என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மன்"

    • தினமும் காலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
    • இன்று சாந்திஹோமம், அஸ்த்திர கலச பூஜை நடக்கிறது.

    கீழ்குளம் பறம்பு அம்மனாடும்தேரியில் பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புனர்பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகவிழா கடந்த 17-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா முதல் நாள் தொடங்கி தினமும் காலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    விழாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு கணபதிஹோமம், மாலை 5.30 மணிக்கு சாந்திஹோமம், அஸ்த்திர கலச பூஜை, பூஜை பலி, உத்வஸிதத்து ஜீவ கலசத்திற்கு சுற்று எழுந்தருளல், பள்ளி உறக்கம் ஆகியவை நடக்கிறது. நாளை(திங்கட்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கணபதிஹோமம், பிரதிஷ்டை ஹோமம், பள்ளி எழுப்பல், பிரதிஷ்டை பலி, மூர்த்திகள் கோவிலுக்குள் எழுந்தருளுதல், காலை 6 மணிக்கு பிரதிஷ்டை, தொடர்ந்து பகவதி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ஜீவ கலச அபிஷேகம், அஷ்ட பந்தன கும்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை, 9.30 மணிக்கு வாழ்த்தரங்கம், பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, 8 மணிக்கு சிறப்பு பூஜை, 8.30 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • புதுப்பாளையம் மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 7-ந் தேதி கம்பம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் விழாவுடன் தொடங்கியது.
    • தொடர்ந்து 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் புதுப்பாளையம் மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 7-ந் தேதி கம்பம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதையடுத்து 12-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், 14-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மறு காப்பு கட்டுதலும் நடைபெற்றது. 15-ந் தேதி முதல் நேற்று 20-ந் தேதி வரை அம்மன் தினந்தோறும் இரவு சிம்மம், ரிஷபம், அன்னபட்சி உள்ளிட்ட வாகனங்களில் முக்கிய விதிகள் வழியாக திருவீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று 21-ந் தேதி மாலை வடிசோறு, மாவிளக்கு மற்றும் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை 22-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் அம்மன் ரதம் ஏறுதலும், மாலை 3.30 மணிக்கு மகா மாரியம்மன் திருத்தேரில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து 23-ந் தேதி செவ்வாய்க்கிழமை மாலை ஆண்கள் அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும், பெண்கள் பூவாரி போட்டுக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் 24-ந் தேதி புதன்கிழமை பொங்கல் வைத்து, மாவிளக்கு கொண்டு வந்து பூஜையும், அக்னி சட்டி எடுத்தல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    25-ந் தேதி கம்பம் ஆற்றுக்கு செல்லுதலும், கிடா வெட்டும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 26-ந் தேதி மஞ்சள் நீராடலும், இரவு அம்மன் முத்துப்பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், 27-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 28-ந் தேதி காலை 6 மணிக்கு யாக பூஜை, அன்னபாவாடை மற்றும் மகாதீபாராதனையும் நடைபெறுகிறது.

    • ஆந்திரா மாநிலம் காக்கிநாடா ஜெகநாதபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
    • கோவிலில் தங்கத்திலான புடவையால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் காக்கிநாடா ஜெகநாதபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.

    கோவில் நிர்வாகிகள் கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு 3 கிலோ எடையுள்ள தங்க சரிகை புடவை கொண்டு அலங்காரம் செய்ய முடிவு செய்தனர்.

    இதையடுத்து 3 கிலோ தங்கத்தால் ரூ.2 கோடி மதிப்பிலான தங்க புடவை தயார் செய்யப்பட்டது. நேற்று கோவிலில் தங்கத்திலான புடவையால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர்.

    இதை அறிந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் கோவிலில் திரண்டனர். அங்கு நடந்த பூஜையில் அம்மனை தரிசித்து சென்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஆந்திர மாநில சட்டப்பேரவை துணைத்தலைவர் கொலகட்லா வீரபத்ரசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    • பக்தர்கள் பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட காவடிகளை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.
    • அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    திருவிழாவின் 4-வது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் 35 ஆம் ஆண்டு பால்காவடி ஊர்வலம் நடைபெற்றது.

    இதில் விரதம் இருந்த பக்தர்கள் பால்,பன்னீர்,சந்தனம் உள்ளிட்ட காவடிகளை தலையில் சுமந்தவாறு புதியபேருந்து நிலையத்தில் உள்ள ஸ்ரீ அச்சம் தீர்த்த விநாயகர் ஆலயத்தில் முக்கிய வீதிகள் வழியாக நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயம் வரை மேள தாளங்கள் முழங்க இன்னிசையோடு பார்வதி, சிவன், காளி, கருப்புசாமி வேடமிட்டு நடனத்தோடு காவடிகள் சென்று அம்மனுக்கு பால் பன்னீர் சந்தன அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து ஏராளமான பக்தர்கள் சக்திகரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே அரயபுரம் கிராமத்தில் உள்ள வீரமகாசக்தி பத்திரகாளி அம்மன் கோவிலில் 12-ம் ஆண்டு திருவிழா கடந்த 17-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவை முன்னிட்டு நேற்று 108 சிவாலயம் குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து ஏராளமான பக்தர்கள் சக்திகரகம், திரிசூலம், அக்னி கொப்பரை, அரிவாள் எடுத்தும், பால்குடம், காவடி எடுத்தும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    • தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் செய்யப்படும் அம்மன் வழிபாடுகள், பிரார்த்தனைகள் மற்ற பகுதி மக்களுக்கு வித்தியாசமானதாகவும், புதுமையானதாகவும் இருக்கும்.
    • வேப்பிலை ஆடையுடன் பெரியபாளையத்தம்மன் கோவில் பிரகாரத்தில் 3 தடவை சுற்றி வருவார்கள்.

    தமிழ்நாட்டில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அம்மன் கோவில்கள் உள்ளன. இதில் சில கோவில்களே மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று திகழ்கின்றன.

    இந்த தலங்களிலும் குறிப்பிட்ட சில தலங்களே சக்தி தலங்களாக உருவெடுத்துள்ளன. இந்த தலங்கள் ஒவ்வொன்றிலும் அம்பிகையின் அவதார வரலாறு ஐதீகமாக பின்னணியில் உள்ளது.

    ஒவ்வொரு அவதாரமும், அவதார நோக்கமும் வேறு, வேறாக உள்ளன. இதன் காரணமாகத்தான் பராசக்தியானவள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வித்தியாசமான பெயர்களில் வீற்றிருந்து அருளாட்சி செய்து வருகிறாள்.

    பெரும்பாலும் அந்தந்த தலத்தில் அமர்ந்துள்ள அம்பிகையின் வரலாறுக்கு ஏற்ப வழிபாடுகள் இருக்கும். அந்த வழிபாடுகள் எப்படி தோன்றி இருக்கும் என்பதை சற்று உன்னிப்பாக கவனித்துப் பார்த்தால், அம்பிகையே அந்த பிரார்த்தனைகளையும், வழிபாடுகளையும் உருவாக்கிய உண்மை தெரியவரும்.

    சில அம்மனுக்கு தீச்சட்டி ஏந்தி சென்றால் பிடிக்கும். சில அம்மனுக்கு மொட்டை போட்டு மாவிளக்கு பிரார்த்தனை செய்தால் பிடிக்கும்.

    சில அம்மன்கள் பொங்கலிட்டு வழிபடுவதை விரும்பும். அன்னதானம் செய்பவர்களையும், கூழ்வார்ப்பவர்களையும் அம்மன் காப்பாள் என்பது பொதுவான நம்பிக்கை.

    இப்படி தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் செய்யப்படும் அம்மன் வழிபாடுகள், பிரார்த்தனைகள் மற்ற பகுதி மக்களுக்கு வித்தியாசமானதாகவும், புதுமையானதாகவும் இருக்கும்.

    இவை அனைத்திலும் இருந்து முற்றிலும் ஒரு மாறுபட்ட வழிபாடாக வேப்பஞ்சேலை வழிபாடு உள்ளது.

    இது பிரச்சினைகளை வேரறுக்கும் மகத்துவம் நிறைந்த வழிபாடாகும்.

    அம்மனின் மனதை குளிர வைத்து அவள் அருளை வாரி வாரி வழங்க வைக்கும் வழிபாடாகும்.

    இத்தகைய சிறப்பான ஒரு வழிபாடு பெரியபாளையம் கோவிலில் மட்டுமே காலம், காலமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் வேறு ஒரு எந்த ஆலயத்திலும் அற்புதமான இந்த அபூர்வ வழிபாட்டை பக்தர்கள் காண முடியாது.

    வேப்பஞ்சேலை வழிபாடு என்றால் என்ன? அதை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்ற விவரம் தெரியுமா?

    உடம்பில் எந்த உடையும் அணியாமல், உன் தலத்தை சுற்றி வருகிறேன், தாயே.... என் பிரார்த்தனையை நிறைவேற்று என்று வேண்டிக் கொள்வதே இந்த வழிபாட்டின் அடிப்படையாகும்.

    எந்த ஒரு பிரச்சினைக்காகவும் இந்த வழிபாடு செய்வதாக வேண்டிக் கொள்ளலாம்.

    அப்படி வேண்டி கொள்ளும் பெண்கள் உடலில் துணிகளை களைந்து விட்டு, அதற்குப் பதில் முழுக்க முழுக்க வேப்ப இலைகளால் உடலை சுற்றி மறைத்துக் கொள்வார்கள். அந்த வேப்பிலை ஆடையுடன் பெரியபாளையத்தம்மன் கோவில் பிரகாரத்தில் 3 தடவை சுற்றி வருவார்கள்.

    இதுதான் வேப்பஞ்சேலை வழிபாடாகும்.

    இந்த வேப்பஞ்சேலை வழிபாடு எப்படி தோன்றியது தெரியுமா? அதிலும் வரலாற்று பின்னணி உள்ளது.

    நீங்கள் பெரியபாளையம் கோவில் வரலாறு, ரேணுகாதேவி அவதார வரலாற்றை படித்து இருப்பீர்கள்.

    பரசுராமரை இழந்து துடித்த ரேணுகாதேவி தீ மூட்டி அதில் குதித்ததையும், வருண பகவான் மழை பொய்வித்து அவளை காப்பாற்றியதையும் படித்து இருப்பீர்கள்.

    தீயில் குதித்ததால் உடைகளை இழந்து காயம் அடைந்த ரேணுகாதேவி வேப்ப மரத்தின் இலைகளை கயிற்றில் கட்டி, ஆடையாக்கி அணிந்து கொண்டாள். அதை பிரதிபலிக்கும் வகையில்தான் வேப்பஞ்சேலை வழிபாடு தோன்றியது.

    உடம்பில் பொட்டுத் துணி இல்லாமல், வேப்ப இலை ஆடை உடுத்தி, தன்னைச் சுற்றி வரும் பெண்களை காணும் போது, பெரியளையத்தம்மனின் மனம் பனிக்கட்டிப் போல உருகும். தன் பக்தை ஒருத்தி அதிகபட்ச பக்தியை காட்ட செய்யும் வேப்பிலை ஆடை வழிபாட்டை அவள் ஏற்றுக் கொள்கிறாள்.

    அதோடு அந்த பக்தை எதை நினைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்கிறாளோ, அதை எந்தவித தங்கு தடையின்றி நிறைவேற்றி கொடுக்கிறாள். நிறைய பெண்கள், அம்மனிடம் வேண்டிக் கொண்டு, அது வெற்றிகரமாக முடிந்ததும் வேப்பஞ்சேலை வழிபாடு செய்வதுண்டு.

    இதுவரை லட்சக்கணக்கான பெண்கள் வேப்பஞ்சேலை வழிபாட்டை செய்து பலன் பெற்றுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வந்தெல்லாம் பவானி தாயின் பக்தைகள் வேப்பஞ்சேலை அணிந்து பலன் பெற்று சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    பெரியபாளையத்தம்மனே உருவாக்கிய வழிபாடு என்பதால் வேப்பஞ்சேலை பிரார்த்தனைக்கு 100 சதவீத வெற்றி கிடைக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். ஒரு பெண் வேப்பஞ்சேலை அணிந்து, பெரியளையத்தம்மனை சுற்றி வந்து விட்டால், அவள் பிரச்சினைகள் அன்றோடு தீர்ந்து விட்டது என்று அர்த்தம்.

    சில பெண்களுக்கு குடிகார கணவரால் தினமும் வாழ்க்கை நிம்மதி இல்லாமல் இருக்கலாம்.

    சில பெண்களுக்கு மகன் அல்லது மகள்களால் பிரச்சினை ஏற்படலாம்.

    சிலர் வேலை கிடைக்காமல் தவிக்கலாம். சிலர் புத்திர பாக்கியத்துக்காக ஏங்கலாம்.

    சிலருக்கு எல்லா செல்வமும் இருந்தாலும், மன நிம்மதி என்பது கடுகு அளவு கூட இல்லாமல் இருக்கலாம்.

    இப்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஒரு நாள் வேப்பஞ்சேலை வழிபாட்டில், அந்த பிரச்சினைகள் தூள்... தூளாக பறந்தோடி விடும்.

    இதனால்தான் வேப்பஞ்சேலை அணிந்து பெரியபாளையத்தம்மனை சுற்றி வரும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது.

    முன்பெல்லாம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தான் வேப்பஞ்சேலை வழிபாடு நடந்து வந்தது. பிறகு பெண்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேப்பஞ்சேலை வழிபாட்டை செய்யத் தொடங்கினார்கள்.

    கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் எல்லா நாட்களிலும் வேப்பஞ்சேலை வழிபாட்டை செய்து வருகிறார்கள். இதனால் வேப்பஞ்சேலை பிரார்த்தனையை நிறைவேற்ற நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இப்போதும் நீங்கள் சாதாரண நாட்களில் பெரியபாளையம் கோவிலுக்கு சென்றால், ஏராளமான பெண்கள் வேப்பஞ்சேலை கட்டி கூப்பிய கரங்களுடன் கோவில் வெளி பிரகாரத்தில் வலம் வருவதை காண முடியும். அந்த பெண்களின் முகத்தைப் பார்த்தால், ''தாயே என் பிராத்தனையை உடனே நிறைவேற்றினாய். உனக்கு நன்றி காணிக்கை செலுத்துகிறேன்.... தாயே...'' என்று சொல்லாமல் சொல்வது போலத் தோன்றும்.

    இந்த வழிபாடு பற்றி கேள்விப்படும் பெண்களுக்கு பல சந்தேகங்கள் ஏற்படுவதுண்டு.

    வேப்பஞ்சேலை ஆடையை எப்படி தயார் செய்வது?

    வேப்பஞ்சேலை ஆடையை மாற்றிக் கொள்ள கோவிலில் சரியான இடவசதி இருக்குமா?

    வேப்பஞ்சேலையை எப்படி உடுத்துவது?

    இப்படியெல்லாம் சந்தேகங்கள், கேள்விகள் மனதில் எழுவதுண்டு.

    கவலையேப்படாதீர்கள். வேப்பஞ்சேலை ஆடையை பக்தர்கள் யாரும் தயாரிக்க வேண்டும் என்ற கண்டிப்பு இல்லை.

    வேப்ப இலைகளை சேகரித்து நாமே கயிற்றில் கட்டி தொகுத்து கொண்டு செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை.

    நீங்கள் விரும்பினால், உங்களால் முடிந்தால், நிறைய வேப்ப இலை தழைகளை சேகரித்து கயிற்றில் நெருக்கமாக கட்டி வேப்பஞ்சேலை தயாரித்து எடுத்துச் செல்லாம்.

    முடியாவிட்டால், கோவில் சுற்றுப் பகுதியில் விற்பனை செய்யப்படும் வேப்பஞ்சேலைகளை வாங்கிப் பயன்படுத்தலாம்.

    ஒரு வேப்பஞ்சேலையை 30 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.

    துணிகளை மாற்றி விட்டு, வேப்பஞ்சேலையை கட்டுவதற்கு என்றே கோவில் நிர்வாகம் சார்பில் ஏராளமான அறைகள் கட்டப்பட்டுள்ளன. பாதுகாப்பான, முழுக்க முழுக்க பெண்களே பயன்படுத்தும் அந்த அறைகளில் பக்தைகள் தங்கள் உடைகளை மாற்றிக் கொள்ளலாம்.

    சில பெண்களுக்கு வேப்பஞ்சேலையை எப்படி கட்டிக் கொள்வது என்ற சந்தேகம் எழலாம். அதற்கு உதவவும் பணியாளர்கள் உள்ளனர். அந்த பணியாளர்கள் கயிற்றால் வேப்பஞ்சேலையை நன்கு கட்டி விடுவார்கள்.

    அதன் பிறகு ஆலயத்தை 3 தடவை சுற்றி வந்து, பெரியபாளையத்தம்மனை வணங்கி விட்டு, மீண்டும் அறைக்கு சென்று வேப்பஞ்சேலையை களைந்து விட்டு, உடை மாற்றலாம்.

    முன்பெல்லாம் பெண்கள் மட்டுமே இந்த பிரார்த்தனையை செய்து வந்தனர். சமீப காலமாக சிறுவர், சிறுமியர்களும், ஆண்களும் கூட இந்த வேப்பஞ்சேலை வழிபாட்டை செய்கிறார்கள்.

    இந்த பிரார்த்தனை செய்வதற்கு வயது வரம்பு இல்லை. எந்த வயதினரும் செய்யலாம். பயன்பெறலாம்.

    • வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு வழிபாடு
    • ஜூன் மாதம் 2-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திரு விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்த திருவிழா வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவை யொட்டி தினமும் அம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, இன்னிசை கச்சேரி, பக்தி சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    2-ம் திருவிழாவான நேற்று மாலை சமய உரையும், அதைத்தொடர்ந்து வயலின் இன்னிசை கச்சேரியும், பரதநாட்டியமும் நடந்தது. அதன்பிறகு அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கிளி வாகனத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, நடுத்தெரு, கீழரத வீதி வழியாக கன்னியம்பலம் மண்டபத்தை சென்றடைந்தது. அந்த மண்டபத்துக்குள் அம்மன் சிறிதுநேரம் இளைப்பாறும் நிகழ்ச்சி நடந்தது.

    அதன்பிறகு அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் அங்கிருந்து வாகன பவனி புறப்பட்டு சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் வாகனத்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்"சாத்தி வழிபட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    3-வது நாளான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் செந்தில் ஆண்டவர் பாதயாத்திரை குழு சார்பில் பகவதி அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், நெய், தேன், மஞ்சள் பொடி, சந்தனம், களபம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    முன்னதாக அன்ன வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணி விக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்கா ரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு அன்ன தானமும் நடந்தது. மாலை 6 மணிக்கு சமய உரையும், இரவு 7 மணிக்கு பக்தி பஜனையும், 9 மணிக்கு அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • சிறப்பு மலர் அலங்காரத்துடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளினார்.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே கலசம்பாடி நற்கூந்தலழகி அம்மன் கோவிலின் 19-ம் ஆண்டு வைகாசி தீமிதி திருவிழா கடந்த 21 ஆம் தேதி காப்புக் கட்டுதல் மற்றும் பூச்சொரிதலுடன் தெரடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது.

    முன்னதாக அம்மன் மணி மண்டபத்திலிருந்து சிறப்பு மலர் அலங்காரத்துடன் மின் விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட வாக னத்தில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து காப்பு கட்டி விரதமிருந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரா தனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திரு விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 10 நாட்களாக நடந்து வந்த திருவிழா இன்றுடன் முடிவடைகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திரு விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்களாக நடந்து வந்த திருவிழா இன்றுடன் முடிவடைகிறது.

    திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, இன்னிசை கச்சேரி, பக்தி சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    9-ம் திருவிழாவான நேற்று மாலை 6.30 மணிக்கு கன்னியாகுமரி பார்வதிகாரர் குடும்பத்தினர் சார்பில் மண்டகப்படி நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கோவிலில் இருந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மனை எழுந்தருள செய்து மேளதாளம் முழங்க சன்னதி தெரு வழியாக தெற்குரத வீதியில் உள்ள கன்னியம்பலம் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடும் விசேஷ பூஜை களும், அலங்கார தீபாராத னையும் நடந்தது. இதில் மண்டகப்படி கட்டளைதாரர்கள் ஹரிகரன், சிவசுப்பிரமணியன் விஜய் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    பின்னர் இரவு 7 மணிக்கு சமயசொற்பொழிவும் அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு பக்தி பஜனை யும் நடந்தது. அதன்பிறகு பகவதி அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. வாகன பவனி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, நடுத்தெரு, கீழரதவீதி, சன்னதிதெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடு கிலும் பக்தர்கள் வாகனத்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய், பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபட்டனர்.

    • அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை நாணயக்கார தெருவில் உள்ள உச்சமாகா ளியம்மன் கோவிலில் வைகாசி உற்சவம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து காளியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பெண்கள் பூந்தட்டுகள் எடுத்து ஊர்வலமாக காளியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர், அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    விழாவில் கலந்துகொண்ட பெண்களுக்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    அதனைய டுத்து கலசம்பாடி முத்து பூசாரி குழுவினரின் காளியாட்டத்துடன் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பாண்டிய மன்னன் முன் அறம் வளர்த்த நாயகி அம்மன் தோன்றினாள்.
    • அம்மனுக்கு கோபம் வரும் சமயம் ஊரில் உள்ள மக்களுக்கு முத்து வாரி போடுவது தட்டத்தி அம்மனின் வழக்கம்.

    குலசேகர பாண்டிய மன்னன், சுற்றியுள்ள சிற்றரசர்களிடம் போரிட்டு வெற்றிபெற்று தம் ஆதிக்கத்தை மதுரை முழுவதும் பரப்பினார். இதன் விளைவாக கேரளா நாட்டை கைப்பற்ற எண்ணி திருவனந்தபுர மன்னனிடம் தோல்வியுற்றான். வரும் வழியில் இரவு வெகு நேரமானதால் தூங்கிவிட்டான் பாண்டிய மன்னன். அவன்முன் அறம் வளர்த்த நாயகி அம்மன் தோன்றினாள்.

    "பாண்டிய மன்னா தூங்கிவிடாதே, தூங்கி உன் நாட்டின் பெருமை இழந்து விடாதே ஒருமுறை தோற்றால் என்ன? மறுமுறை முயற்சி செய் என்று அருள்வாக்கு சொல்லி ஆசிர்வதித்து மறைந்தாள். மீண்டும் மன்னன் படையெடுத்து வெற்றி பெற்றான். இதனால் அம்மனுக்கு கோயில் கட்டினான். கோவில் அருகே ஊர் அமைந்ததால் மன்னனின் நினைவாக குலசேகர பட்டினம் என பெயர் பெற்றது.

    முத்தாரம்மனின் ஆதி பெயர் தட்டத்தி அம்மனாகும். அம்மனுக்கு கோபம் வரும் சமயம் ஊரில் உள்ள மக்களுக்கு முத்து வாரி போடுவது தட்டத்தி அம்மனின் வழக்கம். அவ்வாறு முத்துவாரி போடுவதால் அம்மனுக்கு முத்தாரம்மன் என்று பெயர் மாற்றப்பட்டது.

    • வியாபாரிகள் தோனிகளில் சரக்குகளை எடுத்து சென்று வியாபாரம் செய்து வருவது வழக்கம்.
    • வேதனையுற்ற செட்டியாரும், அவர் மனைவியும், சிவனை வேண்டினார்கள்.

    முன்பொரு காலத்தில் வியாபாரிகள் தோனிகளில் சரக்குகளை எடுத்து சென்று வியாபாரம் செய்து வருவது வழக்கம். ஒரு செட்டியார் தன் மனைவியுடன் குலசேகர பட்டின கடற்கரையில் சென்றபோது கடல் அலையால் அவருடைய சரக்குகள் கடலில் மூழ்கியது.

    வேதனையுற்ற செட்டியாரும், அவர் மனைவியும், சிவனை வேண்டினார்கள். சிவனும் அவர்கள் மீது இரக்கம் கொண்டு அவர்களுக்கு காட்சி தந்து என்ன வரம் வேண்டும் என கேட்டார். "ஆண்டவனே எங்களுக்கு காட்சி தந்ததே நாங்கள் செய்த பாக்யம், நீங்கள் (சிவனும் பார்வதியும்) இருவரும், திருமண கோலத்தில் இதே போல் பக்தர்களுக்கு காட்சி தர வேண்டுகிறேன் என்று வேண்டினார். இறைவனும் "அவ்வாறே ஆகட்டும்" என்று கோயில் பீடத்தில் காட்சி தருகிறார்.

    ×