என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Speed Breaker"

    • பேரூராட்சி தலைவர் சம்பவ இடங்களை நேரில் வந்து பார்வையிட்டு 2 இடத்தில் வேகத்தடைஅமைக்க உத்தரவிட்டார்.
    • அதன்படி 2 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுஎண் 16-ல் தங்கநகரம் செல்லும் தார்சாலைவழியாக பள்ளிகளுக்கு செல்லக்கூடிய மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக செல்கின்றனர். இந்த ரோட்டில் பலமுறை வாகன விபத்துகள் ஏற்படுகிறது. அதிவேகமாக வரும் வாகனங்களை கட்டுப்படுத்த இந்த ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று இப் பகுதியை சேர்ந்த கவுன்சிலர் முகமதுஆபித் உடன்குடி பேரூராட்சி தலைவர் ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசியிடம் கோரிக்கை மனு கொடுத்தார். பேரூராட்சி தலைவர் சம்பவ இடங்களை நேரில் வந்து பார்வையிட்டு 2 இடத்தில் வேகத்தடைஅமைக்க உத்தரவிட்டார். அதன்படி 2 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டது.

    இதைப்போல கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் தெருவிளக்கு, குடிநீர் குழாய் சரி செய்தல் போன்றவற்றிற்கு நேரில் சென்று கோரிக்கை மனு கொடுத்தால் பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆலோசனையின்படி, பேரூராட்சி தலைவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பிரச்சினையை தீர்வு செய்கிறார். மேலும் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுபகுதியிலும், அடிக்கடி நேரில் சென்று மக்கள் பிரச்சினைகளை கேட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார் என பொதுமக்கள் கூறுகின்றனர். 

    • பாளை சமாதானபுரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி செல்லும் சாலையில் எம்.கே.பி. நகர் சந்திப்பு மற்றும் ராம் பாப்புலர் சந்திப்பு பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
    • மழைக்காலத்தில் வெள்ள நீர் நிரம்பி வீடுகளுக்குள் செல்வதை தடுக்க மணிக்கூண்டு அருகில் கூடுதலாக புதிய பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி 6-வது வார்டு கவுன்சிலரும், கல்வி குழு தலைவருமான பவுல்ராஜ் நெல்லை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரிடம் மனு அளித்தார். அந்த மனுவில், பாளை சமாதானபுரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி செல்லும் சாலையில் எம்.கே.பி. நகர் சந்திப்பு மற்றும் ராம் பாப்புலர் சந்திப்பு பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே விபத்துகளை தடுக்க அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.

    அதேபோல் மழைக்காலத்தில் வெள்ள நீர் நிரம்பி வீடுகளுக்குள் செல்வதை தடுக்க மணிக்கூண்டு அருகில் கூடுதலாக புதிய பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அப்போது 7-வது வார்டு வட்ட பிரதிநிதி சுண்ணாம்பு மணி, நிர்வாகி சுனில் குமார் உட்பட பலர் உள்ளனர்.

    • ஆபத்தான வேகத் தடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • குழிகள் விபத்தை உருவாக்கும் குழிகளாக மாறியுள்ளன.

    சென்னை:

    சென்னை மாநகர சாலைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆபத்தான சாக்கடை மூடிகள், வேகத் தடைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.

    அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த 2 மாதங்களாக தன்னார்வலர்கள் 100 பேர் சாலைகளில் மேற் கொண்ட ஆய்வில் 201 இடங்களில் ஆபத்தான வேகத் தடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    205 இடங்களில் சாக்கடை குழி மூடிகள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. வேகத் தடைகள் 10 செ.மீ. உயரம், 12 அடி அகலத்தில் தான் இருக்க வேண்டும் என்பது விதியாகும்.

    ஆனால் 201 இடங்களில் இந்த விதிகளை மீறி வேகத் தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. வேகத்தடை அமைக்கப்பட்டுள்ள இடங்களில் 40 மீட்டருக்கு முன்பாக வைக்கப்பட வேண்டிய அறிவிப்பு பல கைகளும் சாலையில் நிறுவப்படாமலே இருக்கிறது.

    இதுபோன்ற காரணங்களாலேயே இந்த வேகத் தடைகள் உயிருக்கு ஆபத்தானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

    இதே போல் சாக்கடை குழி மூடிகள் மற்றும் சாலையில் உள்ள மழை நீர் வடிகால் குழிகளும் பல இடங்களில் சாலை அளவை விட கீழே உள்ளது. இந்த குழிகள் விபத்தை உருவாக்கும் குழிகளாக மாறியுள்ளன.

    சாலை உயரத்தை அதிகரிப்பதும் இந்த மூடிகளை சாலை அளவில் வைக்காமல் அலட்சியமாக செயல்படுவதால் இந்த மூடிகள் சாலை உயரத்தைவிட அதிகமாகி விபத்துக்கு காரணமாகி உள்ளது.

    இதே போன்று 61 இடங்களில் உள்ள சாக்கடை கால்வாய்களும் ஆபத்தானவை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதுபற்றி அறப்போர் இயக்கம் சார்பில் தமிழக அரசுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ள அந்த மனுவில் விபத்துக்கு காரணமாக இருக்கும் வேகத்தடைகள், சாக்கடை மூடிகள், கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    • மாநகராட்சி சார்பில் ‘டயர் கில்லர்' வேகத்தடை அமைக்கப்பட்டது.
    • வேகத்தடை காரணமாக வாகனங்கள் ஒருவழிப்பாதையில் நுழைவது குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

    தானே:

    தானே ரெயில் நிலையம் அருகில் உள்ள சிவாஜி பாத் சாலையில் சமீபத்தில் போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி சார்பில் 'டயர் கில்லர்' வேகத்தடை அமைக்கப்பட்டது. வாகனங்கள் ஒரு வழிப்பாதையில்(ஒன்வே) விதிகளை மீறி நுழைவதை தடுக்க இந்த ஏற்பாடு சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சரியாக வரும் வாகனங்கள் வேகத்தடையை எளிதாக கடந்து செல்ல முடியும். அதே நேரத்தில் விதியை மீறி எதிர்திசையில் இருந்து வாகனங்கள் சாலையில் நுழைய முயன்றால், வேகத்தடையில் உள்ள ராட்சத ஆணி வாகனத்தின் டயரை கிழித்து விடும். இந்த வேகத்தடை காரணமாக சிவாஜி பாத் சாலையில் வாகனங்கள் ஒருவழிப்பாதையில் நுழைவது குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களின் டயர்களை கிழிக்க வைக்கப்பட்ட அந்த வேகத்தடை, அந்த வழியாக நடந்து செல்லும் பொது மக்களின் கால்களையும் பதம் பார்த்து வருகிறது. இதுவரை அந்த வேகத்தடை காரணமாக 7 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், "சிவாஜி பாத் சாலை ரெயில் நிலையத்துக்கு மிகவும் அருகில் உள்ளது. எனவே இந்த வழியாக பொதுமக்கள் அதிகளவில் நடந்து செல்கின்றனர். பலருக்கு இந்த வேகத்தடை பற்றி தெரியாது. எனவே அதில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு காலில் காயம் ஏற்படுகிறது" என்றார்.

    மிதேஷ் ஷா என்பவர் கூறுகையில், "மாநகராட்சியின் நோக்கம் சரியானது தான். ஆனால் அதற்கு முதலில் அவர்கள் பொதுமக்கள் நடந்து செல்ல விசாலமான, ஆக்கிரமிப்பு இல்லாத நடைபாதை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அப்போது பொதுமக்கள் நடைபாதையில் நடந்து செல்வார்கள். சாலையில் செல்ல மாட்டார்கள்" என்றார்.

    இதுபோன்ற 'டயர் கில்லர்' வேகத்தடைகளை வைப்பதற்கு பதில் வாகனங்கள் விதி மீறலில் ஈடுபடும் பகுதியில், போலீஸ்காரர் ஒருவரை பாதுகாப்பு பணியில் நிறுத்தலாம் என ராகுல் பிங்காலே என்பவர் கூறினார்.

    ×