என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 103912"

    தாரமங்கலம் அருகே விபத்தில் காயம் அடைந்த வாலிபர் பலியானார்.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள சிக்கம்பட்டி பெட்ரோல் பங்க் அருகே கடந்த 26-ந்தேதி இரவு 2 மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதியதில் குறுக்குப்பட்டி பகுதியை சேர்ந்த கொத்தனார் சந்திரசேகரன் (40) என்பவர் பலியானார். 

    இந்த விபத்தில்  மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த பெரியகாடம்பட்டி பகுதியை சேர்ந்த சந்திரன்  மகன் சிவா (வயது21) என்பவர் பலத்த காயம் அடைந்தார்.

    உடனே அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றி தாரமங்கலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    லாரி மோதி வாலிபர் பலியானார்.
    மதுரை

    மதுரை பொன்மேனி நேரு நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 21). இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் சம்மட்டிபுரம்- காளவாசல் பைபாஸ் சந்திப்பு பகுதியில் சென்ற போது பின்புறமாக வந்த லாரி மோதியது. 

    இதில் ஆரோக்கியராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது லாரியின் பின் சக்கரம் தலையில் ஏறியது. இதில் படுகாயமடைந்த ஆரோக்கியராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான வாலிபர்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு   மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

     மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து  லாரி டிரைவர் பிரபு என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம் சூரமங்கலம் அடுத்த பெரிய மோட்டூர் பகுதியில் திருவிழாவில் மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது.
    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அடுத்த பெரிய மோட்டூர் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி  இன்று காலையில் நடந்தது. 

    அப்போது அதே ஊரை சேர்ந்த கோபி (வயது 29) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சேலம் டவுன் கிச்சிப்பாளையம் குப்பைமேடு ஹவுசிங் போர்டு காலனியைச்சேர்ந்த  தங்கராஜ் (27) என்பவர் அந்த மோட்டார்சைக்கிளை திருட முயற்சி செய்தார். இதைபார்த்த கோபி ஓடி வந்து அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

    இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு, தங்கராைஜ கைது செய்தனர்.
    திருவிழாவில் மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது
    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அடுத்த பெரிய மோட்டூர் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி  இன்று காலையில் நடந்தது. 

    அப்போது அதே ஊரை சேர்ந்த கோபி (வயது 29) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சேலம் டவுன் கிச்சிப்பாளையம் குப்பைமேடு ஹவுசிங் போர்டு காலனியைச்சேர்ந்த  தங்கராஜ் (27) என்பவர் அந்த மோட்டார்சைக்கிளை திருட முயற்சி செய்தார். இதைபார்த்த கோபி ஓடி வந்து அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

    இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு, தங்கராைஜ கைது செய்தனர்.
    பஸ்சை நிறுத்தி ரகளை செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆர்.எஸ்.மங்கலம்

    முதுகுளத்தூரில் இருந்து ஒரு அரசு பஸ் ராமநாதபுரம், தொண்டி வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் சிதம்பரம் சென்றது. அந்த பஸ் அ.மணக்குடி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது குடி போதையில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் ரோட்டின் குறுக்கே நின்று பஸ் டிரைவரிடம் ரகளையில் ஈடுபட்டார்.

    அதனை தட்டிக்கேட்ட பஸ் டிரைவர் ஜான்போஸ்கோ (வயது 40) என்பவரை கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அ.மணக்குடியைச் சேர்ந்த கிராமத்தினர் பஸ் நிறுத்தம் அருகே கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து பஸ் டிரைவர் ஜான் போஸ்கோ கொடுத்த புகாரின் பேரில் திருப்பாலைக்குடி இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் வழக்குப்பதிவு செய்து ரகளையில் ஈடுபட்ட நபரை தேடி வருகிறார். 

    சேலத்தில் வாலிபர் திடீர் மாயமானார்.
    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி என்.மேட்டுத்தெரு   தடிக்காரன்காடு பகுதியை சேர்ந்தவர் கோபிசங்கர்(வயது30). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 28-ந்தேதி ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. 

    அக்கம்பக்கத்தில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி கோபிசங்கரின் தந்தை சிவகுமார் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிவு செய்து கோபிசங்கர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று விசாரித்து வருகிறார்கள். 

    கோபிசங்கர் காணாமல் போன அன்று சந்தன கலர் கோடு போட்ட அரை கை சட்டையும், புளூ கலர் டிராயரும் அணிந்திருந்தார். அவரது இடது கண் பார்வை இல்லை. வலபுறமாக சாய்ந்து நடக்கும் பழக்கம் கொண்டவர். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றிய சேலம் வாலிபர் மீது தாக்குதல் பெற்றோர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
    குமாரபாளையம்:

    சேலம் தாதகாபட்டி சண்முகா நகரை  சேர்ந்தவர் சிரஞ்சீவி (வயது 29). இவருக்கும், கனகா என்பவருக்கும் திருமணமாகி, கனகா 8 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் மனைவிக்கு தெரியாமல் சிரஞ்சீவி  குமாரபாளையத்தை சேர்ந்த வினோதா (19) என்ற  பெண்ணை காதலித்து வந்துள்ளார். இது சிரஞ்சீவியின் தாயார் மற்றும் சித்திக்கு தெரியும் என கூறப்படுகிறது.

    கடந்த 27-ந்தேதி சிரஞ்சீவி தனது  கள்ளக்காதலி வினோதாவுடன் வீட்டை விட்டு வெளியேறி, சென்னை, பாண்டிச்சேரி, நாமக்கல், ஈரோடு ஆகிய இடங்களில் சுற்றி வந்துள்ளார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த  வினோதாவின் உறவினர்கள் அவர்களை பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம்  நம்பியூர் என்ற இடத்தில்  இருவரும் தங்கியிருந்தபோது, வினோதாவின் பெற்றோர், அண்ணன் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 8 பேர் அங்கு சென்று 2 பேரையும்  குமாரபாளையத்துக்கு அழைத்து வந்தனர். 

    அப்போது வழியில்  சேலம்-கோவை புறவழிச்சாலையில் உள்ள வெங்கடேஸ்வரா பேக்கரியில் டீ குடித்து விட்டு வினோதாவின் உறவினர்கள், சிரஞ்சீவியிடம் ஏற்கனவே உனக்கு திருமணம் ஆகி விட்டது. அப்படி இருக்கையில் எதற்கு வினோதாவை காதல் வலையில் மயக்கி அவருடைய வாழ்க்கையுடன் விளையாடுகிறாய்? என கேள்வி கேட்டு  சரமாரியாக தாக்கினர். 

    இதனால் உயிருக்கு  பயந்து சிரஞ்சீவி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அப்போது  புறவழிச்சாலையில் வாகனம் வருவதை கவனிக்காமல்  சாலையை  கடந்தபோது  அவர் மீது  வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. இதில் சிரஞ்சீவி படுகாயம் அடைந்தார்.   ஈரோடு  அரசு ஆஸ்பத்திரியில்  அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து குமாரபாளையம் போலீசார், பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    இலங்கை அகதிகள் முகாமில் பீர் பாட்டிலால் குத்தி வாலிபர் உயிரிழந்தார்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராஜன் (வயது 25), கூலித்தொழிலாளி. இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 

    கடந்த 5 ஆண்டுகளாக கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ராஜனின் மனைவி வனிதா கணவரிடம்  கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.  இதனால் மனமுடைந்த ராஜன் கடந்த 1-ந் தேதி அதிக அளவில் மது அருந்திவிட்டு மது பாட்டிலை உடைத்து  கழுத்தில் குத்தி உள்ளார். 

    இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்  வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த  ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்த முயற்சி நடந்தா என்பது குறித்து வாலிபர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக ராசிபுரத்தை சேர்ந்த விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் திருச்செங்கோடு தாலுகா வையப்பமலை அருகே உள்ள செக்காரப்பட்டியை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மனைவி சகுந்தலாவுக்கு கடந்த வியாழக்கிழமை இரவு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. சகுந்தலாவும், அவருடைய குழந்தையும் ஆஸ்பத்திரியில் தங்கி உள்ளனர்.

    நேற்று மதியம் ஆஸ்பத்திரிக்கு வெளியில் சகுந்தலா, அவருடைய கணவர் கந்தசாமி மற்றும் உறவினர்கள் உட்கார்ந்து இருந்தனர். சகுந்தலாவின் மாமியார் மாரியம்மாள், குழந்தையை வைத்து கொண்டு உறவினர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் சகுந்தலா குடும்பத்தினரை பார்த்து, தள்ளி உட்காருங்கள் என்று கூறியுள்ளார். பின்னர் அந்த வாலிபர் சகுந்தலாவின் குழந்தையின் அருகில் உட்கார்ந்து கொண்டார். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சகுந்தலா குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர்.

    உடனே இதுபற்றி ராசிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்த முயன்றாரா? என்பது பற்றி பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் ஆஸ்பத்திரி ஊழியர்கள், நோயாளிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பொள்ளாச்சி மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் சரணடைந்த வாலிபரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #PollachiCase #CBCID
    கோவை:

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி அளித்த புகாரின்பேரில் பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் மாணவியின் அண்ணனை தாக்கியதாக பார் நாகராஜ், செந்தில், வசந்தகுமார், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (28) கடந்த 25-ந் தேதி கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    மணிவண்ணனை 11 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அதன்பேரில் மணிவண்ணனை 4 நாட்கள் காவலில் விசாரிக்க மனுவை விசாரித்த நீதிபதி நாகராஜன் அனுமதி வழங்கினார். இதையடுத்து மணிவண்ணனை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலியல் வழக்கில் கைதான பைனாஸ் அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், ஜவுளிக்கடை அதிபர் சதிஷ், வசந்தகுமார் ஆகியோருடன் மணிவண்ணனுக்கு எந்தெந்த வகைகளில் பழக்கம் இருந்தது என்று விசாரித்தனர்.

    பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது தொடர்பாகவும் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் கைதான பார் நாகராஜிடமும் ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். அப்போது அவர் கூறிய தகவல்களின் அடிப்படையிலும் மணிவண்ணனிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசின் நண்பர்கள் சிலரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவரது நண்பர்கள் சிலருக்கு சம்மன் அனுப்ப உள்ளனர்.

    மேலும் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில் இருந்த பெண்கள் யார்-யார்? பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பேசுவதாக வெளியான ஆடியோவில் பேசிய பெண் யார்? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். #PollachiCase #CBCID

    காதல் திருமணம் செய்த கொண்ட வாலிபருடன் கல்லூரி மாணவி கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் சாரங்கபாணி சன்னதி தெருவை சேர்ந்தவர் ரூஸ்வெல்ட். இவருடைய மகள் மோனிஷா (வயது21). இவர் கும்பகோணம் அரசினர் தன்னாட்சி கல்லூரியில் படித்து வருகிறார்.

    இந்த நிலையில் 10 நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் கடந்த 7-ந் தேதி இரவு மோனிஷா திடீரென மாயமானார். அவர் நகை, பணத்துடன் மாயமாகி விட்டதாக அவருடைய தாய் கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் அளித்து இருந்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் மோனிஷா தன்னுடன் படிக்கும் வலங்கைமான் அருகே உள்ள நரசிங்கமங்கலத்தை சேர்ந்த ரங்கசாமி மகன் விக்னேஷ் (21) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மோனிஷா, தனது காதல் கணவர் விக்னேசுடன் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்.

    இதையடுத்து கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் மோனிஷா, விக்னேஷ் ஆகியோரிடம் விசாரித்தனர். அப்போது தங்களுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளித்த காதல் ஜோடி, பாதுகாப்பு தர வேண்டும் என்று போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தனது கணவர் வீட்டுக்கு செல்வதாக மோனிஷா கூறியதை அடுத்து, இருவரையும் விக்னேசின் தந்தை ரங்கசாமியுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். #tamilnews
    கேரளாவில் விபத்தில் இடுப்புக்கு கீழ் செயல் இழந்த வாலிபரை கல்லூரி மாணவி கரம் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா சீதாதேடு பகுதியை சேர்ந்தவர் புஷ்பகரன். இவரது மகள் நீது (வயது 18). கல்லூரி மாணவி. இவருக்கும் கோழிக்கோடு நாதாபுரம் நரிப்பாறையை சேர்ந்த நானு என்பவரது மகன் ஸ்ரீகாந்த் (24) என்பவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது.

    பரஸ்பரமாக கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். ஸ்ரீகாந்த் ஒரு விபத்தில் சிக்கியதில் இடுப்புக்கு கீழ் உணர்ச்சிகளை இழந்தார். அதன்படி இடுப்புக்கு கீழ் செயல் இழந்து அவதியடைந்தார்.

    இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நீது திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து பத்தினம்திட்டா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி நீதுவை தேடினர். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தேடியபோது நீதுவின் போன் சிக்னல் நாதாபுரம் நரிப்பாறையில் இருப்பதை காட்டியது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் நாதாபுரம் டி.எஸ்.பி. ஆபிரகாம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியை மீட்டு கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    நீதிமன்றம் விசாரித்தபோது தனக்கு 18 வயது முடிந்து விட்டது. பேஸ்புக் காதலர் ஸ்ரீகாந்த் இடுப்புக்கு கீழ் உணர்ச்சிகள் இல்லாமல் செயல் இழந்துபோனாலும் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறினார். வழக்கை விசாரித்த கோர்ட்டு திருமணத்துக்கு தடை ஏதும் இல்லை என்று தீர்ப்பளித்தது.

    இதனையடுத்து நேற்று பெற்றோர்கள் சம்மதத்துடன் நீதுவுக்கும் ஸ்ரீகாந்த்துக்கும் திருமணம் நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்தினர்.

    ×