என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 110335"

    மயிலாடுதுறை சபேசன் சிவாச்சாரியார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு பல்வேறு விசேஷ பூஜைகள் செய்து நவ சண்டி யாகத்தை நடத்தினர்.
    காட்டுமன்னார்கோவில் அருகே கொல்லிமலை கீழ்பாதி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஞானாம்பிகை உடனுறை சிவலோகநாதர் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், உலக நன்மை மற்றும் அமைதி வேண்டி நவசண்டி யாக பூஜை நடத்தப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.

    இதை தொடர்ந்து நவசண்டி யாகம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை சபேசன் சிவாச்சாரியார் தலைமையில், சிவாச்சாரியார்கள் நன்னிலம் ராமமூர்த்தி, கொல்லிமலை கீழ்பாதிகிராமத்தை சேர்ந்த நாகராஜன், சுரேஷ் மற்றும் 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு பல்வேறு விசேஷ பூஜைகள் செய்து நவ சண்டி யாகத்தை நடத்தினர்.

    பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தசாமி கோவிலில் அமாவாசையையொட்டி மூலவர் கந்தசாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது.
    நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தசாமி கோவிலில் அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. இதையொட்டி மூலவர் கந்தசாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது.

    இதையடுத்து கோவில் வளாகத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் இரவில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் உற்சவர் முருகன் வள்ளி, தெய்வானையுடன் கோவிலை சுற்றி வலம் வந்தார்.
    • காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 திருவிளக்கு பூஜையில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார்.
    • இதில் பங்கேற்ற பெண்களிடம் மொத்த செலவில் நான்கில் ஒரு பங்காக ரூ.200 வசூலிக்கப்பட்டது.

    காரைக்குடி

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாதம் தோறும் பவுர்ணமி நாளில் தமிழகத்தில உள்ள பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் 108 திருவிளக்கு பூஜை நடைபெறும் என்று சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.

    அதன்படிநேற்று காரைக்குடி மீனாட்சி புரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

    இதில் பங்கேற்ற பெண்களிடம் மொத்த செலவில் நான்கில் ஒரு பங்காக ரூ.200 வசூலிக்கப்பட்டது. பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு 125 கிராம் பித்தளை காமாட்சி விளக்கு, எவர்சில்வர் குங்குமச்சிமிழ், கற்பூரம், ஊதுபத்தி, தீப்பெட்டி, விளக்குத்திரி, தாலிக்கயிறு, தையல் இலை, வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம், எலுமிச்சை பழம், பூக்கள், பூச்சரம், 500 கிராம் பச்சரிசி, 100 மில்லி தீப எண்ணெய், பூஜை பை, சர்க்கரை பொங்கல், பிரசாதம், சேலை, ஜாக்கெட் துணி என ரூ.800 மதிப்பிலான பொருட்கள் வழஙகப்பட்டன.

    இதில் அமைச்சர் பெரியகருப்பன், சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, நகர்மன்ற தலைவர் முத்துதுரை, துணை தலைவர் குணசேகரன், இந்து சமய அறநிலையத்துறை சிவகங்கை மண்டல இணை ஆணையர் பழனிக்குமார், உதவி ஆணையர் செல்வராஜ், ஆய்வாளர் வினோத்கமல், கவுன்சிலர்கள் கண்ணன், பசும்பொன் மனோகரன், மைக்கேல், கலா காசிநாதன், சித்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை செயல் அலுவர்கள் நாராயணி, கணபதி ஆகியோர் செய்திருந்தனர்.

    • மைல் கல்லுக்கு நள்ளிரவில் பூஜை நடந்துள்ளது.
    • மறைந்த நடிகர் விவேக் ஒரு படத்தில் மைல் கல்லை குலதெய்வமாக வழி படுவ தை காட்சிப்படுத்தி ரசிக்க வைத்து அசத்தியிருப்பார்.

    திருமங்கலம்

    ஆயுதபூஜையன்று வழக்கமாக டிவி, பிரிட்ஜ், வாக னங்கள் மற்றும் தொழி லுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், தொழிற் சாலை களில் எந்திரங்களுக்கு பூஜை செய்வார்கள். ஆனால் திரு மங்கலம் பகுதியில் வினோத மாக மைல்கல்லுக்கு பூஜை நடத்தியுள்ளனர். அதன்விபரம் வருமாறு:-

    திருமங்கலம் புதுப்பட்டி யில் இருந்து நாகையாபுரம் செல்லும் சாலையில் அப்ப கரை பகுதியில் உள்ள தொலைவு கல்லுக்கு (மைல் கல்லுக்கு) மாலை அணி வித்து வாழைமரம் கட்டி வாழை இலை படையிட்டு பொங்கல் வைத்து நேற்று நள்ளிரவில் பூஜை செய்து உள்ளனர்.

    மேலும் 7 சிறிய கல்லுக்கும் பூஜை போட்டுள்ளனர் இது பொதுமக்களை ஆச்சரி யத்திலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. இதனை வினோதத்தை அப்பகுதி மக்கள் அல்லது அங்குள்ள வாலிபர்கள் தான் இதை செய்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

    மறைந்த நடிகர் விவேக் ஒரு படத்தில் மைல் கல்லை குலதெய்வமாக வழி படுவ தை காட்சிப்படுத்தி ரசிக்க வைத்து அசத்தியிருப்பார். அந்த வகையில் திருமங்கலம் பகுதியில் மைல் கல்லுக்கு பூஜை படையல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    விழாவுக்கான ஏற்பாடு களை தெய்விமுருகன் கோவில் தலைவர் வெற்றிவே லன், கவுரவத்தலைவர் அருள் குமரன், மகளிர் மன்ற தலைவி ராஜாத்தி குமரன், லதா வேலன், லதா முருகதாஸ் மற் றும் மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஊர் பொதுமக் கள் செய்து வருகிறார்கள்.

    நாகர்கோவில், அக்.20-

    நாகர்கோவில் பெரு விளை தெய்வி முருகன் கோவிலில் 53-வது கந்த சஷ்டி விழா வருகிற

    25-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது.

    விழாவின் முதல்நாள் சிறு வர் பக்த சங்கவிழாவாக காலை 6 மணிக்கு காப்பு கட் டுதல், சஷ்டி விரதம் ஆரம்பம், முருகன் பால முருகன் அலங்காரத்தில் காட்சி அளித்தல், மாலை 6 மணிக்கு திருமாங்கல்ய பூஜை நடக்கிறது.

    26-ந்தேதி உழவர் விழாவாக முருகன் சுப்பிரமணிய அலங்காரத்தில் காட்சி அளித்தல், மாலை 6 மணிக்கு பஜனை, 27-ந்தேதி வியாபாரிகள் விழாவாக முருகன் வேடன் அலங் காரத்தில் காட்சி அளித்தல், இரவு 7 மணிக்கு ஓவியப் போட்டி, கோலப்போட்டி, பரிசு வழங்குதல், 28-ந்தேதி முருகன் ஆறுமுகன் அலங்கா ரத்தில் காட்சி அளித்தல், இரவு 8 மணிக்கு புத்தக வெளி யீட்டு விழா மற்றும் பாராட்டு நடக்கிறது.

    நிகழ்ச்சியில் நாகர்கோ வில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட திட்ட இயக்குனர் தனபதி பெற்றுக்கொள்கிறார். 29-ந்தேதி போர்கோல முருகன் அலங்காரத்தில் காட்சி அளித்தல், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, மகளிர் மாநாடு நடக்கிறது.

    30-ந்தேதி கந்த சஷ்டி விழாவான காலை 11 மணிக்கு கும்பாபிஷேகம், பகல் 12 மணிக்கு சக்திவேல் வாங்க வருதல், மதியம் 1 மணிக்கு சூரசம்ஹாரத்துக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு சூரசம்ஹா ரம் நடக் கிறது. சூரசம்ஹாரத்தில் யானை ஊர்வலம், சிங்காரி மேளம், மயிலாட்டம், கோலாட்டம், கதகளி ஆகி யவை நடக்கிறது. இரவு 8.30 மணிக்குராஜமன்னார் தலை மையில் சிலம்பம் போட்டி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு எம். ஆர்.காந்தி எம்.எல்.ஏ. கலந்து கொள்கிறார். வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு தொகை, கேடயம் வழங்கப் படுகிறது.

    31-ந்தேதி பகல் 12 மணிக்கு திருக்கல்யாணம், அன்னதானம் மாலை 5 மணிக்கு சகஸ் ராம அர்ச்சனை, புஷ்பாபி ஷேகம், 6.30 மணிக்கு மணி கோல முருகன் அலங்காரத் தில் காட்சி அளித்தல், தீபா ராதனை ஆகியவை நடக் கிறது.

    விழாவுக்கான ஏற்பாடு களை தெய்விமுருகன் கோவில் தலைவர் வெற்றிவே லன், கவுரவத்தலைவர் அருள் குமரன், மகளிர் மன்ற தலைவி ராஜாத்தி குமரன், லதா வேலன், லதா முருகதாஸ் மற் றும் மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஊர் பொதுமக் கள் செய்து வருகிறார்கள்.

    • அய்யப்பன் கோவிலில் திருவிளக்கு நடந்தது
    • 251 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை

    ஆலங்குடி ஐயப்பன் நகரில் எழுந்தருளி உள்ள அருள்பாலித்து வரும் ஐயப்பன் கோவிலில் புரட்டாசி கமிட்டி தாரர்களால் நடத்தப்படும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஐயப்பனுக்கு பால், பன்னீர் உட்பட பல வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்ட ன. பின்னர் சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சந்நிதானத்தில் பதினெட்டு படிகளுக்கு இருபுறத்திலும் 251 சுமங்கலி பெண்கள் அமர்ந்து திரு விளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜைக்கு பின் பெண்களுக்கு மாங்கல்ய கயிறு குங்கு மம் ஆகிய மங்கல பொருட்கள் வழங்கப்பட்டது. பின்னர் அன்னதான கமிட்டியாரால் அருசுவை உணவு வழங்கப்பட்டது.

    • குமாரபாளையத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
    • நவராத்திரி விழாவின் 5-வது நாள் மற்றும் வெள்ளிகிழமையை யொட்டி காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.முதலியார் தெரு பெரிய மாரியம்மன் கோவிலில் நவராத்திரி கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. நவராத்திரி விழாவின் 5-வது நாள் மற்றும் வெள்ளிகிழமையை யொட்டி குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது.

    இதே போல் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சேலம் சாலை மற்றும் ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

    குமாரபாளையம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், முதலியார் தெரு பெரிய மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. இந்த பூஜையில் பெண்கள் பெருமளவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • செல்வ காளியம்மன் மற்றும் அனுமானுக்கு அபிஷேகங்கள், பூஜைகள் செய்து, பூக்களால் அலங்கரித்து சாமிக்கு மகா ஆராதனை நடந்தது.
    • சுற்றுவட்டார கிராம மக்கள் வருகை தந்து வழிபட்டனர்.

    சூளகிரி,

    சூளகிரி தாலுகா உத்தனபள்ளி ஊராட்சி பழைய கொத்தூர் சாலையில் உள்ளது பழமை வாய்ந்த செல்வ காளியம்மன் மற்றும் அனுமந்த ராய சுவாமி ஆலயம்.

    இங்கு புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசையை முன்னிட்டு செல்வ காளியம்மன் மற்றும் அனுமானுக்கு அபிஷேகங்கள், பூஜைகள் செய்து, பூக்களால் அலங்கரித்து சாமிக்கு மகா மங்கள ஆரத்தி செய்தனர். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

    இந்த பூஜைகளை கோயில் தர்மகர்த்தா விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் செய்தனர். சுற்றுவட்டார கிராம மக்கள் வருகை தந்து வழிபட்டனர்.

    • ரூ 2.77 கோடியில் குடிநீர் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது
    • எம்.எல்.ஏ. காடுவெட்டி தியாகராஜன் தொடங்கிவைத்தார்

    திருச்சி:

    முசிறி அடுத்த தண்டல புத்தூரில் குடிநீர் பணிகள் மற்றும் பல்நோக்கு மையக் கட்டிடங்கள் கூட்டுக் குடிநீர் திட்டம் போன்ற பணிகளுக்கான பூமி பூஜை எம்.எல்.ஏ. காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் முசிறி எம்.எல்.ஏ. காடுவெட்டி தியாகராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மைய கட்டிடமும், இரண்டு கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில், தமிழ்நாடு வடிகால் வாரிய மூலம் வெள்ளுர் மற்றும் 24 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தில் மறு சீரமைப்பு, 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில், வட்டார சுகாதார மைய கட்டிடம் போன்ற பணிகளுக்கு பூமி பூஜை தொடங்கிவைத்தார்.

    நிகழ்ச்சியில் முசிறி ஒன்றிய குழு தலைவர் மாலா ராமச்சந்திரன் மாவட்ட கவுன்சிலர் வளர்மதி சின்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், பெரியசாமி, திமுக நிர்வாகி புத்தூர் ஆனந்த், ஊராட்சி ஒன்றிய ஆணையர் கள் சந்திரசேகரன், ராஜ்மோகன், தண்டலை புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா செல்வ விநாயகம் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

    • முத்துமாரியம்மனுக்கு திருவிளக்கு பூஜை நடந்தது
    • பூஜைக்கு தேவையான பொருட்களை வழங்கினார்கள்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள முத்து மாரியம்மனுக்குத் திருவிளக்கு பூஜையும், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு கருவரை முன்பு யாகசாலை அமைக்கப்பட்டது. பின்னர் முத்துமாரியம்மன் மற்றும் சின்ன சின்ன மாரிய ம்மனுக்கு மஞ்சள், சந்தனம், திரவியம், பால், தயிர், பன்னீர்,தேன், கரும்புச் சாறு போன்ற பொருட்களால் அபி ஷேகம் நடைபெற்றது.அம்மன்கருக்கு பட்டுடுத்தி மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராத னை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில். 201 பெண்கள் கலந்துகொண்டனர். விழாக் கமிட்டியாரால் தேங்காய், பழம், பத்தி, பூ, நெய், திரி தீப்பெட்டி போன்ற பூஜைக்கு தேவையான பொருட்களை வழங்கினார்கள். சிவாச்சிவச்சாரியார் மந்திரங்கள் சொல்ல விளக்கு ஏற்றி பூஜை செய்தனர்.

    • முப்பெரும் தேவியர் அம்மனுக்கு 18 வகையான அபிஷேகம் நடந்தது.
    • 1,008 லிட்டர் சிறப்பு பால் அபிஷேகம் நடந்தது.

    புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் முப்பெரும்தேவியர், பவானியம்மன் கோவிலில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. இதை முன்னிட்டு ஆவணி மாதம் பவுர்ணமி பூஜை சிறப்பு குறித்து கோவில் குருநாதர் சக்தியம்மா ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.

    தொடர்ந்து முப்பெரும் தேவியர் அம்மனுக்கு பச்சைஅரிசி மாவு, பன்னீர், மஞ்சள், இளநீர், பழங்கள், திருநீர், தயிர், குங்குமம், தேன், சந்தனம், நறுமண பொருள்கள் உள்பட 18 வகையான அபிஷேகங்களும், 1,008 லிட்டர் சிறப்பு பால் அபிஷேகம் நடந்தது.

    பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் பால் அபிஷேகம் நடைபெற்றது. பின் முப்பெரும் தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரங்கள் செய்து பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றினர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • வாழப்பாடியில் ஓம் அமர்ணா மலைக்குன்று அடிவாரத்தில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவிலில், வாராந்திர சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் சமபந்தி அன்னதானம் வழங்கப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஓம் அமர்ணா மலைக்குன்று அடிவாரத்தில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவிலில், வாராந்திர சிறப்பு பூஜை வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த வழிபாட்டில் மலர்மாலை அலங்காரத்தில் சீரடி சாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் சமபந்தி அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி மாதேஸ்வரி ஜவஹர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    ×