீடியோவை இளைஞர்கள் ரசித்து வந்தாலும், இதனை கண்ட திருச்சி ரெயில்வே போலீசாருக்கு சுருக் என்றது. காரணம் அவர்கள் நடனமாடி வீடியோ எடுத்தது திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில்.

    மத்திய அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள், பொது இடங்களில் தனிப்பட்ட முறையில் புகைப்படம் வீடியோ எடுக்க வேண்டும் என்றால் அதற்குரிய முன் அனுமதி பெற்று, கட்டணம் செலுத்தி படம் பிடிக்க வேண்டும் என்பது விதிமுறை.

    குறிப்பாக பேருந்து, ரெயில் மற்றும் விமான நிலையம் போன்ற பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக நடனம் மற்றும் நாடகம் போன்றவை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை அனுமதி பெற்று நடத்தப்படுவது வழக்கம்.

    ஆனால் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள ரெயில் நிலையத்தில் யார் அனுமதி பெற்று 3 இளம் பெண்கள் கவர்ச்சி ஆடையில் நடனம் ஆடினார்கள்? என்பது பற்றி கேள்வி எழுந்துள்ளது.

    எந்தவித முன் அனுமதியும் இல்லாமல் நடனம் ஆடி ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர் இந்த இளம் பெண்கள் யார்? அனுமதி இன்றி வீடியோ எடுக்கும் வரை இதனை பார்த்த ரெயில்வே அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர் என்பது குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மசாய் மாறா தேசிய சரணாலயத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
    • 3 சிங்கங்கள் நடந்து வரும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.

    சமூக வலைதளங்களில் வன விலங்குகள் தொடர்பாக ஏராளமான வீடியோக்கள் வெளிவந்தாலும் அவற்றில் சில வீடியோக்கள் மட்டுமே பயனர்களை ரசிக்க செய்யும். அந்த வகையில் யூ-டியூபில் 'லேட்டஸ்ட் சைட்டிங்ஸ்' என்ற பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், சிங்கங்கள் நீச்சல் அடித்து ஆற்றை கடந்த காட்சிகள் பயனர்களை கவர்ந்துள்ளது.

    அந்த வீடியோ கென்யாவில் உள்ள மசாய் மாறா தேசிய சரணாலயத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு வன பகுதிக்குள் ஒரு ஆறு கடந்து செல்கிறது. வனப்பகுதியில் 3 சிங்கங்கள் நடந்து வரும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.

    அப்போது ஆற்றின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு செல்வதற்காக சிங்கங்கள் வரிசையாக வருகின்றன. பின்னர் ஆற்றில் குதித்து சிங்கங்கள் நீச்சல் அடித்தவாறு மற்றொரு கரையை கடந்து செல்லும் காட்சிகள் வீடியோவில் உள்ளன.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பயனர்களின் பார்வைகளை குவித்து வருகிறது.

    • மைக்கேல் என்பவருக்கு சமீபத்தில் முக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
    • இணையத்தில் வைரலான நிலையில் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    துருக்கியை சேர்ந்த மைக்கேல் என்பவருக்கு சமீபத்தில் முக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரை இளமையாக காட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையை தொடர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டது.

    அதில், சிகிச்சைக்கு முன்பு அவரது தோற்றம் மற்றும் சிகிச்சைக்கு பின்னர் அவரது தோற்றம் குறித்த படங்கள் உள்ளன.

    புகைப்படங்களுடன் அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த நிபுணர்கள் வெளியிட்ட பதிவில், மைக்கேலுக்கு பேஸ் லிப்ட், நெக் லிப்ட், கீழ் கண் இமை உள்ளிட்ட இடங்களில் முடி மாற்று செயல்முறைகளை நாங்கள் செய்தோம். அவர் நம்பமுடியாத மாற்றத்தை பெற்றார். அதை நீங்கள் புகைப்படங்களில் காணலாம். நாங்கள் எப்போதும் முழுமையானதாக எடுத்துக்கொள்கிறோம் என பதிவிட்டுள்ளனர்.

    இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த மாற்றத்தை நம்ப முடியவில்லை என ஒரு பயனரும், துருக்கியில் அற்புதங்களை செய்கிறார்கள் என மற்றொரு பயனரும் பதிவிட்டுள்ளனர். இதேபோல பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட இந்த பதிவு விவாதமாக மாறி உள்ளது.

    • சோபிதா துலி பாலாவுடன் அடிக்கடி டேட்டிங் செல்வதாக தகவல்கள் பரவின.
    • புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. இவர் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார்.

    நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

    இதைத்தொடர்ந்து சமந்தா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

    நாக சைதன்யாவும் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். புதிய படம் ஒன்றில் மீனவர் கதாபாத்திரத்தில் நடித்துவரும் நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதா துலி பாலாவுடன் அடிக்கடி டேட்டிங் செல்வதாக தகவல்கள் பரவின.

    இந்த தகவலை இருவரும் ஏற்கவோ மறுக்கவோ இதுவரை இல்லை. இந்நிலையில் இருவரும் ஐரோப்பாவில் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளனர். அங்கு நாக சைதன்யாவும் சோபிதா துலி பாலாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உங்களது வாழ்க்கைப் பணி எங்களுக்குத் தொடர்ந்து ஊக்க மளிப்பதாக அமைந்து வருகின்றது.
    • ஒரு நியாயமான, சமநிலை சமுதாயத்தை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றியுள்ளன.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ஒடுக்கப்பட்டவர்களை முன்னேற்றுவதற்காகத் தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள், செயல்படுத்திய புரட்சிகரத் திட்டங்கள் மற்றும் உறுதிகுலையாமல் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்தது ஆகியவை ஒரு நியாயமான, சமநிலைச் சமுதாயத்தை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றியுள்ளன.

    உங்களது வாழ்க்கைப் பணி எங்களுக்குத் தொடர்ந்து ஊக்க மளிப்பதாக அமைந்து வருகின்றது.

    இவ்வாறு அதில் கூறியுளளார்.

    • புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
    • எனது வேடிக்கையான குறும்பு விளையாட்டு என்று பகிர்ந்துள்ளார்.

    ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

    இதையடுத்து தெலுங்கு, மலையாள மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருக்கிறார். அவரது தோற்றம் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்றது.

    சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்டவரான மாளவிகா மோகனன் அடிக்கடி தனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

    வெளிநாடுகளில் சுற்றுலா சென்ற படங்கள் மற்றும் சிலம்ப பயிற்சி எடுத்துக் கொண்ட படங்கள் உள்பட பல வீடியோக்களை வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன் தாய்லாந்தில் சைக்கிள் ரிக்சா முன்பு நின்று எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். புகைப்படத்துடன் எனது வேடிக்கையான குறும்பு விளையாட்டு என்று புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சுடிதார் உடையில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுவது.
    • பல ஆயிரம் பேர் பாராட்டி விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    சுவிட்சர்லாந்து ஓட்டலில் இந்தியர்களை கவர்வதற்காக சுடிதார் உடையில் சேவை செய்யும் பெண்களின் வீடியோ வலைத்தளவாசிகளை கவர்ந்துள்ளது. ஜெர்மனியில் வசிக்கும் இந்திய தம்பதியான சினேகா-வீரு ஆகியோர் சுவிட்சர்லாந்து பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    அப்போது ஒரு இந்திய உணவகத்திற்கு சென்றபோது அங்கு பணியாற்றும் பெண்கள் அனைவரும் சிவப்பு நிற சுடிதார் உடையில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுவது அவர்களை வெகுவாக கவர்ந்தது. அதை வீடியோவாக பதிவு செய்து வலைத்தளத்தில் வெளியிட்டனர்.

    "வெளிநாட்டில் இந்திய உணவகங்களில் நுழைவது ஒரு கலாசார நேரமாக இருக்கும். சில ஓட்டல்களில் பணக்கார மரபுகள் மற்றும் பகட்டு அலங்காரங்கள் இந்தியாவை விட்டு வெளியேறியதாக தோன்ற வைக்கும்.

    ஆனால் சுவிட்சர்லாந்து இந்திய உணவகத்தில் பணிப்பெண்கள் இந்தியர்களாக (சுடிதார்உடையில்) இருந்தபோது...." என்று பதிவிட்டு உள்ளனர்... அந்த பதிவு லட்சக்கணக்கானவர்களின் பார்வையைப் பெற்றது. பல ஆயிரம் பேர் பாராட்டி விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    ×