என் மலர்
நீங்கள் தேடியது "Stop"
- திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் 2வது குடிநீா்த் திட்டத்தின்கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- இரண்டாவது குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.
திருப்பூர்:
திருப்பூா் மாநகரில் 2-வது குடிநீா்த் திட்டத்தின்கீழ் விநியோகிக்கப்படும் குடிநீா் விநியோகம் நாளை 30-ந்தேதி நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் 2வது குடிநீா்த் திட்டத்தின்கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2வது குடிநீா்த் திட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரதான குழாயில் மின்சார வாரியத்தின் மூலம் சனிக்கிழமை மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் இரண்டாவது குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.
திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட வாா்டு எண் 1, 13, 14, 3வது மண்டலத்துக்கு உள்பட்ட 44, 45, 50, 51, மற்றும் 4வது மண்டலத்துக்கு உள்பட்ட 52, 55 ஆகிய வாா்டுகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அதே வேளையில், வரும் திங்கள்கிழமைமுதல் மேற்கண்ட பகுதிகளில் தங்கு தடையின்றி குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருச்சி மாவடி குளத்தில் அமைய இருந்த ஓய்வு நேர படகு சவாரி திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது
- ஒருங்கிணைப்புக்குழு இல்லாததால் தடுமாற்றம்
திருச்சி
திருச்சி மாநகரில் புண்ணிய ஸ்தலங்களைத் தவிர வேறு வகையிலான பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லை. மாநகர் மக்கள் காவிரி பாலத்தில் நின்று தண்ணீர் செல்லும் அழகை வேடிக்கை பார்ப்பதையே முக்கியமாக கருதி வந்தனர். தற்போது காவிரி பாலம் சீரமைப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளதால் அதுவும் தடைபட்டுள்ளது.
இதற்கிடையே திருச்சி பொன்மலைபட்டியில் 142 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் மாவடி குளத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க படகு சவாரி கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. பின்னர் பொதுப்பணித்துறை மூலம் மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு தூர்வாருதல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல் ஆகியவை 2021 ஜனவரியில் நிறைவடைந்தன.
பின்னர் கிழக்குறிச்சி பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் அந்தக் குளத்தில் படகு சவாரியை கொண்டு வர ரூ.1.75 லட்சத்தில் இரண்டு துடுப்பு படகுகள் மற்றும் லைப் ஜாக்கெட்டுகள் வாங்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது திருச்சி நகரின் மிகப்பெரிய நீர்நிலையான மாவடிக்குளம் குளத்தில் உத்தேசிக்கப்பட்ட ஓய்வுநேர படகு சவாரி அதிகாரப்பூர்வமற்ற முறையில் கைவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே குளத்தையொட்டி அமைக்கப்பட்ட நடைபாதை இரண்டு ஆண்டுகளில் சேதமடைந்துள்ளது. இங்கு சுமார் 200 மீட்டர் நீளத்துக்கு போடப்பட்ட நடைமேடை, சரியான வாய்க்கால் இல்லாததால், சமீபத்தில் பெய்த மழையில் சேதமடைந்தது. சாலை மற்றும் தெருவிளக்கு உள்கட்டமைப்பும் மோசமாக உள்ளது.
மேலும் தற்போது நடைபெற்று வரும் பாதாள வடிகால் பணியால் சேதமடைந்த பாதசாரிகளுக்கான பாதையை திருச்சி மாநகராட்சி சீரமைக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை கூறினாலும், உள்ளாட்சி அமைப்பு இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. குளத்தை மேம்படுத்த ஏற்கனவே ரூ.1 கோடியே 92 லட்சம் செலவழித்துள்ளோம். இனிமேலும் நாங்கள் செலவழிக்க தயாராக இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி பழுதடைந்த நடை பாதையை சீரமைத்து படகு சவாரியை திட்டமிட்டபடி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நன்னிலம் பகுதிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது.
- சில பஸ்கள் காலை நேரங்களில் பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதாக குற்றச்சாட்டு.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் அரசு பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகிறது.
இங்கு கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பலர் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர்.
அனைத்து வழித்தடங்களில் இருந்தும் நன்னிலம் பகுதிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது.
சில நேரங்களில் ஒரு சில வழித்தடங்களில் அதுவும் இயக்கப்படுவதில்லை.
அதிலும், கூட்டம் அதிகமாக உள்ளதால் மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று கொண்டு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. மனவெளி, சேங்கனூர், அச்சுதமங்கலம், வடக்குடி ஆகிய நிறுத்தங்களில் சில பஸ்கள் காலை நேரங்களில் நிற்காமல் செல்வதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனால், மாணவ- மாணவிகள், அரசு அலுவலர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து காலை- மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 7 ஆண்டுகள் கடந்தும் இதுவரை கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இதனை கண்டித்தும் கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நேற்று விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
- இதனால் ஆயிரக்கணக்கான தொழிலா ளர்கள் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 30,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு
வருகின்றன. தொழிலாளர்க ளுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு கூலி ஒப்பந்தம் போடப்பட்டது. மேலும் மாவட்ட கலெக்டர் முன்னி லையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி ஒப்பந்தம் போடப்படும் என அப்போது முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் 7 ஆண்டுகள் கடந்தும் இதுவரை கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இதனை கண்டித்தும் கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நேற்று விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் ஆயிரக்கணக்கான தொழிலா ளர்கள் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர்.
இது குறித்து விசைத்தறி தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சுப்பிரமணி கூறுகையில், தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு அடிப்படையில் 75% கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் முடங்கியுள்ளன. தொழிலா ளர்கள் பாதிக்கப்படும் முன்னர், வட்டாட்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு தீர்வு காண வேண்டும். அதுவரை குழு கடன் வசூலிக்க கால அவகாசம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றார்.
இதற்கிடையே விசைத்தறி கூட்டு தொழில் சங்கத்தின் சார்பில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஊர்வலமாக சென்ற தொழிற்சங்கத்தினர், வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அப்போது அவர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
- கொளத்தூர் அருகே கோவிந்தபாடி பகுதியை சேர்ந்த மீனவர் காரவடையான் என்கிற ராஜா கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இதனால் கர்நாடக மாநிலத்தில் இருந்து மேட்டூர், சேலம், ஈரோடு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த கர்நாடக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன.
சேலம்:
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே கோவிந்தபாடி பகுதியை சேர்ந்த மீனவர் காரவடையான் என்கிற ராஜா கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கர்நாடக மாநிலத்தில் இருந்து மேட்டூர், சேலம், ஈரோடு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த கர்நாடக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. தற்போது இயல்பு நிலை திரும்பினாலும் 5-வது நாளாக கர்நாடக பஸ்கள் கொளத்தூர் அருகே உள்ள தமிழக- கர்நாடக மாநில எல்லையில் உள்ள பாலாறு சோதனைச்சாவடி வழியாக இயக்கப்படவில்லை.
- கடந்த 23-ம் தேதியுடன் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
- சுற்றுலா பயணிகள் சிறிதளவு ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரில் இறங்கி குளித்து மகிழ்கின்றனர்.
பூதலூர்:
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் வழக்கமான ஜூன் 12 தேதிக்கு முன்னதாக மே மாதம் 24 ஆம் தேதி திறக்கப்பட்டது.
இதனால் காவேரி டெல்டா மாவட்டங்களில் இலக்கை விஞ்சி குருவை மற்றும் சம்பா சாகுபடி நடைபெற்றது பருவம் தப்பிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கியது.
248 நாள் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வழக்கமான நடைமுறைப்படி ஜனவரி மாதம் 28ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாயில் விவசாயிகளின் தேவைக ளுக்கு ஏற்ப குறைந்த அளவில் தண்ணீர் அவ்வப்போது மாறி மாறி விடப்பட்டது.
மேட்டூர் அணை மூடப்பட்ட பின்னர் பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி வரை கல்லணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், காவிரி வெண்ணாறு ஆகிய ஆறுகளில் முழுவதுமாக தண்ணீர் விடுவது பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி மாலையுடன் நிறுத்தப்பட்டது.
தற்போது கல்லணை முழுவதுமாக வறண்டு போய் மணல் வெளியாக காட்சியளிக்கிறது.
சிறிய அளவில் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. சிறிய அளவில் வரும் தண்ணீர் கொள்ளிடம் மணல் போக்கி பகுதியில் திறந்து வெளியேறி கொண்டு உள்ளது.
காவேரி வெண்ணாறு ஆகிய பாலங்களின் கீழ் பகுதியில் முழுவதுமாக தண்ணீர் இன்றி காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.
கல்லணையை காண வரும் சுற்றுலா பயணிகள் கொள்ளிடம் ஆற்றில் சிறிதளவு ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரில் இறங்கி குளித்து மகிழ்கின்றனர்.
கல்லணை பாலங்களின் மேல் நடந்து கல்லணையை ரசித்து வருகின்றனர்.
சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு அரங்குகளில் சிறுவர்கள் விளையாடி மகிழ்கின்றனர்.
காவிரி ஆற்றின் பாலங்களின் கீழ் இறங்கி மதகுகளை பார்த்து வியந்து சுற்றுலா பயணிகள்வருகின்றனர்.
- தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 9-ந் தேதி நடக்கிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை உதவி செயற்பொறியாளர் ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
எனவே அன்றைய தினம் அருளானந்தநகர், பிலோமினாநகர், காத்தூண்நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமாநகர், அன்புநகர், திருச்சி ரோடு, வ.உ.சி. நகர், பூக்காரத்தெரு, இருபது கண்பாலம், கோரிக்குளம், கணபதிநகர், ராஜப்பாநகர், மகேஸ்வரிநகர், திருப்பதிநகர், செல்வம் நகர், அண்ணாமலைநகர், ஜெ.ஜெ.நகர், டி.பி. எஸ்.நகர், சுந்தரம்நகர், பாண்டியன்நகர், எஸ்.பி.அலுவலகம், கலெக்டர் பங்களாரோடு, டேனியல் தாமஸ்நகர், ராஜராஜேஸ்வரிநகர், காவேரிநகர், நிர்மலாநகர், என்.எஸ்.போஸ்நகர், தென்றல்நகர், துளசியாபுரம், தேவன்நகர், பெரியார்நகர், இந்திராநகர், கூட்டுறவு காலனி, புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, நட்சத்திராநகர், ஆர்.ஆர்.நகர், சேரன்நகர், யாகப்பாநகர், அருளானந்தம்மாள்நகர், குழந்தைஏசு கோவில் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாளை மற்றும் நாளை மறுநாள் குடிநீர் வினியோகம் இருக்காது.
- பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான கணபதிநகர் பம்பிங் ஸ்டேஷன் மற்றும் எலிசா நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் பிரதான குழாய் புதிதாக மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
எனவே வார்டு எண் 42 முதல் 51 வரையிலான வார்டுகளுக்கு நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது.
எனவே பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொண்டு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கொரோனா காலத்தில் தடைபட்ட 5 ரெயில்கள் இருவழி மார்க்கமாக சீர்காழியில் நின்று செல்லும்.
- தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக போராட்ட குழுவினர் அறிவித்தனர்.
சீர்காழி:
சீர்காழி ரயில் நிலையத்தில் மீண்டும் இரு வழி மார்க்கமாக நின்று சென்ற அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி ரெயில் நிறுத்த போராட்டக் குழுவினர் தண்டவாளத்தில் தலை வைக்கும் போராட்டத்தை வருகின்ற 17ஆம் தேதி அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் ரெயில்வே நிர்வாக கோட்ட மேலாளர் ஹரிக்குமார், கொரோனா காலத்தில் தடைபட்ட 5 ரெயில்கள் இரு வழி மார்க்கமாக சீர்காழியில் நின்று செல்லும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனை அடுத்து அறிவி த்திருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்க ப்படுவதாக போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஜெக.சண்முகம் தெரிவித்தார்.
- கோவை- ராமேஸ்வரம் வாராந்திர ெரயில், சிவகங்கையிலும் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
- சித்தூர், திருப்பதி ரெயில் நிலையங்களுக்கு ரெயில் செல்லாது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர்:
கோவை- ராமேஸ்வரம் வாராந்திர ரெயில், சிவகங்கையிலும் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-
கோவை- ராமேஸ்வரம் (16618) வாராந்திர ரெயில், கோவை ரெயில் நிலையத்தில் வாரந்தோறும் செவ்வாய் இரவு 7:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:45க்கு ராமேஸ்வரம் சென்றடையும்.
மறுமார்கத்தில் ராமேஸ்வரம்- கோவை (16617) ரெயில், புதன்தோறும் ராமேஸ்வரம் ரெயில் நிலையத்தில் இரவு 8:13மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:30க்கு கோவை வந்தடையும். இந்த 2 ரெயில்களும் நாளை 18-ந் தேதி முதல் சிவகங்கை ரெயில் நிலையத்தில் சோதனை முயற்சியாக கூடுதலாக 2 நிமிடங்கள் நின்று செல்லும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திருப்பதி பிளாட்பார்மில் பராமரிப்பு, மேம்பாட்டு பணி நடப்பதால் ஸ்வர்ண ஜெயந்தி, மில்லினியம் சூப்பர்பாஸ்ட் ரெயில் 4 நாட்களுக்கு சித்தூர் திருப்பதி செல்லாது.
ஆந்திர மாநிலம், திருப்பதி ரெயில் நிலைய பிளாட்பார்மில் (2 மற்றும் 3), மேம்பாட்டு பணியை தென் மத்திய ரெயில்வே ஒரு மாதம் மேற்கொள்கிறது.இதனால், 7 ரெயில்கள் முழுமையாகவும், 12 ரெயில் பாதியளவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் இருந்து நிஜாமுதீன் செல்லும் ஸ்வர்ண ஜெயந்தி சூப்பர்பாஸ்ட் ரெயில் (எண்:12643) வருகிற 18, 25, ஆகஸ்டு 1, 8-ந் தேதி ஆகிய 4 நாட்கள், மேல்பாக்கம் வழியாக திருப்பி விடப்படும்.
இதனால் சித்தூர், திருப்பதி நிலையங்களுக்கு ரெயில் செல்லாது. காட்பாடி - ரேணிகுண்டா வழித்தடத்தில் பயணிக்கும்.இதேபோல் எர்ணாகுளம் - நிஜாமுதீன் மில்லினியம் சூப்பர்பாஸ்ட் (எண்:12645) வருகிற 22, 29, ஆகஸ்டு 5ம் தேதி ஆகிய நாட்கள், மேல்பாக்கம் வழியாக திருப்பி விடப்படும். இதனால் சித்தூர், திருப்பதி ரெயில் நிலையங்களுக்கு ரெயில் செல்லாது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் பாலக்காடு- திருச்சி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
பாலக்காடு - திருச்சி (16844) ரெயில் தினமும் காலை 6:30 மணிக்கு பாலக்காடு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, திருச்சிரெயில் நிலையத்திற்கு மதியம் 1:32க்கும் சென்றடையும். மறுமார்க்கத்தில் திருச்சி - பாலக்காடு (16843) ரெயிலானது தினமும் மதியம் 2மணிக்கு திருச்சியில் புறப்பட்டு, இரவு 8:55க்கு பாலக்காடு வந்தடையும்.
திருச்சி ரெயில் நிலையம் - திருச்சி கோட்டை ரெயில் நிலையம் இடையே தண்டவாள பணிகள் நடப்பதால் வருகிற 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை பாலக்காடு- திருச்சி (16844) ரெயில் திருச்சி கோட்டை வரை இயக்கப்படும். திருச்சி ரெயில்வே நிலையம் செல்லாது.
மறுமார்க்கத்தில் திருச்சி - பாலக்காடு (16843) ரெயிலானது திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை நேரிடையாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
- கடந்த ஒரு மாதமாக நிலவி வரும் தக்காளி தட்டுப்பாட்டை தொடர்ந்து அதன் விலை உயர்ந்து கிலோ ரூ.130 வரை விற்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் உழவர் சந்தைக்கு கோனூர், திண்டமங்கலம், கீழ்சாத்தம்பூர், கீரம்பூர், கோணங்கிப்பட்டி, காவக்காரப்பட்டி, பொட்டிரெட்டிபட்டி, எருமப்பட்டி, மோகனூர், நாமக்கல், புதுச்சத்திரம், சேந்தமங்கலம், கொல்லிமலை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை நேரிடையாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
கிலோ ரூ.130
உழவர் சந்தையில் தற்போது அதிகபட்ச விலையாக சின்னவெங்காயம் கிலோ ரூ.80, இஞ்சி ரூ.280, கத்தரிக்காய் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக நிலவி வரும் தக்காளி தட்டுப்பாட்டை தொடர்ந்து அதன் விலை உயர்ந்து கிலோ ரூ.130 வரை விற்கப்பட்டது. இதையடுத்து நாமக்கல் தோட்டக்கலைத் துறையினர் விவசாயிகளிடம் இருந்து தக்காளியை நேரிடையாக வாங்கி நாமக்கல் உழவர் சந்தையில் விற்று வந்தனர்.
இதனால் வெளிச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.130 வரை விற்ற நிலையிலும், உழவர் சந்தையில் ரூ.90-க்கு விற்கப்பட்டன.
விற்பனை நிறுத்தம்
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக நாமக்கல் உழவர் சந்தையில் தக்காளி விற்பனை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தக்காளி வாங்க உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றன. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், தக்காளி விலை தொடர்நது உயர்ந்து வந்ததால், விவசாயிகளிடம் நேரடியாக வாங்கி உழவர் சந்தையில் விற்கப்பட்டது. தற்போது தட்டுபாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தக்காளி கிடைக்கவில்லை. இதனால் தக்காளி விற்பனை நிறுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே நாமக்கல் உழவர் சந்தையில் மீண்டும் தக்காளி விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
- சேலம் மின்னாம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (19-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
- இந்த தகவலை மின் செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.
சேலம்:
சேலம் மின்னாம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கூட்டாத்துபட்டி விளாம்பட்டி,ஏரிபுதூர், நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, எஸ்.என். மங்கலம், ஏ.என்.மங்கலம், ஜலகண்டாபுரம், அனுப்பூர்,பூசாரிப்பட்டி, பாலப்பட்டி, தேங்கல்பாளையம், குள்ளம்பட்டி, காட்டூர், வலசையூர்,குப்பனூர், தாதனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, வெள்ளியம்பட்டி, கத்திரிப்பட்டி, பூவனூர் ஆகிய பகுதிகளில் நாளை (19-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின் செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.