என் மலர்
நீங்கள் தேடியது "tag 106175"
சேலம் 5 ரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் மஞ்சள்நாதன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெட்ரோல், டீசலின் தரம் குறித்து அவர் ஆய்வு நடத்தினார்.
பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் சண்முகம் அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தார். தொடர்ந்து தொழிலாளர் துறை உதவி ஆணையர் மஞ்சள்நாதன் ஊழியர்களிடம் தரத்தின் விவரங்கள் குறித்து கேட்டு அறிந்தார்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அம்ரூத் திட்டத்தில் 4வது குடிநீர் திட்டப்பணி ரூ. 1,121 கோடி செலவில் 2017 -18ம் நிதியாண்டில் துவங்கப்பட்டது. மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலிருந்து குடிநீர் எடுத்து அன்னூர் அருகே குறுக்கபாளையத்தில் தலைமை சுத்திகரிப்பு மையத்தில் சுத்திகரிப்பு செய்து, ராட்சத குழாய்கள் மூலம் திருப்பூர் கொண்டு வரப்படுகிறது.
தற்போது சுத்திகரிப்பு மையம் கட்டுமானம் மற்றும் கருவிகள் பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. இதற்காக 196 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அது வரை, 20 கி.மீ., தூரத்துக்கு பிரதான குழாய்கள் பதித்தும், அங்கிருந்து ஏறத்தாழ, 150 கி.மீ., நீளத்துக்கு குழாய் பதித்தும் மேல் நிலை தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு வந்து சேர்க்கப்படுகிறது.
அவ்வகையில் மாநகராட்சி பகுதியில் 29 இடங்களில் மேல்நிலை மற்றும் தரைமட்ட தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. பெரும்பாலான தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஒரு சில இடங்களில் நிறைவடையும் நிலையில் உள்ளது. மேலும் 1,062 கி.மீ., நீளத்துக்கு நகரப்பகுதியில் வினியோக குழாய்கள் பதிக்கும் பணி பெரும்பாலும் முடிவடையும் நிலையில் உள்ளது.
இத்திட்டம் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் தினமும் 230 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும். இதனால், மாநகராட்சி பகுதியில் ஏறத்தாழ 1.2 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.
இத்திட்டப்பணி தற்போது 75 சதவீதத்துக்கும் மேல் நிறைவடைந்துள்ளது. பிரதான குழாய்கள் பதிக்கப்படும் இடங்களில் 3 இடங்களில் ெரயில்வே பாதையையும், 3 இடங்களில் தேசிய நெடுஞ்சாலையையும் கடந்து வர வேண்டிய நிலை உள்ளது. இதற்கு அனுமதி பெற தாமதம் ஏற்பட்டது.
தற்போது இதில் அனுமதி கிடைத்துள்ளதால் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன. அவ்வகையில் மேட்டுப்பாளையத்தில் ரெயில்வே பாதையை கடக்கும் இடத்தில் மற்றும் சுத்திகரிப்பு மையத்தில் நடைபெறும் பணியையும் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் நேரில் சென்று பார்வையிட்டார்.
- போலீசார் சீர்காழி ஈசானியத்தெரு டாஸ்மாக் கடையில் திடீர் ஆய்வு செய்தனர்.
- பாரினை பூட்டி சீல்வைத்து அங்கு பணியாற்றி வந்த சைஜி என்பவரை கைது செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி பகுதியில் உரிமம் இன்றி டாஸ்மாக் அருகே பார்கள் செயல்படுவதாக வந்த புகாரின் பேரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் வாசுதேவன் தலைமையில் சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் செல்வி மற்றும் போலீசார் சீர்காழி ஈசானியத்தெரு டாஸ்மாக் கடையில் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு உரிமம் இன்றி பார் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த பாரினை பூட்டி சீல் வைத்தனர்.
மேலும் அங்கு விற்பனையில் ஈடுப்பட்டிருந்த மாதானம் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து கடவாசல் டாஸ்மாக் கடையில் உரிமம் இன்றி செயல்பட்ட பாரினை பூட்டி சீல்வைத்து அங்கு பணியாற்றிவந்த புதுத்துறையை சேர்ந்த சைஜி என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் திருமுல்லை வாசல், டாஸ்மார்க் கடையில்பார் நடத்திய சசிகுமார், மாதானம் டாஸ்மாக் கடையில் பார் நடத்திய முத்து கடைக்கண், விநாயக நல்லூரில் டாஸ்மாக் கடையில் பார் நடத்திய பார்த்தராஜ் ஆகிய 5 பே ரை கைது செய்து 5 பார்கள் பூட்டி சீல்வைக்கப்பட்டது.
பருவ மழை பொய்த்ததால் இந்த ஆண்டு சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டன.
பூண்டி, புழல் ஏரியில் உள்ள தண்ணீரை இன்னும் ஒருவாரத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்து உள்ளது. குடிநீருக்காக பொதுமக்கள் காலி குடங்களுடன் தினமும் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது.
குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கல்குவாரி நீர் மற்றும் காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணற்று தண்ணீரை கூடுதலாக எடுத்து பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதேபோல பம்மல் காமராஜபுரத்தில் உள்ள செங்கழுநீர் கல்குவாரியில் தேங்கி உள்ள நீரை குடிநீருக்கு பயன்படுத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ. 6.5 கோடி செலவில் பம்மல், அனகாபுத்தூர் ஆகிய 2 நகராட்சிகளிலும் தனித்தனியாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
சோதனை ஓட்டமாக தண்ணீரை சுத்திகரித்து குடிநீருக்கு பயன்படுத்த உகந்ததா? என்று அறிய மாநில சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கிண்டி ஆராய்ச்சி மைய நீர் பரிசோதனை துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் இதுவரை தண்ணீரின் தன்மை குறித்த முடிவு தெரிவிக்காமல் உள்ளதாக தெரிகிறது. இதனால் செங்கழுநீர் கல்குவாரி நீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறும்போது, ‘கல்குவாரி, ஏரி, குளங்களில் உள்ள நீரை குடிநீருக்கு பயன்படுத்த தகுதி உள்ளதா? என்பதை பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க முடியும்.
நீரின் தன்மை குறித்து பரிசோதனைக்கு அனுப்பிய 3 நாட்களில் முடிவை தெரிவிக்க வேண்டும். கல்குவாரி நீரின் தன்மை குறித்த முடிவு என்ன காரணத்தினால் தாமதம் என்று தெரியவில்லை. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
பம்மல், அனகாபுத்தூர் கல்குவாரி நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உடனடியாக ஆய்வு செய்யப்படும்’ என்றார்.
