என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குத்துச்சண்டை"

    • அரையிறுதி சுற்றில் கோவிந்த், கஜகஜ்தான் வீரர் சன்ஜாரிடம் தோல்வியடைந்தார்.
    • நடப்பு ஆசிய சாம்பியன் ஜாபரோவிடம் சுமித் தோல்வியடைந்தார்.

    புதுடெல்லி:

    ஆசிய எலைட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடைபெறுகிறது. இதில், இந்திய வீரர்கள் சுமித், கோவிந்த் குமார் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

    இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில், கோவிந்த் (48 கிலோ எடைப்பிரிவு), கஜகஜ்தான் வீரர் சன்ஜாரிடம் 0:4 என தோல்வியடைந்தார். இதேபோல் 75 கிலோ எடைப்பிரிவில் சுமித், நடப்பு ஆசிய சாம்பியன் ஜாபரோவிடம் (உஸ்பெகிஸ்தான்) 0:5 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார். தாய்லாந்து ஓபனில் சுமித், கோவிந்த் குமார் ஆகிய இருவரும் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    மற்ற இந்திய வீரர்களான சிவ தாபா, முகமது ஹசாமுதீன், நரேந்தர் ஆகியோர் அரையிறுதியில் மோத உள்ளனர். நாளை நடைபெறும் இறுதிப் போட்டிகளில் லவ்லினா, பர்வீன் உள்ளிட்ட 5 இந்திய வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர். 

    • மாநில மகளிர் குத்துச்சண்டை போட்டி நடக்கிறது.
    • மதுரை மாவட்ட குத்துச்சண்டை கழக பொது செயலாளர் டி.என்.செழியன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை குத்துச்சண்டை கழகம் சார்பில் எலைட் பிரிவு பெண்கள் தேர்வு போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் வருகிற 7-ந் தேதி காலை 7 மணிக்கு நடக்க உள்ளது.

    இதில் மாவட்ட குத்துச்சண்டை கழகத்தில் பதிவு பெற்ற சங்கங்கள் மற்றும் வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்க முடியும். இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள், மாவட்ட குத்துச்சண்டை கழகம் சார்பில் மாநில போட்டியில் கலந்து கொள்ள இயலும்.

    மாநில போட்டியில் வெற்றி பெற்றால், மத்தியபிரதேச மாநிலத்தில் இந்த மாதம் நடக்க உள்ள தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்க இயலும். எனவே

    1982-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை பிறந்தவர்கள் மட்டும் எலைட் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட குத்துச்சண்டை கழக பொது செயலாளர் டி.என்.செழியன் தெரிவித்துள்ளார்.

    • குத்துச்சண்டை போட்டியில் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரத்தில் 20 பள்ளிகளை சேர்ந்த 180 மாண வர்கள் பங்கேற்ற மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.

    14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 7-ம் வகுப்பு மாணவன் அனீக் ரசீத், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 8-ம் வகுப்பு மாணவன் அப்துல் ரஹ்மான் ஆகியோர் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டி யில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

    14 வயதுக்குட்பட்ட பிரிவில் 6-ம் வகுப்பு மாணவன் செய்யது அப்துல் ஹசன், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் 8-ம் வகுப்பு மாணவன் முகமது ஜாசிர் ஆகியோர் மாவட்ட அளவி லான போட்டியில் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

    வெற்றி பெற்ற மாண வர்கள் மற்றும் பயிற்சி யாளர் ரபீக் உசேன் ராஜா ஆகியோரை பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம், பள்ளி தலைமை ஆசிரி யர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.

    • 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அனாமிகா, பிரான்ஸ் வீராங்கனை வாசில்லாவை வென்றார்
    • ஆடவர் 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கோவிந்த் குமார் சஹானி பைனலுக்கு முன்னேறினார்

    சோபியா:

    பல்கேரியாவில் நடைபெற்றுவரும் சர்வதேச குத்துச்சண்டை தொடரில் இந்திய வீராங்கனைகள் அனாமிகாவும் அனுபமாவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர்.

    50 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீராங்கனை வாசில்லாவை 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் அனாமிகா வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை அனுபமா, ஆஸ்திரேலிய வீராங்கனை ஜெஸிக்காவை 3-2 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

    இதேபோல் ஆடவர் 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கோவிந்த் குமார் சஹானி, ஜார்ஜியாவின் லூகா கப்லாஷ்விலியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். இவர் இறுதிப்போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஷோடியோர்ஜோனை எதிர்கொள்கிறார்.

    • 50 கிலோ எடைப்பிரிவில் நிகத் ஜரீன், கொலம்பியாவின் இங்ரித் வாலன்சியாவை வீழ்த்தினார்.
    • 48 கிலோ எடைப்பிரிவு ஆட்டத்தில் நீது கங்காஸ், கஜகஸ்தான் வீராங்கனையை வென்றார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபற்று வரும் மகளிருக்கான உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீராங்கனைகள் நிகத் ஜரீன், நீது கங்காஸ் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

    50 கிலோ எடைப்பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான நிகத் ஜரீன், கொலம்பியாவின் இங்ரித் வாலன்சியாவை 5-0 என வீழ்த்தினார். இதேபோல் 48 கிலோ எடைப்பிரிவினருக்கான அரையிறுதியில் நீது கங்காஸ், கஜகஸ்தான் வீராங்கனை அலுவா பால்கிபெகோவாவை 5-2 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். 

    • சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் வாழ்த்து செய்தியை சபாநாயகர் பிஸ்வஜித் வாசித்தார்.
    • நம் வாழ்நாளில் நாம் செய்ய முடியாத சாதனையை லவ்லினா செய்திருப்பதாக முதல்வர் பாராட்டினார்

    கவுகாத்தி:

    டெல்லியில் நடைபெற்று வரும் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அசாம் மாநில வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் தங்கம் வென்று சாதனை படைத்தார். 75 கிலோ எடைப்பிரிவினருக்கான இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய வீராங்கனை கெய்த்லின் பார்க்கரை 5-2 என லவ்லினா வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

    இந்நிலையில், உலக சாம்பியன் பட்டம் வென்ற லவ்லினாவுக்கு அசாம் மாநில சட்டசபையில் இன்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் சார்பில் வாழ்த்து செய்தியை சபாநாயகர் பிஸ்வஜித் வாசித்தார்.

    பின்னர் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில், 'மாநிலத்தின் விளையாட்டுக் கொள்கையின் அடிப்படையில், குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற லவ்னினாவுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும்' என்று அறிவித்தார்.

    முதல்வர் மேலும் பேசுகையில், "நாம் புதிய லவ்லினா மற்றும் ஹிமா தாசை (தடகள வீராங்கனை) உருவாக்க வேண்டும். அவர்கள் ஏற்கனவே மாநிலத்திற்கு பெருமை சேர்ப்பதற்கான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். லவ்லினா பங்கேற்கும் அடுத்த போட்டியின் முடிவு எப்படி இருக்கும்? என்பதை இப்போது நாம் ஆராய வேண்டாம். நம் வாழ்நாளில் நாம் செய்ய முடியாத சாதனையை அவர் செய்திருக்கிறார்" என பாராட்டினார்.

    • சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் விதிப்படி 40 வயதிற்கு மேல் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது.
    • வயது கடந்ததால் கட்டாய ஓய்வை அறிவித்துள்ளார் மோரி கோம்.

    இந்தியாவின் சாதனை வீராங்கனையாக திகழ்பவர் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம். இவர் ஆறு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தவர். மேலும், 2012 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடிக்கொடுத்தவர்.

    சாதனை வீராங்கனையான இவர் குத்துச்சண்டை போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

    40 வயது வரைதான் ஆண்கள் மற்றும் பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க முடியும் என சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் விதி சொல்கிறது.

    ஆனால், 40 வயதை கடந்த பின்னரும் பதக்கம் வெல்லும் வேட்கையில் மேரி கோம் உள்ளார். இருந்த போதிலும் வயது காரணமாக ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேரி கோம் கூறுகையில் "இன்னும் பல போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கை உள்ளது. ஆனால் வயது வரம்பு முடிவடைந்ததால் என்னால் எந்தவிதமான போட்டியிலும் கலந்து கொள்ள முடியாது. நான் இன்னும் அதிக போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். இருந்த போதிலும் வயது வரம்பு காரணமாக கட்டாய ஓய்வை அறிவிக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதித்துவிட்டேன்" என்றார்.

    • இந்திய வீராங்கனை பிரீத்தி பன்வர் வியட்நாமை சேர்ந்த வோ தி கிம்மை எதிர் கொண்டார்.
    • இதில் பிரீத்தி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

    பாரீஸ், ஜூலை. 28-

    பாரீஸ் ஒலிம்பிக்கில் குத்துச் சண்டையில் இந்தியா சார்பில் 2 வீரர்களும், 5 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 7 பேர் பங்கேற்றுள்ளனர்.

    இந்திய வீராங்கனை பிரத்தி பன்வர் இந்திய நேரடிப்படி நள்ளிரவு 12 மணிக்கு நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் வியட்நாமை சேர்ந்த வோ தி கிம்மை எதிர் கொண்டார். இதில் பிரீத்தி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

    20 வயதான அவர் கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் கொலம்பியாவை சேர்ந்த யெனி அரியாசை சந்திக்கிறார். இந்த ஆட்டம் 31-ந்தேதி நடக்கிறது.

    • ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் முதல் சுற்று இன்று நடந்தது.
    • இதில் இந்தியாவின் லவ்லினா போர்ஹோகெய்ன் வென்றார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், பெண்கள் குத்துசண்டை 75 கிலோ பிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன், நார்வே வீராங்கனைஹோப்ஸ்டெட் உடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் லவ்லினா 5-0 என்ற புள்ளிக்கணக்கில் நார்வே வீராங்கனையை தோற்கடித்தார். இதன்மூலம் லவ்லினா காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    அசாம் மாநிலத்தை சேர்ந்த லவ்லினா அர்ஜூனா விருது பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.

    • துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்றார்.
    • இதன்மூலம் ஒலிம்பிக்கில் இந்தியா 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர்,சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவில் குத்துச்சண்டையில் இந்தியா சார்பில் நிகாத் ஜரின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் சீன வீராங்கனையை எதிர்கொண்டார்.

    இதில் சீன வீராங்கனை 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் நிகாத் ஜரின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    • சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் தன்னிச்சையான முடிவால் இந்த 2 வீராங்கனைகளும் பாதிக்கப்பட்டவர்கள்.
    • இவர்கள் எதிர்கொள்ளும் அவதூறுகளை பார்த்து நாங்கள் வருத்தம் அடைகிறோம்.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 66 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி- அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் ஆகியோர் மோதினார்கள்.

    போட்டி தொடங்கியதும் இத்தாலி வீராங்கனை கரினி எதிர்பார்க்காத வகையில் அவரது முகத்தை நோக்கி கெலிஃப் வேகமாக ஒரு பஞ்ச் விட்டார். இதில் இத்தாலி வீராங்கனை நிலைகுலைந்தார். அத்துடன் இனிமேல் எதிர்த்து விளையாட முடியாது என அறிவித்தார். இதனால் 46 வினாடிகளிலேயே போட்டி முடிந்தது.

    இதனால் கெலிஃப் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். இதை இத்தாலி வீராங்கனை கரினியால் ஜீரணிக்க முடியவில்லை. தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

    போட்டிக்கு பின்பு பேசிய இத்தாலி வீராங்கனை கரினி, "ஆணுக்கு எதிராக வலுக்கட்டாயமாக சண்டையிட வைத்தது நியாயமற்றது" என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

    இதனையடுத்து இப்போட்டி பாரீஸ் ஒலிம்பிக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


    கடந்த வருடம் நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் போட்டியின்போது அல்ஜீரிய வீராங்கனை கெலிஃப் மற்றும் 2 முறை உலக சாம்பியனான சீன தைபே வீராங்கனை லின் யு-டிங் ஆகியோர் பாலின தகுதி பரிசோதனையில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டு தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

    ஆனால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நடத்திய சோதனையின் அடிப்படையில் இவர்கள் இருவரும் பெண்கள் தான் என உறுதி செய்யப்பட்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தகுதியை பெற்றனர்.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விளக்கம் அளித்துள்ளது.

    அதில், "ஒவ்வொரு வீரருக்கும் பாரபட்சமின்றி விளையாட்டைப் பயிற்சி செய்ய உரிமை உண்டு. கெலிஃப் மற்றும் யூ-டிங் இருவரும் தங்களை பெண்களாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

    விளையாட்டு வீரர்களின் பாலினம் மற்றும் வயது அவர்களின் பாஸ்போர்ட்டில் உள்ள தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. அனைத்து மருத்துவ விதிமுறைகளுக்கு இணங்கி தான் குத்துச்சண்டை போட்டியில் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.


    2023 ஆம் ஆண்டு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து அவர்கள் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் தன்னிச்சையான முடிவால் இந்த 2 வீராங்கனைகளும் பாதிக்கப்பட்டவர்கள்.

    பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்த 2 வீராங்கனைகள் பற்றிய தவறான தகவல்களை நாங்கள் பார்த்து வருகிறோம். பெண்கள் பிரிவில் இந்த 2 வீராங்கனைகளும் பல ஆண்டுகளாக சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். .

    ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்த 2 குத்துச்சண்டை வீராங்கனைகளும் தற்போது எதிர்கொள்ளும் அவதூறுகளை பார்த்து நாங்கள் வருத்தம் அடைகிறோம்" என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

    • அரையிறுதி போட்டியில் தாய்லாந்தின் ஜான்ஜேம் சுவானாபெங்கை கெலிஃப் எதிர்கொள்கிறார்.
    • சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இமேன் கெலிஃப்க்கு ஆதரவாக குரல் கொடுத்தது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ பிரிவின் காலிறுதிப் போட்டியில் ஹங்கேரி வீராங்கனை லூகா ஹமோரியை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தார் அல்ஜீரியா வீராங்கனை இமேன் கெலிஃப்

    ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் தாய்லாந்தின் ஜான்ஜேம் சுவானாபெங்கை கெலிஃப் எதிர்கொள்கிறார்.

    குத்துச்சண்டையில் அரையிறுதிப் போட்டியில் தோற்பவர்களுக்கும் வெண்கலப் பதக்கம் வழங்கப்படும் நிலையில், இமானே கெலிஃப் பதக்கம் வெல்வது உறுதி ஆகியுள்ளது.

    குத்துச்சண்டை லீக் சுற்றில் இமானே கெலிஃப் ஒரு 'ஆண்' என குற்றம் சாட்டி இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா கேரினி போட்டியில் இருந்து விலகியது பெரும் சர்ச்சையானது.

    இதனையடுத்து இந்த குற்றச்சாட்டு தொடர்பாக இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி மன்னிப்பு கோரியுள்ளார். "இந்தச் சர்ச்சை அனைத்தும் என்னை வருத்தமடையச் செய்கிறது. எனக்கு எதிராக விளையாடிய இமானே கெலிஃப்பை நினைத்து நான் வருந்துகிறேன். நான் இமானே கெலிஃப்பிடமும் மற்ற அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    ×