என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல்"

    • பொருளாதார நிபுணர் மார்க் கார்னி பிரதமராக பதவி ஏற்றார்.
    • பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கடந்த 9-ந்தேதி ஆளும் லிபரல் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாதார நிபுணர் மார்க் கார்னி பிரதமராக பதவி ஏற்றார்.

    இந்த நிலையில் கனடாவுக்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் புதிய அதிபராக பதவி ஏற்ற பிறகு கனடாவுக்கான அனைத்து உதவிகளும் நிறுத்தப்பட்டது. மேலும் கனடாவுக்கு அதிக வரி விதிக்கப்போவதாகவும், அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடா சேர்க்கப்படும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்து வருகிறார்.

    அதிபர் டிரம்பின் இந்த நியாயமற்ற வரிகளை எதிர்கொள்ள கனடாவில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 28ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்த இருப்பதாக பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். நேற்று அவர் ஒட்டாவில் உள்ள ரிடோ ஹாலில் ஆளுநர் ஜெனரல் மேரி சைமனை சந்தித்தார். பாராளுமன்றத்தை கலைக்க அவர் பரிந்துரை செய்தார்.

    கனடா பாராளுமன்றத்தின் பதவி காலம் வருகிற அக்டோபர் மாதம் 20-ந்தேதி வரை இருக்கிறது. ஆனால் மார்க் கார்னிக்கு கட்சிக்குள்ளும், பொதுமக்கள் மத்தியிலும் ஆதரவு பெருகி வருவதால் அவர் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளார்.

    இது குறித்து கவர்னர் ஜெனரலை சந்தித்த பிறகு பிரதமர் மார்க் கார்னி பேசும் போது, "கனடாவில் ஏப்ரல் மாதம் 28ம் தேதி தேர்தல் நடத்த கவர்னர் ஜெனரல் ஒப்புதல் அளித்து உள்ளார். அமெரிக்கா நம்மை சொந்தமாக்கி கொள்ள விரும்புகிறது.

    டிரம்ப் நம்மை பிரிக்க நினைக்கிறார். அதை நடக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நாம் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிகளை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் கனடா உள்ளது. இது போன்ற முக்கியமான தருணங்களில் நாட்டை யார் வழி நடத்த வேண்டும் என்பதில் கனடா மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்," என்று அவர் கூறினார்.

    • சட்டசபைத் தேர்தலையொட்டி இரு மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை.
    • மது, போதை பொருட்கள், பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    சட்டசபைத் தேர்தல் நடைபெறும் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இந்தமுறை மிக அதிகமான அளவில் கணக்கில் வராத பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது முதல் கடந்த 10.11.2022 வரை குஜராத்தில் மட்டும் 71 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணமும், பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் தேர்தலின் போது ஒட்டுமொத்த காலத்தில் ரூ. 27.21 கோடி அளவில் அங்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

    இதேபோல இமாச்சலப் பிரதேசத்தில் 50 கோடியே 28 லட்சம் ரூபாய் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. கடந்த தேர்தலின் போது இந்த மாநிலத்தில் ரூ. 9.03 கோடி கைப்பற்றப்பட்டது. தற்போது கைப்பற்றப்பட்டுள்ள தொகை இதைவிட ஐந்து மடங்கு அதிகம்.மேலும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக மது, போதைப் பொருட்கள், விலை மதிப்புள்ள உலோகங்கள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    வேட்பாளர்கள் பணம் கொடுப்பதை தடுக்க சி விஜில் என்ற செயலியை பயன்படுத்தி பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என்றும், அதன் மூலம் பணம் விநியோகிக்கப்படுவதை பெரிய அளவில் குறைக்க முடியும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    • நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது
    • ஆலங்குடி தாலுகாவில் நாளை நடக்கிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட் சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 48 ஊராட்சிகளில் பாசன பகுதிகளான அக்கினி ஆறு, அம்புலி ஆறு தெற்கு வெள்ளாறு என மொத்தம் 2812 ஹெக்டர் நீர் பாசன வசதி உள்ளது. பாசன குளங்கள் மற்றும் ஏரிகளில் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில் 34 சங்கங்கள் உள்ளது. பாசன குளங்களை இணைத்து நீரினை பயன்படுத்துவோர் சங்கம் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இந்த சங்கங்களுக்கு தலா ஒரு தலைவர் என 34 தலைவர் மற்றும் 91 ஆட்சி மண்டல குழு உறுப்பினர் பதவிகள் மொத்தம் உள்ளன. இந்த சங்கங்களுக்கான தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 7-ந்தேதி தேர்தல் நடத்தும் அதிகாரி புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி தலைமையில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. மனு வாபஸ், தள்ளுபடி, போட்டியின்றி தேர்வு போக மீதம் 9 இடங்களுக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது.

    இதில் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று விவசாயிகளை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். பொது தேர்தலை மிஞ்சும் வகையில் பிரச்சாரம் களை கட்டி உள்ளது. இந் த தேர்தலில் விவசாயிகள் வாக்காளர்களாக உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று ஆலங்குடி தாசில்தார் செந்தில் நாயகி 9 இடங் களில் நடக்கும் தேர்தலை யொட்டி பள்ளிகளில்அனைத்து வசதிகளும் இருக்கிறதா என மேலாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சோபா- புஷ்பராஜ் முன்னிலையில் ஆய்வுமேற்கொண்டார்.

    ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு பிற்பகல் 2 மணியுடன் நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை அன்றைய தினம் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

    • கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் எம்.பி. கலந்து கொண்டு கட்சி தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
    • ஒன்றிய, நகர, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், வார்டு பொறுப்பாளர்கள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அம்மாப்பேட்டை:

    அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் அம்மாபேட்டையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் குமார் தலைமை வகித்தார். ஒன்றிய பெருந்தலைவர் கே.வீ.கலைச்செல்வன், கொத்தட்டை நடராஜன், குட்டி தெட்சணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர்கல்யாணசுந்தரம் எம்.பி. கலந்து கொண்டு கட்சி தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

    வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்றார்.

    இந்த கூட்டத்தில் ஒன்றிய, நகர, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், வார்டு பொறுப்பாளர்கள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தேர்தல் கூட்டணி குறித்து இப்போது பேச வேண்டிய அவசியமில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
    • 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பர பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தொடங்கிவைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

    பேச வேண்டிய அவசியமில்லை

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 6 பேர் எதிர்த்து, மத்தியஅரசு மறுசீராய்வு மனுதாக்கல் செய்தது எதிர்பார்த்த ஒன்றுதான். இது அவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது. அந்த 6 பேர் சார்பிலும் வககீல்கள் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி சட்டப்படி எதர்கொள்ளப்படும். இதனால் 6 பேரின் விடுதலை ரத்து செய்யப்படாது என நம்புகிறோம்.

    த மிழக அரசின் மழைக்கால நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் பேசலாம். இப்போது பேச வேண்டிய அவசியமில்லை. தி.மு.க.கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது.

    மத்திய அரசு பிடிவாதம்

    திருமாந்துறை, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளின் ஊழியர்களின் போராட்டம் குறித்து, ஏற்கனவே சம்பந்தப்பட்ட மத்திய இைண மந்திரியிடம் மனு கொடுத்திருக்கிறோம். கூட்டத் தொடரின்போது சம்பந்தப்பட்ட மத்திய மந்திரியை சந்தித்து பேச உள்ளோம்.

    பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், வழக்கில் இருந்து வெளியே வர முடியாதபடி வழக்கை விரைந்து நடத்தி தண்டணை பெற்று தர தமிழக அரசு நடவடிக்கை வேண்டும்.

    மத்திய அரசு நீட் தேர்வு விசயத்தில் பிடிவாதமாக உள்ளது, மாநில அரசு ஒன்றுக்கு இருமுறை சட்ட மசோதா அனுப்பியும் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. மக்களுக்கு அடிப்படை வசதிக்கு தேவையான நிதி பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதி போதவில்லை இருந்தாலும் தமிழக அரசு மூலம் வலியுறுத்தி அடிப்படை வசதி செய்து தருவேன்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    • எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சுசீந்திரம் கீழ ரதி வீதியில் நடந்தது.

    கன்னியாகுமரி:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி. ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சுசீந்திரம் கீழ ரதி வீதியில் நடந்தது.

    கூட்டத்துக்கு அகஸ் தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் ஜெஸீம் தலைமை தாங்கி னார். கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொடைவள்ளல் எம்.ஜி.ஆர். என்ற மாமனிதர் உருவாக்கிய இயக்கம்தான் அ.தி.மு.க. இந்த இயக்கத்தின் நிறுவனரான எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழாவில் இந்த இயக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்து பணியாற்றி வந்த மூத்த கழக முன்னோடிகளுக்கு இன்று பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் பெயரை சொல்லாத அரசியல் கட்சித் தலைவர்களே கிடையாது. இப்போது இருக்கிற முதல்-அமைச்சர் கூடதான் ஒரு எம்.ஜி.ஆரின் ரசிகர் என்றும் எம்.ஜி.ஆர். எனது பெரியப்பா என்றும் சொல்லி இருக்கிறார். அந்த அளவுக்கு ஒரு மாமனிதராக எம். ஜி.ஆர். திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

    தேர்தல் நேரத்தில் தி.மு.க.வினர் அளித்த வாக்குறுதியான பெண்களுக்கு மாதம் ரூ.1000 கொடுப்போம் என்று சொன்னார்கள். இதுவரை கொடுக்கவில்லை. அதேபோல ஊராட்சிகளை போல் பேரூராட்சிகளில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வருவோம் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை அந்த திட்டமும் நிறைவற்றப்படவில்லை.

    வருகிற பாராளு மன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக யார் போட்டியிட்டாலும் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் பாரதிய ஜனதாவுடன்தான் அ.தி.மு.க. தொடர்ந்து கூட்டணி வைத்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. என்றும் யாருக்கும் துரோகம் செய்யாது. இவ்வாறு அவர் பேசி னார்.

    கூட்டத்தில் கன்னியா குமரி சட்டமன்ற தொகுதியில் உள்ள அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 50 மூத்த கழக முன்னோடிளுக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி கவுரவப்படுத்தினார்.

    கூட்டத்தில் அகஸ தீஸ்வரம் ஒன்றிய அவைத்தலைவர் தம்பித்தங்கம் வரவேற்றுப் பேசினார். முன்னாள் அமைச்சர் பச்சைமால், மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், தோவாளை பஞ்சாயத்து யூனியன் தலைவி சாந்தினி பகவதியப்பன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், பேரூர் கழகச் செயலாளர்கள் குமார், ராஜபாண்டியன், மணிகண்டன், தாமரை தினேஷ், சீனிவாசன் மனோகரன், ஆடிட்டர் சந்திரசேகரன், ஊராட்சி செயலாளர்கள் செல்லம்பிள்ளை, லீன், தேரூர் பேரூராட்சி தலைவி அமுதாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுசீந்திரம் நகர செயலாளர் குமார் நன்றி கூறினார்.

    • வாக்குரிமை பெற்ற பொதுமக்கள் அனைவரும் தவறாது தங்கள் வாக்குகளை பதிவு செய்து, ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்
    • வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமையாகும் . நான் ஒருவன் வாக்களிக்காமல் இருந்தால் என்ன நடக்க போகுது என்று யாரும் எண்ணக்கூடாது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூ ரியில் 13-வது தேசிய வாக் காளர் தினத்தை முன்னிட்டு இளம் வாக்காளர் களை கண்டறிந்து வாக் காளர் பட்டியலில் சேர்ப்பது மற்றும் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்தும் "வாக்களிப்பது போல் எதுவுமில்லை நான் நிச்சயமாக வாக் களிப்பேன்" என்ற கருத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட வாக்குரிமை பெற்ற பொதுமக்கள் அனைவரும் தவறாது தங்கள் வாக்குகளை பதிவு செய்து, ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 18 வயது பூர்த்தியானவர்கள் பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் , தகுதியற்றவர்களை பெயர் நீக்கம், தொகுதி, முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்தல் தொடர்பாக கோரிக்கை மற்றும் ஆட்சே பனைகளுக்கான படிவங்க ளான 6 , 6A , 6B, 7 மற்றும் 8 பெறப்பட்டும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது .

    குறிப்பாக, புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ள, கல்லூரி மாணவ, மாணவிகள் அனை வரும் தங்களுக்கு கிடைக்கப் பெற்ற ஜன நாயக உரிமையாகிய வாக்குரி மையை நிறைவேற்றும் வகையில் , நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களிலும் 100 சதவீதம் வாக்களிக்க முன்வர வேண்டும்.

    மேலும், மாணவ, மாணவியர்கள் தங்களது பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சுற்றத்தாரிடமும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்ப டுத்த வேண்டும் . மேலும் , 18 வயது நிரம்பிய மாணவ , மாணவியர்கள் அனைவரும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யாத மற்றும் இடம்பெறாத மாணவ, மாணவியர்கள் , பொதுமக்கள் அனைவரும் அந்தந்த தொகுதிக்குட்பட்ட தாலுகா அலுவல கங்கள், நகராட்சிகள், மாநகராட்சி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் தேர்தல் அலுவலகம் உட்பட மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அலுவலகங்க ளுக்கு சென்று படிவம் 6-ஐ பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பித்துக் கொள்ள முன்வர வேண்டும்.

    வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமையாகும் . நான் ஒருவன் வாக்களிக்காமல் இருந்தால் என்ன நடக்க போகுது என்று யாரும் எண்ணக்கூடாது. ஒவ்வொருவாக்கும் மக்களாட்சியில் சரியான நபரை தேர்ந்தெடுப்பதில் முக்கிய மானதாகும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

    18- வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் பணத்திற்காக வாக்க ளிப்பதை தவிர்த்து தங்க ளது ஜனநாயக் கடமை யினை நிலைநாட்ட முன்வ ருவதோடு, "வாக்களிப்பது போல் எதுவுமில்லை நான் நிச்சயமாக வாக்களிப்பேன்" என்பதில் அனைவரும் உறுதி யாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வாக்குப்பதிவு இயந்திரமானது நெட்வொர்க் தொடர்பு இன்றி தனித்து இயங்கக்கூடியது.
    • கட்சியின் நிலைப்பாடு வேறாக இருக்கலாம். அது குறித்து என்னால் பேச முடியாது.

    ராய்பூர்:

    சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், தேர்தல், வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் குறிப்பாக தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து 14-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பலர் தேர்தல் ஆணையத்திடம் சந்தேகம் எழுப்பியதாகவும், ஆனால் அதற்கு தக்க பதில் கிடைக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

    மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது;

    "வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இது எனது தனிப்பட்ட கருத்து. கட்சியின் நிலைப்பாடு வேறாக இருக்கலாம். அது குறித்து என்னால் பேச முடியாது. நான் துவக்கத்தில் இருந்தே இதை வலியுறுத்தி வந்திருக்கிறேன். வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடந்த தேர்தல்களில் நாம் வெற்றியும் பெற்றிருக்கிறோம். வாக்குப்பதிவு இயந்திரமானது நெட்வொர்க் தொடர்பு இன்றி தனித்து இயங்கக்கூடியது. அதன் செயல்திறன் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது." இவ்வாறு கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.

    • வாடகை தொகையை தேர்தல் செலவு நிதியில் இருந்து மட்டுமே ஒதுக்க வேண்டும்.
    • தனியார் பஸ்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.43.50 ஆகவும், ஒரு நாளைக்கு ரூ.8,700 ஆகவும் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூர்:

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசு மற்றும் தனியார் பஸ்கள் தேர்தல் பணிக்கு வாடகை அடிப்படையில் பயன்படுத்தப்படும். இதையொட்டி அந்த பஸ்களுக்கான வாடகையை நிர்ணயித்து அரசு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    கா்நாடகத்தில் அரசு பஸ்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.57.50 ஆகவும், ஒரு நாள் வாடகை குறைந்தபட்சம் ரூ.11 ஆயிரத்து 500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச தொகையை முன்பணமாக செலுத்த வேண்டும். ஒரு நாள் என்பது 24 மணி நேரங்களை உள்ளடக்கியது. அதற்கு மேல் 2 மணி நேரம் ஆனால், அதை முழு நாளாக கருத வேண்டும். இந்த வாடகை தொகையை தேர்தல் செலவு நிதியில் இருந்து மட்டுமே ஒதுக்க வேண்டும்.

    பெங்களூர் நகருக்குள் பயன்படுத்தப்படும் தனியார் பஸ்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.43.50 ஆகவும், ஒரு நாளைக்கு ரூ.8,700 ஆகவும் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடகைக்கு முடிவு செய்து, அதை பயன்படுத்தாமல் இருந்தால் அதற்கு வாடகையாக ரூ.4,350 செலுத்த வேண்டும். பெங்களூரு நகருக்கு வெளியே பயன்படுத்தப்படும் தனியார் பஸ்களுக்கு கிலோ மீட்டருக்கு ரூ.42.50 ஆகவும், ஒரு நாள் வாடகையாக ரூ.8,200 ஆகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறியரக சரக்கு வாகனங்களுக்கு கிலோ மீட்டருக்கு ரூ.29 ஆகவும், ஒரு நாள் வாடகையாக ரூ.2,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • ராஜபாளையத்தில் ம.தி.மு.க. அமைப்பு தேர்தல் நடந்தது.
    • வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. அமைப்பு தேர்தல் ராஐபாளையம் திருவள்ளுவர் மன்றத்தில் நடைபெற்றது. ராஜபாளையம் நகரச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் மதியழகன் விருதுநகர் மாவட்ட தேர்தல் அதிகாரி கல்லத்தியானிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

    ராஜபாளையம் நகர அவைத்தலைவராக சேது.இன்பமணி, பொருளாளராக பிச்சைக்கனி, துணைச்செயலாளர்களாக அக்பர் அலி, லிங்கம், பூபதி மற்றும் மாவட்ட பிரதிநிதிகளாக புஷ்பவேல், ஞானசேகரன், குருமூர்த்தி ஆகியோரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இதில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான ரகுராமன், மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் குமரேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் கம்மாபட்டி ரவிச்சந்திரன், தலைமை கழக பேச்சாளர் பாண்டுரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் காந்திநகர் ஈ.பி.காலனியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
    • அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளரும், 24-வது வார்டு கவுன்சிலருமான ஆர்.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ம.தி.மு.க. தலைமை அறிவிப்பின்படி, திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு திருப்பூர் காந்திநகர் ஈ.பி.காலனியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தேர்தல் பணி துணைச் செயலாளர் சேதுபதி தேர்தல் ஆணையாளராக செயல்பட உள்ளார். தொடர்ந்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் மாநகர் மாவட்ட புதிய நிர்வாகிகள் காலை 11 மணிக்கு திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள பெரியார், அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    எனவே இந்த இரு நிகழ்ச்சிகளிலும் வட்டக்கழக நிர்வாகிகள், பகுதிக் கழக நிர்வாகிகள், மாநகர் மாவட்ட, மாநில நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் திரளாக வருகை தந்து சிறப்பித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • டெல்டாவில் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் யாரும் இல்லை.
    • நாடாளுமன்ற தேர்தலில் டெல்டாவில் இருந்து பா.ஜ.க. எம்.பி.க்கள் வர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்க ஏல அறிவிப்பை 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்து கொடுத்த தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கும், உறுதுணையாக இருந்த மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தத்திற்கும் தமிழ்நாடு விவசாய தமிழர் விழிப்புணர்வு நல சங்கம் சார்பில் தஞ்சையில் பாராட்டு விழா நடந்தது.

    விழாவுக்கு சங்க தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் நமச்சிவாயம் வரவேற்றார். மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:-

    150 ஆண்டு கால காவிரி பிரச்சினைக்கு தீர்வு கண்டு அரசிதழில் வெளியிட்டது பா.ஜ.க. அரசு தான்.

    விவசாயிகளுக்கு பிரச்சினை வருகிறது என்பதற்காக நிலக்கரி சுரங்க ஏல அறிவிப்பை பிரதமரும், மத்திய மந்திரியும் ஒரே முடிவாக எடுத்து 48 மணி நேரத்தில் ரத்து செய்துள்ளனர்.

    விவசாயிகள் மீது பிரதமர் மோடி வைத்துள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது.

    தமிழகத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் கடிதம் எழுதாமல் என்னை தொலைபேசி மூலம் உரிமையாக தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    1960-ம் ஆண்டு தமிழகத்தில் பாசன கால்வாய்கள் மூலம் சாகுபடி நிலப்பரப்பு 11 சதவீதமாக இருந்தது. ஆனால் 2023-ம் ஆண்டில் 3.4 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது கால்வாய் பாசனம் மூலம் சாகுபடி பரப்பு 9 லட்சம் எக்டேரில் இருந்து 6 லட்சம் எக்டேராக குறைந்துள்ளது. அதேபோல் நீர்த்தேக்கமான குளம், ஏரி மூலம் பாசன பரப்பு 9.41 லட்சம் எக்டேரில் இருந்து 3.69 லட்சம் எக்டேராக குறைந்துள்ளது. 1970-ம் ஆண்டில் 61 லட்சம் எக்டேராக இருந்த பாசன பரப்பு கடந்த 63 ஆண்டுகளில் 45 லட்சம் எக்டேராக மாறி, 16 லட்சம் எக்டேர் பாசன பரப்பு குறைந்துள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையா?

    அதேபோல் இந்தியாவில் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் விவசாயிகளின் சராசரி மாத வருமானம் குறைவாகவே உள்ளது. இதை உயர்த்த இந்த திராவிட மாடல் ஆட்சியில் முயற்சிகள் ஏதும் செய்யவில்லை.தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும். விவசாயிகள் மாற்றி யோசித்து அரசியல் சிந்தனை பெற வேண்டும்.

    டெல்டாவில் பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் யாரும் இல்லை. ஆனாலும் நாங்கள் தொடர்ந்து இந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்காக பாடுபட்டு வருகிறோம். வரும் நாடாளுமன்ற தேர்தல் முக்கியமானது. நாடாளுமன்ற தேர்தலில் டெல்டாவில் இருந்து பா.ஜ.க. எம்.பி.க்கள் வர வேண்டும். விவசாயிகள் பிரச்சினை பற்றி பேசவும், விவசாயிகளுக்காக குரல் கொடுக்கவும் பா.ஜ.க. எம்.பி.க்கள் வேண்டும். அதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    விவசாயிகளை காப்பதற்காக பிரதமர் மோடி கிசான் சம்மான் திட்டம், பயிர் காப்பீடு திட்டம், உரத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு போன்றவற்றை கொண்டு வந்துள்ளார். எனவே, விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பது பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் தான் என்பதை அனைவரும் உணர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து அண்ணாமலைக்கும், கருப்பு முருகானந்தத்துக்கும் மலர் கிரீடம், மாலை அணிவித்து விவசாய தமிழர் விழிப்புணர்வு சங்கத்தினர் பாராட்டினர்.

    இதில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ், மாவட்ட ஓ.பி.சி. செயலாளர் முத்துராமலிங்கம், ஐ.டி. மற்றும் எஸ்.எம். பிரிவு மாவட்ட தலைவர் தங்கதுரை, பட்டுக்கோட்டை மணிகண்டன், பொன்னவ ராயன்கோட்டை செல்வமணி, சங்க செயலாளர் சுரேஷ்குமார், காவிரிடெல்டா விவசாயிகள் குழும பொதுச் செயலாளர் சத்யநாராயணன், டெல்டா விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சேரன் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பாக்கியராஜ், பெரியண்ணன், புலிவலம் வரதராஜன், சங்கர், முருகையன், சேதுராமன், ரமேஷ், ஊடக பிரிவு சிவபிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி இருளப்பன் நன்றி கூறினார்.

    ×