என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்"

    • செவ்வாய்க்கிழமை தவிர, வாரத்தின் 6நாட்கள் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்படுகிறது.
    • முன்பதிவு இருக்கை எண்ணிக்கை 2,108 ஆக இருந்தது.

    திருப்பூர்:

    மங்களூருவில் இருந்து கச்சிக்குடாவுக்கு இயக்கப்படும் ெரயிலில் கூடுதலாக ஒரு ஏ.சி., பெட்டி இணைக்கப்படுகிறது.புதன், சனிக்கிழமை தோறும் கர்நாடகமாநிலம், மங்களூருவில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் தெலுங்கானா மாநிலம் கச்சிகுடாவுக்கு செல்லும்.இந்த ெரயிலில் தற்போது, 22 பெட்டிகள் உள்ளது. தற்போது கூடுதலாக ஒரு ஏ.சி., பெட்டி இணைக்கப்படுகிறது.இதே போல், மறுமார்க்கமாக கச்சிக்குடாவில் இருந்து மங்களூருவரும் ரெயிலிலும் ஒருஏ.சி., பெட்டி இணைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவையில் இருந்து திருப்பூர் வழியாக மயிலாடுதுறைக்கு இயக்கப்படும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ெரயிலில் இரண்டு முன்பதிவு பெட்டி சேர்க்கப்பட்டுள்ளது.

    செவ்வாய்க்கிழமை தவிர, வாரத்தின் 6நாட்கள் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்படுகிறது. 21 பெட்டிகளுடன் பயணித்து வந்த நிலையில், கடந்த வாரம் முதல் கூடுதலாக இரண்டு முன்பதிவு பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முன்பதிவில் புதிய இலக்கை ஜனசதாப்தி ரயில் எட்டியுள்ளது.

    முன்பதிவு இருக்கை எண்ணிக்கை 2,108 ஆக இருந்தது. கூடுதலாக இரண்டு பெட்டி சேர்த்து 21 பெட்டியானதால், முன்பதிவு இருக்கை எண்ணிக்கை 2,320 ஆக அதிகரித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் இவ்வளவு முன்பதிவு இருக்கைகளுடன் இயங்கும் ஒரே ெரயில் ஜனசதாப்தி மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிணமாக கிடந்தவர் தக்கலை மேல்பாறையை சேர்ந்த ரவிராஜ் (வயது 29) என்பது தெரியவந்தது.
    • தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி அவர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கும், இரணியல் ரெயில் நிலையத்துக்கும் இடையே உள்ள கண்டன்விளை ரெயில்வே கேட் அருகே நேற்று இரவு ஒரு வாலிபர் பிணம் கிடந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கு மார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பிணமாக கிடந்தவர் தக்கலை மேல்பாறையை சேர்ந்த ரவிராஜ் (வயது 29) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகவில்லை. கூலி வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வெளியே சென்று வருவதாக தன் தந்தையிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ரவிராஜை பல இடங்களில் தேடி வந்தனர்.

    ஆனால் ரவிராஜ் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டு உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ரவிராஜ் ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி அவர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவை - சேலம் பாசஞ்சர் ரெயில் கடந்த ஜூலை 11-ந் தேதி முதல் மீண்டும் இயங்கத் துவங்கியது.
    • கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டத்தை இணைக்கும் ஒரே பாசஞ்சர் ெரயில் இது தான்.

    திருப்பூர் :

    கொரோனா காரணமா 2½ ஆண்டாக நிறுத்தப்பட்டிருந்த, கோவை - சேலம் பாசஞ்சர் ரெயில் கடந்த ஜூலை 11-ந்தேதி முதல் மீண்டும் இயங்கத் துவங்கியது.2 நாள் மட்டுமே இயங்கிய நிலையில் காவேரி - ஆனங்கூர் இடையே பராமரிப்பு பணி நடந்ததால் ஜூலை 13 முதல் 24-ந்தேதி வரை 10 நாட்களுக்கு ரெயில் ரத்து செய்யப்பட்டது. ஆகஸ்டு -செப்டம்பர் மாதம் ெரயில் முழுமையாக இயங்கியது. கோவை - திருப்பூர் இடையே பொறியியல் மேம்பாட்டு பணி காரணமாக அக்டோபர் 13 முதல் 30-ந்தேதி வரை 17 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது.

    பணி முடிந்து அக்டோபர் 31 முதல் மீண்டும் இயங்கத் துவங்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காவேரி - ஈரோடு இடையே பொறியியல் மேம்பாட்டு பணி நடப்பதால் அக்டோபர் 31 முதல் நவம்பர் 29 வரை 30 நாட்களுக்கு முழுமையாக ெரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

    இது குறித்து ெரயில் பயணிகள் கூறுகையில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டத்தை இணைக்கும் ஒரே பாசஞ்சர் ெரயில் இது தான். ஞாயிற்றுக்கிழமை தவிர, வாரத்தின் 6 நாட்கள் இயங்குவதால், ஆயிரக்கணக்கான பயணிகள், பனியன் தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் மாதாந்திர சீசன் டிக்கெட் எடுத்து பயணித்து வந்தனர். பகுதி அளவிலாவது பாசஞ்சர் ெரயிலை இயக்க வேண்டும் என்றனர்.

    • பஞ்சாப் ரெஜிமென்டில் பணி செய்து வந்தார்.
    • இவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    திருநந்திக்கரை வியாலிவிளையைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். 2 பேரும் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்கள்.இவரது மகன் விஜய் (வயது 24).

    கடந்த 2020-ம் வருடம் இந்திய ராணுவத்தில் சேர்ந்த இவர் பயிற்சி முடித்து பஞ்சாப் ரெஜிமென்டில் பணி செய்து வந்தார். கடந்த 4 -ந் தேதி (வெள்ளிக்கிழமை) இவர் சொந்த ஊருக்கு ரெயிலில் வந்து கொண்டிருந்தார்.

    இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை மராட்டிய மாநிலம் சந்திரப்பூர் மாவட்டம் பத்ராவதி என்ற இடத்தில் ரெயில் தண்டவாளம் பகுதியில் ரத்தவெள்ளத்தில் இவர் உயிரிழந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாகவும், அவரது சடலம் பத்ராவதி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இவரது குடும்பத்தினருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது.

    இந்த தகவலை கேட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். இதைத் தொடர்ந்து விஜயின் மூத்த சகோதரரும், ராணுவ வீரருமான விஷ்ணு நேற்று முன்தினம் இரவு சம்பவ நடந்த பத்ராவதிக்கு கிளம்பிச் சென்றார். இந்நிலையில் விஜயின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் இன்று காலையில் திருவனந்தபுரம் வழியாக சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இன்று இவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

    • பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல்மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர்.
    • அதனை தொடர்ந்து நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் அசேஷம், ஆதனூர், தெற்குநத்தம், இடையர்நத்தம் ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட 2 ஆயிரம் டன் நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல்மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். அதனை தொடர்ந்து நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • பழங்கால தொடர்புகளை மீட்டெடுக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று (16-ம் தேதி) முதல் டிசம்பர் 19-ம் தேதி வரை நடக்க உள்ளது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    தமிழகம் உடனான பழங்கால தொடர்புகளை மீட்டெடுக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று (16-ம் தேதி) முதல் டிசம்பர் 19-ம் தேதி வரை நடக்க உள்ளது.

    அப்போது இலக்கியம், பழங்கால நூல்கள், தத்துவம், ஆன்மீகம், இசை நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், நவீன கண்டுபிடிப்புகள், வர்த்தகம் உள்பட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக கருத்தரங்கு, விவாதம் போன்றவை நடக்க உள்ளது. அடுத்தபடியாக தமிழகத்தின் கலை, கலாச்சாரம், உணவு வகைகள், கைத்தறி- கைவினை பொருட்கள் அடங்கிய பொருட்காட்சி நடக்கிறது.

    இது தவிர பரதநாட்டியம், கர்நாடக இசை, தமிழ் நாட்டுப்புற இசை, நாதஸ்வர கச்சேரி, தேவாரம் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகளும் நடக்கும். இதனைத் தொடர்ந்து தமிழிசை வடிவில் திருவாசகம், கம்பராமாயண உரை, வில்லுப்பாட்டு, பொம்ம லாட்டம், சிலம்பாட்டம், காவடி ஆட்டம், கரகம், பட்டிமன்றம், நாட்டுப்புற தமிழ் நடனங்கள், பொய்க்கால் குதிரை, தப்பாட்டம் போன்றவை அரங்கேற உள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து மாண வர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், கலாச்சார வல்லுநர்கள், தொழில் முனைவோர், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் செல்ல உள்ளனர். அவர்களின் வசதிக்காக இன்று (16-ந்தேதி), 23, 30 டிசம்பர் 7, 14 ஆகிய நாட்களில் ராமேசுவரம்-பனாரஸ் விரைவு ெரயிலில் (22535) 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படட உள்ளது.அதேபோல நவம்பர் 27, டிசம்பர் 4, 11, 18 ஆகிய நாட்களில் பனாரஸ்-ராமேசுவரம் விரைவு ெரயிலில் 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 2 நாட்கள் 4 ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு செல்ல உள்ளது.
    • சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் - வஞ்சிப்பாளையம் ரெயில் நிலையத்துக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (வியாழக்கிழமை), நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் 4 ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு செல்ல உள்ளது. அதன்படி ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.13352) நாளை ஆலப்புழாவில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும். அதாவது 3 மணி நேரம் தாமதமாக புறப்படுகிறது.

    இதுபோல் எர்ணாகுளம் சந்திப்பு - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (12678) நாளை 2½ மணி நேரம் தாமதமாக எர்ணாகுளத்தில் இருந்து காலை 11.40 மணிக்கு புறப்படும். திருச்சி-பாலக்காடு டவுன் ரெயில் (16843) நாளை மறுநாள் திருச்சியில் இருந்து 2½ மணி நேரம் தாமதமாக மதியம் 3.30 மணிக்கு புறப்படும். நாகர்கோவில் - கோவை ரெயில் (16321) நாளை மறுநாள் நாகர்கோவிலில் 2 மணி நேரம் தாமதமாக காலை 9.35 மணிக்கு புறப்படும்.

    இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
    • மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

     மதுரை

    செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரெயிலின் பயண நேரத்தை குறைப்பது என்று ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. அதன்படி நாளை மறுநாள் (19-ந் தேதி) முதல் செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரெயில் திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை, திருச்சியில் இருந்து முறையே நண்பகல் 12.10, 12.42, 12.53, 13.45 மணிக்கு பதிலாக, 11.30, 12.02, 12.13, 13.20 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் மயிலாடுதுறைக்கு மாலை 5.10 மணிக்கு பதிலாக மாலை 4.25 மணிக்கு, 45 நிமிடங்கள் முன்பாகவே செல்லும்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • கொச்சுவேலி ரெயில் நிலையத்தில் திட்டமிடப் பட்டுள்ள கட்டுமானப் பணிகள் காரணமாக ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்
    • தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    நாகர்கோவில்:

    தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கொச்சுவேலி ரெயில் நிலையத்தில் திட்டமிடப் பட்டுள்ள கட்டுமானப் பணிகள் காரணமாக ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ரெயில் எண்:06772 கொல்லம் சந்திப்பு-கன்னியாகுமரி மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் நவம்பர் 17, 19, 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும்.

    ரெயில் எண்:06773 கன்னியாகுமரி-கொல்லம் சந்திப்பு மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் நவம்பர் 17, 19, 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும்.

    ரெயில் எண்:06429 கொச்சுவேளி-நாகர் கோவில் சந்திப்பு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் நவம்பர் 17, 19 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும்.

    ரெயில் எண்:06430 நாகர்கோவில் சந்திப்பு-கொச்சுவேளி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் நவம்பர் 17, 19, 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும்.

    ரெயில் எண்:16366 நாகர்கோவில் கோட்டயம் முன்பதிவு செய்யப்படாத எக்ஸ்பிரஸ் நவம்பர் 17, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஒரு மணிநேரம் தாமதமாக ஓடும்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

    • சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதியாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது,
    • இரவு 11.15 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு எர்ணாகுளம், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7.23 மணிக்கு சேலம் வந்தடையும்.

    சேலம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதியாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கோட்டயத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது, அதன்படி செகந்திராபாத்-கோட்டயம் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07125) வருகிற 27-ந் தேதி மாலை 6.50 மணிக்கு செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக 28-ந் தேதி (திங்கட்கிழமை) மதியம் 12.22 மணிக்கு சேலம் வந்தடையும்.

    பின்னர் இங்கிருந்து 12.25 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், அலுவா, எர்ணாகுளம் வழியாக இரவு 9 மணிக்கு கோட்டயம் சென்றடையும்.

    இதேபோல் மறு மார்க்கத்தில் கோட்டயம்-செகந்திராபாத் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07126) வருகிற 28-ந் தேதி இரவு 11.15 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு எர்ணாகுளம், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7.23 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 7.25 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர் வழியாக வருகிற 30-ந் தேதி காலை 4 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • சபரிமலை சீசனுக்காக இயக்கப்படும் தாம்பரம்-எர்ணாகுளம் ரெயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் 108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்றது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் தை மாதம் நடைபெறும் மகரஜோதி வரை நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இந்த நேரத்தில் அய்யப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருவார்கள்.

    பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை தாம்பரம் முதல் கேரளா மாநிலம் எர்ணாகுளம் இடையே நவம்பர் 28-ந் தேதி முதல் ஜனவரி 3-ந் தேதி வரை செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

    இந்த ரெயில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, புனலூர் வழியாக எர்ணாகுளம் வரை இயக்கப்படுகிறது.

    அய்யப்பன் கோவில் சீசனுக்காக இயக்கப்படும் இந்த சிறப்பு ரெயிலுக்கு தமிழகத்தின் முக்கிய ஆன்மீக நகரங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூரில் நிறுத்தம் இல்லாதது பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    ஏற்கனவே எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி மக்கள் தொடர்ந்து ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சபரி மலை சிறப்பு ரெயிலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிற்காதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் 108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்றது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் ஆகிய கோவில்களில் தரிசிக்கவும், சதுரகிரி மலையில் சித்தர்கள் வாழும் மலையாக செல்லும் நிலையில் ஆன்மீக விழாவுக்காக இயக்கப்படும் சபரிமலை சிறப்பு ரெயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்களும், பயணிகளும் தெற்கு ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

    • ராமேசுவரத்தில் இருந்து மதுரை, பழனி வழியாக பாலக்காடுக்கு ெரயில் விட வேண்டும்.
    • ராமேசுவரத்துக்கு வருகை தரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ராமேசுவரம்

    உலகப் புகழ்பெற்ற ராமேசுவரத்தில் 12 ஜோதி லிங்கத்தில் ஒரு ஜோதிலிங்கம் ராமநாதசுவாமி கோவிலில் அமைந்திருப்பது ராமேசுவரத்துக்கு பெருமையாகும்.

    இதனால் உலகம் நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்தும் சிவஸ்தலமான ராமேசுவரம் ராமநா தசுவாமி கோவிலில் வழிபாடு செய்வதற்கு தினமும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    பெரும்பாலான தமிழகப் பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் ராமேசுவரத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு ஆன்மீகப் பயணமாக மற்ற தலங்களான பழனி, திருச்செந்தூர், பொள்ளாச்சி மாசாணி யம்மன் கோவில், பாலக்காடு பகவதி அம்மன் கோவில்களுக்கு செல்கின்றனர்.

    ஆனால் ராமேசுவரம் வந்து மீண்டும் இந்த புனித தலங்களுக்கு செல்வதற்கு நேரடியாக ரெயில் போக்குவரத்து இல்லை. பஸ்களில் செல்ல வேண்டும் இதற்கு அதிக கட்டணம், அதிக பயண நேரம் ஆவதால் அதைத்தவிர்த்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பிச் செல்கின்றனர்.

    எனவே ராமேசுவரத்தை மையப்படுத்தி மீட்டர் கேஜ் ரெயில் பாதையாக இருந்தபோது ராமேசுவரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு பாலக்காடு, திருச்சியை இணைக்கும் வகையில் பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் மானாமதுரையில் இருந்து திருச்சிக்கும், மதுரை, பழனி, பொள்ளாச்சி வழியாக பாலக்காடுக்கும் பிரிந்து சென்றது.

    இந்த ரெயில் தினமும் இயக்கப்பட்டு வந்தது. இதனால் பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் வசதியாக இருந்தது. இந்த ரெயில்கள் இயக்கப்பட்டபோது ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டம் ஆகிய பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் எந்தவித சிரமமின்றி பழனிக்கு சென்று வந்தனர்.

    தற்போது அகல ரெயில் பாதையாக மாற்றிய பிறகு இந்த ரெயில் போக்குவரத்து நிறுத்தப்ப ட்டது. இதனால் பயணிகள் பழனி, பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில், பாலக்காடு பகவதி அம்மன் கோவில்களுக்கு செல்வதை குறைத்துக் கொண்டனர்.

    பயணிகள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி ரெயில்வே நிர்வாகம் மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது இயக்கப்பட்ட பாலக்காடு,திருச்சி பயணிகள் ரெயிலை முன் பதிவு வசதியுடன் இயக்கு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமேசுவரத்துக்கு வருகை தரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×