என் மலர்
நீங்கள் தேடியது "அன்னதானம்"
- மருது சகோதரர்களின் குருபூஜையை முன்னிட்டு செம்பிய நாட்டு மறவர் சங்கம் சார்பில் அன்னதானம் நடந்தது.
- இதில் நிர்வாகிகள் பேட்டா பாய்ஸ் மனோஜ், கண்ணா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பரமக்குடி
மருது சகோதரர்களின் 221-வது குருபூஜை விழாவை முன்னிட்டு பரமக்குடியில் செம்பிய நாடு மறவர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் பாரதி நகரில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் செம்பிய நாடு மறவர் சங்கத் மாநிலத் தலைவர் சி.எம்.டி ராஜாஸ் தேவர் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். மாநில பொருளாளர் எஸ்.செந்தில்ராஜா வரவேற்று பேசினார். மாவட்ட பொறுப்பாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் நிர்வாகிகள் பேட்டா பாய்ஸ் மனோஜ், கண்ணா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
- மதியம் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் வழக்கம் போல் பகல் 12 மணிக்கு நடைபெறும்.
திருமங்கலம்
திருமங்கலத்தில் அமைந்துள்ள மீனாட்சி-சொக்கநாதர் கோவிலில் சந்திரகி ரகணத்தையொட்டிவருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 7.30 வரை நடைஅடைக்கப்படும்.
சந்திரகிரகணம் மாலை 2.39க்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு முடிவடைவதால் நடை சாற்றப்படுகிறது. பின்னர் இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
அதே நேரத்தில் இந்த கோவிலில் மதியம் நடைபெறும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் வழக்கம் போல் பகல் 12 மணிக்கு நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
- அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை சந்தனக்கூடு விழா.
- நிறைவு நாளில் கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஜாம்புவானோடையில் சுமார் 721 ஆண்டுகளாக மதங்களை கடந்து மனங்கள் சங்கமிக்கும் தர்காவாக ஹக்கீம் ஷெக்ய்கு தாவூது தர்கா அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த தர்கா விளங்கி வருகிறது.
புகழ்பெற்ற தர்காவின் கந்தூரி விழா நடைபெற இருப்பதால் அதற்கான கொடி மரம் நடுவிழா நேற்று நடைபெற்றது. தொடந்து, வருகிற 25-ம் தேதி புனித கொடி ஏற்றப்பட்டு அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெறும். நிறைவு நாளில் கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.
விழாவில் ஜாதி, இன, மொழி வேறுபாடின்றி அனைத்து மக்களும் கலந்து கொண்டு விழாவை சீரும் சிறப்புமாக செய்து வருகின்றனர். இங்கு மதங்களை கடந்து மனங்கள் சங்கமிப்பதும், மனித நேயம் உயிரோடு இருப்பதும், தர்காவில் உள்ள மகானின் சிறப்பம்சம் என கூறப்படுகிறது.
மேலும், இந்த விழாவிற்கு விஷ்வகர்மா சங்கம் மூலம் புனித கொடி வழங்கப்படுகிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் 14 நாட்கள் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
கந்தூரி விழாவிற்கு மாவட்டம் நிர்வாகம் சார்பில் சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், போலீசாரும் உரிய பாதுகாப்பு வழங்குவதாகவும் தெரிவித்தனர். எனவே, அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு முத்துப்பேட்டை தர்கா நிர்வாகத்தினர், பாரம்பரிய முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாஸ்கர் அலி தெரிவித்துள்ளனர்.
- நல்ல மருது நினைவு நாளில் 5000 பேருக்கு எஸ்ஸார் கோபி அன்னதானம் வழங்குகிறார்.
- இதில் 5000-க்கும் மேற்பட்டோர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
அவனியாபுரம்
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகி நல்ல மருதுவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியில் மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது.
இந்த அன்னதானத்தை முன்னாள் மாநகர வடக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி தொடங்கி வைக்கிறார்.இதில் 5000-க்கும் மேற்பட்டோர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அதற்கு முன்பாக நல்லமருதுவின் திருவுருவப்படத்திற்கு எஸ்ஸார் கோபி தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்துகின்றனர்.
அதனை தொடர்ந்து மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அவனியாபுரம் முன்னாள் நகராட்சி சேர்மனும் மாநகராட்சி 84- வார்டு கவுன்சிலருமான போஸ் முத்தையா, அவனியாபுரம் பகுதி திமுக செயலாளர் ஈஸ்வரன்,வட்டச் செயலாளர் பாலா என்ற பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் குட்டி என்ற கவுன்சிலர் ராஜரத்தினம், சோலை அழகுபுரம் பகுதி துணைச் செயலாளர் கண்ணன்,வட்டக் கழக துணை செயலாளர் வழக்கறிஞர் விஜயன் உள்பட பலர் செய்து வருகின்றனர்.
- பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
- கோவில் வளாகத்தில் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம் தொப்பூர் பாலத்து முனியப்பன் கோவிலில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி ஆலோசனைப்படி தொப்பூர் ஊராட்சியில் தி.மு.க. நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய செயலாளர் கே.பி. மல்லமுத்து முன்னிலையில் மாவட்ட பிரதிநிதி ராமநாதன் தி.மு.க. கொடியினை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மேலும் தொப்பூர் பாலத்து முனியப்பன் கோவில் வளாகத்தில் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி கிழக்கு மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி, ஒன்றிய நிர்வாகிகள் கலா ராணி கண்ணன், மாதையன், மோகன், மணி, துரை, தங்கம், ராஜா, வெங்கடேசன், தேவராசன், ஈஸ்வர் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- அன்னதான நிதியாக இதுவரை ரூ.50 லட்சம் கிடைத்துள்ளது.
- தினசரி 22 ஆயிரம் பக்தர்கள் அன்னதானம் மூலம் பயன் பெற்று வருகிறார்கள்.
திருவனந்தபுரம் :
மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தினமும் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். கடந்த மாதம் இறுதி வரை 8.79 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளனர்.இந்த நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நடப்பு சீசனையொட்டி இதுவரை சபரிமலை தரிசனத்திற்கு வந்த பக்தர்களில் 4¼ லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு உள்ளது. தினசரி சராசரியாக 22 ஆயிரம் பக்தர்கள் அன்னதானம் மூலம் பயன் பெற்று வருகிறார்கள்.
ஒரே நேரத்தில் 3,500 பக்தர்களுக்கு பந்தி பரிமாறும் வகையில் அன்னதான மண்டபம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. தினசரி காலை 6.30 மணி முதல் பகல் 11 மணி வரை உப்புமா, பருப்பு சாதம், சுக்குநீரும், பகல் 12 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை புலாவ், சாலட், சுக்குநீரும், மாலை 6.30 முதல் இரவு 11.15 வரை கஞ்சி மற்றும் சிறுபயறு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அன்னதான நிதியாக இதுவரை ரூ.50 லட்சம் திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு கிடைத்துள்ளது.
மண்டபத்தில் அன்னதானம் வழங்குவது குறித்த அறிவிப்பு பிற மாநில பக்தர்களுக்காக பிற மொழிகளிலும் வைக்கப்பட்டு உள்ளது. உணவை பரிமாறிய பிறகு பாத்திரங்களை சுத்தம் செய்ய மின்சார எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அன்னதான மண்டபத்தில் 230 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஜெயலலிதா நினைவுநாளில் பொதுமக்களுக்கு அன்னதானத்தை கே.டி. ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.
- ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
சிவகாசி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லில் ஜெயலலிதாவின் படத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதில் சிவகாசி மாநகர பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணகுமார், கருப்பசாமிபாண்டியன், சாம் என்ற அபினேஷ்குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிவகாசி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ரத்தின விலாஸ் பஸ் நிறுத்தம் அருகில் ஒன்றிய செயலாளர் ஆரோக்கியம் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சுபாஷினி மற்றும் நிர்வாகிகள் சுடர்வள்ளி சசிகுமார், இளநீர் செல்வம் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நகர (வடக்கு) செயலாளர் வக்கீல் துரைமுருகேசன், நகர (தெற்கு) செயலாளர் பரமசிவம், விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.என். பாபுராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட பேரவை செயலாளர் என்.எம். கிருஷ்ணராஜ் தலைமையில் பழைய பஸ் நிலையம் முன்பிருந்து மவுன ஊர்வலம் புறப்பட்டது. ஜெயலலிதாவின் அலங்கரிக்கப்பட்ட உருவப்பட ரதத்துடன் மவுன ஊர்வலம் நகரின் முக்கிய வீதி வழியாக ஜவகர் மைதானத்தை சென்றடைந்தது.அங்கு அம்மா உணவகம் அருகில் ஜெயலலிதா படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட இணை செயலாளர் அழகுராணி, வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எம். குருசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் நவரத்தினம், சேத்தூர் பேரூர் செயலாளர் பொன்ராஜ் பாண்டியன், மாவட்ட பேரவை இணைச் செயலாளர் வி.எஸ்.ராஜா, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அழகாபுரியான், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் யோகசேகரன், மாவட்ட பேரவை துணைத் தலைவர் திருப்பதி, வனராஜ், நகர மகளிர் அணி செயலாளர் ராணி, வள்ளியம்மாள், மாவட்ட பிரதி நிதி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி ஆந்திராகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- மதுரை ஆரப்பாளையம் வைகை கரை சாலையில் அன்னதானம் நடத்த எப்படி அனுமதித்தார்கள் என்று பொதுமக்கள் வினா எழுப்பி உள்ளனர்.
- இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
மதுரை
தமிழகத்தில் 2-வது பெரிய மாநகராட்சியாக விளங்கும் மதுரை மாநகராட்சியில் மத்திய-மாநில அரசுகள் வழங்கும் நிதி மூலம் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1100 கோடி ரூபாய் மதிப்பில் பாலங்கள் அமைத்தல், பஸ் நிலையங்களை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
அதில் மதுரை நகரில் ஓடும் வைகையாற்றின் இருபுறமும் ரூ. 380 கோடியில் நவீன சாலை அமைக்கும் பணியும் ஒன்று. இந்த திட்டத்தில் 80 சதவீத பணிகள் முடிந்து போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளன. அதனால் நகர் பகுதியில் இருந்து 4 வழிச்சாலைக்கு எளிதாக சென்றடையலாம் என நினைத்தது நடக்கவில்லை.
பழைய குயவர்பாளையம், தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் ஏராளமானோர் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். ஆரப்பாளையம் பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வைகை கரை பகுதிகளிலும் இத்திட்டத்தின் கீழ் சாலைகள் போடப்பட்டுள்ளன. ஆனால் பேச்சியம்மன் படித்துறை, ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் இங்கு சாலை பணிகள் முழுமையடைய வில்லை.
மேற்கண்ட பகுதிகளில் ஒர்க்ஷாப்கள் அதிகம் என்பதால் அங்கு பழுதுக்கு வரும் வாகனங்களை இந்த சாலையில் நிறுத்திச் செல்கின்றனர். இதனால் வாகனம் நிறுத்துமிடமாக வைகை கரை சாலை மாறி வருகிறது. மேலும் அந்தப்பகு தியைச் சேர்ந்த சிலர் மாட்டு கொட்டகையாகவும் மாற்றியுள்ளனர். இதனால் குறிப்பிட்ட சில பகுதிகளில் போக்குவரத்து தடை பட்டுள்ளது.
இதுபோன்ற இடையூறுக ளால் இந்த திட்டம் முழுமையாக முடியாமல் ஆங்காங்கே பாதியில் நிற்கிறது. இந்த சாலை திட்டத்திற்கான நோக்கம் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் ஆரப்பாளையம் அருகே உள்ள வைகை தென்கரை சாலையில் அன்னதான பந்தல் போட்ட வினோதம் நடந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று அன்னதானம் நடைபெற்றது. இதற்காக யாருடைய அனுமதியும் இல்லாமல் பலகோடி மதிப்பில் போடப்பட்ட சாலையை முழுமையாக ஆக்கிரமித்து ஷாமியானா பந்தல் அமைக்கப்பட்டு அன்னதானம் நடைபெற்றது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
மதுரையில் ஹெல்மெட் அணியாமல் சாலையில் செல்பவர்களை பாய்ந்து பிடித்து அபராதம் வசூலிக்கும் போலீசார் சாலை விதிகளை மீறிவிட்டதாக சாதாரண மக்களிடம் ஆயிரக்கணக்கில் அபராதம் வசூலித்து வருகின்றனர். ஆனால் சாலையையே ஆக்கிரமித்து அன்னதானம் நடத்த எப்படி அனுமதித்தார்கள் என்று பொதுமக்கள் வினா எழுப்பி உள்ளனர்.
போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. இதனால் ரூ. 380 கோடியில் போடப்பட்ட வைகை கரை சாலை திட்டம் கேள்விக் குறியாகி உள்ளது.
இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் கூறுகையில், நகரில் உள்ள கோவில்களில் திருவிழா நடக்கும் போது அந்தந்த பகுதிகளில் உள்ள கட்சி மற்றும் பதவிகளில் உள்ள முக்கிய பிரமுகர்களை அழைக்கின்றனர். இதனால் விழா நடத்துவோர் விதிகளை மீறலாம் என்ற தொணியில் இஷ்டத்திற்கு சாலைகளை மறித்து மேடை அமைப்பது, மின் கம்பத்தில் மின்சாரம் திருடுவது, சாலைகளை தோண்டி கட்சிக்கொடிகளை நடுவது போன்ற செயல்கள் நடந்து வருகிறது. இத னால் அதிகாரிகளும், போலீசாரும் எதுவும் செய்யமுடியாமல் மவுனம் காத்து வருகின்றனர். யாரும் கேட்காததால் இதுபோன்ற விதிமீறல்கள் மதுரையில் தொடர்ந்து நடந்து வருவது வேதனைக்குரியது என்றனர்.
சாலையில் பந்தல் அமைக்கப்பட்ட பகுதி மேயர் இந்திராணியின் சொந்த வார்டு என்பது குறிப்பிடத்தக்கது.
- சிவானந்தா ஆசிரமத்தில் அன்னதானம் நடந்தது.
- சித்த சமாஜ ஸ்தாபகர் சுவாமி சிவானந்த பரமஹம்சரின் ஜென்ம தினமாகிய திருக்கார்த்திகையை முன்னிட்டு நடந்தது.
ராஜபாளையம்
சித்த சமாஜ ஸ்தாபகர் சுவாமி சிவானந்த பரமஹம்சரின் ஜென்ம தினமாகிய திருக்கார்த்திகையை முன்னிட்டு ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அய்யனார் கோவிலில் அருகே உள்ள சிவானந்தா ஆசிரமத்தில் மகா அன்னதானம் நடந்தது.
ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சித்தவித்தியார்த்திகள் கலந்து கொண்டு சுவாமி சிவானந்த பரமஹம்சரின் அருளுரைகளை எடுத்துக் கூறினர்.
விழா ஏற்பாடுகளை கார்த்திகை விழா கமிட்டி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- வள்ளலார் 200-வது விழா முன்னிட்டு நடந்தது
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சட்டமன்ற மான்யக் கோரிக்கையில் அறிவித்த வள்ளலாரின் தொடர் அன்னதான திட்டத்தை நேற்று 14-ம்தேதி திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் கொண்டு தொடங்கி வைத்தார்.திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் க.பெ.அசோக்குமார் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி கலக்டர் பிரசாத்சிங், பயிற்சி கலக்டர் ரிஷப்ராணி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கடேசன், படவேடு ரேணுகாம்பாள் கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ஆர்.வி.சேகர், ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், துணை தலைவர் தாமரைச்செல்வி ஆனந்தன், போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போளூர் வட்டாட்சியர் சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் தஞ்சிம்மாள்லோ கநாதன், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வள்ளலாரின் திருஅருட்பா பக்தி பாடல்களை பாடினர்.
தொடர்ந்து கலெக்டர் முருகேஷ் படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தார். கோவில் சார்பில் தர்மேஸ்வர சிவாச்சாரியார் பிரசாதங்கள் வழங்கினர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் மு ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞானம், மேலாளர் மகாதேவன் கணக்காளர் சீனிவாசன் உள்பட கோவில் அலுவலர்கள் செய்து இருந்தனர்.
- அன்னதானத்தை பனிமய மாதா பேராலய பங்குத்தந்தை குமாரராஜா தொடங்கி வைத்தார்.
- திருவிழாவை முன்னிட்டு இரவு 7 மணி அளவில் ஜெபமாலை நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மறக்குடி தெருவில் உள்ள பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் கெபித்திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழாவையொட்டி புனித செபஸ்தியார் கெபி அலங்கரிக்கப்பட்டு பனிமயமாதா பேராலாய பங்கு தந்தை ஆசி வழங்கினார். பின்னர் 12 மணி அளவில் அன்னதானத்தை பனிமய மாதா பேராலய பங்குத்தந்தை குமாரராஜா தொடங்கி வைத்தார். இதில் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி ரவி, குருஸ் பர்னாந் நற்பணி மன்ற தலைவர் ஹெர்மன் கில்ட், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவர் எட்வின் பாண்டியன், ஸ்பெல்மன், சைலேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவிழாவை முன்னிட்டு இரவு 7 மணி அளவில் ஜெபமாலை நிகழ்ச்சி நடைபெற்றது. 40-வது வார்டு முன்னாள் மாமன்ற உறுப்பினரும் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவருமான எட்வின் பாண்டியன் தலைமை தாங்கினார். குரூஸ் பர்னாந் நற்பணி மன்ற செயலாளர் சசிகுமார், வர்கிஸ் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குருஸ் பர்னாந் நற்பணி மன்ற தலைவர் ஹெர்மன் கில்ட் கலந்து கொண்டு பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை புனித செபஸ்தியாரின் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணியை சேர்ந்த பிராங்ளின், டெரன்ஸ், சுரேஷ் , பிரவீன், பிரபாகர், சாமி வளன், ஸ்வீட்டஸ், மற்றும் வெர்ஜினியா உள்ளி ட்டோர் செய்திருந்தனர். வளன் நன்றி கூறினார்.
- அய்யப்பனுக்கு சிறப்பு தீபாராதனையும், பஜனையும் நடைபெற்றது.
- அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பாபநாசம்:
பாபநாசம் அருகே, உத்தாணி மெயின் ரோட்டில், முத்து முனியாண்டவர் திருக்கோயிலில் அமைந்துள்ள அய்யப்பன் கோயிலில், 28ஆம் ஆண்டை முன்னிட்டு அய்யப்பனுக்கு சிறப்பு தீபாராதனையும், பஜனையும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர் அய்யப்ப பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி ஸ்ரீ அய்யப்பன் பாடல்களை பக்தர்கள் மேள தாளங்களுடன் பாடினார்கள்.
விழாவில் கலந்து கொண்ட உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் மற்றும் கிராமவாசிகள், பெண்கள் ஆகியோர் அய்யப்பன், முத்து முனியாண்டவரை தரிசனம் செய்தனர்.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்ப ட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உத்தாணியை சேர்ந்த கிராமவாசிகள் மற்றும் அய்யப்ப சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.