என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிப்பறி"

    • 4 ஆதாயக் கொலைகளும், 11 கொள்ளை சம்பவங்களும் நடந்துள்ளன.
    • 230 வழிப்பறி, 35 கொடுங்களவு, 503 சாதாரண களவு ஆகியவையும் நடைபெற்றுள்ளன.

    சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் தொடர்பாக போலீசார் புள்ளி விவரத்துடன் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

    சென்னையில் 2021ம் ஆண்டில் 93 கொலைகளும் 2022ம் ஆண்டில் 94 கொலைகளும் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு 97 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    4 ஆதாயக் கொலைகளும், 11 கொள்ளை சம்பவங்களும் நடந்துள்ளன. 230 வழிப்பறி, 35 கொடுங்களவு, 503 சாதாரண களவு ஆகியவையும் நடைபெற்றுள்ளன.

    ரவுடிகள் வேட்டையில் சிடி மணி, காக்கா தோப்பு பாலாஜி, எண்ணூர் தனசேகரன், ஆற்காடு சுரேஷ், பி.டி.ரமேஷ் உள்ளிட்ட 74 கொடுங் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் முதல் நடத்தப்பட்ட வேட்டையில், 547 சரித்திரப் பதிவேடுகள் புதிதாக துவக்கப்பட்டு, மொத்தம் 3610 சரித்திரப் பதிவேடுகள் தொடர்ந்து சோதிக்கப்பட்டு வருகின்றன.

    வீட்டை உடைத்து திருடுபவர்கள் மற்றும் வாகன திருடர்கள் உள்ளிட்ட 5636 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 165 நபர்கள் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், 633 பேர் இளம்சிறார் குற்றவாளிகள் ஆவர்.

    குண்டர் சட்டத்தில் 2020 (334 நபர்கள்) மற்றும் 2021 (270 நபர்கள்) ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2022ம் ஆண்டு, ரவுடிகள் உட்பட 424 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

    இது தவிர, 2020 (2945 நபர்கள்) மற்றும் 2021 (4991 நபர்கள்) ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2022ம் ஆண்டு 7187 நபர்களுக்கெதிராக பாதுகாப்பு செயல் முறைகளின் கீழ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர்.

    • மதுரையில் கத்தி முனையில் பணம் பறித்த 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
    • கீரைத்துறை, ஜெய்ஹிந்துபுரம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை தெற்கு வாசல் போலீஸ் சரகத்தில் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை போலீசார் தினமும் ரோந்து சென்று வருகின்றனர். கண்மாய்கரை, ராஜமான் நகரில் ரோந்து சென்றனர். கங்கை அம்மன் கோவில் அருகே பதுங்கி இருந்த வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார்.

    அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை காவல் நிலை யத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் காமராஜர்புரம் இந்திரா நகரை சேர்ந்த முத்துக்குமார் மகன் எலி தினேஷ் (வயது 22) என்பது தெரியவந்தது.

    இவர் மீது காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மதுரை மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமியின் வலதுகரமாக திகழ்ந்தவர். எனக்கு நிறைய எதிரிகள் உண்டு. தற்காப்புக்காக அரிவாள் வைத்திருந்தேன்" என்று தெரிவித்தார். ஆயுதங்களுடன் திரிந்த எலி தினேஷை கீரைத்துறை போலீசார் கைது செய்தனர்.

    முத்துப்பட்டி, அழகப்பன் நகரை சேர்ந்தவர் செல்வம் (45), ஆட்டோ டிரைவர். நேற்று இவர் சோலையழகுபுரம் தெருவில் நடந்து சென்றார். அங்கு வந்த வாலிபர் மது குடிக்க பணம் கேட்டார். செல்வம் தர மறுத்தார். ஆத்திரம் அடைந்த வாலிபர், 'கத்தியால் குத்தி விடுவேன்' என்று மிரட்டி, செல்வத்தின் சட்டைபையில் இருந்த ரூ.385-ஐ பறித்து தப்பினார்.

    இது குறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோலையழகுபுரம், இந்திரா நகரை சேர்ந்த ஆட்டோ பிரவீன் (32) என்பவரை கைது செய்தனர். அவர் மீது அவனியாபுரம், ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

    • வழிப்பறியில் ஈடுபட்ட 5 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்டவரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை விளாச்சேரியை சேர்ந்தவர் பாலசுப்பிர மணியம் (வயது 43). இவர் டாஸ்மாக் கடையில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். பாலசுப்பிரமணியன் விளாச்சேரி, கலைஞர் நகரில் நடந்து சென்றார்.

    அப்போது அங்கு வந்த 2 பேர், கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் பணம் கேட்டனர். இதற்கு அவர் தர மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த 2 பேரும், பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கி விட்டு ரூ. 450 -ஐ பறித்து சென்றது.

    இது தொடர்பாக பாலசுப்பிரமணியன், திருநகர் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட வளையப்பட்டி, மந்தை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சீமைராஜா (வயது 43) என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான திருநகர் பிரவீன் என்பவரை தேடி வருகின்றனர்.

    மதுரை கே.புதூர் முத்துராமலிங்கபுரம் தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன்(26) இவர் தபால் தந்தி நகரில் உள்ள ஒயின் ஷாப்பில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார்.

    ராஜசேகரன் சிப்ஸ் கடை முன்பாக நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.900த்தை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக ராஜசேகரன், தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட பீ.பி.குளம் காந்திஜி தெரு, கோகுல்விஜய்(29), பி.பி.குளம் இந்திரா நகர், சுதாகரன்(45) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களில் சுதாகரன் மீது போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    மதுரை மேலவாசல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த சரவணன் மகன் நிதீஷ்குமார் (23). இவர் இரவு வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 600-ஐ பறித்துச் சென்றார். இது தொடர்பாக திடீர்நகர் போலீசில் நிதிஷ்குமார் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்தனர்.

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 28), ரெயில்வே ஊழியர். இவர் மதுரை ரெயில் நிலைய கிழக்கு நுழைவுவாயில் பகுதியில் நின்றபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.

    இதற்கு பாலமுருகன் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டி அவர் வைத்திருந்த ரூ. 2,500-ஐ பறித்துச் சென்று விட்டார். இது தொடர்பாக பாலமுருகன், திலகர் திடல் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட தக்காளி கணேசன் என்பவரை தேடி வருகின்றனர்.

    • மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மதுரை

    மதுரை வண்டியூர் சி.எஸ். ஆர். தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 20). இவர் ரிங் ரோட்டில் உள்ள பஞ்சர் கடையில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த யாகப்பா நகர் வெற்றிவேல் மகன் அஜித்குமார் (26) அவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ.100-ஐ வழிப்பறி செய்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோட்டையை சேர்ந்தவர் ஞானசேகரன் (60). இவர் நரிமேடு அவ்வையார்தெரு ஆட்டோ நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அவரை 2 வாலிபர்கள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ. 600-ஐ வழிப்பறி செய்தனர்.

    இதுகுறித்து ஞான சேகரன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட பி.பி. குளம் நேதாஜிரோடு மாணிக்கம் மகன் முருகன் என்ற டால்பின் (29), திருமங்கலம் ஆனந்த் நகர் குமார் மகன் கவியரசன் என்ற பொம்மை கையன் (23) ஆகியோரை கைது செய்தனர்.

    • 3 வாலிபர்கள் இவரை வழிமறித்து இவரிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர்.
    • சிதம்பரம் நகர போலீசார் 3 வாலிபர்களையும் கைது செய்து விசாரித்தனர்.

    கடலூர்:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த உமையாள்பதி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சக்கிஅழகன் (வயது 28). இவர் சிதம்பரத்திற்கு ஒரு சில பணிகளுக்காக வந்துவிட்டு மீண்டும் சீர்காழிக்கு செல்ல சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் இவரை வழிமறித்து இவரிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர்.

    அப்போது சக்திஅழகனின் கூச்சல் சப்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் 3 வாலிபர்களையும் சுற்றிவளைத்து பிடித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த சிதம்பரம் நகர போலீசார் 3 வாலிபர்களையும் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் 3 வாலிபர்களும் ஒமக்குளம் சுரேந்தர் (22), நாஞ்சலூர் சந்துரு (23), மடப்புரம் அன்புமணி (22) என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் வழிப்பறி, கொலை முயற்சி போன்ற பிரிவுகளில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    • நண்பர்களுடன் சென்ற நிதி நிறுவன அதிபரை தாக்கி வழிப்பறி செய்த 5 பேருக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
    • ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பி.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் பாலராஜேஷ் (வயது33). இவர் ஜவஹர் மைதானம் அருகே நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நண்பர்கள் வருண் சுக்ரீத், அபி ஆகியோருடன் சாய்பாபா கோவில் அருகே உள்ள நண்பரின் தோப்புக்கு காரில் சென்றார். சோமையாபுரம் சோதனை சாவடி அருகே அடையாளம் தெரியாத வாலிபர்கள் காரை வழிமறித்து சேதப்படுத்தி பாலராஜேஷ் மற்றும் நண்பர்களை தாக்கி செல்போனை பறித்தனர்.

    அப்போது அந்தப் பகுதியில் போலீசார் ரோந்து வருவதைக் கண்டதும் அவர்கள் தப்பி விட்டனர். இதுபற்றிய புகாரின்பேரில் ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் சோமையாபுரத்தைச் சேர்ந்த முத்தையா, ராம்குமார், மாரி செல்வம், வைரமுத்து, கபாலி, கோபாலகிருஷ்ணன் என்ற பீமன் என தெரிய வந்தது. அவர்கள் மீது ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அசோகன் (வயது 44). இவர் தியாகதுருகத்தில் பட்டறை நடத்தி வருகிறார்,இவர் வீட்டுக்கு திரும்பும்போது 4 இளைஞர்கள் வழி மறைத்து அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்..
    • 3 இளைஞர்களை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்..

    கள்ளக்குறிச்சி:

    நைனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் (வயது 44). இவர் தியாகதுருகத்தில் பட்டறை நடத்தி வருகிறார். தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினார். இரவு 10 மணி அளவில் தோட்டபாடி வனகாப்பு சாலையில் செல்லும் பொழுது 4 இளைஞர்கள் வழி மறைத்து அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.இது குறித்து தகவல் அறிந்த சின்னசேலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் போலீசார் 4 இளைஞர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்

    . அப்பொது நயினார்பாளையம் செல்லும் வனப்பகுதியில் பதுங்கி இருந்த 3 இளைஞர்களை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர் ,பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். இதில் கடலூர் மாவட்டம், அடரி, வடக்கு தெருவை சேர்ந்த பெருமாள் மகன் சிவக்குமார் (வயது 21), சின்னசேலம், சிவன் கோயில் தெருவை சேர்ந்த சின்னதுரை மகன் சூர்யா (வயது 20), சூளாங்குறிச்சி காந்திநகர் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராக்பெல்லா (வயது 19) என்பதும் தெரியவந்தது. பின்னர் 3 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பிச்சென்ற மற்றொரு இளைஞரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இது போன்ற வழிப்பறியில் ஈடுபடு பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் எச்சரிக்கை விடுத் துள்ளார்.

    • செல்வ விநாயகபுரத்தை சேர்ந்தவர் பாலாஜி எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.
    • 6 பேர் கொண்ட கும்பல், பாலாஜியை தாக்கி மோதிரம், பணத்தை பறித்து சென்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி செல்வ விநாயகபுரத்தை சேர்ந்தவர் பாலாஜி. (வயது28). எலக்ட்ரீசியன். இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர்கள் தங்கள் வீட்டில் எலெக்ட்ரிக் வேலை இருப்பதாக முகவரி கூறி அழைத்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து அவர் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். பாலாஜி முத்தையாபுரம் பொட்டல்காடு விலக்கு பகுதியில் சென்ற போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கம்பி மற்றும் அரிவாளால் தாக்கி அவரிடம் இருந்த வாட்ச், மோதிரம், ரூ. 12 ஆயிரம் பணத்தை பறித்து சென்றனர்.

    மேலும் கூகுல்பே மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ. 45 ஆயிரத்தையும் எடுத்தனர். இதில் பலத்த காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது தொடர்பாக முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் சேலம் புதிய பஸ் நிலையம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
    • அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் இளங்கோவன் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி மறைந்தனர்.

    சேலம்:

    சேலம் சின்ன திருப்பதி சீனிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 54). இவர் கன்னங்கு றிச்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணி யாற்றி வருகிறார். இவர் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் சேலம் புதிய பஸ் நிலையம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் இளங்கோவன் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி மறைந்தனர்.

    இதுகுறித்து தலைமை காவலர் இளங்கோவன் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்கு பதிவு செய்து வழிப்பறிக் கொள்ளை யர்களை வலைவீசி தேடி வருகின்றார்.

    • மேலூர் அருகே லாரி டிரைவர் உள்பட 2 பேரிடம் கத்தியை காட்டி மர்மநபர்கள் வழிப்பறி செய்தனர்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் விஜயன் (வயது37). மினி லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று திருச்சியிலிருந்து மதுரைக்கு லாரியில் வந்து கொண்டிருந்தார். மேலூர் அருகே உள்ள தெற்குபட்டி நான்கு வழிச்சாலையில் விஜயன் லாரியை நிறுத்தி கீழே இறங்கினார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென விஜயனை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,840 மற்றும் வெள்ளி நகையையும் பறித்து கொண்டு தப்பினர். இதே போல் மேலூர் அருகே உள்ள சுண்ணாம்பூரை சேர்ந்தவர் முருக பெருமாள். இவர் மோட்டார் சைக்கிளில் மேலூர் நான்கு வழிச்சாலையில் வந்த போது மர்ம நபர்கள் மறித்து கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளை மறித்தனர். 2 சம்பவங்கள் தொடர்பாக மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • மதுரையில் ரெயில்வே என்ஜினீயரிடம் வழிப்பறி செய்ா 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க கமிஷனர் உத்தரவிட்டார்.

    மதுரை

    மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 39). இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக உள்ளார். மதுரை ெரயில் நிலையத்தில் நடந்து வரும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த நிலையில் பிரேம்குமார் சம்பவத்தன்று இரவு வீட்டின் அருகே நடந்து சென்றபோது குடிபோதையில் இருந்த 3 வாலிபர்கள் அவரை வழி மறித்து தகராறு செய்தனர். அப்போது அவரது செல்போன் கீழே விழுந்து உடைந்தது.

    மேலும் அந்த வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். பிரேம்குமார் வேறு வழியின்றி அவர்களிடம் ஆயிரம் ரூபாயை ெகாடுத்தார். அதை வாங்கி கொண்டு அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    இது தொடர்பாக தல்லா குளம் போலீசில் பிரேம் குமார் புகார் கொடுத்தார். இந்த புகார் மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்தி ரன் நாயர் கவனத்திற்கு சென்றது. இதில் தொடர் புடைய குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க அவர் உத்தரவிட்டார்.

    அதன்படி மதுரை மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த், உதவி கமிஷனர் ஜெகன்நாதன் ஆகியோர் மேற்பார்வையில் தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தி, சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் பிரேம்குமாரிடம் வழிப்பறி செய்த வாலிபர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் வழிப்பறி செய்தவர்கள் பற்றிய விவரம் தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் முல்லை நகருக்கு சென்றனர். அங்கு நேருஜி தெருவில் பதுங்கி இருந்த 3 வாலிபர்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இதில் அவர்கள் முல்லை நகர், நேருஜி தெரு, சண்முக சுந்தரம் மகன் தினேஷ் குமார் என்ற மாணிக்கம் (22), அவரது சகோதரர் கணேசன் (24), செக்கானூ ரணி செந்தில்குமார் மகன் சந்துரு (19) என்பது தெரிய வந்தது. இதையடுத்து தல்லாகுளம் போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

    • மதுரை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்தனர்.
    • அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கங்காணி சந்தை சேர்ந்தவர் நாகவேல்மணி (32). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று நள்ளிரவு இவர் வைத்தியநாதபுரம் ஆட்டோ நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த 4 பேர் கும்பல், நாகவேல்மணியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.800-ஐ பறித்து தப்பியது. இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகபூப்பாளையம் ஜான் மகன் சக்தி கவுதம் (23), வைத்தியநாதபுரம் சுரேஷ் மகன் சஞ்சய் (22), பாரதியார் மெயின் ரோடு செந்தில்குமார் மகன் அஜித் குமார் (24), கங்காணி சந்து கண்ணன் மகன் மாயகிருஷ்ணன் (23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    மதுரை எம்.எம்.சி. காலனி, காவிரி நகரை சேர்ந்தவர் யுவராஜா (26). இவர் நேற்று மாலை செம்பூரணி ரோடு சந்திப்பில் நடந்து சென்றார். அங்கு வந்த ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.300-ஐ பறித்து தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் வசிக்கும் போஸ் மகன் ராமகிருஷ்ணனை (19) கைது செய்தனர்.

    ×