என் மலர்
நீங்கள் தேடியது "சைக்கிள்"
- கைதான கொள்ளையன் வாக்குமூலம்
- 7 பவுன் தங்கச்சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் பறித்து சென்றனர்.
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே மூவாற்றுமுகத்தில் பள்ளிக் கூடத்துக்கு குழந்தைகளை அழைத்து வர மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சுனிதா என்பவர் கழுத்திலிருந்து 7 பவுன் தங்கச்சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் பறித்து சென்றனர்.
இது தொடர்பாக சுசீந்திரம் வழுக்கம்பாறை மணவிளையைச்சேர்ந்த விக்னேஷ் (வயது 20), குளச்சல் உடையார் விளை நாடாச்சிவிளை நிதீஷ் ராஜா (22), குளச்சல் செம்பொன்விளை ஓலக்கோடு பிரேம்தாஸ் (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விக்னேஷ் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நான் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். அதன் பின் எனக்கு படிப்பில் பெரிய ஆர்வம் ஏதும் இல்லாததால் கூலி வேலை செய்து வந்தேன். அதில் போதிய வருமானம் இல்லாததால் கஞ்சா விற்று பிழைப்பு நடத்தி வந்தேன். தொடர்ந்து கஞ்சா விற்கும் தொழில் செய்து வந்ததால் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்திலும் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்திலும் கஞ்சா வழக்கும், கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்குப் பதிவும் செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. மேற்படி கொலை வழக்கில் தற்போது கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் கையொப்பம் செய்து வருகிறேன். தற்போது இந்த கொலை வழக்கு சம்மந்தமாக பணக்கஷ்டம் ஏற்பட்டதால் கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவின் போது நான் பொம்மை வியாபாரம் செய்து வந்தேன்.
அப்போது குளச்சல் உடையார் விளை நாடாச்சிவிளையை சேர்ந்த நிதிஷ் ராஜா என்பவரும் அவரது பக்கத்து ஊரைச்சேர்ந்த குளச்சல் செம்பென்விளை ஓலக்கோடு பிரேம்தாஸ் ஆகிய இருவரும் ஐஸ் வியாபாரம் செய்து வந்ததில் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர்களை விசாரிக்க நிதீஷ் ராஜாவுக்கும் 2021-ம் ஆண்டு குளச்சல் போலீஸ் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும், அதே ஆண்டு கருங்கல் போலீஸ் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும் பதிவாகி தற்போது நீதிமன்ற விசாரணையில் இருப்பதும் தெரிந்தேன். அதுபோல் பிரேம்தாஸுக்கும் குளச்சல் போலீஸ் நிலையத்தில் 2021ம் ஆண்டு ஒரு கஞ்சா வழக்கும் பதிவாகி அதுவும் விசாரணையில் இருப்பதாக தெரிந்தேன். எங்கள் மூன்று பேருக்கும் பல வழக்குகள் இருந்ததால் வழக்கு செலவுக்கும் எங்கள் செலவுக்கும் போதிய வருமானம் இல்லாததாலும் மண்டைக்காடு கோவில் கொடை விழாவில் போதிய வருமானம் ஏதும் கிடைக்காததால் கொடை முடிந்து நாங்கள் மூவருமாக ஒன்று சேர்ந்து திட்டம் போட்டு எங்காவது திருடி பிழைக்கலாம் என்று எண்ணி அவ்வப்போது ஆலோசனை நடத்தி வந்தோம். சம்பவத்தன்று நிதிஷ் ராஜா வீட்டிற்கு சென்றேன்.
அப்போது நிதீஷ் ராஜாவின் வீட்டில் பதிவெண் இல்லாத ஹீரோ மோட்டார் சைக்கிள் ஒன்று இருந்ததை கண்டு, இது யார் வண்டி என நிதீஷ்ராஜாவிடம் கேட்ட போது நிதீஷ்ராஜா எங்களிடம் எனக்கு சொந்தமான வண்டிதான் எனவும் மேற்படி வண்டியை நான்கு மாதத்திற்கு முன்பு ஒரு லட்சத்து எழுபதாயிரம் ரூபாய்க்கு குளச்சலில் உள்ள நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.48 ஆயிரம் ரொக்கம் கொடுத்து வாங்கியதாகவும் தற்போது ஒரு மாதகாலமாக வண்டி பைனான்ஸ் கட்டவும் பணமில்லை. இதுவரை பதிவும் செய்யவில்லை சொல்லிக் கொண்டிருந்தார். அந்த மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி திருட்டு அல்லது வழிப்பறி செய்து பணம் சம்பாதித்து நிதீஷ்ராஜாவின் பைனான்ஸ் கடனையும் தீர்த்து ஜாலியாக சுற்றுவதற்கு ஆளுக்கொரு மோட்டார் சைக்கிள்களையும் வாங்கி உல்லாசமாக சுற்றலாம் என்று திட்டம்போட்டோம். உடனே அங்கிருந்து புறப்பட்டு திற்பரப்பு ஏரியாவில் சென்று அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் ஏதாவது வழிப்பறி நடத்தலாம் என திட்டம் போட்டோம். எங்கள் முக அடையாளங்கள் தெரியாமல் இருக்கவேண்டி எங்களது முகங்களில் மாஸ்க் அணித்து கொண்டோம். மூவாற்றுமுகம் வழியாக திற்பரப்பு நோக்கி சென்று கொண்டிருக்கும்போது மூவாற்றுமுகம் ஆற்றுப் பாலத்தின் சற்று முன்பாக வைத்து எங்களுக்கு எதிரே அதே ரோட்டில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க தாலிச் செயினை பறித்து விட்டு நிதிஷ்ராஜாவின் வீட்டிற்கு சென்றுவிட்டோம். அங்கு சென்று நாங்கள் திருடி எடுத்த தங்க தாலிச் செயினின் எடை சுமார் 6 ¼ பவுன் இருந்தது. இவ்வளவு தங்க நகையால் நாங்கள் ஆசைப்பட்டபடி எதுவும் வாங்க முடியாது என்று கருதி மீண்டும் ஏதாவது வழிப்பறி செய்யலாம் என முடிவு செய்தோம். திருடிய தங்கசெயினை எனது கைவசம் வைத்து விட்டு மீண்டும் ஏதாவது திருடவோ வழிப்பறியோ செய்யலாம் எனகருதி நாங்கள் மூன்று பேருமாக அதே மோட்டார்சைக்கிளில் மாத்தூர் தொட்டிப்பாலம் வந்து மோட்டார் சைக்கிளை வாகனம் நிறுத்தும் இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி னோம். அப்போது போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்ப டுத்தப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். கொள்ளையர் களை 20 மணி நேரத்தில் கைது செய்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
- பொருளாதாரத்தால் பின்தங்கிய பெண்களுக்கு தையல் எந்திரம், பாய், போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் சிங்கப்பூர் ஜீவ காருண்யா நண்பர்கள் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், மற்றும் பொருளாதாரத்தால் பின்தங்கிய பெண்களுக்கு தையல் இயந்திரம், பாய், போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திருக்கடையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எழில்நம்பி தலைமை தாங்கினார். செம்பனார் கோவிலில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், மாவட்ட கவுன்சிலர் துளசிரகா ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், கேசவன் ஆகியோர் முன்னிலை வைத்தனர், சிங்கப்பூர் ஜீவ காருண்யா மேலாளர் குடந்தை கண்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார்,
இதில் சிறப்பு அழைப்பாளராக பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ.வும் தி.மு.க. மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் கலந்து கொண்டு 20 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், தையல் இயந்திரம் வழங்கினார். இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் வைத்தியநாதன் நன்றி கூறினார்.
- 4 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரத்தை 94 நாட்களில் கடந்து வந்து சாதனை
- காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை
கன்னியாகுமரி, மே.25-
மராட்டிய மாநிலம் தானே பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் ராம் கண்டேகர் (வயது 50). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மெட்டல் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவர் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை பெடல் இல்லாத சைக்கிளில் ஒற்றை காலால் மிதித்த படி உலக சாதனை பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். அதன்படி இவர் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி காஷ்மீர் மாநிலம் லே லடாக் பகுதியில் இருந்து பெடல் இல்லாத சைக்கிளில் ஒற்றை காலில் மிதித்தபடி தனது உலக சாதனை பயணத்தை தொடங்கினார்.
அங்கிருந்து இமாச்சல பிரதேசம், அரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மராட்டியம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா வழியாக தமிழ் நாட்டுக்கு இந்த மாத தொடக்கத்தில் வந்தடைந் தார்.
பின்னர் அவர் ஓசூர், கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், சுசீந்திரம், கொட்டாரம் வழியாக நேற்று மாலை கன்னியாகுமரியில் திரிவேணி சங்கமம் சங்கி லித்துறை கடற்கரை பகுதி யில் தனது உலக சாதனை பயணத்தை நிறைவு செய்தார்.
இவர் மொத்தம் உள்ள 4 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரத்தை 94 நாட்களில் கடந்து வந்து சாதனை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க தாகும். இவர் இதற்கு முன்பு 28 நாடுகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சைக்கிள் பயணம் செய்து உள்ளார் என்று தெரிவித்தார்.
இவரது சைக்கிள் பயணத்தை சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினார்கள்.
- பிளஸ்- 1 முடித்து தற்போது பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு இன்னும் சைக்கிள் வழங்கப்படவில்லை.
- பஸ் வசதியில்லாத பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகின்றனர்.
திருப்பூர் :
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு நலத்திட்ட பொருட்களில் ஒன்றாக சைக்கிள் வழங்கப்படுகிறது.கிராமப்பகுதியில் இருந்தும் பஸ் வசதி இல்லாத இடங்களிலிருந்தும் வரும் மாணவர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதோடு கல்வி கற்பதற்கான வழி ஏற்படுத்துவதாகவும் உள்ளது. ஆனால் கொரோனாவுக்கு பின் இத்திட்டம் மாணவர்களுக்கு பயனில்லாத வகையில் பெயரளவில் மாறியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்கள் பிளஸ்- 2 வகுப்புக்கு வந்த பின்தான் சைக்கிள் வினியோகிக்கப்பட்டது.தொடர் கோரிக்கைக்கு பின் மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பு படிக்கும்போதே சைக்கிள் பெற்றுக்கொள்ளும் வகையில் திட்டம் விரைவுபடுத்தப்பட்டது.தற்போது சைக்கிள்கள் வினியோகிக்க தாமதமாவதோடு மேல்நிலை வகுப்பு முடிக்கும் நிலையில் தான் மாணவர்களுக்கு இத்திட்டம் சென்றடைகிறது. இதனால் எந்த பயனும் இல்லை என பெற்றோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.கடந்த கல்வியாண்டில் பிளஸ்- 1 முடித்து தற்போது பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு இன்னும் சைக்கிள் வழங்கப்படவில்லை.
இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது :- மேல்நிலை வகுப்புகளுக்கு தடையாக இருப்பதில் முக்கியமானது போக்குவரத்து வசதிதான். அரசின் சார்பில் சைக்கிள் வழங்கப்படும் என்ற நம்பிக்கையில்தான், பஸ் வசதியில்லாத பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகின்றனர்.இதுதவிர அவர்கள் சிறப்பு வகுப்புகள் செல்வதற்கும் தேர்வு நேரம் என பல்வேறு வழிகளில் சைக்கிள் பயணம் உதவுகிறது.ஆனால், அதையும் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு படித்து முடித்த பின் வழங்குவதில் எந்த பலனும் இல்லை.மாணவர்களை 100 சதவீதம் பள்ளிக்கு வர அறிவுறுத்தும் அரசு அவர்கள் வருவதற்கான ஏற்பாட்டையும் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சைக்கிள் ஓட்டிச் சென்ற முதியவர் தவறி விழுந்து பலியானார்.
- சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மதுரை
வண்டியூர் சி.எம்.நகர் யமுனா நதி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது75). இவர் சவுராஷ்டிராபுரம் பகுதியில் சைக்கிளை ஓட்டிச்சென்றார். அப்போது திடீரென்று தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மனைவி வில்லம்மாள் கொடுத்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- கண்ணன், மகேந்திரன் ஆகிய இருவரையும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- ன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி:
தென்தாமரைகுளம் அருகே உள்ள சித்தன்குடியிருப்பை சேர்ந்தவர் மணிகண்டன்.
இவர் கடந்த 11-ந்தேதி மதியம் தனது மோட்டார் சைக்கிளை சாமிதோப்பு பகுதியில் ஒரு ஓட்டல் அருகே சாவியுடன் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிள் திருடியவர்களை தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை கீழமணக்குடி சந்திப்பில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சந்தேகத்துக்கிடமாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி விசாரித்த போது அதில் வந்தவர்கள் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த கண்ணன் (வயது 26), மாடம்பிள்ளை தர்மத்தை சேர்ந்த மகேந்திரன் (20) என்பதும், இவர்கள் சாமி தோப்பில் நடந்த மோட்டார் சைக்கிள் திருட்டில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கண்ணன், மகேந்திரன் ஆகிய இருவரையும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதில் சிறையில் அடைக் கப்பட்ட கண்ணன் மீது தென் தாமரைகுளம், அஞ்சு கிராமம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- திருவேங்கைவாசல் ஊராட்சியில் சொந்த நிதியில் 6 மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சைக்கிள் வழங்கினார்
- மேலும் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இருசக்கர வாகனம் வழங்குவதாக தெரிவித்து மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினார்.
விராலிமலை,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி திருவேங்கைவாசல் ஊராட்சியை சேர்ந்த வளையன்வயல் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 6 பேருக்கு சைக்கிள்களை தனது சொந்த நிதியில் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் வழங்கினார். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் பல்வேறு கட்சி நிர்வாகிகள் இல்ல விழாக்களுக்கு சென்றார். அப்போது, வளையன்வயல் பகுதியில் பள்ளி மாணவர்கள் சிலர் வடமலாப்பூர் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நாங்கள் பள்ளியில் இருந்து 2 கி.மீ. தூரம் நடந்தே பள்ளிக்கும், வீட்டுக்கும் செல்கிறோம்.
பத்தாம் வகுப்பு என்பதால் நடந்து சென்று படிப்பதற்கு சிரமமாக இருக்கிறது, சைக்கிள் வாங்கி தருமாறு கோரிக்கை விடுத்தனர். உடனே அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட டாக்டர் சி.விஜயபாஸ்கர், பள்ளி சென்று படிக்க ஏதுவாக பத்தாம் வகுப்பு படிக்கும் 6 மாணவர்களூக்கு தனது சொந்த நிதியிலிருந்து சி.வி.பி. பவுண்டேசன் மூலமாக 6 சைக்கிள்களை வழங்கினார். மேலும் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இருசக்கர வாகனம் வழங்குவதாக தெரிவித்து மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினார். இந்த நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் ராமசாமி, ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- 809 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது
- எம்.எல்.ஏ. வழங்கினார்
அரியலூர்:
ஜெயங்கொண்டத்தில் 809 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. அரியலூர் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜெயங்கொண்டம், கல்லாத்தூர் தண்டலை, பூவாணி பட்டு, வெத்தியார் வெட்டு, கங்கைகொண்ட சோழபுரம், உட்கோட்டை அரசு பள்ளிகள் மற்றும் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 809 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா தலைமை தாங்கினார். விழாவில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டு 809 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.
- சுற்றுச்சூழல் காக்கப்படுவதோடு உடல்நலத்தையும் நன்றாக வைத்துக்கொள்ள முடியும்.
- பொதுமக்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க அறிவுறுத்தினார்.
தஞ்சாவூர்:
உடல் ஆரோக்கியத்தி ற்காகவும், சுற்றுச்சூழலை காக்கவும் சைக்கிளை பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிளில் சென்றவர்களுக்கு ஜோதி அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தலா ஒரு கிலோ தக்காளி விலையில்லாமல் வழங்கப்பட்டது.
தஞ்சை மேரீஸ் கார்னர் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தஞ்சை நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமை யிலான போக்குவரத்து காவலர்கள் அந்த வழியாக சைக்கிளில் வந்த பொதுமக்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், அத்தியாவசிய செலவை கட்டுப்படுத்தவும் இது போன்று அன்றாடம் சைக்கிளை தொடர்ந்து உபயோகிக்க வேண்டும் என அறிவுறுத்தி அவர்களுக்கு தலா 1 கிலோ தக்காளி விலையில்லாமல் வழங்கினர்.மேலும் அவர் கூறுகையில், சைக்கிளை பயன்படுத்தாமல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துவதால் இன்று சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. சைக்கிளை பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் காக்கப்படு வதோடு உடல்நலத்தையும் நன்றாக வைத்துக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
வரலாறு காணாத அளவுக்கு தக்காளியின் விலை உயர்ந்து வரும் வேளையில் இது போன்ற நூதன விழிப்புணர்வு நிகழ்வுகள் மூலம் பொதுமக்களிடம் விலையில்லாமல் தக்காளி வழங்கப்படுவது தஞ்சை மக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது .
இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் தலைமையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி,
மேற்பார்வையாளர் கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் நகர்மன்ற தலைவி வழங்கினார்
- சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
திருமங்கலம்
திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் திலகவதி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.
இந்தநிகழ்ச்சியில் திருமங்கலம் தி.மு.க. நகரசெயலாளர் ஸ்ரீதர், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், நகராட்சி கவுன்சிலர்கள் ஜஸ்டின் திரவியம், சின்னச்சாமி, வீரக்குமார், ஜமீலாபெளசியா ஆகி யோர் கலந்து கொண்டனர். தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இதேபோல் திருமங்கலம் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
- விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
- தலைமையாசிரியர் தண்டீஸ்வரன் (பொறுப்பு) தலைமை தாங்கினார்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது. தலைமையாசிரியர் தண்டீஸ்வரன் (பொறுப்பு) தலைமை தாங்கினார்.
கண்டுகொண்டான் மாணிக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் வேலம்மாள் ராஜேந்திரன், நரிக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முத்துமாரி காளீஸ்வரன் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழுவின் தலைவர் பாண்டியம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினர். இதில் 11-ம் வகுப்பு படிக்கும் 78 மாணவர்கள்,71 மாணவியர்கள் என மொத்தம் 149 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மாணவ-மாணவிகளுக்கு ரூ.42 லட்சத்தில் விலையில்லா சைக்கிள்களை கலெக்டர் வழங்கினார்.
- கிராமப் பகுதியில் இருந்து நகர்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வந்துசேரமுடியும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் செய்யதுஅம்மாள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் தமிழகஅரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்புமற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவி களுக்கு விலையில்லா மிதிவண்டிவழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது.
ராமநாதபுரம் சட்டமன்றஉறுப்பினர் காதர்பாட்ஷா முத்து ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி ரூ.42 மதிப்பிலான விலையில்லா சைக்கிள்களை 850 மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்.
அப்ேபாது அவர் பேசியதாவது:-
தமிழகஅரசின் இத்திட்டம் மிகச்சிறப்பான ஒன்றாகும். இதன் மூலம் கிராமப் பகுதியில் இருந்து நகர்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வந்துசேரமுடியும். முன்பெல்லாம் நடந்து பள்ளிக்குவந்துசேரும் பொழுதுகாலவிரையம் ஆவதுடன் மனச்சோர்வும் உண்டாகும். இதனால் மனதைஒருநிலைப்படுத்திகல்விகற்பதுஎன்பதுகடினமாக இருந்துவந்தது. இது மட்டு மின்றி இதுபோன்றநிலையில் பலர்படிப்பைதொடர கூட முடியாமல் இருந்து வந்த காலம் அப்பொழுது உண்டு. ஆனால் இப்பொழுது அரசின் எண்ணற்ற திட்டங்களால் பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்தால் போதும் உயர்கல்வி வரைபடித்துபயன்பெறும் வகையில் அரசின் திட்டங்கள் கிடைக்கப்பெ றுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, ராமநாதபுரம் நகர்மன்றதலைவர் ஆர்.கே.கார்மேகம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரபாகரன், ராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், மாவட்டகல்வி அலுவலர் சுதாகர் மற்றும் பள்ளி தாளாளர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.