என் மலர்
நீங்கள் தேடியது "விபத்து"
- சினிமா பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- சந்தோஷ் திரையரங்கிற்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்த நிலையில், சென்னை பூந்தமல்லியில் உள்ள சந்தோஷ் திரையரங்கின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து சேதமடைந்துள்ளது.
இதனால், சினிமா பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தநிலையில் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், ரசிகர்கள் வெளியேற்றப்பட்டு சந்தோஷ் திரையரங்கிற்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈவிபி பிலிம் சிட்டி அருகே ஈவிபி திரையரங்கம் அண்மையில் சந்தேஷ் திரையரங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பாலப்பணிக்காக 10 அடியில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் தவறி விழுந்து நாகராஜ், ஆனந்தி 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-ஊதியூர் இடையே குள்ளாய்பாளையம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் செல்லும்போது அங்கு பாலப்பணிக்காக 10 அடியில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் தவறி விழுந்து நாகராஜ், ஆனந்தி 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-காங்கேயம் சாலை பகுதியில், மோட்டார் சைக்கிளில் சென்றபோது 10 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு ஒரு லட்ச ரூபாயும் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அப்பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் முற்றிலும் இருள்சூழ்ந்து காணப்பட்டது.
- ப்ரீத்தா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள சேர்வக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 44), விவசாயி. இவரது மனைவி ஆனந்தி (42). இவர்களது மகள் ப்ரீத்தா(13). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம்வகுப்பு படித்து வருகிறார்.
இந்தநிலையில் 3 பேரும் திருநள்ளாறு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு நேற்றிரவு தாராபுரம் திரும்பினர். அங்கு பஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு 3 பேரும் சேர்வக்காரன் பாளையத்திற்கு புறப்பட்டனர்.
தாராபுரம்-ஊதியூர் இடையே குள்ளாய்பாளையம் பிரிவு அருகே செல்லும்போது அங்கு பாலப்பணிக்காக சாலையோரம் 10 அடியில் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அப்பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் முற்றிலும் இருள்சூழ்ந்து காணப்பட்டது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாததால் நாகராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பள்ளத்திற்குள் பாய்ந்தது. இதில் 3 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.
இரவு நேரம் என்பதால் அவர்கள் பள்ளத்திற்குள் விழுந்து கிடப்பதை யாரும் கவனிக்கவில்லை. பலத்த காயமடைந்து ரத்தம் வெளியேறியதில் நாகராஜ், ஆனந்தி ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர். ப்ரீத்தா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள், அவரது சத்தம் கேட்டு பள்ளத்திற்குள் எட்டிப்பார்த்தனர். அப்போது 3 பேரும் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்தனர். உடனே இது குறித்து குண்டடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன், ப்ரீத்தாவை மீட்டு சிகிச்சைக்காக தாரா புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நாகராஜ், ஆனந்தி உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பாலப்பணிக்காக தோண்டப்பட்ட 10 அடி பள்ளத்தை சுற்றி மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. மேலும் தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை அறிவிப்புகள் எதுவும் வைக்கப்படவில்லை. இதன் காரணமாகவே பள்ளம் இருப்பது தெரியாமல் அதற்குள் விழுந்து 2 பேரும் பலியாகி உள்ளனர். பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்களின் அலட்சியம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இது போல் திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளது. மேலும் விபத்துக்களும் நிகழ்ந்துள்ளது. எனவே இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நிகழாதவாறு இருக்க தேவையான பாதுகாப்பு நடவடி க்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விபத்துக்குக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநள்ளாறு கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது கணவன்-மனைவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- திருவனந்தபுரத்தில் இருந்து ஆம்னி வேனில் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டனர்.
- விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருத்துறைப்பூண்டி:
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வருவதற்காக நண்பர்களான சாஜிநாத், சாபு, சுஜித், ராஜேஷ், ராகுல், ரெஜினேஷ் மற்றும் ஒருவர் முடிவு செய்தனர்.
அதன்படி, அவர்கள் திருவனந்தபுரத்தில் இருந்து ஆம்னி வேனில் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டனர். ஆம்னி வேனானது இன்று அதிகாலை திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கருவேப்பஞ்சேரி என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் எதிரே நாகப்பட்டினத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் வேனில் பயணித்த சாஜிநாத், ராஜேஷ், சுஜித், ராகுல் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், உள்ளே இருந்த 3 பேர் படுகாயத்துடன் சாலையில் கிடந்துள்ளனர். இதனை கண்ட அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, அங்கே வந்தவர்கள் அனைவரையும் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான 4 பேரின் உடல்கள் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எடையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட், முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த நண்பர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சம்பவ இடத்திற்கு ஆந்திர உள்துறை அமைச்சர் நேரில் வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டார்.
- இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சிம்மாச்சலத்தில் உள்ள கோவிலில் புதிதாக கட்டப்பட்ட சுவர் இன்று அதிகாலை இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
வராஹலட்சுமி நரசிம்ம சுவாமியின் நிஜரூப தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்த போது ரூ.300 டிக்கெட் வழங்கும் வரிசையில் அமைக்கப்பட்டு இருந்த 20 அடி நீள சுவர் இடிந்து விழுந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு ஆந்திர உள்துறை அமைச்சர் நேரில் வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டார்.

விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் நீடித்த பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக சுவர் இடிந்து விழுந்ததாக கூறினர்.
இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
- இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
- தலையில் பலத்த காயம் அடைந்த ஷ்ரேயாஸ் பரிதாபமாக இறந்தார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூரு பேகூர் சாலையின் விஸ்வபிரியநகரை சேர்ந்தவர் சிவானந்தா பாட்டீல். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் ஷ்ரேயாஸ் பாட்டீல் (வயது 19). பி.காம் மாணவர். இவர் இன்று அதிகாலை 3.45 மணியளவில், அக்ஷய் நகரை சேர்ந்த நண்பர் கே. சேத்தனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தார்.
அப்போது மோட்டார் சைக்கிள் ரிச்மண்ட் சர்க்கிள் ரெசிடென்சி சாலையை நோக்கி செல்லும் மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச் சுவரில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதியது. இதில் இருவரும் 25 அடியரத்தில் இருந்து பாலத்தின் கீழே உள்ள சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.
இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தலையில் பலத்த காயம் அடைந்த ஷ்ரேயாஸ் பரிதாபமாக இறந்தார். சேத்தனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளார்.
- சாலையோரம் நின்று கொண்டு இருந்த மயில்சாமி, மகேந்திரன் ஆகியோர் மீது லாரி மோதி விபத்தானது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஏமப்பள்ளி அக்கம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (42), இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு உதயா என்ற ஒரு மகன் உள்ளார்.
இதே போல் திருச்செங்கோடு அருகே உள்ள பொம்மக்கல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (36). இவரது மனைவி சுதா. இவர்களுக்கு சக்தி என்ற மகனும், யசோதா என்ற மகளும் உள்ளனர்.
விசைத்தறி தொழிலாளர்களான மயில்சாமியும், மகேந்திரனும் உறவினர்கள் ஆவர். இவர்கள் 2 பேரும் நேற்று அனிமூர் பிரிவு என்ற இடத்தில் வெள்ளரிக்காய் வாங்கி கொண்டு சாலையோரம் இருந்த புளிய மரத்தின் கீழ் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்லாநத்தம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (42) என்பவர் திருச்செங்கோட்டில் இருந்து கொக்கராயன்பேட்டை நோக்கி லாரி ஓட்டி சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டு இருந்த மயில்சாமி, மகேந்திரன் ஆகியோர் மீது லாரி மோதி விபத்தானது. இதில் சம்பவ இடத்திலேயே மயில்சாமி பலியானார். இதில் மகேந்திரன் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மகேந்திரனை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே மகேந்திரனும் பலியானார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் திருச்செங்கோடு ரூரல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான லாரி டிரைவர் கார்த்திகேயனை தேடி வருகிறார்கள்.
- புவனேஷ் மரணம் தொடர்பாக தூத்துக்குடியில் வசிக்கும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேரூர்:
தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி தாளமுத்து நகரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் புவனேஷ் (வயது 18). கட்டிட தொழிலாளி.
இவர் கடந்த 17-ந்தேதி நண்பர்கள் முத்துக்குமார், ஹரிஹரசுதன் ஆகியோருடன் கோவை மாவட்டம் வெள்ளியங்கிரிக்கு மலையேறுவதற்காக வந்தார்.
மலை உச்சியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்து விட்டு பின்னர் அவர்கள் மீண்டும் கீழே இறங்கி வந்தனர். 7-வது மலை உச்சியில் இருந்து கீழே வந்த போது புவனேசுக்கு எதிர்பாராதவிதமாக கால் இடறியது. நிலை தடுமாறிய புவனேஷ் 10 அடி ஆழமுடைய பள்ளத்தில் விழுந்தார்.
இதில் அவரது இடது காது மற்றும் தலையின் பின்பகுதியில் பலத்த அடிபட்டு உயிருக்கு போராடினார். அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சுமை தூக்கும் பணியாளர்கள் டோலியுடன் அவசர, அவசரமாக மலையேறி சென்றனர். புவனேசை டோலி மூலம் மீட்டு அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்சில் ஏற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி புவனேஷ் பலியானார்.
புவனேஷ் மரணம் தொடர்பாக தூத்துக்குடியில் வசிக்கும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நேபிள்சுக்கு தெற்கே மான்டே பைட்டோவுக்கு கேபிள் கார் ஒன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்றது.
- இதில் கேபிள் அறுந்து விழுந்த விபத்தில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர்.
மிலன்:
இத்தாலியில் உள்ள நேபிள்ஸ் விரிகுடா மற்றும் வெசுவியஸ் மலை காட்சிகளுக்காக கேபிள் கார் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு சீசன் என்பதால் கேபிள் கார் சேவை கடந்த வாரம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், நேபிள்சுக்கு தெற்கே மான்டே பைட்டோவுக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற கேபிள் காரில் கேபிள் அறுந்து விழுந்ததில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
விபத்து குறித்து தகவலறிந்ததும் இத்தாலிய ஆல்பைன் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- விபத்தில் இறந்த உமாராணியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை கல்லாவி ரோடு பகுதியை சேர்ந்தவர் உமாராணி (வயது65). இவரது மகன் கோபிநாத் (வயது40). இவரது மனைவி ஜீவிதா (35). கோபிநாத் சகோதரிகள் 2 பேர் மற்றும் இரு குழந்தைகள் என மொத்தம் 7 பேர் காரில் கர்நாடகாவில் பல்வேறு வழிபாட்டுத்தலங்கள், சுற்றுலா சென்றனர். பின்னர் அவர்கள் சுற்றுலா முடித்து விட்டு இன்று அதிகாலை வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது மத்தூர் அடுத்த கண்ணண்டஹள்ளி என்ற இடத்தில் வந்த போது தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரியை நோக்கி சென்ற மினிலாரி எதிர் பாராதவிதமாக கார் மீது மோதியது.
இதில் காரில் இருந்த உமாராணி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த கோபிநாத் உடன் இருந்த குழந்தைகள் உள்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்து இடிபாடுகளில் சிக்கிய சூழலில் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் அருகே இருந்த ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு சுமார் அரை மணி நேரம் போராடி அவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் விபத்தில் இறந்த உமாராணியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை என்பதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
- இந்த விபத்தினால் டேங்கர் லாரியில் இருந்த தண்ணீர் சாலையில் கொட்டியது.
- இந்த விபத்தில் தண்ணீர் டேங்கர் லாரி ஓட்டுநர் உட்பட 2 பேர் காயமடைந்தனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று சாலையில் உருண்டு விபத்துக்குள்ளான அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஒரு லாரியை முந்தி செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்துள்ளது. டேங்கர் லாரிக்கு பின்னால் வந்த லாரியின் ஓட்டுநர் உடனடியாக லாரியை நிறுத்தினார். இந்த விபத்தினால் டேங்கர் லாரியில் இருந்த தண்ணீர் சாலையில் கொட்டியது.
இந்த விபத்தில் தண்ணீர் டேங்கர் லாரி ஓட்டுநர் உட்பட 2 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் டேங்கர் லாரியின் ஓட்டுநர் மற்றும் உடன் பயணித்தவர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
- விபத்தில் முருகன் மற்றும் அவரது மனைவி கல்யாணி உயிரிழந்தனர்.
- 19 வயதுள்ள ஓட்டுநர் உரிமம் இல்லாத கவியரசன் ஆம்புலன்சை ஓட்டிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து ஏற்பட்டது.
முருகன் என்பவரை மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்து சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் முருகன் மற்றும் அவரது மனைவி கல்யாணி உயிரிழந்தனர்.
ஆம்புலன்ஸை ஓட்டிய கவியரசனுக்கு 2 கால்களும் முறிந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
19 வயதுள்ள ஓட்டுநர் உரிமம் இல்லாத கவியரசன் ஆம்புலன்சை ஓட்டிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.