என் மலர்
நீங்கள் தேடியது "tag 103885"
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா கொரக்கோட்டையில் செதுக்கப்பட்ட 350 டன் எடையுள்ள பிரமாண்ட கோதண்டராமர் சிலை, ஓசூர் வழியாக கர்நாடகா மாநிலம் ஈஜிபுராவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த சிலை, திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாக பல்வேறு இடையூறுகளை தாண்டி, ஓசூர் அருகே பேரண்டப்பள்ளிக்கு வந்தது.
பேரண்டப்பள்ளி பகுதியில் ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே ஓடும் தென் பெண்ணையாற்றில் சிலை கடந்து செல்ல வசதியாக தற்காலிக மண்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியது.
கடந்த ஒரு வாரமாக கர்நாடக மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக, தென்பெண்ணை ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், மண்பாலம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டு இருந்தது. அணைக்கு 400 கனஅடி முதல் 508 கனஅடி வரை தண்ணீர் வந்ததால், பணிகள் நடைபெறவில்லை. தற்போது 293 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றில் தண்ணீரின் அளவு குறைந்து உள்ளது.
இதையடுத்து தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பாலம் அமைக்கப்பட்டு பொறியாளர்கள் ஆய்வு செய்த பின், சிலை ஆற்றை கடக்க உள்ளது. இதனிடையே, கடந்த 13-வது நாளான இன்றும் பெருமாள் சிலை அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிலையை காண, ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சோலுடையான்பட்டியைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன் (வயது25). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் சில மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பினார். அதன் பின்னர் சொந்தமாக ஜே.சி.பி. எந்திரம் வாங்கி ஓட்டி வந்தார்.
மருதுபாண்டியன் தனது நண்பர்களான சக்தி (வயது18), ரவி (24) ஆகியோருடன் திருக்கோஷ்டியூர் சென்று அந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றினார்.
அதன் பின்னர் ஜே.சி.பி. வாகனத்தை அங்குள்ள வாட்டர் சர்வீஸ் நிறுவனத்துக்கு கொண்டு சென்றார். அங்கு வாகனத்தை அவரே சுத்தம் செய்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. மயங்கி விழுந்த அவரை திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மருதுபாண்டியனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 300 டன் எடையுள்ள பெருமாள் சிலை, பெங்களூரு ஈஜிபுரா என்ற இடத்தில் பீடத்துடன் இணைத்து 108 அடி உயரத்தில் நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது.
இதையொட்டி 64 அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட பிரமாண்ட பெருமாள் சிலை, 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் ஏற்றி கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து கடந்த மாதம் 7-ந் தேதி புறப்பட்டது. வந்தவாசியில் இருந்து திண்டிவனம், செஞ்சி, சேத்துப்பட்டு, அவலூர்பேட்டை, மங்களம் வழியாக திருவண்ணாமலை நகரின் எல்லைக்கு கடந்த 5-ந் தேதி மாலை சிலை வந்து சேர்ந்தது.
3 வால்வோ வாகனங்களின் உதவியுடன் கடந்த 7-ந் தேதி ரிங்ரோடு பகுதியை ராட்சத லாரி கடந்தது. வால்வோ வாகனங்களை இயக்குபவர்கள் மிக சாதுர்யமாக, கட்டிடங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் மெல்ல மெல்ல வாகனத்தை இயக்கினர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இருந்து, கடந்த 8-ந் தேதி செங்கம் நோக்கி பெருமாள் சிலையின் பயணம் தொடர்ந்தது. வழியில் பல்வேறு தடைகளை தாண்டி நேற்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையை வந்தடைந்தது.
அப்போது பிரமாண்ட பெருமாள் சிலையை, திரளான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.
அங்குள்ள குடியிருப்புகள் மற்றும் கடைகளுக்கு இடையூறு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால் சிலையை மேற்கொண்டு எடுத்துச்செல்ல முடியாத நிலை உருவானது. இதையடுத்து, ஏரிக்கரை பக்கமாக மண்டி வளாகத்தில் சிலையை வைத்துள்ளனர்.
இங்கிருந்து ஊத்தங்கரையை கடந்து கிருஷ்ணகிரி சாலையை சென்றடைந்து விட்டால் மிக எளிதாக பெங்களூருவுக்கு சிலையை எடுத்துச்சென்று விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூரில் சாலைகளில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டுவருகின்றன. இதைத் தடுக்கும் வகையில் மிதமான வேகத்தில் செல்லு மாறு வாகன ஓட்டிகளுக்கு அவ்வப்போது போக்கு வரத்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் பகுதிகளில் அதிவேகமாக வாகனங்கள் செல்வதாக ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து போக்குவரத்துக் கழக பறக்கும் படை போக்குவரத்து அலுவலர் மோகன், திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன் தலைமையில் திருவள்ளூர் திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பாண்டூர் அருகே வேகக் கட்டுப்பாட்டு கருவி மூலம் வாகனச் சோதனை மேற்கொண்டனர்.
இதில் சீருடை அணியாத டிரைவர்கள், ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஒட்டியது, ஓவர் லோடு, தகுதி சான்று, அனுமதி சான்று இல்லாமல், அதிவேகமாகவும், ஆவணங்கள் இல்லாமலும் விதிமுறை மீறி வந்த 60 வாகனங்களுக்கு ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காவேரி, ரவி குமார், பெருமாள் உடன் இருந்தனர்.
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு பலர் உதவி புரிந்து வருகின்றனர். பல இடங்களில் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மீட்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான மெழுகுவர்த்தி, பால் பவுடர், பிஸ்கட் பாக்கெட் டுகள், நூடுல்ஸ், தின்பண்டங்கள், ஆடைகள், செருப்புகள், கொசுவர்த்தி, நாப்கின்கள், சோப்புகள் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை திருச்சி தேசிய கல்லூரி மாணவர்கள் ஒரு மினி வேனில் எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் ஒப்படைப்பதற்காக சென்றனர். அவற்றை புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த பொதுமக்களிடம் நேரடியாக சென்று வழங்கினர்.

இதனை பார்த்த போது மக்கள் ஏன் வெறும் வண்டியாக போகிறீர்கள் என கேட்டதோடு, மாணவர்கள் வந்த வண்டிகளில் புயலால் சாய்ந்து கிடந்த மரங்களில் இருந்த 200 இளநீர் காய்களை பறித்து ஏற்றி வைத்து வழியனுப்பி வைத்தனர். #GajaCyclone
கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் உத்தரவின் பேரில், வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்ரமணியன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆனந்த், தனசேகரன், ரவிசந்திரன், மீனாட்சி ஆகியோர் கொண்ட குழுவினர் கரூர் சுங்ககேட், சுக்காலியூர் ரவுண்டானா, வெங்கக்கல்பட்டி பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது போக்குவரத்து விதிகளை மீறி நிர்ணயிக்கப்பட்ட எடையை விட கூடுதல் எடையை ஏற்றி கொண்டு வாகனங்கள் வருகிறதா? விபத்தை ஏற்படுத்தும் வகையில் குடித்துவிட்டு அதிகவேகமாக வாகனத்தை யாரும் ஓட்டி வருகின்றனரா? என அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி தணிக்கை செய்தனர்.
அப்போது அந்த வாகனங்களுக்கான இன்சூரன்ஸ், தகுதிச்சான்று உள்ளிட்டவற்றையும் சரிபார்த்தனர். இதில் தகுதிச்சான்றினை புதுப்பிக்காமல் இயக்கப்பட்ட 9 சரக்கு வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதேபோல் சாலைவரியை முறையாக செலுத்தாமல் இயக்கப்பட்ட ஆம்னி பஸ் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிக எடை ஏற்றி வந்த 7 சரக்கு வாகனங்களுக்கு ரூ.65 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, இனி தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் ஐகோர்ட்டு உத்தரவிட்டதன் பேரில், விபத்து உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் மோட்டார் சைக்கிள், மொபட் உள்ளிட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டுகின்றனரா?, பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிந்திருக்கிறாரா? என வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்ரமணியன் மற்றும் குழுவினர் கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த 17 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு ரூ.2,500 அபராதம் வசூல் செய்யப்பட்டது.
கரூரில் வாகன போக்குவரத்து அதிகம் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. எனவே உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிவது, சிக்னலில் நின்று செல்வது, மிதவேகமாக வாகனம் இயக்குவது, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது என்பன உள்ளிட்டவற்றை வாகன ஓட்டிகள் கடைபிடிக்க முன்வர வேண்டும்.
மேலும் சரக்கு வாகனங்களில் ஆடுமாடுகள், மனிதர்கள் உள்ளிட்டோரை ஏற்றி செல்வதும் விதிமீறலாகும். எனவே சரக்கு வாகன ஓட்டிகள் இதனை கட்டாயம் தவிர்க்க வேண்டும். விபத்தினை தடுக்கும் பொருட்டு தான் இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து வாகன விதிகளை மீறும் நபர்களை கண்காணித்து வருகிறோம். அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் வட்டார போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொன்னேரி உட்கோட்ட போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சோழவரம், பொன்னேரி, காட்டூர், திருப்பாலைவனம், மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிகவேகமாக வாகனம் ஓட்டி வந்தது, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், லைசென்ஸ், ஹெல் மேட் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்தவர்கள் என விதிமுறை மீறிய மொத்தம் 330 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களி டம் இருந்து ரூ. 33 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டது. #tamilnews