என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர்கள்"
- ராஜபாளையத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை நடந்தது.
- தென்காசி மாவட்ட செயலாளராக யாரை நியமிப்பது? என்று அமைச்சர்களுடன் ஆலோசித்தார்.
ராஜபாளையம்
தென்காசியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு கடையநல்லூர், சிவகிரி, சொக்கநாதன் புத்தூர் விலக்கு வழியாக ராஜ பாளையம் வந்து சேர்ந்தார்.
ராஜபாளையம்- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அமிழ் ஓட்டலில் அவர் மதிய உணவு சாப்பிட்டு ஓய்வெடுத்தார். பின்னர் இரவு 7 மணி வரை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார். தென்காசி மாவட்ட செய லாளராக யாரை நியமிப்பது? என்று அமைச்சர்களுடன் ஆலோசித்தார்.
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலு வலகம், புதுப்பாளையம் மாரியம்மன் கோவில், காந்தி கலை மன்ற விலக்கு, காந்திசிலை ரவுண்டானா, பழைய பஸ் நிலையம், பஞ்சு மார்க்கெட் வழியாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார்.
அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி ஆகியோரும் உடன் சென்றனர்.
தமிழக அமைச்ச ரவையில் மாற்றம் குறித்தும், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் அளிப்பது தொடர்பாகவும் ஆலோசனை செய்ய ப்பட்டதாக தெரிகிறது.
- மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
- அமைச்சர் சேகர்பாபு, யானைக்கு பழம் கொடுத்து மகிழ்ந்தார்.
மதுரை
மதுரை அழகர்கோவில் மலையில் உள்ள ராக்காயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் பழமுதிர்சோலை முருகன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர்.
அவர்கள் கோவில் திருப்பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார். அவர் கோவில் வளாகம் முழுவதும் சென்று பார்வையிட்டு, அங்கு நடைபெறும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணியை பார்வையிட்ட அவர், அந்த பணியை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.
மேலும் மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி உடல்நலம் குறித்து விசாரித்த அமைச்சர் சேகர்பாபு, யானைக்கு பழம் கொடுத்து மகிழ்ந்தார். பின்னர் யானை குளிப்பதற்காக கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தையும் அவர் பார்வை யிட்டார்.
மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தின் திருப்பணிகளுக்கு வந்துள்ள கற்களை தூண்களாக அமைக்கும் பணிகள் மதுரை அருகே உள்ள பெருங்குடி சின்ன உடப்பு கிராமத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளையும் அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி ஆகியோர் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.
- டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து தொடங்கிய மினி மாரத்தானில் பங்கேற்றனர்.
- 21 கிலோமீட்டர் தூரத்தை கர்நாடகாவைச் சேர்ந்த பரசப்பா கலிடா 1 மணி நேரம் 9 நிமிடம் 26 வினாடிகளில் கடந்து முதல் பரிசை பெற்றார்.
நாகர்கோவில் :
பழையாற்றை பாது காக்க வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி இன்று கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரை 21 கிலோமீட்டர் தூரம் நடந்தது.
கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து தொடங்கிய மினி மாரத்தானில் பங்கேற்றனர்.
மணக்குடி, புத்தளம், தெங்கம்புதூர், கோட்டார், சந்திப்பு, அண்ணா பஸ் நிலையம் வழியாக நாகர் கோவில் அண்ணா விளை யாட்டரங்கத்தில் முடிவ டைந்தது. அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஹரிகிரண் பிரசாத், சரவணன் ஆகியோர் 21 கிலோ மீட்டர் தூரத்தையும் ஓடி வந்தனர். 21 கிலோமீட்டர் தூரத்தை கர்நாடகாவைச் சேர்ந்த பரசப்பா கலிடா 1 மணி நேரம் 9 நிமிடம் 26 வினாடிகளில் கடந்து முதல் பரிசை பெற்றார்.
முதல் பரிசாக இவருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.கேரளாவைச் சேர்ந்த ஜெகநாதன் 1 மணி நேரம் 9 நிமிடம் 59 வினாடிகளில் கடந்து இரண்டாவது பரிசை தட்டி சென்றார். இவருக்கு ரூ.15 ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கோவையைச் சேர்ந்த வினோத் 1 மணி நேரம் 13 நிமிடம் 53 வினாடிகளில் கடந்து மூன்றாம் பரிசை பெற்றார்.
இவருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும் சான்றி தழ்களும், மெட்டலும் வழங் கப்பட்டது. 21 கிலோ மீட்டர் பெண்களுக்கான பிரிவில் சமீதா முதல் பரிசு பெற்றார். இவர் 2 மணி நேரம் 37 நிமிடம் 42 வினாடிகளில் 21 கிலோ மீட்டரை கடந்தார். இவருக்கு ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 2-வது பரிசை அஸ்வினி தட்டி சென்றார். இவர் 2 மணி நேரம் 50 நிமிடம் 43 வினாடிகளில் கடந்தார். இவருக்குரூ. 15,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 3-வது பரிசை தீபா பெற்றார். இவர் 3 மணி நேரம் 7 நிமிடம் 11 வினாடிகளில் கடந்தார். இவருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. ஆண்களுக்கு 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான பிரிவில் ராமசாமி 1 மணி நேரம் 42 நிமிடம் 42 வினாடி களில் கடந்து முதல் பரிசு பெற்றார். இவருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. மாரப்பன் 1 மணி நேரம் 44 நிமிடம் 26 வினாடிகள் கடந்து 2-வது பரிசை தட்டி சென்றார். இவருக்கு ரூ.7 ஆயிரம் வழங்கப்பட்டது. டிக்ஸன் 1மணி நேரம் 47 நிமிடம் 11 வினாடிகள் கடந்து மூன்றாம் பரிசை தட்டி சென்றார். இவருக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
10 கிலோமீட்டர் ஆண்க ளுக்கான மினி மாரத்தான் போட்டியில் தினேஷ் முதல் பரிசும், ஆனந்த அசோக் 2-ம் பரிசும், நிதீஷ்குமார் 3-ம் பரிசும் பெண்களுக்கான 10 கிலோ மீட்டர் போட்டியில் கிரிஸ்டல் முதல் பரிசும், கவுசிகா 2-வது பரிசும், அடினா ஆர்தார் 3-வது பரிசும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசும் சான்றிதழ்களும், மெட்டல்களும் வழங்கப்பட் டது.
இதை தொடர்ந்து மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி அவரது 138- வது போட்டி என்பது குறிப்பி டத்தக்கதாகும்.
- இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் கைபேசிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27.64 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் கைபேசிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.
மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமை தாங்கினார். செல்வராஜ் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முதற்கட்டமாக ரூ.15.86 லட்சம் மதிப்பீட்டில் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரையும், பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய 87 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11.78 லட்சம் மதிப்பீட்டில் கைபேசி என மொத்தம் 106 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27.64 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன் மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ஒரு ஆண்டுக்கு நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்பட உள்ளது.
- இந்திய நாடே திரும்பி பார்க்கும் வகையில் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
திருப்பூர்
தி.மு.க., திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் தளபதி அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சியின் 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட காங்கயம் தொகுதி பொறுப்பாளர் உமாராணி, மடத்துக்குளம் தொகுதி பொறுப்பாளர் சித்–திக், தாராபுரம் தொகுதி பொறுப்பாளர் நாகராஜன், உடுமலை தொகுதி பொறுப்பாளர் தமிழ்மறை மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், துணை அமைப்புகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதை வரும் ஒரு ஆண்டுக்கு நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்பட உள்ளது. தொண்டர்கள் தங்கள் இல்ல விழாவாக, மக்கள் விழாவாக, கொள்கை விழாவாக, வெற்றி விழாவாக, இந்திய நாடே திரும்பி பார்க்கும் வகையில் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
மூலனூர் குட்டை முருங்கைக்கு அகில உலக அளவில் புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை பட்ஜெட்டில் அறிவிப்பு செய்ததற்கு விவசாயிகள் சார்பில் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது, பட்ஜெட்டில், குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அண்ணா பிறந்தநாளில் திட்டம் தொடங்கப்படும் என்று அறி–வித்த முதல்-அமைச்சருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
- அ.தி.மு.க.வில் மீண்டும் எப்படியாவது நுழைந்து பயணம் செய்தால் மட்டுமே அரசியல் எதிர்காலம் உண்டு என்பதை சசிகலா முழுமையாக நம்புகிறார்.
- வரும் காலங்களில் சசிகலாவின் இந்த எண்ணம் ஈடேறுமா என்பது பெரிய கேள்விக்குறியாகவும் மாறி இருக்கிறது.
சென்னை:
அ.தி.மு.க.வில் நீடித்து வந்த தலைமை பதவிக்கான அதிகார போட்டியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அவர் ஏகமனதாக தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு மேல் வழக்கு போட்டு கதவை தட்டிய ஓ.பன்னீர் செல்வத்துக்கு அ.தி.மு.க. தலைமை விவகாரத்தில் சாதகமான அம்சங்கள் எதுவுமே நடைபெறவில்லை.
தேர்தல் ஆணையத்தில் தொடங்கி கோர்ட்டு நடவடிக்கைகள் வரை அனைத்துமே எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே அமைந்து உள்ளன. இப்படி அ.தி.மு.க.வில் இருந்து முற்றிலுமாக ஒதுக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரனுடன் கைகோர்த்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.
தேவைப்பட்டால் சசிகலாவையும் சந்திப்பேன் என்றும், அ.தி.மு.க.வை மீட்பதே எங்கள் லட்சியம் என்றும் கூறிக்கொண்டு ஓ.பி.எஸ். காய் நகர்த்தினார். அது எந்தவித தாக்கத்தையும் அ.தி.மு.க.வில் இதுவரை ஏற்படுத்தவில்லை.
இதனை சசிகலாவும் நன்றாக புரிந்து வைத்துள்ளார். இதன் காரணமாகவே அவர் உடனடியாக ஓ.பி.எஸ்.சை சந்திக்க விரும்பாமல் காலம் தாழ்த்திக் கொண்டே இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை கைப்பற்றியதை சசிகலா நன்கு உணர்ந்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் சசிகலாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்துள்ளார்.
இதன் காரணமாகவே அவரை சசிகலா முதல்-அமைச்சர் வேட்பாளராக முன் நிறுத்தினார். தற்போது எடப்பாடி பழனிசாமி ஒரு சிலரை தவிர பிரிந்து சென்ற அனைவரும் அ.தி.மு.க.வில் வந்து சேரலாம் என்று கூறி வருகிறார்.
இதுபற்றி அ.தி.மு.க. வினர் கூறும்போது, சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் இருவரையும் மறைமுகமாக குறிப்பிட்டுத்தான் எடப்பாடி பழனிசாமி இப்படி கூறுகிறார் என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் சசிகலாவோ இதைப் பற்றி எல்லாம் பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்ந்து தூது விட்டுக் கொண்டே இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அ.தி.மு.க.வில் மீண்டும் எப்படியாவது நுழைந்து பயணம் செய்தால் மட்டுமே அரசியல் எதிர்காலம் உண்டு என்பதை சசிகலா முழுமையாக நம்புகிறார். இதன் காரணமாகவே அவர் எடப்பாடி பழனிசாமிக்கு தூதுவிட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் இருவர் துணையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் மூலமாக பேச்சு நடத்தி எப்படியும் அ.தி.மு.க.வில் சேர்ந்துவிட வேண்டும் என்று சசிகலா கணக்கு போட்டுள்ளார்.
ஆனால் எடப்பாடியின் எண்ணமோ வேறு மாதிரியாக உள்ளது. சசிகலா குடும்பத்தினரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்தால் அவர்கள் சொல்கிறபடி தான் நாம் நடக்க வேண்டி இருக்கும் என்று அவர் நம்புகிறார்.
அ.தி.மு.க.வில் உள்ள பெரும்பாலானோரின் எண்ணமும் இதுவாகவே உள்ளது. எனவே வரும் காலங்களில் சசிகலாவின் எண்ணம் ஈடேறுமா? என்பது பெரிய கேள்விக்குறியாகவும் மாறி இருக்கிறது.
இதுதொடர்பாக அரசியல் நோக்கர்கள் கூறும் போது, தற்போதைய சூழலில் சசிகலாவை வைத்து அ.தி.மு.க.வுக்கு எந்தவித செல்வாக்கும் வந்துவிடப் போவதில்லை.
எனவே எடப்பாடி பழனிசாமி தற்போது சசிகலாவின் இந்த தூது நடவடிக்கைகளை எல்லாம் பொருட்படுத்தமாட்டார். சசிகலா உள்ளிட்ட அவரது ஆட்கள் யாரை உள்ளே விட்டாலும் நமக்கு ஆபத்து என்பதை அவர் நிச்சயம் உணர்ந்துள்ளார். எனவே அது போன்று நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமியால் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
- முதல்-அமைச்சர் அமைத்த குழுவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசுவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா
விருதுநகர்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாட முதல்-அமைச்சர் ஸ்டாலின் 12 குழுக்களை அமைத்து உள்ளார். அதன்படி தமிழ் காப்பாளர் கலைஞர் என்ற குழுவுக்கு தலைவராக அமைச்சர் சாத்தூர் ராமச் சந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இணைத்தலைவர்களாக அமைச்சர் மெய்யநாதன், கணேசன், செயலாளராக கூடுதல் தலைமை செய லாளர் பிரபாகரன், உறுப்பி னர்களாக டாக்டர்கள் ஜெயநந்தன், நாகநாதன், திண்டுக்கல் லியோனி, தமிழ் காமராசன், பர்வீன் சுல்தானா, நாஞ்சில் சம்பத், சபாபதி மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதேபோல் தமிழ்த்தாயின் தவப்புதல் வன் கலைஞர் என்ற குழுவுக்கு தலைவராக அமைச்சர் தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டு உள்ளார். இணைத் தலைவர் களாக அமைச்சர்கள் அனிதா ராதா கிருஷ்ணன், செந்தில்பாலாஜி, செயலாள ராக நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரன், உறுப்பினர்களாக கவிஞர் வைரமுத்து, ராஜேந்திரன், பொற்கோ, பேராசிரியர்கள் அருணன், மருதநாயகன், ராஜன் துறை மற்றும் கலிய பெருமாள், பாரதி கிருஷ்ணகுமார், அரவிந்த ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
- தி.மு.க. முக்கிய பிரமுகர்களின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து, 34 ஆயிரம் கோடி என்றும் அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.
- ஆவணங்கள் அடங்கிய ஊழல் புகார்களை மிகப்பெரிய 'டிரங்க் பெட்டி'யில் வைத்து வழங்கினார்.
சென்னை:
தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14-ந் தேதி தி.மு.க. பைல்ஸ்-1 என்ற பெயரில் தி.மு.க.வை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 12 பேர் மீது முறைகேடு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து அவர்களின் சொத்து பட்டியலை வீடியோ வாக வெளியிட்டார்.
அதில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு எம்.பி., ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, கவுதம் சிகாமணி, சபரீசன், கலாநிதி மாறன் உள்ளிட்ட பிரமுகர்களுக்கு உள்ள சொத்து விவரங்களை பட்டியலிட்டு இருந்தார்.
அதில் தமிழகத்தில் தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளின் சொத்து மதிப்பு ரூ.3,478.18 கோடி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களின் சொத்து மதிப்பு ரூ.34,184.71 கோடி என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்த வகையில் தி.மு.க. முக்கிய பிரமுகர்களின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து, 34 ஆயிரம் கோடி என்றும் அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.
இந்த சொத்து பட்டியல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நாளைக்கு (வெள்ளி) 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையை தொடங்க உள்ள நிலையில், அண்ணா மலை கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து தி.மு.க. பைல்ஸ்-2 என்ற பெயரில் ஏராளமான ஆவணங்கள் அடங்கிய ஊழல் புகார்களை மிகப்பெரிய 'டிரங்க் பெட்டி'யில் வைத்து வழங்கினார்.
அதில் 9 அமைச்சர்களின் சொத்து விவரங்கள், அவர்களது பினாமி சொத் துக்கள் மற்றும் சட்டத்துக்கு புறம்பாக எந்தெந்த வகை யில் பணம் சம்பாதித்தனர். அந்த சொத்துக்கள் எங்கெங்கு உள்ளது போன்ற விவரங்களை அதில் பட்டியலிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த 9 அமைச்சர்கள் யார்-யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் ரூ.5 ஆயிரத்து 600 கோடி ஊழல் பற்றி மட்டும் வெளியில் தெரிவிக்கப் பட்டது.
மற்ற விவரங்களை நாளை தொடங்கும் பாத யாத்திரையின் போது அண்ணாமலை வெளியிடுவார் என்று கூறியுள்ளனர்.
ஒவ்வொரு துறை வாரியாக ஆவணங்களை சேகரித்து அதில் எந்தெந்த அமைச்சர்கள் சம்பந்தப் பட்டுள்ளனர் என்ற விவரங்களை பட்டியலிட்டு அதை பெரிய டிரங்க் பெட்டியில் வைத்து கவர்னரிடம் அண்ணாமலை வழங்கி இருப்பதால் அடுத்த கட்டமாக கவர்னரின் நடவ டிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. அரசுக்கும் கவர்னருக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாத காரணத்தால் இந்த ஊழல் புகார்கள் மீது வழக்கு தொடர லஞ்ச ஒழிப்பு துறைக்கு அவர் பரிந்துரைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
இதுகுறித்து கவர்னர் தனது சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாகவும் தெரிகிறது. அவர் வழக்கு தொடர பரிந்துரைத்தால் 9 அமைச்சர்களும் விசார ணையை சந்திக்க நேரிடும்.
இதனால் 9 அமைச்சர்க ளுக்கு எந்த நேரத்திலும் சிக்கல் உருவாகும் நிலை ஏற்படும். அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிற சூழ்நிலையில் 9 அமைச்சர்கள் மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி வழங்கினால் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதை எவ்வாறு கையாளுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது.
இதனால் அண்ணாமலை வெளியிட்ட தி.மு.க.வின் 2-ம் பாகம் சொத்து பட்டியல் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.
- மாணவ-மாணவிகள், சுகாதார துறையினர் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- நடை பயணத்தில் பங்கேற்றவர்களுக்கு குடிநீர், பானக்காரம், கடலை மிட்டாய் மற்றும் சத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
கன்னியாகுமரி:
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் "நடப்போம் நலம் பெறுவோம்" என்னும் நோக்கத்தின் அடிப்படையில் பொதுமக்களுடன் அமைச்சர்கள் பங்கேற்ற நடைபயண நிகழ்ச்சி கன்னியாகுமரியில் இன்று காலை நடந்தது.
அதிகாலை 5.30 மணிக்கு கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் இருந்து நடைபயணம் தொடங்கியது. இந்த நடைபயண நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மனோதங்கராஜ், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், சுகாதார துறையினர் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த நடைபயணம் சிலுவை நகர், சீரோ பாய்ண்ட், நான்கு வழி சாலை, ரெயில்வே மேம்பாலம், முருகன்குன்றம் வழியாக பரமார்த்தலிங்கபுரம் மின் வாரிய அலுவலகம் முன்பு வரைசென்று திரும்பி மீண்டும் அதே வழியாக தொடங்கிய இடமான சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் நிறைவடைந்தது.
மொத்தம் 8 கிலோ மீட்டர் தூரம் இந்த நடைபயணம் நடந்தது. இன்று காலை தொடங்கிய இந்த நடைபயணம் காலை 7 மணிக்கு நிறைவடைந்தது. அதன்பிறகு சன் செட் பாயிண்ட் கடற்கரையில் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. இந்த நடை பயணத்தில் பங்கேற்றவர்களுக்கு குடிநீர், பானக்காரம், கடலை மிட்டாய் மற்றும் சத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
- வருகிற பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளை கைபற்றி மோடி 3வது முறையாக பிரதமர் ஆவார்.
- மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தி.மு.கவை தீய சக்தி என்று கூறி வந்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டத்தில் என் மண் என் மக்கள் என்ற கோஷத்துடன் பா.ஜ.க மாநில தலைவர் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கம்பத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது,
கம்பத்தில் சாகுபடியாகும் திராட்சை சுவை மிகுந்தது. ஆனால் தற்போது கஞ்சா விற்பனையின் தலைநகரமாக மாறியுள்ளது. ஆனால் இதைபற்றி ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை. மத்திய அரசின் திட்டங்களை முதலமைச்சர் மாநில அரசின் திட்டங்களை போல காட்டி வருகிறார். கேரளாவின் மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் இடமாக தமிழகம் மாறி வருகிறது. இதனை முதலமைச்சர் தட்டி கேட்பதில்லை. காரணம் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடப்பதால் கூட்டணியில் பிளவு வந்துவிட கூடாது என்பதற்காக மவுனம் காக்கிறார்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவும், பேபி அணையை பலப்படுத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வைகை அணை தூர்வாரப்படவில்லை. கண்ணகி கோவிலை கேரளாவிற்கு தாரை வார்த்துவிட்டனர்.
சனாதனம் குறித்து பட்டத்து இளவரசர் உதயநிதி புதிய தத்துவம் கூறி உள்ளார். கோவிலில் எவ்வாறு சாமி கும்பிட வேண்டும் என இவர்கள் சொல்லி தர தேவையில்லை. ஏற்றத்தாழ்வு, சாதிய பாகுபாடு இருக்க கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். சனாதனம் பற்றி பேசும் உதயநிதி தனது தாயாரை கோவிலுக்கு செல்ல கூடாது என கூற முடியுமா? அதனால்தான் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தி.மு.கவை தீய சக்தி என்று கூறி வந்தனர்.
ஒரேநாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு என முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் தி.மு.க மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. விடுதலை செய்யப்பட்ட பல தி.மு.க அமைச்சர்களின் வழக்குகள் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. அவர்கள் எந்தெந்த சிறையில் இருப்பார்கள் என்பது தெரியாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளை கைபற்றி மோடி 3வது முறையாக பிரதமர் ஆவார் இவ்வாறு அவர் பேசினார்.
3ஆம் நாள் பயணமாக இன்று தேனி நகர் பொம்மைய கவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவிலில் இருந்து பங்களா மேடு வரை பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
- மதுரையில் நடந்த நடப்போம், நலம் பெறுவோம் திட்டம் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மதுரை
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் இன்று சென்னை, பெசண்ட் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சி வாயிலாக அனைத்து மாவட்டங்களிலும் "நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் "நடப்போம் – நலம் பெறுவோம்" ஆரோக்கிய நடைபயண திட்டத்தை அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மதுரை மாவட்டத்தில் நடைப்பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் நுழைவு வாயில் முதல் தொடங்கி ஐய்யர் பங்களா சந்திப்பு வழியாக மீண்டும் ரேஸ்கோர்ஸ் மைதானம் நுழைவு வாயில் வரை மொத்தம் (8கி.மி) தூரம் ஆரோக்கியம் நடை பயண பகுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் பயணிப்பவர்களுக்கு வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி, ஓய்வறை கள், இருக்கை வசதிகள், கழிப்பறை மற்றும் பாதுகாப்பு வசதி களுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா, மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல், துணை மேயர்நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாநாட்டை வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பாக நடத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
- இனி வரும் நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விரிவான ஆலோசனைகளை வழங்கினர்.
ஆத்தூர்:
தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டை வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பாக நடத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
இதையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த மாநாடு குறித்த மோட்டார் சைக்கிள் பேரணியை கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார். அந்த பேரணி 234 தொகுதிகளுக்கும் சென்று கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்தது. இந்த ஊர்வலத்தில் வந்தவர்களை அமைச்சர் கே.என்.நேரு பாராட்டியதுடன் தானும் மோட்டார் சைக்கிளை ஓட்டி உற்சாகபடுத்தினார்.
மாநாட்டு பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்றும் வரும் நிலையில் பந்தலுக்காக பில்லர்கள் நடப்பட்டு விரைவில் தகர கூரைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. பிரமாண்ட முகப்பு தோற்றத்துடன் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பந்தல் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1.5 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தினமும் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் மாநாட்டு பந்தலை ஆய்வு செய்தனர். அப்போது பந்தல் அமைக்கும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்தனர். அதில் இனி வரும் நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விரிவான ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும் மாநாட்டு திடலில் ஒரே நேரத்தில் உணவு உண்ணக்கூடிய அளவில் உணவு அரங்கம், கழிப்பிட வசதி, சாலை வசதிகளும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளையும் அமைச்சர்கள் பார்வை யிட்டனர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாவட்ட அவை தலைவர் கருணாநிதி, நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் முத்துலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் அன்பு என்கிற மருதமுத்து, சிவராமன், மூர்த்தி, பெத்ததநாயக்கன் பாளையம் நகர செயலாளர் வெங்கடேசன், பேரூராட்சி தலைவர் பழனியம்மாள், ஏத்தாப்பூர் பேரூர் செயலாளர் பாபு, பேரூராட்சி தலைவர் அன்பழகன், ராஜாமணி, வார்டு கவுன்சிலர்கள் கலைச்செல்வி, பெத்தநாயக்கன்பாளையம் தகவல் தொழில் நுட்ப பிரிவு ரகு, தனபால், ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.