என் மலர்
நீங்கள் தேடியது "tag 102485"
வண்டலூர்:
வண்டலூர் வட்டாட்சியர் அலுவலத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். இதில் ஒன்றிய துணைத் தலைவரும், ஒன்றிய செயலாளருமான ஆராமுதன், துணை வட்டாட்சியர் ராஜாகலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்நது வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ராகுல்நாத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து நில அளவியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் வருகை தரும்போது அவர்களுக்கு போதுமான இருக்கை அமைத்து கொடுக்க வேண்டும், கழிவறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து வட்டாசியர் அலுவலகத்தில், பொதுமக்கள் அளித்த மனுக்களின் நிலை குறித்து வட்டாட்சியர் ஆறுமுகத்திடம் கேட்டறிந்தார். பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுவை விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சிறுவாடி ஊராட்சி மன்ற அலுவலத்தில், மாவட்ட கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் மோகன் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டார். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணியாளர்களுக்கான ஊதியம் நிலுவையின்றி வழங்கிட வேண்டும். ஊராட்சி செயலாளர் பதிவேடுகளை சரியாக பதிவு செய்து வரவேண்டும்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்து திட்டப்பணிகள் நடைபெறுவதை கண்காணிப்பதுடன், பணிகள் காலதாமதமின்றி செயல்படும் வகையில் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
குறிப்பாக எந்த ஊராட்சியிலும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கான ஊதியம் உரிய காலங்களில் வழங்க வேண்டும். எங்காவது ஊதியம் காலதாமதமாக வழங்குவதாக புகார் வந்தால் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துஉள்ளார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு பேரிடர் காலங்களில் ஏற்படும் சங்கடங்களை தவிர்க்க ஊராட்சி ஒன்றியம் தோறும் புதிய குடியிருப்புகள் கட்ட தீர்மானிக்கப்பட்டு 443 வீடுகள் கட்டும் பணியினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடந்த 1-ந் தேதி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மலையாங்குளம் ஊராட்சியில் சுமார் ரூ.45 லட்சத்து 56 ஆயிரத்து 500 மதிப்பிலான நிலம் ஒதுக்கப்பட்டு, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தோட்டநாவல், சடச்சிவாக்கம், ரெட்டமங்கலம், நெல்வேலி, எலப்பாக்கம், நெய்யாடுபாக்கம், மலையாங்குளம், சிறுபினாயூர், தண்டரை, எடையும்புதூர், கிடங்கரை, கிளக்காடி, திருமுக்கூடல், பினாயூர், கட்டியாம்பந்தல் மற்றும் நாஞ்சிபுரம் ஆகிய இடங்களில் வசிக்கும் 178 இருளர் இன மக்களுக்கு ரூ.8.22 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணையை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்.பி.செல்வம், உத்திரமேரூர் எம்.எல்.ஏ க.சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவ ருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- இதற்கான இடம் தேர்வு செய்து அதற்கான பணிகளை இன்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- தஞ்சையில் அடுத்த மாதம் 15-ந் தேதி புத்தக திருவிழா தொடங்குகி 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை அரண்மனை வளாகத்தில் அடுத்த மாதம் புத்தக திருவிழா நடைபெற உள்ளது.
இதற்கான இடம் தேர்வு செய்து அதற்கான பணிகளை இன்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரங்குகள் அமைக்கப்படும் இடம்? உள்ளிட்ட பலவற்றை குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தஞ்சையில் அடுத்த மாதம் 15-ந் தேதி புத்தக திருவிழா தொடங்குகி 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஏராளமான புத்தக விற்பனையாளர்கள், வெளியீட்டாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் கருத்தரங்கு, சொற்பொழிவு, கவியரங்கம் நடைபெறும். 108 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் அனைவருக்கும் அதற்கான பயன்கள் கிடைக்கும். இந்த மாதம் 28 முதல் அடுத்த மாதம் 28-ந் தேதி வரை உழவன் ஆப் மூலம் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
புதுக்கோட்டை:
உரிமம் பெறாமல் வீட்டு உபயோக பூச்சி மருந்துகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து கடைகளிலும் எலி மருந்துகள், கரப்பான்பூச்சி கொல்லி மருந்துகள் மற்றும் கொசு விரட்டி போன்ற வீட்டு உபயோக பூச்சி மருந்துகளை விற்பனை செய்யவும், இருப்பு வைக்கவும் பூச்சிமருந்து விற்பனை உரிமம் அவசியம்/ உரிமம் இல்லாமல் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பாலான பெட்டிக் கடைகள், மளிகை கடைகள், ஷாப்பிங்மால் போன்ற சூப்பர் மார்க்கெட்களில் எலி மருந்துகள், கரப்பான்பூச்சி கொல்லி மருந்துகள், கொசுவர்த்தி சுருள் போன்ற வீட்டில் பயன்படுத்தும் பூச்சிகொல்லி மருந்துகளை விற்பனை உரிமம் பெறாமல் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன.
வீட்டில் பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்துகளுக்கும் கடைகளில் விற்பனை செய்ய உரிமம் பெறுவது அவசியமாகும். இதற்கு தேவையான உரிமத்தினை தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பூச்சி மருந்துக்கு ரூ.500 வீதம் அதிகபட்சம் ரூ.7500- செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ளலாம்.
உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது பூச்சிமருந்து சட்டம் 1968ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.எனவே, அனைத்து பெட்டிக் கடை, மளிகைகடை மற்றும் சூப்பர் மார்க்கெட் விற்பனையாளர்கள் உடன் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் . பூச்சி மருந்து சட்டம் 1968ன்படி உரிய பதிவேடுகள் மற்றும் ஆவணங்களையும் பராமரிப்பதோடு விற்பனை செய்வதற்கு உரிய பட்டியலையும் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், விற்பனை நிலையங்களில் வீட்டில் பயன்படுத்தும் பூச்சி மருந்துகளை உணவு பொருட்கள் அருகில் வைத்து விற்பனை செய்யாமல் தனியாக இருப்பு வைத்து விற்பனை செய்யவேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மேற்கண்ட வீட்டு உபயோக பூச்சி மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது.
மேலும் இது குறித்த விபரங்களுக்கு வேளாண்மை உதவி இயக்குநர், புதுக்கோட்டை - 6381741240, கந்தர்வகோட்டை 9442275726, திருவரங்குளம் - 8072154306, கறம்பக்குடி - 9443826047, அறந்தாங்கி - 9442634852, ஆவுடையார்கோவில் - 9944669129, மணமேல்குடி - 9865012210, திருமயம் - 9843322167, அரிமளம் - 9486493224, பொன்னமராவதி - 9442684565, அன்னவாசல் - 9629500919, விராலிமலை - 9443839994, குன்றாண்டார்கோவில் - 9442933492 அலுவலர்களை தொடர்பு கொண்டு உரிமம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.