என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 181030"

    பட்டறை தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
    மதுரை

    மதுரை காமராஜபுரம் திரு.வி.க. நகரைச் சேர்ந்த வர் ராஜேஷ்குமார் (வயது 40). இவர் அங்குள்ள அலுமினிய பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.  இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும்  ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 
     
    இந்த நிலையில் ராஜேஷ்குமார் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கினார்.   நள்ளிரவு நேரத்தில் மர்ம கும்பல் கதவை தட்டியது. ராஜேஷ்குமார் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது அங்கு பதுங்கியிருந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால்  சரமாரியாக வெட்டியது. 

    இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும்  சிகிச்சை பலனின்றி அவர் பரிதாப மாக இறந்தார். 

    இதுதொடர்பாக கீரைத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் அலுமினிய பட்டறை தொழிலாளி ராஜேஷ் குமாரை  எதற்காக வெட்டிக் கொன்றனர்? அவரை கொலை செய்த கும்பல் எது? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.

    ராஜேஷ்குமாரின் மனைவி சத்யாவுக்கு கீரைத்துறையைச் சேர்ந்த ஒருவர் மூலம் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த வேலை வாங்கி  தரப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சத்யா வேலைக்கு செல்ல மறுத்து விட்டார். இருந்தபோதிலும்  அந்த நபர் வேலை வாங்கிக் கொடுத்ததற்காக பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். எனவே சத்யா இதுதொடர்பாக கணவர் ராஜேஷ்குமாரிடம்   தெரிவித்து இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ்குமார், நேரடியாக அந்த நபரின் வீட்டுக்கு சென்று தட்டி கேட்டு உள்ளார்.  அவரை அங்கிருந்த சிலர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்து உள்ளனர். 

    இந்த பிரச்சினையால் ஆத்திரம் அடைந்த  சம்பந்தப்பட்ட நபர் நபர் கூலிப்படை வைத்து ராஜேஷ்குமாரை வெட்டிக் கொன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக கீரைத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை கே.புதூரில் ஓட்டல் ஊழியர் தவசி என்பவர் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் இன்று காலை சிறுவன் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

    இதற்கிடையில் தற்போது  அலுமினிய பட்டறை தொழிலாளி ராஜேஷ்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்  நடந்துள்ளது  மதுரை மாநகர மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பட்டறை தொழிலாளி கொலையில் போலீசில் புகார் கொடுப்பதாக மிரட்டியதால் கொன்றோம் என கைதான அரசு ஆஸ்பத்திரி ஊழியர் வாக்குமூலம் அளித்தனர்.
    மதுரை

    மதுரை காமராஜபுரம், திரு.வி.க. நகரை சேர்ந்த அலுமினிய பட்டறை தொழிலாளி ராஜேஷ்குமார் (வயது40)  மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

    அப்போது சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து, காவல் நிலையத்தில் விசாரித்தனர்.  அவர்கள் மருதுசூர்யா (30), தெப்பக்குளம் சி.எம்.ஆர் ரோடு சந்தோஷ் (24), வண்டியூர் தக்காளி சதீஷ் (28) என்பது தெரியவந்தது. அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தியதில் ராஜேஷ்குமாரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

    இதையடுத்து மருதுசூர்யா, தக்காளிசதீஷ், சந்தோஷ் ஆகிய 3 பேரையும் கீரைத்துறை போலீசார் கைது செய்தனர். போலீசில் மருதுசூர்யா கொடு த்துள்ள வாக்குமூலத்தில்  கூறியிருப்பதாவது:-
    நான் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தினக்கூலி பணியாளராக வேலை பார்த்து வருகிறேன்.  கொரோனா காலகட்டத்தில் கிருமி நாசினி  தெளிப்பதற்காக திரு.வி.க நகருக்குச் சென்றேன். அப்போது எனக்கு ராஜேஷ்குமாரின் மனைவி சத்யாவுடன் பழக்கம் ஏற்பட்டது. 

    அலுமினிய பட்டறையில் ராஜேஷ்குமார் வேலை பார்ப்பதால் சத்யா குடித்தனம் நடத்த போதிய பணமின்றி அவதிப்பட்டு வந்தார். நான் அவரிடம்  உங்களையும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வேலைக்கு சேர்த்து விடுகிறேன். தினந்தோறும் 500 ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை  கூறினேன். அவரும் ஒப்புக் கொண்டார். 

    இதனைத்தொடர்ந்து   2 பேரும் நெருங்கி பழகினோம்.  நானும் சத்யாவும் நெருங்கி பழகுவது, ராஜேஷ் குமாருக்கு தெரியவந்தது.  அவர் சத்யாவை வேலைக்கு அனுப்பவில்லை. இதனால் நான் அவளுடன் பழக முடியாமல் தவித்து வந்தேன். இருந்தபோதிலும் நாங்கள் இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்தோம்.
     
    இது எப்படியோ ராஜேஷ் குமாருக்கு தெரிந்துவிட்டது. அவர் என்னுடன் பேச கூடாது என்று சத்யாவிடம் சண்டை போட்டார்.   ராஜேஷ்குமார் நேற்று முன்தினம் என்னை தேடி வந்தார். அப்போது அவர்  நீ என் மனைவியுடன் இனிமேல் செல்போனில் பேசக்கூடாது. மீறி பேசினால் போலீசில் புகார் கொடுப்பேன் என்று மிரட்டினார். எனவே அவரை கொல்ல வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. 

    இது குறித்து நான் எனது நண்பர்களான  ஆட்டோ டிரைவர் தக்காளி சதீஷ், பழ வியாபாரி சந்தோஷ் ஆகியோரிடம்  பேசினேன். அப்போது ராஜேஷ்குமாரை நள்ளிரவில் கொல்ல முடிவு செய்தோம். அதன்படி நாங்கள் 3 பேரும் திரு.வி.க நகருக்கு சென்றோம். அங்கு சத்யா வீட்டின் கதவைத் தட்டினோம். 
    அப்போது ராஜேஷ்கு மார் வெளியே வந்தார். அவரை நாங்கள் கத்தியால் சரமாரியாக குத்தினோம்.  அவர்    அலறியபடி மயங்கி கீழே விழுந்தார். அதன்பிறகு   சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்று விட்டோம். 

    இவ்வாறு  அவர் வாக்கு மூலம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.      
    சாத்தூர் அருகே உள்ள கண்மாயில் தொழிலாளி மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி (வயது 23). தொழிலாளியான இவர் நேற்றிரவு கே.மேட்டுப்பட்டியில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தி னர் பெருமாள்சாமியை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. 

    இந்த நிலையில் பெருமாள்சாமி கே.மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள கண்மாயில் பிணமாக கிடந்தார். அருகிலேயே அவரது மோட்டார் சைக்கிளும் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த இருக்கன்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    பெருமாள்சாமி விபத்தில் இறந்தாரா? அல்லது வேறுஏதேனும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    விருதுநகர் அருகே நடந்த வெடி விபத்தில் பட்டாசு தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
    சிவகாசி

    சிவகாசி அருகே உள்ள அம்மன்கோவில் பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (62). இவர் செங்கமலம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் போர்மேனாக பணியாற்றி வந்தார். 

    சம்பவத்தன்று ஆலையில் உள்ள கழிவு பட்டாசுகளை எரித்தார். அப்போது பட்டாசுகள் வெடித்ததில் கிருஷ்ணசாமி தீக்காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் கிருஷ்ணசாமி சிகிச்சை பெற்று வருகிறார். 

    இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    • குருமூர்த்திக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.
    • தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள காமராஜர்நகரை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 32). கூலிதொழிலாளி. காதல் திருமணம் செய்த இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

    குருமூர்த்திக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இரவு மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதனை அவரது மனைவி கண்டித்துள்ளார்.

    இதனால் மனமுடைந்த அவர் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு தாளமுத்துநகர் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றதால் வாழைப்பழத்தில் விஷ மாத்திரை வைத்து தின்று கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கோபி அடுத்துள்ள குருமந்தூர், பூசாரியூரை சேர்ந்தவர் குமார் (42). இவரது மனைவி சித்ரா. மனைவி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பதை கணவர் குமார் கண்டித்து வந்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் சம்பவத்தன்றும் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த மனைவியை குமார் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.

    தனியாக இருந்த கணவர் குமார் மனமுடைந்து வாழைப்பழத்தில் விஷமாத்திரையை வைத்து சாப்பிட்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

    பின்னர் குமாரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குமார் இறந்தார். இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் தொழிலாளி கொலையில் தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியாண்டி, அவரது மகன் அஜித்குமாரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் லட்சுமி நகரை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி முத்து.இவர்களது மகன் அஜித்குமார்.

    விருதுநகர் தெப்பம் பகுதியில் முனியாண்டி மனைவி முத்து ஜூஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளத்தை சேர்ந்த சவுந்தரராஜன் (48) என்பவருக்கு தனக்கு தெரிந்த நபர்கள் மூலம் முத்து ரூ. 3லட்சம் கடன் வாங்கி கொடுத்தார். கடந்த சில மாதங்களாக சவுந்தர்ராஜன் வட்டி பணத்தை கொடுக்கவில்லை.

    இது தொடர்பாக பேச, சவுந்தர்ராஜன் நேற்று முத்து வீட்டிற்கு வந்தார். அப்போது அங்கிருந்த முனியாண்டி, மகன் அஜித்குமார் ஆகியோர் கடன் தொடர்பாக வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த தந்தை-மகன் 2 பேரும் சவுந்தர்ராஜனை சரமாரியாக அடித்து தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சவுந்தர்ராஜன் இறந்த விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த கொலை தொடர்பாக சின்னமூப்பம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சமயன் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியாண்டி, அவரது மகன் அஜித்குமாரை கைது செய்தனர்.

    • கல் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
    • தக்கலை அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்.

    கன்னியாகுமரி:

    திருநெல்வேலி மாவட்டம் பணகுடி சர்வோதயா தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52).

    இவர் தக்கலை அருகே கல்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு கல் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்ட முருகன் தக்கலை அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று மாலை ஊருக்கு செல்வதாக கூறி மருத்துவ மனையில் இருந்து வீட்டிற்கு புறப்பட்ட அவர் தக்கலை பஸ் நிலையம் வந்தபோது மயங்கி விழுந்தார்.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் தக்கலை போலீசார் விரைந்து சென்று முருகனை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக தக்கலை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாகராஜ் ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.
    • சோமசுந்தரம் நாகராஜிடம் அரிவாளை காட்டி மிரட்டி, ரூ. 300 ஐ எடுத்துக் கொண்டார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர், மெயின்ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 57). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த வடக்கு கள்ளிகுளத்தை சேர்ந்த அப்பாவு மகன் மாடசாமி என்ற சோமசுந்தரம் (37) நாகராஜிடம் செலவுக்கு ரூ. 500 கேட்டுள்ளார். அதற்கு நாகராஜ் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சோமசுந்தரம் அரிவாளை காட்டி மிரட்டி, அவரது சட்டை பையில் வைத்திருந்த ரூ. 300 ஐ எடுத்துக் கொண்டார். மேலும் இதுபற்றி போலீசில் புகார் செய்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

    இதுபற்றி நாகராஜ் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, சோமசுந்தரத்தை தேடி வருகிறார்.

    • பஸ்ஸை முந்தி செல்ல முயன்றபோது எதிரே வந்த லாரியுடன் மோதல்
    • இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    அழகியமண்டபம் பனங்காலவிளையைச் சேர்ந்தவர் நேசமணி இவ ரது மகன் ஜெரின் (வயது31).கட்டிட தொழிலாளி.

    இவர் தனது நண்பர் பூஞ்சான்விளையைச் சேர்ந்த ஜெபிஷன் (24) என்பவருடன் நாகர்கோ விலுக்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பினர்.

    தோட்டியோடு அடுத்த வில்லுக்குறியில் வந்த போது முன்னால் சென்ற பஸ்ஸை ஜெபிஷன் முந்தி செல்ல முயன்றுள்ளார்.

    அப்போது எதிரே பார்சல் ஏற்றி வந்த லாரியும் பைக்கும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் இருவரும் காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஜெரினை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பலத்த காயமடைந்த ஜெபிஷன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஜெரின் உறவினர் சிசில்தங்கம் (55) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மகள் சம்பவத்தன்று வேலை விஷயமாக வெளியே சென்றவர் காதலருடன் சென்று விட்டார்.
    • இதனால் வெங்கடேசன் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (54). இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 25 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    இவர்களது மகள் சம்பவத்தன்று வேலை விஷயமாக வெளியே சென்றவர் காதலருடன் சென்று விட்டார். இதனால் வெங்கடேசன் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று பயிர்களுக்கு அடிப்பதற்காக தனது வீட்டில் வைத்திருந்த கலைக்கொல்லி (விஷம்) மருந்தை குடித்துள்ளார். அப்போது சித்ரா தோட்டத்திலிருந்து வீட்டுக்கு வந்துள்ளார்.

    அப்போது தனது கணவர் வாந்தி எடுத்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கணவரிடம் இதுகுறித்து கேட்டபோது தான் விஷம் குடித்து விட்டதாக கூறியதை கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர். 

    • உடையார்விளை சந்திப்பில் சாலையை கடந்தபோது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே உள்ள உடையார்விளையை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 52) தொழிலாளி. கடந்த 3-ந் தேதி இரவு இவர் உடையார்விளை சந்திப்பில் சாலையை கடந்தார். அப்போது திங்கள்நகரில் இருந்து குளச்சல் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் படுகாயமடைந்த ஸ்டீபனை அப்பகுதியினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. கடந்த 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஸ்டீபன் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது மனைவி ஜெபிதா குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×