என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "speaker"

    • கவர்னருக்கும் கோட்சேவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
    • சபாநாயகருக்கு கட்சி சார்ந்து பேச உரிமையில்லை.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை, பழைய வைத்தியநாதன் சாலையில் பா.ஜனதா கட்சியின் வடசென்னை பாராளுமன்ற தேர்தல் அலுவலகத்தை மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையை பொறுத்தவரை பாதயாத்திரையை வேறுவிதமாக நடத்த இருக் கிறோம். செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை வைத்து அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது. சட்டசபையில் தமிழ்தாய் வாழ்த்தை முழுமையாக வாசிக்க வேண்டும்.

    கருணாநிதியால் வெட்டப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கக் கூடாது. ஜி.எஸ்.டி.கொண்டு வரப்பட்டதற்கு பின்பு தான் தமிழகத்தின் வரி வளர்ச்சி அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சபாநாயகர் அப்பாவு தி.மு.க. உறுப்பினர் போல் நடந்து கொண்டார். நாதி ராம் கோட்சேவுக்கும் அப்பாவுக்கும் தொடர்பு இருக்கலாம். கவர்னருக்கும் கோட்சேவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சபாநாயகருக்கு கட்சி சார்ந்து பேச உரிமையில்லை.


    ஆளுநருக்காக எழுதி கொடுத்த உரையில் 10 பொய்களை சுட்டிக்காட்டி உள்ளோம். சபாநாயகர் அப்பாவு தி.மு.க.வை விட மோசமாக உள்ளார்.

    சென்னை வெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கவில்லை என்று கூறி தி.மு.க.வை கவர்னர் பாராட்ட வேண்டும் என்றால் எப்படி பாராட்டுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில துணைத் தலைவரும் வடசென்னை பொறுப்பாளருமான பால்கனகராஜ், பாராளுமன்ற இணை அமைப்பாளர் பிரசாத், பாராளுமன்ற பொறுப்பாளர் பெப்சி சிவா, மாவட்டத் தலைவர் கிருஷ்ணகுமார், கபிலன், ஊடகப்பிரிவு மாநில செயலாளர் மற்றும் பாராளுமன்ற பிரிவு பொறுப்பாளர் சி.பி.நவீன், ஆர்.கே.நகர் சட்டமன்ற அமைப்பாளர் எஸ்.ஆர்.செந்தில், பாஸ்கோ மாணிக்கம், சிவகுமார், திருவொற்றியூர் சட்டமன்ற அமைப்பாளர் ஜெய் கணேஷ், திருமுருகன், ராயபுரம் சட்டமன்ற அமைப்பாளர் வன்னிய ராஜன், இணை அமைப்பாளர் விஜயகுமார், பொருளாளர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காங்கிரசில் இருந்து விலகிய விஜயதாரணியின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
    • விளவங்கோடு சட்டசபை தொகுதி காலியாக இருப்பது குறித்து முறைப்படி அறிவிக்கப்படும்.

    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த நிலையில் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

    ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவுக்கு அவர் அனுப்பி வைத்ததுடன், இ-மெயில் மூலமும் கடிதத்தை அனுப்பி வைத்தார். அதுமட்டுமின்றி தனது எக்ஸ் வலைதள பக்கத்திலும், பேஸ்புக் பக்கத்திலும் ராஜினாமா கடிதத்தை வெளியிட்டு உள்ளார்.

    இதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சபாநாயகர் அப்பாவுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வான விஜயதாரணி எங்கள் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து உள்ளதால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவரது எம்.எல்.ஏ. பதவியை உடனடியாக பறித்து தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

    இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:

    காங்கிரசில் இருந்து விலகிய விஜயதாரணியின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ராஜினாமா கடிதம் முறைப்படி இருந்ததால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

    இணைய வழியில் கடிதம் அனுப்பியதோடு தொலைபேசியிலும் விஜயதாரணி என்னிடம் பேசினார்.

    விளவங்கோடு சட்டசபை தொகுதி காலியாக இருப்பது குறித்து முறைப்படி அறிவிக்கப்படும் என்று கூறினார்.

    • சந்திரபாபு நாயுடு நாளை மறுநாள் முதல் மந்திரியாக பதவி ஏற்று கொள்கிறார்.
    • புரந்தேஸ்வரி ராஜமுந்திரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    திருப்பதி:

    தேசிய ஜனநாயக கூட்டணி பிரதமராக நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள் நேற்று பதவி ஏற்றனர்.

    சந்திரபாபு நாயுடு தனது கட்சிக்கு 5 மந்திரி பதவியும், 1 சபாநாயகர் பதவியும் வழங்க வேண்டும் என பா.ஜ.க.விடம் வலியுறுத்தி வந்தார்.

    ஆனால் தெலுங்கு தேசம் கட்சிக்கு 2 மந்திரி பதவிகளை பா.ஜ.க. வழங்கியது. சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியதின்படி. அவரது மனைவியின் சகோதரியும் பா.ஜ.க. மாநில தலைவரான புரந்தேஸ்வரிக்கு சபாநாயகர் பதவி வழங்க பா.ஜ.க. மேலிடம் முடிவு செய்துள்ளது.

    சந்திரபாபு நாயுடு நாளை மறுநாள் முதல் மந்திரியாக பதவி ஏற்று கொள்கிறார். அவரது பதவி ஏற்பு விழாவிற்கு பிறகு புரந்தேஸ்வரி இன்னும் சில நாட்களில் சபாநாயகராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.

    புரந்தேஸ்வரியை சபாநாயகராக தேர்ந்தெடுத்தால் ஆந்திரா மாநிலம் மேலும் வளர்ச்சி பெறும் என கூறப்படுகிறது.

    ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தேஸ்வரி தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான நடிகர் என்.டி.ராமராவின் மகள். என்டி ராமராவ் மகளும், புரந்தேஸ்வரியின் சகோதரிமான புவனேஸ்வரியை சந்திரபாபு திருமணம் செய்து கொண்டார்.

    என.டி.ராமராவின் மறைவுக்கு பிறகு சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி தலைவரானார். ஆந்திர அரசியலில் கால் பதிக்க நினைத்த புரந்தேஸ்வரி தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து மந்திரி, எம்.பி பதவிகளை வகித்தார். 2004-ம் ஆண்டு பாபட்லா எம்.பி.யாகவும், 2009-ம் ஆண்டு விசாகப்பட்டினம் எம்.பி.யாகவும் பணியாற்றினார்.

    பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி எந்த கட்சியிலும் சேராமல் இருந்தார்.

    இந்த நிலையில் ஆந்திராவில் பா.ஜ.க. கால் பதிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருந்தபோது கட்சி மேலிடம் புரந்தேஸ்வரியை மாநில தலைவராக அறிவித்தது.

    புரந்தேஸ்வரி மாநில தலைவராக பதவி ஏற்ற பிறகு கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இவரது நடவடிக்கையால் ஆந்திராவில் பா.ஜ.க. அபார வளர்ச்சி அடைந்தது.

    நடந்து முடிந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க, தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. புரந்தேஸ்வரி ராஜமுந்திரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    பா.ஜ.க. 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு 8 சட்டமன்ற தொகுதிகளையும், 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றது.

    • பாராளுமன்றம் வருகிற 24-ந்தேதி கூடுகிறது.
    • தற்காலிக தலைவராக (சபாநாயகர்) தேர்வு செய்யப்பட உள்ளார்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமை யில் பாஜ.க. கூட்டணி அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில் பாராளுமன்றம் வருகிற 24-ந்தேதி கூடுகிறது.

    இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    24 மற்றும் 25-ந்தேதிகளில் 2 நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பார்கள். பாராளுமன்ற மரபுபடி சபையின் மூத்த உறுப்பினரை தற்காலிக தலைவராக தேர்வு செய்வார்கள். அந்த வகையில் தற்போது கேரள மாநில மேவலிக்கரா தொகுதியில் இருந்து தேர்வாகி இருக்கும் காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் தற்காலிக தலைவராக (சபாநாயகர்) தேர்வு செய்யப்பட உள்ளார்.

    அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைப்பார். அதன் பிறகு சுரேஷ் எம்.பி. தற்காலிக சபாநாயகராக இருந்து புதிய எம்.பி.க்கள் அனைவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

    எம்.பி.க்கள் அனைவரும் பதவி ஏற்று முடித்ததும் பாராளுமன்றத்துக்கு புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார். சபாநாயகர் பதவியை தெலுங்கு தேசம் கட்சி கேட்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் சபாநாயகர் பதவி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அதை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க பா.ஜ.க. மூத்த தலைவர்கள் விரும்பவில்லை.

    எனவே சபாநாயகர் பதவியை பாரதீய ஜனதா தக்கவைத்துக்கொள்ளும் என்று உறுதியாகி இருக்கிறது. ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான புரந்தேஸ்வரி 6 தடவை எம்.பி.யான ராதா மோகன்சிங், முன்னாள் சபாநாயகர் ஓம்பிர்லா ஆகிய 3 பேரில் ஒருவர் சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

    ஓம்பிர்லா மீண்டும் சபாநாயகராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன. தெலுங்கு தேசம் வலியுறுத்தும் பட்சத்தில் ஆந்திராவை சேர்ந்த புரந்தேஸ்வரிக்கு வாய்ப்பு கிடைக்கலாம். யாருக்கு சபாநாயகர் ஆகும் வாய்ப்பு கிடைக்கும் என்பது 25-ந்தேதி தெரிந்து விடும்.

    அன்று பிரதமர் மோடி சபாநாயகர் பெயரை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. 26-ந்தேதி சபாநாயகர் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    இதற்கிடையே துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணிக்கு தர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதை பா.ஜ.க. ஏற்க மறுத்துள்ளது.

    துணை சபாநாயகர் பதவியை கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் அல்லது ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்க பாரதீய ஜனதா முடிவு செய்துள்ளது. இதில் ஒருமித்த கருத்தை உருவாக்க மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை பா.ஜ.க. மேலிடம் நியமனம் செய்துள்ளது.

    ராஜ்நாத்சிங் கூட்டணி கட்சிகளுடன் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். ஓரிரு நாட்களில் இதில் ஒருமித்த கருத்து ஏற்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • சபாநாயகருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • மறைந்த எம்.பி.க்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு சமீபத்தில் 7 கட்டங்களாக நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாரதீய ஜனதா கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.

    காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணிக்கு 234 இடங்கள் கிடைத்தன. பாராளுமன்றத்தில் 240 எம்.பி.க்களுடன் பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாரதீய ஜனதா இந்த தடவை ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் கிடைக்காததால் 16 எம்.பி.க்கள் வைத்துள்ள தெலுங்கு தேசம், 12 எம்.பி.க்கள் வைத்துள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்து இருக்கிறது. நரேந்திர மோடி கடந்த 9-ந்தேதி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.

    அவருடன் மத்திய மந்திரிகளும் பதவி ஏற்றனர். இந்தநிலையில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கவும், சபாநாயகர், துணை சபா நாயகரை தேர்வு செய்யவும் பாராளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு கூடியது. இன்றும், நாளையும் முதல் 2 நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்க உள்ளனர்.

    முன்னதாக இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் தற்காலிக சபாநாயகருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பாராளுமன்ற தற்காலிக சபாநாயகராக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 7 தடவை தொடர்ந்து வெற்றிபெற்ற எம்.பி.யான பா.ஜனதா எம்.பி. பர்த்ரு ஹரி மகதாப் பதவி ஏற்றுக்கொண்டார்.

    அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். இந்த எளிய விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அதன்பிறகு தற்காலிக சபாநாயகர் ஜனாதிபதி மாளிகையில் இருந்து புறப்பட்டு பாராளுமன்ற கட்டிடத்துக்கு வந்தார்.

    இதையடுத்து புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா தொடங்கியது. பர்த்ருஹரி மகதாப் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து இன்றைய கூட்டத்தை தொடங்கினார். முதலில் மறைந்த எம்.பி.க்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதையடுத்து பாராளுமன்ற ஆளும் கட்சி தலைவர் என்ற முறையில் எம்.பி.யாக பதவி ஏற்க பிரதமர் மோடிக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று முதல் நபராக பிரதமர் மோடி எம்.பி.யாக பதவி ஏற்றார்.

    இதைத் தொடர்ந்து தற்காலிக சபாநாயகருக்கு உதவுவதற்கு 5 எம்.பி.க்கள் கொண்ட குழு அமைக் கப்பட்டது. அந்த குழுவில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த எம்.பி. கொடிகுன்னில் சுரேஷ், தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோ பாத்யாய, பா.ஜ.க.வை சேர்ந்த ராதாமோகன் சிங், பகன்சிங் குலஸ்தே ஆகிய 5 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

    பாராளுமன்றத்தில் உள்ள 543 எம்.பி.க்களுக்கும் தற்காலிக சபாநாயகரால் மட்டுமே பதவி பிரமாணம் செய்து வைக்க இயலாது என்பதால் அவருக்கு உதவ இந்த 5 எம்.பி.க்கள் குழு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த 3 எம்.பி.க்கள் அந்த குழுவில் இடம் பெற மறுத்துவிட்டனர்.

    இதையடுத்து தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப்பும், பா.ஜ.க. எம்.பி.க்கள் இருவரும் புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியை மேற்கொண்டுள்ளனர். பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய மந்திரிகள் புதிய எம்.பி.க்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து ஆங்கில எழுத்து வரிசை அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு புதிய எம்.பி.க்களாக பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர். இன்று மாலை வரை புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற உள்ளது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) புதிய எம்.பி.க்கள் பதவிஏற்பு தொடர்ந்து நடைபெறும். நாளையுடன் அனைத்து எம்.பி.க்களும் பதவி ஏற்று விடுவார்கள். அதற்கேற்ப மாநிலம் வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    • நாங்கள் துணை சபாநாயகர் பதவி பற்றி கேட்டோம். அப்போது எங்களுக்கு எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை.
    • இந்தத் தேர்தலின் முழுப்பொறுப்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமையால்தான் என்றார்.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாக தேர்வானவர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர். கடந்த 24-ந்தேதி தொடங்கிய முதல் நாள் பாராளுமன்ற கூட்டத்தில் 262 பேரும், நேற்று 271 பேரும் எம்.பி.க்களாக பதிவியேற்றுக்கொண்டுள்ளனர்.

    புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்காக ஒடிசாவை சேர்ந்த மகதாப்பை தற்காலிக சபாநாயகராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து அவரது முன்னிலையில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்.

    இதையடுத்து, பாராளுமன்ற சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 11 மணிக்கு நடைபெற இருக்கிறது. பாராளுமன்ற வரலாற்றில் மூன்றாவது முறையாக நடைபெற இருக்கும் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்கட்சிகள் சார்பில் மவெலிக்கரா எம்.பி. கே. சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இந்த நிலையில், சபாநாயகர் தேர்தலில் எதற்காக போட்டியிடுகிறோம் என்பது குறித்து எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுரேஷ் கூறியதாவது:-

    நாங்கள் சபாநாயகருக்கு எதிராக தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. ஆனால் மோடி தலைமையிலான அரசாங்கம், இந்திய கூட்டணியை குறிப்பாக காங்கிரஸ் கட்சித் தலைமையை அணுகியபோது, நாங்கள் துணை சபாநாயகர் பதவி பற்றி கேட்டோம். அப்போது எங்களுக்கு எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை.

    முதலில் நீங்கள் சபாநாயகர் தேர்தலை ஆதரவு அளிங்கள், அதன் பிறகு துணை சபாநாயகரை பற்றி பேசலாம் என்றனர்.

    அந்த பதில் எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. எனவே, சபாநாயகர் தேர்தலில் போட்டியிட எங்கள் தலைவர்கள் முடிவு செய்தனர்.

    இந்த தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிடிவாதமான நிலைப்பாட்டால் ஏற்பட்டது. இல்லாவிட்டால் தவிர்த்திருக்கலாம். ஆனால், அவர்கள் எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைக்க தயாராக இல்லை. துணை சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிக்கு வாய்ப்பளிக்க தயாராகவும் இல்லை.

    அதனால் தான் இன்று தேர்தல் நடக்கிறது. ஆனால், இந்தத் தேர்தலின் முழுப்பொறுப்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமையால்தான் என்றார்.

    • பிரதமர் மோடி எழுந்து சபாநாயகர் பதவிக்கு ஓம்பிர்லா பெயரை முன்மொழிந்தார்.
    • ஓம்பிர்லாவுக்கு அதிக ஆதரவு இருப்பதாக கூறி அவர் வெற்றி பெற்றதாக தற்காலிக சபாநாயகர் மகதாப் அறிவித்தார்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பொறுப்பு ஏற்ற பிறகு முதல் முதலாக கடந்த திங்கட்கிழமை பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது.

    நேற்றும், நேற்று முன்தினமும் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

    இந்த நிலையில் பாராளுமன்ற சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 26-ந்தேதி (இன்று) நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    பாராளுமன்ற சபாநாயகரை பெரும்பாலும் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்வார்கள். ஆனால் தற்போது எதிர்க் கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் பாராளுமன்ற சபாநாயகர் தேர்தலில் போட்டி ஏற்பட்டுள்ளது.

    சபாநாயகரை போட்டியின்றி தேர்வு செய்வதற்காக கடந்த 2 நாட்களாக மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தருவதாக இருந்தால் சபாநாயகரை ஆதரிக்க தயார் என்று காங்கிரஸ் நிபந்தனை விதித்தது.

    இந்த நிபந்தனையை பா.ஜ.க. ஏற்கவில்லை. இதையடுத்து எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் பாராளுமன்ற சபாநாயகர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதே சமயத்தில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம்பிர்லா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

    நேற்று மதியம் அவர்கள் இருவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதன் மூலம் பாராளுமன்றத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே முதல் பலப்பரீட்சை உருவானது.

    இதற்கிடையே இன்று காலை சபாநாயகரை ஏக மனதாக தேர்வு செய்ய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கடைசி நேர முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அதற்கும் பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று பகல் 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியதும் சபாநாயகர் தேர்தல் நடத்துவதற்கான நடைமுறைகள் தொடங்கியது.

    தற்காலிக சபாநாயகர் மகதாப் சபாநாயகர் தேர்தலை நடத்தினார். இதையடுத்து பிரதமர் மோடி எழுந்து சபாநாயகர் பதவிக்கு ஓம்பிர்லா பெயரை முன்மொழிந்தார். மத்திய மந்திரிகள் ராஜ் நாத்சிங், அமித்ஷா, நிதின்கட்கரி மற்றும் பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் சிரக்பஸ்வான் உள்பட பலர் வழிமொழிந்தனர்.

    இதையடுத்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் பெயரை காங்கிரஸ் எம்.பி. பிரேமசந்திரன் முன்மொழிந்தார். அகிலேஷ் யாதவ், கனிமொழி, சுப்ரியா சுலே உள்பட இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வழிமொழிந்தனர்.

    அதன்பிறகு 11.13 மணிக்கு சபாநாயகர் தேர்தல் நடத்தப்பட்டது. டிவிசன் வாரியாக ஓட்டெடுப்பு நடத்தப்படலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் எம்.பி.க்களுக்கு உரிய இருக்கை ஒதுக்கப்படாததால் குரல் ஓட்டெடுப்பு மூலம் ஓட்டெடுப்பை நடத்த தற்காலிக சபாநாயகர் மகதாப் முடிவு செய்தார்.

    அதன்படி ஓம்பிர்லாவை ஆதரிப்பவர்கள் குரல் கொடுக்கலாம் என்று அவர் அறிவித்தார். அடுத்த வினாடி பா.ஜ.க. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் மிக பலத்த சத்தத்துடன் ஓம்பிர்லாவை ஆமோதித்து குரல் எழுப்பினார்கள். அதன் பிறகு எதிர்ப்பவர்கள் குரல் கொடுக்கலாம் என்று தற்காலிக சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.

    அப்போது இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நோ என்று குரல் எழுப்பினார்கள். இதையடுத்து ஓம்பிர்லாவுக்கு அதிக ஆதரவு இருப்பதாக கூறி அவர் வெற்றி பெற்றதாக தற்காலிக சபாநாயகர் மகதாப் அறிவித்தார். இதன் மூலம் புதிய சபாநாயகராக ஓம்பிர்லா தேர்வானார்.

    அவருக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் இருவரும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பிரதமர் மோடியும், ராகுலும் புன்னகைத்தபடி கைகுலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டனர். அதன் பிறகு புதிய சபாநாயகர் பதவி ஏற்பு வைபவம் நடைபெற்றது.

    ஓம்பிர்லாவை பிரதமர் மோடியும், எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியும் பாரம்பரிய முறைபடி அவரது இருக்கைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அமர்ந்திருந்த தற்காலிக சபாநாயகர் மகதாப் எழுந்து நின்று வணங்கி ஓம்பிர்லாவை வரவேற்று கை குலுக்கினார்.

    பிறகு அவர் தனது இருக்கையை விட்டு விலகி நிற்க ஓம்பிர்லா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார். அவருக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் இருவரும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் தேர்வுக்கு ஒத்துழைப்பு தெரிவித்த அனைவருக்கும் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி நன்றி தெரிவித்தார்.

    • சபாநாயகர் பதவிக்கான இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட கொடிக்குன்னில் சுரேஷ் தோல்வி அடைந்தார்.
    • பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

    புதுடெல்லி:

    மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்கட்சிகள் சார்பில் மவெலிக்கரா எம்.பி. கே. சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர்.

    சபாநாயகர் பதவிக்கான இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட கொடிக்குன்னில் சுரேஷ் தோல்வி அடைந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகராக ஓம் பிர்லா தேவு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

    ஓம் பிர்லாவுக்கு பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    • காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலராம் ஜாகருக்கு அடுத்தபடியாக 2-வது முறையாக சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வாகி உள்ளார்.
    • ஓம் பிர்லா சபாநாயகராக இருந்தபோதுதான் 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

    மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

    ஓம் பிர்லாவுக்கு பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து அவர் கூறுகையில்,

    * அவையின் இருக்கையில் ஓம் பிர்லா அமர்ந்திருப்பது இந்த அவையின் அதிர்ஷ்டம்.

    * தேசத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய இந்த அவை உங்களுக்கு துணை நிற்கும்.

    * 18-வது மக்களவை பல்வேறு புதிய சாதனைகளை படைத்து வருவதை நாம் பார்க்கிறோம்.

    * காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலராம் ஜாகருக்கு அடுத்தபடியாக 2-வது முறையாக சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வாகி உள்ளார்.

    * 2-வது முறை சபாநாயகராக உங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு மிகப்பெரியது.

    * எதிர்காலத்திலும் எங்களை வழிநடத்த உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.

    * 17-வது மக்களவையில் பல்வேறு மிக மிக முக்கியமான சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டன.

    * ஓம் பிர்லா சபாநாயகராக இருந்தபோதுதான் 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

    * 3 புதிய குற்றவியல் நடைமுறை மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

    * மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.

    * 17-வது மக்களவையில் ஓம் பிர்லாவின் பங்களிப்பு அளப்பரியது.

    * அவையில் பல்வேறு புதிய முன்னெடுப்புகளை ஓம் பிர்லா மேற்கொண்டார்.

    * ஓம் பிர்லா தலைமையில் ஜி20 நாடுகளின் சபாநாயகர்கள் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

    * வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலைநோக்கு சிந்தனையை அடைய தேசம் சரியான பாதையில் செல்கிறது.

    * மக்களவை என்பது வெறும் நான்கு சுவர் அல்ல 140 கோடி மக்களின் விருப்ப மையம்.

    * கொரோனா போன்ற மிக சிக்கலான கால கட்டங்களிலும் அவையை திறம்பட நடத்தினார் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓம் பிர்லாவுக்கு பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
    • இந்திய அரசியலமைப்பை காக்கும் உங்கள் கடமையைச் செய்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

    மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

    ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து ராகுல் காந்தி கூறுகையில்,

    * எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதன் மூலம், இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்த எங்களை அனுமதிப்பதன் மூலம், இந்திய அரசியலமைப்பை காக்கும் உங்கள் கடமையைச் செய்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

    * எதிர்க்கட்சிகள் மக்களின் குரலை எதிரொலிக்கும். உங்களையும் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களையும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன் என்று கூறினார்.

    • இந்திரா காந்தியால் சர்வாதிகாரம் திணிக்கப்பட்டது. 25 ஜூன் 1975 எப்போதும் கருப்பு தினமாக அறியப்படும்.
    • எமர்ஜென்சி காலத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மக்களவையில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    புதுடெல்லி:

    மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

    சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து சபாநாயகர் உரையாற்றினார். அவர் கூறுகையில்,

    * முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தினார்.

    * இந்திரா காந்தியால் சர்வாதிகாரம் திணிக்கப்பட்டது. 25 ஜூன் 1975 எப்போதும் கருப்பு தினமாக அறியப்படும்.

    * எமர்ஜென்சியின்போது நாட்டின் அதிகாரத்தை சிதைத்ததோடு ஒட்டுமொத்த தேசமும் சிறைக்குள் அடைக்கப்பட்டது.

    * எமர்ஜென்சி காலத்தில் ஊடக சுதந்திரம் நசுக்கப்பட்டது என்று கூறினார்.

    இதையடுத்து எமர்ஜென்சி காலத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மக்களவையில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    எமர்ஜென்சியை நினைவுகூர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசிய நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.

    இதையடுத்து மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    • முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தினார்.
    • இந்திரா காந்தி, எமர்ஜென்சிக்கு எதிரான முழக்கங்களை பாஜக எம்.பி.க்கள் எழுப்பினர்.

    மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

    சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து சபாநாயகர் உரையாற்றினார். அவர் கூறுகையில்,

    * முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தினார்.

    * இந்திரா காந்தியால் சர்வாதிகாரம் திணிக்கப்பட்டது. 25 ஜூன் 1975 எப்போதும் கருப்பு தினமாக அறியப்படும்.

    * எமர்ஜென்சியின்போது நாட்டின் அதிகாரத்தை சிதைத்ததோடு ஒட்டுமொத்த தேசமும் சிறைக்குள் அடைக்கப்பட்டது.

    * எமர்ஜென்சி காலத்தில் ஊடக சுதந்திரம் நசுக்கப்பட்டது என்று கூறினார்.

    இதையடுத்து எமர்ஜென்சி காலத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மக்களவையில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    எமர்ஜென்சியை நினைவுகூர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசிய நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதையடுத்து மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இதனையடுத்து, 50 ஆண்டுகளுக்கு முன் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலையை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், பிரகலாத் ஜோஷி, கிரண் ரிஜிஜு மற்றும் லாலன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் இந்திரா காந்தி, எமர்ஜென்சிக்கு எதிரான முழக்கங்களை பாஜக எம்.பி.க்கள் எழுப்பினர்.

    ×