என் மலர்
நீங்கள் தேடியது "மதுரை"
- மகளிர் போலீஸ் நிலையத்தில் 15 வயதுடைய பள்ளி மாணவி புகார்.
- பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை.
மதுரை:
மதுரை சுப்பிரமணியபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் 15 வயதுடைய பள்ளி மாணவி புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நான் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். இதுவரை எனக்கு பள்ளி சீருடை அளவெடுக்க யாரும் வந்ததில்லை.
சம்பவத்தன்று பள்ளியில் சீருடை அளவெடுக்க ஒரு ஆண் உள்பட 2 பேர் வந்தனர். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இது தொடர்பாக எனது வகுப்பு ஆசிரியையிடம் கூறினேன். ஆனால் அவர் கண்டிப்பாக சீருடைக்கு அளவெடுக்க வேண்டும் என கூறினார். பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் ஆண் டெய்லர் உள்பட 2 பேர் என்னிடம் அத்துமீறி அளவெடுத்தனர். அப்போது உடல் பாகங்களை தொட்டனர். எனவே அவர்கள் மீதும், உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தி ஆண் டெய்லர், அவருக்கு உதவியாக வந்த பெண் மற்றும் ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- பல படங்களில் நடித்துள்ள ஹுசைனிக்கு, விஜய்யின் 'பத்ரி' படம் திருப்புமுனையாக அமைந்தது.
- ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஹூசைனி சிகிச்சை பெற்று வந்தார்.
1986-ம் ஆண்டு வெளியான 'புன்னகை மன்னன்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷிஹான் ஹுசைனி. மதுரையை சேர்ந்த இவர் கராத்தே மாஸ்டரும் ஆவார். பல படங்களில் நடித்துள்ள ஹுசைனிக்கு, விஜய்யின் 'பத்ரி' படம் திருப்புமுனையாக அமைந்தது.
கடந்த 2022-ம் ஆண்டில் வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் இவரது நகைச்சுவை கலந்த நடிப்பு கவனம் ஈர்த்தது.சினிமா தாண்டி வில் வித்தை பயிற்சியாளராகவும் திகழ்ந்த ஹுசைனி, 400-க்கும் மேற்பட்டோருக்கு அதுதொடர்பான பயிற்சிகளை அளித்து வந்தார்.
இந்நிலையில், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹூசைனி நேற்று சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
ஷிஹான் ஹூசைனியின் உடல் மதுரை காஜிமார் தெருவில் உள்ள பெரிய பள்ளியில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
- அப்பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டின் கதவை ஆயுதங்களால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
- நாகமலை புதுக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
மதுரை:
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ளது ராம்கோ நகர் பகுதி. வளர்ந்து வரும் இப்பகுதியில் பத்திரப்பதிவு அலுவலகம், திருமண மண்டபம், தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளது.
திண்டுக்கல்-விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியாக உள்ள ராம்கோ நகரில் 100-க்கும் மேற்பட்ட தனித்தனி வீடுகள் கட்டப்பட்டு பொது மக்கள் வசித்து வருகின்றனர். வீடுகள் தனித்தனியே இருப்பதால் ஆட்கள் நடமாட்டம் குறைந்து காணப்படும்.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 5-ந்தேதி நள்ளிரவு நேரத்தில் ராம்கோ நகர் பகுதியில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 2 பேர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தனியாக உள்ள வீடுகளை நோட்ட மிட்டனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டின் கதவை ஆயுதங்களால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து மற்றொரு வீட்டின் கதவை அரிவாளால் வெட்டி திறக்க முயற்சித்தனர். சத்தம் கேட்டு எழுந்த அந்த வீட்டின் உரிமையாளர் வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் பார்த்தபோது முகமூடி அணிந்த 2 பேர் கதவை உடைப்பது தெரியவந்தது.
உடனே அவர் நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு செல்போனில் தகவல் கொடுத்தார். போலீசார் சிறிதும் தாமதிக்காமல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீஸ் வருவதை அறிந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது டவுசர் அணிந்த 2 மர்ம நபர்கள் தலையில் குரங்கு குல்லாவுடன் கதவை ஆயுதங்களால் உடைப்பது பதிவாகி இருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை நாகமலை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர். குற்றப்பிரிவு போலீசார் துணையுடன் சம்பவம் நடந்தபோது அப்பகுதியில் பதிவான செல்போன் அழைப்பு உள்ளிட்ட விவரங்களை வைத்து கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து இதில் தொடர்புடையதாக ஈரோடு மாவட்டம் பனையம்பள்ளியை சேர்ந்த மாரியப்பன் மகன் சிவா (வயது 39), சிவகங்கை மாவட்டம் சக்கந்தியை சேர்ந்த முனியன் மகன் மருதுபாண்டி (35) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
- 20 ஆண்டுகளுக்கும் மேலாக இரு பிரிவுகளாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மதுரை:
மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வீ.கே.குருசாமி. மதுரை மாநகராட்சி தி.மு.க. முன்னாள் மண்டல தலைவரான இவருக்கும், அவரது உறவினரும் அ.தி.மு.க. பிரமுகருமான ராஜபாண்டி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட விரோதம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.
இந்த பிரச்சினையில் தற்போதுவரை இருதரப்பை சேர்ந்த 20 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே அரசியிலில் உச்சத்தில் இருந்த வீ.கே.குருசாமி தி.மு.க.வில் இருந்து விலகி தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அங்கும் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்தார்.
இந்தநிலையில் வீ.கே.குருசாமியின் ஆதரவாளரும், பிரபல ரவுடியுமான காளீஸ்வரன் என்பவர் இன்று அதிகாலை மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அதுபற்றிய விபரம் வரு மாறு:-
மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 37). இவர் மதுரை தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் உள்ள வெண்கலமூர்த்தி தெருவில் தனது இரண்டா வது மனைவி மீனாட்சி என்பவரது வீட்டில் ஒரு மாதமாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே வந்தவர் இன்று அதிகாலை சுமார் 12.40 மணியளவில் மீண்டும் வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் தனியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் தனக்கன்குளம் பகுதியில் வைத்து காளீஸ்வரனை வழிமறித்தனர். இதனை சற்றும் எதிர்பாராத காளீஸ்வரன் அவர்களது பிடியில் இருந்து தப்ப முயன்ற அவரை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இருள் சூழ்ந்த பகுதியாக இருந்ததால் அந்த கும்பல் யார் என்று தெரியவில்லை.
இதில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த காளீஸ்வரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இறந்த காளீஸ்வரன் மீது ஏற்கனவே தெப்பக்குளம், கீரைத்துறை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
வி.கே.குருசாமி தரப்பினருக்கும், வெள்ளைக்காளி தரப்பினருக்கும் ஏற்கனவே பழிவாங்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் வி.கே.குருசாமியின் ஆதரவாளர் காளீஸ்வரனை வெள்ளைக்காளி தரப்பினர் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட காளீஸ்வரன் உடலை கைப்பற்றிய போலீசார் ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றினர். அப்போது அங்கு திரண்டு வந்த அவரது ஆதரவாளர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை அடித்து உடைக்க முயன்றனர்.
பின்னர் வேகமாக சென்ற அந்த வாகனம் அரசு ஆஸ்பத்திரியை அடைந்தது. அங்கு காளீஸ்வரன் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அங்கு பதட்ட மான சூழல் நிலவுவதால் அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரையில் இரு பிரிவுகளாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் குருசாமி தரப்பில் 10 பேர், ராஜபாண்டி தரப்பில் 7 பேர் என 20 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். வி.கே.குருசாமி, ராஜ பாண்டி, வெள்ளைக்காளி ஆகியோர் மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வெள்ளைக்காளி ஒரு வருடத்திற்கு முன்பாக கரிமேடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார். தற்போது சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஜெயிலில் இருந்து வருகிறார். சிறையில் இருந்து கொண்டே அவர் இந்த சதித்திட்டத்தை தீட்டியதாக தெரிகிறது.
வெள்ளைக்காளி தனது அண்ணனை வீ.கே.குருசாமியின் ஆட்கள் கொலை செய்ததால் அவரது குடும்பம் முழுவதையும் அழிக்கப்போவதாக சபதம் செய்து, அதன் தொடர்ச்சியாக குருசாமி ஆதரவாளர்களை கொலை செய்து வந்தார்.
வெள்ளைக் காளியைப் பொறுத்தவரை 40-க்கும் மேற்பட்ட கூலிப்படையினரை வைத்துக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் கொலை, கஞ்சா விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
வி.கே. குருசாமி தற்போது தி.மு.க.வில் இருந்து விலகி தனியாகச் செயல்பட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக ராஜபாண்டி இறந்து விட்டார். இதனால், வீ.கே.குருசாமியை பழிவாங்கும் நோக்கில் வெள்ளைக்காளி செயல்பட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
- விருத்தாச்சலத்தில் ரெயில் பயணிகளிடம் நகை பறித்த சம்பவத்தில் சக்திவேல் போலீசாரிடம் சிக்கினார்.
- 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்:
மதுரை பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் சங்கரி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருந்து மதுரைக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றார். அப்போது திண்டுக்கல்லை அடுத்த அம்பாத்துரை பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்றது. இதனால் ரெயில் அந்த பகுதியில் மெதுவாக சென்றது. அதை பயன்படுத்திக் கொண்ட ஒரு வாலிபர் சங்கரி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றார். உடனே சுதாரித்து கொண்ட சங்கரி சங்கிலியை பிடித்து கொண்டு சத்தம் போட்டார்.
இருந்த போதும் பாதி அறுந்த சங்கிலியுடன் அந்த வாலிபர் ரெயிலில் இருந்து குதித்து தப்பியோடிவிட்டார். அதேபோல் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த செல்வி (வயது 55) 3 ஆண்டுகளுக்கு முன்பு வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுரைக்கு சென்றார். அந்த ரெயில் அம்பாதுரை அருகே மெதுவாக சென்றபோது அவர் அணிந்து இருந்த 6 பவுன் சங்கிலியை ஒரு வாலிபர் பறித்து கொண்டு தப்பி சென்றார். இந்த சம்பவங்கள் தொடர்பாக இருவரும் கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த 2 சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்த சக்திவேல் பயணிகளிடம் நகை பறித்தது தெரியவந்தது. எனவே அவரை போலீசார் தேடிவந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருத்தாச்சலத்தில் ரெயில் பயணிகளிடம் நகை பறித்த சம்பவத்தில் சக்திவேல் போலீசாரிடம் சிக்கினார். பின்னர் அவர் அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தலைமறைவானார். இதையடுத்து திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் அருணோதயம் ஆகியோர் சக்திவேலை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர் மீண்டும் அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.இதன் மூலம் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு நேரடி உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
- மறு மார்க்கமாக மாலை 5.40 மணிக்கு விஜயவாடாவிலிருந்து புறப்பட்டு இரவு 7.25 மணிக்கு பெங்களூரு வந்தடையும்.
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு நேரடி உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரையிலிருந்து விஜயவாடாவிற்கு பெங்களூரு, ஐதராபாத், சென்னை வழியாக விமானங்களை இயக்கி வரும் தனியார் விமான நிறுவனம், மேற்கண்ட இடங்களில் இறங்கி பின்னர் வேறு விமானத்திற்கு மாறி விஜயவாடா செல்ல வேண்டும். தற்பொழுது வரும் 30-ந் தேதி முதல் மதுரையிலிருந்து பெங்களூரு வழியாக அதே விமானத்தில் இறங்காமல் பெங்களூருவில் 30 நிமிடம் காத்திருந்த பின்னர் விஜயவாடாவிற்கு குறைந்த நேரத்தில் பயணம் செய்ய அந்த தனியார் விமான சேவை வழங்க இருக்கிறது.
அதன்படி மதுரையிலிருந்து காலை 8.15 மணிக்கு புறப்படும் விமானம் காலை 9.45 மணிக்கு பெங்களூரு செல்லும். அங்கு அரை மணி நேரத்திற்கு பின்னர் 10.15 மணிக்கு புறப்பட்டு காலை 11.55 மணிக்கு விஜயவாடா சென்றடையும்.
மறு மார்க்கமாக மாலை 5.40 மணிக்கு விஜயவாடாவிலிருந்து புறப்பட்டு இரவு 7.25 மணிக்கு பெங்களூரு வந்தடையும். அங்கு அரை மணி நேரம் (30 நிமிடம்) கழித்து இரவு 7.55 மணிக்கு புறப்பட்டு இரவு 9.20 மணிக்கு மதுரை வந்தடையும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- எம்.காம் பட்டதாரியான மகேஸ் பாண்டியன், சீனாவில் பணியில் உள்ளார்.
- பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர், இன்று மாடுமுட்டி உயிரிழந்தார்.
சீனாவில் இருந்து விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த இளைஞர், மதுரை அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாடு முட்டியதில் உயிரிழந்த மகேஸ் பாண்டியன் (22), எம்.காம் படித்து விட்டு சீனாவில் வேலையில் இருந்துள்ளார். பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர் ஏறுதழுவுதல் அரங்கில் நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ளார்.
அப்போது மாடு முட்டியதில் நுரையீரலில் பலத்த காயமடைந்த மகேஸ் பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
- பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை
- குமரி மாவட்ட ரெயில்வே இருப்புப் பாதைகள் அனைத்தும் திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ளது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி, மதுரை வழியாக வட மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தக் கோரிக்கை புறக்கணி க்கப்பட்டு விடப்படும் புதிய ரெயில்கள், வழக்கம் போல் கேரளாவை மையப்ப டுத்தியே அறிவிக்கப்ப டுகின்றன. இதற்கான காரணம் குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத்தினர் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு மாநிலத்தின் கீழ் உள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் தங்கள் மாநி லத்திற் குட்பட்ட பகுதிகள் வழியாக ரெயில்கள் இயக்க வேண்டும் என்று விரும்பு கிறார்கள்.
ஆனால் குமரி மாவட்ட ரெயில்வே இருப்புப் பாதைகள் அனைத்தும் திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ளது.
தெற்கு ரெயில்வே மண்ட லத்தில் பொது மேலாளர், ரெயில்கள் இயக்கம் அதிகாரி, முதன்மை வணிக அதிகாரி பயணிகள் பிரிவு என முக்கிய பொறுப்புகளில் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் முழுக்க முழுக்க பணிபுரிந்து வருகின்றனர். இதனால் தான் வட மாநில ரெயில்கள் கேரளா வழியாக இயக்கப்படுகின்றன.
தற்போது அசாம் மாநிலம் கவுகாத்தியை தலைமை யிடமாக கொண்ட வட கிழக்கு எல்லை ரெயில்வே மண்டலம் சார்பாக திப்ருகர்-கன்னியாகுமரி அறிவிக்கப்பட்ட வாராந்திர சிறப்பு ரெயிலும் கேரளா வழியாகத் தான் செல்கிறது.
இந்த ரெயிலை திருநெல்வேலி, மதுரை வழியாக இயக்க வேண்டும் என்பதே தற்போதைய கோரிக்கை. இந்த ரெயிலுக்கு 2-ம் கட்ட பிட்லைன் பராமரிப்பு, நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் தான் செய்யப்படுகிறது. இதனால் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பிட்லைன் பராமரிப்பு இட நெருக்கடி ஏற்படுகிறது.இதன் காரணமாக தென் மாவட்ட பயணிகள் பயன்படுத்தும் விதமாக புதிய ரெயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்படும். மேலும் கன்னியாகுமரியில் இருந்து தற்போது வாராந்திர ரெயில்களாக இயக்கப்படும் திருக்குறள், ஹவுரா, மும்பை போன்ற ரெயில்களை தினசரி ரெயில்களாக மாற்றம் செய்து இயக்க முயற்சிகள் மேற்கொள்ளும் போது பிட்லைன் இட நெருக்கடியை காரணம் காட்டி இயக்க முடியாமல் போகும் நிலை ஏற்படலாம்.
நாகர் கோவில்-ஷாலிமார் ரெயிலும் கேரள பயணிகள் வசதிக்காக தான் இயக்கப் படுகிறது. இந்த நிலையை மாற்ற, இந்த ரெயில்களை திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக இயக்க வேண்டும் என்றும் அவ்வாறு முடியாவிட்டால், அந்த ரெயில்களை கொச்சுவேலியுடன் நிறுத்தி விடலாம் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு திருவனந்தபுரம் கோட்டம் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது.
இந்த வழியில் புதிய ரெயில்களை இயக்கா விட்டாலும் பரவாயில்லை. கேரள பயணிகளுக்கு பயன்படும் வகையில் சுற்று ரெயில்களை நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியில் இருந்து இயக்காமல் இருந்தால் போதும் என்பது தான் எங்கள் கோரிக்கை.
மேலும் இது போன்ற ரெயில்கள் இயக்குவதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டுமானால், நாகர்கோவில் துணை கோட்டத்தின் கீழ் உள்ள கன்னியாகுமரியில் இருந்து பால ராமபுரம் வரை யிலும் நாகர்கோவில்-திருநெல்வேலி வரையிலும் உள்ள இருப்புப் பாதைகளை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். இதற்கு தமிழக எம்.பி.க்கள் அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியம் என்றனர்.
- மதுரையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- சமயநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விக்கிரமங்கலம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
மதுரை
சமயநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விக்கிரமங்கலம் துணைமின் நிலையத்தில் உள்ள காடுபட்டி பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக நாளை (9-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கல்புளிச்சான்பட்டி, நடுவூர், மலையூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, நடுமுதலைக்குளம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மதுரை புதூர் மின்பிரிவு மாட்டுத்தாவணி துணைமின் நிலையத்தின் தொழிற்பேட்டை பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக நாளை (9-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மூன்றுமாவடியின் ஒரு பகுதி, சர்ச் ரோடு, மாட்டு ஆஸ்பத்திரி, லோட்டஸ்ட் அபார்ட்மெண்ட், ஒய்.டபிள் யூ.சி. ஆஸ்டல், சம்பகுளம் 1 முதல் 5 தெருக்கள், சிவானந்தா தெரு, விவேகானந்தா தெரு, மீனாட்சி அபார்்ட்மெண்ட், கமிசனர் அலுவலகம், இ.பி. காலனி, 120 அடி ரோடு, பள்ளிவாசல் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மதுரை வண்டியூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக நாளை மறுநாள் (10-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை வண்டியூர், பி.கே.எம்.நகர், சவுராஷ்டிரா புரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்புநகர், ஆவின் நகர், தாசில்தார் நகர், அன்பு மலர்தெரு, சிவா ரைஸ்மில் பின்புறம், சித்திவிநாயகர் கோவில் தெரு, மருதுபாண்டியர் தெரு, ஜூப்ளி டவுன், அல்ட்ரா காலேஜ், வீரபாண்டி தெரு, விரகனூர், எல்.கே.டி. நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
- மதுரையில் 2 இடங்களில் சிலிண்டர் வெடித்தது.
- பாலசுப்பி ரமணியன். பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
மதுரை
மதுரை சுப்பிரமணிய புரம், 3-வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பி ரமணியன். பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
பேக்கரி ஊழியர்கள் இன்று காலை சிலிண்டரை மாற்றும்போது எதிர்பாராத விதமாக கியாஸ் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. இது குறித்து திடீர்நகர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதேபோன்று கோமதி புரம், பாரதி தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கியாஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தல்லாகுளம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் குமார் என்பவர் அங்கு வீடு கட்டி கிரகபிரவேசம் நடத்தினார். மதிய உணவு விருந்துக்கு, அப்பளம் பொறித்து கொண்டிருந்தனர். சிலிண்டரின் ரெகு லேட்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது தெரியவந்தது.
மதுரையில் இன்று ஒரே நாளில் 2 இடங்களில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மதுரை, விருதுநகர், சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
- 81 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
விருதுநகர்
தமிழகம் முழுவதும் 81 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதில் விருதுநகர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் சிவக்குமார் மதுரை டி.கல்லுப்பட்டி மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனம் உதவி இயக்குநர் மற்றும் விரிவுரை யாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் விருதுநகரில் வட்டார வளர்ச்சி அலுவல ராக பணியாற்றி வரும் சாந்தி மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி திட்ட இயக்குநராகவும், வட்டார வளர்ச்சி அலுவலராக பணி யாற்றி வரும் ராஜ்மோகன் மதுரை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நியமிக்கப் பட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவல ராக பணியாற்றி வரும் கார்த்திகேயன் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலு வலராகவும், வட்டார வளர்ச்சி அலுவலராக பணி யாற்றி வரும் இளங்கோவன் சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (வீடு மற்றும் சுகாதாரம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
- மதுரையில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மதுரை
தேர்தலில் தொடர் தோல்விகளை சந்திந்து வரும் எடப்பாடி பழனிச் சாமி பதவி விலக வலியுறுத்தியும், அவரை கண்டித்தும் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுரை பழங்கா நத்தம் நட ராஜ் தியேட்டர் அருகில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் எம்.பி.யும், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளரும், வழி காட்டுக் குழு உறுப்பினருமான கோபாலகிருஷ்ணன், உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகி யோர் தலைமை தாங்கினர்.
அமைப்பு செயலாளர் மார்க்கெட் பி.எஸ்.கண்ணன், அம்மா பேரவை இணைச்செயலாளர் சோலை குணசேகரன், மாவட்ட துணை செயலாளர் மாரிச்சாமி, அம்மா பேரவை மாநகர் மாவட்ட செயலாளர் சுந்தரா, இளைஞரணி மாநகர் மாவட்ட செயலா ளர் சரவணன், மேற்கு 4-ம் பகுதி செயலாளர் கணே சன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர், புறநகர் தெற்கு, புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.