என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SSLC"

    • பொதுத்தேர்வுக்கு முன்னதாக, செய்முறை தேர்வு நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
    • கடந்த 20-ந் தேதி முதல் செய்முறை தேர்வு நடத்தப்பட்டு வந்தது.

    சென்னை:

    பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது.

    பொதுத்தேர்வுக்கு முன்னதாக, செய்முறை தேர்வு நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 20-ந் தேதி முதல் செய்முறை தேர்வு நடத்தப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் வரை முதலில் அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் அதனை நீட்டித்து அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டு இருக்கிறது.

    இதுதொடர்பாக அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    மாணவர்களின் நலன் கருதி 10-ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு 31-ந் தேதி (நாளை) வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. எனவே செய்முறை தேர்வுக்கு வருகை புரியாத அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காலநீட்டிப்பு செய்ததற்கான அவசியம் ஏன்? என்பது குறித்து விசாரித்தபோது, செய்முறை தேர்வில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்கவில்லை என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே பிளஸ்-2 மொழிப்பாடங்கள் தேர்வில் மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆன சம்பவம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தற்போது எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வில் மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆனது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

    செய்முறை தேர்வில் இவ்வளவு பேர் பங்கேற்கவில்லை என்றால், அடுத்ததாக பொதுத்தேர்வு தொடங்கும்போது மொழிப்பாடங்களிலும் மாணவர்கள் 'ஆப்சென்ட்' விவகாரம் கண்டிப்பாக இருக்கும்.

    கால நீட்டிப்பு செய்யப்பட்ட நாட்களில் பங்கேற்காத மாணவர்களை எவ்வாறு செய்முறை தேர்வில் கல்வித்துறை பங்கேற்க வைப்பார்கள்? அதேபோல், பொதுத்தேர்விலும் அவர்களை எப்படி கலந்து கொள்ள செய்வார்கள்? என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    • புதுவை சாரம் எஸ்.ஆர்.எஸ். அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 35 பேர் படித்து வருகின்றனர்.
    • 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ-மாணவியருக்கு தேர்வு எழுதுவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை சாரம் எஸ்.ஆர்.எஸ். அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 35 பேர் படித்து வருகின்றனர்.

    கடந்த ஜனவரி 28-ந் தேதி முதல் 45 நாட்களுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் மாலை நேர சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதன் நிறைவு நாள் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் தனசேகர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் பள்ளி ஆசிரியர் அண்ணாமலை, 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ-மாணவியருக்கு தேர்வு எழுதுவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

    மேலும் முன்னாள் மாணவர்கள் சார்பில் 35 மாணவர்களுக்கும் தேர்வு எழுதுவதற்கான எழுது பொருள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    • நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 22 ஆயிரத்து 897 பேர் எழுதுகின்றனர்.
    • தேர்வு எழுதும் 12 சிறை கைதிகளுக்கு ஜெயில் வளாகத்தில் தனி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.

    91 மையங்கள்

    நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வை 11 ஆயிரத்து 2 மாணவர்கள், 11 ஆயிரத்து 895 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 897 பேர் எழுதுகின்றனர். தேர்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதும் 91 மையங்கள் அமைக்கப் பட்டுள்ளது.

    இதில் நெல்லை கல்வி மாவட்ட அளவில் 36 மையங்களும், சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் 18 மையங்களிலும், வள்ளியூர் கல்வி மாவட்டத்தில் 37 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 5 தனித்தேர்வர் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

    பாளை மத்திய சிறையில் தேர்வு எழுதும் 12 சிறை கைதிகளுக்கு ஜெயில் வளாகத்தில் தனி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி தலைமையில் கல்வி மாவட்ட அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    மேலும் தேர்வு நாளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வை சிறப்பாக நடத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 13-ந் தேதி தொடங்கிய பிளஸ் -2 தேர்வு முன்தினம் முடிவடைந்தது. பிளஸ்-1 தேர்வு இன்று முடிவடைந்தது.

    • விடைத்தாள் திருத்தும் பணி 24-ந் தொடங்கி 28-ந் தேதி நிறைவு பெறும்.
    • 1,950 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந் தேதி தொடங்கி வரும் 20-ந் தேதி நிறைவு பெறுகிறது. விடைத்தாள்கள் 4 மையங்களில் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

    விடைத்தாள் திருத்தும் பணி வரும் 24-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை திருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது.

    விடைத்தாளில் உள்ள மதிப்பெண் உடனுக்குடன் கணினி மூலமாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்தம் செய்து முடிக்கப்பட்ட உடன் பிளஸ்-1 விடைத்தாள் திருத்தம் செய்யப்பட உள்ளது.

    இதேப்போல் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த ஈரோடு செங்கோடம்பாளையம் யு.ஆர்.சி பள்ளி, கோபி குருகுலம் பள்ளி, சக்தி ராகவேந்திரா பள்ளி, அந்தியூர் விஸ்வேஸ்வரய்யா பள்ளியில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    1,950 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவார்கள். விடைத்தாள் திருத்தும் பணி 24-ந் தொடங்கி 28-ந் தேதி நிறைவு பெறும்.

    விடைத்தாள்கள் பாட வாரியாக பிரிக்கப்பட்டு ஒன்றோடு ஒன்றோடு கலந்து வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படும்.

    பின்னர் பிற மாவட்ட விடைத்தாள்கள் ஈரோட்டில் அமைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு கொண்டுவரப்பட்டு பாட வாரியாக பிரித்து திருத்தம் செய்து அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளுக்கு உடனடி தேர்வு ஜூன் 19-ந்தேதி நடத்தப்படும்.
    • பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர் கல்வி பெற உயர் கல்வி வழிகாட்டி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடவும் தேர்வுத்துறை தயாராக உள்ளது.

    10-ம் வகுப்பு தேர்வு முடிவு 17-ந்தேதியும், 11-ம் வகுப்பு தேர்வு முடிவு 19-ந்தேதியும் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கபட்டு இருந்தது.

    இந்த நிலையில் 10, 11-ம் வகுப்பு தேர்வு முடிவை ஒரேநாளில் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளுக்கு உடனடி தேர்வு ஜூன் 19-ந்தேதி நடத்தப்படும் என்றும் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர் கல்வி பெற உயர் கல்வி வழிகாட்டி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தாங்கள் படித்த பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு இக்குழு ஆலோசனை வழங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    • எஸ்.எஸ்.எல்.சி. -மதுரை மாவட்டத்தில் 91.79 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
    • எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதுரை மாவட்டம் 18-வது இடத்தை பிடித் துள்ளது.

    மதுரை

    மாணவ-மாணவிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படை யில் அவர்கள் உயர்கல்வி கற்க வாய்ப்பு கிடைக்கிறது.

    எனவே மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மிகவும் சிரத்தை எடுத்து எழுதுவார்கள். அதில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ப தற்காக கூடுதல் நேரம் நடைபெறும் வகுப்புகளில் கலந்து கொண்டு அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் பெற முடிந்த வரை முயற்சி எடுப்பார்கள்.

    இந்த ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவ டைந்து பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியானது.

    அதனை மாணவ-மாணவிகள் தங்களது செல்போன்களிலேயே பார்த்து தெரிந்து கொண்ட னர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவ -மாணவி களுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் படித்த பள்ளிகளிலும் சக மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    மதுரை மாவட்டத்தில் மொத்தம் 38 ஆயிரத்து 63 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதி னர். இதில் 19 ஆயிரத்து 190 பேர் மாணவர்கள். 18 ஆயிரத்து 823 பேர் மாணவி கள். இதில் 16 ஆயிரத்து 982 மாணவர்களும், 17 ஆயிரத்து 957 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மொத்தம் 34 ஆயிரத்து 939 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.79 சதவீத தேர்ச்சி யாகும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதுரை மாவட்டம் 18-வது இடத்தை பிடித் துள்ளது.

    • காலை 10 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளும், மதியம் 2 மணிக்கு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. 13394 மாணவர்கள், 14511 மாணவிகள் என 27905 மாணவ- மனைவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 92.16 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி அடைந்து ள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் 11-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந் தேதி வரை நடைபெற்றது.

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடத்தப்பட்டது. இதையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்பட இதர பணிகளும் முடிவடைந்தன.

    இதனை தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

    அதன்படி இன்று காலை 10 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளும், மதியம் 2 மணிக்கு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன.

    தமிழத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் 91.39 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வை 15066 மாணவர்களும், 15213 மாணவிகளும் என மொத்தம் 30279 பேர் எழுதினர். இதில் 13394 மாணவர்கள், 14511 மாணவிகள் என 27905 மாணவ- மனைவிகள் தேர்ச்சி பெற்றுள்ள னர். அதாவது 92.16 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி அடைந்து ள்ளனர்.

    இதேபோல் இன்று மதியம் 11-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.
    • தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.

    சென்னை :

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து இன்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு வெளியானது.

    www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ என்ற இணையதளங்களுக்கு சென்று மாணவ-மாணவிகள் தங்களுடைய பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    மேலும் பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 9 லட்சத்து 26 ஆயிரத்து 663 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் சுமார் 9 லட்சத்து 8 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.
    • தேர்வு எழுதியவர்களில் 4,22,591 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.55 சதவீதம் ஆகும்.

    கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.

    தேர்வு எழுதியவர்களில் 4,22,591 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாணவிகள் 94.53 சதவீதமும், மாணவர்கள் 88.58 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் முந்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட 5.95 சதவீத மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்று வழக்கம்போல் அசத்தியுள்ளனர்.
    • 1,364 அரசுப்பள்ளி மாணவர்கள் 100-க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சென்னை:

    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ என்ற இணையதளங்களுக்கு சென்று மாணவ-மாணவிகள் தங்களுடைய பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட 5.95 சதவீத மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்று வழக்கம்போல் அசத்தியுள்ளனர்.

    1,364 அரசுப்பள்ளி மாணவர்கள் 100-க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம் பின்வருமாறு:-

    அரசு பள்ளிகளில் 87.90 சதவீதமும், அரசு உதவிபெறும் பள்ளிகள் 91.77 சதவீதமும், சுயநிதி பள்ளிகள் 97.43 சதவீதம், பெண்கள் பள்ளியில் 93.80 சதவீதமும்,, ஆண்கள் பள்ளி 83.17 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாட வாரியாக 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் விவரம்:- தமிழ் 8 பேர், ஆங்கிலம் 415, கணிதம் 20,691, அறிவியல் 5,104, சமூ அறிவியல் 4,428.

    பாட வாரியாக தேர்ச்சி விகிதம்:- தமிழ் 96.85 சதவீதம், ஆங்கிலம் 99.15 சதவீதம், கணிதம் 96.75 சதவீதம், அறிவியல் 96.72 சதவீதம், சமூக அறிவியல் 95.74 சதவீதம்.

    தேர்ச்சி விகிதத்தில் முதல் 5 இடங்களை பெற்ற மாவட்டங்கள் விவரம்:-

    அரியலூர்- 97.31 சதவீதம்

    சிவகங்கை - 97.00 சதவீதம்

    ராமநாதபுரம்- 96.40 சதவீதம்

    கன்னியாகுமரி- 96.20 சதவீதம்

    திருச்சி- 95.20சதவீதம்

    • குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
    • உங்களது பாதைக்கு வழிகாட்ட நான் முதல்வன் உள்ளிட்ட நமது அரசின் திட்டங்கள் உள்ளன.

    சென்னை :

    தமிழகத்தில் இன்று காலை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.55 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மேல்நிலைக் கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!

    மாணவச் செல்வங்களே... உங்களது எதிர்காலத்தைத் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ளுங்கள்!

    குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

    மேல்நிலைக் கல்வி - தொழிற்கல்வி எனப் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. உங்களது பாதைக்கு வழிகாட்ட நான் முதல்வன் உள்ளிட்ட நமது அரசின் திட்டங்கள் உள்ளன. கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு என்றும் துணையாக அமையட்டும்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    • 6885 மாணவர்கள் 8181 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 66 பேர் தேர்ச்சி அடைந்தனர்.
    • வேலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 82.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் 9104 மாணவர்கள் 9253 மாணவிகள் என 18,357 தேர்வு எழுதினர். இதில் 6885 மாணவர்கள் 8181 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 66 பேர் தேர்ச்சி அடைந்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 82.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மிக குறைந்த தேர்ச்சியால் வேலூர் மாவட்டம் தமிழக அளவில் கடைசி இடத்தை பிடித்தது குறிப்பிட்டத்தக்கது.

    இந்தத் தேர்வில் திருப்பத்தூர் மாநில அளவில் 31-வது இடத்தை பிடித்துள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்துக்கு முன்னதாக 37-வது இடத்தைப் பிடித்துள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 86.10 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் 36-வது இடத்தைப்பிடித்துள்ளது.

    ×