என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Survey"

    • சிவகாசி யூனியனில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் திலகவதி, உதவி செயற்பொறியாளர் பாண்டுரங்கன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றிய த்திற்குட்பட்ட ஆனையூர், செங்கமலநாச்சியார்புரம், நமஸ்கரித்தான்பட்டி, மங்களம், புதுக்கோட்டை, செவலூர் ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆனையூர் ஊராட்சியில் உள்ள சமத்து வபுரம் பகுதிகளில் புதுப்பிக்க ப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்குள்ள சமு தாயக்கூடம், அங்கன்வாடி மையத்தையும், செங்கம லநாச்சி யார்புரம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.22 லட்சம் மதிப்பில் ஊருணி சீரமை க்கப்பட்டு வரும் பணிகளையும், அதே பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.12 லட்சம் மதிப்பில் அமை க்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை பணிக ளையும் கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    அதனை தொடர்ந்து மங்களம் ஊராட்சி மேட்டுப்பட்டியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.49 லட்சம் மதிப்பில் சிறிய பாலம் கட்டுப்பட்டு வரும் பணிகளையும், புதுக்கோட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.24 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    செவலூர் ஊராட்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் ரூ.311 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளையும் கலெக்டர் மேகநாதரெட்டி பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் திலகவதி, உதவி செயற்பொறியாளர் பாண்டுரங்கன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.

    • தோட்டக்கலைத்துறை இயக்குனர் ஆய்வு செய்தார்
    • விவசாயிகளை சந்தித்து பேசினார்.

     அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை தோட்டக்கலைத்துறை இயக்குனர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலில் அவர் கீழப்பழுவூர் அரசு தோட்டக்கலை பண்ணையினை ஆய்வு செய்தார். பின்னர் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் காவனூர் கிராம குழுக்களை ஆய்வு செய்து விவசாயிகளை சந்தித்து பேசினார். தொடர்ந்து தோட்டக்கலை துறை அலுவலர்களுடான நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    • பாதாள சாக்கடை இணைப்பில் ஏற்பட்ட உடைப்பை ராமநாதபுரம் நகரசபை தலைவர் ஆய்வு செய்தார்.
    • பழுதடைந்த எந்திரத்தை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விரைவில் சீரமைக்கும்படி ஒப்பந்ததாரரிடம் நகர்மன்ற தலைவர் அறிவுறுத்தினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பல வார்டுகளில் கடந்த சில தினங்களாக பாதாள சாக்கடை இணைப்பில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் தேங்குவதாக பொதுமக்கள் நகர்மன்ற தலைவர் கார்மேகத்திடம் புகார் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்-தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின்படி உடைப்பு ஏற்பட்ட குழாய்கள் அகற்றி போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.

    நகராட்சியின் 7.10 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நகர் மன்ற தலைவர் கார்மேகம், பொறியாளர் சுரேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பழுதடைந்த எந்திரத்தை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விரைவில் சீரமைக்கும்படி ஒப்பந்ததாரரிடம் நகர்மன்ற தலைவர் அறிவுறுத்தினர்.

    • வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
    • விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்களை வழங்கினார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை ஒன்றியப் பகுதிகளில் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் முள்ளுர் தரிசு நிலத் தொகுப்பு திட்டப் பணிகளின்கீழ் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளதை கலெக்டர் பார்வையிட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து விதைகள் மற்றும் உயிர் உரங்களை வழங்கினார்.

    • வளர்ச்சித்திட்டப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
    • ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் மற்றும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் மரு.தாரேஸ் அஹமது, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தெரிவித்ததாவது:

    தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் மற்றும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மக்களின் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டுவரும் வகையில் அனைத்து அலுவலர்களும் பணியாற்ற வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் மரு.தாரேஸ் அஹமது, தெரிவித்தார்.

    பின்னர்ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர். மரு.தாரேஸ் அஹமது, பொன்னமராவதி ஒன்றியம், ஒலியமங்கலம் ஊராட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணி துவக்கி வைத்து, மகளிர் சுயஉதவிக்குழுவிர்.உற்பத்தி செய்த கைவினைப் பொருட்களை பார்வையிட்டார்.இந்த ஆய்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்நா.கவிதப்பிரியா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, உதவித் திட்ட அலுவலர் பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜ், குமரன், பிரேமாவதி மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

    • கீழக்கரையில் நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு செய்தார். புகார் மனு கொடுக்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    • பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் கொடுக்காமல் ரகசியம் காத்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் பல்வேறு திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளில் முறைகேடுகள் நடப்பதாக நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து இன்று காலை நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா கீழக்கரையில் 2மணி நேரம் திடீர் ஆய்வு செய்தார், மாலாங்குண்டு, வடக்குத்தெரு மேல்நிலை குடிநீர் தொட்டி, கீழக்கரை பஸ் நிலையம், மீன் மார்க்கெட் ஆகியவற்றின் நிலை குறித்து பார்வை யிட்டார்.

    நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகளை ஆய்வு செய்து பணிகள் தரமான முறையில் மேற்கொள்ள அறிவுரை வழங்கினார். இந்த பணிகள் தாமதம் இல்லாமல் குறித்த நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    மதுரை மண்டல நிர்வாக இயக்குநர் சரவணன், நகராட்சி பொறியாளர் மனோகரன், கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணைத்தலைவர் ஹமீது சுல்த்தான், நகராட்சி ஆணையாளர் செல்வராஜ், பொறியாளர் அருள், துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா உள்பட பலர் உடன் சென்றனர்.

    நகராட்சி நிர்வாக இயக்குநரின் ஆய்வு குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு முன்னதாக தகவல் அளிக்கப்பட்டும், அவரது வருகை சம்பந்தமாக பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் கொடுக்காமல் ரகசியம் காத்தனர்.

    மேலும் நகராட்சி நிர்வாகம் சம்பந்தமாக புகார் மனு அளிக்கவும், புகார்களை தெரிவிக்கவும் சமூக ஆர்வலர்கள் நகராட்சிக்கு வந்திருந்தனர். ஆனால் நிர்வாக இயக்குனர் ஆய்வை முடித்துக் கொண்டு திரும்பி விட்டதால் அவரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    • ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி சரக டிஐஜி ஆய்வு மேற்கொண்டார்
    • காவலர்களின் குறைகள் குறித்து கேட்டறிந்தார்

    பெரம்பலூர்:

    திருச்சி சரக டிஐஜி சரவனசுந்தர் நேற்று பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, ஆயுதப்படை காவல் துறையினருக்கு வழங்கப்பட்ட உபகரணங்கள், காவல் நிலையங்களில் பயன்படுத்தி வரும் வாகனங்கள் ஆகியவற்றை தணிக்கை செய்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் சிறப்பாக செயல்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 8 பேரின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். பின்னர் காவலர்களின் குறைகள் குறித்து கேட்டறிந்தார்

    • வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.
    • கண்காணிப்பு அலுவலர் மேற்கொண்டார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் ஏற்கனவே நடைபெற்ற வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவங்கள் பெறப்பட்டன. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9,847 விண்ணப்பங்களும், பெயர் நீக்க 2,394 விண்ணப்பங்களும், திருத்தம் செய்தல் தொடர்பாக 3,926 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.

    இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11,179 விண்ணப்பங்களும், பெயர் நீக்க 2,475 விண்ணப்பங்களும், திருத்தம் செய்தல் தொடர்பாக 2,988 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களது விண்ணப்பத்தை பரிசீலனை செய்து அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த பணிகளின் உண்மை தன்மை குறித்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் வள்ளலார் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம், இரூர் ஆகிய பகுதிகளிலும், அரியலூர் மாவட்டத்தில் கல்லங்குறிச்சி, கோப்பிலியங்குடிகாடு ஆகிய பகுதிகளிலும் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    மேலும் அவர் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகங்களில் நடந்த சிறப்பு சுருக்க திருத்த முகாமில் பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகளின்படி, அவர்களது விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, அதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இப்பணியை தாசில்தார்கள் தனி கவனம் செலுத்தி ஆய்வு செய்ய வேண்டும். மேலும் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்திட தேவையான நடவடிக்கைகளை வருவாய் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும், என்றார். அப்போது மாவட்ட கலெக்டர்கள் ஸ்ரீவெங்கடபிரியா (பெரம்பலூர்), ரமணசரஸ்வதி (அரியலூர்) ஆகியோர் உடனிருந்தனர்."

    • பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
    • மாற்றுத்திறன் கொண்ட 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணி 19.12.2022 முதல் 11.01.2023 வரை நடைபெற உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணி 19.12.2022 முதல் 11.01.2023 வரை நடைபெற உள்ளது.

    இப்பணியை வட்டார கல்வி அலுவலர் கவுரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுபா, அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் அனிதா குமார், ராஜா, பார்வதி, செல்வராணி மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், பிசியோதெரபிஸ்ட், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், இல்லம்

    தேடி கல்வி தன்னார்வ லர்கள் மற்றும் மற்ற துறைகள் இணைந்து செய்து வருகின்றனர்.

    மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ரமேஷ், பரமத்தி வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் இந்த பணிகளை பார்வை யிட்டார். அப்போது தங்கள் பகுதிகளில் பள்ளிச் செல்லா குழந்தைகள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் எவரேனும் கண்டறி யப்பட்டால், தங்கள் பகுதிக்கு உட்பட்ட பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

    • தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் கடற்கரை மற்றும் தர்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. சில்லடி கடற்கரை மற்றும் நாகூர் பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் வருகை தந்த, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ மற்றும் குழு உறுப்பினர்கள் நாகூர் சில்லடி கடற்கரை மற்றும் தர்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    அப்போது நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பேசியதாவது, நாகூர் நகருக்கு பல்லாயிரக்கணக்கான ஆன்மீக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஆனால் அதற்கேற்ற வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. சில்லடி கடற்கரை மற்றும் நாகூர் பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். மேலும் நாகையில் அரசு மேல் நிலைப்பள்ளி அமைப்பது, சட்டக்கல்லூரி தொடங்குவது, புறநகர் பேருந்து நிலையம் அமைப்பது, திருமருகல் தனி தாலுகா அமைப்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்து, பொதுக் கணக்குக் குழு தலைவரிடம் ஷா நவாஸ் எம்.எல்.ஏ மனு அளித்தார்.

    இந்தக் கோரிக்கைகளை அரசுக்கு பொதுக் கணக்குக் குழு பரிந்துரைக்கும் என்று செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ தெரிவித்தார்.

    • வளர்ச்சி திட்ட பணிகளை ஊராட்சி துறை ஆணையர் ஆய்வு செய்தார்
    • அரசின் திட்டப்பணிகளை தங்குதடையின்றி சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பல்வேறு கிராமங்களில் ரூ.1.85 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தரேஸ் அஹமது பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் குடிசை கணக்கெடுப்பு பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள், பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டம், ஆன்லைன் வரி, ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் போன்ற திட்டப்பணிகளில் முன்னேற்றம் ஏற்படுத்தும் வகையில், இத்திட்டத்தில் செயல்படும் ஊராட்சிகளின் தொடர்புடைய ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, திட்டப்பணிகளை செயல்படுத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்து கேட்டறிந்து, அரசின் திட்டப்பணிகளை தங்குதடையின்றி சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். 

    மேலும், அரசு அலுவலர்கள் அரசின் பணிகள் மக்களுக்கு சென்று சேரும் வகையில் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலை வகித்தார். மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநர் முருகண்ணன், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


    • அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற பொங்கல் தினத்தன்று (15-ந்தேதி) நடைபெற உள்ளது.

    மதுரை

    உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற பொங்கல் தினத்தன்று (15-ந்தேதி) நடைபெற உள்ளது. இந்த போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகமே ஏற்று நடத்துகிறது. அதற்கான பணிகள் தொடங்கியது.

    தடுப்பு கம்புகள் ஊன்றும் பணி நடைபெற்று வந்த நிலையில் காளைகளுக்கு இறுதி கட்ட மருத்துவ பரிசோதனை செய்யும் இடம், வாடிவாசல் மற்றும் மாடுகள் வெளியே செல்லும் ''கலெக்சன் பாயிண்ட்'' உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் எவ்வாறு நடைபெற வேண்டும்? என்பது குறித்து இன்று கலெக்டர் அனீஷ்சேகர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    வாடிவாசலின் இரு புறமும் தடுப்பு கம்புகள் கட்டும் பணியை, கலெக்சன் பாயிண்ட் வரை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த ஆய்வில் கலெக்டருடன் மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் காலோன், மாநகர போலீஸ் துணை ஆணையாளர் (தெற்கு) சாய் பிரனீத், உதவி ஆணையாளர் செல்வ குமார், இன்ஸ்பெக்டர் சந்திரன், மாநகராட்சி உதவி ஆணையாளர் சையது முஸ்தபா கமால், உதவி பொறியாளர் செல்வ நாயகம், சுகாதார ஆய்வாளர் வனஜா, மண்டத் தலைவர் சுவிதா விமல், கவுன்சிலர் கருப்புசாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    அவனியாபுரம்- முத்துப்பட்டி சந்திப்பில் இருந்து வாடிவாசல், வீரர்களுக்கு சோதனை செய்யுமிடம், மருத்துவ பரி சோதனை மேற்கொள்ளும் இடம், கலெக்சன் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களுக்கு கலெக்டர் அனீஷ்சேகர் சுமார் 2 கி.மீட்டர் நடந்தே சென்று ஆய்வு செய்தார்.

    கடந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டி யில் நடைபெற்ற குளறுபடிகள், உயிரிழப்புகள் மீண்டும் நடக்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர், போலீஸ் துணை கமிஷனர் ஆகியோர் உத்தரவிட்டனர்.

    ×